ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143308 topics in this forum
-
சாவகச்சேரி விபத்தில் இருவர் படுகாயம் சாவகச்சேரி விபத்தில் இருவர் படுகாயம் சாவகச்சேரி பகுதியில் சற்று முன்னர் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்தனர். அதே பகுதியைச் சேர்ந்தவர்களான சந்திரகுமார் கஜிபன் (வயது-23) கிருஷ்ணகுமார் நிறுஜன் (வயது- 15) ஆகியோரே படுகாயமடைந்தனர். மோட்டார் சைக்கிளும் காரும் மோதியதிலேயே விபத்து இடம்பெற்றதாகப் பொலிஸார் தெரிவித்தனர். க…
-
- 0 replies
- 519 views
-
-
அரசியல் நோக்கங்களுக்காக இராணுவத்தினரை பயன்படுத்தக்கூடாது - ஜனாதிபதி எந்தவொரு அரசியல் கட்சியும் தனது அரசியல் நோக்கங்களை அடைவதற்கு இராணுவத்தினரை பயன்படுத்த கூடாது என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவிதுத்துள்ளார். “வயம்ப ரண அபிமன்” இராணுவ நினைவுத் தூபியை நேற்று பிற்பகல் திறந்து வைத்து உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார். குருணாகலை - தம்புள்ளை வீதி அபிவிருத்தியின் போது தற்காலிகமாக அகற்றப்பட்ட ரணவிரு தூபிக்கு பதிலாக இந்த புதிய ரணவிரு நினைவுத் தூபி நிர்மாணிக்கப்பட்டுள்ளதுடன், வடமேல் மாகாண சபை, வீதி அபிவிருத்தி அதிகார சபை மற்றும் ரணவிரு சேவா அதிகார சபை ஆகியவற்றின் வழிகாட்டலில் முன்னாள் நினைவுத் தூபி அமையப்பெற்றிருந்த குர…
-
- 0 replies
- 248 views
-
-
சந்தேக நபரின் ஒளிப்படத்தை வெளியிட்ட திவயின ஊடகவியலாளர் கைது ஊடகவியலாளர் உபாலி தென்னக்கோன் கடத்தல் வழக்கின் சந்தேகநபரின் ஒளிப்படத்தை பிரசுரித்தமை தொடர்பாக, திவயின சிங்கள நாளிதழின் ஊடகவியலாளர் சமன் கமகே கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டார். மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் ரிவிர இதழின் ஆசிரியர் உபாலி தென்னக்கோன் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்திய ஒளிப்படம் திவயின மற்றும் இணையத்தளங்களில் வெளியானமை குறித்து விசாரிக்க குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு, கம்பகா நீதிமன்ற நீதிவானாக இருந்த கவீந்திர நாணயக்கார உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து, 2016 செப்ரெம்பர் 09 ஆம் நாள் திவயின ஊடகவியலாளர் ச…
-
- 0 replies
- 360 views
-
-
அவன்ட் கார்ட் தலைவரிடம் கையூட்டுப் பெற்ற 300 சிறிலங்கா காவல்துறை உயர் அதிகாரிகள் அவன்ட் கார்ட் பாதுகாப்புச் சேவை நிறுவனத்தின் தலைவர் மேஜர் நிசங்க சேனாதிபதியிடம் 300இற்கும் அதிகமான சிறிலங்கா காவல்துறை அதிகாரிகள், பணம் பெற்று வந்துள்ளனர் என்பது விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது. முன்னைய ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்ட அவன்ட் கார்ட் நிறுவனத்தின் தலைவர் மேஜர் நிசங்க சேனாதிபதி, தம்மிடம் பணம் பெற்ற 300 இற்கும் அதிகமான சிறிலங்கா காவல்துறை அதிகாரிகளின் பட்டியலை குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு வழங்கியுள்ளார். இதில், குற்றப் புலனாய்வுப் பிரிவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த உயர் அதிகாரிகளும் இடம்பெற்றுள்ளனர். நிசங்க சேனாதிபதிய…
-
