ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143314 topics in this forum
-
அரசியல் ஸ்திரத்தன்மையற்ற நிலைமை தொடர முடியாது உள்ளூராட்சி தேர்தல் முடிவுகளை அடுத்து தேசிய அரசாங்கத்தில் எழுந்துள்ள குழப்பமான நிலைமையானது தொடர்ந்து வருகின்றது. இதனால் நாட்டின் அரசியல் ஸ்திரத்தன்மையற்ற நிலைமையை அடைந்துள்ளது. இத்தகைய நிலைமையை நீடிப்பதற்கு அனுமதிக்க முடியாது. அரசியல் ஸ்திரத்தன்மை நீடிக்குமானால் அது நாட்டின் பொருளாதாரம் உட்பட சகல விடயங்களையும் பாதிப்பதாகவே அமைந்துவிடும். உள்ளூராட்சி தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தலைமையிலான பொது எதிரணியினர் பெரும் வெற்றிபெற்றதையடுத்து தேசிய அரசாங்கத்திற்குள் பெரும் நெருக்கடியான நிலைமை ஏற்பட்டது. தேர்தலில் அரசாங்கத்…
-
- 0 replies
- 312 views
-
-
இரட்டிப்பு இனவாதம் உள்ளூராட்சித் தேர்தலைத் தொடர்ந்து இலங்கை மற்றுமொரு தேர்தலை எதிர்கொள்ளத் தயாராகியுள்ளது. எதிர்வரும் செப்ரெம்பர் மாதத்தில் மாகாண சபைகளுக்கான தேர்தல் நடத்தப்படுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன என்று தெரிவித்துள்ளார் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய. முடிவடைந்துள்ள உள்ளூராட்சித் தேர்தலில் ஒவ்வொரு கட்சியும் தத்தமது பலவீனங்களை நேர்சீர் செய்து இந்தத் தேர் தலை எதிர்கொள்ளவுள்ளன. தெற்கைப் பொறுத்தவரையில் ஆரோக்கியமற்ற இனவாதம் அடுத்த சில மாதங்கள் இமாலய அளவில் ஆதிக்கம் செலுத்தவும், அதனூடாக தேர்தல் வெற்றியைத் தீர்மான…
-
- 0 replies
- 304 views
-
-
மட்டக்களப்பில் தனித்து ஆட்சியமைக்க முடியாத நிலையில் 11 மன்றங்கள் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 11 உள்ளூராட்சி மன்றங்களில் எந்தக் கட்சியும் தனித்து ஆட்சியமைக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. காத்தான்குடி நகர சபையில் மாத்திரம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து 10 உறுப்பினர்கள் தெரிவாகியுள்ளதால் அக் கட்சி காத்தான்குடி நகர சபையில் தனித்து ஆட்சியமைக்கும் நிலையை பெற்றுள்ளது. எனினும் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 12 மன்றங்களில் காத்தான்குடி தவிர்ந்த மட்டக்களப்பு மாநகரம், ஏறாவூர் நகர சபை உள்ளிட்ட 9 பிரதேச சபைகளிலும் எந்தவொரு கட்சியும் தனித்து ஆட்சியமைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாநகர சபையில் தமிழரசுக் கட்சி 17 ஆசனங்கள…
-
- 4 replies
- 388 views
-
-
’மேயராக மணிவண்ணன் நிறுத்தப்படுவார்’ "யாழ். மாநகர சபையில் ஆட்சியமைக்கும்போது எமது கட்சி முதலன்மை வேட்பாளர் வி. மணிவண்ணன் மேயராக நிறுத்தப்படுவார்" என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அலுவலகத்தில் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. இச்சந்திப்பில் கலந்துகொண்ட ஊடகவியலாளர்களால் யாழ். மாநகர சபை உள்ளிட்ட ஏனைய சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பாக கேள்வி எழுப்பினர் இதற்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், "யாழ் மாநகர சபையில் ஆட்சி அமைக்கும் போது இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்படும் பட்ச…
-
- 0 replies
- 460 views
-
-
திருடர்களுடன் சேர்ந்து ஆட்சியமைத்தால் மக்கள் மீண்டும் பாடம்புகட்டுவர் ; சந்திரிகா Weiterempfehlen அரசாங்கம் திருடர்களுடன் இணைந்து ஆட்சியமைத்தால் மக்கள் மீண்டும் பாடம்புகட்டுவரென முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார். கட்டுநாயக்கவில் அமைந்துள்ள விஜயகுமாரதுங்கவின் நினைவுத் தூபிக்கு அஞ்சலிசெலுத்திவிட்டு ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கையிலேயே சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மேற்கண்டவாறு தெரிவித்தார். முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவிடம் ஊடகவியலாளர்கள் உங்களது பேரனார் அரசியலில் ஈடுபடுவாரா என கேட்டதற்கு, அப்பா, அம்மா, சித்தி, சித்தப்பா என அரசியலுக்குள் நுழைய வேண்டிய அவசியமில்லை. மக்கள் எவ…
