Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இரு அமைச்சர்கள் மாயம்.! ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன தலைமையில் இன்று காலை நடைபெற்ற அமைச்சரவை சந்திப்பில் அமைச்சர்கள் இருவர் கலந்துக்கொள்ளவில்லையெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சர்களான தயாசிறி ஜயசேகர மற்றும் சுசில் பிரேம்ஜயந்த் ஆகியோர் இந்த சந்திப்பில் கலந்துக்கொள்ளவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.virakesari.lk/article/30825

  2. ‘வெளிநாட்டு நீதிபதிகளால் தீர்வைப் பெறமுடியும்’ “வெளிநாட்டு நீதிபதிகளை உள்நாட்டுக்குக் கொண்டு வருவது தொடர்பில் சிலர் மாற்றுக் கருத்துகளை தெரிவிக்கின்றனர்” என்று தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன், “எமது நாட்டைச் சேர்ந்த பலர் வெளிநாடுகளில் நீதிபதிகளாக கடமையாற்றுகின்றனர். நாம் எதிர்மறையாகச் சிந்திக்கின்றபோது, நடுநிலைக் கருத்துகளைப் பெற வேண்டும்” என்றும் கோரிக்கை விடுத்தார். “ஒரு விடயத்தில் என்ன நன்மை உள்ளது என்பதன் அடிப்படையில் ஆராய்ந்தே நாம் செயற்பட வேண்டும். இதற்கமையவே, வெளிநாட்டு நீதிபதி விடயத்திலும் செயற்பட வேண்டும். எமது நாட்டில் தோற்றம் பெற்றுள்ள தோற்றம் பெற்று முடிந்த பல…

  3. ஜனாதிபதிக்கு எதிராக குற்றப் பிரேரணை கொண்டு வர திட்டமிடப்பட்டிருந்தது குளோபல் தமிழ்ச் செய்தியாளர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு எதிராக குற்றப் பிரேரணை ஒன்றை கொண்டு வருவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது என கொழும்பு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. ஏதேனும் ஓர் காரணத்த;ற்காக ஜனாதிபதி, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை பதவியிலிருந்து நீக்கியிருந்தால் குற்றப் பிரேரணை மூலம் ஜனாதிபதியை பதவி நீக்குவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி திட்டமிட்டிருந்தது என தெரிவிக்கப்படுகிறது. பிரதமர் ரணில் பதவி விலக்கப்பட்டிருந்தால் நீதிமன்றின் உதவியை நாடுவதற்கும் கட்சி தீர்மானித்திருந்தது என தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதிக்கு இந்த தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாகத…

  4. விலகும் முடிவில் இருந்து குத்துக்கரணம் அடித்தது சுதந்திரக் கட்சி கூட்டு அரசாங்கத்தில் இருந்து விலகும் முடிவை எடுத்த சிறிலங்கா சுதந்திரக் கட்சி இன்று தனது முடிவை மாற்றியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று நண்பகல் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுடன், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர்கள் நடத்திய பேச்சுக்களை அடுத்தே, இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்தச் சந்திப்புக்குப் பின்னர் கருத்து வெளியிட்ட அமைச்சர் எஸ்.பி.திசநாயக்க, அரசாங்கத்தில் சட்டரீதியாக பாரியதொரு மாற்றம் நிகழும் என்றும், ஆனால் சிறிலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கத்தில் இருந்து வெளியேறாது என்றும் தெரிவித்துள்ளார். பிரதமரை மாற்றுவது தொடர்பாக சட்டமா அதிபரின் ஆ…

  5. சு.க.எம்.பி.க்களை சபைக்கு செல்லாது தடுத்த மைத்திரி (நமது நிருபர்) பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் பாராளுமன்றம் நேற்று கூடிய போதிலும் காலையில் சபை அமர்வுகளில் சுதந்திரக்கட்சி எம்.பி.க்கள் பங்கேற்பதை ஜனாதிபதி தடுத்து நிறுத்தியுள்ளார். சுதந்திரக்கட்சியின் எம்.பி.க்களுக்கு ஜனாதிபதி செயலகத்தினால் அறிவுறுத்தல் விடுக்கப் பட்டதையடுத்தே இவர்கள் பாராளுமன்றத்திற்கு நேற்று காலை சமுக மளிக்கவில்லை. பாராளுமன்றத்திற்கு சுதந்திரக்கட்சி எம்.பி.க்களை செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தியதுடன் நண்பகல் 12 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியை சந்திக்க வருமாறு செயலகத்திலிருந்து அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளரும் அமைச்…

