Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. மலேசியாவுக்கு தப்ப முயன்ற சேகர் ரெட்டி கூட்டாளி லோதா கைதானது எப்படி?- பரபரப்பு பின்னணி தகவல்கள் லோதா தமிழக அரசின் பொதுப்பணித் துறை ஒப்பந்ததாரரும் தொழிலதி பருமான சேகர் ரெட்டி, அவரது உறவினர் சீனிவாச ரெட்டி, நண்பர் பிரேம் ஆகியோரது வீடுகளில் கடந்த 7-ம் தேதி முதல் 4 நாட்கள் வருமான வரித்துறை, அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் ரூ.147 கோடி பணம், 178 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டன. விசாரணையில் சேகர் ரெட்டிக்கு ரூ.25 கோடி ரூபாய் வரை புதிய ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொடுத்தது கொல்கத்தாவைச் சேர்ந்த பராஸ்மால் லோதா தான் என்பது தெரியவந்தது. மேலும் டெல்லியில் வழக் கறிஞர் ரோஹித் …

  2. இலங்கையில் போர் நடைபெற்ற போது மூன்று வேளை பிரியாணி சாப்பிட்டோம்:- இலங்கையில் போர் நடைபெற்ற காலத்தில் மூன்று வேளையும் பிரியாணி சாப்பிட்டோம். தற்போது ஒரு வேளை கஞ்சி குடிக்க கூட வழியின்றி கஷ்டப்படுகின்றோம். என இராமேஸ்வர மீனவர் ஒருவர் தெரிவித்து உள்ளார். கச்சதீவு அந்தோனியார் ஆலய திறப்பு விழாவுக்கு இந்திய இராமேஸ்வரத்தில் இருந்து வந்திருந்த போது ஊடகவியலாளர்களிடம் அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் , இலங்கையில் போர் முடிவடைந்து தமிழ் மக்கள் தற்போது சந்தோஷத்துடன் வாழ்கின்றார்கள். அவர்கள் இப்போது போல் எப்போதும் வாழ வேண்டும். இலங்கையில் போர் நடைபெற்று கொண்டிருந்த…

  3. புனிதங்களைப் பொசுக்கியவர் : புகழ்பெற்ற அரசியல் அறிஞர் பார்வையில் பெரியார்! பகுதி 1 பேராசிரியர் சுனில் கில்னானி இந்தியாவின் முன்னணி அரசியல் அறிஞர். அவருடைய, ‘IDEA OF INDIA’ நூல் இந்தியாவைப் புரிந்துகொள்ள மிகச்சிறந்த நூல் என்று உலகம் முழுக்கப் பரிந்துரைக்கப்படுகிறது. இங்கிலாந்தின் தொன்மை மிகுந்த கிங்ஸ் கல்லூரியில் பேராசிரியராக உள்ளார். அவருடைய, ‘INCARNATIONS: INDIA IN FIFTY LIVES’ நூலில்... தந்தை பெரியார் குறித்து இடம்பெற்ற ‘SNIPER OF THE SACRED COWS’ கட்டுரை ஆசிரியரின் அனுமதி பெற்று மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது: இந்தியாவில் வாழும் அனைத்துப் பெண்களையும் தனியாகப் பிரித்து ஒரு தேசத்தை நாம் கட்டமைப்பதாக வைத்துக்கொள்வோம். இதை, ‘இந்தியப் பெண்கள் குட…

  4. 'தமிழகத்தைப் புகைப்படம் ஆட்சி செய்யும்' - அன்றே சொன்னது பி.பி.சி. மறைந்த முதல்வர் உடல் நலக்குறைவு காரணமாக அப்போலோவில் அனுமதிக்கப்பட்ட நாள் முதல், தமிழக அரசின் ஒவ்வொரு கூட்டத்தின் போதும் முதல்வரின் புகைப்படம் இடம் பெற்றிருக்கும். பொறுப்பு முதல்வராக பன்னீர் செல்வம் பொறுப்பேற்ற பின்னரும் கூட முதல்வர் உயிருடன் இருக்கும் வரை அம்மாவின் புகைப்படம் ஒவ்வொரு கூட்டத்திலும் தவறாமல் இடம் பெற்றிருக்கிறது. அது மட்டுல்ல, அமைச்சர்கள் துறை ரீதியாக ஏதாவது அதிகாரிகளின் கூட்டம் நடத்தினாலும் மறைந்த முன்னாள் முதல்வரின் புகைப்படம் இல்லாமல் கூட்டம் நடைபெற்றதில்லை. தற்போது முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்து விட்டார். ஆனாலும் அதிமுகவினர் மறைந்து முதல்வரின் புகைப்படத்தை ம…

