Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. நந்திக்கடலில் மலர் தூவி அஞ்சலித்தார் ரவிகரன் நந்திக்கடலில் உயிர் நீர்த்த மக்களுக்கு வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் மலர்துாவி அஞ்சலி செலுத்தியுள்ளார். எங்கள் பெருமைமிகு வரலாறின் சோகமான இறுதிக் காட்சிகளின் மௌனமானசாட்சியே இந்த நந்திக்கடல்.. ஏராளமான எங்கள் உறவுகளின் கண்ணீரும்,செந்நீரும்கலந்துள்ள இந்தக் கடலன்னையை வணங்கி ,உயிர்நீத்த எங்கள் உறவுகளுக்கு மலர் தூவிஅஞ்சலித்தேன்.. என வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்தார். http://www.ibctamil.com/srilanka/80/100671?ref=home-imp-flag

  2. அந்தணர் ஒன்றியத்தால் முள்ளிவாய்க்கால் அஞ்சலி நிகழ்வு முள்ளிவாய்க்கால்நினைவு தினம் வடக்கு கிழக்கு பிரதேசமேங்கும் அனுஸ்டிக்கப்பட்டு வரும் நிலையில்வவுனியா மாவட்ட அந்தணர் ஒன்றியத்தினால் இன்று குருமண்காடு சித்தி விநாயகர்ஆலயத்தில் அஞ்சலி பிரார்த்தனை நிகழ்வு இடம்பெற்றது. அந்தணர் ஒன்றியத்தின்செயலாளர் மயூரசர்மா தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் முத்துஜெயந்திநாதக்குருக்கள் ஆத்மசாந்தி பிரார்த்தனையை நடத்தியிருந்தார். இதனையடுத்துஅஞ்சலிச்சுடர்கள் ஏற்ற்பட்டதை அடுத்து இறந்த ஆத்மாக்களுக்காக பொதுமக்கள்அந்தணர்கள் ஆலய நிர்வாகத்தினர் நெய் விளக்கேற்றி அஞ்சலி செலுத்தினர் http://www.ibctamil.com/srilanka/80/100664?ref=home-imp-flag

  3. முள்ளிவாய்க்கால் மண்ணில் இன்று- ஈழத்தின் பெருந்துயர் நினைவேந்தல்!! முற்பகல் 11 மணிக்கு ஈகச்­சு­ட­ரேற்­ற­லு­டன் 2 நிமி­டம் அக­வ­ணக்­கம் மதி­யம் வரை­யில் தாய­கத்­தில் கடை­ய­டைப்பு தமி­ழர்­க­ளின் வாழ்­வில் குருதி தோய்ந்த சரித்­தி­ரம் எழு தப்­பட்ட நாள் இன்று. மனி­தா­பி­மா­னத்­துக்­கான போர் என்று பன்னா­டு­க­ளுக்குப் பகி­ரங்க அறை­கூ­வல் விடுத்து, ஒட்டு­ மொத்த தமி­ழி­னத்­தை­யும் மனி­தா­பி­மா­ன­மின்றிக் கொன்­றொ­ழித்த கொடுந்துயர் நாள். முள்­ளி­வாய்க்­கால் தந்த துயர வலி­களை மனங்­க­ளில் நிறுத்­திக் கொண்டு உயிர் பறித்­தெ­டுக்­கப்…

  4. எமது தலைவிதியை நாமே தீர்மானிக்கவேண்டும்: சிவாஜிலிங்கம் ஐ.நா. மற்றும் உலக நாடுகளின் உதவியுடன் வட.கிழக்கில் ஒரு சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட்டு எமது மக்களின் தலைவிதியை நாமே தீர்மானிக்கவேண்டும் என வட.மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தினையொட்டி நினைவேந்தல் நிகழ்வு மட்டக்களப்பு கல்லடி கடற்கரையில் நேற்று (வியாழக்கிழமை) மாலை நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “2009ஆம் ஆண்டு தமிழீழ தேசிய போராட்டம் கொடூரமாக அடக்கப்பட்டு அழிக்கப்பட்டு தமிழ் மக்கள் பல்லாயிரக்கணக்கில் அழிக்கப்பட்ட அந்த போர் முடி…