- 0 replies
- 393 views
-
-
மன்னாரில் இன்று கலந்துரையாடலை ஆரம்பிக்கிறது காணாமல் போனோருக்கான பணியகம் காணாமல் போனோருக்கான பணியகம் பிராந்திய மட்டத்திலான கலந்துரையாடல்களை இன்று ஆரம்பிக்கவுள்ளது. இந்தப் பணியகம் அமைக்கப்பட்ட பின்னர், முதலாவது கலந்துரையாடல் மன்னாரில் இன்று இடம்பெறவுள்ளது. இதையடுத்து, அடுத்து வரும் வாரங்களில் மாத்தறை, திருகோணமலை, முல்லைத்தீவு, கண்டி, கிளிநொச்சி, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களில் முதற்கட்டமாக பிராந்திய ரீதியான கலந்துரையாடல்கள் நடத்தப்படவுள்ளன. காணாமல் போனோருக்கான பணியகத்தின் திட்டம், உபாயங்கள், தற்போதைய நிலைப்பாடு, தொடர்பாக விளக்கமளிக்கவும், பாதிக்கப்பட்ட தரப்பினரின் கருத்துக்களை அறிந்து கொள்வதற்கும், பரிந்துரைகளை தெரிவிப்பதற்கும்…
-
- 0 replies
- 200 views
-
-
பௌத்த விகாரைகளை அழித்து இந்துக் கோவில்களை கட்டியுள்ளார்கள்: சீறிச்சினந்த ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர்! வட மாகாணத்தில் பல தசாப்தங்களாக காணப்படுகின்ற பௌத்த புராதன சின்னங்கள் மீது இந்து கோவில்கள் நிர்மாணிக்கப்பட்டதாக பரபரப்பான குற்றச்சாட்டை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஒன்றிணைந்த எதிர்கட்சி முன்வைத்துள்ளது. வடக்கில் புத்தர் சிலைகளையோ அல்லது விகாரைகளையோ புதிதாக அமைப்பதற்கு அவசியமில்லை என்று தெரிவித்த ஒன்றிணைந்த எதிர்கட்சி, தெற்கில் கோவில்களையும், பள்ளிவாசல், தேவாலயங்களையும் அமைப்பதற்கு எதிர்ப்பு வெளியிடப்படாத போதிலும், வடக்கில் மட்டும் எதிர்ப்பு வெளியிடப்படுவது ஏன் என்றும் கேள்வி எழுப்பியுள்ளது. ஒன்றிணைந்த எதிர்கட்சி ஏ…
-
- 0 replies
- 694 views
-
-
நான் யுத்தக் குற்றவிசாரணைகளிற்கு எதிரானவன் இல்லை - இராணுவ தளபதி நான் யுத்த குற்றவிசாரணைகளிற்கு எதிரானவன் இல்லை எனவும் தெரிவித்துள்ள இராணுவ தளபதி மகேஸ் சேனநாயக்க தன்மீது சுமத்தப்பட்டுள்ள களங்கத்தை போக்குவதற்கு இராணுவம் ஆர்வமாக உள்ளது என குறிப்பிட்டுள்ளார். சர்வதேச அரங்கில் முன்வைக்கப்படும் யுத்தக்குற்றச்சாட்டுகளை எதிர்கொள்வதற்காக இலங்கை இராணுவம் வெளிநாட்டு நடவடிக்கைகள் இயக்குநரகம் ஒன்றை ஏற்படுத்தியுள்ளதுஎன இலங்கையின் இராணுவதளபதி மகேஸ் சேனநாயக்க இதனை தெரிவித்துள்ளார். கொழும்பில் வெளிநாட்டு செய்தியாளர்களை சந்தித்தவேளை அவர் இதனை தெரிவித்துள்ளார். இலங்கைக்கு வெளியே இராணுவத்திற்கு உரிய ஆதரவு இல்லாததன் காரணமாக தனக்…
-
- 0 replies
- 466 views
-
-
பௌத்த விகாரை தொடர்பான விசாரணைகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் ஓட்டுசுட்டான் பகுதியிலுள்ள 64 ஆவது படைப்பிரிவில் அமைக்கப்பட்டுள்ள பௌத்த விகாரை தொடர்பான விசாரணைகளை மனித உரிமைகள் ஆணைக்குழு வவுனியா அலுவலகம் மேற்கொண்டு வருகின்றது. இந்நிலையில் குறித்த படைமுகாமின் பொறுப்பதிகாரியையும் இலங்கை இராணுவத் தளபதியையும் எதிர்வரும் 25 ஆம் திகதி வவுனியா மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு விசாரணைகளுக்கு வருகை தருமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. கற்சிலைமடுப்பகுதியில் புதுக்குடியிருப்பு செல்லும் பிரதான வீதியில் தனியார் காணி ஒன்றில் 64 ஆவது படைப்பிரிவின் இராணுவ முகாம் அமைந்துள்ளது. அதில் பௌத்த விகாரை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அப்பகுதி தனியார் …