  5. கன்னடர்களுக்கே வேலை.. தேர்தலுக்காக மொழி துவேஷத்திற்கு தூபம் போடுகிறதா கர்நாடக காங்கிரஸ் அரசு? பெங்களூர்: சொல்லிக் கொள்ளும் அளவுக்கு, உருப்படியாக மக்கள் பணிகள் எதையும் செய்யாத சித்தராமையா தலைமையிலான கர்நாடக காங்கிரஸ் அரசு, கன்னட மக்களின் உணர்வு கொந்தளிப்பை வருடி கொடுத்து அரசியல் ஆதாயம் பார்க்க கிளம்பியுள்ளது. கர்நாடக காங்கிரசிலுள்ள சீனியர்களை புறந்தள்ளிவிட்டு, 2013 சட்டசபை பொதுத் தேர்தலுக்கு சில வருடங்கள் முன்புதான் காங்கிரசில் இணைந்த சித்தராமையா முதல்வரானது முதல் கட்சிக்குள் புகைச்சல்தான். முந்தைய எடியூரப்பா தலைமையிலான பாஜக ஆட்சி காலத்தில் கூட இருந்தவர்களே அவருக்கு எதிராக ஊழல் புகார்களை கிளப்பி குழி பறித்த கதை மறக்கவில்லை என்பதால், சித்தராமையா மிகவும் மெத…

  6. தமிழகத்தின் பினாமி குயின் சசிகலாவா? அதிர்ச்சி ரிப்போர்ட் "WHO IS THE BENAMI QUEEN OF TAMILNADU" என்ற பெயரில் ஆய்வுப்படம் ஒன்றை 'அறப்போர் இயக்கம்' என்னும் அமைப்பு வெளியிட்டுள்ளது. அதில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா மற்றும் அவருடைய குடும்பத்தை சேர்ந்தவர்கள் 43 நிறுவனங்களுக்கு பினாமியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கில் நீதிபதி குன்ஹா அளித்த தீர்ப்பில் இருந்தும், அறப்போர் இயக்கத்தைச் சேர்ந்த ஆடிட்டர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் மேற்கொண்ட ஆய்வின் மூலமும் கூடுதல் தகவல்களை அதில் இணைத்துள்ளனர். நீதிபதி குன்ஹா அளித்த தீர்ப்பில், சசிகலா மற்றும் அவரது உறவினர்கள் 31 நிறுவனங்களுக்கு பினா…

  7. நுரையீரல் தொற்று காரணமாக கருணாநிதி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி #Update 12:30 மணி தற்போது, திமுக எம்.எல்.ஏவும், துணை பொது செயலாளருமான துரைமுருகன், மருத்துவமனை வளாகத்திற்குள் சென்று இருக்கிறார். 12:04 மணி காவேரி மருத்துவமனை நிர்வாகம், தற்போது அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்கள். அதில், 'திமுகவின் தலைவரும், தமிழக முன்னாள் முதல் அமைச்சருமான கருணாநிதி காவேரி மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்.நுரையீரல் மற்றும் தொண்டை தொற்று காரணமாக , சுவாசக் கோளாறு ஏற்பட்டதால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்.தொற்றை சரிசெய்வதற்கான சிகிச்சைகள் தரப்படுகிறது. மருத்துவர்கள் அவரைத் தொடர்ந்து கண்காணித்து வர…

