தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10250 topics in this forum
-
அஷ்டமி, நவமி முடிந்து, வீடு திரும்புவார் கருணாநிதி. சென்னை: திமுக தலைவர் கருணாநிதிக்கு கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு ஒவ்வாமை ஏற்பட்டதால், உடல் நலக்குறைவு ஏற்பட்டு வீட்டிலேயே சிகிச்சை எடுத்துக்கொண்டார். கடந்த டிசம்பர் 1ஆம் தேதி அவருக்கு நீர்ச்சத்து மற்றும் ஊட்டச்சத்து குறைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். இதனையடுத்து 7ம் தேதி கோபாலபுரம் வீட்டிற்கு திரும்பினார். வீட்டில் ஓய்வில் இருந்த கருணாநிதிக்கு சுவாசப்பிரச்னை ஏற்பட்டது. இதனையடுத்து கடந்த 15ஆம் தேதி நள்ளிரவு, மீண்டும் கருணாநிதி காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உடனடியாக அவரை பரிசோதித்த மருத்துவர்கள் குழு, மூச்சுத்திணறல் மற…
-
- 0 replies
- 349 views
-
-
பிரதமர் மோடிக்கு சசிகலா திடீர் கடிதம்! குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் மோடி, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்திக்கு ஆகியோருக்கு சசிகலா கடிதம் எழுதியுள்ளார். சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முதல்வர் ஜெயலலிதா கடந்த 5ஆம் தேதி மாரடைப்பால் காலமானார். அவருக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் நேரில் அஞ்சலி செலுத்தினர். இதனிடையே சென்னை ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா உடலுக்கு பிரதமர் நரேந்திர மோடி, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினர். ராகுல் காந்தி, ஜெயலலிதாவின் இறுதிச்சடங்கு வரை பங்கேற்றார். …
-
- 7 replies
- 794 views
- 1 follower
-
-
வைகோ ஆரம்பித்த கூட்டணி.. அவராலே உடைகிறதா? ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோவின் முழுமையான, அயராத முயற்சியால் உருவானது மக்கள் நலக்கூட்டணி. வைகோ உருவாக்கிய இந்தக் கூட்டணி வைகோவாலேயே உடையும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. 2015-ம் ஆண்டு ம.தி.மு.க, விடுதலை சிறுத்தைகள், மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் ஒன்றிணைந்து 'மக்கள் நலக் கூட்டு இயக்கம்' என்ற இயக்கத்தை ஆரம்பித்து, 'மக்கள் நல பிரச்னைகளில் இணைந்து செயல்படுவோம்' என்று அறிவித்தனர் அதன் தலைவர்கள். அ.தி.மு.க., தி.மு.க-வுக்கு மாற்றாக ஒரு புதிய அணி உருவாகிறது என்று மக்கள் எதிர்பார்த்தனர். அதுபோலவே, ஒரே நிலைப்பாட்டைக் கொண்டிருந்த இந்த 4 கட்சிகளும், 'மக்கள் நலக் கூட்டு இயக்கம்' என்பதை 2016-ம…
-
- 0 replies
- 390 views
-
-
கேள்விக்கு என்ன பதில் சிறப்பு நிகழ்ச்சி.... தீபாவின் பேட்டி
-
- 1 reply
- 655 views
-
-
’சசிகலாவை எதிர்ப்பவர்கள் அணி திரள்கிறார்கள்!’ - சசிகலா புஷ்பாவின் சிக்னல் அப்போலோ மருத்துவமனையில் 75 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த 5-ம் தேதி உயிரிழந்தார். ஆரம்பத்தில் இருந்தே ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்த வெளிப்படையாகத் தெரிவிக்கவேண்டும் என்று எம்.பி சசிகலா புஷ்பா கோரியிருந்தார்.மேலும் ஜெயலலிதாவின் மரணம் குறித்து நாடாளுமன்றத்தில் பேச உள்ளதாகவும் சசிகலா புஷ்பா தெரிவித்திருந்தார். தற்போது தமிழக எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், பா.ம.க நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்டோர் ஜெயலலிதாவுக்கு மருத்துவமனையில் அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். இந்த நி…