  5. முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் - முல்லைத்தீவில் பூரண கடையடைப்பு! (படங்கள்) 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18 திகதி யுத்தம் முடிவுக்கு வந்த நாளில் கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான உறவுகளுக்கான முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இன்று (18) உணர்வுபூர்வமாக இடம்பெறுவதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார். அந்த வகையில் இன்றைய தினம் நண்பகல் 1 2 மணி வரை வர்த்தகர்கள் கடைகளை அடைத்து துக்கதினமாக அனுஷ்டிக்குமாறு கோரப்பட்டதற்க்கு அமைவாக இன்று முல்லைத்தீவு மாவட்டம் எங்கும் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்ட நிலையில் துக்க தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. அந்த வகையில் முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு, முள்ளியவளை, தண்ணீரூற்று, ஒட்…

  6. கல்வி அதிகாரிகளுக்கு -வடக்கு ஆளுநரின் அதிரடி உத்தரவு!! புத்­த­ளத்­துக்கு வழங்­கப்­ப­டும் வடக்கு மாகாண சபை­யின் அனைத்து நிதி­க­ளை­யும் உட­ன­டி­யாக நிறுத்­து­மாறு வடக்கு மாகாண ஆளு­நர் ரெஜினோல்ட் குரே, கல்வி அமைச்­சின் அதி­கா­ரி­களுக்கு நேற்று அதி­ரடி உத்­த­ரவு பிறப்­பித்­தார். வடக்கு மாகாண கல்வி அமைச்­சுக்கு ஒதுக்­கப்­ப­டும் பணம் நிய­திச் சட்­டங்­க­ளை­யும் மீறி தொடர்ந்­தும் மாகா­ணத்­துக்கு வெளி­யில் இயங்­கும் பாட­சா­லைக்­குச் சென்­று­கொண்­டி­ருக்­கி­றது. மாகாண கல்வி அமைச்­சர் மற்­றும் கல்­வித் திணைக்­கள அதி­கா­ரி­கள் தொடக்­கம் மாகாண …

  7. யுத்தத்தை முடித்ததாக மார்தட்டும் அரசாங்கம் வடக்கின் அழிவுகளுக்கு பதிலளிக்க வேண்டும் - அனுரகுமார (ஆர்.யசி ) வடக்கின் ஜனநாயக செயற்பாடுகள் அனைத்தையும் சீரழித்து யுத்தம் ஒன்றை உருவாக்கியது நிறைவேற்று ஜனாதிபதி முறைமையைக் கொண்டு செயற்பட்ட அரசாங்கமேயாகும். யுத்தத்தை முடித்ததாக மார்தட்டிக்கொள்ளும் அரசாங்கம் வடக்கின் அழிவுகளுக்கு பதில் கூற வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக தெரிவித்தார். சிவில் சமூக பிரதிநிதிகளுடனான சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் இது தொடர்பில் மேலும் குறிப்பிடுகையில், நிறைவேற்று ஜனாதிபதி மூலம் முன்னெடுக்கப்படும் சர்வாதிகார நகர்வுகள் துண்டிக்கப்பட வே…

  8. சரணடைந்தவர்களின் பட்டியலை வெளியிடக் கோருகிறது அனைத்துலக மன்னிப்புச் சபை போரின் இறுதிக்கட்டத்தில் சிறிலங்கா படையினரிடம் சரணடைந்தவர்களின் பட்டியலையும், அவர்கள் பற்றிய தகவலையும் வெளியிடுமாறு சிறிலங்கா அரசாங்கத்திடம், அனைத்துலக மன்னிப்புச் சபை கோரியுள்ளது. சிறிலங்காவில் போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட ஒன்பதாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, அனைத்துலக மன்னிப்புச்சபை வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ”சரணடைந்தவர்களின் பட்டியலை வெளியிடுமாறு தாம் பாதுகாப்புச் சபைக்கு உத்தரவிடுவதாக கடந்த 2017ஆம் ஆண்டு, ஜூன் மாதம், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு வாக்குறுதி அளித்திருந்தார். …

