தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10268 topics in this forum
-
தமிழக தலைமைச் செயலாளர் வீட்டில் அதிரடி ரெய்டு சென்னை அண்ணா நகரில் உள்ள தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகிறதாக தகவல் வெளியாகியுள்ளது. அவருடைய மகன், நெருக்கமான தொழிலதிபர்கள் என மொத்தம் 10 இடங்களில் சோதனை நடைபெற்று வருவதாக தகவல். சேகர் ரெட்டி வாக்குமூலத்தின் எதிரொலி என்றும் கூறுகிறார்கள். ராம மோகன ராவ் தரப்பில் இது உறுதி செய்யப்படவில்லை. http://www.vikatan.com/news/politics/75516-tamilnadu-chief-secretary-ram-mohana-rao-house-raided-by-it.art
-
- 26 replies
- 4.2k views
-
-
தனுஷ்கோடி மணலில் புதைந்த தினம் இன்று... அன்று என்ன நடந்தது? சினிமா தம்பதியினரின் நேரடி சாட்சியம் நூற்றாண்டுகளாக புகழின் உச்சியில் இருந்த நகரம் இது. சிறந்த துறைமுக நகரம், தீர்த்த யாத்திரை தலம் என பெருமைகளை நிரம்பக்கொண்டிருந்த நகரம் இது. இன்று யாருமில்லாத, சொல்லப்போனால் முழுமையாக மறைந்து போன நகரமாக காட்சியளிக்கிறது. புயலின் அசுர தாக்குதலில் தன் சிறப்பை எல்லாம் தொலைத்து விட்டு, சிறுசிறு குவியல்களாய் பல நூறு மணல் மேடுகளில் புதைந்து கிடக்கிறது தனுஷ்கோடி நகரம். தனுஷ்கோடி புயலின் அசுர தாக்குதலுக்குள்ளாகி காணமால் போன தினம் இன்று. ஆங்கிலேயர்களின் ஆட்சியின் போது அதிகம் புழக்கத்தில் இருந்தது கடல் வழி பயணங்கள் மட்டுமே. அதன் பயணாக இந்தியாவில் இருந்து…
-
- 0 replies
- 467 views
-
-
பதில் சொல்லுங்கள் பன்னீர்செல்வம்! இந்தியர்களை இந்தியர்களே ஆண்டுகொள்ளும் ஜனநாயக முறைக்கான ஆரம்பக் கட்டுமானங்களில் ஒன்று இன்றைய தமிழகச் சட்டப்பேரவையும் தலைமைச் செயலகமும். தமிழ் மக்களின் தலைவிதியைத் தீர்மானிக்கும் வளாகத்திலுள்ள தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் அறையில், அவர் முறைகேட்டில் ஈடுபட்டிருக்கும் சந்தேகத்தில் வருமான வரித்துறையினர் சோதனையிட்ட நாள் தமிழ்நாட்டின் அரசியல் - அரசு நிர்வாக வரலாற்றின் கறுப்பு நாட்களில் ஒன்று. இப்படியொரு நாளும் வரும் என்று நம் முன்னோர் எண்ணியிருப்பார்களா? தமிழ்ச் சமூகம் நவீன ஆட்சி நிர்வாகத்தின் விளைவாக இன்று அடைந்திருக்கும் நலன்கள் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார், காமராஜர்…
-
- 0 replies
- 407 views
-
-
அதிமுக பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிடுவேன்! சசிகலா புஷ்பா அதிரடி அதிமுக பொதுச் செயலாளர் பதவிக்கு தாம் போட்டியிட உள்ளதாக ராஜ்யசபா எம்.பி. சசிகலா புஷ்பா கூறியுள்ளார். ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர், அதிமுகவின் பொதுச் செயலாளராக வி.கே. சசிகலாவை தேர்ந்தெடுக்கக் கூடாது என்று ராஜ்யசபா எம்.பி. சசிகலா புஷ்பா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்நிலையில் பொதுச் செயலாளர் பதவிக்கு தாம் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளது அதிமுகவினரிடையே பரபரப்பை கிளப்பியுள்ளது. அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக முன்னாள் முதல்வரு…
