Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கை 24/11/17 ஜிம்பாப்வே நாட்டின் புதிய அதிபராக பதவியேற்றார் எமர்சன் முனங்காக்வா - ஆனால் , ஊழல் , வேலைவாய்ப்பின்மைக்கு புதிய தலைமை முடிவு கட்டுமா ? செளதி பட்டத்து இளவரசரால் கைது செய்யப்பட்ட இளவரசர்கள் , கோடீஸ்வரர்கள் உள்ளிட்ட பிரபலங்களின் தற்போதைய நிலை என்ன ? சிறை வைக்கப்பட்டுள்ள ஆடம்பர ஹோட்டலுக்கு பிரத்யேகமாகச் சென்றது பிபிசி நேபாள நாடாளுமன்றம் ,சட்டப்பேரவைகளுக்கு நாளை மறுதினம் தேர்தல் - புதிய அரசியலமைப்பு உருவான பிறகு நடத்தப்படும் முதலாவது வாக்கெடுப்புக்கு அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு வேட்டை ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.

  2. ஒஸ்கர் பிஸ்டோரியஸ்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனை காதலியை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற வழக்கில் தென்னாபிரிக்காவை சேர்ந்த மாற்றுத் திறனாளி தடகள வீரர் ஒஸ்கர் பிஸ்டோரியசுக்கு 13 ஆண்டு 5 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த முன்னணி மாற்றுத்திறனாளி ஓட்டப்பந்தய வீரரான ஒஸ்கர் பிஸ்டோரியஸ்(29), கடந்த 2013ம் ஆண்டு காதலர் தினத்தன்று தனது காதலி ரீவா ஸ்டீன்கம்ப்பை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார். வீட்டில் திருடன் புகுந்துவிட்டதாக நினைத்து தவறுதலாக சுட்டதாக பிஸ்டோரியஸ் கூறினார். இதுகுறித்து விசாரணை நடத்திய பொலிசார் பிஸ்டோரியசை கைது செய்து வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் மரணம் விளைவிக்கும் குற்றம் செய்ததாக அவருக்கு …

  3. தீவிரவாதி ஹபீஸ் சயீத் வீட்டுக் காவலில் இருந்து விடுதலை : அமெரிக்கா அதிருப்தி!!! பாகிஸ்தானை சேர்ந்த 10 தீவிரவாதிகள் கடந்த 26-11-2008 அன்று கடல் மார்க்கமாக இந்தியாவுக்குள் நுழைந்து மும்பையில் குண்டுகளை வெடித்தும் துப்பாக்கியால் சுட்டும் கொடூர தாக்குதல்கள் நடத்தினர். 150க்கும் மேற்பட்டோர் கொன்று குவிக்கப்பட்ட இந்த தாக்குதல்களை பாகிஸ்தானில் அமர்ந்து கொண்டு மூளையாக இருந்து செயல்படுத்தியவர் ஹபீஸ் சயீத். லஷ்கர் தொய்பா என்ற தீவிரவாத இயக்கத்தின் நிறுவனரான இவர் அந்த இயக்கத்துக்கு பாகிஸ்தானில் தடை விதிக்கப்பட்ட நிலையில் தற்போது ஜமாத் உத்தவா என்ற பெயரில் அரசியல் இயக்கத்தை நடத்தி வருகிறார். ஹபீஸ் சயீத்தும் அவரது நண்பர்கள் 4 பேரும் பாகிஸ்தான்…

  4. ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலகச் செய்திகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். விளம்பரம் பாகிஸ்தானில் லஷ்கர் தலைவர் விடுதலை படத்தின் காப்புரிமைAFP Image captionஹஃபீஸ் சயீத் கடந்த 2008-ஆம் ஆண்டு 160க்கும் மேலானவர்கள் உயிரிழந்த மும்பை தாக்குதல் சம்பவத்தின் முக்கிய குற்றவாளி என இந்திய புலனா…

  5. முகபேவின் அரசியல் பாதையும், ஜிம்பாப்வேவில் நிகழ்ந்த பொருளாதாரச் சரிவும்! ஒரு நாட்டின் பொருளாதாரம்தான் அங்கு வாழும் ஒவ்வொரு குடிமகனுக்கும் வாழ்வாதாரமாக அமையும். நாட்டை நேசிப்பதற்கும் வெறுப்பதற்கும் பொருளாதாரம் மட்டுமே காரணமாக இருக்கும். அந்தப் பொருளாதாரத்தில் சிக்கிச் சின்னாபின்னமான ஜிம்பாப்வே நாட்டின் தற்போதைய நிலை என்ன. பொருளாதார வீழ்ச்சிக்கு அதிபர் முகபே கொண்டுவந்த கொள்கை என்ன. வாங்க பார்ப்போம்! யார் இந்த ராபர்ட் கேப்ரியல் முகபே? : தெற்கோத்சியாவில் (ஜிம்பாப்வே நாட்டின் முந்தைய பெயர்) உள்ள `குட்டமா' எனும் சிற்றூரில், கேப்ரியல் - போனா தம்பதிக்குப் பிறந்தவர்தான் ராபர்ட் கேப்ரியல் முகபே. அந்த ஊரில் வாழும் மக்கள், கிரு…

  6. பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கை 22/11/17 மனுஸ் தீவு முகாமை அதிகாரப்பூர்வமாக மூடியது ஆஸ்திரேலிய அரசு - அகதிகளை வலுக்கட்டாயமாக காவல்துறை வெளியேற்றுவதால் பதற்றம் சட்டவிரோத குடியேறிகளைத் தடுக்க, டிரம்ப் அறிவித்த பெருஞ்சுவர் திட்டம் - சொந்த கட்சியிலேயே ஆதரவு குறைவதால் நிறைவேறுவதில் சிக்கல் டங்கல் பாலிவுட் பட பாணியில் பாகிஸ்தானில் வாழும் மல்யுத்த சகோதரிகள் - தாய்நாட்டுக்காக பதக்கங்களைக் குவித்து சாதனை ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.

  7. ஐ.நா நீதிமன்றம்: இந்தியாவிடம் தோற்ற பிரிட்டன் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ஐக்கிய நாடுகள் அவையின் முதன்மையான சட்டப் பிரிவு. நெதர்லாந்து நாட்டின் தி ஹேக்-இல் அமைந்துள்ள இதன் முக்கிய பணி நாடுகளுக்கு இடையெ உள்ள பிரச்சனைகளைத் தீர்ப்பதுதான். படத்தின் காப்புரிமைAFP/GETTY IMAGES Image captionநீதிபதிகள் தேர்தலில் வாக்களிக்கும் ஐ.நா பாதுகாப்பு சபை உறுப்பினர்…

  8. ‘மனித கசாப்புக்காரன்’ மிலாடிக் குக்கு சர்வதேச நீதிமன்றம் ஆயுள்தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது குளோபல் தமிழ்ச் செய்தியாளர் பொஸ்னியாவின் மனித கசாப்புக்காரன் எனப்படும் ரெட்கோ மிலாடி( Ratko Mladic) க்கு ஐ.நா. சர்வதேச நீதிமன்றம் ஆயுள்தண்டனை விதித்துள்ளது. 1992- 1995 காலப்பகுதியில் செபர்னிக்காவில் நடந்த இனப்படுகொலையில் பொஸ்னியாவின் அப்போதைய இராணுவத் தலைமையாக இருந்த ரொட்கோ மிலாடி இனப்படுகொலையின் சூத்திரதாரியாக அடையாளம் காணப்பட்டுள்ளார். இந்த மிலேச்சத்தனமான படுகொலைகளில் ரொட்கோ மிலாடி போர்க் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுக் கைது செய்யப்பட்டிருந்தார். அவரது குற்றத்தை உறுதிசெய்து ஐ.நாவின் சர்வதேச நீதிமன்றம் அவருக்கு ஆயுள்தண்டனை வழங்கித்…

  9. ஒக்கினாவா தீவின் தென்கிழக்கு கடலில் விழுந்த அமெரிக்க இராணுவ விமானத்திலிருந்த 8 பேர் மீட்கப்பட்டுள்ளனர். அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான இராணுவ விமானம் நேற்று மதியம் சுமார் 2.45 மணியளவில் விமானத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக நிலை தடுமாறி பிலிப்பைன்ஸ் நாட்டின் ஒக்கினாவா தீவின் தென்கிழக்கு கடலில் விழுந்தது. விபத்துக்குள்ளான விமானத்தில் இருந்த 11 பேரை தேடும் பணியில் பிலிப்பைன்ஸ் கடலோரக் காவல் படையினர் மற்றும் அமெரிக்க கடற்படை வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டு 8 பேரை மீட்டுள்ளனர். ஏனைய 3 பேரையும் அமெரிக்கா ராணுவத்தினரும், ஜப்பான் ராணுவத்தினரும் இணைந்து தேடி வருகின்றனர். இந்த விபத்துக்கான காரணம் குறித்து அமெரிக்க ராணுவத்தினர் விசாரணை ந…

  10. ''மலிவு விலையில் டிக்கெட் வாங்கினால் விமானத்தில் கடைசியாகத்தான் ஏற வேண்டும்'': பிரிட்டீஷ் ஏர்வேஸ் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் படத்தின் காப்புரிமைDANIEL BEREHULAK மலிவு விலையில் பயணச்சீட்டை பதிவு செய்யும் பயணிகள் விமானத்தில் கடைசியாகத்தான் ஏறவேண்டும் என்ற ஓர் அறிவிப்பை விமான நிறுவனமான பிரிட்டீஷ் ஏர்வேஸ் வெளியிட்டுள்ளது. விளம்பரம் இதற்காக, ஐந்து வகையான முன்னுரிமை அ…

    • 3 replies
    • 554 views
  11. அமெரிக்காவின் இரட்டை கோபுர தகர்ப்பு வழக்கில் ரூ.625 கோடி இழப்பீடு வழங்க விமான நிறுவனங்கள் ஒப்புதல் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இருந்த இரட்டை கோபுர கட்டிடம் மீது தீவிரவாதிகள் விமானங்களை மோதியதால் தீப்பிடித்து எரிந்தது. அப்போது கட்டிடத்திலிருந்து கரும்புகை வெளியேறியது. - REUTERS அமெரிக்காவில் 2001-ம் ஆண்டு நடந்த இரட்டை கோபுர தாக்குதல் தொடர்பான வழக்கில் கட்டிட உரிமையாளருக்கு ரூ.625 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க விமான நிறுவனங்கள் ஒப்புக் கொண்டுள்ளன. அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உலக வர்த்தக மையம் அமைந்திருந்த இரட்டை கோபுர கட்டிடத்தின் மீது, கடந்த 2001-ம் ஆண்டு செப்டம்பர் 11-ம் தேதி…

  12. ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலகச் செய்திகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். விளம்பரம் சிரியா போரை நிறுத்த புதிய முயற்சி படத்தின் காப்புரிமைEPA Image captionஇரான் அதிபர் ஹசன் ரோஹானி (இடது), துருக்கி அதிபர் ரிசப் தய்யீப் எர்துவான் (வலது) உடன் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் சிர…

  13. ஜிம்பாப்வே புதிய தலைவராக வெள்ளிக்கிழமை பதவி ஏற்கிறார் எம்மர்சன் முனங்காக்வா - ராபர்ட் முகாபே பதவி இறங்கியதை வரவேற்று மக்கள் கொண்டாட்டம். நியூயார்க் தாக்குதல் சந்தேக நபரின் தாய் நாடான உஸ்பெகிஸ்தானுக்கு சென்றது பிபிசி - அவரது தாயார், அண்டை வீட்டாரிடம் திரட்டிய முக்கிய தகவல்கள் வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கும் சிறுவர்களுக்கு புத்துணர்வளிக்க வீதிகளையை விளையாட்டு மைதானமாக்கும் புதுமைத் திட்டம் ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.

  14. ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலகச் செய்திகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். விளம்பரம் நாடு திரும்பினார் ஹரிரி படத்தின் காப்புரிமைREUTERS இரண்டு வாரங்களுக்கு முன்பு செளதி அரேபியாவில் தனது பதவிவிலகல் முடிவை அறிவித்தபிறகு முதல்முறையாக லெபனான் பிரதமர் சாத் ஹரிரி மீண்டும் பெய்ரூ…

  15. நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஆரம்பித்த சில நிமிடங்களில் முகாபே இராஜினாமா (UPDATE) பிந்திய செய்திகளின்படி, நம்பிக்கையில்லாப் பிரேரணை குறித்த விவாதம் ஆரம்பித்த சில நிமிடங்களில் முகாபே தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக அந்நாட்டு சபாநாயகர் அறிவித்துள்ளார். ஸிம்பாப்வே ஜனாதிபதி ரொபர்ட் முகாபே மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானம் குறித்த விவாதம் அந்நாட்டு பாராளுமன்றில் ஆரம்பித்துள்ளது. ஸிம்பாப்வே சுதந்திரம் பெற்ற 1980ஆம் ஆண்டு முதல் பிரதமராகப் பதவி வகித்த முகாபே, 1987ல் ஜனாதிபதியாகப் பதவியேற்றதையடுத்து, கடந்த முப்பது வருட காலமாக அதே பதவியில் தொடர்ந்து வருபவர். தற்போது 93 வயதாகும் முகாபேயின் பதவியைத் தன்வசப்படுத்திக்கொள்ள அவர…

  16. மியான்மரின் ரக்கைன் மாகாணத்தில் ரோஹிஞ்சா ஹிந்துக்கள் கொன்று புதைக்கப்பட்டதாகக் கூறப்படும் பகுதியில் பிபிசி நடத்திய சிறப்புப் புலனாய்வு காஸா நிர்வாகத்தை வழிநடத்தும் தலைமையை தீர்மானிக்க பாலஸ்தீனிய அரசியல் குழுக்கள் கெய்ரோவில் இன்று முக்கிய சந்திப்பு சிஸ்ட்டீன் சேப்பல் தேவாலய ஓவியங்கள் போல, தனது வீட்டு அறைகளை அழகுபடுத்தி வரும் எழுபது வயது லண்டன் பெண்மணி ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.

  17. முடிவுகாண முடியாத பிரெக்சிற் - ஜனகன் முத்துக்குமார் ஐக்கிய இராச்சியத்துக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையிலான பிரெக்சிற் பேச்சுவார்த்தை, இரு பகுதியினரதும் பேரம்பேசும் நிலையில் மாற்றம் ஏற்படாததைத் தொடர்ந்து, நான்காவது முறையாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு ஜூன் 23ஆம் திகதி இடம்பெற்ற சர்வஜன வாக்கெடுப்பில், வாக்களித்தோரில் 51.9 சதவீதமானவர்கள், ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு ஐக்கிய இராச்சியம் வெளியேற வாக்களித்திருந்தனர். அதைத் தொடர்ந்து இவ்வாண்டு மார்ச் மாதம் 29ஆம் திகதி, ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒப்பந்தத்தின் 50ஆவது உறுப்புரையை ஐக்கிய இராச்சிய அரசாங்கம் நடைமுறைப்படுத்தியதிலிருந்து, குறித்த திகதியிலிருந்து 2 வருட…

    • 5 replies
    • 1.6k views
  18. வட கொரியாவை பயங்கரவாதத்திற்கு ஆதரவளிக்கும் நாடுகளின் பட்டியலில் சேர்த்தார் டிரம்ப் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க ஒன்பது ஆண்டுகளுக்கு பின், வட கொரியாவை பயங்கரவாதத்திற்கு ஆதரவளிக்கும் நாடுகளின் பட்டியலில் மீண்டும் சேர்த்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார். படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionவட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் (இடது) மற்…

  19. ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலகச் செய்திகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். விளம்பரம் வட கொரியா பயங்கரவாததிற்கு உதவுகிறது: டிரம்ப் படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionடொனால்டு டிரம்ப் ஒன்பது ஆண்டுகளுக்கு பின்னர், வட கொரியாவை பயங்கரவாதத்தின் ஆதரவளிக்கும் நா…

  20. இதற்கு இந்தியாவிற்கு முதலிடமாம் அடிப்படை கழிவறை வசதிகளின்றி வசிக்கும் மக்களை கொண்ட நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளதாக ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது. "வாட்டர்எய்டு" என்ற சர்வதேச தொண்டு நிறுவனம் உலகம் முழுவதும் பாதுகாக்கப்பட்ட குடிநீர், சுத்தம் மற்றும் சுகாதாரம் ஆகியவற்றை மேம்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது. இந்த அமைப்பு உலகளவில் மக்களுக்கு அடிப்படை சுகாதாரம் கிடைப்பது பற்றி ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. ‘அவுட் ஆப் ஆர்டர்’ என்ற பெயரில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் அடிப்படை கழிப்பறை வசதியின்றி வசிக்கும் அதிக மக்களை கொண்ட நாடுகளின் வரிசையில் இந்தியா முதலிடத்தில் உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்திய…

  21. உலக அழகி ஆனார் இந்திய அழகி...வாழ்த்து மழை குவிகிறது! இந்த ஆண்டுக்கான உலக அழகிப்போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த மனுஷி சில்லர் பட்டம் வென்றுள்ளார். 2017-ம் ஆண்டுக்கான உலக அழகிப் போட்டி இன்று இரவு சீனாவில் நடைபெற்றது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 108 அழகிகள் இதில் கலந்துகொண்டனர். இந்தப் பிரமாண்ட அழகிப் போட்டியில், இந்தியா சார்பாக ஹரியானாவைச் சேர்ந்த 21 வயது மருத்துவ மாணவி மனுஷி சில்லர் (Manushi Chillar) கலந்துகொண்டார். இறுதிச்சுற்றில் அவர் வெற்றி பெற்று உலக அழகியாக கிரீடம் சூட்டப்பட்டார். இவர் ஏற்கனவே இந்திய அழகியாக தேர்வானவர் ஆவார். இந்த ஆண்டு தொடக்கத்தில் நடந்த “மிஸ் இந்தியா 2017” போட்டியில், 29 மாநி…

  22. சிம்பாப்வே ஆட்சி மாற்றத்தின் பின்னணியில் சீனா? சிஎன்என்– சீனாவிற்கு சிம்பாப்வேயின் இராணுவதளபதியொருவர் விஜயம் மேற்கொள்வதை உலகநாடுகள் ஓருபோதும் வழமைக்கு மாறான விடயமாக பார்க்கப்போவதில்லை. ஜிம்பாப்வேயில் அதிகம் முதலீடு செய்துள்ள நாடு சீனா என்பதுடன் ரொபேர்ட்முகாபே அரசாங்கத்தின் நெருங்கிய சகாவாகவும் சீனா காணப்படுகின்றது. ஆனால் சீனாவிற்கு விஜயம் மேற்கொண்ட சிம்பாப்வேயின் இராணுவதளபதி கொன்சன்டினோ சிவெங்கா அந்த நாட்டின் பல அதிகாரிகளை சந்தித்து விட்டு நாடு திரும்பிய பின்னரே சிம்பாவேயில் அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது- அதிகாரத்தை இராணுவம் கைப்பற்றியுள்ளது. இதன் காரணமாக சிம்பாப்வே இராணுவதளபதியின் சீனா விஜயம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளதுடன் முகாபேயை …

  23. சிரியாவில் ஐ.எஸ். குழுவின் கடைசி கட்டுப்பாட்டுப் பகுதியாக கருதப்பட்ட எல்லை நகரம் மீட்பு - ஆனால், ஷியா போராளிகளின் ஆதிக்கத்துக்கு இது வழியமைக்குமா? களத்தில் இருந்து பிபிசி தரும் பிரத்யேகத் தகவல்கள். பிளாஸ்டிக் மாசுபாட்டால் பெருங்கடல்களுக்கும் அச்சுறுத்தல் - அரிய வகை உயிரினங்களுக்கு ஆபத்து ஏற்படுவதாக விஞ்ஞானிகள் கவலை ஐரோப்பா செல்லும் கனவுகளுடன் செர்பியாவில் காத்திருக்கும் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் அகதிகளை இணைக்கும் கிரிக்கெட் போட்டிகள். ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.

  24. பசுபிக் தெற்குக் கடலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பசுபிக் கடலின் தெற்குப் பகுதியில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. ஆஸ்திரேலியாவுக்கு அருகில் உள்ள நியூகலிடோனியா தீவின் டைடனில் இன்று மாலை இலங்கை நேரப்படி 3.16 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிச்டர் அளவுகோலில் நிலநடுக்கம் 6.6 ஆகப் பதிவாகியுள்ளது. டடைனுக்கு 324 கிலோமீற்றர் தொலைவில் சுமார் 89 கிலோமீற்றர் ஆழத்தில் நிலநடுக்கத்தின் மையம் காணப்பட்டது. நிலநடுக்கத்தால் கட்டடங்களில் விரிசல் ஏற்பட்டது. நிலநடுக்கம் தொடர்பான மேலதிக சேத விவரங்கள் கிடைக்கப்பெறவில்லை என்று பன்னாட்டு ஊடகங்கள் தெரிவித்தன. …

  25. ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள் கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலகச் செய்திகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். அதிபர் பதவியில் தொடர்வேன்: முகாபே ஜிம்பாப்வே அதிபர் ராபர்ட் முகாபே, பதவி விலக வேண்டும் என வலுத்துவரும் கோரிக்கையை நிராகரித்துள்ளார். அடுத்த சில வாரங்களுக்கு தொடர்ந்து பதவியில் இருப்பேன் என்று அவர் தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி நேரலையில் பேசிய அதிபர் முகாபே, டிசம்பர் மாதம் நடக்கவுள்ள நாடாளுமன்ற கூட்டத்தை தலைமையேற்று நடத்துவேன் என்று தெரிவித்துள்ளார். அவரின் ஸானு- பி.எஃப் கட்சி, அவரை கட்சித்தலைவர் பதவியிலிருந்து நீக்கியதோடு, அதிபர் பதவியிலிருந்து விலக 24 மணிநேரத்திற்கு குறைவான கெடு அளித்திருந்தத…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.