  8. தமிழக தலைமைச் செயலாளர் வீட்டில் அதிரடி ரெய்டு சென்னை அண்ணா நகரில் உள்ள தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகிறதாக தகவல் வெளியாகியுள்ளது. அவருடைய மகன், நெருக்கமான தொழிலதிபர்கள் என மொத்தம் 10 இடங்களில் சோதனை நடைபெற்று வருவதாக தகவல். சேகர் ரெட்டி வாக்குமூலத்தின் எதிரொலி என்றும் கூறுகிறார்கள். ராம மோகன ராவ் தரப்பில் இது உறுதி செய்யப்படவில்லை. http://www.vikatan.com/news/politics/75516-tamilnadu-chief-secretary-ram-mohana-rao-house-raided-by-it.art

  9. தனுஷ்கோடி மணலில் புதைந்த தினம் இன்று... அன்று என்ன நடந்தது? சினிமா தம்பதியினரின் நேரடி சாட்சியம் நூற்றாண்டுகளாக புகழின் உச்சியில் இருந்த நகரம் இது. சிறந்த துறைமுக நகரம், தீர்த்த யாத்திரை தலம் என பெருமைகளை நிரம்பக்கொண்டிருந்த நகரம் இது. இன்று யாருமில்லாத, சொல்லப்போனால் முழுமையாக மறைந்து போன நகரமாக காட்சியளிக்கிறது. புயலின் அசுர தாக்குதலில் தன் சிறப்பை எல்லாம் தொலைத்து விட்டு, சிறுசிறு குவியல்களாய் பல நூறு மணல் மேடுகளில் புதைந்து கிடக்கிறது தனுஷ்கோடி நகரம். தனுஷ்கோடி புயலின் அசுர தாக்குதலுக்குள்ளாகி காணமால் போன தினம் இன்று. ஆங்கிலேயர்களின் ஆட்சியின் போது அதிகம் புழக்கத்தில் இருந்தது கடல் வழி பயணங்கள் மட்டுமே. அதன் பயணாக இந்தியாவில் இருந்து…

  10. பதில் சொல்லுங்கள் பன்னீர்செல்வம்! இந்தியர்களை இந்தியர்களே ஆண்டுகொள்ளும் ஜனநாயக முறைக்கான ஆரம்பக் கட்டுமானங்களில் ஒன்று இன்றைய தமிழகச் சட்டப்பேரவையும் தலைமைச் செயலகமும். தமிழ் மக்களின் தலைவிதியைத் தீர்மானிக்கும் வளாகத்திலுள்ள தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் அறையில், அவர் முறைகேட்டில் ஈடுபட்டிருக்கும் சந்தேகத்தில் வருமான வரித்துறையினர் சோதனையிட்ட நாள் தமிழ்நாட்டின் அரசியல் - அரசு நிர்வாக வரலாற்றின் கறுப்பு நாட்களில் ஒன்று. இப்படியொரு நாளும் வரும் என்று நம் முன்னோர் எண்ணியிருப்பார்களா? தமிழ்ச் சமூகம் நவீன ஆட்சி நிர்வாகத்தின் விளைவாக இன்று அடைந்திருக்கும் நலன்கள் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார், காமராஜர்…

  11. அதிமுக பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிடுவேன்! சசிகலா புஷ்பா அதிரடி அதிமுக பொதுச் செயலாளர் பதவிக்கு தாம் போட்டியிட உள்ளதாக ராஜ்யசபா எம்.பி. சசிகலா புஷ்பா கூறியுள்ளார். ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர், அதிமுகவின் பொதுச் செயலாளராக வி.கே. சசிகலாவை தேர்ந்தெடுக்கக் கூடாது என்று ராஜ்யசபா எம்.பி. சசிகலா புஷ்பா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்நிலையில் பொதுச் செயலாளர் பதவிக்கு தாம் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளது அதிமுகவினரிடையே பரபரப்பை கிளப்பியுள்ளது. அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக முன்னாள் முதல்வரு…