-
- 0 replies
- 384 views
-
-
டில்லியில் 'லாபி' முதல்வரோடு திரும்பாமல் டில்லியில் தங்கி 'லாபி' வர்தா புயலை வைத்து மோகன ராவ் 'வாரே வாவ்... 'வர்தா' புயல் நிவாரண நிதி கேட்பதற்காக வந்த, தமிழக அரசின், 'மாஜி' தலைமைச் செயலர் ராம மோகன ராவ், முதல்வருடன் சென்னை திரும்பா மல், டில்லியிலேயே ஒருநாள் முழுவதும் தங்கி, சேகர் ரெட்டிக்கு ஆதரவாக, 'லாபி' செய்தது, அம்பலமாகியுள்ளது. தமிழக முதல்வர், டில்லிக்கு பயணம் செய்தால், அதிகாரிகள் மத்தியில், அது, முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக கருதப்படும். முதல்வருடன் வரும் அமைச்சர்கள், அதிகாரி கள் மற்றும் அவரை டில்லியில் வரவேற்கும் அதிகாரிகள், முதல்வர் மீண்டும் சென்னை திரும் பும்போது வ…
-
- 0 replies
- 347 views
-
-
சசிகலாவைச் சந்திக்காத ஓ.பி.எஸ்.! -பின்னணி என்ன? தமிழக அமைச்சர்களின் முகங்களில் இயல்புநிலை திரும்பவில்லை. தலைமைச் செயலாளரை அடுத்து எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர் வீட்டில் சோதனை என வருமான வரித்துறையினர் உறக்கமே இல்லாமல் சோதனை நடத்துகின்றனர். 'ரெய்டின் பின்னணியில் ஓ.பி.எஸ் இருக்கலாம் என கார்டன் தரப்பில் உறுதியாக நம்புகிறார்கள்' என்கின்றனர் அ.தி.மு.க வட்டாரத்தில். வேலூரைச் சேர்ந்த அரசு ஒப்பந்ததாரர் சேகர் ரெட்டி வீட்டில் நடத்தப்பட்ட சோதனைக்குப் பிறகு, தலைமைச் செயலாளர் ராம மோகன ராவை வளையத்திற்குள் கொண்டு வந்தது வருமான வரித்துறை. கடந்த மூன்று நாட்களாக நடக்கும் சோதனையில், அமைச்சர்களுக்கு இணையாக ராம மோகன ராவ், அவருடைய மகன் விவேக் ஆகியோரிடம் ஆவணங்களும் த…
-
- 0 replies
- 411 views
-
-
போயஸ் கார்டனுக்கு நெருக்கமான சேகர்ரெட்டி வீட்டில் ரூ70 கோடி ரூ2000 நோட்டுகள், 100கி.தங்கம் சிக்கியது சென்னையில் போயஸ் கார்டனுக்கு நெருக்கமான சேகர் ரெட்டி வீட்டில் ஐடி அதிகாரிகள் அதிரடி ரெய்டு நடத்தினர் . இச்சோதனையில் ரூ70 கோடி ரூ2000 நோட்டுகள், 100 கிலோ தங்கம் சிக்கியது. சென்னை: போயஸ் கார்டனுக்கு மிக நெருக்கமான கான்டிராக்டர் சேகர் ரெட்டி வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று அதிரடி சோதனை நடத்தினர். இச்சோதனையில் ரூ90 கோடி ரொக்கம், 100 கிலோ தங்கம் பிடிபட்டது. இதில் ரூ70 கோடி ரூ2,000 நோட்டுகளும் சிக்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் இன்று காலை முதல் 8 இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். போயஸ்…
-
- 19 replies
- 2.7k views
-
-
