ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143361 topics in this forum
-
வட மாகாண வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டம் 100 ஆவது நாளை எட்டியது வட மாகாண வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டம் 100 ஆவது நாளை எட்டியுள்ளது. வட மாகாண வேலைற்ற பட்டதாரிகள் 2012 ஆம் ஆண்டிற்குப் பின்னர் தமக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படவில்லை என தெரிவித்து யாழ். மாவட்ட செயலகத்திற்கு முன்பாக தொடர்ச்சியாகப் போராடி வருகின்றனர். 100 ஆவது நாளான இன்று கறுப்புப்பட்டி அணிந்து வேலையற்ற பட்டதாரிகள் தங்களின் எதிர்ப்பினை வெளியிட்டனர். தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் ஆனந்த சங்கரி வேலையற்ற பட்டதாரிகளை இன்று சந்தித்துக் கலந்துரையாடினார். http://newsfirst.lk/tamil/2017/06/105269/
-
- 0 replies
- 188 views
-
-
நந்திக்கடல் வட்டுவாகல் பகுதியில் இலட்சக்கணக்கில் இறந்து மிதக்கும் மீன்கள் ! முல்லைத்தீவில் நந்திக்கடல் வட்டுவாகல் ஆற்றுப்பகுதியில் இலட்சக்கணக்கான மீன்கள் மர்மமான முறையில் இறந்து கரையொதுங்கியுள்ளது. இதன் காரணமாக வட்டுவாகல் பகுதியில் ஆயிரக்கணக்கான மீன்கள் இறந்து துர்நாற்றம் வீசுவதை காணக்கூடியதாக உள்ளது. மேலும், இறந்த மீன்களை அகற்றுவதற்கு இயந்திர உதவியுடன் அப்பகுதி மீனவர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர். முல்லைத்தீவில் தொடரும் வெப்பநிலை அதிகரிப்பு காரணமாக நந்திக்கடலின் வட்டுவாகல் பகுதியின் நீர் மட்டம் குறைந்துள்ளது. இதன் காரணமாகவே வட்டுவாகல் பகுதியில் ஆயிரக்கணக்கான மீன்கள் இறந்து மிதப்பதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர். …
-
- 8 replies
- 2k views
-
-
ஞானசார தேரரை கொலை செய்ய ஐ.எஸ். பயங்கரவாதிகள் முயற்சி : பொதுபல சேனா (ஆர்.யசி) ஐ.எஸ். பயங்கரவாதிகள் மூலமாக ஞானசார தேரரை கொலைசெய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவரது அணைத்து நகர்வுகளையும் கண்காணித்து வருகின்றனர் எனவும் பொதுபல சேனா பௌத்த அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் டிலந்த விதானகே தெரிவித்தார். பொதுபலசேனா பௌத்த, சிங்கள அபே அமைப்பு மற்றும் இந்து சமேளன அமைப்பு ஆகியன இணைந்து இன்று நடத்திய செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். http://www.virakesari.lk/article/20665
-
- 0 replies
- 470 views
-
-
இளைஞர் வானுார்தி நிலையத்தில் கைது. யாழ்.நீதிமன்றம் மீதான தாக்குதல் யாழ்ப்பாண நீதிமன்றக் கட்டடத் தொகுதி மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பில் சந்தேக நபரொருவரை இம்மாதம் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. யாழ்ப்பாண நீதிமன்றின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் யாழ்ப்பாணம், சோனகத் தெருவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் இந்த வாரம் கொழும்பு குற்ற விசாரணைப் பிரிவுப் பொலிஸாரால் கட்டுநாயக்க பன்னாட்டு வானூர்தி நிலையத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டார். …
-
- 0 replies
- 434 views
-
-
