Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • Entries

    18
  • Comments

    0
  • Views

    37007

About this blog

Entries in this blog

வாழ்க்கை பொய்யா? அளவான ஆசை வாழ்க்கை அதிகமான ஆசை கனவு வாழ்வின் உண்மை முதல் வரி என்று தெரிந்தாலும் வாழ்வு என்னமோ கனவின் கை பிடித்தே நகரும்... கனவுகளில் பல மெய்யாவதில்லை அப்போ வாழ்க்கையும் பொய்யா??????????????
வா..வா!! --------------- கை குட்டையை கண்ணீரில் சலவை செய்த ஆண்டே 2005 போய்வா தோழா! சுனாமி என்று ஆரம்பித்தாய் ஜோசப் பரராஜசிங்கம் வரை கொன்று தொலைத்தாய்! என்ன உனக்கு நாம் செய்தோம் ஏன் இப்படி? இருந்தாலும் போய்வா! 2006 ஏ வா வா ! வண்ணப்பூக்கள் கொண்டு எம் வாசலில் கோலம் போடுவாயா? வாழ நினைக்கும் எங்கள் நெஞ்சில் கூரிய வாளதை.. பிறர் போல் மீண்டும் பாய்ச்சுவாயா? கெஞ்சி கேட்கிறோம்... நீயும் இரத்த சாரலை எம் முகத்தில் தூறாதே... தாங்கமாட்டோம்! வாய் மூடிபோன பீரங்கி வாய்களை
யாழ் களம்!! ----------------- இது எங்கள் தாய் களம்... தமிழால் நாமெல்லாம் உள்ளம் நனைக்க குதிக்கும் குளம்! ஒரு வகையில் புலம் பெயர்ந்த நமகெல்லாம்.. தமிழை தமிழால் அர்ச்சிக்க வாயில் திறந்த புண்ணிய தலம்! இங்கே புதினங்கள் இருக்கிறது.... புதிர்களும் உயிர்கிறது.... வாழ்த்துக்களும் பொழிகிறது... வசைபாடலும் தொடர்கிறது... அறிவியலும் இருக்கிறது.. அந்நியன் திரை படம் பற்றிய பேச்சும் இருக்கிறது... தேசத்தின் குரல் எடுத்து பாடும் தேசிய குயில்களும் வாழ்கிறது... தேசத்தை விற்று
மாவீரர் நாள் இரு கண்கள் சிலையாய் நிற்க... இமைகள் இரண்டும் தீ பந்தம் போல் எரிய.. இதயத்தை மட்டும் அழவிட்டு.. எம் உயிர் காத்தவர் எண்ணி.. உடலுக்குள் எரிமலை வெடிக்கும் ஒரு நாள்! நெடும் பனை என நேர் நடை கொண்டவனும்... இரட்டை ஜடை முளைத்த பட்டாம் பூச்சி என பறந்து திரிந்தவளும்... சுகங்களை எல்லாம் மூட்டை கட்டி விட்டு சுதந்திரத்துக்காய் எரிந்து போனார்களே.. அந்த பூந்தளிர்கள் பொசுங்கி போனதை எண்ணி... எம் தேச வானம் நெருப்பு நிறத்தில் உடை கொள்ளும் நாள்! இங்கொரு விடுதலைக்காக... எங்க
போ கடலே நீயுமா? ========================= நீல வானம் குடை பிடிக்க நெடும் கழுத்து நாரைகள் உனை கடக்க.. கொக்கின் தவம்..கரையில் ஒற்றை காலில் நின்று அடம் பிடிக்க கொள்ளை அழகு நீ என்று கொஞ்சி மகிழ்ந்தோம் கடலே.. கொத்தும் குலையுமாய் எம்மை கொன்று சென்றாய் கடலே! ஈவு இரக்கம் என்னவென்று தெரியாதார் நாளும் - எமை நார்..நாராய் கிழிதெறிந்து நரபசி ஆறினரே... குமுறி குமுறி அழுது.. கூடெரிந்த குருவிகளாய் வழி தெரியாது நின்றோம் - கடலே நீயும் வந்து எங்கள் விழிகளில் தீ மூட்டி போனாயே... வெந்து ஆவ
