Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

துளித் துளியாய்

தாயக மக்களுக்கு, அவர்களின் மறுவாழ்வுக்கு உதவுதல்/உதவி கோரல்கள்

பதிவாளர் கவனத்திற்கு!

துளித் துளியாய் பகுதியில் தாயக மக்களுக்கு, அவர்களின் மறுவாழ்வுக்கு உதவுதல்/உதவி கோரல்கள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தாயக மக்களின் மறுவாழ்வுக்கு உதவும் தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல் வேண்டும்.

தொண்டு, பரோபகாரம் என்பவை பற்றிய பொதுவான செய்திகள், கட்டுரைகள் தவிர்க்கப்படல் வேண்டும். அவை சமூகச் சாளரம் பகுதியில் இணைக்கப்படலாம்.

  1. போரால் பாதிப்புற்ற தங்கராசா 10ஆயிரம் ரூபா உதவி தங்கராசா ரமேஷ் இவர் பிறப்பிலே ஊனமானவர். போரால் பாதிக்கப்பட்டு சொத்துகள் உடமைகள் யாவையும் இழந்து போனவர். எனினும் இழக்காத மனவுறுதியோடு முல்லைத்தீவு நகரில் கச்சான் விற்றுத் தனது குடும்ப வாழ்வாதாரத்தைக் கொண்டு செல்கிறார். வளங்கள் இல்லாத நிலமையில் அன்றாடம் தன்னால் இயன்றளவு முயற்சித்து உழைக்கும் தன்னம்பிக்கையுள்ள மனிதர். இவருடைய தொழிலை மேலும் சற்று விரிவுபடுத்திக் கொள்ள இவருக்கு இலங்கை ரூபா பத்தாயிரம் ரூபா (அண்ணளவாக 60€)உதவினால் போதுமென்ற பெருமனதோடு வாழும் மனிதர். இவருக்கு யாராவது உதவ முன்வந்து உதவினால் அவரது வாழ்வில் மீண்டும் புது நம்பிக்கையும் ஏற்றமும் உண்டாக ஏதுவாக இருக்கும். தொடர்புகளுக்கு :- Telephone: (Shanthy) +49…

    • 3 replies
    • 747 views
  2. எமது யாழ்கள உறவுகளிடம் உதவி கோருகிறேன். இவ்வருடம் ஆனிமாதத்திலிருந்து மட்டக்களப்பு குசேலன்மலை பிரதேசத்தில் வாழும் மிகவும் வறுமைக்கோட்டுக்கு உட்பட்ட போரால் பாதிப்புற்ற மேற்படி கிராமத்தின் 27குடும்பங்களைச் சேர்ந்த 41 பிள்ளைகளுக்கான கற்பித்தல் வகுப்பினை நேசக்கரம் அமைப்பின் உப அமைப்புகளில் ஒன்றான அரவணைப்பு அமைப்பின் கவனிப்பின் கீழ் நடாத்தி வருகிறோம். இத்திட்டத்திற்கு அமெரிக்காவிலிருந்து திரு.தவேந்திரராசா ஐயா அவர்கள் முன்வந்து உதவிக் கொண்டிருந்தார். இது மட்டுமன்றி கணணிப்பயிற்சி நெறியினை நடாத்துவதற்கான கணணிகள் கொள்வனவுக்கான உதவிகளுடன் தொடர்ந்து மாணவர்களின் கல்விக்காக தனது உதவியை வழங்கி வந்த திரு.தவேந்திரராசா ஐயா அவர்களின் தொடர்பு கடந்த 2மாதங்களாக இல்லாதுள்ளது. தவேந்திர…

    • 21 replies
    • 2.8k views
  3. HMCநிறுவனத்தின் சீமெந்துக்கல் உற்பத்தியில் 3வது முன்னேற்றம் ஒக்ரோபர் மாதம் கணக்கறிக்கை :- http://hmclk.com/p121.html