-
- 4 replies
- 592 views
-
-
“இறுதி முடிவு இருப்பது மைத்திரியிடம் – அடுத்த முடிவு இருப்பது என்னிடம் முதலில் MY3 முடிவு எடுக்கட்டும் ” ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி புதிய அரசாங்கம் ஒன்றை அமைத்தால் அதற்கான முழு ஒத்துழைப்பையும் வழங்குவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார். நாராஹேன்பிட்ட, அபயராம விசாரையில் இடம்பெற்ற மத நிகழ்வில் கலந்து கொண்டிருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம், இந்த அரசாங்கம் தொடர்ந்து இருக்கும் என ஐக்கிய தேசிய கட்சி கூறுவது தொடர்பாக ஊடகவியலாளர் ஒருவர் அவரிடம் வினவிய போது, “ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி இரண்டு தரப்பினரும் இதனையே கூறுகின்றனர். எனினும் இறுதி முடிவு இருப்பது ஜனாதிபதியின் கையில். அடுத்த மு…
-
- 1 reply
- 270 views
-
-
அண்ணன் ஆதரவு, தம்பி எதிர்ப்பு! நாட்டின் தற்போதைய அரசியல் சூழலில் பொதுத் தேர்தல் நடத்துவதே பொருத்தமானது என முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். மீயுயர் நீதிமன்றுக்கு இன்று (16) வருகை தந்திருந்தபோது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். நாட்டுக்காகப் போரிடுவதே தமது கட்சியின் வழக்கமாக இருப்பதாகவும் தொடர்ந்து போரிடத் தயார் என்றும் கூறிய அவர், இந்தச் சூழலில் பொதுத் தேர்தலை நடத்துவதே நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் நன்மை பயக்கும் என்றும் கூறியுள்ளார். முன்னதாக, நாட்டின் நலனை முன்னிட்டு, எதிர்த் தரப்பில் அமர்ந்து அரசுக்கு ஆதரவளிக்கப் போவதாக மஹிந்த ராஜப…
-
- 0 replies
- 444 views
-
-
‘கூட்டமைப்பின் உயர்மட்டங்கள் என்னுடன் பேசியது உண்மைதான்’ “தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் உயர்மட்டங்கள் என்னுடன் பேசியது உண்மைதான்” என சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் அமைப்பாளர் முருகேசு சந்திரகுமார் தெரிவித்துள்ளார். “தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக நான் இருக்கும் நிலையில், என்னைமீறி கட்சித் தலைமை சந்திரகுமாருடன் பேசியதா, அவ்வாறு ஒருபோதும் இல்லை. தமிழ் மக்களைக் காட்டிக்கொடுத்துப் பிழைத்தவர்களை பங்காளிகளாக இணைக்கும் எண்ணம் தமிழ்த்தேசியக்கூட்டமைப்புக்கு இல்லை” என நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக சந்திரகுமாருடன் தொடர்புகொண்டு வினவியப…
-
- 0 replies
- 501 views
-
-
கூட்டு எதிரணி உறுப்பினர்கள் ஜனாதிபதி மைத்திரியிடம் விஜயம் கூட்டு எதிரணியின் உறுப்பினர்கள் சிலர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் பேச்சு நடத்துவதற்காக சென்றுள்ளனர். குறித்த கூட்டு எதிரணியின் உறுப்பினர்கள் சிலர் ஜனாதிபதியின் வாசஸ்தலத்திற்கு தற்போது விஜயம் செய்துள்ளனர். இந்நிலையில், சுசில் பிரேம்ஜயந்த தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உறுப்பினர்கள் சிலர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தனி அரசாங்கம் அமைப்பது தொடர்பில் பேச்சுவார்த்தை இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/30673
-
- 1 reply
- 259 views
-
-