-
- 0 replies
- 471 views
-
-
பெங்களூர் சிறையில் இருந்த போதே ஜெயா டிவியை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த சசிகலா!- Exclusive செப்டம்பர் 27, 2014 தமிழகத்தின் வரலாற்றில் மட்டுமல்ல இந்திய வரலாற்றிலேயே மறக்க முடியாததோர் நாள். அன்றுதான், தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, சசிகலா, வி.என். சுதாகரன் மற்றும் இளவரசி ஆகிய நால்வரையும் ஊழல் வழக்கில் பெங்களூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி மைக்கேல் ஜான் டி குன்ஹா சிறைக்கு அனுப்பினார். நால்வருக்கும் நான்காண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. 1991 - 1996 ம் ஆண்டில் ஜெ முதலமைச்சராக இருந்த போது 66.65 கோடி ரூபாய்க்கு சொத்து சேர்த்த வழக்கில் விதிக்கப் பட்ட தண்டனை இது. செப்டம்பர் 27 ல் சிறைக்கு அனுப்பபட்ட நால்வரும், அக்டோபர் 17 ம் தேதி உச்ச நீதிமன்றம் வழங்கிய ஜாமீனை அடு…
-
- 0 replies
- 463 views
-
-
உளவுத்துறையிடம் அறிக்கை கேட்ட சசிகலா! -டிசம்பர் 29-ம் தேதி அ.தி.மு.க பொதுக்குழு? அ.தி.மு.க பொதுக்குழுவை வருகிற 29-ம் தேதி நடத்தத் திட்டமிட்டுள்ளனர் கார்டன் வட்டாரத்தில். ' மக்கள் மத்தியில் சசிகலாவுக்கு எந்த அளவுக்கு ஆதரவு உள்ளது என்பது பற்றிய உளவுத்துறை அறிக்கையும் அவரிடம் அளிக்கப்பட்டுள்ளது' என்கின்றனர் அ.தி.மு.க நிர்வாகிகள். முதல்வர் ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து, அ.தி.மு.கவின் புதிய பொதுச் செயலாளரைத் தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர் அ.தி.மு.க சீனியர்கள். தம்பிதுரை, செங்கோட்டையன், மதுசூதனன் உள்பட கட்சியின் சீனியர்கள் அனைவரும் ஒரே குரலில் சசிகலா தலைமையை முன்னிறுத்தியுள்ளனர். நேற்று அமைச்சர்கள் எடப்பாடி பழனிச்சாமி, வேலுமணி, செல்லூர் ராஜூ, …
-
- 0 replies
- 412 views
-
-
‘மை பெஸ்ட் விஷஸ்... நாங்க உங்களோட இருக்கோம்!’ - ஓ.பன்னீர்செல்வத்திடம் மனம் திறந்த மோடி வர்தா புயல் உருவாக்கிய பேரிடருக்கு இழப்பீடு கேட்டுப் பிரதமரை சந்திக்க ஓ.பி.எஸ் சென்றதை, புயல் பாதிப்பின் தொனியோடுதான் கவனித்துக் கொண்டிருந்தார்கள் தமிழக அமைச்சர்கள் சிலர். 'முதலமைச்சராக அவர் பணியைத் தொடர்ந்து செய்வதற்கு வாழ்த்துகளை தெரிவித்தார் பிரதமர். இந்த சந்திப்புக்குப் பிறகு உற்சாகமாகிவிட்டார் ஓ.பி.எஸ்' என்கின்றனர் அ.தி.மு.க வட்டாரத்தில். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களைக் கடந்த 12-ம் தேதி புரட்டிப் போட்டுவிட்டுச் சென்றது வர்தா புயல். 'சீரமைப்புப் பணிகளுக்கு ஆயிரம் கோடி ரூபாயை உடனடியாக வழங்க வேண்டும்' என பிரதமர் மோடிக்குக் கடி…
-
- 0 replies
- 456 views
-
-
ஜெயலலிதா சமாதியில் 68 கிலோ ஜெ. உருவ இட்லி தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சமாதியில் 68 கிலோ எடையில் ஜெ. உருவ இட்லி அமைக்கப்பட்டுள்ளது. ஆர்.கே. நகர் தொகுதி சமையல் தொழிலாளர்கள் இதை உருவாக்கியுள்ளனர். ஜெயலலிதா உருவ இட்லியை அனைவரும் காணும் வகையில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. இதைப் பார்த்துச் செல்லும் மக்கள் பூக்கள் தூவி, வணங்கிச் செல்கின்றனர். http://tamil.thehindu.com/tamilnadu/ஜெயலலிதா-சமாதியில்-68-கிலோ-ஜெ-உருவ-இட்லி/article9435546.ece
