Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

துளித் துளியாய்

தாயக மக்களுக்கு, அவர்களின் மறுவாழ்வுக்கு உதவுதல்/உதவி கோரல்கள்

பதிவாளர் கவனத்திற்கு!

துளித் துளியாய் பகுதியில் தாயக மக்களுக்கு, அவர்களின் மறுவாழ்வுக்கு உதவுதல்/உதவி கோரல்கள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தாயக மக்களின் மறுவாழ்வுக்கு உதவும் தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல் வேண்டும்.

தொண்டு, பரோபகாரம் என்பவை பற்றிய பொதுவான செய்திகள், கட்டுரைகள் தவிர்க்கப்படல் வேண்டும். அவை சமூகச் சாளரம் பகுதியில் இணைக்கப்படலாம்.

  1. ஏழைக்கிராமமொன்றின் வளர்ச்சி வெற்றியை நோக்கிச் செல்கிறது வறுமையாலும் கல்வி நிலமையாலும் பின்தங்கி யாராலும் கவனிக்கப்படாதிருந்த மட்டக்களப்பு கரடியன்குளம் (குசேலன்மலை) கிராமம் இவ்வருடம் வெள்ள அனர்த்தத்தின் போது எமது அமைப்பால் இனங்காணப்பட்டது. அவசர உதவியாக இக்கிராமத்து மக்களுக்கான வெள்ள நிவாரணத்தை இவ்வருடம் தைமாதம் வழங்கியிருந்தோம். இக்கிராமத்தின் புவியியல் அமைவு வாழ்வாதார உயர்வுக்கான வழிமுறைகள் கல்வித் தகைமை போன்றவற்றை ஆராய்ந்து அவர்களை உயர்த்தும் நோக்கில் நேசக்கரம் களக்குழுவினர் நீண்ட நாட்கள் இந்தக் கிராமத்தின் குழந்தைகளோடும் குடும்பங்களோடும் கூடியிருந்து அவர்களது தேவைகள் பிரச்சனைகள் போன்றவற்றை ஆராய்ந்து அறிக்கையினை சமர்ப்பித்திருந்தனர். இக்கிராமத்தின் தேவைகள…

  2. சுவிஸ் லுசர்ன் மாநிலத்தில் போரினால் பாதிக்கப் பட்ட தாயக மக்களுக்கு உதவும் முகமாக சில நலன் விரும்பிகளால் நலன் காப்போம் என்ற அமைப்பு தொடங்கப் பட்டு உதவி வருகிறது. மனிதாபிமானம் கொண்ட மக்கள் எம் உறவுகளுக்கு தொடர்பு கொண்டு உதவுங்கள் நன்றி . நலன் காப்போம் அமைப்பு சுவிஸ்.

  3. ஊனமுற்ற சிறுவன் அனுராஜ் அவர்களுக்கு சக்கரநாற்காலி ஊனமுற்று நடக்க முடியாத நிலமையில் வாடும் சிறுவன் அனுராஜ் அவர்களுக்கான சக்கரநாற்காலியினை பெற்றோர் எமது நிறுவனத்திடம் கோரியிருந்தனர். இவ்வுதவியை யேர்மனியிலிருந்து யோனாஸ் அவர்கள் முன்வந்து வழங்கியுள்ளார். சக்கரநாற்காலி வேண்டுதல் கடிதம்:- படங்கள் :- சக்கரநாற்காலி பெற்றுக் கொண்டமைக்கான நன்றிக் கடிதம் :- http://nesakkaram.org/ta/%E0%AE%8A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D/

    • 4 replies
    • 787 views
  4. புல்லுமலை பாடசாலை நூலகம் மாணவர் உதவி கணக்கறிக்கை புல்லுமலை பாடசாலை நூலகம் மாணவர் உதவி கணக்கறிக்கை :- பொருட்கள் கொள்வனவு விபரம் :- தொடர்புபட்ட செய்திகள் இணைப்பு :- http://nesakkaram.org/ta/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/ http://nesakkaram.org/ta/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE/ http://nesakkaram.org/ta/%E0%AE%AA%E0%AF%8…