  6. யாழ். நீதிமன்றிலிருந்து தப்பிய தனது கணவனான கைதியை மோட்டார் சைக்கிளில் கூட்டிச் சென்ற மனைவி யாழ்ப்பாணம் நீதிமன்றில் சிறைச்சாலை உத்தியோகத்தர்களின் பிடியிலிருந்து தப்பித்த பல குற்றச்செயல்களில் ஈடுபட்ட சந்தேக நபர் சுமார் 6 மாதங்களின் பின்னர் வவுனியாவில் வைத்துக் கைது செய்யப்பட்டார்.சந்தேகநபர் சிறைச்சாலை உத்தியோகத்தர்களால் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார். சந்தேகநபர் சிறைச்சாலை காவலிலிருந்து தப்பித்த குற்றத்துக்கான தண்டைத் தீர்ப்பு நாளைமறுதினம் புதன்கிழமை வழங்கப்படும் எனக் குறிப்பிட்ட நீதிவான், அன்றுவரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவு, ஊர்காவற்றுறை உள்ளிட்ட பல பகுதிகளில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவ…

  7. பிர­தமர் பத­வியை தக்­க­வைத்தார் ரணில் நல்­லாட்சி தேசிய அர­சாங்­கத்தில் நெருக்­க­டிகள் ஏற்­பட்­டுள்ள போதிலும் சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்சி தனித்து அர­சாங்­கத்தை அமைக்­கப்­போ­வ­தாக கூறி­வந்த நிலை­யிலும் ஐக்­கிய தேசி­யக்­கட்­சியின் தலை­வரும் பிர­த­ம­ரு­மான ரணில் விக்­ர­ம­சிங்க தனது பிர­தமர் பத­வியை தக்­க­வைத்­துக்­கொண்டார். பிர­தமர் பத­வியில் ரணில் விக்­கி­ர­ம­சிங்க பத­வியில் நீடிப்­ப­தற்கு ஐக்­கிய தேசி­யக்­கட்­சி­யி­னதும் ஐக்­கிய தேசிய முன்­ன­ணி­யி­னதும் உறுப்­பி­னர்கள் முழு­மை­யான ஆத­ரவை வெளி­யிட்­டி­ருக்­கின்­றனர். தனித்து ஆட்­சி­ய­மைப்­ப­தற்கு சுதந்­திரக் கட்சி கடு­மை­யாக முயற்­சித்­த­போ­திலும் அந்த மு…

  8. இனவாதத்தை தூண்டும் சுமந்திரன்! நாமல் கூட்டு எதிர்க்கட்சி அரசாங்கத்திற்கு முட்டுக்கொடுக்காது என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். முட்டுக்கொடுத்து அரசாங்கத்தை முன்னெடுத்துச் செல்ல முடியாது எனவும் மக்களின் ஆதரவு யாரிடம் உள்ளது என்பதை அறிய வேண்டுமாயின் நாடாளுமன்றத்தை கலைக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். தேர்தல் இலஞ்சம் மற்றும் பல்வேறு தடைகளுக்கு மத்தியில் தாமரை மொட்டுக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றி. ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அமைச்சர் குடங்களை கொடுக்கும் போது, ஐக்கிய தேசியக்கட்சியின் அமைச்சர் உரளை கொடுத்தார். இலங்கையின் தேர்தல் வரலாற்றில் தேர்தல் சட்டம் அதிகளவில் இந்த தேர்தலிலேயே ம…

