அயலகச் செய்திகள்
இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்
அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
3287 topics in this forum
-
இந்திய குற்றவியல் நடைமுறை அடையாள மசோதா தனியுரிமைக்கு எதிரானதா? ஓர் அலசல் ஜோயா மடீன் மற்றும் மெரில் செபாஸ்டியன் பிபிசி நியூஸ், டெல்லி ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, குற்றம்சாட்டப்பட்டோரின் பயோமெட்ரிக் விவரங்களைப் பதிவு செய்ய காவல்துறைக்கு இந்தச் சட்டம் அதிகாரம் வழங்குகிறது இந்தியாவில் கொண்டு வரப்படும் ஒரு புதிய சட்டம், பயோமெட்ரிக் தரவைச் சேகரிக்க, சட்ட அமலாக்க துறைகளுக்கு பெரும் அதிகாரங்களை வழங்குகிறது - இது தனியுரிமை குறித்த கவலையை எழுப்பியுள்ளது. கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட குற்றவியல் நடைமுறை (அ…
-
- 0 replies
- 168 views
- 1 follower
-
-
இந்தியாவுடன் அர்த்தமுள்ள பேச்சுவார்த்தை, அமைதியான உறவுகளை விரும்பும் பாக்; மோடிக்கு ஷேபாஸ் ஷெரீப் ட்வீட் சண்டே எக்ஸ்பிரஸ்-க்கு சனிக்கிழமை வந்த ஒரு கடிதத்தில், ‘பிராந்திய அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு’ பாகிஸ்தான் உறுதியுடன் இருப்பதாக ஷேபாஸ் ஷெரீப் கூறியதாக தெரியவந்துள்ளது. are on Twitter (Opens in new window) Click to share on Facebook (Opens in new window) Click to share on WhatsApp (Opens in new window) இந்தியாவுடன் அமைதியான மற்றும் ஒத்துழைப்பு உறவுகளைக் நாடுவதாகவும் அதை ‘அர்த்தமுள்ள உரையாடல்’ மூலம் இதை அடைய முடியும் என்று பாகிஸ்தானின் புதிய பிரதமர் ஷேபா…
-
- 0 replies
- 219 views
-
-
இலங்கையின் பொருளாதார நெருக்கடி நிலை.. இந்தியாவுக்கும் வரலாம்.. ப.சிதம்பரம் கடும் எச்சரிக்கை இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலை இந்தியாவிலும் ஏற்படலாம் என்று முன்னாள் நிதி அமைச்சரும் காங்கிரஸ் எம்பியுமான ப. சிதம்பரம் எச்சரிக்கை விடுத்துள்ளார். சிவகங்கையில் நடைபெற்ற காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் எம்பி ப. சிதம்பரம் கலந்து கொண்டார். மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகளின் செயல் குறித்து ஆராயும் இந்த கூட்டத்தில் பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. ப.சிதம்பரம் இந்த கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த ப. சிதம்பரம், இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார …
-
- 0 replies
- 165 views
-
-
இந்தியாவின், உணவு தானியங்கள் ஏற்றுமதியை... உலகமே எதிர்பார்த்து இருப்பதாக... பியூஷ் கோயல் தெரிவிப்பு இந்தியாவின் உணவு தானியங்கள் ஏற்றுமதியை உலகமே எதிர்பார்த்து இருப்பதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். உலக வர்த்தக அமைப்பு அனுமதித்தால் உலகத்துக்கே உணவுப் பொருட்களை வழங்க இந்தியா தயாராக இருப்பதாக பிரதமர் மோடி கூறியதை அடுத்து இதனை பியூஷ் கோயல் குறிப்பிட்டுள்ளார். உலகளாவிய சூழல்களால் கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் உக்ரைன் போரால் விலைவாசி உயர்ந்து இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் தானிய உற்பத்தியால் இந்தியா உணவுப் பொருள் ஏற்றுமதியை எதிர்நோக்குவதாகக் கூறிய பியூஷ் கோயல், கடந்த சில வாரங்களில் 20 முதல் 30 இலட்சம் தொன்கள்…
-
- 0 replies
- 172 views
-
-
