ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143407 topics in this forum
-
பொலிஸ் பறிமுதல் செய்த மதுபானப்போத்தல்கள் மீள கையளிக்கப்பட்டது எவ்வாறு? வடக்கு எதிர்க்கட்சித்தலைவர் கேள்வி பொலிஸ் பறிமுதல் செய்த மதுபானப்போத்தல்களை மதுவரித்திணைக்களம் திரும்ப கையளித்தது எவ்வாறு என தவராசாவின் கேள்விக்கு திக்குமுக்காடினார் மதுவரித்திணைக்களத்தின் வடமாகாண பொறுப்பதிகாரி சோதிநாதன் யாழ்.மாவட்டச் சிவில் பாதுகாப்புக்குழுக் கூட்டம் நேற்று யாழ்.மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட வடமாகாண எதிர்க்கட்சித்தலைவர் தவராசா கருத்துத்தெரிவிக்கையில் , யாழ்ப்பாணம் வேலணைப்பகுதியில் அனுமதிப்பத்திரம் காலாவதியான நிலையிலும் மதுபானம் விற்பனை செய்யப்பட்டதன் பேரில் ஊர்காவற்துறை பொ…
-
- 0 replies
- 211 views
-
-
வடமாகாண சுகாதார அமைச்சருக்கு எதிராக வவுனியாவில் ஆர்ப்பாட்டம் வடமாகாண சுகாதார அமைச்சருக்கு எதிராக வவுனியா கந்தசுவாமி ஆலய வளாகத்தில் இன்று (11) காலை காணாமல் போனோ ரின் உறவினர்கள் சுமார் ஒருமணித்தியாலங்களுக்கு மேல் . கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். கடந்த சில வாரங்களுக்கு முன்பாக வவுனியாவில் காணாமல் போனோரின் உறவினர்களினால் அடையாள உண்ணாவிரத போரா ட்டமொன்று இடம்பெற்றது. இதன் போது காணாமல் போனோரின் உறவினர்களினால் எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தனின் புகை ப்படம் எரிக்கப்பட்டது. இச்செயலை வடமாகாண சுகாதார அமைச்சர் உண்ணாவிரதம் இருந்தவர்கள் விசமிகள் என தெரிவித்தமையால் இன்று அமைச்ச ருக்கு எதிராக கவனயீர்ப்பு …
-
- 0 replies
- 249 views
-
-
இலங்கை மீண்டும் அழியும்: சங்கரி “தேசிய அரசாங்கம் என்ற போர்வையில் நமது நாடு எங்கே செல்கின்றது என்று எவருக்கும் தெரியவில்லை. என்னுடைய 60 வருடகால அரசியல் அனுபவத்தை வைத்து நான் சொல்வதை எவரும் புரிந்து கொள்வதுமில்லை. ஆனால் மீண்டும் ஒரு அழிவை எமது நாடு சந்திக்கப் போகின்றது என்பது மட்டும் உறுதி” என்று, தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ. ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு நேற்று எழுதியுள்ள கடிதத்திலேயே, மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அந்தக் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “விடுதலைப் புலிகள் அழிந்தமையானது, ஒரு சிலருக்கு வேண்டுமானால், சந்தோசமாக இரு…
-
- 0 replies
- 241 views
-
-
மக்கள் விடுதலை முன்னணியே பிரதான சூத்திரதாரி ; இசுறு தேவப்பிரிய (எம்.ஆர்.எம்.வஸீம்) அம்பந்தோட்டை சம்பவத்துக்கு மக்கள் விடுதலை முன்னணியே மக்களை தூண்டியது. கூட்டு எதிர்க்கட்சியும் அதற்கு உடந்தையாக இருந்தது என மேல் மாகாண முதலமைச்சர் இசுறு தேவப்பிரிய தெரிவித்தார். மேல்மாகாண முதலமைச்சர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில், அம்பந்தோட்டை சம்பவம் எமக்கு புதிய விடயம் அல்ல. என்றாலும் நாட்டுக்கு அபிவிருத்தியை மேற்கொள்வதற்காக அரசாங்கம் பல வேலைத்திட்டங்களை மேற்கொண்டுவருகின்றது. இவ்வாறான நிலையில்…
-
- 0 replies
- 219 views
-
-