-
- 0 replies
- 495 views
-
-
பிரதமரிடம் பேசியது என்ன? - டெல்லியில் தமிழக முதல்வர் பன்னீர்செல்வம் பேட்டி பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த பின் தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். புதுடெல்லி: புதுடெல்லி சென்றுள்ள முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அதிகாரிகள் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தனர். அப்போது, தமிழக நலன் தொடர்பான 141 பக்கங்களில் 29 கோரிக்கைகள் கொண்ட மனுவை முதல்வர் அளித்தார். பின்னர் இந்த சந்திப்பு குறித்து பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- வார்தா புயலால் திருவள்ளூர், காஞ்சீபுரம், சென்னை ஆகிய மாவட்டங்களில் கடும் ச…
-
- 1 reply
- 522 views
-
-
ஐந்தாண்டுகளுக்கு முன் சசிகலாவுக்கு ஜெயலலிதா ‘குட் பை’ சொன்ன நாள் இன்று! அன்று என்ன நடந்தது? தமிழக அரசியலில் 'அம்மா' என்ற வார்த்தை மெல்ல மெல்ல மறைந்து 'சின்னம்மா' என்ற வார்த்தை அதிகளவில் உச்சரிக்கப்பட்டு வரும் காலகட்டம் இது. 'அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராக பதவி ஏற்க வேண்டும். தமிழக முதல்வராகவும் நீங்கள்தான் பொறுப்பேற்க வேண்டும்' என சசிகலாவிடம் அ.தி.மு.க. நிர்வாகிகள் கெஞ்சி வரும் காட்சிகளால் தமிழக அரசியல் பரபரத்துக்கிடக்கிறது. சசிகலா எப்படி இந்த உயரத்துக்கு வந்தார் என்பது புரியாமல் பலரும் திகைத்து நிற்கிறார்கள். 'தாய் தந்த வரம்' என்றும் ஜெயலலிதா தந்து விட்டு சென்ற வாரிசு என்றும் அடையாளம் காட்டப்பட்டு வருகிறார் சசிகலா. இன்று கட்சியையும், ஆட்சியையும…
-
- 2 replies
- 1.3k views
-
-
வைகோவை புறக்கணித்த திருமா! -மலைக்க வைத்த மாநாடு அழைப்பிதழ் புதுச்சேரி, புதிய துறைமுகத் திடலில் வருகிற 28 ம் தேதி, அம்பேத்கர் 125 ஆண்டு நிறைவு விழாவையொட்டி 'அரசியலமைப்புச் சட்ட பாதுகாப்பு மாநாடு' நடத்துகிறார் திருமாவளவன். ' பொதுசிவில் சட்ட மாநாட்டிற்கு ம.தி.மு.க நிர்வாகிகள் வந்திருந்தனர். வைகோவைப் புறக்கணித்துவிட்டு மாநாட்டை நடத்துகிறது வி.சி.க' என்கின்றனர் மாநாடு ஏற்பாட்டாளர்கள். சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகும், மக்கள் நலக் கூட்டியக்கமாக ம.தி.மு.க, வி.சி.க, சி.பி.எம், சி.பி.ஐ உள்ளிட்ட கட்சிகள் செயல்பட்டு வந்தன. பல்வேறு கருத்துக்களில் ஆதரவும் எதிர்ப்பும் இருந்தாலும் கூட்டணி தொடர்வதையே தலைவர்கள் வலியுறுத்தி வந்தனர். அண்மையில், காமராஜர…
-
- 0 replies
- 475 views
-
-
ஜெயலலிதாவுக்கு வழங்கிய சிகிச்சை விவரங்களை வெளியிடுமாறு மத்திய அரசு, தமிழக அரசுக்கு நெருக்கடி தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சை விவரங்களை வெளியிட வேண்டும் என மத்திய அரசு, தமிழக அரசுக்கு நெருக்கடியளிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த செப்டம்பர் 22ம் தேதி அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட நிலையில், 75 நாட்கள் கழித்து, டிசம்பர் 5ம் தேதி, இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. குறித்த கால கட்டத்தில் ஜெயலலிதாவிற்கு சிகிச்சை வழங்கும் போது எடுத்த புகைப்படம், ஒலி, ஒளிப்பதிவுகள் என எதுவுமே வெளியிடப்படாத நிலையில் இது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. …