இந்திய – அமெரிக்க வெளிவிவகார, பாதுகாப்பு அமைச்சர்களின் சந்திப்பு! இந்திய மற்றும் அமெரிக்க வெளிவிவகார மற்றும் பாதுகாப்பு அமைச்சர்களின் சந்திப்பு நேற்று வொஷிங்டனில் இடம்பெற்றுள்ளது. இதன்போது, உக்ரைன் விவகாரம் குறித்து கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுப்ரமணியம் ஜெய்சங்கருடன் இடம்பெற்ற சந்திப்பில், பொருளாதாரத்தடை விதிக்கப்பட்டுள்ள ரஷ்யாவிடம் எரிபொருள் கொள்வனவு செய்வது குறித்து அமெரிக்க இராஜாங்க செயலாளர் அண்டனி பிளின்கன் வினவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது பதிலளித்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர், அது தொடர்பில் அமெரிக்கா, ஐரோப்பாவை நோக்கி கவனம் செலுத்த வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார். இந்தியா, ரஷ்யாவிடம…
-
- 0 replies
- 105 views
-
-
ராணுவத்தில் ஆள் பலத்தைக் குறைக்கத் திட்டமிடுகிறதா இந்தியா? இதனால் என்ன ஆகும்? சௌதிக் பிஸ்வாஸ் பிபிசி செய்தியாளர் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES ஆயுதப்படையில் ஆட்சேர்ப்பை மீண்டும் தொடங்க வலியுறுத்தி, டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொள்ள, வட இந்திய மாநிலமான ராஜஸ்தானில் உள்ள தனது வீட்டிலிருந்து தலைநகர் டெல்லி வரை ஓடியிருக்கிறார், 23 வயதான இளைஞர் சுரேஷ் பிச்சார். இந்த 350 கி.மீ. தூர ஓட்டத்தின்போது அவர் தேசியக் கொடியை ஏந்திச்சென்றார். ராணுவத்தில் சேர்வது தான் தன்னுடைய "விருப்பம்" எனக் கூறும் அவர், ஆனால், ராணுவத்தில் ஆட்சேர்ப்பு கடந்த இரண்ட…
-
- 0 replies
- 195 views
- 1 follower
-
-
விடுதலைப் புலிகளை... புத்துயிர் பெற முயற்சி செய்த, இந்தியர்களின்... சொத்துக்கள் பறிமுதல் விடுதலைப் புலிகளை மீண்டும் புத்துயிர் பெறச்செய்யும் ஒரு பகுதியாக, போதைப்பொருள் மற்றும் ஆயுதக் கடத்தலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் நான்கு இந்தியர்களின் 359 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை இந்திய அமலாக்க பிரிவு பறிமுதல் செய்துள்ளது. கடந்த ஆண்டு மார்ச் 18 ஆம் திகதி இந்திய கடற்பரப்பில் கடலோர காவல்படையினரால் தடுத்து நிறுத்தப்பட்ட இலங்கை படகில் இருந்து 300 கிலோ போதைப்பொருள், ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் கைப்பற்றப்பட்ட நிலையில் வழக்கு தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் மத்திய அரசு விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில் ஆறு வீடுகள், வாகனங்கள், சுரேஷ் ராஜ் ஏ,…
-
- 4 replies
- 440 views
-
-
பாகிஸ்தானின்... புதிய பிரதமராக, ஷாபாஸ் ஷெரீப் தெரிவு! பாகிஸ்தானின் புதிய பிரதமராக, மூன்று முறை முன்னாள் பிரதமரான நவாஸ் ஷெரீப்பின் 70 வயது இளைய சகோதரரும், எதிர்க்கட்சி தலைவருமான ஷெபாஸ் ஷெரீப் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (பிடிஐ) தலைவர் ஷா மஹ்மூத் குரேஷியும் ஞாயிற்றுக்கிழமை அவரது வேட்புமனுக்கள் அங்கீகரிக்கப்பட்டு பிரதமர் பதவிக்கான போட்டியில் இருந்தார். எனினும், பாகிஸ்தானுக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க முதல் நிகழ்வாக, இம்ரான் கான் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மூலம் பதவியில் இருந்து பதவியிலிருந்து நீக்கப்பட்டத்தை தொடர்ந்து, ஷெபாஸ் ஷெரீப் புதிய பிரதமராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார். நேற்று கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீ…
-
- 0 replies
- 169 views
-
-