புதிய தமிழக தலைமை செயலாளர் அறிவிப்பு தமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளராக கிரிஜா வைத்தியநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக தலைமை செயலாளராக இருந்த ராமமோகன ராவ் வீட்டின் நேற்று வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் புதிய தலைமை செயலாளராக கிரிஜா வைத்தியநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை தமிழக ஆளுநர் இன்று பிறப்பித்துள்ளதாக தமிழக முதன்மை செயலாளர் சிவதாஸ் மீனா தெரிவித்துள்ளார். ஆனால், ராமமோகன ராவ் நீக்கப்பட்டதாக தகவல் இதுவரை வெளியாகவில்லை. http://www.vikatan.com/news/tamilnadu/75625-girija-appointed-as-new-tamil-nadu-chief-secretariat.…
-
- 2 replies
- 1.9k views
-
-
ஜெயலலிதா சமாதிக்கு அனுமதி பெறப்பட்டதா? சர்ச்சையைக் கிளப்பும் சூழலியலாளர்கள் தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா மரணம் அடைந்ததையடுத்து, அவரது உடல், மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர் நினைவிடம் அருகே அடக்கம் செய்யப்பட்டதில் சர்ச்சை எழுந்துள்ளது. கடந்த 10-ம் தேதி நடந்த தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில், ஜெயலலிதா அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் 15 கோடி ரூபாயில் நினைவு மண்டபம் அமைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த நிலையில், முறையான முன் அனுமதியின்றி மணிமண்டபம் கட்டுவதற்கு ஏற்பாடுகள் நடப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. முதலாவதாக, எம்.ஜி.ஆர் சமாதி அமைந்துள்ள பகுதியானது கடலோர ஒழுங்குமுறை ஆணையத்தின் சி.ஆர்.2 பகுதியில் வருகிறது. அதாவது, வளர்ச்சியடைந்த ப…
-
- 0 replies
- 403 views
-
-
“அம்மாவின் நிழலைப் பார்த்து அஞ்சியவர் நடராஜன்!” சாட்டையை சொடுக்கும் சசிகலா புஷ்பா அ.தி.மு.க-வில் ஜெயலலிதாவின் கண்மூடித்தனமான விசுவாசி களாகக் காட்டிக்கொண்டவர்கள் எல்லாம், சசிகலாவின் தலைமையை ஏற்றுக்கொண்டுவிட்டனர். ஆனால், இந்தியாவில் உச்ச அதிகாரம் படைத்த, நாடாளுமன்றத்தின் நடுமையத்தில் நின்று, ஜெயலலிதா என்னை அறைந்தார் என்று புகார் வாசித்த சசிகலா புஷ்பா எதிர்க்கிறார். ஜெயலலிதா வகித்த பொதுச் செயலாளர் பொறுப்புக்கு சசிகலா வரக்கூடாது என்று சசிகலா புஷ்பா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்து, அதில் முதல் விசாரணையும் முடிந்துள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் அ.தி.மு.க ராஜ்யசபா உறுப்பினர் சசிகலா புஷ்பா தாக்கல் செய்துள்ள மனுவில், “கட்சித் தொண…
-
- 0 replies
- 712 views
-
-
ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால் சோதனை நடந்திருக்குமா? என்.ராம் கேள்வி ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால் தலைமைச் செயலரின் வீட்டிலோ, அலுவலகத்திலோ சோதனை நடத்த மத்திய அரசுக்கு தைரியம் வந்திருக்காது என்று மூத்த பத்திரிகையாளர் என். ராம் கருத்துத் தெரிவித்துள்ளார். தமிழக அரசின் தலைமைச் செயலர் ராம மோகன ராவ் வீடு மற்றும் அலுவலகத்தில் நடைபெற்ற வருமான வரி சோதனை குறித்து பிபிசி தமிழுக்கு அளித்த பேட்டியில் அவர் இக் கருத்தைத் தெரிவித்தார்.தமிழகத்தின் புதிய தலைமைச் செயலராக கிரிஜா வைத்தியநாதன் நியமனம் "ஜெயலலிதா இருந்திருந்தால் கட்டாயமாக நடத்தியிருக்க மாட்டார்கள். மென்மையான நேரத்தில் நடத்தியிருப்பது ஒரு பலவீனம்தான். ஆனால் எப்போதும் நடக்காமல்…