சி.ஐ.டி.யில் ஆஜராவதை தவிர்த்த அர்ஜுன மகேந்திரன் நேற்றுவரை நாடு திரும்பவில்லை (எம்.எப்.எம்.பஸீர்) இலங்கை மத்திய வங்கியின் பிணைமுறி விநியோகத்தின் போது மோசடி செய்தமை, அரசுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியமை தொடர் பில் சந்தேக நபராக பெயரிடப்பட்ட, முன் னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன மகேந்திரனுக்கு நேற்று குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையிலும், அவர் ஆஜராகவில்லை. சிங்கப்பூரில் அர்ஜுன மகேந்திரன் இருப்பதாக நம்பப்படும் நிலையில் அவர் நேற்றுவரை இலங்கைக்கு திரும்பவில்லை என்பதுடன் விசாரணைகளுக்கும் சமூகமளிக்கவில்லை என விசாரணையாளர்கள் தரப்பு தகவல்…
-
- 0 replies
- 291 views
-
-
மஹிந்த வீட்டில் மந்திராலோசனை நடத்தும் மைத்திரி! உடன்படிக்கை இன்று கைச்சாத்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வீட்டில் சமகால ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மந்திராலோசனை நடத்தி வருவதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. இதன்போது கூட்டு எதிர்க்கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு இடையில் இன்று ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் வீட்டில் இன்று காலை ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளது. இதேவேளை, அரசாங்கத்தை கலைத்து நாடாளுமன்ற தேர்தலுக்கு செல்லும் வரை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அரசாங்கம் ஒன்றை உருவாக்குவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என நாடாளுமன்ற…
-
- 2 replies
- 343 views
-
-
மஹிந்த - சுசில் முக்கிய சந்திப்பு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரும் அமைச்சருமான சுசில் பிரேம ஜெயந்தவுக்கும் இடையில் தற்போது முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்று வருகின்றது. இச் சந்திப்பு தற்போது கொழும்பிலுள்ள மஹிந்த ராஜபக்ஷவின் வாசஸ்தலத்தில் இடம்பெற்று வருகின்றது. தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் குழுப்ப நிலையில் இந்த முக்கிய சந்திப்பு இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/30671
-
- 0 replies
- 190 views
-
-
தாதி மீது கூட்டு பலாத்காரம் : வீடியோ எடுத்த இராணுவ குழு கைது, மூவரைத் தேடி வலை வீச்சு கொழும்பின் முன்னணி தனியார் வைத்தியசாலையில் தாதியாக பணியாற்றும் யுவதியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ படம் எடுத்தமை தொடர்பில் இராணுவத்தின் கெப்டன் தரத்தை உடைய வைத்தியர் ஒருவர், இரு லான்ஸ் கோப்ரல் தர சாரதிகள் உள்ளிட்ட மூவரை நாரஹேன்பிட்டி பொலிஸார் கைது செய்துள்ளனர். தாதிக்கு மரண அச்சுறுத்தல் விடுத்து, மது, கஞ்சா சுருட்டு போன்றவற்றை உபயோகிக்கச் செய்து அவரை இவ்வாறு பாலியல் பலாத்காரத்துக்கு பல சந்தர்ப்பங்களில் உட்படுத்தியுள்ளதாகவும், இந்த சம்பவம் தொடர்பில் பொறியியலாளர் எனக் கூறப்படும…
-
- 1 reply
- 403 views
-
-
பெரியவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் திருடர்களை பிடிக்காமையே மக்களின் கோபத்துக்கு காரணம் என்கிறார் ராஜித (ரொபட் அன்டனி) தேசிய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள், உள்ளக ரீதியாகவே ஒருவருக்கொருவர் கடுமையாக விமர்சித்துக்கொண்டமையின் காரணமாகவே எமக்கு தோல்வி ஏற்பட்டது. அதுமட்டுமன்றி திருடர்களை பிடிப்பதாக கூறிவிட்டு நல்லாட்சிக்கு வந்த அரசாங்கம் அவ்வாறு செய்யாத தன் காரணமாக மக்கள் சிவப்பு சமிக்ஞையை எங்களுக்கு வழங்கியிருக்கிறார்கள். அதனை நாங்கள் புரிந்து எதிர்வரும் காலங்களில் ஆட்சியை முன்னெடுப்போம் என்று அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரட்ன அறிவ…
-
- 0 replies
- 340 views
-
-
பாராளுமன்ற நிலவரம் http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-02-16#page-1
-
- 0 replies
- 276 views
-
-
