3 months 2 weeks ago
மெட்ராஸ் பொங்கோதம் | 08/1843
3 months 2 weeks ago
'ரஷ்யாவிடம் இருந்து இந்தியா எண்ணெய் வாங்காது' - டிரம்ப் மீண்டும் அறிவிப்பு 18 Oct, 2025 | 11:30 AM ரஷ்யாவிடம் இருந்து இந்தியா மசகு எண்ணெய் இறக்குமதி செய்வதைக் கிட்டத்தட்ட நிறுத்திவிட்டது என அமெரிக்க ஜனதிபதி டொனால்ட் டிரம்ப் மீண்டும் தெரிவித்துள்ளார். இருப்பினும், இது குறித்த அதிகாரபூர்வமான தகவல் எதுவும் இந்திய அரசிடமிருந்து வரவில்லை. அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், உக்ரைன் ஜனாதிபதி *ஜெலன்ஸ்கியுடன் வொஷிங்டன் வெள்ளை மாளிகையில் சந்திப்பு நடத்திய பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், ரஷ்யாவிடம் இருந்து இந்தியா எண்ணெய் வாங்காது. அவர்கள் (இந்தியா) ஏற்கனவே பின்வாங்கத் தொடங்கிவிட்டனர். கிட்டத்தட்ட ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்திவிட்டது" என்று தெரிவித்தார். உக்ரைனின் பாதுகாப்பு, எரிசக்தி தேவைகள் மற்றும் ரஷ்யா மீதான பொருளாதாரத் தடைகளை அதிகரிப்பது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து இந்தச் சந்திப்பில் விவாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பிற்குப் பிறகு, ஐரோப்பிய நாடுகள் ரஷ்ய எண்ணெய் இறக்குமதியை ரத்து செய்தன. இதனையடுத்து, ரஷ்யா இந்தியாவுக்கு மலிவு விலையில் மசகு எண்ணெய் வழங்கத் தொடங்கியது. இதன் விளைவாக, 2018 முதல் 2020 நிதியாண்டில் இந்தியாவின் மொத்த எண்ணெய் இறக்குமதியில் வெறும் 1.7% ஆக இருந்த ரஷ்யாவின் பங்கு, 2023-24 நிதியாண்டில் 40% ஆக உயர்ந்தது. இதன் மூலம் ரஷ்யா, இந்தியாவுக்கு மசகு எண்ணெய் வழங்கும் நாடுகளில் முதலிடம் பிடித்தது. ரஷ்யாவிடம் இருந்து இந்தியா அதிக அளவில் எண்ணெய் இறக்குமதி செய்யத் தொடங்கியதிலிருந்து, அமெரிக்கா இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தது. மேலும், டிரம்ப் நிர்வாகம் ரஷ்ய எண்ணெய் இறக்குமதிக்கு இந்தியா மீது 25% கூடுதல் வரியும் விதித்திருந்தது. கடந்த 15 ஆம் திகதி டிரம்ப் வெளியிட்ட அறிவிப்பில், ரஷ்யாவிடம் இருந்து மசகு எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்துவதாகப் பிரதமர் மோடி உறுதியளித்துள்ளதாகக் கூறியிருந்தார். ஆனால், இந்தத் தகவல் குறித்து இந்திய மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், "பிரதமர் மோடியுடன் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அப்படி ஒரு தொலைபேசி உரையாடல் நடத்தியது எனக்குத் தெரியாது" என்று திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தார். புதிய தகவல்களின்படி, ஒக்டோபர் மாதத்தின் முதல் பாதியில் இந்தியா ரஷ்ய எண்ணெய் இறக்குமதியை மீண்டும் அதிகரித்து உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது, இது டிரம்ப்பின் சமீபத்திய கூற்றுக்கு முரணாக உள்ளது. https://www.virakesari.lk/article/228052
3 months 2 weeks ago
இந்த aquatint பொங்கோதம் (surf), சார்லஸ் கோல்டின் என்பவரின் sketch-பிறகு, ஹாசெல் என்பவரால் விளைவிக்கப்பட்டது. 1800 ஜனவரி 15 ஆம் தேதி இங்கிலாந்தில் பம்மி & கோ நிறுவனத்தால் அச்சிடப்பட்டு, 1806 ஆம் ஆண்டு ஜி & டபிள்யூ நிக்கோல் நிறுவனத்தால் வெளியிடப்பட்ட இந்த அச்சில், மதராஸ் ஆண்கள் கட்டுமரத்தில் அலைகளை உடைத்து உலாவுவதை சித்தரிக்கிறது.