போலி நாணயத்தாள்களை அச்சிடும் இடம் சுற்றிவளைப்பு மாத்தறை, வெலிகாமம் கனன்கே பகுதியில் போலி நாணயத்தாள்களை அச்சிடும் நிலையம் ஒன்று பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளதோடு இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட நபர்கள் ஐந்தாயிரம் போலி நாணயத் தாளுடன் கடை ஒன்றுக்கு சென்று பொருட்களை கொள்வனவு செய்ய முயன்ற போது, கடை உரிமையாளர் குறித்த நபர்களிடம் இருக்கும் பணம் போலியானது என அறிந்து பொலிஸாருக்கு இரகசியமாக அறிவித்துள்ளார். உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் குறித்த நபர்களை கைது செய்து மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில் போலி நாணயத்தாள்களை அச்சிட்ட இடத்தை சுற்றி வளைத்துள்ளனர். இதன்போது போலி நாணயத்த…
-
- 0 replies
- 380 views
-
-
-
- 0 replies
- 330 views
-
-
பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தில் திருத்தம் செய்ய இணங்கியது அரசு பயங்கரவாத தடைச்சட்டத்துக்குப் பதிலாக, புதிதாக அறிமுகப்படுத்தப்படவுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் தொடர்பான வரைவில் திருத்தங்களைச் செய்ய அரசாங்கம் இணங்கியுள்ளது. புதிதாக கொண்டு வரப்படும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் தொடர்பான வரைவு ஆவணம் கடந்த செப்ரெம்பரில் அமைச்சர வையில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. இந்த வரைவு ஆவணம், வெளியே கசிந்த நிலையில், அதில் இடம்பெற்றிருந்த பல்வேறு விடயங்கள் குறித்து கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருந்தன. இந்த நிலையிலேயே, அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட மூல வரைவில் திருத்தங்களைச் செய்ய அரச…
-
- 0 replies
- 292 views
-
-
அடுத்த ஜனாதிபதி தேர்தலில் மைத்திரியா வேட்பாளர்? முடிவில்லை என்கிறார் சந்திரிக்கா அடுத்த ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவை வேட்பாளராக நிறுத்துவது தொடர்பாக சிறிலங்கா சுதந்திரக் கட்சி எந்த முடிவையும் எடுக்கவில்லை என்று, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த போதே சந்திரிகா குமாரதுங்க இவ்வாறு தெரிவித்தார். அடுத்த ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக கட்சியிலுள்ள அமைச்சர்கள் சிலரே தமது யோசனையை வெளிப்படுத்தியுள்ளனர். மைத்திரிபால சிறிசேன, தனது பதவிக்காலத்துக்குப் பின்னர் நிறைவே…
-
- 0 replies
- 182 views
-
-
அன்று நாம் கூறிய அரசியலமைப்பையே இன்று ரணில் கொண்டு வர தயாராகின்றார் – சந்திரிக்கா தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்க அலுவலகத்தினால் பல்கலைக்கழக மாணவர்களை இலக்காகக் கொண்டு முன்னெடுக்கப்படவுள்ள திட்டம் தொடர்பில் தெளிவுபடுத்தும் ஊடக சந்திப்பொன்று இன்று கொழும்பில் நடைபெற்றது. இதன்போது, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க அரசியலமைப்பு மாற்றம் தொடர்பிலான ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அவர் தெரிவித்ததாவது, அன்று நாம் கூறிய அரசியலமைப்பையே தற்போது ரணில் விக்ரமசிங்க கொண்டு வர தயாராகின்றார். எமது கட்சி மீண்டும் வெற்றிபெறும் என்ற அச்சத்தினாலேயே அன்று வேண்டாம் என கூறினார். நான் இன்னும் சில காலம்…