  9. முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை நினைவு கூருவோரை படமெடுக்கும் இனந்தெரியாத நபர்கள் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தில் தமிழினப் படுகொலையில் உயிர் நீத்தவர்களை நினைவு கூரும் வகையில் ‘தீபமேந்திய ஊர்தி பவனி’ நேற்று மதியம் 12 மணியளவில் வவுனியாவை வந்தடைந்தது. தீபமேந்திய ஊர்தியினை மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்த இனந்தெரியாத நபர்கள் ஊர்தியில் அஞ்சலி செலுத்தியவர்களையும் அவ்விடத்திற்கு வந்தோரையும் தமது கையடக்கத்தொலைபேசிகளில் புகைப்படம் எடுத்தனர். இதனால் சற்று பதற்றத்துடன் மக்கள் அஞ்சலி செலுத்தியதுடன் குறித்தநபர்கள் மீதான அச்சத்தில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்கு தயங்கி நின்றதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். …

  10. முள்ளிவாய்க்கால் கொடூரத்தை தன் பாடக்குறிப்பு புத்தகத்தில் எழுதிய முல்லைத்தீவு மாணவர்! குளோபல் தமிழ் விசேட செய்தியாளர் ஈழத் தமிழர்கள் இனப்படுகொலை நினைவுகளால் கனத்த மனங்களுடன் உள்ள காலம் இது. இக் கால கட்டத்தில் பாடசாலை மாணவன் ஒருவர் முள்ளிவாய்க்காலின் கொடிய நினைவுகளை தன் பாடக்குறிப்பு புத்தகத்தில் எழுதியுள்ள நிகழ்வொன்று முல்லைத்தீவில் இடம்பெற்றுள்ளது. நேற்றைய தினம் ஆசிரியர் ஒருவர் தமிழ் பாடத்தில் இரட்டைக் கிழவி குறித்து தனது வகுப்பு மாணவர்களுக்கு கற்பித்துள்ளார். இதன்போது இரட்டைக் கிழவியை உபயோகப்படுத்தி வாக்கியங்களை அமைக்குமாறு அவர்களுக்கு பயிற்சி அளித்த வேளையில் மாணவர் ஒர…

  11. உயிர்களை தியாகம் செய்த 28,589 படையினரின் தியாகங்களை குறுகிய நோக்கங்களுக்காக பயன்படுத்தக்கூடாது குளோபல் தமிழ்ச் செய்தியாளர் நாட்டு மக்கள் தற்போது அனுபவித்து வரும் சுதந்திரத்திற்காக 28 ஆயிரத்து 589 படையினர் தமது உயிர்களை தியாகம் செய்துள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினட் ஜெனரல் மஹேஸ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார். தேசிய போர் வீரர்கன் தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் இதனை கூறியுள்ளார். அனைத்து இலங்கையர்களும் தற்போது அனுபவித்து வரும் சுதந்திரத்திற்காக 23 ஆயிரத்து 962 இராணுவத்தினர், ஆயிரத்து 160 கடற்படையினர், 443 விமானப்படையினர், 2 ஆயிரத்து 568 காவல்துறையினர் மற்றும் 456 சிவில் பாதுகாப்பு படையினர் தமது உயிர…

  12. வவுனியாவில் நினைவேந்தல் ஊர்தியில் தீபமேற்றிய வெளிநாட்டு பிரஜை வவுனியாவை வந்தடைந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தீபமேற்றிய ஊர்தியில் இன்று பிற்பகல் வேளையில் பஜார் வீதியில் பொதுமக்கள் மற்றும் வர்த்தக நிலையங்களிலுள்ள வர்த்தகர்கள் சுடர் ஏற்றுவதற்கு நிறுத்தப்பட்டிருந்தபோது அவ்வீதியால் சென்ற வெளிநாட்டு பெண் பிரஜை ஒருவர் பலருக்கு முன்னுதாரணமாக முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவு சுடர் ஏற்றியுள்ளார். வல்வெட்டித்துறையிலிருந்து நேற்று ஆரம்பமான குறித்த வாகன ஊர்தி கிளிநொச்சி, மாங்குளம், ஓமந்தை ஊடாக இன்று பிற்பகல் 12 மணியளவில் வவுனியாவை வந்தடைந்தது. பழைய பேருந்து நிலையத்திலிருந்து பஜார் வீதியூடாக சென்றபோதே குறித்த வெளிநாட்டு பிரஜை வாகனத்தில் ஏறி மு…