  9. நீதிபதி இளஞ்செழியனின் மற்றுமொரு அதிரடி தீர்ப்பு.! யாழ்ப்­பா­ணத்தில் கடந்த 2012ஆம் ஆண்டு ஒன்­று­விட்ட முறை­யான சகோ­தரி ஒரு­வரை இரண்டு முறை பாலியல் வன்­பு­ணர்வு செய்து அப் பெண்ணை தாய்மைய­டையச் செய்த சகோ­த­ர­னுக்கு 10 ஆண்­டுகள் கடூ­ழிய சிறைத்தண்­டனை விதித்து யாழ்.மேல் நீதி­மன்ற நீதி­பதி மாணிக்­க­வா­சகர் இளஞ்­செ­ழியன் தீர்ப்­ப­ளித்­துள்ளார். குறித்த வழக்கில் எதி­ரி­யாக பாதிக்­கப்­பட்ட பெண்ணின் ஒன்­று­விட்ட சகோ­த­ர­னது பெயர் குறிப்­பி­டப்­பட்டு சட்­டமா அதி­பரால் அந்நப­ருக்கு எதி­ராக யாழ்.மேல் நீதி­மன்றில் வழக்கு தாக்கல் செய்­யப்­பட்­டி­ருந்­தது. இந் நிலையில் அவ் வழக்கு விசா­ர­ணை­களை அரச சட்­ட­வாதி நாக­ரட்ணம் நிஷாந் நெறிப்­ப­டுத்­தி­யி­ருந்தார். …

  10. வல்வெட்டித்துறையில் ஆட்சியமைப்பது குறித்து சுயேட்சையுடன் கூட்டமைப்பு பேச்சுகளில் அண்மையில் இடம்பெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தலில், வல்வெட்டித்துறை நகர சபை, காரைநகர் பிரதேச சபை, நெடுந்தீவு பிரதேச சபை, வலிகாமம் கிழக்கு பிரதேச சபை உள்ளிட்ட உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைப்பது குறித்து சுயேட்சைக் குழுக்களுடன் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பேச்சுகளை நடத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. வல்வெட்டித்துறை நகர சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏழு ஆசனங்களைப் பெற்றுள்ள நிலையில், பெரும்பான்மையைப் பெற்று ஆட்சியமைப்பதற்கு மேலும் இரண்டு ஆசனங்கள் தேவையாகவுள்ளன. இந்நிலையில், வல்வெட்டித்துறை நகர சபையில் ந…

  11. வடக்கில் ‘தொங்கு’ சபைகளில் ஆட்சியைப் பிடிக்க தமிழ்க் கட்சிகள் போட்டி அண்மையில் நடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வடக்கில் பூநகரி மற்றும் ஊர்காவற்றுறை தவிர்ந்த ஏனைய எந்த உள்ளூராட்சி சபையிலும், பெரும்பான்மை பலம் எந்தக் கட்சிக்கும் கிடைக்காத நிலையில், இங்கு ஆட்சியமைப்பது தொடர்பாக தீவிர முயற்சிகளில் அரசியல் கட்சிகளும், சுயேட்சைக் குழுக்களும் ஈடுபட்டுள்ளன. பெரும்பாலான உள்ளூராட்சி சபைகளில் எந்தக் கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை பலம் இல்லாத நிலையில், அனைத்து கட்சிகளும் இணைந்து செயற்பட வேண்டும் என்ற கருத்து வலியுறுத்தப்பட்ட அதேவேளை, தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்றும் சிவில் சமூகத்தினால் எடுத்துக் கூறப்பட்டது. ஆனாலும், ஆரம்பத்தில்…

  12. ஈரானிய நாசகாரிகள் கொழும்பை விட்டுப் புறப்பட்டன நான்கு நாட்களாக கொழும்புத் துறைமுகத்தில் தரித்து நின்ற ஈரானிய கடற்படையின் நாசகாரிப் போர்க்கப்பல்கள் அணி நேற்று புறப்பட்டுச் சென்றது.. ஈரானிய கடற்படையின் 50 ஆவது கப்பல்அணியைச் சேர்ந்த ரொன்ப் என்ற விநியோக மற்றும் போர்க்கப்பல், நாசகாரி கப்பல்களான நக்டி மற்றும் பயன்டோர் ஆகியன, நான்கு நாட்கள் நல்லெண்ணப் பயணமாக கடந்தவாரம் கொழும்பு வந்தன. இந்தியப் பெருங்கடல் மற்றும் அனைத்துலக கடலில் தமது பயணத்தின் ஒரு அங்கமாகவே இந்தப் போர்க்கப்பல்கள் அணி கொழும்பு வந்தது. இதன்போது சிறிலங்கா கடற்படையினர் வரவேற்பு அளித்ததுடன், ஈரானிய கடற்படையினருடன் இணைந்து பல்வேறு நிகழ்வுகளிலும் பங்கேற்றனர். நேற்று இந்…