-
- 0 replies
- 430 views
-
-
“இப்போ வேலையில கவனம் செலுத்துங்க... பார்த்துக்கலாம்!” - ஓ.பன்னீர்செல்வத்துக்கு மோடியின் நம்பிக்கை! "விசுவாசத்தின் அடையாளம் ஒ.பி.எஸ். சசிகலா முதல்வராவதற்கு அவர் வழிவிட வேண்டும்". கடந்தவாரம் பன்னீர் செல்வம் டெல்லி செல்வதற்கு முன், தமிழக அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் உதிர்த்த வார்த்தைகள்தான் இவை. ஆனால், இந்த வார்த்தைகளின் வெப்பம் குறைவதற்குள் தமிழகத்தின் அனைத்துக் காட்சிகளும் மாறிவிட்டன. பெரியகுளத்துக்காரருக்கான தலைமைச் செயலக பாதையை டெல்லி ஆட்கள் சரியாக்கி வருகின்றனர். அதன் தொடக்கமே முன்னாள் தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் வீட்டில் வருமான வரித் துறையினர் மேற்கொண்ட சோதனை. இனிவரும் காலங்களில் இதுபோன்ற தொடர் சோதனைகளால் 'ஆக்ட்டிங் சி.எம்'-யை, 'ஆக்டீவ் சி.எம்'-…
-
- 0 replies
- 455 views
-
-
‘எங்கே சென்றார் ஆளுநர் வித்யாசாகர் ராவ்?’ - அமைச்சர்களை குறிவைக்கும் ரெய்டுகள் நுங்கம்பாக்கம், வருமான வரித்துறை அலுவலகம் அதிகாரிகள் யாருமின்றி வெறிச்சோடிக் கிடக்கிறது. 'ஓ.பன்னீர்செல்வம் தலைமைச் செயலகத்தில் இருந்தாலும், ஆளுநர் உத்தரவின்பேரிலேயே அனைத்தும் நிறைவேற்றப்படுகின்றன" என்கின்றனர் ராஜ்பவன் வட்டாரத்தில். தமிழக அரசின் தலைமைச் செயலாளராக இருந்த ராமமோகன ராவ் சஸ்பெண்ட் செய்யப்பட்டுவிட்டார். அவருடன் நட்பில் இருந்து பல ஆயிரம் கோடிகளை ஈட்டிய சேகர் ரெட்டி, புழல் சிறையில் அடைக்கப்பட்டுவிட்டார். ராமமோகன ராவின் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களும் வர்த்தக தொடர்புகளும் பொதுமக்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்திவிட்டது. அதிலும், புதிய இரண்டாயிரம…
-
- 0 replies
- 400 views
-
-
தலைமைச் செயலகத்தில் ரெய்டு... அப்போது ஜெயா பிளஸ்ஸில் நடந்தது என்ன? தமிழகத்தின் தலையெழுத்தை தீர்மானிக்கும் தலைமைச் செயலகத்திலேயே வருமான வரித்துறையின் சோதனை நடக்கிறது. அனேகமாய் இப்படி நடப்பது முதல் தடவையாய் இருக்கும் என்கிற அளவிற்கு நாடு முழுவதும் அதிர்வலைகள் கிளம்பியிருக்கின்றன. ஆனால் ஆளுங்கட்சியின் அதிகாரப் பூர்வ நியூஸ் சேனலான ஜெயா பிளஸ் மட்டும் செவ்வாய் கிரகத்திலிருந்து இயங்கும் போல. 'மண்ணெண்ண வேப்பெண்ண விளக்கெண்ண, எங்க எது நடந்தா எனக்கென்ன' ரேஞ்சுக்கு செய்திகளை அள்ளித் தெளித்துக் கொண்டிருக்கிறார்கள். சாம்பிளுக்கு சில: * அமராவதி அணைப்பகுதியில் 8 மி.மீ அளவிற்கு மழை பதிவாகியுள்ளதால் அணையில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. (ஆஹான்!) * மாண்புமிகு…