சீன உதவியுடன் பொலநறுவையில் நிர்மாணிக்கப்படவுள்ள சிறுநீரக மருத்துவமனைக்கான உடன்படிக்கை கைச்சாத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கோரிக்கைக்கமைய சீன அரசாங்கத்தின் அன்பளிப்பாக பொலநறுவையில் நிர்மாணிக்கப்படவுள்ள சிறுநீரக மருத்துவமனைக்கான புரிந்துணர்வு உடன்படிக்கை இன்று முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் கைச்சாத்திடப்பட்டது. இலங்கை அரசாங்கத்தின் சார்பில் சுகாதார, போசாக்கு மற்றும் சுதேச மருத்துவத்துறை அமைச்சின் மேலதிக செயலாளர் ஜனக்க ஸ்ரீ சந்ரகுப்தவும் சீன அரசாங்கத்தின் சார்பில் சீன தூதரக பொருளாதார மற்றும் வர்த்தக ஆலோசகர் யங் சூயுனும் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டனர். ஜனாதிபதி மைத்ர…
-
- 0 replies
- 217 views
-
-
ஒரு தொகை கேரளா கஞ்சாவுடன் யாழில் ஒருவர் கைது யாழ். சித்தன்கேணி பகுதியில் 10 கிலோ கேரளா கஞ்சாவை மானிப்பாய் பொலிஸால் மீட்டுள்ளதுடன், இதனை கைமாற்றம் செய்ய முற்பட்ட நபர் ஒருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளார். விசேட அதிரடிப்படையின் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் மானிப்பாய் பொலிஸார் நேற்று திங்கட்கிழமை சித்தன்கேணி வைத்தியசாலைக்கு அருகாமையில் முச்சக்கரவண்டியில் வைத்து இவற்றை கண்டெடுத்துள்ளனர். பண்டத்தரிப்பு பகுதியைச் சேர்ந்த பாலேந்திரன் சிவரஞ்சன் (வயது 28) என்ற நபரே கைதுசெய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் 10 கிலோவும் 156 கிராம் நிறையுடைய கேரளா கஞ்சா பொதியினை கொண்டு வந்து, சித்தன்கேணி வைத்தியசாலைக்கு அருகாமையில் நின்ற முச்சக்கரவண்டி ச…
-
- 0 replies
- 236 views
-
-
அதிகாரங்களைப் பகிர்ந்தளித்து நாடு பிளவுபடுவதைத் தடுக்கலாம் ‘’அதிகாரம் பகிரப்படுவதன் மூலம் நாடு பிளவு படுவதைத் தடுக்க முடியும்.கொழும்பில் ஒரு வகுப்பினரிடம் குவிந்து கிடக்கும் அதிகாரங்களைப் பிரித்து அவற்றைப் பகிர்ந்தளிக்க வேண்டும்.வடக்கு -கிழக்குக்கு மாத்திரமல்ல, மகியங்கனை, மொனராகலைக்கும் அதிகாரங்கள் பகிர்ந்து கொடுக்கப்பட வேண்டும். இவ்வாறு அமைச்சர் மனோ கணேசன் சிங்களத் தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித் துள்ளார். அந்த நேர்காணலின் முழு விவரம் கீழே தரப்பட்டுள்ளது. கேள்வி: மகிந்த ஆட்சி கவிழ்வதற்கு அவர் சர்வதேசத்துக்கு வழங்கிய வாக்குறுதி நிறை…
-
- 0 replies
- 391 views
-
-
விதியை நோகும் தமிழர்கள் பெரும் எதிர்பார்ப்போடு அதிகாரத்திற்கு வந்தவடக்கு மாகாண சபை இப்போது ஊழல், மோசடிக் குற்றச்சாட்டுக்களுக்காக அதன் அமைச்சர்களைப் பதவி நீக்கவேண்டும் என்கிற பரிந்துரையில் வந்து நின்றிருப்பதைப் பார்க்கையில் பரிதாபமாக இருக்கிறது. தமிழர்களின் விதியைத்தான் நொந்துகொள்ள வேண்டியிருக்கிறது. மற்றெல்லா மாகாணங்களுக்கும் முன்மாதிரியாகச் செயற்படுவோம் என்கிற முழக்கத்துடன் களமிறங்கிய முன்னாள் நீதியரசர் தலைமையிலான மாகாண சபை மீது, தமிழ் மக்களுக்குப்பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. மாகாண சபைத் தேர்தல் நடந்தபோது அதுவொரு சாதாரண தேர்தல் களமா…
-
- 0 replies
- 379 views
-
-
தேசிய பாதுகாப்புக்கான ‘அரண்கள் தகர்க்கப்படுகின்றன’// கோட்டாபய ராஜபக்ஷ “யுத்தத்துக்குப் பின்னரான காலப்பகுதியில், நாட்டில் மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்காத வகையிலான நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தோம். ஆனால், அந்த நடவடிக்கைகள் தொடர்பில் எவரும் அறிந்திருக்கவில்லை. அத்துடன், அந்த நடவடிக்கைகள், மக்களின் இயல்பு வாழ்க்கையைப் பாதித்திருக்கவும் இல்லை. அவ்வாறிருக்கையில், நாம் முன்னெடுத்திருந்த அந்த நடவடிக்கைகளை, தற்போதைய அரசாங்கம் படிப்படியாகச் சீர்குலைத்து வருகின்றது. நாட்டுத் தலைவர்களுக்கு, நாட்டின் பாதுகாப்புத் தொடர்பில் நல்ல புரிதல் இருக்க வேண்டும். அபிவிருத்தியடைந்த பாதுகாப்புக் கட்டமைப்புகளைப் பின்பற்றி வருகின்ற நாடுகள் கூட, தேசிய பாதுகாப்புக்கான அச்…