    • 0 replies
    • 475 views
  4. தேன்சிட்டு நாட்டார்பாடல் இசைவிருது 2013. தமிழ்க் கலைகளை வளர்க்கும் நோக்கிலும் கலைத்துறையில் ஆர்வம் மிக்க இளையோரை ஊக்குவித்து முன்னேற்றும் வகையிலும் நேசக்கரம் உப அமைப்பான நேசம் அமைப்பின் ஏற்பாட்டில் முதல் முயற்சியாக 04.11.2013 – 05.11.2013 வரையான இரண்டு நாட்களும் நாட்டார் பாடல் போட்டியினை நடாத்தியுள்ளோம். மட்டக்களப்பு வாகரை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட போரால் பாதிக்கப்பட்ட இன்னும் பழைய வாழ்வுக்குத் திரும்பாத வறுமையும் வசதிகளாலும் பின்தங்கிய நிலமையில் இருக்கும் கதிரவெளியில் முதல் கட்டமாக 6பாடசாலைகளைச் சேர்ந்த தேர்வு செய்யப்பட்ட34 மாணவர்கள் தேன்சிட்டு நாட்டார்பாடல் இசைவிருது 2013 போட்டியில் பங்கெடுத்திருந்தனர். எமது உப அமைப்பான நேசம் அமைப்பின் அமைப்பாளர்; நே…

    • 0 replies
    • 680 views
  5. “தேன்சிட்டு” ஆயுர்வேத மருத்துவ குறுநிலம் உருவாக்கம். அருகிவரும் தமிழ் பாரம்பரிய சித்த வைத்தியத்தை மேம்படுத்திப் பேணும் நோக்கிலும் ஆங்கில வைத்தியத்தால் குணப்படுத்த முடியாத (வாதம், அஸ்மா , நீழிழிவு…..போன்ற) நோய்களைக் குணப்படுத்தும் நோக்கிலும் தமிழ் மாணவர்களுக்கு சித்த வைத்தியப் பயற்சியை வழங்கும் நோக்கிலும் எம்மால் உருவாக்கப்படும் தேன்சிட்டு குறுநிலத்தில் அரிய வகை 500மூலிகைச் செடிகளைப் பயிரிடும் முயற்சிகளை மேற்கொள்கிறோம். இதன் மூலம் ஆயுர்வேத வைத்திய நிலையத்தையும் உருவாக்கிக் கொள்வதன் மூலம் எமது மருத்துவத்துறையை விருத்தி செய்யக்கூடிய வாய்ப்பினையும் உருவாக்க முடியும். முழுமையாக அழிந்து வரும் தமிழ் ஆயுர்வேத சித்த வைத்தியத்தினை எமது மக்கள் சரியான வகையில் பெற்றுக் கொள்ளும…

    • 19 replies
    • 3.3k views
  6. நேசம் இலவச கல்வித்திட்டத்தில் புலமைப்பரிசில் சித்தியடைந்த 337மாணவர்கள். நேசம் இலவச கல்வித்திட்டத்தில் 2013 புலமைப்பரிசில் தோற்றிய அதிகூடிய சிறப்பச் சித்தியடைந்த 337 மாணவர்களுக்கான கௌரவிப்பினைச் செய்யவுள்ளோம். (அம்பாறை - 77மாணவர்கள், வெல்லாவெளி – 134 மாணவர்கள் ,மன்னர் 33 மாணவர்கள் , மட்டக்களப்பு – 51 மாணவர்கள் ,மூதூர் – 42 மாணவர்கள்) இம்மாணவர்கள் 337 பேருக்கும் சேமிப்புக்கணக்கை ஆரம்பித்து மாணவர்களுக்கான சேமிப்பை ஊக்குவிக்கவும் தலா ஒரு மாணவருக்கு 500ரூபாவை வைப்பிலிட்டு வழங்கவும் , கௌரவிப்பு ஞாபகக்கிண்ணம், மற்றும் அடிப்படை கற்கை உபகரணங்களையும் வழங்குவதற்குத் திட்டமிட்டுள்ளோம். இம்மாணவர்களுக்கான ஆதரவினை உறவுகளிடமிருந்து வேண்டுகிறோம். தலா ஒரு மாணவருக்கு 1…