பூகம்பம் பிறந்த பொன்னாள் ====================== வாழ்வு அழிந்தது.... எங்கள் வளம் அழிந்தது... பூரண கும்பம் போன்ற எங்கள் ஜீவிதம் ... பொட்டிழந்த பூவை என பொலிவிளந்து கிடந்தது! மாவிலை தோரணம் கொண்டலங்கரித்தது போன்ற எங்கள் முற்றம் அலரி பூக்கள் நிறைந்து அழகிழந்து போனது! பார்த்து பார்த்து நாம் வாசலில் வளர்த்த ரோஜாவை ..சிங்களம் காலில் போட்டு நசுக்கி கழுத்தறுத்த பின் எம் தாயின் காலடியில் போட்டு சென்றது! தேம்பி தேம்பி அழுது நின்றோம் தெய்வமே காப்பாற்று என்று கதறி அழுதோம்! வான
நெஞ்சினுள் முள்ளாய்..... கண்ணே மணியே என்றான்.. கண்டவுடன் எனக்கு காதல் வரவில்லை.. உன்னை காணாமல் நான் ஏங்கினேனே... அப்போதே காதல் என்னுள் கருத்தரித்தது என்றும் சொன்னான்... நீ அழுதால் உன் இரு விழி துடைக்க மாட்டேன்.. நானும் சேர்ந்து அழுவேன் என்றான்! நட்ட நடு மழையில் தன்னிடம் இருந்த ஒற்றை குடையை நீட்டி... நீ பிடி... நான் நனைவேன்.. என் வாழ்வு முடியும் வரை.. உனக்காய் என்றான்! கால நதி வாழ்வு விருட்சத்தின் ஆணி வேர்வரை அலசி செல்ல.. என் காதலனும் எங்கோ தொலைந்தான்..! பிறர
நானும் அவனும்..! அன்னை ஒரு பிறவி தந்தாள்.. அடுத்தொரு பிறவி நீ எனக்கு தந்தாய்.. மண்ணில் இந்த பறவை வாழ... உந்தன் மனசில் கூடு ஒன்று எனக்களித்தாய்.... மரணம் வரும் நாள் வந்தால்... கண்ணா ... உன் மடியில் சாகும் வரம் தாயேன்! தோள் உரசி நாம் நடக்க... சூரியன் மெல்ல மெல்ல கண் மூட... தொடுவானம் குங்கும குளத்தில் நீராட.. தூரத்து நிலவு எறியும் ஒளியை... ஆளுக்கு பாதியாய்.. அள்ளிக் கொள்வோமா.. அழகிய முரடா? கடலோரம் ஒரு மாலை... நாம் நடை போட... கண் சிமிட்டும் விண் மீன்கள் .. எம
நன்றி கெட்ட நான்..! ================ கண் மூடியபடி நான் பிறந்தேன்..அன்று முதல் - அம்மா தன் கண்களை தூக்கம் காவு கொள்ள விடாதிருந்து எனைக் காத்தாள்! எங்கே என்னை எறும்பு கடித்திடுமோ என்று பயம் அவளுக்கு.. நான் தவழ தொடங்கினேன்.. தரையோடு தனை விழுத்தி தானும் சேர்ந்து தவழ்ந்து.. என் தத்தக்கா பித்தக்கா என்ற ஊர்தலில் தன் உயிர் மூச்சை ஒளித்து வைத்தாள் -அம்மா வளர்ந்தேன்... கங்காரு போல் எனை உடலில் காவி காவியே தான் மெலிந்தாள். கண்ணு இல்ல.....செல்லம் இல்ல.... காகம் சொல்லு...மேகம் ச
தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவ..!! உலகில் வாழும் உயிரினங்களிலே மனிதன் உயர்ந்தவன். ஏனெனில் அவனுக்கு ஆறறிவுகளில் ஒன்றான பகுத்தறிவு என்ற மெய்யறிவு உண்டு. இதனையே தொல்காப்பியர் அவர்கள் இவ்வாறு கூறிகின்றார். " மக்கள் தாமே ஆறறிவுயிரே யாவும் மாக்களும் ஐயறிவினவே" இந்த பகுத்தறிவால்தான் மனிதனால் நல்லது எது ? கெட்டது எது? என பகுத்தறிந்து தனக்கு தேவையானவற்றை எடுத்துக்கொண்டு வாழப் பழகிக்கொள்கிறான். இத்தகைய உயர்ந்த மனிதப்பிறப்பினுள் தமிழினம் என்றும் தனித்துவமானது.அதனால்தான் போல் ஒரு அறிஞன் கூறினான் " தமிழ
ஜோசப் பரராஜசிங்கம்! -------------------- சிங்கம் அவர் பெயருள் உண்டென்று உலகம் சொல்லும்.... அவர் உடல் முழுக்க ஓடியது புலி இரத்தம்! எங்களுக்கு மட்டுமே அது புரியும்!! எத்தனையோ இரவுகளில் எமக்கு துணை நின்ற ஒளி விளக்கு... விடிகிறது என்று எம்முள் சிலர் நினைக்கையில் .. எப்படி விடை பெற்று போயிற்று தன் மானத்துடன் வாழ்பவனுக்கு... சாவுதான் பரிசென்ற சாபகேடா எம் வாழ்வு? யுத்தம் அழித்தது... மேகம் அழித்தது... கடலும் வந்து கொன்று எமை கரை மணலுள் புதைத்து போனது! இன்று எம் கூட நின்