-
- 0 replies
- 359 views
-
-
இராணுவத்தில் இணையுங்கள்!! இராணுவத்தில் இணையுங்கள்!! வடக்கு இளைஞர்களை இராணுவத்தில் இணைய முன்வருமாரு யாழ்ப்பாண மாவட்ட இராணுவக் கட்டளைதளபதி மேஜர் ஜெனரல் தர்சன கெட்டியாராட்சி அழைப்பு விடுத்தார். சிங்கள டிப்ளோமா கற்கைநெறியைப் பூர்த்தி செய்த 600 மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இலங்கை வேந்தன் கலைக்கல்லூரி மண்டபத்தில் இன்று நடைபெற்றது. அதில் அவர் மேலும் தெரிவித்ததாவது, வடக்கு மக்கள் மிகவும் புத்திசாலிகள் நல்லவர்கள் எனினும் கடந்த 30 வரு…
-
- 1 reply
- 545 views
-
-
“விழுந்து விழுந்து வாக்குக் கேட்கும் நாங்கள் வெற்றி பெற்றவுடன் மக்களை மறந்து விடுகின்றோம்” SLILG, UNDP நிறுவனங்களின் அனுசரணையுடன் புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான ஒரு நாள் பயிற்சிப் பட்டறை கிறீன் கிறாஸ் ஹொட்டேல் – யாழ்ப்பாணம் 11.05.2018 காலை 09.00 மணியளவில் பிரதம அதிதி உரை… இன்றைய நிகழ்வின் தலைவர் அவர்களே, ஒரு நாள் பயிற்சிப் பட்டறை நிகழ்வுகளை முன்னெடுத்துச் செல்வதற்காக வருகைதந்திருக்கின்ற நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களே, விசேட விரிவுரையாளர்களே, உள்ளூராட்சி ஆணையாளர் அவர்களே, இந்த நிகழ்வில் கலந்துகொள்வதற்காக கொழும்பில் இருந்துவருகைதந்திருக்கும் திரு.ஜயதிஸ்ச அவர்களே, பிரதே…
-
- 0 replies
- 797 views
-
-
வித்தியா படுகொலை வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளுக்கு திடீர் இடமாற்றம்! மேல் நீதிமன்ற நீதிபதிகளான பாலேந்திரன் சசிமகேந்திரன், அன்னலிங்கம் பிரேமசங்கர் மற்றும் மாணிக்கவாசகர் இளஞ்செழியன் ஆகிய மூவருக்கும் நீதிச் சேவைகள் ஆணைக்குழுவால் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. வருடாந்த இடமாற்றத்தின் கீழ் மூன்று ஆண்டுகள் ஒரே மாகாணத்தில் மேல் நீதிமன்ற அமர்வில் கடமையாற்றியதன் அடிப்படையில் நாடு முழுவதும் மேல் நீதிமன்ற நீதிபதிகளுக்கு இடமாற்றம் வழங்கப்படுகின்றது. இதனடிப்படையில், யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன், திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதியாக இடமாற்றம் பெற்றுள்ளார். மேலும், திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்க…
-
- 3 replies
- 421 views
-
-
தீர்வு விடயத்தில் அக்கறை வேண்டும் அரசாங்கத்திடம் எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் வலியுறுத்தல் (எம்.எம்.மின்ஹாஜ், ஆர்.யசி) தேசிய பிரச்சினைக்கு தீர்வு கண்டால் மட்டுமே நாட்டின் அனைத்து பிரச்சினைகளையும் வெற்றிகொள்ள முடியும். ஆகவே வெகு விரைவில் தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் அர சாங்கம் அக்கறை செலுத்த வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் சபையில் வலியுறுத்தினார். தமிழ் மக்களின் அரசியல், பொருளாதார, சமூக உரிமைகளை புறக்கணித்துவிடலாம், அவற்றை ஒழித்துவிடலாம் என எவரும் நினைத்துவிடக் கூடாது. தமிழ் மக்களை நிராகரித்த பயணம் ஒன்றை முன்னெடுக்க முடியாது என்றும் அவ…