    • 0 replies
    • 410 views
  7. புலமைப்பரிசில் 2013 மாணவர்கள் வழிகாட்டி கையேடு கணக்கறிக்கை நேசம் இலவச கல்வித்திட்டத்தின் கீழ் 2013புலமைப்பரிசில் மாணவர்களுக்கான வழிகாட்டி கையேடு வினாத்தாழ்களை வழங்கி மாணவர்களின் அடைவுமட்ட உயர்வுக்கான ஆதரவினை நேசக்கரம் வழங்கியிருந்தது. எம்மால் தயாரிக்கப்பட்ட வழகாட்டி கையேடு வினாத்தாழ்களுக்கான கணக்கறிக்கை :- 3 வழிகாட்டிகளிலும் 3ஆயிரம் வழிகாட்டிகள் எமது களப்பணியாளர்களின் நிதியுதவியில் வழங்கப்பட்டது. தங்கள் பணிகளின் மத்தியிலும் தங்களது பங்களிப்பை வழங்கிய எமது களப்பணியாளர்கள் அனைவருக்கும் நன்றிகள். மொத்தம் 197700.00ரூபா (ஒரு இலட்சத்துத் தொண்ணு10றாயிரம் ரூபா) செலவு. இவ்வுதவியை வழங்கிய உறவுகளுக்கு எங்கள் இதயம் நிறைந்த நன்றிகள். http://nesakkaram.or…

    • 0 replies
    • 544 views
  8. HMCநிறுவனத்தின் சீமெந்துக்கல் உற்பத்தியில் இரண்டாவது முன்னேற்றம் செப்ரெம்பர் மாதம் கணக்கறிக்கை :- தொடர்புபட்ட செய்தியிணைப்பு :- http://nesakkaram.org/ta/hmc%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95/ http://nesakkaram.org/ta/hmc%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95-2/

    • 0 replies
    • 432 views
  9. மன்னார் மாவட்டம் நேசம் இலவச கல்வித்திட்டம் 171 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர். நேசம் இலவச கல்வித்திட்டத்தினை இவ்வாண்டு மன்னார் மாவட்டத்திற்கும் விரிவுபடுத்தியிருந்தோம். மன்னார் மாவட்டத்திற்கு 3ஆயிரம் வழிகாட்டி வினாத்தாழ்கள் 3 வகையில் தயாரிக்கப்பட்டு பெப்ரவரி, ஏப்றல்,யூன் ஆகிய மாதங்கள் வழங்கியிருந்தோம். இவ்வழிகாட்டி வினாத்தாழ்கள் மன்னார் மாவட்டத்தில் எம்மால் தெரிவு செய்யப்பட்ட பாடசாலையில் கல்வி கற்கும் 5ம் வகுப்பு புலமைப்பரிசில் தோற்றும் மாணவர்களுக்கு வழிகாட்டிகள் வழங்கப்பட்ட பாடசாலைகளில் ஆசிரியர்களால் சிறந்த முறையில் மாணவர்களுக்கு கற்பிக்கப்பட்டது. தங்கள் கவனிப்பு கற்பித்தல் மூலம் மாணவர்களின் முன்னேற்றத்தில் ஆதரவு தந்த அனைத்து ஆசிரியர்கள் வலயக்கல்விப்பணிப்பாளர் அ…