    • 0 replies
    • 541 views
  5. நேசக்கரம் பிறைட்பியூச்சர் நடாத்தும் தமிழ் ஆவணப்படப்போட்டி ஆவணப்படத்தின் தலைப்பு :- வளமும் வாழ்வும். போரால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சனைகளை இனங்காண்பதோடு அவர்களுக்கான நிரந்தர வாழ்வாதார மேம்பாடு , கல்வி , சுகாதாரம் , சமூக விழிப்புணர்வு , சமூகப்பொறுப்பணர்வினை ஏற்படுத்து வகையிலான மாற்றத்துக்கான வழியைத் தேடும் ஓர் போட்டியாகும். நோக்கம் :- இருக்கும் வளங்களைக் கொண்டு வாழ்வை மேம்படுத்துவதும் , மேம்படுத்தக்கூடிய வளங்களை விருத்திசெய்வதுமாகும். நேர அளவு :- 10 தொடக்கம் 20நிமிடங்களுக்குள் சொல்லப்பட வேண்டிய கருத்து முழுமைப்பட வேண்டும். முடிந்தால் ஆங்கில உப தலைப்புகளுடன் தயாரித்தால் உப தலைப்புக்கான மேலதிக புள்ளிகள் வழங்கப்படும். ஆவணப்படங்கள் அனுப…

    • 0 replies
    • 531 views
  6. நேசக்கரம் பிறைட்பியூச்சர் அமைப்பு நடாத்திய கரப்பந்தாட்டம். 25.05.2013 அன்று மட்டக்களப்பில் நேசக்கரம் பிறைட் பியூச்சர் அமைப்பினால் கரப்பந்தாட்டப் போட்டி நடாத்தப்பட்டது. விபுலானந்த விளையாட்டு கழக மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் :- கடல் மீன்கள் விளையாட்டு கழகம் வாழைச்சேனை விளையாட்டு கழகம் ஆரையம்பதி விளையாட்டு கழகம் கிரான் விளையாட்டு கழகம் கல்லாறு விளையாட்டு கழகம் விபுலானந்த விளையாட்டு கழகம் சிவானந்த விளையாட்டு கழகம் நியூ சவுண்ட் விளையாட்டு கழகம் எவக்ரீன் விளையாட்டு கழகம் லைட் ஹவுஸ் விளையாட்டு கழகம் ஆகிய பத்து விளையாட்டுக் கழகங்கள் பங்குபற்றியிருந்தன. நடுவர்களாக :- ஜெகதீஸ்வரன் விஜயகுமார் சாந்தன் ஆகியோர் கடமையாற்றியிருந்தனர். வாழைச்சேனை விளையாட்டு கழ…

    • 10 replies
    • 1.6k views
  7. புலம்யெர் வாழ் தமிழர்களே ஒரு குழந்தைக்கு கல்வி கொடுங்கள். 25.08.2013 அன்று 5ம் வகுப்பு புலமைப்பரிசில் பரீட்சைகள் நடைபெற்றுள்ளது. எமது அமைப்பானது ‘நேசம்’ இலவச கல்வித்திட்டத்தின்கீழ் இந்த ஆண்டு (2013) 5ம் தர புலமைப்பரிசில் மாணவர்களுக்கென வடகிழக்கு பகுதிகளில் 15000 மாணவர்களை உள்வாங்கி இலவச வழிகாட்டடிகளையுத் தயாரித்து வழங்கியும் மிகவும் பின்தங்கிய கிராமங்களில் பயிற்சிப் பாசறைகளையும் நடாத்தியுள்ளோம். இவ்வாண்டு 03 வழிகாட்டிகள் வருமாண்டு 06 வழிகாட்டிகள் வெளியிடுவதற்கு திட்டமிட்டுள்ளோம். வழிகாட்டி கையேடுகள் பயிற்சிப்பாசறைகள் நடாத்த ஆதரவு தந்த அனைத்து உறவுகளுக்கும் மாணவர்கள் பெற்றோர் சார்பாக நன்றிகளைத் தெரிவிக்கிறோம். நேசம் இலவச கல்வித் இத்திட்டத்தை எம்மால் உருவா…

