Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அன்றொரு நாள் அமர்ந்திருந்தான் ஓர் மன்னன்

அடிபட்ட புறா ஒன்று அவன் மடியில் வீழ்ந்தது

அடித்த வேடுவனும் வந்தே வேந்தனிடம் முறையிட்டான்

அடித்ததற்கு நாணாதனால் நான் என்றான் நமக்கே சொந்தம்!

அளித்திடு எமக்கே என்றான்! அகிலத்தில் அன்று அதுதான் நீதி!

அரசனவந்தான் அதனால் அதட்டி விரட்டவில்லை வேடனை!

அதற்கு பதில் தருவேன் என்றே அரிந்து கொடுத்தான் தன் சதையை!

அவன் பெயர் சிபிச் சக்ரவர்த்தி! சீரிய நீதிக்கு மறுபெயர்!

அறிஞ்சர்களை அண்டிடும் வருமையை - கான

அஞ்சி பகுத்துண்டு வாழ்ந்தவர்கள் தான் தமிழர்கள்! -என்றாலும்

அன்பு குழந்தைகள் யானையை கண்டும்

அஞ்சிடாமல் அழகாக அழகு காட்டி அதன் முன்னே நின்றிடும்

அவர்களை கூட கொன்றவர்களை கும்பிட்டு தொழுவாரோ?

குழந்தைகளை கொன்று குலப் பழிதேடியதால்

குறுகியது வாழ்நாள் சிலருக்கு! குற்றமென்ன?

நடந்ததெல்லாம் அறிந்திட்டால் நாணிடாதோ நம்நெஞ்சம்!

நமக்கதனை அறிவிக்காதது ஏன்? நாணியதாலோ!

பத்திரிக்கை சுதந்திரமென்றே பறையரைவோர்

பார்க்க மறந்தனரோ! பார்வையிழந்தனரோ!

அமெரிக்காவின் மையாயை அகிலத்திற்குணற்தியதும்!

பத்திரிக்கைகள்தான்! அவர் மொழியில் ஆங்கில

பத்திரிக்கை நடத்துவோர் அவரிடமிருந்து பயிலவில்லையோ பண்பாட்டை!

பயிற்றுவிப்பதெல்லாம் பண்பாட்டுச் சீரழிவை!

பயணற்ற குப்பைகளை! பணம் குவிக்கும் முறைகளை!

நாங்களும் அவ்வாறு இருப்போமா? நன்றாக

எடுத்துறைப்போம் ஒவ்வொன்றாய்!

எங்கே தம்பி? என்று கேட்டுக் கொண்டே ஒரு வீட்டின் பின்புறமுள்ள சமையல் அறைக்கும் சென்றான் இந்திய அமைதிப் படையின் சிப்பாய் ஒருவன், அங்கே பயந்து நடுங்கிக் கொண்டிருந்த 19 வயது மாணவர்கள் அருட்பிரகாசம் சுவர்ணதாஸ், குமாரவேல் செவ்வானந்த வேல் என்பவர்களை கண்டதும், அவர்களின் தலைமயிரை பிடித்து இழுத்துக்கொண்டு வெளியே வந்தான். சுவர்ணதாஸ் வெற்றிலை கேணி பரமேஸ்வரா வித்யாலயாவிலும் செல்வானந்த்வேல் வல்வெட்டித்துறை சிதம்பரக் கல்லூரியிலும் படித்துக் கொண்டிருக்கிறார்கள்.

செல்வானந்தவேலின் வீடு தீருவில் தெருவில் இருந்தது, அங்கு முதல் நாள் நடந்த பிரச்சனையால் பயந்து இங்கு வந்து தங்கியிருந்தான். சம்பவம் நடந்த இடத்திலிருந்து 1 1/2 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள இடத்திற்கு இராணுவம் வருமென்று நினைத்துக் கூட பார்க்கவில்லை அவன். சுவர்ணதாஸ் வெற்றிலை கேணியில் இருந்து தனது பாட்டி வீட்டிற்கு வந்து இருந்தவன்.

அந்த இரு மாணவர்களையும் வெளியே இழுத்து அவர்கள் இருவரது கைகளையும் நைலான் கயிறால் கட்டி தெருவழியே இழுத்துப் போனார்கள். அவர்களின் பின்னால் தள்ளாடும் வயதில் சுவர்ணதாசின் பாட்டி இராஜேஷ்வரி அம்மாள் அழுதுக் கொண்டே பின் தொடர துப்பாக்கியின் கைப் பிடியால் ஓங்கி அவரது தோள் பட்டையில் அடித்தான். அந்த அடியின் வேதனை தாங்காமல் கிழவியால் நகர முடியவில்லை. அப்படியே தரையில் விழுந்துவிட்டால்.

அந்த இளம் மாணவர்களின் அலரல் அந்த சலையெங்கும் எதிரொலித்தது, தமிழர்களாக பிறந்ததற்கு இப்படியா தண்டனை அனுபவிக்க வேண்டும்?

அவர்களை அப்படியே கட்டி இழுத்துக் கொண்டு சென்று கடற்கரையோரமாக உள்ள ஊரணி அரசினர் வைத்திய சாலைக்குச் சற்று எதிர்புறமாக உள்ள தீர்த்தக் கடற்க்கரைக்கு முன்னால் படுக்க வைத்து கத்தியினால் நெஞ்சிலும் தலையிலும் குத்திக் காயத்தை ஏற்படுத்தினார்கள்.

உடலில் இருந்து குருதி பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருக்கின்ற நிலையிலும் அந்த இரு சிறுவர்களும் எங்களை ஒன்றும் செய்யாதீர்கள், நாங்கள் அப்பாவிகள் படித்துக் கொண்டிருக்கிறோம்................

ஈனஸ்வரத்தில் அழுது புலம்பிக் கொண்டிருக்கும் பொழுதே ஒரு சிப்பாய் அவர்களுக்கு மிக அருகில் நெருங்கி அவர்களை குறிவைத்து துப்பாக்கியின் விசையைத் தட்டி விட்டான்.

அவ்வளவுதான்.

அய்யோ!....அம்மா!...என்று வானமே அதிரும் வண்ணம் ஒலித்த குரலை தொடர்ந்து அந்த இரு சிறுவர்களும் இரத்த வெள்ளத்தில் மிதந்தனர்...

இது நம் கண்ணெதிரே நம் சகோதரனுக்கும், சகோதரிக்கும் , குழந்தைக்கும் நடந்திருந்தால், நாம் பொருத்திருப்போமா? பொங்கி எழமாட்டோமா

0 Comments

Recommended Comments

There are no comments to display.

Guest
Add a comment...

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.