-
- 1 reply
- 696 views
-
-
சசிகலாவை சந்திக்கும் படலம் எப்படி நடக்கிறது? ஒரு மாவட்டச் செயலாளரின் நேரடி அனுபவம் #VikatanExclusive போயஸ் கார்டனுக்கு வரும் மாவட்டச் செயலாளர்கள் உள்பட முக்கிய நிர்வாகிகளிடம் சசிகலா பெரும்பாலும் உரையாடுவதே இல்லையாம். சைகை மூலமே பேசிவிடுகிறார். அதோடு ஜெயலலிதாவைப் போல யாரும் சசிகலாவை நெருங்க விடாமல் கயிறு மூலம் தடுப்புகளை ஏற்படுத்தியே சந்திக்க அனுமதிக்கின்றனர் என்கின்றனர் கார்டன் நிர்வாகிகள். ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு சசிகலாதான் அடுத்த பொதுச் செயலாளர் என்று கட்சியின் மூத்த நிர்வாகிகள், அமைச்சர்கள், தொண்டர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதற்காக ஒவ்வொரு மாவட்டங்களிலும் கூட்டங்கள் நடத்தப்பட்டு, சசிகலாவை பொதுச் செயலாளராக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்…
-
- 0 replies
- 419 views
-
-
ஜெயலலிதா உயில் இருக்கிறதா, இல்லையா? மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான சொத்துக்கள் யாருக்குச் சொந்தம் என்று கேள்விகள் எழுப்பப்படும் நிலையில், அவர் உயில் எழுதியிருந்தால், சட்டப்படி அது நடைமுறைப்படுத்தப்படும் என்று அதிமுக செய்தித் தொடர்பாளரும் முன்னாள் அமைச்சருமான பொன்னையன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, பிபிசி தமிழுக்கு பேட்டியளித்தபோது இத் தகவலை அவர் தெரிவித்தார். ஜெயலலிதா வாழ்ந்து வந்த போயஸ் கார்டன் இல்லம், கொடநாடு எஸ்டேட், ஹைதராபாத்தில் உள்ள தோட்டம் உள்ளிட்ட பல சொத்துக்கள் அவருக்குச் சொந்தமாக உள்ளதாகக் கூறப்படுகிறது. உயில் இருக்கிறதா? இந்த நிலையில், ஜெயலலிதாவின் சொத்துக்கள் ய…
-
- 1 reply
- 596 views
-
-
விடுதலைப்புலிகளின் ராஜீவ் காந்தியை கொலை செய்யும் திட்டம் எனக்குத் தெரியாது – நளினி குளோபல் தமிழ்ச் செய்தியாளர் தமிழீழ விடுதலைப் புலிகள், இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை கொலை செய்யும் திட்டம் தமக்குத் தெரியாது என கொலைக் குற்றச்சாட்டின் அடிப்படையில் தண்டனை அனுபவித்து வரும் நளினி தெரிவித்துள்ளார். நளினி கடந்த 25 ஆண்டுகளாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. நளினி முருகன் எழுதிய சுயசரிதையொன்று எதிர்வரும் 24ம் திகதி வெளியிடப்பட உள்ளது. 500 பக்கங்களைக் கொண்ட இந்த சுயசரிதையில் பல்வேறு விடயங்கள் பற்றி குறிப்பிட்டுள்ளார். ராஜீவ் காந்தியின் புதல்வி பிரியன்கா காந்தி எதற்காக தம்மை சந்தித்தார் என்பது தமக்க…
-
- 12 replies
- 5.2k views
-
-
‘எந்த சூழ்நிலையிலும் நீங்கள்தான் முதல்வர்!’ - ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆறுதல் சொன்னாரா ஆளுநர்? பிரதமர் நரேந்திர மோடியை இன்று சந்தித்துப் பேசுகிறார் தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். நேற்று மாலை ஆளுநரையும் சந்தித்துப் பேசியிருக்கிறார். 'மக்களால் தேர்வு செய்யப்பட்ட உங்களுக்கு, எந்த நேரத்திலும் துணையாக இருப்பேன்' என ஆறுதல் கூறியிருக்கிறார் ஆளுநர் வித்யாசாகர் ராவ். தமிழக முதல்வர் ஜெயலலிதா மறைவையொட்டி, புதிய முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம். அதேநேரம், அ.தி.மு.கவின் பொதுச் செயலாளர் பதவிக்கு சசிகலாவை முன்னிறுத்தியுள்ளனர் கட்சியின் சீனியர்கள். ' சின்னமாவை பொதுச் செயலாளர் பதவிக்குக் கொண்டு வருவதற்காக, விதிகளைத் தளர்த்தவும் …