    • 0 replies
    • 609 views
  8. பிள்ளைகளின் கல்வியை ஊக்குவித்த 32 பெற்றோர்களுக்கு வாழ்வாதார உதவி வழங்கல். மட்டக்களப்பு மேற்கு கல்விவலயத்திற்குட்பட்ட பாடசாலைகளில் இவ்வாண்டு 5ம் தர புலமைபரீட்சையில் தோற்றவிருக்கும் மாணவர்களில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களைத் தெரிவு செய்து அதிலும் மிகச் சிறப்பு மாணவர்களாக தற்போது 32 மாணவர்களை கொண்டமைந்த விஷேட சிறப்புக் கற்கை நெறித்திட்டமாக பன்குடாவெளி றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை முழுநேர கற்கைநெறி பாசறை நடாத்தப்பட்டு வருகின்றது. இம் மாணவர்களினை மேலும் ஊக்குவிக்கும் நோக்குடனும் பிள்ளைகளின் கல்வியில் பெற்றோரின் அக்கறையை அதிகரிக்கவும் மேற்படி 32மாணவர்களின் குடும்ப வாழ்வாதாரத்தினை உயர்த்தும் நோக்குடனும் 17.08.2013 சனிக்கிழ…

    • 0 replies
    • 475 views
  9. நேசக்கரம்’தேன்சிட்டு உளவள அமைப்பு’உதயம் நேசக்கரம் பிறைட்பியூச்சர் அமைப்பின் உப அமைப்பான ‘தேன்சிட்டு’ உளவள அமைப்பின் அங்குரார்ப்பண நிகழ்வும் உளவள பயிற்சிநிலையம் ஆரம்பமும் 01.08.2013 அன்று சம்பிரதாய பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது. ஆலயடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட அலிகம்பை , கலியாமாடு கிராமங்களைச் சேர்ந்த சுமார் 75 சிறார்களுக்கான உளவள பயிற்சிநிலையம் ‘தேன்சிட்டு’ அமைப்பினால் ஆரம்பிக்கப்பட்டு வைக்கப்பட்டுதுள்ளது. பயிற்சிநெறியில் கலந்து கொண்ட அனைத்துச் சிறுவர்களுக்கும் உணவு , சித்திரம் வரைதல் கொப்பிகள், வர்ணப்பென்சில்களும் வழங்கப்பட்டது. ‘தேன்சிட்டு உளவள அமைப்பு’ அங்குரார்ப்பண நிகழ்வில் எமது அமைப்பின் அங்கத்தவர்களான அம்பாறை மாவட்டம் மயூரன் , சங்கீதன் …

    • 5 replies
    • 826 views
  10. மருத்துவம் இயந்திரவியல் கற்கும் பல்கலைக்கழக ஏழை மாணவர்களுக்கு உதவுங்கள். நேசக்கரம் பிறைட்பியூச்சர் அமைப்பின் கல்வி ஊக்குவிப்புக் குழுவினரால் தெரிவு செய்யப்பட்ட பல்கலைக்கழகம் செல்ல காத்திருக்கும் மருத்துவ , இயந்திரபீட மாணவர்கள் 50பேருக்கான கல்வியுதவியை வழங்க புலம்பெயர் உறவுகளை வேண்டுகிறோம். சிறந்த பெறுபேறுகளைப் பெற்றும் தொடர்ந்து மருத்துவ , இயந்திரபீடக்கல்வியை தொடர வசதியற்ற மாணவர்களை நேசக்கரம் இவ்வாண்டிலிருந்து குறித்த துறைகளில் கற்று முடிக்க வேண்டிய ஆதரவினை வழங்க வேண்டிய பொறுப்பை ஏற்றுள்ளது. எமது அமைப்பின் மூலம் பல்கலைக்கழக கல்விக்கான உதவியை பெறும் மாணவர்கள் நாம் தெரிவு செய்து கூறும் ஊர்களில் வாழும் வறிய மாணவர்களுக்கான இலவச கற்பித்தல் வகுப்புக்களை இலவசமாக வழங்…