    • 0 replies
    • 569 views
  10. புலமைப்பரிசில் சித்தியடைந்த 88மாணவர்களுக்கான நேசக்கரம் கௌவிப்பு நிகழ்வு. மண்முனை மேற்கு கல்வி வலய பாடசாலைகளின் அதிபர் சங்கமும் நேசக்கரம்பிறைட் புpயூச்சர் அமைப்பின் உப அமைப்பான அரவணைப்பு அமைப்பும் இணைந்து 88 புலமைப்பரிசில் சித்தியடைந்த மாணவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு மட்டகளப்பு கரடியானாறு மகாவித்தியாலய மண்டபத்தில் 29.10.2013 அன்று கோட்டக்கல்விப் பணிப்பாளர் முருகேசுப்பிள்ளை (ஏறாவூர்பற்று மேற்கு) தலைமையில் இடம்பெற்றது. நிகழ்வில் பிறைட் பியுச்சர் நேசக்கரம் அமைப்பின் அமைப்பாளர் திரு.ஜனனன் , சமூக ஒருங்கிணைப்பாளர் திரு. ரஜிகாந்த் ,அரவணைப்பு அமைப்பின் தலைவர் திரு.றொஷான் , செயலாளர் திரு.அருணா , முன்னாள் மாகாண கல்விப்பணிப்பாளர் திரு.எ.எம்.இ.போல் , பிரதேச செயலாளர் ஏறாவூர்பற…

    • 2 replies
    • 614 views
  11. New Opportunities for Wounded, Widowed, and Orphans of War, (புதிய சந்தர்ப்பங்கள்) அமைப்பானது அமெரிக்க நாட்டு வருமானவரிச்சட்டத்தின் பிரிவு 501c3 பிரிவின் கீழ் பதிவுசெய்யப்பட்டு அமெரிக்க நாட்டைத் தளமாகவும் இலங்கையின் வடக்கு, கிழக்கு மாநிலங்களில் வாழ் தமிழ் பேசும் மக்களைத் தன் சேவை நலங்களின் பெறுனராகவும்கொண்டியங்கும் ஒரு அறக்கொடை அமைப்பாகும். புலம்பெயர் தமிழ் மக்களுக்குத் தகவல் தருநோக்கில் உருவாக்கப்பட்ட எமது முகநூற் தளத்தினைத் (Facebook page) தற்போது நாம் விரிவுபடுத்தி வருகின்றனம். இந்த வகையில் நடைமுறையில் விரிந்துவரும், மற்றும் ஏற்கெனவே கனிந்துவிட்ட எமது திட்டங்கள் பற்றிய புள்ளிவிவரங்கள், சலனப்படங்கள், நிழற்படங்கள் போன்றவற்றால் நிறைந்து காணப்படும் இத்தளமானது மேலதிகமாக…

  12. நேசக்கரம் – எழுவான் அமைப்பின் தொழில் ஊக்குவிப்புக் கடன் மீளச்செலுத்தல். இவ்வருடம் எம்மால் மன்னார் மாவட்டத்திற்காக உருவாக்கப்பட்ட எமது உப அமைப்பான எழுவான் அமைப்பின் மூலம் 13 குடும்பங்களுக்கான வாழ்வாதார ஊக்குவிப்புக்கடன் வழங்கியிருந்தோம். எமது புலம்பெயர்வாழ் உறவுகளின் ஆதரவில் கிடைக்கப்பெற்ற 275000.00ரூபா (இரண்டு லட்சத்து எழுபத்தையாயிரம் ரூபா) உதவி மூலம் நடைமுறைப்படுத்தப்பட்ட இத்திட்டத்தில் பயனடைந்த பயனாளிகள் மாதாந்த அடிப்படையில் இதுவரையில் எமக்கு 60200.00ரூபா மீளச்செலுத்தியுள்ளனர். மீளச்செலுத்தப்பட்ட பணத்திலிருந்து யூலியஸ் என்பவருக்கு 25ஆயிரம் ரூபா மீன் வியாபாரத்திற்காக வழங்கியுள்ளோம். புதிதாக எம்மிடமிருந்து கடனைப் பெற்றுக் கொண்ட யூலியஸ் அவர்கள் மாதாந்தம் 2500 வீதம் மீள…