  13. சிறிலங்கா குறித்து ஜெனிவாவில் இரண்டு முக்கிய விவாதங்கள் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் 37 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் 26ஆம் நாள் ஆரம்பமாகவுள்ளது. இந்தக் கூட்டத்தொடரில், மார்ச் 16ஆம் நாளும், மார்ச் 21ஆம் நாளும் சிறிலங்கா தொடர்பான இரண்டு முக்கிய விவாதங்கள் இடம்பெறவுள்ளன. பூகோள கால மீளாய்வு கூட்டத்தொடரில் முன்வைக்கப்பட்ட அறிக்கைகளின் அடிப்படையில் சிறிலங்கா, பெனின், பாகிஸ்தான், சாம்பியா, ஜப்பான், உக்ரேன் ஆகிய நாடுகள் தொடர்பாக தயாரிக்கப்பட்ட அறிக்கைகள் மீதே மார்ச் 16ஆம் நாள் விவாதம் நடத்தப்படவுள்ளது. அதேவேளை சிறிலங்கா தொடர்பாக, ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் தொடர்பான ஐ.நா மனித உ…

  14. உச்சநீதிமன்றத்தின் விளக்கம் கிடைக்கும் வரை கூட்டு அரசு தொடரும் – திலங்க சுமதிபால 19 ஆவது திருத்தச்சட்டத்துக்கு அமைய, பிரதமரைப் பதவி நீக்கம் செய்வதற்கு தனக்குள்ள அதிகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தின் விளக்கத்தை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கோரியுள்ளதாக, பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்றத்தில் இந்த வியாக்கியானம் கிடைக்கும் வரை, பொறுத்திருக்கும்படி, சிறிலங்கா சுதந்திரக் கட்சியை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கேட்டுக் கொண்டுள்ளார் என்றும் அவர் நேற்று நாடாளுமன்றத்தில் சிறப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டு உரையாற்றிய போது குறிப்பிட்டார். “2005 செப்ரெம்பர் 03ஆம் நாள் உருவாக்கப்பட்ட கூட்டு அரசாங்கத்தை மீளாய்வு செய்ய வே…

  15. ரணிலைப் பாதுகாக்கிறார் சிறிலங்கா அதிபர் – மகிந்த காட்டம் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை வெளியேற்ற விரும்பவில்லை, அவருக்குப் பாதுகாப்பு அளித்து வருகிறார் என்று சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். நேற்று நாடாளுமன்றத்தை விட்டு வெளியேறிய அவரிடம் செய்தியாளர்கள் பிரதமரைப் பதவி நீக்கம் செய்வதற்கான சட்டபூர்வ தன்மை குறித்து சட்டமா அதிபரின் ஆலோசனையை சிறிலங்கா அதிபர் கோரியுள்ளது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், “எதற்கு சட்டமா அதிபரின் ஆலோசனையைக் கோர வேண்டும், நிறைவேற்று அதிகாரம் அதிபருக்கு இருப்பதை அவர் மறந்து விடக் கூடாது.” என்று குறிப்பிட்டார். அத்துடன், பிரதமரை அதிபர் …

  16. வாக்குப் பதிவும் மக்களின் மனப்பதிவும்!! வாக்குப் பதிவும் மக்களின் மனப்பதிவும்!! கடந்த 10.02.2018 அன்று நடை­பெற்ற உள்­ளூ­ராட்சி சபைத் தேர்­தல் முடி­வு­கள் வெளி­வந்­துள்ள நிலை­யில் எமது தமி­ழர்­க­ளின் சார்­பா­கப் போட்­டி­யிட்ட கட்­சி­கள் இனி­வ­ரும் காலங்­க­ளில் என்ன செய்­யப் போகின்­றன? ஒவ்­வொரு தமி­ழ­ரும் தமது வாக்­க­ளிப்­பின் மூலம் முடிவை வழங்­கி­விட்­டுள்­ள­னர். வழ­மை­போல் பல­வித வாக்­கு­று­தி­களை மேடை­க­ளில் முழங்­கிய கட்­சிக…