-
- 3 replies
- 382 views
-
-
சர்வதேச நீதிபதிகள் விவகாரமானது அரசியல் தீர்வு செயற்பாட்டை குழப்பும் பொருத்தமற்ற பரிந்துரை என்கிறார் சு.க. பேச்சாளர் (ரொபட் அன்டனி) பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கும் செயற்பாட்டில் சர்வதேச நீதிபதிகளை உள்ளீர்க்குமாறு கோருவதானது தமிழ்பேசும் மக்களுக்கான அரசி யல் தீர்வு செயற்பாட்டில் சிக்கலை ஏற்படுத்துவதாக அமைந்துவிடும் என்று சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் பேச்சாளரும், இராஜாங்க அமைச்சருமான டிலான் பெரேரா தெரிவித்தார். இலங்கையின் நீதிபதிகள் சர்வதேச நாடுகளில் மிகவும் பிரபலமானவர்களாக இருக்கின்றார்கள். எனவே இவ்வாறான இலங்கை நீதிபதிகளைக் கொண்டு விசாரணை செயற…
-
- 0 replies
- 230 views
-
-
ரவிராஜ் கொலை வழக்கு தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு ( காணொளி இணைப்பு ) படுகொலைசெய்யப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் கொலை வழக்கின் தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றில் இன்று செவ்வாய்க்கிழமை காலை மேன்முறையீட்டு மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. படுகொலை செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரவிராஜினுடைய மனைவியின் சார்பில் சட்டத்தரணி எம்.ஏ. எம். சுமந்திரனால் குறித்த மேன்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து சட்டத்தரணி சுமந்திரன் கருத்து வெளியிடுகையில், தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுவிற்கான விசாரணைத் திகதி இதுவரை குறிக்கப்படவில்லை…
-
- 1 reply
- 483 views
-
-
அரசியலமைப்புக்கு உட்பட்டே ஆட்சி மாற்றம் குற்றப்பிரேரணை அவசியமில்லை (எம்.சி.நஜிமுதீன்) அரசியலமைப்பிற்கு உட்பட்டு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முடியும். சூழ்ச்சியின் அடிப்படையிலோ சட்டத்திற்கு புறம்பான வகையிலோ ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த வேண்டிய அவசியம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு இல்லை. மேலும் அரசாங்கத்திலுள்ள பலர் விரைவில் கூட்டு எதிர்கட்சியில் இணைவர். அதற்கான பேச்சுவார்த்தை தற்போது இடம்பெற்று வருகிறது. அத்துடன் ஜனாதிபதிக்கு எதிரான திட்டங்கள் எதுவும் இல்லை என முன்னாள் வெ ளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார். கூட்டு எதிர்க்கட்சி ஏற…
-
- 0 replies
- 298 views
-
-
அவர் அஞ்சாதவர்: மனைவி சசிகலா பேட்டி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் படுகொலை செய்யப்பட்டு, வழக்கின் தீர்ப்பும் வழங்கப்பட்டுள்ள நிலையில், அவருடைய மகள் பிரவீனா ரவிராஜ், மனைவி சசிகலா ரவிராஜ் ஆகிய இருவரும் சுமார் பத்துவருடங்களுக்குப் பின்னர், ஊடகத்துக்கு செவ்வியளித்துள்ளனர். இந்தியாவிலிருந்து வெளியாகும் த ஹிந்து பத்திரிகையின் ஊடகவியலாளருடன் பேசுகின்றனர். கடந்த வருடம் நத்தார் வார இறுதி, பிரவீனா ரவிராஜ் காலையில் எழுந்து பத்திரிகைகளைப் பார்க்கிறார். அவர்கள் பேசுகின்றனர். கடந்த வருடம் நத்தார் வார இறுதி, பிரவீனா ரவிராஜ் காலையில் எழுந்து பத்திரிகைகளை பார்க்கிறார். பத்திரிகைகளில் “சகலரும…