  11. புற்றுநோயால் பாதிக்கப்பட்ட முன்னாள் போராளிக்குக் கிடைத்த உதவி. மட்டக்களப்பு மயிலம்பாவெளி , தன்னாமுனையைச் சேர்ந்த சுந்தரதாஸ்அவர்கள் மூளைப்புற்றுநோய் கண்டறியப்படாமல் நீண்ட நாட்கள் நோயோடு போராடினார். 3பிள்ளைகள் குடும்பத்தோடு வாழ்ந்து சுந்தரதாஸ் அவர்கள் தனது குடும்ப வாழ்வாதாரத்திற்கான வசதிகள் ஏதுமற்ற நிலமையில் எம்மிடம் உதவி கோரியிருந்தார். இவருக்கான முதல்கட்ட உதவியினை கருணையுள்ளம் கொண்ட எழிலி பொன்னுத்துரை அவர்கள் முன்வந்து வழங்கியிருந்தார். http://nesakkaram.org/ta/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/

    • 0 replies
    • 703 views
  12. சீமெந்துக்கற்கள் வியாபாரம் நீங்களும் இணையலாம் போரால் பாதிப்புற்ற கிழக்குமாகாணத்தின் பல கிராமங்களுக்கு வீட்டுத்திட்டம் வழங்கப்பட்டு வருகிறது. வீடுகளைக் கட்டுவதற்கான சீமெந்துக்கற்கள் , மரங்கள் இதர பொருட்கள் யாவும் முஸ்லீம் மற்றும் பெரும்பான்மையினத்தினரின் உற்பத்திகளிலிருந்தே எம்மவர்கள் அதிக விலைகொடுத்து வாங்கும் நிலமையிருக்கிறது. இவ்விடங்களை நோக்கி அவர்களது தொழில்சாலைகளும் வந்து கொண்டிருக்கிறது. நாமே வீடு கட்டுவதற்குத் தேவையான கற்கள் மரங்கள் போன்றவற்றை எம்மவர்களுக்கு விநியோகிக்க முடியும். அதற்கான முதலீடு எம்மிடம் இருப்பின் எம்மவர்களுக்கு நாங்களே குறைந்த விலையில் வழங்கலாம். இவற்றைக் கருத்தில் கொண்டு சீமெந்துக்கற்தொழிச்சாலை ஒன்றைக் கிழக்கு மாகாணத்தில் நிறுவ உத்தேசித்…

    • 8 replies
    • 2.3k views
  13. புல்லுமலை மாணவர்களுக்கு உதவியும் நூலகத்திற்கான நூல்கள் வழங்கலும் 01.08.2013 அன்று மட்டக்களப்பு மாவட்டம் பெரியபுல்லுமலை கிராமத்தின் றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையில் நூலகத்திற்கு தேவையான நூல்களும் அனைத்து மாணவர்களுக்கும் புகுத்தகப்பைகளும் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.இந் நிகழ்வினை பிறைட்பியுச்சர் நேசக்கரத்தின் உப அமைப்பான அரவணைப்பு அமைப்பின் உறுப்பினர்கள் நிகழ்வை ஒருங்கிணைத்து நடாத்தியிருந்தனர். பாடசாலை அதிபர் திரு.சோமசுந்தரம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதேச செயளாளர் திரு.ரு.உதயஸ்ரீதர் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் மட்டக்களப்பு மேற்கு வலய கல்விப்பணிப்பாளர் திரு.ரவிச்சந்திரன், கிராமசேவகர் திரு.சோமபால மற்றும் மட்டக்களப்பு மேற்கு வலய அதிபர்களுடன் நேச…