  17. கூட்டு அரசு உடைந்தால் உதவிகள் நிறுத்தப்படும்!! கூட்டு அரசு உடைந்தால் உதவிகள் நிறுத்தப்படும்!! மேற்குலக இராஜதந்திரிகள் எச்சரிக்கை மைத்­திரி – ரணில் கூட்டு அரசு 2020ஆம் ஆண்டு தொடர வேண்­டும். மகிந்த ஆத­ர­வு­டன் புதிய அரசு அமை­யு­மா­னால் இலங்­கைக்­கான அனைத்து உத­வி­க­ளும் நிறுத்­தப்­ப­டும். இவ்­வாறு கொழும்­பில் உள்ள மேற்­கு­லக நாடு­க­ளின் இரா­ஜ­தந்­தி­ரி­கள் எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ள­னர். நல்­லாட்சி…

  18. கிழக்கில் தமிழ் கட்சிகளுடன் இணையத் தயார்: கருணா வடக்கு, கிழக்கு தமிழர் தாயக கோட்பாட்டை ஏற்றுக் கொண்டு கிழக்கில் உள்ள தமிழ் கட்சிகளுடன் இணைந்து செயல்பட தயார் என தமிழர் ஐக்கிய சுதந்திர கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதி அமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா)தெரிவித்துள்ளார். கிழக்கு தமிழர் ஒன்றியத்தின் உறுப்பினர்களுக்கும், தமிழர் ஐக்கிய சுதந்திர கட்சியின் தலைவர் விநாயகமூர்த்தி முரளிதரனுக்கும் (கருணா) இடையில் -------தீவில் நடைபெற்ற சந்திப்பு தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில், கிழக்கு தமிழர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்ட உறுப்பினர்கள் என்னை வந்…

  19. பெண் பிர­தி­நி­தித்­து­வம் தொடர்­பில் குழப்­பங்­கள்!! உள்­ளூ­ராட்சி சபை­க­ளின் பெண் பிர­தி­நி­தித்­து­வம் தொடர்­பில் குழப்­பம் நில­வு­வ­தால், தேர்­த­லில் வெற்றி பெற்­ற­வர்­க­ளது பெயர்­களை அர­சி­த­ழில் வெளி­யி­டு­வ­தில் தாம­தம் ஏற்­ப­டும் என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. தேர்­தல்­கள் ஆணை­யா­ளர் தலை­மை­யில், ஒவ்­வொரு மாவட்­டத்­தி­னது உத­வித் தேர்­தல்­கள் ஆணை­யா­ளர்­க­ளு­டன் கொழும்­பி­லுள்ள தேர்­தல்­கள் திணைக்­க­ளத்­தில் நேற்று முன்­தி­னம் கலந்­து­ரை­யா­டல் இடம்­பெற்­றது. உள்­ளூ­ராட்­சித் தேர்­தல் சட்­டத்­தில், சபை­க­ளில் 25 சத­வீ­தம் பெண் பிர­தி­நி­தித்­து­வம் கட்­டா­யப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. வெளி­யா­கி­யுள்ள தேர்­தல் ம…

  20. அமைச்சை தந்து பாருங்கள் 6 மாதத்தினுள் பலன் தெரியும் அமைச்சை தந்து பாருங்கள் 6 மாதத்தினுள் பலன் தெரியும் சட்டம் ஒழுங்கு அமைச்சை என்னிடம் ஒப்படைத்தால் 6 மாதத்துக்குள் குற்ற வாளிகளைத் தண்டித்து உரிய பெறுபேற்றை நாட்டிற்கு காண்பிப்பேன் என்று பிராந்திய அபிவிருத்தி அமைச்சர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா தெரிவித்தார். பிட்ட கோட்­டே­யில் அமைந்­துள்ள ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யின் தலை­மை­ய­கத்­தில் நேற்று நடை­பெற்ற கூட்­டத் தின் பின்­னர் செய்­தி­யா­ளர்­க­ளுக்கு கருத்­துத் …

  21. கோத்தபாய முகாமிற்காக முள்ளிவாய்க்கால் கிழக்கை சுவீகரிக்க 22ஆம் திகதி மீண்டும் காணி அளவீடு- இதுதான் நல்லாட்சி அரசின் நடவடிக்கை!! குளோபல் தமிழ் விசேட செய்தியாளர் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள வட்டுவாகல் பகுதியில் கோத்தபாய கடற்படை முகாம் என்ற பெயரில் இலங்கை கடற்படை தளம் அமைத்துள்ள பகுதி உள்ளிட்ட 617 ஏக்கர் காணியை சுவீகரிக்கும் நோக்கில் மீண்டும் நில அளவை இடம்பெறவுள்ளதாக பிரதேச நில அளவைத் திணைக்களம் அறிவித்துள்ளது. இதற்கான அறிவித்தல் முள்ளிவாய்க்கால் கிழக்கில் ஒட்டப்பட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சின் செயலாளரது விண்ணப்பத்திற்கு இண…