-
- 0 replies
- 357 views
-
-
'பொதுச்செயலர் பதவியை ஏற்க வேண்டும்' என, சசிகலாவை, அ.தி.மு.க., நிர்வாகிகள் வலி யுறுத்தி வரும் நிலையில், முதல்வர் பன்னீர் செல்வத்தை ஓரங்கட்ட, மந்திரி உதயகுமார் மூலம், சசி சொந்தங்கள் பிள்ளையார் சுழி போட்டுள்ளனர். 'சசிகலா முதல்வராக வேண்டும்' என, ஜெ., பேரவை மூலம், முதல் தீர்மானம் நிறைவேற்ற ப்பட்டு உள்ளது. இதன் மூலம், சசிகலா துதி பாடிகளின் கச்சேரி துவங்கி விட்டதாக, அ.தி.மு.க., தொண்டர்கள் கொதிப்படைந்து உள்ளனர். முதல்வராக இருந்த ஜெயலலிதா மறைந்ததை அடுத்து, ஏற்கனவே இரு முறை அந்த பதவியை வகித்த, பன்னீர்செல்வம் முதல்வராகி உள்ளார். அடுத்ததாக, 'ஜெ., வகித்து வந்த, அ.தி.மு.க., பொதுச்செயலர் பதவியை, சசிகலா ஏற்க வேண்டும்' என, கட்சியின் முக்கிய நி…
-
- 0 replies
- 262 views
-
-
அரசியல் நாகரிகம் முளைக்கிறதா, மீண்டும் தழைக்கிறதா? திமுக, அதிமுக தலைவர்களிடம் தென்படும் மாற்றம் கவனிக்க வைக்கிறது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் திமுக தலைவர் கருணாநிதியை அதிமுகவின் முன்னணித் தலைவர்களான தம்பிதுரையும் ஜெயக்குமாரும் நேரில் சென்று நலன் விசாரித்த செய்தி இன்றைய பேசுபொருளாக மாறியிருக்கிறது. தமிழகத்தில் அரசியல் நாகரிகம் அரும்பத் தொடங்கியிருப்பதாகச் சிலர் சொல்கிறார்கள். ஆனால் உண்மை அதுவன்று. அடிப்படையில் ராஜாஜியும் பெரியாரும் இருவேறு துருவங்கள். ஆத்திகம்தான் ராஜாஜியின் சுவாசம்; பெரியாருக்கோ பகுத்தறிவுதான் பிரதானம். ஆனால், சித்தாந்தப் பின்புலங்களை…
-
- 0 replies
- 396 views
-
-
சசிகலாவை அதிமுக பொதுச் செயலாளர் ஆக்குவதற்காக கட்சி விதிகள் திருத்தப்படும் என்று அதிமுகவின் செய்தித் தொடர்பாளரும் முன்னாள் அமைச்சருமான சி. பொன்னையன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, பிபிசி தமிழுக்கு பேட்டியளித்த அவர், தகுதி படைத்த ஒருவரைத் தலைமைப் பொறுப்பில் அமர்த்துவதற்கு, கட்சி விதிகளில் திருத்தம் செய்வதில் தவறேதும் இல்லை என்று தெரிவித்துள்ளார். கிளைக்கழக நிர்வாகிகள் முதல் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் வரை கட்சியின் அனைத்து நிலைகளில் உள்ளவர்களும் சசிகலா பொதுச் செயலாளர் பொறுப்பை ஏற்க வேண்டும் என்று வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றியுள்ளதாக அவர் குறிப்பிட்டார். எனினும், சசிகலா அவர்கள் இதுவரை சம்மதம் தெரிவிக்காமல் மவுனமாக இருப்பதாகவும் பொன்னையன் தெரிவித்தார். …
-
- 5 replies
- 843 views
-
-
சசிகலா முதல்வராக பொறுப்பேற்க ஜெயலலிதா பேரவை தீர்மானம்: அமைச்சர் உதயகுமார் தகவல் ஜெயலலிதா பேரவை கூட்டத்தில் இயற்றப்பட்ட தீர்மான நகலை சசிகலாவிடம் வழங்கினார் அமைச்சர் உதயகுமார். தமிழக முதல்வராக சசிகலா பொறுப்பேற்க வேண்டும் என்று அதிமுகவின் ஜெயலலிதா பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பதாக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார். தமிழக முதல்வராகவும், அதிமுக பொதுச்செயலராகவும் சசிகலா பொறுப்பேற்க வேண்டும் என்று அதிமுகவின் ஜெயலலிதா பேரவைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அந்த தீர்மானங்கள் இடம்பெற்ற தாளை, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் வைத்து, அவரிடம் ஆசி பெறுவதற்…