  13. யாழ் நகரப்பகுதியில் இயங்கிவந்த முன்னணி வெதுப்பகத்துக்கு சீல் யாழ் நகரப்பகுதியில் இயங்கிவந்த முன்னணி வெதுப்பகம் (பேக்கரி) ஒன்று இன்று சீல் வைக்கப்பட்டு மூடப்பட்டுள்ளது. சுகாதார விதிமுறைகளை மீறி செயற்பட்டதாக தெரிவித்து நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் மேற்படி வெதுப்பகம் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த வெதுப்பகத்தில் உணவு தயாரிக்கப்படும் இடத்தில் திருத்தவேலைகளும் மேற்கொள்ளப்படடுள்ளதனால் சுகாதார விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://globaltamilnews.net/2018/79537/

  14. ‘முள்ளிவாய்க்காலில் நினைவு தூபி அமைக்க ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளேன்’ - எஸ்.நிதர்ஷன், எம்.றொசாந்த், டி.விஜிதா முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த உறவுகளை நினைவுகூரும் வகையில் நினைவு தூபி அமைக்க வேண்டியதன் அவசியம் குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நேரில் சந்தித்து வலியுறுத்தியுள்ளதாக சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். இன்று (17) ஊடகங்களுக்கு அவர் அனுப்பி வைத்துள்ள செய்திக்குறிப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். அதில் மேலும், “இறுதி யுத்தத்தின் போது வன்னியில் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்பட்டனர். உயிரிழந்த இந்த மக்கள் நி…

  15. புலிகளை நினைவுகூர்ந்தால் கைதிகளை விடுவியுங்கள்! – முரண்டு பிடிக்கிறார் கம்மன்பில!! விடுதலைப் புலிப் பயங்கரவாதிகளை வீரர்கள் என்று நினைவுகூர இடமளிக்கப்பட்டால் அவர்களை விட கொடூரமற்றவர்களான, அனைத்து சிறை கைதிகளையும் விடுதலை செய்ய வேண்டும் இவ்வாறு கூறியுள்ளார் பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில. கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். எமது நாட்டு மக்கள் விடுதலைப் புலிகளை நினைவுகூர்ந்தால் பரவாயில்லை என அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறுகிறார். போர் பற்றி தனக்கு நல்ல புரிதல் இருக்கின்றது என்றும் அவர் கூறியுள்ளார். தனது கட்சியை கைவிட்டு வந்து போருக்கு ஆதரவளித்துன்…

  16. தனிப்பட்ட அரசியலுக்காகவே மனோகணேசன் போர்க்குற்ற விசாரணைபற்றி கூறினார்! போர்க் குற்றம் தொடர்பாக உள்ளக விசாரணைகள் மட்டும் போதுமானது என்று நல்லிணக்க அமைச்சர் மனோகணேசன் கூறியிருப்பது அவரது அரசியல் காரணங்களுக்காகவே என்று வட மாகாண முதலமைச்சர் க.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். ஐ.பி.சி தமிழ் தொலைக்காட்சிக்கு இன்றைய தினம் வழங்கிய விசேட செவ்வியின்போது அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இறுதிப் போரிலே நிகழ்ந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பான சர்வதேச விசாரணைகள் குறித்து இலங்கையின் தேசிய சகவாழ்வு மற்றும் நல்லிணக்க அமைச்சர் மனோகணேசன் கடந்த வாரம் கருத்து வெளியிட்டிருந்தார். அந்த கருத்தில், போர் குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசார…

  17. மட்டக்களப்பில் 72 வருடங்களுக்குப் பின்னர் புதிய 3 மாடி கட்டிடம்.... மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் கலாசாலையின் புதிய 3 மாடி நிர்வாகக் கட்டத் தொகுதிக்கான அடிக்கல் நடும் வைபவத்திற்கு கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் பிரதம விருந்தினராக கலந்து கொள்ளவுள்ளார். எதிர்வரும் சனிக்கிழமை 19ஆம் திகதி காலை 9.30 மணிக்கு கல்லூரி அதிபர் வி.பரமேஸ்வரன் தலைமையில் நடைபெறவுள்ள இந் நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுனர் ரோஹித்த போகொல்லாகம சிறப்பு அதிதியாகவும், கௌரவ அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான ஜீ.சிறிநேசன், எஸ்.வியாளேந்திரன், எஸ்.யோகேஸ்வரன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரர் நல்லையாவின் பெரு முயற்ச…

