யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
இந்தியா அரை இறுதிக்குப் போய்விட்டது. அடுத்த போட்டியில் என்ன நடந்தாலும், அதிக வெற்றிகள் பெற்ற அணி என்னும் அடிப்படையில், இந்தியாதான் நான்காவது அணி. அரையிறுதியில் இந்தியா அவுஸ்ரேலியாவுடன் மோதும் என்று நினைக்கிறேன். தென்னாபிரிக்கா அடுத்த போட்டியில் அவுஸ்ரேலியாவை வென்றால், தென்னாபிரிக்கா முதல் இடம் பிடிக்கும். அவ்வாறாயின், இந்தியா தென்னாபிரிக்காவுடன் மோதும். ஆனால் தென்னாபிரிக்கா வெல்லுமாமாமாமா.