  12. டில்லியில் 'லாபி' முதல்வரோடு திரும்பாமல் டில்லியில் தங்கி 'லாபி' வர்தா புயலை வைத்து மோகன ராவ் 'வாரே வாவ்... 'வர்தா' புயல் நிவாரண நிதி கேட்பதற்காக வந்த, தமிழக அரசின், 'மாஜி' தலைமைச் செயலர் ராம மோகன ராவ், முதல்வருடன் சென்னை திரும்பா மல், டில்லியிலேயே ஒருநாள் முழுவதும் தங்கி, சேகர் ரெட்டிக்கு ஆதரவாக, 'லாபி' செய்தது, அம்பலமாகியுள்ளது. தமிழக முதல்வர், டில்லிக்கு பயணம் செய்தால், அதிகாரிகள் மத்தியில், அது, முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக கருதப்படும். முதல்வருடன் வரும் அமைச்சர்கள், அதிகாரி கள் மற்றும் அவரை டில்லியில் வரவேற்கும் அதிகாரிகள், முதல்வர் மீண்டும் சென்னை திரும் பும்போது வ…

  13. சசிகலாவைச் சந்திக்காத ஓ.பி.எஸ்.! -பின்னணி என்ன? தமிழக அமைச்சர்களின் முகங்களில் இயல்புநிலை திரும்பவில்லை. தலைமைச் செயலாளரை அடுத்து எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர் வீட்டில் சோதனை என வருமான வரித்துறையினர் உறக்கமே இல்லாமல் சோதனை நடத்துகின்றனர். 'ரெய்டின் பின்னணியில் ஓ.பி.எஸ் இருக்கலாம் என கார்டன் தரப்பில் உறுதியாக நம்புகிறார்கள்' என்கின்றனர் அ.தி.மு.க வட்டாரத்தில். வேலூரைச் சேர்ந்த அரசு ஒப்பந்ததாரர் சேகர் ரெட்டி வீட்டில் நடத்தப்பட்ட சோதனைக்குப் பிறகு, தலைமைச் செயலாளர் ராம மோகன ராவை வளையத்திற்குள் கொண்டு வந்தது வருமான வரித்துறை. கடந்த மூன்று நாட்களாக நடக்கும் சோதனையில், அமைச்சர்களுக்கு இணையாக ராம மோகன ராவ், அவருடைய மகன் விவேக் ஆகியோரிடம் ஆவணங்களும் த…

  14. போயஸ் கார்டனுக்கு நெருக்கமான சேகர்ரெட்டி வீட்டில் ரூ70 கோடி ரூ2000 நோட்டுகள், 100கி.தங்கம் சிக்கியது சென்னையில் போயஸ் கார்டனுக்கு நெருக்கமான சேகர் ரெட்டி வீட்டில் ஐடி அதிகாரிகள் அதிரடி ரெய்டு நடத்தினர் . இச்சோதனையில் ரூ70 கோடி ரூ2000 நோட்டுகள், 100 கிலோ தங்கம் சிக்கியது. சென்னை: போயஸ் கார்டனுக்கு மிக நெருக்கமான கான்டிராக்டர் சேகர் ரெட்டி வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று அதிரடி சோதனை நடத்தினர். இச்சோதனையில் ரூ90 கோடி ரொக்கம், 100 கிலோ தங்கம் பிடிபட்டது. இதில் ரூ70 கோடி ரூ2,000 நோட்டுகளும் சிக்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் இன்று காலை முதல் 8 இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். போயஸ்…

  15. புதிய தமிழக தலைமை செயலாளர் அறிவிப்பு தமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளராக கிரிஜா வைத்தியநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக தலைமை செயலாளராக இருந்த ராமமோகன ராவ் வீட்டின் நேற்று வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் புதிய தலைமை செயலாளராக கிரிஜா வைத்தியநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை தமிழக ஆளுநர் இன்று பிறப்பித்துள்ளதாக தமிழக முதன்மை செயலாளர் சிவதாஸ் மீனா தெரிவித்துள்ளார். ஆனால், ராமமோகன ராவ் நீக்கப்பட்டதாக தகவல் இதுவரை வெளியாகவில்லை. http://www.vikatan.com/news/tamilnadu/75625-girija-appointed-as-new-tamil-nadu-chief-secretariat.…