3 months 2 weeks ago
இலங்கை மகளிர் சொந்த மைதானங்களில் கடந்த காலங்களில் நல்லா விளையாடினவை அதை வைச்சு தான் இலங்கையை தெரிவு செய்தேன் , இந்தியா இப்படி சுதப்பல் விளையாட்டு விளையாடும் என நான் எதிர் பார்க்க வில்லை பினலில் இந்தியா வந்தால் அவர்கள் நேர்மையான முறையில் கோப்பை வெல்லனும் நடுவர் மார் இந்தியா மகளிருக்கு ஆதரவய் செயல் பட முடியாது அப்படி செய்தால் இந்த உலக கோப்பை அசிங்க கோப்பையாய் தான் இருக்கும் அண்ணா..............................
3 months 2 weeks ago
18 Oct, 2025 | 03:27 PM இலங்கை இளைஞர்களில் ஒரு பகுதியினரை பாதாள உலகத்தினுள் தள்ளியவர்கள், அவர்களைப் பயன்படுத்தியவர்கள் யாவர் என்பதை அறிய வேண்டியது அவசியமாகும், இது காலத்தின் கட்டாய தேவையாகும். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார். அவர் சனிக்கிழமை (18) ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிகையிலே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, எதிர்காலத் தலைவர்களாக, எதிர்காலத்தை வடிக்கும் சிற்பிகளாக மாற வேண்டிய இளைஞர்களை ஆக்கவழிக்குள் கொண்டு செல்லாமல், அழிவுப்பாதைக்கு இட்டுச் செல்லும் அதிகார சத்திகள், அரசியல்வாதிகள் யாவர் என்பதை இனங்காண வேண்டியது அவசியமாகும். அவர்களுக்குரிய தண்டனைகளும் அவசியமாகும். பாதாள உலகினுள் தள்ளப்படும் இளைஞர்கள் கொலை, கொள்ளை, போதைப்பொருள் வணிகம், பாலியல் பலாத்காரங்கள், போன்ற மோசமான பாதகச் செயல்களில் ஈடுபடுகின்றனர். ஜனாதிபதிகளாக பதவி வகித்த ஜெயவர்தனா, பிரேமதாச, சந்திரிககா, மகிந்த ராஜபக்ஸ, கோத்தாபாய ராஜபக்ஸ, ரணில் விக்கிரமசிங்க போன்றவர்களின் ஆட்சிக் காலங்களில், பாதாள உலக தாதாக்கள் என்னும் எதிர் மறைக் கலாசார சட்ட விரோதர்களும் தமது கைவரிசைகளைக் காட்டி வந்துள்ளனர். கோணாகல சுனில், சொத்தி உபாலி, பெத்ததகன சஞ்சீவ, கஜ்ஜா, ஜுலம்பிட்டிய அமரே, சம்பத் மனம்பபேரி, கெகல்பத்ர பத்மே, என்று பல இளைஞர்கள் அரசியல் வாதிகளின் தேவையாளர்களாக இருந்துமுள்ளனர். சட்டவிரோத சமூக விரோத செயல்களிலும் ஈடுபட்டு கொல்லப்பட்டும், தண்டிக்கப்பட்டும் உள்ளனர். பொட்ட நவ்பர் என்னும் குடு தாதா தனது சகாவான குடு தெரோசா என்பவருக்குத் தண்டனைத் தீர்ப்பை அளித்தமைக்காக சரத் அம்பேபிட்டிய என்ற மேல் நீதிமன்ற நீதிபதியை தனது கையாட்கள் மூலமாக தெருவில் சுட்டுக்கொன்ற வரலாறும் உண்டு. மொத்தத்தில் சில அதிகார சக்திகள் அரசியல் வாதிகளால், உருவாக்கப்பட்டுப் பயன்படுத்தப்படும், பாதாளர்கள் தமது தேவை முடிந்த பின்னர், கைகழுவி விடுகின்றனர்,கொன்றும் விடுகின்றனர். வறுமை, கல்வி அறிவின்மை, தொழிலின்மை, பிறழ்வான சூழல் போன்றவற்றால் பாதிக்கப்படும் இளைஞர்கள் யுவதிகள் போதைப்பொருள் வலைப் பின்னல், பாதாள சூனியச்சக்கரம் என்பவற்றால் வீழ்த்தப்பட்டு சில அரசியல்வாதிகளின் ஏவலாளிகளாக மாறிப்பின்னர், இளவயதிலேயே பலிக்கடாக்கள் ஆகி விடுகின்றனர். பலி கொடுப்பவர்கள் அரசியல்வாதிகளாகவும், அரசியல் தலைவர்களாகவும் இருப்பதுண்டு. பெண்கள் மென்மையானவர்கள் என்பார்கள், ஆனால் அவர்களும் சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு குடு தெரேசா, இசாரா செவ்வந்தி போன்றவர்கள் உதாரணர்களாவர். எனவே, இளைஞர் யுவதிகளை தவறான பாதைகளுக்கு இட்டுச்சென்று அவர்களது எதிர்காலத்தைச் சூனியமாக்கும் அதிகார சக்திகள், அரசியல்வாதிகளையும் சட்டப்பிடியில் இருந்து அரசாங்கம் தப்பவிடக்கூடாது. வளமான நாடு, அழகான வாழ்க்கையை ஏற்படுத்த இதுவும் அவசியமானதாகும் என்றார். https://www.virakesari.lk/article/228070