-
- 0 replies
- 359 views
-
-
கட்டாரில் இருந்து வந்தவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிரமம் கட்டாரில் இருந்து நாட்டிற்கு வந்த இலங்கையர்கள் அங்கு பாரிய சிரமத்தை எதிர்நோக்கியுள்ளதாக பயணிகள் விசனம் தெரிவித்துள்ளனர். கட்டாரில் இருந்து வந்த இலங்கைப் பயணிகள் கட்டுநாயக்க விமான நிலையத்திலுள்ள வங்கிகளில் கட்டார் ரியாலை இலங்கை ரூபாவுக்கு மாற்ற முற்றபட்டநிலையில் வங்கிகளில் அதனை மாற்றுவதற்கு மறுப்புத் தெரிவித்ததையடுத்து பயணிகள் பலர் பாரிய சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர். இதேவேளை, கட்டுநாயக்க விமானநிலையத்தில் இயங்கும் அனைத்து வங்கிகளுக்கும் கட்டார் ரியாலை மறு அறிவித்தல் வரும் வரை மாற்றவேண்டாமென அறிவுறுத்தப்பட்டுள்ளதாக விமான நிலையத்தில் கடமையில் இருந்த அதிகாரியொருவர் தெரிவி…
-
- 2 replies
- 434 views
-
-
விசாரணை அறிக்கை விவகாரம்: வடக்கு அவையில் நாளை சிறப்பு விவாதம் வடக்கு மாகாண சபையின் அமைச்சர்கள் மீதான விசாரணை அறிக்கை, வடக்கு மாகாண சபையின் நாளை ய சிறப்பு அமர்வில் சமர்பிக்கப்படவுள்ளது. வடக்கு மாகாண சபையின்அமர்வு இன்று நடைபெற்று வருகின்றது. சபை அமர்வு ஆரம்பமாவதற்கு முன்னர், சபை நடவடிக்கைக் குழு உறுப்பினர்கள் கூடி ஆராய்ந்தனர். வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சபை அமர்வில் இன்று கலந்து கொள்ள முடியாததால், அமைச்சர்கள் மீதான விசாரணை அறிக்கையை அமர்வில் எடுத்துக் கொள்ள முடியாது என்று தெரிவிக்கப்பட்டது. அதனையடுத்த, நாளை சிறப்பு அமர்வை நடத்தி, அதில் விசாரணை அறிக்கையை எடுத்துக் கொள்வது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. http://u…
-
- 1 reply
- 161 views
-
-
சம்பந்தனும், விக்னேஸ்வரனும் இரட்டைக் குழல் துப்பாக்கிகளாக வேண்டும் இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் இனிமேலும் இந்த அரசாங்கத்தை நம்பி பயனேதுமில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினரும், மாகாண சபை உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். எங்களுடைய விடுதலையை வென்றெடுக்க நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டிய முக்கியமான காலக்கட்டத்தில் இருக்கிறோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினரும்இ முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த கருத்தை வௌியிட்டார். எங்களுடைய இனம் விடுதலை பெறுவதற்கு எங்க…
-
- 2 replies
- 526 views
-
-
ஞானசாரரை கைது செய்தால் நிலைமை பாரதூரமாக மாறும் காவி மீது கைவைக்க வேண்டாம்; மூன்று பௌத்த அமைப்புக்களின் தேரர்கள் எச்சரிக்கை (க.கமலநாதன்) கலகொட அத்தே ஞானசார தேரரை கைது செய்தால் நிலைமை பாரதூரமாகும். அவரை கைது செய்வதற்கு முன் பாரதூரமான இனவாத கருத்துக்களை வெளியிடும் விக்கினேஸ்வரன், சிவாஜிலிங்கம் உள்ளிட்டவர்களை கைது செய்ய வேண்டும் என மூன்று பெளத்த அமைப்புக்களின் தேரர்கள் வலியுறுத்தினர். அண்மையில் கலகொட அத்தே ஞானசார தேரரை கைது செய்யு மாறு அமைச்சர்கள் குழுவொன்று அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்தமையானது அரசியலமைப்புக்கு முரணானது. எனவே காவியின் மீது கைவைக்க வேண்டாம் என்றும் அவர்கள் எச்சரிக்கை விடுத…