  22. தலைமன்னார் கிராம மீனவர்கள் பொலிஸ் நிலையம் முன் ஆர்ப்பாட்டம் இலங்கை கடல்பரப்பில் உள்ள 'தீடை' பகுதியில் மீன் பிடியில் ஈடுபட்டுவரும் தலைமன்னார் கிராம மீனவர்களுக்கு கடற்படையினர் தொடர்ந்தும் இடையூரை ஏற்படுத்தி வந்த நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு தீடை பகுதிக்கு மீன் பிடிக்கச் சென்ற ஒரு தொகுதி மீனவர்களை கடற்படையினர் திருப்பி அனுப்பியதை கண்டித்து தலைமன்னார் கிராமத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மீனவர்கள் இன்று திங்கட்கிழமை மதியம் தலைமைன்னார் பொலிஸ் நிலையத்திற்கு முன் ஒன்று கூடி தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில், தலைமன்னார் கிராம மீனவர்கள் பரம்பரை பரம்ப…

  23. சர்வதேச மேற்பார்வை நிறுத்தப்படவேண்டும் என்பதா எதிர்பார்ப்பு? – சுமந்திரன் ஐ.நா. தீர்மானத்தினூடாக இலங்கை மீது பாரப்படுத்தப்பட்டிருக்கும் சர்வதேச மேற்பார்வையை முற்றுமுழுதாக இல்லாமல் செய்ய வேண்டும் என்பதா கஜேந்திரகுமார் போன்றவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். கடந்த வாரம் ஜெனீவாவில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தேர்தல் முடிவுகளால் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பங்களைக் காரணங்காட்டி இலங்கை அரசாங்கம் ஜெனீவாத் தீர்மானத்தை நிறைவேற்றுவதில் இருந்து பின்வாங்குவதற்கு அனைத்துலக சமூகம் இடமளிக்கக் கூடாதெனவும், ஜெனீவா வாக்குறுதிகளை நிறைவேற்…

  24. மஹிந்தவும் ரணிலும் பாராளுமன்றில் என்ன செய்தனர் ? (எம்.எம்.மின்ஹாஜ், ஆர்.யசி) முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் சிரித்துக் கொண்டும் சைகை மூலமாகவும் பேசிக்கொண்டு இன்று சபாபீடத்தில் கதைத்துக் கொண்டனர். பாராளுமன்றம் இன்று திங்கட்கிழமை காலை 10 மணிக்கு சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடியது. இதன்போது பாராளுமன்றத்தின் திருத்தப்பட்ட வரைவு நிலையியற் கட்டளை மீதான விவாதம் நடந்து கொண்டிருக்கும் போது முன்னாள் ஜனாதிபதியும் பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ சபாபீடத்திற்குள் நுழைந்தார். இதன்போது கூட்டு எதிர்க் கட்சியினர…

  25. கூட்டு அரசைத் தொடர சிறிலங்கா அதிபர் அனுமதி – “விரும்பாதவர்களை வெளியேறலாம்” மறுசீரமைப்புகளை மேற்கொண்டு தற்போதைய கூட்டு அரசாங்கத்தைத் தொடர்வதற்கு அனுமதிக்கவுள்ளதாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று நண்பகல் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்றக் குழுவைச் சந்தித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இந்தக் கூட்டத்தில் உரையாற்றிய சிறிலங்கா அதிபர், மைத்திரிபால சிறிசேன, தற்போதைய ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தில் குறைபாடுகள் இருந்தாலும், மகிந்த ராஜபக்சவின் துணையுடன் ஆட்சியமைக்கப்படுவதை தாம் விரும்பவில்லை என்று தெரிவித்துள்ளார். அத்துடன் தற்போதைய கூட்டு அரசாங்கம் இன்னும் சில மாதங்களுக்குத் தொடரும், இதில் இதனை…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.