    • 0 replies
    • 626 views
  13. பற்பொடி உற்பத்தி தொழில் முயற்சிக்கு உதவி தேவை. போரால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சிறு சிறு தொழில் முயற்சிகளை மேற்கொண்டு வரும் எமது திட்டத்தில் நாம் முன்னெடுத்த முயற்சிகளின் வெற்றியைத் தொடர்ந்து முல்லைத்தீவு வள்ளுவர்புரத்தில் பற்பொடி உற்பத்தியை ஆரம்பிக்கவுள்ளோம். பற்பொடி உற்பத்தியில் தேர்ச்சி பெற்ற போரால் பாதிக்கப்பட்ட குடும்பங்களை உள்வாங்கி இத்தொழிலை ஆரம்பிக்கும் நோக்கில் முதல் கட்ட வேலைகளை முடித்துள்ளோம். உற்பத்திப் பொருட்கள் கொள்வனவு மற்றும் இட ஒழுங்கு அத்தோடு உற்பத்தி செய்யப்படும் பற்பொடியை கடைகளுக்கு விநியோகம் செய்வதற்கான வாகனம் உட்பட மொத்த முதலீட்டுத் தொகை ஒருலட்சத்து ஐயாயிரம் ரூபா தேவைப்படுகிறது. இத்தொழிலில் 3குடும்பங்களுக்கான வேலை வாய்ப்பை வழங்கலாம். …

    • 6 replies
    • 1.3k views
  14. சர்வதேச சிறுவர்தின நிகழ்வு சர்வதேச சிறுவர்தினம் மற்றும் முதியோர் தினத்தை முன்னிட்டு நேசக்கரம் பிறைட் பியூச்சர் அமைப்பும் மட்டக்களப்பு மேற்கு கல்விவலய தொழில் வழிகாட்டல் பிரிவும் இணைந்து 01.10.2013 அன்று மட்டக்களப்பு விபுலானந்தா முதியோர் இல்லத்தில் சர்வதேச சிறுவர் முதியோர் தின நிகழ்வினை நடாத்தியிருந்தது. நிகழ்வில் 50பாடசாலை மாணவர்களுக்கு நேசக்கரம் பிறைட்பியூச்சர் அமைப்பு 21500ரூபா பெறுமதியான 50 புத்தகப்பைகளை அன்பளிப்புச் செய்திருந்தது. 18முதியோர்களுக்கான பரிசுப்பொருட்களை பாடுமீன் லயன்ஸ் கழகத்தினர் வழங்கியிருந்தனர். இந்நிகழ்வில் நேசக்கரம் பிறைட் பியூச்சர் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ரூபி அவர்களும் பிரதம அதிதியாக மட்டக்களப்பு கல்வியதிகாரி சுபா சக்கரவர்த்தி , மட்டக்க…

    • 0 replies
    • 625 views
  15. க.பொ.சாதாரணதர மாணவர்களுக்கான பயிற்சிப்பாசறை எமது நேசக்கரம் அமைப்பின் உப அமைப்பான மாணவர் ஊக்குவிப்பு ஒன்றியமானது 2013 கா.பொ.த.சாதாரண தர பரீட்சையில் தோற்றும் போரால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் வாழும் மாணவர்களுக்கான 02 நாள் பயிற்சிப் பாசறைகளை மேற்கொள்ளவிருக்கின்றனர். 6நிலையங்களில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள பயிற்சிகளில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கான பயிற்சிகளை வழங்கி அவர்களது அடைவு மட்டத்தினை அதிகரிக்கச் செய்வதோடு தேவைப்படும் பாடங்களுக்கான மேலதிக விளக்க வகுப்புகளையும் நடாத்தவுள்ளோம். கணிதம் , விஞ்ஞானம் ஆகிய பாடங்களில் சிறப்பு சித்தியடையும் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில் மேற்படி பாடங்களுக்கான சிறப்பு பயிற்சிகளையும் மாணவர்களுக்கு வழங்கவுள்ளோம். விஞ்ஞான , கணித ப…