-
- 1 reply
- 248 views
-
-
8 தமிழர் சுட்டுக்கொலை : 11 பேருக்கும் மறியல் தம்புத்தேகம, பாரதிபுரம் பகுதியில் தமிழர்கள் எட்டுப்பேரைச் சுட்டுக்கொன்றார்கள் என்று குற்றஞ்சாட்டப்பட்டிருந்த பிரதான பொலிஸ் பரிசோதகர், உப-பொலிஸ் பரிசோதகர், பொலிஸ் கான்ஸ்டபிள் உள்ளிட்ட 11 பேர், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில், நிராயுதபாணிகளாக நின்றிருந்த, அமிர்தலிங்கம் சுரேந்திரன் (வயது-14), அமிர்தலிங்கம் கஜேந்திரன் (வயது-18), முருகேசு ஜனகன் (வயது -17), நாதன் பவளநாதன் (வயது-45), சுப்பிரமணியம் திவாகரன், குணரத்தினம் சிவராஜன், ஆறுமுகம் சேகர் மற்றும் பொன்னம்பலம் கனகசபை ஆகிய எட்டுப் பேரே இவ்வாறு சரமாரியாக சுட்டுப் படுகொலை செய்யப்பட்டவர்களாவர். …
-
- 1 reply
- 802 views
-
-
பல இலட்சம் இலங்கையர்கள் அன்றாட வாழ்க்கையை கொண்டுசெல்வதில் பெரும் திண்டாட்டத்தை எதிர்நோக்கியிருக்கின்றனர். அவர்கள் கையிலுள்ள பணம் வாழ்க்கைச் செலவை எதிர்கொள்வதற்கு போதிய பெறுமதியைக் கொண்டிருக்கவில்லை. அவர்கள் உழைக்கும் வருவாயிலும் பார்க்க பொருட்கள், சேவைகளின் செலவினம் துரிதமாக அதிகரித்துச் செல்கின்றது. அரசாங்க மற்றும் தனியார்துறைகளின் உண்மையான ஊதியம் குறைவடைந்திருக்கின்றது. அதேவேளை, உத்தியோகப்பற்றற்ற வகையில் தனியார் துறையில் கட்டணங்கள் அதிகரித்துச் சென்றுள்ளன. வீட்டு வசதிகளை நிறைவேற்றுதல், கல்விக்கான செலவினம், பஸ் , ரயில் கட்டணங்கள், மருந்துப் பொருட்களுக்கான செலவு, சமையல் வாயு, மின்சாரம், தொலைபேசி கட்டணங்கள், பெற்றோல் போன்ற எரிபொருள் கட்டணங்கள் என்பனவற்றுடன் அரி…
-
- 0 replies
- 439 views
-
-
தனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரனை நினைவுகூர்வதன் அவசியம்! குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்:- இந்த உலகில் தனியொருவனாய் போராடியவர்கள் வெகு சிலரே. பெருங்கதைகளில் வரும் தனித்த நாயகன் போல எவரும் போராட முன் வருவதில்லை. அநீதிகளை கண்டு, அதற்கெதிராய் கொதித்தொழுந்து தனி ஒருவனாய் போராடிய வெகு சிலரில் பொன். சிவகுமாரனும் ஒருவர். சிவகுமாரன் ஈழப் போராட்டத்தின் முன்னோடி. ஈழ இளைஞர்களின் முன்னோடி. தமிழ் மாணவர் சமூகத்தின் முன்னோடி. இலங்கை அரசியலில் ஏற்பட்ட சமத்துவமின்மை, அநீதிச் செயற்பாடுகளுக்கு எதிராக போராட்டத்தை மிகவும் முக்கிய காலமொன்றில் கையில் எடுத்தவர் சிவகுமாரன். இலங்கை சுதந்திரமடைந்து இரு வ…
-
- 5 replies
- 1.7k views
-
-
சட்டவிரோத கசிப்பு விற்பனையாளர்களினால் கிளிநொச்சி பனை தென்னை வள தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு சட்டவிரோத கசிப்பு விற்பனையாளர்களினால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கிளிநொச்சி பனை தென்னை வள தொழிலாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். கிளிநொச்சி பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கத்திற்குட்பட்ட கரைச்சி மற்றும் கண்டாவளை பிரதேச செயலர் பிரிவுகளை உள்ளடக்கிய பிரதேசங்களில் முப்பது கள் விற்பனை நிலையங்கள் சட்டரீதியான அனுமதிகளோடு இயங்கிவருகின்றன. இதில், 650 இற்கும் மேற்பட்ட பனை தென்னை வள தொழிலாளர்கள் தொழிலில் ஈடுபட்டுவருகின்றனர். குறித்த தொழிலாளர்கள் தாம் உற்பத்தி செய்யும் கள்ளினை குறித்த நிலையங்களில் வழங்கியே பிள்ளைகளின் …