  18. விமானப்படை முகாமில் குண்டு வெடிப்பு !!! தியத்தலாவை விமானப்படை பயிற்சி முகாமில் கைக்குண்டு வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக விமானப்படைப் பேச்சாளர் தெரிவித்தார். இன்று நடைபெற்ற பயிற்சி நடவடிக்கையின் போதே குறித்த கைக்குண்டு வெடித்துள்ளதாக விமானப்படை பேச்சாளர் மேலும் தெரிவித்தார். இதன் போது 3 பெண் விமானப்படை வீராங்கனைகள் படு காயமடைந்த நிலையில் தியத்தலாவை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. http://www.virakesari.lk/article/33549

  19. மன்னார் நகர நுழைவாயிலில் 'லங்கா சதொச' விற்பனை நிலைய வளாகத்தில் மனித எலும்புக்கூடுகள் அகழ்வு பணி ஆரம்பம் மன்னார் நகர நுழைவாயிலில் அமைந்திருந்து உடைக்கப்பட்டு புதிய கட்டிடம் அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் 'லங்கா சதொச' விற்பனை நிலைய வளாகத்தில் இருந்து அகழ்வு செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்ட மண்ணில் மனித எலும்புகள் காணப்பட்ட நிலையில் குறித்த வளாகத்தில் இன்று புதன் கிழமை(16) காலை மன்னார் நீதிவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா முன்னிலையில் அகழ்வு பணிகள் ஆரம்பமாகியது. 'லங்கா சதொச' விற்பனை நிலைய வளாகத்தில் இருந்து அகழ்வு செய்யப்பட்ட மண் மன்னாரில் பல இடங்களுக்கு விற்பனை செய்யப்பட்டிருந்தது. இதன் போது மன்னார் எமில் நகர் பகுதியில் உள்ள வீடு ஒன்றி…

  20. கீத் நொயார் கடத்தல் விவகாரம்; பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் தொடர்பு குறித்து சி.ஐ.டி. விசாரணை (எம்.எப்.எம்.பஸீர்) த நேஷன் பத்திரிகையின் முன்னாள் இணை ஆசிரியர் கீத் நொயார் கடத்தப்பட்டு சட்ட விரோதமாக தடுத்து வைக்கப் பட்டமை, சித்திரவதை செய்யப்பட்டமை, ஆயுதத்தால் தாக்கப்பட்டமை, கொலை செய்ய முயற்சிக்கப்பட்டமை மற் றும் நொயார் குடும்பத்தினருக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு தொடர்புகள் உள்ளதா என்பது குறித்து விசாரணைகள் இடம்பெற்று வருவதாக குற்றப் புலனாய்வுப் பிரிவு நேற்று கல்கிசை மேலதிக நீதிவான் லோச்சனா அபேவிக்ரமவுக்கு அறிவித்தது. இது தொடர்பில் முதல்கட்ட …

  21. பொலிஸ் உத்­தி­யோ­கத்­தர் யாழி­லி­ருந்து இட­மாற்­றம்!! ஆவா என்­ற­ழைக்­கப்­ப­டும் வாள்­வெட்­டுக் குழு­வு­டன் தக­வல்­க­ளைப் பரி­மா­றிய குற்­றச்­சாட்­டில் பொலிஸ் உத்­தி­யோ­கத்­தர் ஒரு­வர் இட­மாற்­றம் செய்­யப்­பட்­டுள்­ளார் என்று வடக்கு மாகாண மூத்த பிர­திப் பொலிஸ்மா றொஷான் பெர்­ணான்டோ தெரி­வித்­தார். ஆவா குழு­வின் தலை­வர் ஒரு­வ­ரு­டன் அலை­பே­சி­யில் தொடர்­பி­லி­ருந்து பொலி­ஸா­ரின் தக­வல்­களை வாள்­வெட்­டுக் குழு­வுக்­குக் கூறி­வந்­தார் என்று மூத்த பிர­திப் பொலிஸ்மா அதி­பர் குற்­றஞ்­சாட்­டு­கி­றார். அத­னால் குறித்த தமிழ் பொலிஸ் உத்­தி­யோ­கத்­தர் இட­மாற்­றம் செய்­யப்­…