-
- 0 replies
- 231 views
-
-
அடுத்த அரசிலேயே புதிய அரசியலமைப்பு தற்போதைய அரசியலமைப்பின் மூலம் தேசிய பிரச்சினையை தீர்க்க முடியும் என்கிறார் எஸ்.பி. (ஆர்.யசி ) புதிய அரசியலமைப்பை உருவாக்கி தேசிய பிரச்சினைக்கு தீர்வுகாண இப்போதைய சூழல் பொருத்தமற்றது. சர்வஜன வாக்கெடுப்பு இன்றி புதிய அரசியல் அமைப்பை கொண்டுவர மக்கள் அதிகாரம் வழங்கவில்லை. எனவே, அடுத்த ஆட்சியில் தேசிய அரசாங்கமாகவோ அல்லது தனி கட்சியாகவோ மக்கள் ஆதரவுடன் புதிய அரசியலமைப்பை கொண்டுவருவோம் என அமைச் சர் எஸ்.பி.திசாநாயக்க தெரிவித்தார். நிகழ்கால அரசியல் அமைப்பின் மூலமாக தேசிய பிரச்சினைகளை இலகுவாக கையாள முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார். சமூக வலுவ…
-
- 0 replies
- 206 views
-
-
திருமலை துறைமுகத்தை அமெரிக்காவுக்கு விற்பனை செய்யும் நோக்கம் இல்லை இலங்கையில் சர்வதேச முதலீடுகளை பலப்படுத்தும் நடவடிக்கைகள் மட்டுமே முன்னெடுக்கப்படுகின்றன. அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கும் திருகோணமலை துறைமுகத்தை அமெரிக்காவுக்கும் விற்கும் நோக்கம் அரசாங்கத்திற்கு இல்லை. பொய்யான கருத்துக்களை பரப்பி நாட்டில் குழப்பங்களை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர் என சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்கிரம தெரிவித்தார். முன்னைய அரசாங்கம் சீனாவுக்கு நாட்டை விற்ற நிலையில் நாம் நாட்டை மீட்டுள்ளோம் எனவும் அவர் குறிப்பிட்டார். திருகோணமலை துறைமுகத்தை அமெரிக்காவிற்கு விற்கும் நடவடிக்கைகள…
-
- 0 replies
- 293 views
-
-
மஹிந்த, பஷில், கோத்தா ஆகியோரின் பிரஜாவுரிமையை பறிக்க முயற்சி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ ஆகியோரின் அரசியல் பயணத்தை தடுப்பதனை இலக்காகக் கொண்டு அரசாங்கம் குற்றங்களுக்கான விசேட நீதி ஆணைக்குழுவை அமைப்பதற்கு எதிர்பார்க்கிறது எனவே அவ்வாறான நடவடிக்கைகளுக்கு கூட்டு எதிர்க்கட்சி வன்மையான எதிர்ப்பைத் தெரிவிப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்தார். அந்த ஆணைக்குழு மூலம் முன் னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ உள்ளிட்டவர்களின் பிரஜாவுரிமையை இல்லாமலாக்கவும் எதிர்ப்பார்க்கின்றனர் எனவும் அவ…
-
- 0 replies
- 196 views
-
-
"தெற்கிலேயே இனவாத செயற்பாடுகள் அதிகமாக பரப்பப்படுகின்றன" வடக்கை விட தெற்கிலேயே இனவாதம் அதிகளவில் பரப்பப்படுகின்றது. நல்லிணக்கம் தெற்கில்தான் ஏற்படுத்தப்பட வேண்டும். காலம் காலமாக இனவாதத்தை தூண்டி அரசியல் பிழைப்பு நடத்தும் இனவாதிகளின் கருத்துக்களுக்கு மக்களே பதிலளிக்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்தார். மாணவர்கள் மத்தியில் நல்லிணக்க செயற்பாடுகளை ஏற்படுத்துதல் அவசியமாகும். அந்த நல்லிணக்கம் நிலைத்திருக்க அரசியல்வாதிகளின் பங்களிப்பு முக்கியமாகும். யுத்தம் நடைபெற்ற எனது ஆட்சிக்காலத்திலேயே நாடுமுழுவதும் நல்லிணக்க செயற்பாடுகளை முன்னெடுக்க முடிந…
-
- 0 replies
- 327 views
-
-