-
- 1 reply
- 810 views
-
-
நாளை கடிதம்.... டிசம்பர் 29-ல் வானகரத்தில் பொதுக்குழு!- அ.தி.மு.க அப்டேட்ஸ் ஆட்சி மீது ஏற்பட்டுள்ள விமர்சனம், கட்சிக்குள் உருவாகும் பூசல் என அ.தி.மு.க-வின் முகாம் ஆட்டம் கண்டு வரும் நேரத்தில், பொதுச்செயலாளர் பதவியைக் கைப்பற்ற அ தி மு க பொதுக்குழுவை கூட்டும் முடிவுக்கு கார்டன் தரப்பு வந்து விட்டது. அ.தி.மு.க.வின் அதிகாரம்மிக்க பதவி பொதுச்செயலாளர் பதவிதான். இந்தப் பதவியைக் கைப்பற்ற சசிகலா தரப்பில் கடுமையாக முயற்சி எடுக்கப்பட்டு, கட்சியின் முக்கிய நிர்வாகிகளும் அதை வலியுறுத்தத் துவங்கி விட்டார்கள். இந்நிலையில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவிற்கு ஆதரவாக அங்காங்கே பேனர்கள் வைப்பதும், போஸ்டர்கள் ஒட்டுவதும் என ஒருபுறம் களேபரங்கள் நடந்து வருகின்றன. சசி…
-
- 0 replies
- 381 views
-
-
‘சசி லீலாவதி’ - நிஜமாகுமா நாடகம்? ப.திருமாவேலன், ஓவியம்: பாரதிராஜா `அம்மா’வை வாழ்த்தி எழுதிய பாசுரங்களை, `சின்ன அம்மா’வுக்காகச் சின்னத் திருத்தங்களுடன் ரத்தத்தின் ரத்தங்கள் மாற்றிக்கொண்டிருக்கிறார்கள். அதே கதை, அதே காட்சி, அதே நடிப்பு, அதே பாட்டு... விசிலடிக்கும் ரசிகர்களும் ஒன்றுதான். நடிக்கும் ஆள் மட்டுமே மாறியிருக்கிறார். முன்னர் ஜெயலலிதா; இதோ இப்போது சசிகலா! ‘நமது எம்.ஜி.ஆர்’ சித்ரகுப்தனுக்குச் சொல்லியா தர வேண்டும்? ‘வங்கக் கடலோரம் உறங்குகிற தாய்க்கு வரமாகக் கிடைத்தவர் வலக்கரமாய் வாய்த்தவர் வல்லூறுகள் வாலறுந்த நரிகள் ஏவுகின்ற பழிகளை வாழ்வெல்லாம் சுமப்பவர் வரும்பகை தூவிய வசவுகளை வாழ்வெல்லாம் சகித்தவர் தாயே உலகமென தவம்க…
-
- 0 replies
- 685 views
-
-
சசியின் பஞ்ச தந்திரம்! ‘சசியின் பஞ்ச தந்திரம்... ரேப்பர் ரெடி செய்யவும்’ - கழுகார் அனுப்பி வைத்த வாசகம் வாட்ஸ் அப்பில் வந்து விழுந்தது. தலைப்பை லே அவுட்டுக்கு அனுப்பிவிட்டு காத்திருந்த நேரத்தில் கழுகார் வந்து அமர்ந்தார். ‘‘ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு அரசியல் மேகங்கள் மாறத் தொடங்கிவிட்டன. சூழ்ச்சிகள், வீழ்ச்சிகள் என எதுவும் இல்லாமல் அரசியல் சதுரங்கம் விளையாடப்பட்டுக் கொண்டிருக்கிறது. எல்லாமே சசிகலாவின் தந்திரம்தான். அவர் ஆடிக்கொண்டிருக்கும் பஞ்ச தந்திரம் பற்றித்தான் இப்போது ஹாட் டாபிக்’’ எனச் சொல்லி குறிப்பு நோட்டை புரட்ட ஆரம்பித்தார். ‘‘பி.ஜே.பி-க்கு தலையாட்டுதல், தி.மு.க-வுக்கு அனுசரணை, கட்சியினர் ஆதரவு மாயை, மீடியாக்கள் தயவு, மக்கள் தலைவி அவதாரம் என ஐ…
-
- 1 reply
- 910 views
-
-