    • 0 replies
    • 502 views
  16. மலையர்கட்டு கிராமமக்களுக்கு ஆயிரம் கோழிக்குஞ்சுகள் வழங்கல் நிகழ்வு. போரால் பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு எல்லைக்கிராமங்களில் ஒன்றான மாலையர்கட்டில் வறுமைக்கோட்டிற்கு கீட்பட்ட 44குடும்பங்களுக்கான வாழ்வாதார ஊக்குவிப்பாக ஆயிரம் கோழிக்குஞ்சுகள் 01.10.2013 அன்று நேசக்கரம் பிறைட்பியூச்சர் அமைப்பினால் வழங்கி வைக்கப்பட்டது. நேசக்கரம் பிறைட்பியூச்சர் அமைப்பின் அமைப்பாளர் திரு.ஜனனன் , உபதலைவர் டினேஷ் , எமது உப அமைப்பான மீழ்ச்சி அமைப்பின் தலைவர் பொருளாளர் , உறுப்பினர்கள் , மலையர்கட்டு கிராம சேவகர் திரு.குகதாசன் , கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் கயேந்திரன் உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர். ஏற்கனவே இக்கிராமத்தில் கல்வி கற்கும் மாணவர்களுக்காக அடிப்படைத் தேவைகளை எமது அமைப்பு …

    • 26 replies
    • 2.9k views
  17. பிரித்தானியா தமிழர் ஒருங்கிணைப்புக்குழு (TCC)நேசக்கரம் இணைந்து வழங்கிய உதவி மட்டக்களப்பு தாளங்குடா மதுராபுரம் முன்பள்ளி மாணவர்கள் 30பேருக்கான கல்வியுபகரணங்கள் நேசக்கரம் பிறைட்பியூச்சர் அமைப்பினால் 20.09.2013அன்று வழங்கி வைக்கப்பட்டது. முன்பள்ளி செல்லும் மாணவர்களுக்குத் தேவையான புத்தகப்பை , தண்ணீர்ப்போத்தல் ,சாப்பாட்டுப்பெட்டி , கொம்பாஸ்பெட்டி , கலர்பெட்டி ,சித்திரக்கொப்பி , பென்சில் ,அழிறப்பர் போன்ற பொருட்கள் வழங்கப்பட்டது. நிகழ்வில் மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் வாசுதேவன் , மண்முனைப்பற்று திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர் சுரேந்திரன் தாளங்குடா 1 கிராமசேவகர் டிலக்சன் , சீப்பிரா விளையாட்டு கழக உறுப்பினர்கள் , மதுராபுரபொதுமக்கள் பிறைட்; பியூட்சர் – நேசக்கரம் அமைப…

    • 3 replies
    • 978 views
  18. பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக்கு குழுவின் (TCC)உதவிக்கு நன்றிகள் 12.09.2013 அன்று மட்டக்களப்பு எல்லைக்கிராமங்களாக மலையர்கட்டு கிராமத்தின் பாடசாலை மாணவர்கள் 43பேருக்கும் மற்றும் மண்டுர் அ.த.க.பாடசாலை மாணவர்கள் 16பேருக்கும் புத்தகப்பைகள், மற்றும் அடிப்படை கல்வியுபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது. வலயக்கல்விப் பணிப்பாளர் திருமதி பிள்ளைநாயகம் , கோட்டக்கல்விப் பணிப்பாளர் பாலச்சந்திரன் , பாடசாலை அதிபர் தேவகுமார் – (மலையர்கட்டு) பாடசாலை அதிபர் ஜெயரதன் (16ம் கொலனி), பாடசாலை அதிபர் கணேசமூர்த்தி (வெல்லாவெளி) , எமது உப அமைப்பான மீழ்ச்சி அமைப்பின் தலைவர் சண்முகம் , பொருளாளர் , ஜீவராஜா ,உறுப்பினர் பிரசாந்தன் ஒருங்கிணைப்புத் தலைவர் தயாரூபி நேசக்கரம் பிறைட்பியூச்சர் உப செயலா…

    • 2 replies
    • 770 views
  19. சுவிஸ் லுசர்ன் மாநிலத்தில் போரினால் பாதிக்கப் பட்ட தாயக மக்களுக்கு உதவும் முகமாக சில நலன் விரும்பிகளால் நலன் காப்போம் என்ற அமைப்பு தொடங்கப் பட்டு உதவி வருகிறது. மனிதாபிமானம் கொண்ட மக்கள் எம் உறவுகளுக்கு தொடர்பு கொண்டு உதவுங்கள் நன்றி . நலன் காப்போம் அமைப்பு சுவிஸ்.