-
- 0 replies
- 595 views
-
-
மெதுமெதுவாக யதார்த்தமாகிவரும் எதிர்வு கூறல்!! கடந்த வருடம் யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் கோண்டாவிலில் இடம்பெற்ற ஒரு நிகழ்வில் வைத்துத் தெரிவித்த முக்கிய விடயம் இன்று முழுக்க முழுக்க யதார்த்தமாகி வருவதுபோன்று தென்படுகிறது. வடமாகாணத்தின் உன்னதமான யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தை நாம் சரியாகப் பயன்படுத்த முடியாது போனால், தமிழ் மாணவர்கள் இரண்டாவது படசமாகவே தொகையிடப்படுவார்கள். இதுவே தற்போது சாத்தியமாகப் போகிறது. இப்பொழுதே அதன் சுவாத்தியத்தை நாம் அனுபவிக்கின்றோம். தூர நோக்கோடு எடுத்தியம்பியவர்களில் ஒருவர் ஒரு பேராசிரியர்! மற்றவர் நாடாளுமன…
-
- 0 replies
- 366 views
-
-
சிறிலங்கா அதிபரிடம் மன்னிப்புக் கோரவில்லை – சரத் பொன்சேகா சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம் தாம் மன்னிப்புக் கோரவில்லை என்று, சிறிலங்கா அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தொடர்பாக சரத் பொன்சேகா கடுமையான விமர்சனங்களை வெளியிட்டிருந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் நடந்த அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பின்னர், சிறிலங்கா அதிபரைச் சந்தித்த சரத் பொன்சேகா மற்றும் ஐதேக அமைச்சர்கள், அவரிடம் மன்னிப்புக் கோரியதாக செய்திகள் வெளியாகின. இதுகுறித்து நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள சரத் பொன்சேகா, “அண்மைய அரசியல் விவகாரங்கள் தொடர்பாக சிறிலங்கா பிரதமர் முன்வைத்திருந்த திட்டம் ஒன்ற…
-
- 0 replies
- 309 views
-
-
நீதிபதிகளை நியமிக்காமல் இழுத்தடிக்கிறார் சிறிலங்கா அதிபர் – அஜித் பெரேரா மேல்நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான சட்டம் நினைவேற்றப்பட்ட போதிலும், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, போதியளவு நீதிபதிகளை நியமிக்க தவறி விட்டார் என்று, அமைச்சர் அஜித் பெரேரா குற்றம்சாட்டியுள்ளார். நாடாளுமன்ற வளாகத்தில் ஊடகவியலாளர்களைச் சந்தித்த அவர், “வழக்குகள் தாமதிக்கப்படுவதாகவும், குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதில்லை என்றும் அரசாங்கத்தின் மீது குற்றச்சாட்டுகள் கூறப்படுகின்றன. நீதிமன்றத்தில் உள்ள வழக்குகள் தாமதிக்கப்படுவதை தவிர்ப்பதற்கு, மேலதிக உயர்நீதிமன்ற நீதிபதிகளை நியமித்து சிறிலங்கா அதிபர் தமது கடமை மற்றும் கடப்பாடுகளை நிறைவேற்ற வேண்டும். …
-
- 0 replies
- 268 views
-
-
மூன்று எரிவாயு மின் திட்டங்களுக்கு அமைச்சரவை அனுமதி மூன்று திரவ இயற்கை எரிவாயு மின்திட்டங்களை அமைப்பதற்கு சிறிலங்கா அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இந்தத் திட்டங்கள் சீனா, இந்தியா, ஜப்பான் ஆகிய நாடுகளின் உதவியுடன் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன. தேசிய பொருளாதாரச் சபையின் பரிந்துரைக்கமைய, அம்பாந்தோட்டையில், மூன்று இயற்கை எரிவாயு மின்திட்டங்களை அமைக்கப்படுவதற்கு அனுமதி கோரப்பட்டது. தலா 400 மெகாவாட் திறன் கொண்ட இரண்டு மின்திட்டங்கள் சீனா மற்றும் இந்தியாவின் உதவியுடனும், 500 மெகா வாட் திறன் கொண்ட மற்றொரு மின் திட்டம் ஜப்பானிய அரசின் உதவியுடனும் நிறுவப்படவுள்ளது. http://www.puthinappalakai.net/2018/05/11/news/30814