அ.தி.மு.க.,வின் பொதுச் செயலராக சசிகலா பதவியேற்க, அக்கட்சியில் எதிர்ப்பு வலுத்து வருகிறது. அதன் வெளிப்பாடாக, ஜெயலலிதா மரணம் தொடர்பாக, அடுத்தடுத்து வழக்குகள் தொடரப் பட்டு வருகின்றன; இது, சசிகலா ஆதரவாளர் களிடம், கிலியை ஏற்படுத்தி உள்ளது. அதே நேரத்தில், கட்சியில் சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி துாக்குவோரை மிரட்டி பணிய வைக்கும் பணியில், அவரது உறவினர்கள் ஈடுபட்டுள்ளனர். அ.தி.மு.க., விதிகளின்படி, பொதுச்செயலர் பதவிக்கு போட்டியிட விரும்புவோர், ஐந்து ஆண்டுகள் கட்சியில் உறுப்பினராக இருந் திருக்க வேண்டும். தற்போது, பொதுச்செயலர் பதவிக்கு வர விரும்பும் சசிகலா, கட்சியில் ஐந்து ஆண்டுகளாக உறுப்பினராக இல்லை. நீக்கப்பட்டனர் …
-
- 0 replies
- 727 views
-
-
அஷ்டமி, நவமி முடிந்து, வீடு திரும்புவார் கருணாநிதி. சென்னை: திமுக தலைவர் கருணாநிதிக்கு கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு ஒவ்வாமை ஏற்பட்டதால், உடல் நலக்குறைவு ஏற்பட்டு வீட்டிலேயே சிகிச்சை எடுத்துக்கொண்டார். கடந்த டிசம்பர் 1ஆம் தேதி அவருக்கு நீர்ச்சத்து மற்றும் ஊட்டச்சத்து குறைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். இதனையடுத்து 7ம் தேதி கோபாலபுரம் வீட்டிற்கு திரும்பினார். வீட்டில் ஓய்வில் இருந்த கருணாநிதிக்கு சுவாசப்பிரச்னை ஏற்பட்டது. இதனையடுத்து கடந்த 15ஆம் தேதி நள்ளிரவு, மீண்டும் கருணாநிதி காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உடனடியாக அவரை பரிசோதித்த மருத்துவர்கள் குழு, மூச்சுத்திணறல் மற…
-
- 0 replies
- 352 views
-
-
பிரதமர் மோடிக்கு சசிகலா திடீர் கடிதம்! குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் மோடி, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்திக்கு ஆகியோருக்கு சசிகலா கடிதம் எழுதியுள்ளார். சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முதல்வர் ஜெயலலிதா கடந்த 5ஆம் தேதி மாரடைப்பால் காலமானார். அவருக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் நேரில் அஞ்சலி செலுத்தினர். இதனிடையே சென்னை ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா உடலுக்கு பிரதமர் நரேந்திர மோடி, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினர். ராகுல் காந்தி, ஜெயலலிதாவின் இறுதிச்சடங்கு வரை பங்கேற்றார். …
-
- 7 replies
- 796 views
- 1 follower
-
-
வைகோ ஆரம்பித்த கூட்டணி.. அவராலே உடைகிறதா? ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோவின் முழுமையான, அயராத முயற்சியால் உருவானது மக்கள் நலக்கூட்டணி. வைகோ உருவாக்கிய இந்தக் கூட்டணி வைகோவாலேயே உடையும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. 2015-ம் ஆண்டு ம.தி.மு.க, விடுதலை சிறுத்தைகள், மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் ஒன்றிணைந்து 'மக்கள் நலக் கூட்டு இயக்கம்' என்ற இயக்கத்தை ஆரம்பித்து, 'மக்கள் நல பிரச்னைகளில் இணைந்து செயல்படுவோம்' என்று அறிவித்தனர் அதன் தலைவர்கள். அ.தி.மு.க., தி.மு.க-வுக்கு மாற்றாக ஒரு புதிய அணி உருவாகிறது என்று மக்கள் எதிர்பார்த்தனர். அதுபோலவே, ஒரே நிலைப்பாட்டைக் கொண்டிருந்த இந்த 4 கட்சிகளும், 'மக்கள் நலக் கூட்டு இயக்கம்' என்பதை 2016-ம…