  20. HMCநிறுவனத்தின் சீமெந்துக்கல் உற்பத்தியில் முதலாவது முன்னேற்றம் போரால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதார மேம்பாட்டினை உயர்த்தும் முகமாக இவ்வருடம் 3ம் மாதம் இலங்கையின் நிறுவனங்களுக்கான சட்ட வரைபுக்கு அமைய HAND MADE CREATORS (PVT) Ltd என்ற பெயரில் நிறுவனமொன்றை ஆரம்பித்திருந்தோம். இந்நிறுவனத்தை ஆரம்பித்ததன் நோக்கம் தொடர்ந்து எங்கள் மக்களை உதவி உதவியென்று உபத்திரம் கொடுக்காமல் தொழில் முயற்சிகளைச் செய்வதன் மூலம் சுயபொருளாதார முன்னேற்றத்தை ஏற்படுத்தி வறுமையில் உள்ளவர்களை மீட்பதோடு அவர்களது உழைப்பிலிருந்து அவர்களது பிள்ளைகளின் கல்வியை உயர்த்துவதையும் நோக்காகக் கொண்டு ஆரம்பித்தோம். வியாபாரத்தில் அனுபவம் வியாபார தந்திரம் எதனையும் அறியாத புதியவர்களே இந்நிறுவனத்தின் ஒழுங்…

    • 4 replies
    • 752 views
  21. புல்லுமலை பாடசாலை நூலகம் மாணவர் உதவி கணக்கறிக்கை புல்லுமலை பாடசாலை நூலகம் மாணவர் உதவி கணக்கறிக்கை :- பொருட்கள் கொள்வனவு விபரம் :- தொடர்புபட்ட செய்திகள் இணைப்பு :- http://nesakkaram.org/ta/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/ http://nesakkaram.org/ta/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE/ http://nesakkaram.org/ta/%E0%AE%AA%E0%AF%8…

    • 0 replies
    • 539 views
  22. நேசக்கரம் பிறைட்பியூச்சர் நடாத்தும் தமிழ் ஆவணப்படப்போட்டி ஆவணப்படத்தின் தலைப்பு :- வளமும் வாழ்வும். போரால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சனைகளை இனங்காண்பதோடு அவர்களுக்கான நிரந்தர வாழ்வாதார மேம்பாடு , கல்வி , சுகாதாரம் , சமூக விழிப்புணர்வு , சமூகப்பொறுப்பணர்வினை ஏற்படுத்து வகையிலான மாற்றத்துக்கான வழியைத் தேடும் ஓர் போட்டியாகும். நோக்கம் :- இருக்கும் வளங்களைக் கொண்டு வாழ்வை மேம்படுத்துவதும் , மேம்படுத்தக்கூடிய வளங்களை விருத்திசெய்வதுமாகும். நேர அளவு :- 10 தொடக்கம் 20நிமிடங்களுக்குள் சொல்லப்பட வேண்டிய கருத்து முழுமைப்பட வேண்டும். முடிந்தால் ஆங்கில உப தலைப்புகளுடன் தயாரித்தால் உப தலைப்புக்கான மேலதிக புள்ளிகள் வழங்கப்படும். ஆவணப்படங்கள் அனுப…