  16. ஜெயலலிதா சமாதிக்கு அனுமதி பெறப்பட்டதா? சர்ச்சையைக் கிளப்பும் சூழலியலாளர்கள் தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா மரணம் அடைந்ததையடுத்து, அவரது உடல், மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர் நினைவிடம் அருகே அடக்கம் செய்யப்பட்டதில் சர்ச்சை எழுந்துள்ளது. கடந்த 10-ம் தேதி நடந்த தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில், ஜெயலலிதா அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் 15 கோடி ரூபாயில் நினைவு மண்டபம் அமைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த நிலையில், முறையான முன் அனுமதியின்றி மணிமண்டபம் கட்டுவதற்கு ஏற்பாடுகள் நடப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. முதலாவதாக, எம்.ஜி.ஆர் சமாதி அமைந்துள்ள பகுதியானது கடலோர ஒழுங்குமுறை ஆணையத்தின் சி.ஆர்.2 பகுதியில் வருகிறது. அதாவது, வளர்ச்சியடைந்த ப…

  17. “அம்மாவின் நிழலைப் பார்த்து அஞ்சியவர் நடராஜன்!” சாட்டையை சொடுக்கும் சசிகலா புஷ்பா அ.தி.மு.க-வில் ஜெயலலிதாவின் கண்மூடித்தனமான விசுவாசி களாகக் காட்டிக்கொண்டவர்கள் எல்லாம், சசிகலாவின் தலைமையை ஏற்றுக்கொண்டுவிட்டனர். ஆனால், இந்தியாவில் உச்ச அதிகாரம் படைத்த, நாடாளுமன்றத்தின் நடுமையத்தில் நின்று, ஜெயலலிதா என்னை அறைந்தார் என்று புகார் வாசித்த சசிகலா புஷ்பா எதிர்க்கிறார். ஜெயலலிதா வகித்த பொதுச் செயலாளர் பொறுப்புக்கு சசிகலா வரக்கூடாது என்று சசிகலா புஷ்பா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்து, அதில் முதல் விசாரணையும் முடிந்துள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் அ.தி.மு.க ராஜ்யசபா உறுப்பினர் சசிகலா புஷ்பா தாக்கல் செய்துள்ள மனுவில், “கட்சித் தொண…

  18. ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால் சோதனை நடந்திருக்குமா? என்.ராம் கேள்வி ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால் தலைமைச் செயலரின் வீட்டிலோ, அலுவலகத்திலோ சோதனை நடத்த மத்திய அரசுக்கு தைரியம் வந்திருக்காது என்று மூத்த பத்திரிகையாளர் என். ராம் கருத்துத் தெரிவித்துள்ளார். தமிழக அரசின் தலைமைச் செயலர் ராம மோகன ராவ் வீடு மற்றும் அலுவலகத்தில் நடைபெற்ற வருமான வரி சோதனை குறித்து பிபிசி தமிழுக்கு அளித்த பேட்டியில் அவர் இக் கருத்தைத் தெரிவித்தார்.தமிழகத்தின் புதிய தலைமைச் செயலராக கிரிஜா வைத்தியநாதன் நியமனம் "ஜெயலலிதா இருந்திருந்தால் கட்டாயமாக நடத்தியிருக்க மாட்டார்கள். மென்மையான நேரத்தில் நடத்தியிருப்பது ஒரு பலவீனம்தான். ஆனால் எப்போதும் நடக்காமல்…

  19. “இப்போ வேலையில கவனம் செலுத்துங்க... பார்த்துக்கலாம்!” - ஓ.பன்னீர்செல்வத்துக்கு மோடியின் நம்பிக்கை! "விசுவாசத்தின் அடையாளம் ஒ.பி.எஸ். சசிகலா முதல்வராவதற்கு அவர் வழிவிட வேண்டும்". கடந்தவாரம் பன்னீர் செல்வம் டெல்லி செல்வதற்கு முன், தமிழக அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் உதிர்த்த வார்த்தைகள்தான் இவை. ஆனால், இந்த வார்த்தைகளின் வெப்பம் குறைவதற்குள் தமிழகத்தின் அனைத்துக் காட்சிகளும் மாறிவிட்டன. பெரியகுளத்துக்காரருக்கான தலைமைச் செயலக பாதையை டெல்லி ஆட்கள் சரியாக்கி வருகின்றனர். அதன் தொடக்கமே முன்னாள் தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் வீட்டில் வருமான வரித் துறையினர் மேற்கொண்ட சோதனை. இனிவரும் காலங்களில் இதுபோன்ற தொடர் சோதனைகளால் 'ஆக்ட்டிங் சி.எம்'-யை, 'ஆக்டீவ் சி.எம்'-…