-
- 4 replies
- 567 views
-
-
ஒரு பார்ப்பனப் பயங்கரவாதி பாடையிலே போகிறார் Details Category: விஜயகுமாரன் 11 Dec 2016 Hits: 1396 அரசியல் தரகன், பார்ப்பனப் பயங்கரவாதி சோ. ராமசாமி மண்டையைப் போட்டு விட்டார் . ஒரு எண்பது வயது மனிதரை, "துக்ளக்" என்னும் தமிழ் இதழின் ஆசிரியரை, நாடக ஆசிரியரை, திரைப்பட நடிகரை மரியாதையில்லாமல் அவன், இவன் என்று எழுதலாமா என்று சில மரியாதை ராமன்கள் கவலைப்படலாம். தன் வாழ்நாள் முழுவதும் உழைக்கும், ஏழை மக்களிற்கு எதிராக பார்ப்பனிய வெறியைக் கக்கி வந்த இவரிற்கு செருப்பால் அடித்து பாடையிலே ஏற்றுவது தான் சரியான மரியாதை. இவரை நேர்மையானவன் என்றும், நடுநிலையாளன் என்றும், தன் மனதிலே பட்டதை மறைக்காமல் சொல்பவன் என்றும் அர…
-
- 1 reply
- 700 views
-
-
'இது நடக்கும்'- அ.தி.மு.க.வினரை அலர்ட் செய்யும் விஜயசாந்தி "கட்சியைப் பிரிக்க சில சதிகள் நடக்கும், அதிமுகவினர் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும்" என ஜெயலலிதா சமாதியில் அஞ்சலி செலுத்திய பின்னர் நடிகை விஜயசாந்தி இவ்வாறு கூறினார். கடந்த 5-ம் தேதி மாரடைப்பால் மரணம் அடைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உடல் சென்னை மெரினாவில் உள்ள எம்ஜிஆர் சமாதி அருகே அடக்கம் செய்யப்பட்டுள்ளது. தினந்தோறும் நூற்றுக்கணக்கான அதிமுகவினர் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தியும், மொட்டை அடித்தும் வருகின்றனர். ஜெயலலிதா உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்த முடியாத நடிகர், நடிகைகள் மெரினாவில் உள்ள அவரது சமாதிக்கு வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நடிகர் அஜித் குமார் தனது மனைவி ஷாலினி…
-
- 1 reply
- 619 views
-
-
ஜெயலலிதா மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணை கோரி சுப்ரீம் கோர்ட்டில் சசிகலா புஷ்பா எம்.பி. மனு மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் சசிகலா புஷ்பா சுப்ரீம் கோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். புதுடெல்லி: மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் சசிகலா புஷ்பா சுப்ரீம் கோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் சசிகலா புஷ்பா எம்.பி கூறியிருப்பதாவது: ‘ஜெயலலிதா மருத…
-
- 0 replies
- 392 views
-
-
சசிகலா நடராஜனுக்கு எதிராக பி.எச்.பாண்டியன் தலைமையில் நாளை அதிருப்தி குழு உதயம்? சசிகலா நடராஜனுக்கு எதிராக அதிமுகவில் அதிருப்தி குழு உருவாகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை: அதிமுகவிற்கு தலைமை பொறுப்பை ஏற்க உள்ளதாக கூறப்படும் சசிகலா நடராஜனுக்கு எதிராக மூத்த நிர்வாகி பி.எச்.பாண்டியன் தலைமையில் அதிருப்தி குழு உதயமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிமுக பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதாவின் மறைவைத் தொடர்ந்து அவரது உயிர் தோழியாக கருதப்படும் சசிகலா நடராஜன் கட்சியின் பொதுச் செயலாளர் பொறுப்பை ஏற்க வேண்டும் என அதிமுக நிர்வாகிகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன. இதுவரை ஜெயலலிதாவின் நிழலாக வலம்வந்த சசிகலா நடராஜன் இதன்மூலம் …
-
- 0 replies
- 384 views
-