-
- 0 replies
- 117 views
-
-
பொலிஸ் உத்தியோகத்தை வழங்க கோரி போராட்டம் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திற்கு முன்னால் முன்னாள் தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் இன்று (05) மாலை தொடக்கம் உண்ணாவிரத்தில் ஈடுபட்டுள்ளார். குறித்த தமிழ் இளைஞன் கடந்த 2011 ம் ஆண்டு இலங்கை பொலிஸ் சேவையில் இணைந்து சாதாரண பொலிஸ் உத்தியோகத்தராக யாழில் உள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் கடமையாற்றியுள்ளார். பொலிஸ் சேவையிலிருந்து அண்மையில் திடீரென நீக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில்.இன்று மாலை 6 மணியிலிருந்து குறித்த இளைஞன் தனது பொலிஸ் வேலையை மீண்டும் வழங்க கோரி யாழ் மாவட்ட செயலகத்திற்கு முன்னாள் உண்ணாவிரத போராட்டத்தில் குதித்துள்ளார். http://tamil.adaderana.lk/news.php?nid=92120
-
- 0 replies
- 348 views
-
-
ஊர்காவற்துறையில் மூன்று மாணவர்களை தகாத உறவுக்குட்படுத்திய ஐவர் கைது பாடசாலை மாணவர்கள் மூவரை தகாத உறவுக்குட்படுத்திய குற்றச்சாட்டில் 5 நபர்கள் ஊர்காவற்துறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஊர்காவற்துறை தம்பாட்டி பகுதியைச் சேர்ந்த 5 நபர்களே நேற்று திங்கட்கிழமை ஊர்காவற்துறை பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். ஊர்காவற்துறை பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் தரம் 8 ல் கல்வி பயிலும் மாணவர்கள் மூவரையும் 8 நபர்கள் அப்பிஜரதேசத்திலுள்ள ஆள்நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அழைத்துச் சென்று கட்டாயப்படுத்தி தகாத உறவுக்கு உட்படுத்தியுள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பாக 3 மாணவர்களும் ஊர்காவற்துறை பொலிஸாருக்கு தெரியப்படுத்தியதையடுத்து, பொலிஸார் சம்பவம் நடந்த…
-
- 0 replies
- 211 views
-
-
இலங்கை - கட்டார் விமான சேவைகளில் மாற்றமில்லை கட்டாருக்கான ஶ்ரீ லங்கன் எயார் லைன்ஸ் விமான சேவைகள் வழமைபோன்று நடைபெறும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள நிலைமைகள் குறித்தும் தொடர்ந்தும் அவதானித்து வருவதாக, ஶ்ரீ லங்கன் எயார் லைன்ஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. ஐக்கிய அரபு இராச்சியம், சவூதி அரேபியா, எகிப்து, பஹ்ரைன் உள்ளிட்ட மத்திய கிழக்கின் சில நாடுகள் கட்டாருடனான இராஜதந்திர உறவுகளை துண்டிப்பதாக அறிவித்துள்ளன என, நேற்றையதினம் செய்திகள் வௌியாகின. தீவிரவாதத்திற்கு கட்டார் ஆதரவளிப்பதாக குற்றம்சாட்டியே அவர்கள் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர் என வௌிநாட்டு ஊடகச் செய்திகள் குறிப்பிட்டுள்ளன. இதனையடுத்து, அந்த…
-
- 0 replies
- 205 views
-
-
வடக்கில் சுங்கப் பணியகம் திறப்பு! 33 ஆண்டுகளின் பின்னர் வட மாகாணத்தில் முதன்முறையாக சுங்கத் திணைக்களத்தின் பணியகம் ஒன்று இந்த மாதம் திறக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சுங்கத் திணைக்களத்தின் பணியகம் காங்கேசன்துறையில் இயங்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கில் ஆயுதப்போர் ஆரம்பித்தபின்னர் சுங்கத் திணைக்களத்தின் பணிகள் அனைத்தும் வடக்கில் முடக்கப்பட்டன. தற்போது போர் நிறைவடைந்து எட்டு ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும், வடக்கில் கடத்தல்கள் அதிகரித்துள்ள நிலையில் காங்கேசன்துறையில் மீண்டும் தமது பணியகத்தை திறக்க சுங்கத் திணைக்களம் முடிவு செய்துள்ளது. முன்னர், வடக்கில் யாழ்ப்பாணம், ஊர்காவற்றுறை, காங்கேசன்துறை, வல்வெட்டித்துறை…