பாகிஸ்தானில் இம்ரான் கான் அரசு கவிழ்ந்தது : பிரதமர் அலுவலக இல்லத்தை விட்டு வெளியேறினார் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்த நிலையில், அதற்கு ஆதரவாக 174 உறுப்பினர்கள் வாக்களித்த நிலையில், இம்ரான் கான் அரசு கவிழ்ந்தது. இதையடுத்து பிரதமர் இல்லத்தை விட்டு வெளியேறினார் இம்ரான் கான். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்தன. அந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நடைபெறவிருந்த நிலையில் இம்ரான்கான் பரிந்துரையை ஏற்று, அந்நாட்டு ஜனாதிபதி பாராளுமன்றத்தைக் கலைத்தார். பாராளுமன்றத்தைக் கலைத்த ஜனாதிபதியின் உத்தரவை எதிர்த்து பாகிஸ்தான் நீதிமன்றம் …
-
- 5 replies
- 433 views
-
-
கேரளாவில் ஸ்டாலின் உரை: "தலையாட்டி பொம்மையாக இருக்க வேண்டுமா? தென் மாநில முதல்வர்கள் குழு அவசியம்" 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,M K STALIN TWITTER படக்குறிப்பு, கேரள மாநிலம், கண்ணூரில் நடைபெற்ற கம்யூனிஸ்ட் கட்சியின் 23ஆம் மாநாட்டில் பேசும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின். இந்தியாவில் மத்தியில் ஆளும் அரசு போடும் முட்டுக்கட்டைகளை எதிர்கொள்ளும் வகையில் தென் மாநில முதல்வர்கள் குழுவை அமைக்க வேண்டும், மாநிலங்கள் அதிக அதிகாரங்கள் கொண்டவையாக ஆக்கப்பட இந்திய அரசியலமைப்பு திருத்தப்பட வேண்டும் என்று அழைப்பு விடுத்திருக்கிறார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின். கேரள மாநிலம் கண்ண…
-
- 0 replies
- 271 views
- 1 follower
-
-
ஆங்கில மொழிக்கு, பதிலாக.... ஹிந்தி மொழியை, பயன்படுத்த வேண்டும் – அமித்ஷா ஆங்கில மொழியை பயன்படுத்துவதற்கு மாற்றாகவே ஹிந்தி மொழியை பயன்படுத்த வேண்டும் எனவும், மாநில மொழிகளுக்கு மாற்றாக அல்ல எனவும் உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற வளாகத்தில் 37 ஆவது நாடாளுமன்ற அலுவல்கள் மொழிகள் தொடர்பான கூட்டத்தில் பேசிய அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், அலுவல் மொழியான ஹிந்தியை நாட்டு ஒருமைப்பாட்டின் ஒரு அங்கமாகக் கருத வேண்டிய நேரம் வந்துவிட்டதாகவும், இந்தியவர்கள் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளும்போது உள்நாட்டு பொது மொழிகளில் தான் பேச வேண்டும் எனக் கருதுவதாகவும் கூறியுள்ளார். இதேவேளை மத்திய அமைச்சரவையின் 70 சதவீத க…
-
- 2 replies
- 265 views
-
-
ஆட்சியைத் தக்க வைக்க கடைசிவரை போராடுவேன்! ஆட்சியைத் தக்க வைக்க கடைசிவரை போராடுவேன் என்று பாகிஸ்தான் பிரதமா் இம்ரான் கான் வெள்ளிக்கிழமை கூறினாா். பாகிஸ்தான் உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், இம்ரான் கானுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீா்மானத்தின் மீதான வாக்கெடுப்பு பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் சனிக்கிழமை நடைபெற உள்ள நிலையில், இந்த கருத்தை அவா் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள ட்விட்டா் பதிவில், ‘நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீா்மானம் கொண்டுவரப்படுவதற்கு முன்னா், சனிக்கிழமை (ஏப்.9) அமைச்சரவைக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளேன். கடைசி ‘பந்துவரை’ அடித்து விளையாடி போராடுவேன்’ என்று குறி…
-
- 1 reply
- 504 views
-
-