  14. மட்டக்களப்பு மலையர்கட்டு கிராம மாணவர்களுக்கு அவசர கல்வியுதவி தேவை போரினால் பாதிக்கப்பட்டு மீள்குடியேறிய மட்டக்களப்பு எல்லைக்கிராமங்களில் ஒன்றான மலையர்கட்டு கிராமத்தில் கல்வி கற்கும் மாணவர்கள் 43 பேருக்கான அடிப்படை கற்கை உபகரணங்களும் பாதணிகளும் வழங்க வேண்டியுள்ளது. இப்பாடசாலைக்கு நேரில் சென்று மாணவர்களின் நிலமைகளைப் பார்வையிட்ட எமது அமைப்பின் பணியாளர்களின் அவதானிப்பில் இக்கிராமம்; போரால் பாதிப்புற்ற கிராமங்களில் அதிக பாதிப்புக்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது. சுகாதாரம், கல்வி, பொருளாதாரம் யாவற்றிலும் தேவைகளை அதிகம் எதிர்பார்த்து இருக்கும் இக்கிராமத்தில் வறிய நிலமையில் உள்ள மாணவர்கள் கல்வி கற்க முடியாத நிலமையில் வாழ்கின்றனர். தொடர் இடப்பெயர்வு யுத்தம் அனைத்தாலும் பாதிப…

    • 0 replies
    • 419 views
  15. மீள்குடியேறிய 16 மாணவர்களுக்கும் 160€ உதவினால் போதும். போரினால் பாதிக்கப்பட்டு மீள்குடியேறிய மட்டக்களப்பு எல்லைக்கிராமங்களில் ஒன்றான மண்டுர் 16ம் வட்டாரத்திலுள்ள அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்களுக்கான அடிப்படை கல்வி உபகரணங்கள் கோரப்பட்டுள்ளது. இப்பிரதேசமானது கிழக்கில் போரால் பாதிக்கப்பட்ட பிரதான இடங்களில் ஒன்றாகும். கல்வித் தரத்திலும் பொருளாதார முன்னேற்றத்திலும் பின்தங்கிய நிலமையில் இருந்து வரும் இப்பிரதேசத்தில் அடிப்படை வசதிகள் இல்லாமையால் பள்ளி செல்லும் மாணவர்களின் தொகை மிகவும் குறைவாகவே உள்ளது. கற்கை உபகரணங்கள் , பாதணிகள் , உடைகள் இல்லாத நிலமையில் உள்ள 16மாணவர்களுக்கும் புலம் பெயர் உறவுகளிடம் உதவியைக் கோருகிறோம். ஒரு மாணவருக்கு 10€தே…

    • 0 replies
    • 530 views
  16. சீமெந்துக்கல் விற்பனை ஆரம்பம். July 30, 2013 தொழில்கள் Edit This எமது Hand made creators (pvt)Ltd தொழில் நிறுவனத்தின் முதல் முயற்சியாக சீமெந்துக்கல் உற்பத்திக்கான முதலீட்டாளர்களை இணைத்து உருவாக்கிய தொழில் நிறவனமானது 23.07.2013 அன்று மட்டக்களப்பு புல்லுமலைப் பிரதேசத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. எமது முதல் முயற்சியில் 377405,00ரூபா முதலிடப்பட்டு 12 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. முதல் கட்டம் 15வீடுகளுக்கான ஒப்பந்தம் கிடைத்துள்ளது.இனிவரும் நாட்களில் இரவு வேலையும் ஆரம்பமாகவுள்ளது. மேலும் ஒரு தொகுதியினருக்கான வேலை வாய்ப்பு வழங்கக் கூடிய சாத்தியம் இருக்கிறது. இம்முயற்சிக்கு தங்கள் ஆதரவை வழங்கி முதலிட்டோர் விபரம் :- 1) கஜீபன் (கனடா) 38.130,…