-
- 0 replies
- 394 views
-
-
கேள்விக்கு என்ன பதில் சிறப்பு நிகழ்ச்சி.... தீபாவின் பேட்டி
-
- 1 reply
- 657 views
-
-
’சசிகலாவை எதிர்ப்பவர்கள் அணி திரள்கிறார்கள்!’ - சசிகலா புஷ்பாவின் சிக்னல் அப்போலோ மருத்துவமனையில் 75 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த 5-ம் தேதி உயிரிழந்தார். ஆரம்பத்தில் இருந்தே ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்த வெளிப்படையாகத் தெரிவிக்கவேண்டும் என்று எம்.பி சசிகலா புஷ்பா கோரியிருந்தார்.மேலும் ஜெயலலிதாவின் மரணம் குறித்து நாடாளுமன்றத்தில் பேச உள்ளதாகவும் சசிகலா புஷ்பா தெரிவித்திருந்தார். தற்போது தமிழக எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், பா.ம.க நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்டோர் ஜெயலலிதாவுக்கு மருத்துவமனையில் அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். இந்த நி…
-
- 0 replies
- 475 views
-
-
பெங்களூர் சிறையில் இருந்த போதே ஜெயா டிவியை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த சசிகலா!- Exclusive செப்டம்பர் 27, 2014 தமிழகத்தின் வரலாற்றில் மட்டுமல்ல இந்திய வரலாற்றிலேயே மறக்க முடியாததோர் நாள். அன்றுதான், தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, சசிகலா, வி.என். சுதாகரன் மற்றும் இளவரசி ஆகிய நால்வரையும் ஊழல் வழக்கில் பெங்களூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி மைக்கேல் ஜான் டி குன்ஹா சிறைக்கு அனுப்பினார். நால்வருக்கும் நான்காண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. 1991 - 1996 ம் ஆண்டில் ஜெ முதலமைச்சராக இருந்த போது 66.65 கோடி ரூபாய்க்கு சொத்து சேர்த்த வழக்கில் விதிக்கப் பட்ட தண்டனை இது. செப்டம்பர் 27 ல் சிறைக்கு அனுப்பபட்ட நால்வரும், அக்டோபர் 17 ம் தேதி உச்ச நீதிமன்றம் வழங்கிய ஜாமீனை அடு…
-
- 0 replies
- 465 views
-
-
உளவுத்துறையிடம் அறிக்கை கேட்ட சசிகலா! -டிசம்பர் 29-ம் தேதி அ.தி.மு.க பொதுக்குழு? அ.தி.மு.க பொதுக்குழுவை வருகிற 29-ம் தேதி நடத்தத் திட்டமிட்டுள்ளனர் கார்டன் வட்டாரத்தில். ' மக்கள் மத்தியில் சசிகலாவுக்கு எந்த அளவுக்கு ஆதரவு உள்ளது என்பது பற்றிய உளவுத்துறை அறிக்கையும் அவரிடம் அளிக்கப்பட்டுள்ளது' என்கின்றனர் அ.தி.மு.க நிர்வாகிகள். முதல்வர் ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து, அ.தி.மு.கவின் புதிய பொதுச் செயலாளரைத் தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர் அ.தி.மு.க சீனியர்கள். தம்பிதுரை, செங்கோட்டையன், மதுசூதனன் உள்பட கட்சியின் சீனியர்கள் அனைவரும் ஒரே குரலில் சசிகலா தலைமையை முன்னிறுத்தியுள்ளனர். நேற்று அமைச்சர்கள் எடப்பாடி பழனிச்சாமி, வேலுமணி, செல்லூர் ராஜூ, …
-
- 0 replies
- 415 views
-