வெளிநாட்டு ஆயுத இறக்குமதிக்கு... தடை விதிக்கும், மற்றுமோர் பட்டியல் வெளியீடு! இராணுவ ஆயுத தளவாடங்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய தடை விதிக்கும் மற்றுமோர் பட்டியலை இராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்டுள்ளார். இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், ”ஆயுதங்களுக்காக வெளிநாடுகளை சார்த்திருப்பதை தவிர்க்கும் வகையில் உள்நாட்டிலேயே அவற்றை உற்பத்தி செய்ய முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது. அடுத்த 5 ஆண்டுகளில் 1.75 இலட்சம் கோடி ரூபாய் அளவுக்கான ஆயுதங்களை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளோம். இராணுவத் துறையில் தற்சார்ப்பு நிலையை எட்டுவது, ஏற்றுமதியை ஊக்குவிப்பது ஆகியவையே இந்த அரசின் முக்கிய நோக்கமாகும். உள்நாட்டில் தனியார்…
-
- 0 replies
- 156 views
-
-
கர்நாடகாவில் பள்ளி மாணவிகள் ஹிஜாப் அணியும் விவகாரம் தற்போது வன்முறையாக மாறியுள்ளது. அந்த மாநிலத்தின் இரு மாவட்டங்களில் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் சிலர் காவி சால்வை அணிந்து போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.இந்த விவகாரத்தில் செவ்வாய்க்கிழமை இரு தரப்பினர் இடையே வன்முறை மற்றும் மோதல்கள் வெடித்ததையடுத்து, பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை மூன்று நாட்களுக்கு மூட மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வரும் வேளையில், இந்த வன்முறை மற்றும் மோதல் சம்பவங்கள் வெடித்துள்ளன. இருப்பினும் இந்த வழக்கில் இன்று விசாரணை முடிவடையாததால் புதன்கிழமையும் விசாரணை நடைபெறும் என்று நீதிமன்றம் தெரிவித்தது.இந்த வழக்கில…
-
- 36 replies
- 2.7k views
-
-
ரஷ்யாவிடம் இருந்து... இந்தியா, இறக்குமதிகளை அதிகரிக்கக்கூடாது – அமெரிக்கா ரஷ்யாவிடம் இருந்து இறக்குமதிகளை அதிகரிக்கக்கூடாது என அமெரிக்கா, இந்தியாவிடம் கேட்டுக்கொண்டுள்ளது. இது தொடர்பாக வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய செய்தித் தொடர்பாளர் ஜென் சாகி, ஒவ்வொரு நட்பு நாடும், அமெரிக்கா, ரஷ்யாவுக்கு விதித்த பொருளாதாரத் தடைகளை பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இருப்பினும் ஒவ்வொரு நாடுகளும் தங்கள் சொந்த முடிவையே எடுத்து வருவதாக தெரிவித்த அவர், ”இந்தியா ரஷ்யாவிடமிருந்து வாங்கும் எண்ணெய் மொத்தத்தில் ஒன்று அல்லது 2 சதவீதம் என்று குறைந்த அளவில் இருப்பதாகவும் கூறியுள்ளார். ரஷ்யாவிடமிருந்து குறைந்த விலைக்கு கச்சா எண்ணெய் போன்றவற்றை அமெரிக்க…
-
- 1 reply
- 193 views
-
-
உக்ரைனின்... புச்சா நகரில் இடம்பெற்ற படுகொலைகள் தொடர்பான, விசாரணைக்கு ஆதரவளிப்பதாக இந்தியா அறிவிப்பு! உக்ரைனின் புச்சா நகரில் நிகழ்ந்த படுகொலைகளுக்கு கண்டனம் தெரிவித்துள்ள இந்தியா படுகொலை தொடர்பான விசாரணைக்கு ஆதரவு அளிப்பதாகவும் கூறியுள்ளது. இது குறித்து ஐ.நாவில் பேசிய இந்திய தூதர் திருமூர்த்தி, “ உக்ரைனில் பொதுமக்கள் மீதான தாக்குதல் கவலையளிப்பதாகவும், புச்சா நகரில் நிகழ்ந்த படுகொலைக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார். மனிதாபிமான அடிப்படையில் உக்ரைனுக்கு மருத்துவ உதவிகள் வழங்க இந்தியா தயாராக இருப்பதாக தெரிவித்த அவர், புச்சா படுகொலை தொடர்பான விசாரணைக்கும் இந்தியா ஆதரவு அளிப்பதாகவும் கூறினார். ரஷ்யா- உக்ரைன் இடையிலான போர் ப…
-
- 1 reply
- 198 views
-
-
ஹிஜாப் விவகாரம் : இந்தியாவின் உள் விவகாரங்களில் நுழையும் அல்கொய்தா! கர்நாடக மாநிலத்தில் ஹிஜாப் விவகாரத்தில் கோஷமிட்ட மாணவி ஒருவரை அல்கொய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவர் அய்மன் அல் ஜவாஹிரி பாராட்டும் காணொலி ஒன்று வெளியாகியுள்ளது. குறித்த காணொலியில், “ஹிஜாப் தொடர்பான அடக்குமுறைக்கு எதிர்வினையாற்ற வேண்டும். இந்தப் பெண் குறித்து சமூக வலைதளங்களில் வெளியான காணொலிகளை பார்த்தேன். அவரது துணிவு குறித்து அறிந்து கவிதை எழுதி பாராட்ட முடிவு செய்தேன்” எனத் தெரிவித்துள்ளார். இதனையடுத்து இந்தியாவின் உள் விவகாரங்களில் அல்-கொய்தா அமைப்பின் தலைவர் கருத்து தெரிவித்துள்ளமைக்கு பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதேவேளை குறித்த மாணவியின் தந்தை அல்கொய்தாவோடு தங்களு…