-
- 0 replies
- 342 views
-
-
டொலருக்கு எதிரான சிறிலங்கா ரூபாவின் மதிப்பு சரிவு – 160 ரூபாவைத் தொடுகிறது அமெரிக்க டொலருக்கு எதிரான சிறிலங்கா ரூபாவின் பெறுமதி நேற்று முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வீழ்ச்சியடைந்தது. சிறிலங்கா மத்திய வங்கியின் நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில், நேற்று அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி, 159.26 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இது கடந்த செவ்வாய்க்கிழமை இருந்த நிலையை விட 30 சதம் குறைவாகும். இதற்கு முன்னதாக ஏப்ரல் 25ஆம் நாள், அமெரிக்க டொலருக்கு எதிரான சிறிலங்கா ரூபாவின் பெறுமதி, 159.04 ரூபாவாக காணப்பட்டது. அதற்குப் பின்னர், சற்று வலுவடைந்திருந்த சிறிலங்கா நாணயத்தின் பெறுமதி, தற்போது 159.26 ரூபாவாக சரிந்துள்ளது. http://w…
-
- 0 replies
- 298 views
-
-
இனப்பிரச்சினைக்கான தீர்வை இனியும் இழுத்தடிக்கக் கூடாது!! இனப்பிரச்சினைக்கான தீர்வை இனியும் இழுத்தடிக்கக் கூடாது!! புதிய அரசமைப்பை உருவாக்கும் பணிகள் தொடர்பில் அரசதலைவர் மைத்திரிபால சிறிசேனவின் கொள்கை விளக்க உரையில் ஒரு வசனமேனும் குறிப்பிடப்படாமை பெரும் ஏமாற் றத்தையளிக்கின்றது எனத் தெரிவித்த சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சரு மான ரவூப் ஹக்கீம், இனப்பிரச்சினைக்கான தீர்வை இனியும் இழுத…
-
- 0 replies
- 169 views
-
-
4 அமைச்சர்கள் மீதும்- மேலும் விசாரணை!! 4 அமைச்சர்கள் மீதும்- மேலும் விசாரணை!! பதவி நீக்கம் செய்யப்பட்ட வடக்கு மாகாண முன்னாள் அமைச்சர்கள் 4 பேர் மீதும் உள்ள குற்றச்சாட்டுக்களை சட்ட ரீதியாக விசாரித்து, தண்டனை வழங்குவதற்காக மேலும் ஒரு விசாரணை நடத்த வேண்டும். அதற்காக தலைமைச் செயலாளரிடம் பரிந்துரைக்கப்பட்டுள் ளது என்று முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். …
-
- 0 replies
- 247 views
-
-
அடுத்த கட்டம் என்ன ? தமிழர்களின் வாக்குகளால் ஆட்சி பீடமேறிய ‘நல்லாட்சி’ அரசின் தலைவர் மைத்திரிபால சிறிசேன, தனது கொள்கை விளக்க உரையில் தமிழர்களின் தலையில் மிளகாய் அரைத்து விட்டுப் போயிருக்கின்றார். சிறி லங்காத் தீவு சுதந்திரமடைந்தது முதல் சந்தித்து வரும் இனப் பிரச்சினைக்கு, தீர்வு காண்பதற்கு முக்கியத்துவம் கொடுக்காத – தொட்டும் பார்க்காத அரச தலைவரின் கொள்கை விளக்க உரை, முழுக்க முழுக்கச் சிங்கள தேசத்தின் நலன்சார்ந்து, பொருளாதார சிக்கல்களுக்கு விடை தேடும் வகையில் அமைந்திருந்தது. நீண்ட – நெடிய போராட்டத்தால் பல லட்சம் உயிர்களைப் பறிகொடுத்து, இன்னமும் சுதந்திரக் காற்றைச் சுவாசிக்க …
-
- 0 replies
- 428 views
-
-
காணி சுவீகரிப்பு தொடர்பாக கட்டுவனில் சுவரொட்டி!! காணி சுவீகரிப்பு தொடர்பாக கட்டுவனில் சுவரொட்டி!! பலாலி வானூர்தி நிலையத்துக்கான காணி சுவீகரிப்பு தொடர்பான தொடர்பான சுவரொட்டி கட்டுவன் சந்தியில் ஒட்டப்பட்டுள்ளது. பலாலி வானூர்தி நிலையத்துக்கான காணி சுவீகரிப்பு சட்டத்தின் பிரிவு 38(A) யின் கீழ் 07.08.1987 ஆம் திகதி பிரிசுரிக்கப்பட்ட 465/14 ஆம் இலக்க வர்த்தமான அறிவித்தலுக்கு அமைவாக பலாலி வானூர்தி நிலைய விஸ்தரிப்புக்க…