3 months 2 weeks ago
நாகபட்டினத்தின் கடலில் உள்ள கடற்கலங்கள் தொடர்பான ஒல்லாந்தர் கால ஓவியம் | 1702
3 months 2 weeks ago
திருக்குன்றக்குடியிலுள்ள அழகிய நம்பி ராயர் கோவிலின் சுவரிலுள்ள கடற்கல சிற்பம் | 1600 கள்
3 months 2 weeks ago
→ 1575இல் கோழிக்கோடு (கேரள மாநிலம், எனினும் இது பண்டைய தமிழகம்) நகரத்தில் கப்பல்கள்:
3 months 2 weeks ago
திருப்புடை மருதூர் கோவிலில் உள்ள சுவர் ஓவியங்கள் | 1400கள் இதில் அரேபியர்களுடனான தமிழர்களின் குதிரை வாணிகம் பற்றி உள்ளது. படத்தில் தோன்றுபவர்கள் அரேபியர்களே
3 months 2 weeks ago
1) அகஸ்தியன் - 40 புள்ளிகள் முதலமைச்சருக்கு வாழ்த்துக்கள்.
3 months 2 weeks ago
வினா 20) மழை காரணமாக பாகிஸ்தான் நியூசிலாந்துக்கு இடையிலான போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவடைந்துள்ளது. எல்லா போட்டியாளர்களும் 2 புள்ளிகள் வழங்கப் படுகிறது. 1) அகஸ்தியன் - 40 புள்ளிகள் (95.24%) 2) ரசோதரன் - 38 புள்ளிகள் (90.48%) 3) ஏராளன் - 36 புள்ளிகள் (85.71%) 4) ஆல்வாயன் - 36 புள்ளிகள் 5) கிருபன் - 34 புள்ளிகள் 6) புலவர் - 34 புள்ளிகள் 7) நியூபலன்ஸ் - 34 புள்ளிகள் 8) வீரப்பையன் - 34 புள்ளிகள் 9) சுவி - 33 புள்ளிகள் 10) செம்பாட்டன் - 30 புள்ளிகள் 11) வாதவூரான் - 30 புள்ளிகள் 12) கறுப்பி - 30 புள்ளிகள் 13) ஈழப்பிரியன் - 30 புள்ளிகள் 14) வசி - 28 புள்ளிகள் 15) வாத்தியார் - 26 புள்ளிகள் இதுவரை வினாக்கள் 1 - 20, 32(1/4), 41, 42 க்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன். (அதிக பட்ச புள்ளிகள் 42)
3 months 2 weeks ago
👍................ நன்றி அல்வாயன். உண்மையில் நடந்த இரண்டு விடயங்களில் பலவற்றை, தனிப்பட்ட விடயங்களை, தவிர்த்து விட்டு பொதுவாக எழுத முயன்றிருக்கின்றேன்...................
3 months 2 weeks ago
பல்லவர் காசுகளில் தமிழரின் கடற்கலங்கள் படிமப்புரவு: Coins of Pallava- ஆர். கிருஸ்ணமூர்த்தி
3 months 2 weeks ago
மிக்க நன்றி, சாமானியன். 'அழியா மை................' நல்லதொரு தலைப்பு எந்த விதமான ஆக்கத்திற்கும்..............❤️. முதுமக்கள் தாழி என்றால் ஈமத்தாழி தானே.......... முன்னைய நாட்களில் இறந்தோரை அடக்கம் செய்ய பயன்படுத்தினார்களே, அவற்றையா சொல்லுகின்றீர்கள்................... 'கலம் செய் கோவே!...............' என்று ஒரு சங்கப்பாடல் இருக்கின்றது. ஒரு அருமையான பாடல்............................
3 months 2 weeks ago
தன்னறம் அல்லது சுதர்மம் என்றால் என்னவென்ற ஒரு விளக்கத்தை சமீபத்தில் வாசித்திருந்தேன். அதற்கு முன்னரே இந்தக் குறுங்கதையில் வரும் நிகழ்வுகள் போல இரு நிகழ்வுகள் எனக்கு தெரிந்தவர்களுக்கு நடந்து, அவை மனதில் ஒரு பாரமாக இருந்தன. இப்பவும் இருக்கின்றன. எவர் மீதும் ஒரேயடியாக குற்றம் சுமத்தாமல், மிகவும் இடைவெளிகள் விட்டு, மேலோட்டமாக எழுதி இருக்கின்றேன்..................🙏.