அம்பாறையில் 98,914 பேர் வாக்களிக்கவில்லை.! அம்பாறை மாவட்டத்தில் நடைபெற்றுமுடிந்த உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் 98ஆயிரத்து 914பேர் வாக்களிக்கவில்லையென தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மாவட்டத்தில் வாக்களிக்கத்தகுதியான 5லட்சத்து 673வாக்காளர்களுள் 4லட்சத்து ஆயிரத்து 759 வாக்காளர்களே வாக்களித்துள்ளனர். அதன்படி 98914 பேர் வாக்களிக்கவில்லை. அதேவேளை நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தின் 20 சபைகளுக்குமான தேர்தலில் வாக்களித்தவர்களில் 4 ஆயிரத்து 105 வாக்குகள் நிராகரிக்கப்பட்டிருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. …
-
- 0 replies
- 234 views
-
-
வவுனியா உள்ளுராட்சி மன்றங்களின் தவிசாளா்கள் பெயா் விபரங்கள்! வவுனியா மாவட்டத்தில் உள்ள 5 உள்ளுராட்சி மன்றங்களில் தெற்கு சிங்கள பிரதேச சபை தவிர்ந்த நான்கு உள்ளுராட்சி மன்றங்களிலும் வெற்றியீட்டிய தமிழ் தேசியக்கூட்டமைப்பு அதன் தலைவர் மற்றும் துணை தவிசாளர்களை நியமித்துள்ளது. தமிழரசுக்கட்சியின் வவுனியா அலுவலகமான தாயகத்தில் இடம்பெற்ற கட்சி தலைவர்களுக்கான மற்றும் வெற்றியீட்டிய தமிழ் தேசியக்கூட்டமைப்பின் உறுப்பினர்களுடனான கலந்துரையாடலின் பின்னரே இம் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழரசுக்கட்சியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவினால் இப் பெயர் விபரங்கள் ஊடகங்களுககு அறிவிக்கப்படும் போது புளொட் அமைப்பின…
-
- 0 replies
- 173 views
-
-
முல்லைத்தீவு மாவட்ட உள்ளுராட்சி மன்றங்களின் தவிசாளா்கள்கள் விபரங்கள்! தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அதிக ஆசனங்களைப் பெற்றுக்கொண்ட சபைகளிற்கான தவிசாளர்கள் மற்றும் உப தவிசாளர்களிற்கான உறுப்பினர்களின் பெயர்கள் நேற்றைய தினம் கட்சித் தலைவரின் முன்பாக முன்மொழியப்பட்டது. வடக்கு மாகாணத்தின் முல்லைத்தீவு , வவுனியா , மன்னார் ஆகிய மாவட்டங்களில் கூட்டமைப்பு அதிகப்படியான ஆசனங்களைப் பெற்றுக்கொண்ட சபைகளின் தவிசாளர் மற்றும் உபதவிசாளரை பிரேரிக்கும் வகையில் நேற்று கட்சியின் தலைவர் மாவை சேனாதிராயா தலமையில் விசேட சந்திப்புக்கள் இடம்பெற்றது. இந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைத்துரைப்பற்று பிரதேச சபையின் தவிசாளராக முதல்…
-
- 0 replies
- 169 views
-
-
இராணுவ வாகனம் மோதியதில் நால்வர் படுகாயம் வவுனியா ஓமந்தையில் வேன் ஒன்றுடன் இராணுவ வாகனம் மோதி விபத்துக்குள்ளாகியதில் நால்வர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச் சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வவுனியா இராசேந்திரன்குளம் ஆடைத்தொழிற்சாலையில் இருந்து ஊழியர்களை ஏற்றி வந்த வேன வவுனியா ஓமந்தை வேப்பங்குளத்தில் திரும்ப முற்பட்ட போது, பின்னால் வந்த இராணுவ வாகனம் மோதியுள்ளது. இதன்போது வேன் குடை சாய்ந்ததில் குறித்த வேனில் பயணித்த நால்வர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ்விபத்து தொடர்பான மேலதி…
-
- 0 replies
- 229 views
-
-
காங்கிரஸுக்கு ஆதரவளிக்கோம் காங்கிரஸுக்கு ஆதரவளிக்கோம் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைப்பதற்கு, தமிழர் விடுதலைக் கூட்டணி ஆதரவு வழங்காது என்று அந்தக் கட்சியின் செயலர் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். இது தொடர்பில் உதயன் பத்திரிகைக்கு அவர் தெரிவித்தாவது- தமிழினத்தின் அழிவுக்கு காரணமானவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம். 2004ஆம் ஆண்டு ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைத்த இவர்களால் ஜன…
-
- 0 replies
- 318 views
-
-