-
- 0 replies
- 565 views
-
-
வடக்கு, கிழக்கில் 522 ஏக்கர் காணிகளை விடுவிக்க இணக்கம்!! வடக்கு, கிழக்கில் 522 ஏக்கர் காணிகளை விடுவிக்க இணக்கம்!! வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காணப்படுகின்ற தனியார் காணிகளில் 522 ஏக்கர் காணியை விடுவிப்பதற்கு இலங்கை இராணுவம் இணக்கம் தெரிவித்துள்ளது எனத் தெரியவருகிறது. அதனடிப்படையில், போரால் பாதிக்கப்பட்ட தனியார் இடங்களை விடுவிக்கும் போது அவற்றில் அமைக்கப்பட்டுள்ள இராணுவ முகாம்கள் வேறு இடத்தில் மீள அமைக்கப…
-
- 0 replies
- 311 views
-
-
முள்ளிவாய்க்கால்: மே 18-ஐ துக்க தினமாக கடைபிடிக்க இலங்கை வட மாகாண சபை தீர்மானம் பகிர்க முள்ளிவாய்க்கால் சம்பவம் நடைபெற்ற 2009-ஆம் ஆண்டு மே-18ஆம் தேதியை தமிழ் இன அழிப்பு நாளாக இலங்கை வடக்கு மாகாண சபை பிரகடனம் செய்துள்ளது. வடமாகாண சபையின் 122ஆவது அமர்வு இன்று கைதடியில் உள்ள பேரவைச் செயலகத்தில் அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தலைமையில் நடைபெற்றது. இதன்போது மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் மே 18 ஆம் தேதியை இன அழிப்பு நாளாக பிரகடனம் செய்யும்படி சபையில் பிரேரணை ஒன்றை முன்மொழிந்தார். கடந்த 2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதி முள்ளிவாய்க்காலில் தமிழர்கள் மீது இலங்கை பாதுகாப்புப் ப…
-
- 0 replies
- 553 views
-
-
‘மே 18 துக்க நாளாக அனுஸ்டிக்கவும்’ -எஸ்.நிதர்ஷன் “இலங்கையில் இடம்பெற்ற மிகப் பெரும் தமிழின படுகொலை நாளான மே மாதம் 18 ஆம் திகதியை தேசிய துக்க நாளாக வடக்கு மாகாண சபை பிரகடனப்படுத்தியுள்ள நிலையில், அந்நாளை அனைத்து மக்களும் அமைதியாக உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்க வேண்டும்” என வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கோரிக்கை விடுத்துள்ளார். யாழ்; ஊடக அமையத்தில் இன்று (10) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், “மே மாதம் 18 ஆம் திகதியை வடக்கு மாகாண சபை தேசிய துக்க தினமாக பிரகடனப்படுத்தியுள்ளது. எனவே அன்றைய நாளில் அனைத்து தமிழ் மக்களும் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்க வேண்டும். இதற்க…
-
- 0 replies
- 265 views
-
-
கோதபாய ராஜபக்ஸவை இலங்கையில் கைது செய்ய முடியாது : குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கோதபாய ராஜபக்ஸவை இலங்கையில் வைத்து கைது செய்ய முடியாது என சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.ஏன் அவ்வாறு கூறுகின்றீர்கள் என ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு பதிலளித்த அமைச்சர், தனக்கும் அது தெரியவில்லை எனினும் கோதபாயவை இலங்கையில் கைது செய்ய முடியாது என தெரிவித்துள்ளார். மேலும் இதைப் பற்றி கேட்கும் போதுதான் தன்னை சிலர் திட்டுகின்றார்கள் என குறிப்பிட்டுள்ள அவர் கடந்த அமைச்சரவைக் காலத்திலும் கோதபாயவின் குற்றச் செயல்கள் தொடர்பில் கர…
-
- 0 replies
- 309 views
-