    • 0 replies
    • 620 views
  17. 2013 புலமைப்பரிசில் 5ம் வகுப்புத் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் மட்டக்களப்பு மேற்கு வலயம் ஏறாவூர் மேற்கு கோட்டப்பிரதேசத்தில் நடைபெறும் 2013 புலமைப்பரிசில் 5ம் வகுப்புத் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நேசம் இலவச வழிகாட்டி பயிற்சி முன்னோடிப் பரீட்சைகளில் மேற்படி கோட்டப் பிரதேசத்தில் சிறந்த மதிப்பெண்களைப் பெற்ற 48மாணவர்களுக்குமான சிறப்பு தயார்படுத்தல் பயிற்சி வகுப்பினை ஆவணி 24ம் திகதி வரையும் நடாத்த திட்டமிட்டு மாணவர்களுக்கான தொடர் பயிற்சிநெறி நடைபெற்று வருகிறது. இம்மாணவர்கள் அனைவரும் திங்கள் தொடக்கம் சனிக்கிழமை வரையிலும் தங்கி நின்று கல்வியைப் பெறுகின்றனர். இவர்களுக்கான உணவு இதர அடிப்படை உதவிகளை சோபா நிறுவனம் வழங்கிவருகிறது. நேசம் …

    • 0 replies
    • 662 views
  18. தன்னுடைய அகரம் பவுண்டேஷன் மூலம், குமரியில் வசித்து வரும் அகதியான மாணவி தினுசியா இன்ஜினியரிங் படிக்க உதவியுள்ளார் நடிகர் சூர்யா. குமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் உள்ள ஈழத்து அகதிகள் முகாமில் வசிக்கும் செல்வி தினுசியா பன்னிரெண்டாம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்து அண்ணா பல்கலைக் கழக கலந்தாய்வில் கலந்து கொண்டார். அதில், தினுசியாவிற்கு நாகர்கோவில் பொன் ஜெஸ்லி கல்லூரியில் சேர இடம் கிடைத்தது. அக்கல்லூரியில் தமிழ் உணர்வாளர்கள் ரூபாய் 25,000 பணம் கட்டி தினுசியாவை சேர்த்தனர். ஆனால் அதற்கு மறுநாளே நடிகர் சூர்யாவின் அகரம் அறக்கட்டளையில் இருந்து தினுசியாவிற்கு அழைப்பு வந்தது. சென்னை எஸ்.ஆர்.எம். பல்கலையில் பொறியியல் படிக்க இடம் ஏற்பாடு செய்திருப்பதாகவும் நான்கு ஆண்டுகள் படிப்பிற்…

  19. நேசக்கரம் மாணவர் ஊக்குவிப்பு ஒன்றியம் உருவாக்கம். தமிழ்மாணவர்களின் மருத்துவம், இயந்திரவியல் பீடங்களுக்கான பல்கலைக்கழக நுளைவை அதிகரிக்கும் நோக்கிலும் படித்த இளைஞர்களின் வழிகாட்டலில் சிறந்த கல்விச் சமூகத்தை உருவாக்கும் நோக்கிலும் நேசக்கரம் பிறைட் பியூச்சர் அமைப்பினால் ‘மாணவர் ஊக்குவிப்பு ஒன்றியம்’ ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இவ் ஒன்றியத்தில் பல்கலைக்கழக அனுமதி பெற்றவர்களே அங்கம் வகிப்பர். குறிப்பாக மருத்துவம் , எந்திரவியல் பீடங்களுக்கு அனுமதி பெற்றவர்களே இவ்வைமப்பின் உறுப்பினர்களாகும் தகுதியைப் பெறுவார்கள். நோக்கம் :- பல மாணவர்கள் சிறந்த மதிப்பெண்களைப் பெற்று மருத்துவ எந்திரவியல் பீடத்திற்கு அனுமதி கிடைத்தும் பணவசதியின்மையாலும் குடும்ப வறுமையின் நிமித்தமும் குறைந…