3 months 2 weeks ago
பல்லவர் காசுகளில் தமிழரின் கடற்கலங்கள்
3 months 2 weeks ago
🤣................ நீங்கள் சொல்வது சரியே, பையன் சார்.............. எங்களுக்கு போட்டி இன்னமும் முடியவில்லை, ஆனால் இலங்கை அணிக்கு முடிந்து விட்டது போல...............🤣. இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவும், இந்தியாவும் விளையாடி, ஆஸ்திரேலியா இந்தியாவை அடித்து துவைத்து காயப் போடும் என்று தான் நான் தெரிவு செய்திருக்கின்றேன். அப்படியே நடந்தால் அது உலகக் கோப்பை........... ஏதோ ஒரு வழியில் இந்தியா வென்றால், அது ஒரு ஊழல் கோப்பை என்று ஒரு சதிக் கோட்பாட்டை அவிழ்த்து விடுவதாக உள்ளேன். இப்போதைக்கு இந்த சதி விடயம் எங்களுக்கிடையில் மட்டுமே இருக்கட்டும்......................🤣.
3 months 2 weeks ago
யாழ். போதனா வைத்தியசாலையின் 175 ஆண்டு நிறைவு – விசேட தபால் தலை வெளியீடு written by admin October 18, 2025 யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் 175 ஆண்டு சேவையை நினைவு கூர்ந்து, விசேட தபால் தலை (Commemorative Stamp) இலங்கை அஞ்சல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டது. அஞ்சல் திணைக்களத்தின் உதவி அஞ்சல் அத்தியட்சகர் நாயகம், வட மாகாண உதவி அஞ்சல் அத்தியட்சகர் நாயகம் மற்றும் அஞ்சல் துணைக் கிளை உத்தியோகத்தர்கள் இணைந்து இந்த விசேட தபால் தலையை வெளியிட்டனர். அந்நிகழ்வில் மதத் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களான சிறிபவானந்தராசா , சி.சிறிதரன் ரஜீவன் ஜெய்சந்திரமூர்த்தி , யாழ்ப்பாண மாவட்ட செயலர் ம. பிரதீபன் , வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி ,வைத்தியசாலை வைத்திய நிபுணர்கள், மருத்துவர்கள், தாதியர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை, 1850ஆம் ஆண்டு “ஆபத்துக்கு உதவும் வைத்தியசாலை” என்ற பெயரில், அந்த காலத்திய அரசாங்க அதிபர் மற்றும், அவருடைய நண்பர்களுடன் இணைந்து சிறிய அளவில் நிறுவப்பட்டது. பின்னர், 1907ஆம் ஆண்டு, இவ்வைத்தியசாலைக்கு “யாழ்ப்பாணம் சிவில் வைத்தியசாலை” என்ற புதிய பெயர் வழங்கப்பட்டு, அதன் சேவைகள் விரிவுபடுத்தப்பட்டன. அதற்குப் பிறகு, 1956ஆம் ஆண்டு, இது “யாழ்ப்பாணம் பொது வைத்தியசாலை” என மாற்றப்பட்டது. 1980ஆம் ஆண்டு, இவ்வைத்தியசாலை “யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை” (Jaffna Teaching Hospital) என பெயர் மாற்றம் பெற்று, அன்றிலிருந்து அதே பெயரில் தொடர்ந்தும் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், எதிர்காலத்தில் “தேசிய வைத்தியசாலை” (National Hospital) என்ற அடிப்படையில் இந்த வைத்தியசாலை உயர்த்தப்படுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் 175 ஆண்டு சேவையை நினைவு கூர்ந்து, பல்வேறு விழாக்கள் மற்றும் நிகழ்வுகள் வைத்தியசாலையில் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://globaltamilnews.net/2025/221685/
3 months 2 weeks ago
பல்லவர் காசுகளில் தமிழரின் கடற்கலங்கள்
3 months 2 weeks ago
🤣................. மண்புழுக்கள், சிலந்திகள், பல்லிகள், குருவிகள், பூனைகள், மனிதர்கள் மற்றும் மரங்கள் போன்றவற்றின் ஊடாகவே நான் என்னைச் சுற்றி இருக்கும் உலகத்தை பார்க்கின்றேன்......... என்னால் முடிந்த வரை எந்தப் பக்கமும் சாயாமல் அப்படியே சொல்லவும் முயல்கின்றேன்........ வேலை வெட்டி இல்லாதவன் போல என்ற ஒரு புரிதல் வருவதில்லைதானே.............🤣.
Checked
Wed, 02/04/2026 - 22:39
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed