ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143296 topics in this forum
-
திருகோணமலைத் துறைமுகத்தை பார்வையிட்டார் ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர் இட்சுனோரி ஒனோடெரா இன்று திருகோணமலைத் துறைமுகத்துக்குச் சென்று பார்வையிட்டுள்ளார். திருகோணமலை கடற்படைத் தளத்தில் ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சருக்கு சிறிலங்கா கடற்படையினரின் அணிவகுப்பு மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து, ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சருக்கு திருகோணமலைத் துறைமுகம் தொடர்பாக சிறிலங்கா கடற்படையின் கிழக்குப் பிராந்திய தளபதியினால் விளக்கம் அளிக்கப்பட்டது. அத்துடன் தனது பயணத்தை நினைவுபடுத்தும் வகையில், டொக்யார்ட் தளத்தில் மா மரம் ஒன்றையும் அவர் நாட்டினார். திருகோணமலைத் துறைமுத்தில…
-
- 0 replies
- 211 views
-
-
மயிலிட்டித் துறைமுக அபிவிருத்தியை – இன்று ஆரம்பிக்கின்றார் மைத்திரி!! மயிலிட்டித் துறைமுகம் 425 மில்லியன் ரூபா செலவில் இரண்டு கட்டங்களாக அபிவிருத்தி செய்யப்படவுள்ளது. முதல் கட்ட அபிவிருத்திப் பணிகள் அரச தலைவர் மைத்திரி பால சிறிசேனவால் இன்று காலை 10 மணிக்கு ஆரம்பிக்கப்படவுள்ளது. இது தொடர்பில் வடக்கு – கிழக்கு அபிவிருத்திக்கான அரச தலைவர் செயலணியின் செயலர் வே.சிவஞானசோதி அனுப்பியுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது-, போருக்கு முற்பட்ட காலத்தில் இலங்கையின் மீன்பிடி உற்பத்தியில் 30 சதவீதத்துக்கு மேல் பங்களிப்புச் செய்த ஒரு பிரபல்யமான மீன்பிடி துறைமுகம் மயி…
-
- 5 replies
- 1k views
-
-
சிவாஜிலிங்கம் என்னை ஒன்றும் செய்யமாட்டார் ; ஐனாதிபதி மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தனது மக்களுக்காக போராடுகிறார். அவர் என்னை ஒன்றும் செய்யமாட்டார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அதனாலேயே சிவாஜிலிங்கத்துடன் சென்று பேசினேன் என ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேனா கூறியுள்ளார். மயிலிட்டி துறைமுகம் புனரமைப்புக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே ஐனாதிபதி மேற்கண்டவாறு கூறியுள்ளார். அண்மையில் நான் யாழ்ப்பாணம் வந்தபோது சிவாஜிலிங்கம் போராட்டம் நடாத்திக் கொண்டிருந்தார். நான் உடனேயே எனது வாகனத்தில் இருந்து இறங்கி சென்று எதற்காக போராடுகிறீர்கள்? என சிவாஜிலிங…
-
- 0 replies
- 456 views
-
-
தாவடியில் வாள்வெட்டுக்குழு அட்டகாசம்- 3 வீடுகள் மீது தாக்குதல்!! யாழ்ப்பாணம் கொக்குவில் தாவடிப் பகுதியிலுள்ள வீடுகளுக்குக் புகுந்து வாள்வெட்டுக் குழு சற்றுமுன்னர் அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளது. 3 வீடுகள் மீது தாக்குதல் நடத்தியதாகத் தெரியவருகிறது. மேலதிக விவரங்கள் வெளியாகவில்லை. https://newuthayan.com/story/17/தாவடியில்-வாள்வெட்டுக்குழு-அட்டகாசம்-3-வீடுகள்-மீது-தாக்குதல்.html
-
- 1 reply
- 832 views
-
-
செய்யவேண்டிய விடயங்களை உரிய காலத்தில் செய்வோம் விக்கினேஸ்வரன் விவகாரம் தொடர்பில் சம்பந்தன் கருத்து (திருகோணமலை நகர்) வடக்கு முதலமைச்சர் வேட்பாளராக விக்கினே ஸ்வரன் கூட்டமைப்பினால் நிறுத்தப்படவேண்டு மென மக்கள் எதிர்பார்ப்பார்களானால் அதுபற்றி அவசரப்பட்டு முடிவெடுக்கவோ பகிரங்கமாக பேசவோ வேண்டிய அவசியமில்லையெனக் கருதுகிறேன். பக்குவமாக, அமைதியாக, பரபரப்பில் லாமல் இவ்விடயம் தொடர்பில் முடிவெடுக்கப்படும் என்று கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித்தலைவருமாகிய இரா சம்பந்தன் தெரிவித்தார். விக்கினேஸ்வரனையே எதிர்வரும் மாகாண சபை தோ்தலில் கூட்ட…
-
- 3 replies
- 521 views
-
-
யாழில் ரயில் விபத்து ; இரு இளைஞர்கள் பரிதாபமாக பலி யாழ்ப்பாணம், சாவகச்சேரியில் சற்றுமுன் இடம்பெற்ற ரயில் விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகியுள்ளனர். குறித்த சம்பவம் சற்று முன்னர் யாழ்பாணம் சாவகச்சேரி, சங்கத்தானை அரசடி சந்தியிலுள்ள ரயி்ல் கடவைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. கொழும்பிலிருந்து யாழ். நோக்கி சென்ற கடுகதி ரயிலுடன், ரயில் கடவையை கடக்க முயன்ற மோட்டர் சைக்கிளே குறித்த விபத்தில் சிக்கியுள்ளது. இந்நிலையில் குறித்த விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை யாழ் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது http://www.virakesari.lk/article/38973
-
- 0 replies
- 876 views
-
-
வடக்கு முதல்வரின் கருத்திற்கு முன்னாள் போராளிகள் கண்டனம் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் கருத்தை வன்மையாக கண்டிப்பதாக, புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் சிவகுமார் ரகுநாத் தெரிவித்துள்ளார். இராணுவ ஒட்டுக்குழுக்களுடன் இணைந்து முன்னாள் போராளிகள் தமிழர்களை காட்டிக்கொடுப்பதாக அண்மையில் ஊடகங்களிடம் பேசிய முதலமைச்சர் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக இன்று (புதன்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”முன்னாள் போராளிகள் இராணுவ ஒட்டுக்குழுக்களுடன் சேர்ந்து தமிழ் சமுதாயத்தை காட்டிக்கொடுத்து செயற்படுவதாக இருந்தால், ஏன் தங்கள…
-
- 0 replies
- 384 views
-
-
“விடுதலைப்புலிகள்” என பொறிக்கப்பட்ட துப்பாக்கி, ஆயுதங்களுடன் 7 பேர் கைது ; தாக்குதலுக்கு தீட்டமிட்டிருக்கலாமென சந்தேகம் கண்டி புஸ்பதான மாவத்தையிலுள்ள இரு மாடிக்கட்டிடம் ஒன்றில் இருந்து தமிழீழ விடுதலைப்புலிகள் எனப் பெயர் குறிப்பிட்ட ஆயுதம் ஒன்றுடன் மற்றும் சில ஆயுதங்களுடன் சந்தேக நபர்கள் ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். விசேட பொலிஸ் அதிரடிப்படைப்பிரிவினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது துப்பாக்கிகள் மூன்றும், அதற்கான ரவைகளும் வாள் மற்றும் போலியான வாகன இலக்கத்தகடுகள், கைதிகளுக்குப் போடப்படும் கைவிலங்கு சோடி ஒன்று என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். மேற்படி துப்பாக்கிகளில் ‘ரிபிடர் கண்’ வகையைச் சேர்ந்த துப்…
-
- 0 replies
- 412 views
-
-
குடாக் கடலில் குவியும் உயிரியல் கழிவுகள் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை யின் ஆபத்தான கழிவுகளான உயிரி யல் கழிவுகளை அகற்றும் தனியார் நிறுவனம் அவற் றைச் சுத்திகரிப்புச் செய்யாது கடலுக்குள் நேரடி யாகக் கொட்டுகின்றது என்று யாழ்ப்பாணம் மாந கர சபையில் நேற்று குற்றஞ்சாட்டப்பட்டது. அந் தக் குற்றச்சாட்டில் உண்மை இருப்பதாக யாழ். மாந கர சபை ஆணையாளரும் தெரிவித்தார். யாழ்ப்பாணம் மாநகர சபைின் அமர்வு நேற்று நடை பெற்றது. அதில் உறுப்பினர் ம.அருள்குமரன் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தார். அவர் தெரிவித்தாவது: யாழ்ப்பாணம் போதனா மருத்துவனையின் உயிரியல் கழிவுகளை அகற்றும் பொறுப்பு தன…
-
- 1 reply
- 393 views
-
-
கிழக்கில் அனைத்து கட்சிகளும் பொது சின்னத்தில் போட்டி? கிழக்கு மாகாணத்தில் அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து எதிர்வரும் தேர்தலில் பொதுச் சின்னம் ஒன்றில் போட்டியிடுவது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று கிழக்கு தமிழர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் கோபாலகிருஸ்ணன் தலைமையில் இராசமாணிக்கம் மண்டபத்தில் இன்று நடைபெற்றது. குறித்த கலந்துரையாடலில் பலதரப்பட்ட கட்சியின் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர். கிழக்கு மாகாண தமிழ் மக்களின் எதிர்கால நலன் கருதி அனைத்து கட்சிகளையும் ஒன்றிணைந்து தேர்தலின்போது தமிழ் மக்களின் பலத்தினை நிலை நிறுத்தும் முகமாக குறித்த கலந்துரையாடல் மேற்படி கிழக்கு மாகாண தமிழர் ஒன்றியத்தினரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. ஏற்…
-
- 0 replies
- 670 views
-
-
நெடுந்தீவில் மூழ்கியது படகு நெடுந்தீவு கடலில் படகு ஒன்று மூழ்கியுள்ளதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த படகில் 10 பேர் இருந்தனர் என்றும் அவர்கள் இந்தியாவில் இருந்து வந்துகொண்டிருந்தனர் என்று தெரிவிக்கப்படுகிறது. https://newuthayan.com/story/13/நெடுந்தீவில்-மூழ்கியது-படகு.html
-
- 0 replies
- 373 views
-
-
சுழிபுரம் மாணவியின் சப்பாத்து எமது வீட்டில் இருந்தது ; சாட்சியின் மகள் உறவினர்களிடம் தெரிவிப்பு "படுகொலை செய்யப்பட்ட மாணவி சிவனேஸ்வரன் றெஜினாவின் சப்பாத்துக்கள், தமது வீட்டுக்குள் இருந்ததாக மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முன்னிலையாகி சாட்சியமளித்தவரின் மகளான சிறுமி ஒருவர் உறவினர்களிடம் தெரிவித்துள்ளார். அதனால் இந்த கொலை வழக்கில் திருப்பம் ஏற்பட்டுள்ளது. எனவே அதுதொடர்பில் அந்தச் சிறுமியை நீதிமன்றில் முற்படுத்தி அவரிடம் சாட்சியம் பெறப்படவேண்டும். அதன்மூலமே இந்த வழக்கின் சரியான போக்கை உறுதிப்படுத்த முடியும். அத்துடன், குற்றவாளி எவராவது வெளியில் இருந்தால் அவரைக் கைது செய்ய முடியும்" இவ்வாறு பாதிக்கப்பட்டோர் நலன்சார்பில் முன்னிலையாக சட்…
-
- 0 replies
- 561 views
-
-
புலிப் பயங்கரவாதத்திற்கு எதிராக எப்போதும் குரல்கொடுத்தவர் : மெதமுலனயில் சுப்பிரமணியன் சுவாமிக்கு மஹிந்த புகழாரம் பா.ஜ.கா.வின் சிரேஸ்ட தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி விடுதலைப்புலிகளின் பயங்கரவாதத்திற்கு எதிராக எப்போதும் குரல்கொடுத்தவர் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். மகிந்த ராஜபக்சவின் சகோதரரின் இறுதியைகிரியைகளில் கலந்துகொள்வதற்காக இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள சுப்பிரமணியன் சுவாமி மகிந்தவின் சகோதரரின் பூதவுடலுக்கும் அஞ்சலி செலுத்திய பின்னர் மாத்தறையில் உள்ள மகிந்த ராஜபக்சவின் மெதமுலன இல்லத்திற்கு சென்று அவரை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு குறித்து தனது உத்தியோகபூர்வ டுவிட்…
-
- 0 replies
- 335 views
-
-
பலாலி விமான நிலையம் குறித்து ஆராய, இந்திய குழு யாழ்ப்பாணம் செல்கிறது… யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையம் குறித்து ஆராய்வதற்காக இந்திய குழுவொன்று அங்கு செல்லவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ். பலாலி விமான நிலையத்தை பிராந்திய விமான நிலையமாக அபிவிருத்தி செய்ய ஏற்கனவே தீர்மானம் எடுக்கப்பட்டுள்ள நிலையில், அது குறித்து ஆராய்வதற்காக மூன்று இந்திய அதிகாரிகளை கொண்ட குழுவினர் இன்று (21.08.18) யாழ்ப்பாணத்திற்கு செல்லவுள்ளதாக விமான போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தியாவின் உதவியுடன், பலாலி விமான நிலையத்தை, பிராந்திய விமான நிலையமாக அபிவிருத்தி செய்வது தொடர்பாக, இலங்கை இந்திய அரசாங்கங்களுக்கு இடையில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. அதற்…
-
- 14 replies
- 1.9k views
-
-
ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் மோசடி- விசாரணைக்கு அழைக்கப்பட்டார் கோத்தா ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் மிகின் எயர் ஆகியவற்றில் இடம்பெற்ற முறைகேடுகள் குறித்து விசாரணைகளை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழு முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை விசாரணைக்காக அழைத்துள்ளது. ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் கேட்டரிங் நிறுவனம் மற்றும் மிகின்லங்காவில் இடம்பெற்ற முறைகேடுகள் குறித்து ஆராயும் ஆணைக்குழுவே கோத்தபாய ராஜபக்சவை விசாரணைக்காக அழைத்துள்ளது. ஆகஸ்ட் 29 ம் திகதி வாக்குமூலம் வழங்குவதற்காக சமூகமளிக்குமாறு ஆணைக்குழு வேண்டுகோள் விடுத்துள்ளது. இதேபோன்று முன்னாள் அமைச்சர் சஜின்வாஸ் குணவர்த்தன மற்றும் ஸ்ரீலங்கன் எயர்லைன்சின் முன்னாள் தலைவர் நிசாந்த விக்க…
-
- 0 replies
- 425 views
-
-
அம்பாந்தோட்டை துறைமுகம் – ஜப்பானுக்கு சிறிலங்கா அளித்துள்ள வாக்குறுதி அம்பாந்தோட்டை துறைமுகத்தை, சீனா இராணுவத் தேவைகளுக்குப் பயன்படுத்த சிறிலங்கா அனுமதிக்காது என்று, ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர் இட்சுனோரி ஒனோடெராவிடம் சிறிலங்கா பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன உறுதியளித்துள்ளார். சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சில் நேற்று நடந்த இருதரப்புப் பேச்சுக்களின் போதே இந்த உறுதிமொழி அளிக்கப்பட்டதாக, ஜப்பானிய செய்தி ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர், இட்சுனோரி ஒனோடெரா தமது உயர்மட்டக் குழுவுடன், நேற்று சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சில் முக்கிய பேச்சுக்களை நடத்தினார். சிறிலங்கா பாதுக…
-
- 0 replies
- 426 views
-
-
அரசாங்கம் வாக்குறுதிகளை நிறைவேற்றாமையால் இனியும் பொறுமைகாக்க முடியாது - மாவை அரசாங்கம் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றவில்லை. அது தொடர்பில் மக்கள் மத்தியில் பல விமர்சனங்கள் இருக்கின்றன. நாங்கள் இனியும் பொறுமையுடன் இருக்க முடியாது என்று யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்த பிரித்தானிய உயர்ஸ்தானிகராலய அரசியல் தலைமை அதிகாரி நீல் கவானாக்கிடம் தமிழரசுக்கட்சியின் தலைவரும் யாழ்.மாவட்ட எம்.பி.யுமான மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார். மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் பிரித்தானிய தூதரக அதிகாரி என்னிடம் கேட்டபோது மாகாண சபைத் தேர்தல் ஆனாது இடம்பெறவேண்டும். ஆனால் மாகாண சபைத் தேர்தலுக…
-
- 0 replies
- 340 views
-
-
வடக்கு – கிழக்குக்கிடையிலான நிலத்தொடர்பை நல்லாட்சி அரசாங்கம் துண்டிப்பதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது: சுரேஸ் பிறேமச்சந்திரன் முல்லைத்தீவு மாவட்டத்தில் மகாவலி அதிகார சபையின் பெயரைப் பயன்படுத்தி 2500 ஏக்கர் நிலத்தை பறித்து வடக்கு, கிழக்குக்கிடையிலான நிலத்தொடர்பை நல்லாட்சி அரசாங்கம் துண்டிப்பதற்கான ஏற்பாடுகளையும் செய்து வருகிறது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். வவுனியா வடக்கு, வெடுக்குநாறி ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்தை தொல்பெருட் திணைக்களம் ஆக்கிரமிக்க முற்படுகின்றமை தொடர்பில் கேட்ட போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், வவுனியா, ஒலுமடுவில் இருக்கக் கூடிய வெடுக்குநா…
-
- 0 replies
- 261 views
-
-
வடமராட்சி கிழக்கில்- கடலட்டை தொழில் செய்வது தடுக்கப்படும்!! வடமராட்சி கிழக்கில் கடலட்டைத் தொழில் செய்வதற்குத் தடை விதிக்கப்படும் என்று கொழும்பு கடற்றொழில் நீரியல்வளத்துறை அமைச்சர் காமினி விஜித் விஜிதமுனி செய்சா உறுதியளித்தார் என்று கடற்றொழில் சமாசத் தலைவர் வே.தவச்செல்வம் தெரிவித்தார். நேற்று இரவு யாழ்ப்பாணத்தில் உள்ள விடுதி ஒன்றில் அமைச்சர் காமினி விஜித் விஜிதமுனி செய்சாவுடன் நடந்த தனிப்பட்ட சந்திப்பில் இவ்வாறு உறுதியளிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார். இந்தச் சந்திப்பில் வடமராட்சி கடற்றொழில் சமாசத் தலைவர் வர்ணகுலசிங்கம், மீனவர் சங்கப் பிரதிநிதிகள்…
-
- 0 replies
- 257 views
-
-
நில ஆக்கிரமிப்புக்கு துணையாக – மகாவலி அதிகார சபை!! கருநாட்டுக்கேணியில் அரச காணிகளை ஆக்கிரமித்த பெரும்பான்மையின மக்களுக்கு எதிராகப் பிரதேச செயலரால் வழக்குத் தொடுக்கப்பட்டு வழக்கு நடைபெறும் நிலையில் ஆக்கிரமித்த அதே காணிகளை அரச தலைவர் மைத்திரி பால சிறிசேனவின் கீழ் இயங்கும் மகாவலி அதிகார சபை பெரும்பான்மையின மக்களுக்கு வழங்கியுள்ளது. இருவருக்கு காணி உரிமம் வழங்கியுள்ள மகாவலி அதிகார சபை, மேலும் 6 பேருக்கு விரைவில் வழங்கவுள்ளது என்று தெரிய வருகின்றது. முல்லைத்தீவு மாவட்டம் கரைதுறைப்பற்று பிரதேச செயலர் பிரிவில் கிராமம் கருநாட்டுக்கேணி தமிழ் மக்கள் பாரம்பரியமாக வாழ்ந்து வந…
-
- 0 replies
- 290 views
-
-
காங்கேசன்துறையில் இன்றும் சில பகுதிகள் படையினரால் விடுவிப்பு! யாழ் காங்கேசன்துறை பகுதியில் படையினர் வசமிருந்த மேலும் ஒரு தொகுதி நிலம் பொதுமக்கள் பாவனைக்கு இன்று கையளிக்கப்பட்டுள்ளது. காங்கேசன்துறை மத்தி J/234 கிரமசேவகர் பிரிவிற்குட்பட்ட பகுதியே இவ்வாறு படையினரின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்ககைக்கு அமைவாக அப்பகுதியில் இருந்துவந்த இராணுவமுகாம் முற்றாக அகற்றப்பட்டு நான்கரை ஏக்கர் நிலப்பரப்பு மக்களிடம் கையளிக்கப்பட்டது. இன்று பிற்பகல் காங்கேசன்துறை மத்தியில் இடம்பெற்ற நிகழ்வில் யாழ் மாவட்ட கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் தர்சன ஹெட்டியராச்சியால் காணிக்கான சான்றிதழ் யாழ் மாவட்ட அர…