  20. ‘எங்கே சென்றார் ஆளுநர் வித்யாசாகர் ராவ்?’ - அமைச்சர்களை குறிவைக்கும் ரெய்டுகள் நுங்கம்பாக்கம், வருமான வரித்துறை அலுவலகம் அதிகாரிகள் யாருமின்றி வெறிச்சோடிக் கிடக்கிறது. 'ஓ.பன்னீர்செல்வம் தலைமைச் செயலகத்தில் இருந்தாலும், ஆளுநர் உத்தரவின்பேரிலேயே அனைத்தும் நிறைவேற்றப்படுகின்றன" என்கின்றனர் ராஜ்பவன் வட்டாரத்தில். தமிழக அரசின் தலைமைச் செயலாளராக இருந்த ராமமோகன ராவ் சஸ்பெண்ட் செய்யப்பட்டுவிட்டார். அவருடன் நட்பில் இருந்து பல ஆயிரம் கோடிகளை ஈட்டிய சேகர் ரெட்டி, புழல் சிறையில் அடைக்கப்பட்டுவிட்டார். ராமமோகன ராவின் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களும் வர்த்தக தொடர்புகளும் பொதுமக்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்திவிட்டது. அதிலும், புதிய இரண்டாயிரம…

  21. தலைமைச் செயலகத்தில் ரெய்டு... அப்போது ஜெயா பிளஸ்ஸில் நடந்தது என்ன? தமிழகத்தின் தலையெழுத்தை தீர்மானிக்கும் தலைமைச் செயலகத்திலேயே வருமான வரித்துறையின் சோதனை நடக்கிறது. அனேகமாய் இப்படி நடப்பது முதல் தடவையாய் இருக்கும் என்கிற அளவிற்கு நாடு முழுவதும் அதிர்வலைகள் கிளம்பியிருக்கின்றன. ஆனால் ஆளுங்கட்சியின் அதிகாரப் பூர்வ நியூஸ் சேனலான ஜெயா பிளஸ் மட்டும் செவ்வாய் கிரகத்திலிருந்து இயங்கும் போல. 'மண்ணெண்ண வேப்பெண்ண விளக்கெண்ண, எங்க எது நடந்தா எனக்கென்ன' ரேஞ்சுக்கு செய்திகளை அள்ளித் தெளித்துக் கொண்டிருக்கிறார்கள். சாம்பிளுக்கு சில: * அமராவதி அணைப்பகுதியில் 8 மி.மீ அளவிற்கு மழை பதிவாகியுள்ளதால் அணையில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. (ஆஹான்!) * மாண்புமிகு…

  22. நாளை கடிதம்.... டிசம்பர் 29-ல் வானகரத்தில் பொதுக்குழு!- அ.தி.மு.க அப்டேட்ஸ் ஆட்சி மீது ஏற்பட்டுள்ள விமர்சனம், கட்சிக்குள் உருவாகும் பூசல் என அ.தி.மு.க-வின் முகாம் ஆட்டம் கண்டு வரும் நேரத்தில், பொதுச்செயலாளர் பதவியைக் கைப்பற்ற அ தி மு க பொதுக்குழுவை கூட்டும் முடிவுக்கு கார்டன் தரப்பு வந்து விட்டது. அ.தி.மு.க.வின் அதிகாரம்மிக்க பதவி பொதுச்செயலாளர் பதவிதான். இந்தப் பதவியைக் கைப்பற்ற சசிகலா தரப்பில் கடுமையாக முயற்சி எடுக்கப்பட்டு, கட்சியின் முக்கிய நிர்வாகிகளும் அதை வலியுறுத்தத் துவங்கி விட்டார்கள். இந்நிலையில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவிற்கு ஆதரவாக அங்காங்கே பேனர்கள் வைப்பதும், போஸ்டர்கள் ஒட்டுவதும் என ஒருபுறம் களேபரங்கள் நடந்து வருகின்றன. சசி…