-
- 0 replies
- 165 views
-
-
உக்ரைனில் இருந்து... நாடு திரும்பிய மாணவர்களின், கல்வி நடவடிக்கை குறித்து ஏனைய நாடுகளுடன் பேச்சுவார்த்தை! உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய இந்திய மாணவர்கள் படிப்பை நிறைவு செய்வதற்காக பல நாடுகளுடன் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இதன்படி ருமேனியா, ஹங்கேரி, போலந்து, கஜகஸ்தான் ஆகிய அரசுகளுடன் பேச்சுவார்த்தைகள் முன்னெக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். இது தொடர்பாக மக்களவையில் பேசிய அவர், உக்ரைன் மாணவர்களுக்கு அவர்கள் வழங்கும் கல்வி கடன்களில், உக்ரைன் நெருக்கடியின் தாக்கத்தை மதிப்பிடுமாறு வங்கிகளை நிதி அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது. கீவ்வில் உள்ள பல்கலைக்கழகம் உட்பட பல பல்கலைக…
-
- 0 replies
- 158 views
-
-
இந்தியா- சீனா எல்லை விவகாரத்திற்கான... நிதி ஒதுக்கீடு, முந்தைய ஆண்டுகளை விட அதிகரிப்பு! இந்தியா- சீனா எல்லைக்கான நிதி முந்தைய நிதியாண்டை விட 6 மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது குறித்து மாநிலங்கள் அவையில் பேசிய மத்திய அமைச்சர் நித்யானந்த ராய் , வடகிழக்கு மாநிலங்களின் எல்லைப் பகுதிகளின் பாதுகாப்பிற்காக ஒதுக்கப்பட்ட நிதி குறிப்பிட்டக் காலக்கெடுவுக்குள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். எல்லை உள்கட்டமைப்பு மற்றும் மேலாண்மை திட்டத்தின் கீழ் இந்தோ-சீனா எல்லைப் பகுதிகளுக்கான நிதி 42 கோடி ரூபாயில் இருந்து தற்போது 249 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2022/1…
-
- 0 replies
- 169 views
-
-
மிரட்டல்... மற்றும் அச்சுறுத்தலுக்கு, பயப்பட மாட்டோம் – சோனியா காந்தி மிரட்டல் மற்றும் அச்சுறுத்தலுக்கு பயப்பட மாட்டோம் என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார். டெல்லியில் இடம்பெற்ற காங்கிரஸ் கட்சி தலைவர் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், இவ்வாறு கூறியுள்ளார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், ” நாம் புத்துயிர் பெற வேண்டியது நமக்கு மட்டும் முக்கியம் அல்ல. அது நமது ஜனநாயகம் மற்றும் சமூகத்திற்கு அவசியம். மக்களை பிரித்தாளும் கொள்கையில் ஆளுங்கட்சியும், அதன் தலைவர்களும் மாநிலத்திற்கு மாநிலம் செய்து வருகின்றனர். வரலாறு சிதைக்கப்படுகிறது. பல நூற்றாண்டுகளாக நமது பன்முகத்தன்மை கொண்ட சமூகத்தை நிலைநிறுத்தி வளப்படுத்திய நல…
-
- 0 replies
- 165 views
-
-
புதிய பிரதமர் நியமிக்கப்படும் வரை இம்ரான் இடைக்கால பிரதமராக நீடிப்பார் - பாகிஸ்தான் ஜனாதிபதி அறிவிப்பு பாகிஸ்தான் பாராளுமன்றம் கலைக்கப்பட்டதால் பிரதமர் இம்ரான் கான் பிரதமராக நீடிக்க முடியாது என அமைச்சரவை செயலாளர் அறிவித்த நிலையில், காபந்து பிரதமர் அறிவிக்கப்படும் வரை இம்ரான் பிரதமராக நீடிப்பார் என அந்நாட்டு ஜனாதிபதி ஆரிப் அல்வி அறிவித்துள்ளார். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம், அந்நாட்டு பாராளுமன்றத்தில் நிராகரிக்கப்பட்டது. இதனையடுத்து, பாராளுமன்றத்தை கலைக்க கோரி ஜனாதிபதி ஆரிப் அல்வியிடம் பிரதமர் இம்ரான் கான் கடிதம் எழுதினார். இதனை ஏற்ற ஜனாதிபதி பாராளுமன்றத்தை கலைத்ததுடன், 90 நாட்களுக்குள்…