-
- 2 replies
- 488 views
-
-
’சிங்களத்தில் தான் முதலில் எழுதவேண்டுமெனச் சட்டமில்லை’ க.கமல் தமிழர்கள் செறிந்து வாழும் பகுதிகளில் காட்சிப்படுத்தப்படும் பாதாகைகளில், முதலில் தமிழில் எழுதுவது தவறில்லை எனத் தெரிவித்துள்ள அமைச்சர் மனோ கணேசன், சிங்களத்தில்தான் முதலில் எழுதவேண்டும் எனச் சட்டமில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், வடக்கில் காட்சிப்படுத்தப்படும் பதாகைகள் குறித்துத் தெரிவித்த கருத்துத் தொடர்பில், நேற்று (21) கருத்து வெளியிடுகையிலேயே, அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். "வடக்கு, கிழக்கு பகுதிகளில் தமிழ் மக்களே அதிகம் வாழ்கின்றனர். எனவே, அப்பகுதியில் பாதாகைகளைக் காட்சிப்படுத்தும் …
-
- 0 replies
- 312 views
-
-
முல்லைத்தீவில் பாடசாலை மாணவி பாலியல் துஸ்பிரயோகம் ;பளைப்பகுதி இளைஞன் கைது! முல்லைத்தீவில் பாடசாலை மாணவியை கடத்தி சென்று பாலியல் துஸ்பிரயோகம் செய்த நபரை புதுக்குடியிருப்பு பொலிஸார் நேற்று கைதுசெய்துள்ளார்கள். முல்லைத்தீவில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் உயர்தர பரீட்சை எழுதிவரும் 19 வயது மாணவியை பளையினை சேர்ந்த 22 வயதுடைய இளைஞன் நேற்றுமுந்தினம் பரீட்சை எழுதிவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த மாணவியை ஊர்தி ஒன்றில் கடத்தி சென்று பளைப்பகுதியில் வைத்து பாலியல் துஸ்பிரயோகம் செய்துவிட்டு இன்று உடையார் கட்டுப்பகுதியில் கொண்டுவந்து இறக்கிவிட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பில் மாணவியின் பெற்றோர் கொடுத்த முறைப்பாட்டின் அடிப்படையில் பு…
-
- 0 replies
- 247 views
-
-
எட்டு தமிழக மீனவர்கள் நாட்டுபடகுடன் கைது இலங்கை கடற்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது கல்பிட்டி கடல் பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்டு கொண்டிருந்த எட்டு தமிழக தூத்துக்குடி மீனவர்களையும் அவர்களின் நாட்டுபடகுகளையும் கைப்பற்றி குறித்த 8 பேரையும் இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்ட மீனவர்களை கல்பிட்டி பொலிஸாரிடம் கடற்படையினர் ஒப்படைத்தனர். கைது செய்யப்பட்ட மீனவர்களை இன்று புத்தளம் மாவட்ட மீன்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கபடவுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/38908
-
- 0 replies
- 364 views
-
-
அரசியலிலிருந்து விக்கினேஸ்வரன் ஒதுங்க வேண்டும்- ஹெல உறுமய வடக்கில் தமிழ் மக்களை தூண்டி விட்டு அரசியல் செய்யும் விக்னேஸ்வரன் உடனடியாக அரசயலில் இருந்து விலக வேண்டுமென ஜாதிக ஹெல உறுமயவின் தலைவரும் அமைச்சருமான சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். இலங்கையில் இடம்பெற்றது உள்நாட்டு யுத்தம் அல்ல, விடுதலைப்புலிகளை முன்னிறுத்தி இத்தியாவும், அமெரிக்காவும் இலங்கை இராணுவத்துக்கு எதிராக முன்னெடுத்த யுத்தத்தையே இராணுவம் வெற்றிக்கொண்டது. அதனால் விக்னேஸ்வரன் உள்ளிட்டோர் வடக்கில் தைரியமாக அரசியல் செய்கின்றனர். ஜாதிக ஹெல உரிமைய கட்சியின் அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போதே அமைச்சர் சம்பிக்க ரணவக்க மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். …
-
- 0 replies
- 290 views
-