  23. ‘சசி லீலாவதி’ - நிஜமாகுமா நாடகம்? ப.திருமாவேலன், ஓவியம்: பாரதிராஜா `அம்மா’வை வாழ்த்தி எழுதிய பாசுரங்களை, `சின்ன அம்மா’வுக்காகச் சின்னத் திருத்தங்களுடன் ரத்தத்தின் ரத்தங்கள் மாற்றிக்கொண்டிருக்கிறார்கள். அதே கதை, அதே காட்சி, அதே நடிப்பு, அதே பாட்டு... விசிலடிக்கும் ரசிகர்களும் ஒன்றுதான். நடிக்கும் ஆள் மட்டுமே மாறியிருக்கிறார். முன்னர் ஜெயலலிதா; இதோ இப்போது சசிகலா! ‘நமது எம்.ஜி.ஆர்’ சித்ரகுப்தனுக்குச் சொல்லியா தர வேண்டும்? ‘வங்கக் கடலோரம் உறங்குகிற தாய்க்கு வரமாகக் கிடைத்தவர் வலக்கரமாய் வாய்த்தவர் வல்லூறுகள் வாலறுந்த நரிகள் ஏவுகின்ற பழிகளை வாழ்வெல்லாம் சுமப்பவர் வரும்பகை தூவிய வசவுகளை வாழ்வெல்லாம் சகித்தவர் தாயே உலகமென தவம்க…

  24. சசியின் பஞ்ச தந்திரம்! ‘சசியின் பஞ்ச தந்திரம்... ரேப்பர் ரெடி செய்யவும்’ - கழுகார் அனுப்பி வைத்த வாசகம் வாட்ஸ் அப்பில் வந்து விழுந்தது. தலைப்பை லே அவுட்டுக்கு அனுப்பிவிட்டு காத்திருந்த நேரத்தில் கழுகார் வந்து அமர்ந்தார். ‘‘ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு அரசியல் மேகங்கள் மாறத் தொடங்கிவிட்டன. சூழ்ச்சிகள், வீழ்ச்சிகள் என எதுவும் இல்லாமல் அரசியல் சதுரங்கம் விளையாடப்பட்டுக் கொண்டிருக்கிறது. எல்லாமே சசிகலாவின் தந்திரம்தான். அவர் ஆடிக்கொண்டிருக்கும் பஞ்ச தந்திரம் பற்றித்தான் இப்போது ஹாட் டாபிக்’’ எனச் சொல்லி குறிப்பு நோட்டை புரட்ட ஆரம்பித்தார். ‘‘பி.ஜே.பி-க்கு தலையாட்டுதல், தி.மு.க-வுக்கு அனுசரணை, கட்சியினர் ஆதரவு மாயை, மீடியாக்கள் தயவு, மக்கள் தலைவி அவதாரம் என ஐ…

  25. அ.தி.மு.க.,வின் பொதுச் செயலராக சசிகலா பதவியேற்க, அக்கட்சியில் எதிர்ப்பு வலுத்து வருகிறது. அதன் வெளிப்பாடாக, ஜெயலலிதா மரணம் தொடர்பாக, அடுத்தடுத்து வழக்குகள் தொடரப் பட்டு வருகின்றன; இது, சசிகலா ஆதரவாளர் களிடம், கிலியை ஏற்படுத்தி உள்ளது. அதே நேரத்தில், கட்சியில் சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி துாக்குவோரை மிரட்டி பணிய வைக்கும் பணியில், அவரது உறவினர்கள் ஈடுபட்டுள்ளனர். அ.தி.மு.க., விதிகளின்படி, பொதுச்செயலர் பதவிக்கு போட்டியிட விரும்புவோர், ஐந்து ஆண்டுகள் கட்சியில் உறுப்பினராக இருந் திருக்க வேண்டும். தற்போது, பொதுச்செயலர் பதவிக்கு வர விரும்பும் சசிகலா, கட்சியில் ஐந்து ஆண்டுகளாக உறுப்பினராக இல்லை. நீக்கப்பட்டனர் …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.