    • 4 replies
    • 673 views
  20. புல்லுமலைக் கிராமத்தின் குழந்தைகளையும் ஆதரிப்போம். மட்டக்களப்பு நகரத்தின் மேற்கே 30 கிலோ மீற்றருக்கு அப்பால் செங்கலடி பதுளை பிரதான வீதியில் மட்டக்களப்பு மாவட்டத்தின் ஒரு எல்லைக் கிராமமாக ‘பெரிய புல்லுமலை’ எனும் அழகிய கிராமம் அமைந்துள்ளது. சுமார் 800வரையிலான தமிழ்குடும்பங்கள் குடியிருந்த இக்கிராமம் விவசாயத்தையே தன் ஆதாரமாகக் கொண்டிருந்தது. காலத்துக்குக் காலம் யுத்தத்தின் பாதிப்பு இக்கிராமத்தையும் அதிகளவில் காவு கொண்டது. யுத்தத்தினால் ஊர்களை விட்டு மக்கள் வெளியேறிவிட ஒரு கட்டத்தில் புல்லுமலை மனிதர்கள் இல்லாத ஊராக இருந்ததும் ஒருகாலம். இதர இடங்களில் குடியேறி அங்கங்கே பல குடும்பங்கள் நிரந்தரமாக தங்கிவிட்ட போதும் 148 குடும்பங்கள் தங்கள் சொந்த ஊரான புல்லுமலைக்குத் திர…

    • 3 replies
    • 853 views
  21. நேசக்கரம் எழுவான் அமைப்பு வாழ்வாதார கடனுதவி வழங்கல். மன்னார் மாவட்டத்தில் எம்மால் உருவாக்கப்பட்ட நேசக்கரத்தின் உப அமைப்பான எழுவான் அமைப்பின் ஆய்வறிக்கைக்குழுவினால் தெரிவு செய்யப்பட்ட 11குடும்பங்களுக்கான விவசாயக்கடனுதவியானது இம்மாதம் வழங்கப்பட்டுள்ளது. 1) ஜெயராசன் மாலினி 2) சிவானந்தராசா கென்சிகா 3) வடிவேல் அருள்வாசகம் 4) சூசைப்பிள்ளை எட்மன் 5) பிரான்சிஸ் 6) செபஸ்ரியன் 7) அந்தோனிப்பிள்ளை 8) சந்திரகுமார் 9)வீரசிங்கம் …

    • 2 replies
    • 645 views
  22. தொழில் நிறுவனம் மூலம் நீங்களும் உதவலாம் போரால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதார மேம்பாட்டினை உயர்த்தும் முகமாக இவ்வருடம் 3ம் மாதம் இலங்கையின் நிறுவனங்களுக்கான சட்ட வரைபுக்கு அமைய HAND MADE CREATORS (PVT) Ltd என்ற பெயரில் நிறுவனமொன்றை ஆரம்பித்துள்ளோம். இந்த நிறுவனத்தின் நோக்கம் :- 1) போரால் பாதிக்கப்பட்டவர்களுக்கானதும் வறுமையால் வாடும் தமிழர்களுக்குமான வேலை வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுத்தல். 2) சிறு சிறு முதலீடுகள் மூலம் தொழில் முயற்சிகளை முன்னெடுத்தல். 3) சிறு சிறு வியாபாரங்களை ஆரம்பித்தல். 4) கிடைக்கும் வருமானத்தின் மூலம் ஏழை மாணவர்களுக்கான கல்விக்கு உதவுதல். எமது நிறுவனத்தின் பதிவுச் சான்றிதழ் :- இத்திட்டத்தில் இணைந்து கொள்ள விரும்புவோர் எ…