-
- 0 replies
- 402 views
-
-
வாருங்கள் சுத்தம் செய்வோம்... களுத்துறை மாவட்டத்தில், வெள்ளம் மற்றும் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட புளத்சிங்கள, யட்டகம்பிற்றிய மற்றும் நாஹகதொல பிரதேசங்களுக்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நேற்று (05) முற்பகல் கண்காணிப்பு விஜயத்தில் ஈடுபட்டிருந்தார். அங்கு, அழிவடைந்த வீடுகள் மற்றும் காணிகளை ஜனாதிபதி பார்வையிட்டார். இதேவேளை, உலக சுற்றாடல் தினத்தையொட்டி, சுற்றாடல் அமைச்சினால் அப்பிரதேசத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட சிரமதான நிகழ்விலும் ஜனாதிபதி கலந்துகொண்டார். இராணுவத்தினர் மற்றும் சீன உதவிக் குழுவின் பங்களிப்புடன் இந்தச் சிரமதான நிகழ்வு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும். இதேவேள…
-
- 0 replies
- 394 views
-
-
ஐங்கரநேசன், குருகுலராசா அமர்வில் பங்கேற்பு பதவி விலக வேண்டும் என்று விசாரணைக் குழு பரிந்துரைத்த அமைச்சர்களான பொ.ஐங்கரநேசன் மற்றும் த.குருகுலராசா இருவரும், வடக்கு மாகாண சபையின் அமர்வில் பங்கேற்றுள்ளனர். சபை அமர்வு ஆரம்பமாகி சில நிமிடங்களில் இருவரும் சபைக்குள் வந்து தமது ஆசனங்களில் அமர்ந்து கொண்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. http://uthayandaily.com/story/5326.html
-
- 3 replies
- 553 views
-
-
தென்னிலங்கை பேரனர்த்தம் 6 மணித்தியாலங்களுக்கு ஒரு தடவை எனக்கு அறிக்கை கிடைத்திருந்தது..! நாட்டில் ஏற்பட்டுள்ள அனர்த்தம் சம்பந்தமாக அறிக்கைகள் எனக்கு ஆறு மணித்தியாலத்திற்கு ஒரு தடவை கிடைக்கின்றது. இந்த இக்கட்டான நிலையில் பாதிக்கப்பட்ட மக்களை நேரடியாக சென்று பார்க்க முடியாமையையிட்டு நான் வருந்துகின்றேன் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வரும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தனது உத்தியோகபூர்வ சமூக வலைத்தளத்தில் நேற்று செய்த பதிவிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். பிரதமர் ரணில் அப்பதிலில் தெரிவித்துள்ளதாவது, சுகயீனமுற்…
-
- 0 replies
- 211 views
-
-
வடக்கின் காங்கேசன்துறையிலிருந்து தெற்கின் தெய்வேந்திர முனை நோக்கிய மனிதாபிமான ரயில் பயணம் நாட்டில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் மிக மோசமாக பாதிக்கபட்ட தென்பகுதிக்கு உதவும் நோக்குடன் மனிதாபிமான ரயில் பயணமொன்றை வடக்கின் காங்கேசன்துறை ரயில் நிலையத்திலிருந்து முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி செயலகம் மற்றும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு 'மக்கள் தொடர்பாடல்' என்ற இந்த செயற்திட்டத்தை மொபிடெல் மற்றும் புகையிரத திணைக்களத்தின் அனுசரணையுடனும் ரூபவாகினி வலையமைப்பின் ஊடக அனுசரணையுடனும் செயற்படுத்தப்படவுள்ளது. நாட்டில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் மிக மோசமாக பாதிக்கபட்ட மாத்தறை பிட்டபத்தர டட்லி சேனாநாயக்க மகா வித்த…
-
- 0 replies
- 339 views
-