தமிழ் அரசுக் கட்சி ஆட்சிக்கு நிபந்தனையின்றி உதவுங்கள் தமிழ் அரசுக் கட்சி ஆட்சிக்கு நிபந்தனையின்றி உதவுங்கள் வவுனியா, முல்லைத்தீவு, மட்டக்களப்பு மாவட்டங்களில் எமது இடங்களை வேறு எவராவது ஆள்வதற்கு முன்னர் தமிழ்க் கட்சிகள் ஒன்றுபட்டு அங்கு ஆட்சி அமைக்கவேண்டும். தமிழ்க் கட்சிகள் ஒன்றிணையாவிட்டால் தேசியக் கட்சிகள் ஆட்சி அமைக்க கூடிய நிலமை உள்ளது. அதை உணர்ந்து தமிழ்க் கட்சிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். …
-
- 0 replies
- 171 views
-
-
உள்ளூராட்சித் தேர்தலில் தொங்கும் உறுப்பினர்கள் என்றால் என்ன? இலங்கை வரலாற்றில் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்ட கலப்புமுறை தேர்தல்முறைமையில் உள்ளூராட்சித் தேர்தல் தற்போது நடந்துமுடிந்திருக்கிறது. இங்கு புதுப்புது விடயங்கள் தகவல்கள் பொறிமுறைகள் மக்களுக்கு தெரியவந்தன. சுனாமி என்றசொல்லே சுனாமி இலங்கையைத்தாக்கியபிறகே இலங்கை மக்களுக்குத் தெரியவந்தது. அதுபோல தொங்கு உறுப்பினர்கள் முறைமையும் தற்போது தேர்தல் முடிந்த பிற்பாடே தெரியவந்தது. வர்த்தமானியில் ஒன்றைக்கூறிவிட்டு எப்படி உறுப்பினர்களைக்கூட்டுவதென்று பலரும் கேள்வியெழுப்பினர். அதற்குக் காரணம் போதிய விள…
-
- 0 replies
- 225 views
-
-
இன்று காலை சிறப்பு அறிக்கையை வெளியிடும் முடிவை ரத்துச் செய்தார் சிறிலங்கா அதிபர் ஊடகங்கள் மூலம் இன்று காலை சிறப்பு அறிக்கையை வெளியிடும் முடிவை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன திடீரென ரத்துச் செய்துள்ளார் என்று கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இன்று காலை ஊடக ஆசிரியர்கள், நிர்வாகிகள் பங்கேற்கும் கூட்டத்தில், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, தனது சிறப்பு அறிக்கையை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த அறிக்கையில் அரசாங்கத்தின் எதிர்கால நிலை தொடர்பான தனது தெளிவான நிலைப்பாட்டை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன வெளிப்படுத்துவார் என்று, அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறியிருந்தன. எனினும், திடீரென இந்த முட…
-
- 0 replies
- 133 views
-
-
ரணிலைக் காப்பாற்றினார் மகிந்த – பதவி விலக வேண்டாம் என்று கோரிக்கை சிறிலங்கா பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்கிரமசிங்க விலக வேண்டாம் என்று, சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச கேட்டுக் கொண்டுள்ளார். தொலைபேசி மூலம் உரையாடிய போதே, மகிந்த ராஜபக்ச இவ்வாறு கேட்டுக் கொண்டுள்ளார். கொழும்பில் இன்று நடந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பின் போது, அமைச்சர் ராஜித சேனாரத்ன இந்த தகவலை வெளியிட்டுள்ளார். உள்ளூராட்சித் தேர்தலில் ஐதேக குறிப்பிடத்தக்களவு வாக்குகளைப் பெற்றுள்ளது என்றும் எனவே, பிரதமர் பதவியில் மாற்றம் செய்யத் தேவையில்லை என்றும், ரணில் விக்கிரமசிங்கவிடம், மகிந்த ராஜபக்ச கூறியதாகவும், ராஜித சேனாரத்ன தெரிவித்து…
-
- 2 replies
- 471 views
-
-
சட்டம் ஒழுங்கு அமைச்சராக சரத் பொன்சேகாவை நியமிக்க வேண்டும் – சிவில் சமூகம் கோரிக்கை பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை சட்டம் ஒழுங்கு அமைச்சராக நியமித்து, நீண்டகாலமாக இழுபடும் முன்னைய ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடிகளுக்கு எதிரான விசாரணைகளை துரிதமாக முன்னெடுக்குமாறு சிவில் சமூக அமைப்பான புரவெசி பலய கோரிக்கை விடுத்துள்ளது. சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவை அதிகாரத்துக்குக் கொண்டு வருவதில் முக்கிய பங்காற்றிய புரவெசி பலய அமைப்பு, தற்போதைய அரசியல் குழப்பங்களைத் தீர்த்து, மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முன்வர வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளது. இதுதொடர்பாக, புரவெசி பலயவைச் சேர்ந்த தம்பர அமில தேரர் நேற்று கொழும்பில் செய்தியாளர்களிடம…
-
- 0 replies
- 139 views
-