    • 7 replies
    • 1k views
  23. நாவலர் ஆங்கிலபாடசாலை பாலர்களுக்கு சீருடை வழங்கல் மட்டக்களப்பு மாநகர எல்லைக்குள் சுமார் 900 குடும்பங்களை கொண்ட நாவற்குடா கிழக்கு எனும் பின்தங்கிய கிராமம் உள்ளது. இங்கு சிறார்களின் கல்வி மேம்பாட்டுக்காக இவ்வூர் கிராம அபிவிருத்திச் சங்கம் நாவலர் ஆங்கில பாலர் பாடசாலை ஒன்றினை 2013 தை மாதம் முதல் நடத்தி வருகின்றது. இங்கு ஆரம்பக்கல்வியைப் பெற்றுவரும் 16 பாலர்களுக்கு சீருடையினை நேசக்கரம் வழங்கியுள்ளது. இன்று ஆங்கிலப்பாடசாலைகள் பணக்காரர்களுக்கு மட்டுமேயான ஒன்றாகவுள்ளது. இந்நிலையில் ஏழைமாணவர்களும் ஆங்கிலக்கல்வியைப் பெற வைக்கும் நோக்கில் ஆசிரியர்களுக்கான சிறிய கொடுப்பனவின் ஒருபகுதி உதவியை மட்டும் பெற்று இப்பாடசாலையை நடத்தப்படுகிறது. பாலர்களின் தேவைகளான புத்தகங்கள் சீருடை போன…

    • 0 replies
    • 493 views
  24. ஏழைக்கிராமமொன்றின் வளர்ச்சியை நோக்கிய பாதையில் நேசக்கரம். ஒரு நாட்டின் உயர்ச்சி கிராமங்களிலேயே தங்கியுள்ளது. ஆனால் தமிழர் பிரதேசங்களைத் தின்றுமுடித்த போரின் வடுக்களாக மிஞ்சியிருப்பது வறுமையும் துயரமும் வாழ்வாதார முன்னேற்றத்தில் மிகவும் பின் தங்கிய நிலமையே காண்கிறது. இந்த வகையில் பெயர் அறியப்படாத பெயர் தெரியாத தமிழர் கிராமங்கள் எத்தனையோக கிழக்கு மாகாணத்தில் இருக்கிறது. அத்தகைய கிராமங்களில் ஒன்று மட்டக்களப்பு மாவட்டம் செங்கலடி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கரடியனாறு கிராம உத்தியோகத்தர் பிரிவு கரடியன்குளம் குசேலன்மலை எனப்படும் கிராமமும் ஒன்றாகும். இங்கு 27குடும்பங்கள் மட்டுமே வாழ்கின்றனர். போராட்டத்திற்காக உயிர்கள் முதல் உடமைகள் வரை இழந்த காயங்களையும் தன்னகத்தே தாங்க…

    • 4 replies
    • 986 views
  25. ஒரு குடும்பத்திற்குத் தொழில் வழங்க 25ஆயிரம் ரூபா உதவினால் போதும். மன்னார் மாவட்டம் போரால் பாதிக்கப்பட்டு´மீள்குடியேறிய பாப்பாமோட்டை , தேனுடையான் , கட்டக்காடு , முள்ளிக்கண்டல் , கண்டல் ஆகிய கிராமங்களிலிருந்து தேர்வு செய்யப்பட்ட 35 குடும்பங்களுக்கான உதவியினை வேண்டுகிறோம். இக்குடும்பங்களிலிருந்து 10குடும்பங்கள் கடற்தொழில் செய்ய வலைகள் கோரியுள்ளனர். ஒரு வலையின் பெறுமதி 25ஆயிரம் இலங்கை ரூபா (அண்ணளவாக 155€) 10குடும்பங்களுக்கான 10வலைகளுக்கும் தேவையான நிதியுதவி – 250000,00ரூபா (அண்ணளவாக 1543€) 13குடும்பங்கள் நீர் இறைக்கும் இயந்திரம் கோரியுள்ளனர். ஒரு இயந்திரத்தின் விலை – 20000,00ரூபா (அண்ணளவாக 123€) 13குடும்பங்களுக்கும் தேவையான நிதி – 259038,00 (அண்ணளவாக 1599,…

    • 20 replies
    • 3.5k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.