    • 0 replies
    • 527 views
  23. ஏழைக்கிராமமொன்றின் வளர்ச்சி வெற்றியை நோக்கிச் செல்கிறது வறுமையாலும் கல்வி நிலமையாலும் பின்தங்கி யாராலும் கவனிக்கப்படாதிருந்த மட்டக்களப்பு கரடியன்குளம் (குசேலன்மலை) கிராமம் இவ்வருடம் வெள்ள அனர்த்தத்தின் போது எமது அமைப்பால் இனங்காணப்பட்டது. அவசர உதவியாக இக்கிராமத்து மக்களுக்கான வெள்ள நிவாரணத்தை இவ்வருடம் தைமாதம் வழங்கியிருந்தோம். இக்கிராமத்தின் புவியியல் அமைவு வாழ்வாதார உயர்வுக்கான வழிமுறைகள் கல்வித் தகைமை போன்றவற்றை ஆராய்ந்து அவர்களை உயர்த்தும் நோக்கில் நேசக்கரம் களக்குழுவினர் நீண்ட நாட்கள் இந்தக் கிராமத்தின் குழந்தைகளோடும் குடும்பங்களோடும் கூடியிருந்து அவர்களது தேவைகள் பிரச்சனைகள் போன்றவற்றை ஆராய்ந்து அறிக்கையினை சமர்ப்பித்திருந்தனர். இக்கிராமத்தின் தேவைகள…

  24. புலம்யெர் வாழ் தமிழர்களே ஒரு குழந்தைக்கு கல்வி கொடுங்கள். 25.08.2013 அன்று 5ம் வகுப்பு புலமைப்பரிசில் பரீட்சைகள் நடைபெற்றுள்ளது. எமது அமைப்பானது ‘நேசம்’ இலவச கல்வித்திட்டத்தின்கீழ் இந்த ஆண்டு (2013) 5ம் தர புலமைப்பரிசில் மாணவர்களுக்கென வடகிழக்கு பகுதிகளில் 15000 மாணவர்களை உள்வாங்கி இலவச வழிகாட்டடிகளையுத் தயாரித்து வழங்கியும் மிகவும் பின்தங்கிய கிராமங்களில் பயிற்சிப் பாசறைகளையும் நடாத்தியுள்ளோம். இவ்வாண்டு 03 வழிகாட்டிகள் வருமாண்டு 06 வழிகாட்டிகள் வெளியிடுவதற்கு திட்டமிட்டுள்ளோம். வழிகாட்டி கையேடுகள் பயிற்சிப்பாசறைகள் நடாத்த ஆதரவு தந்த அனைத்து உறவுகளுக்கும் மாணவர்கள் பெற்றோர் சார்பாக நன்றிகளைத் தெரிவிக்கிறோம். நேசம் இலவச கல்வித் இத்திட்டத்தை எம்மால் உருவா…

    • 0 replies
    • 608 views
  25. பிள்ளைகளின் கல்வியை ஊக்குவித்த 32 பெற்றோர்களுக்கு வாழ்வாதார உதவி வழங்கல். மட்டக்களப்பு மேற்கு கல்விவலயத்திற்குட்பட்ட பாடசாலைகளில் இவ்வாண்டு 5ம் தர புலமைபரீட்சையில் தோற்றவிருக்கும் மாணவர்களில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களைத் தெரிவு செய்து அதிலும் மிகச் சிறப்பு மாணவர்களாக தற்போது 32 மாணவர்களை கொண்டமைந்த விஷேட சிறப்புக் கற்கை நெறித்திட்டமாக பன்குடாவெளி றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை முழுநேர கற்கைநெறி பாசறை நடாத்தப்பட்டு வருகின்றது. இம் மாணவர்களினை மேலும் ஊக்குவிக்கும் நோக்குடனும் பிள்ளைகளின் கல்வியில் பெற்றோரின் அக்கறையை அதிகரிக்கவும் மேற்படி 32மாணவர்களின் குடும்ப வாழ்வாதாரத்தினை உயர்த்தும் நோக்குடனும் 17.08.2013 சனிக்கிழ…

    • 0 replies
    • 469 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.