-
- 0 replies
- 141 views
-
-
இலங்கை பொருளாதார நெருக்கடி! தேயிலை ஏற்றுமதியில் இந்தியாவுக்கு அதிர்ஷ்டம்.! டெல்லி: இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடியால் பிற நாடுகளுக்கான தேயிலை ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது. இது இந்திய தேயிலை உற்பத்தியாளர்கள், ஏற்றுமதியாளர்களுக்கு அதிர்ஷ்டமாக மாறலாம் என நிபுணர்கள் கணித்துள்ளனர். இலங்கையில் தேயிலை ஏற்றுமதி மற்றும் சுற்றுலா துறை சார்ந்த வருமானங்கள் தான் அந்நாட்டுக்கு பிரதானமாக வருவாயாக உள்ளன. கொரோனா பரவல் உள்ளிட்ட காரணங்கமால் சுற்றுலா வருமானம் முடங்கியது. இதனால் இலங்கை அதிகளவில் கடன் வாங்கியது. மேலும் கையிருப்பு அந்நிய செலாவணியும் கரைந்து போக தற்போது அந்நாடு கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது. பொதுமக்கள் வீதிகளில் இறங்கி போராட்…
-
- 0 replies
- 249 views
-
-
இலவசங்கள் தொடர்ந்தால் இலங்கை நிலைதான் நமக்கும்.! மோடியிடம் நேரடியாக முறையிட்ட செயலர்கள்.! டெல்லி: தேர்தல் காலங்களில் அறிவிக்கப்படும் ஜனரஞ்சக மற்றும் இலவசத் திட்டங்கள் குறித்து பிரதமர் மோடியிடம் மத்திய அரசின் உயர்மட்ட அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. வழக்கமாகத் தேர்தல் காலங்களில் பல்வேறு கட்சிகளும் பல வாக்குறுதிகளை முன்வைத்து பிரசாரம் செய்யும். தேர்தலில் மக்கள் வாக்குகளைப் பெற பல்வேறு கட்சிகளும் இலவசத் திட்டங்கள் அறிவிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளன. இந்த இலவச திட்டங்கள் குறித்து இரு வேறான கருத்துகள் உள்ளன. தேர்தல் காலங்களில் அறிவிக்கப்படும் இலவசத் திட்டங்கள் குறித்து நீதிமன்றங்களில் கூட வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. முக்கிய சந்த…
-
- 2 replies
- 235 views
- 1 follower
-
-
இலங்கை – இந்தியா விமான சேவையை... குறைக்க, எயார் இந்தியா நடவடிக்கை! இலங்கை – இந்தியா விமான சேவையை குறைப்பதாக எயார் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது. பயணிகளின் எண்ணிக்கை தற்போது குறைவாக இருப்பதன் காரணமாக மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு தற்போது வாரத்திற்கு 16 விமானங்கள் இயக்கப்படும் நிலையில், அந்த எண்ணிக்கையை 13 ஆவதாக குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை இந்தியாவின் கடன் வசதி, எரிபொருள் உணவுகள் ஆகியவை இலங்கை மக்களுக்கு உயிர்நாடியாக விளங்கும் என இலங்கைக்கான இந்தியத் தூதர் கோபால் பாக்லே தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2022/1274707
-
- 0 replies
- 123 views
-
-
இந்தியாவின் ஏற்றுமதி... 417.8 பில்லியன் அமெரிக்க டொலராக அதிகரிப்பு! இந்தியாவின் ஏற்றுமதி கடந்த மார்ச் மாதத்துடன், 417.8 பில்லியன் அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது. இது குறித்து பேசிய மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல், இந்திய பொருளாதாரம் பல சாதனைகளை முறியடிக்கும் வகையில் வளரும் என்ற நம்பிக்கை உள்ளதாக தெரிவித்தார். அதேநேரம் இந்தியாவின் ஏற்றுமதி வரலாற்றில் எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகமானது எனவும், அவர் கூறியுள்ளார். இதேவேளை தற்போது எட்டப்பட்டுள்ள இந்தச் சாதனை முந்தைய ஆண்டை விட 14.53 விழுக்காடு அதிகமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2022/1274697
-
- 0 replies
- 147 views
-