காதல் ------------ காதல் சிரிப்பில் தொடங்கும் அழுகையில் முடியும்! காதல் சிலருக்கு மட்டுமே சித்திரம் போன்ற தாஜ்மகால் பலருக்கு???? தன்னம் தனியனாய்....... ஒற்றைப்போர்வைக்குள் முகம் புதைத்து ஓவென்று அழுது உலகம் அறியாமல்... தனக்குத்தானே கல்லறை கட்டி தன்னை அதனுள் புதைத்து மண்ணை மூடும் சிறகொடிந்த சிட்டுக்குருவி!
கவலை மறந்திரு! -------------------- வயசாச்சு எனக்குத்தான்... நீ விடை பெற்று போன... உன் வீட்டு முற்றத்துக்கு அல்ல ... நீ அறிவாயா? காயும் பிஞ்சும் கடல் கடந்து ஓடினாலும்.. எந்தன் நாடி நரம்பு தளர்ந்து ... நரை நிறைந்து உடல் வாடினாலும்... நீ திரும்பி வந்து அள்ளி விளையாட... நீ வளர்ந்த மண்ணை காத்து நிற்பேன்! உன் தாயை அன்று வயிற்றில் சுமந்தேன்.. நீ தவழ்ந்த மண்ணை இன்று நெஞ்சில் சுமக்கிறேன்...! பாக்கு இடித்து சப்பும் பல்லில்லா கிழவி என்றா எனை நினைத்தாய்? ஏ.கே47 ம் நான்
கரும்புலிகள் சென்றார்கள் திரும்பி வந்ததில்லை இவர்கள் தேகம் சிதறிய நாளில் எல்லாம் எங்கள் தேசம் விழித்ததே உங்களுக்கு நினைவிருக்கா?????? பூ என்று ஒரு பொழுது வாழ்ந்தார்கள்... சருகென்று மறு பொழுதில் உதிர்ந்தார்கள் விடியலின் ஒளி வேண்டி திசைக்கொரு பறவையாய் தீ குளித்து தேசமே பெரிதென்று செத்தே போனார்கள் உங்களுக்கு உணர்விருக்கா???????? அந்த சந்தன மரங்கள் சரிந்த பின்பும் இந்த செம்மண் பூமி எப்போதும் சிலிர்த்தே நிக்கும் எங்கள் நிலத்தை எவன் வந்து தொட்டாலும் உங்கள் சுவாசமதை உள்வா
என்ன செய்ய போகிறோம்? ----------------------------------------- எவ்வளவு அழகிய பூமி.....என்னை சுற்றி இருப்பது! என்னதான் வாழ்கை பெரிய சுமையாக தெரிந்தாலும்.. கொட்டுகின்ற பனியும்...அதனை கொஞ்சுகின்ற புல் தரையும் .. நான் நட்டு வைத்த செடியில் முதல் முதலாய் பூத்து.... நாணத்துடன் சிரிப்பது போன்ற பூவும்... சின்ன குழந்தை முத்தமாய்.. என் தேகம் நனைக்கும் மழை துளியும்.. என்றோ பிரிந்து வந்தாலும்.. இன்னும் என் இதயத்தின் வலி கொண்ட சிறகாய்......... இன்றும் என் உயிர் பிசையும்..... வாழ்
இரண்டடிக்குள் இரண்டரை கோடி! நேற்றுத்தான் அவன் வீடு கட்ட கண்டேன்..... குடும்பத்தோடு வந்து இன்று குடிபுகுந்து விட்டான்! அவனும் கறுப்பு ..அவளும் கறுப்பு.. மகனும் கறுப்பு..மகளும் கறுப்பு... ஆடம்பரம் ஏதுமற்ற வீடு... அருகில் நடப்பதை பற்றி எந்த அக்கறையும் அங்கில்லை... மின்சாரம் இல்லையென்ற கவலை இல்லை.. மேதாவி தனமான பேச்சுகளும் அங்கில்லை... பசி என்று வந்துவிட்டால்- காதலுடன்.. அவன் இதழால் அவளுக்கு ஊட்டிவிட.. தான் பெற்றதை பிஞ்சுகளுக்கும்- இதழாலேயே பரிமாற ஒரு அள்ளு உணவுக்குள் ந

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.