  22. ஈ.பி.டி.பி. அப­க­ரித்த காணி: தீர்வு வழங்­கு­வாரா தவ­ராசா? வடக்கு மாகாண எதிர்க்­கட்­சித் தலை­வர் சி.தவ­ரா­சா­வால் ஆரம்­பிக்­கப்­பட்ட ‘முன்­னோக்கி நகர்­வோம்’ செயல் திட்­டத்­துக்கு முத­லா­வது முறைப்­பாட்டை வடக்கு மாகாண ஆளு­நர் குரே வழங்­கி­யுள்­ளார். ஈ.பி.டி.பியால் அப­க­ரிக்­கப்­பட்ட காணி விவ­கா­ரத்­தையே அவர் தனது முறைப்­பா­டாக வழங்­கி­யுள்­ளார். ‘யாழ்ப்­பா­ணம் ஸ்ரான்லி வீதி­யில் தனி­யா­ருக்­குச் சொந்­த­மான காணியை நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் டக்­ளஸ் தேவா­னந்தா, காணி உரி­மை­யா­ள­ரின் அனு­ம­தி­யையோ அல்­லது எந்­த­வி­த­மான கொடுப்­ப­னவோ இன்றி அத்…

  23. வடக்கு மாகாண பாட­சா­லை­க­ளில் நாளை துக்­க­தி­னம்!! முற்பகல் 11 மணிக்கு இரு­நிமிட நேர அக­வ­ணக்­கம் வடக்கு மாகா­ணத்­தின் அனைத்­துப் பாட­சா­லை­க­ளும் நாளை வெள்­ளிக்­கி­ழமை, வடக்கு மாகாண சபை­யின் கொடி­யை அரைக் கம்­பத்­தில் பறக்­க­வி­டு­மா­றும் அன்று காலை பதி­னொரு மணிக்கு அனைத்து பாட­சா­லை­க­ளி­லும் அனை­வ­ரும் அக­வ­ணக்­கம் செலுத்­து­மா­றும் அனைத்து அதி­பர்­க­ளை­யும் கேட்­டுக்­கொள் வ­தாக, வடக்கு மாகாண கல்வி அமைச்­சர் க.சர்­வேஸ்­வ­ரன் தெரி­வித்­துள்­ளார். இது தொடர்­பில் அவர் அனுப்பி வைத்­துள்ள ஊடக அறிக்­கை­யில் தெரி­விக்­கப…

  24. 5 இலங்கை மீனவர்களை விடுவித்தது இந்தியா (என்.ஜீ.ராதாகிருஷ்ணன்) இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டார்கள் என்ற காரணத்தால் இந்திய கடற்படையால் கைது செய்யப்பட்ட ஐந்து இலங்கை மீனவர்களை இந்தியா விடுதலை செய்துள்ளதாக இலங்கை கடற்படையின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்திய கரையோர பாதுகாப்பு கப்பல் அமயாவிலிருந்து இலங்கை கரையோர பாதுகாப்பு அதிவேக தாக்குதல் படகான சி.ஜி. 402 இற்கு பாதுகாப்பான முறையில் இவர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்த ஐந்து மீனவர்களும் இலங்கை கடற்படையால் காங்கேசன்துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டதன் பின்னர் யாழ்ப்பாண மீன்வள பிரதிப் பணிப்பாளரிடம் ஒப்படைக்…

  25. ஸ்ரீல.சு.க. தேசிய அரசாங்கத்திலிருந்து முழுமையாக வெளியேற வேண்டும் - சுசில் பிரேமஜயந்த (ஆர்.யசி) தேசிய அரசாங்கத்திருந்து ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி முழுமையாக வெளியேற வேண்டும். அத்துடன் கட்சியின் செயலாளர் உள்ளிட்ட பிரதான பதவிகளிலும் உடனடியாக மாற்றங்கள் கொண்டுவரப்பட வேண்டும் என்ற இறுக்கமான நிபந்தனைகளை சு.க.வின் மத்திய குழுக் கூட்டத்தில் முன்வைக்கவுள்ளதாக சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். இது குறித்து மேலும் அவர் தெரிவித்திருப்பதாவது, கட்சியின் மத்திய குழுக் கூட்டம் நாளை கூடுகின்றது, இதன்போது கட்சியின் மறுசீரமைப்பு குறித்து எம்மிடமும் வினவப்பட்டுள்ளது. இதில் பிரதான இரண்டு விதிமுறைகளுக்கு உட்பட்டதாக கட்சியின் மறுசீரமைப…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.