மஹிந்தவே நாட்டை குழப்புகின்றார் என்கிறார் சந்திரிகா நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இல்லாது செய்யாமல் இருப்பதற்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினால் எந்த வித தீர்மானங்களும் மேற்கொள்ளப்படவில்லை. நாட்டை பிரித்தாளும் சூழ்ச்சிக்கும் பிரிவினைவாதத்துக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவே பிரதானமாக செயற்பட்டு வருகின்றார். அவ்வாறான எவ்வித நோக்கங்களும் நல்லாட்சி அரசாங்கத்தில் நிறைவேறாது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்தார். கொழும்பிலுள்ள தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலக கேட்போர் கூடத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடகவியலா…
-
- 0 replies
- 189 views
-
-
சிறிலங்காவின் நீதித் துறையும் அரசும் இனம்சாரா நடுநிலைத்தன்மை கொண்டவையல்ல. போர்க்குற்றங்களுக்கும் மானிட விரோதக் குற்றங்களுக்கும் இனக்கொலைக்கும் இலக்காகிப் பாதிப்புற்ற ஏராளமான தமிழர்களுக்கு நீதி கிடைக்கச் செய்ய அவற்றால் இயலாது என்று, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விசுவநாதன் ருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில்- முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான திரு நடராஜா ரவிராஜ் அவர்களது கொலையில் குற்றஞ்சாட்டப்பட்ட எதிரிகள் அனைவரையும் கடந்த 2016 திசம்பர் 24ஆம் நாள் சிறிலங்காவின் நீதிமன்றம் விடுவித்துள்ளது. ரவிராஜ் அவர்கள் 2006 ஆம் ஆண்டு நவம்பர் 10ஆம் நாள் ஊர்தியில் பணிக்குச் சென்று கொண்டிருந்த போது படுகொலை செய்யப்பட்…
-
- 0 replies
- 321 views
-
-
அமெரிக்கத் தூதரக அதிகாரிகளுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் இடையில் நேற்று சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்தச் சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுடன், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனும் பங்கேற்றுள்ளார். அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப், உதவித் தூதுவர் ரொபேர்ட் ஹில்டன் மற்றும் தூதரக அதிகாரிகளும் இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டனர். இந்தச் சந்திப்பில், சிறிலங்காவின் அனைத்தும் மக்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் வகையிலான நல்லிணக்கம் மற்றும் அமைதி தொடர்பான தனது பார்வையை, இரா.சம்பந்தன் பகிர்ந்து கொண்டார் என்று, அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப் குறிப்பிட்டுள்ளார். சிறிலங…
-
- 0 replies
- 322 views
-
-
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக அமெரிக்கா நோக்கி சென்றுள்ளார். கோத்தபாய ராஜபக்சவின் அமெரிக்கா பயணத்தில் அவரது மனைவி அனோமா ராஜபக்சவும் இணைந்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது. இன்று அதிகாலை 2.50 மணிக்கு டோஹா கட்டார் நோக்கி பயணித்த ஈ.கே.349 என்ற விமானத்தில் கோத்தபாய பயணித்துள்ளார். அமெரிக்காவில் தனது சொத்துக்கள் தொடர்பில் ஏற்பட்டுள்ள சில பிரச்சினைகளை தீர்த்துக் கொள்வதற்காக கோத்தபாய அமெரிக்க சென்றுள்ளதாக ராஜபக்ச குடும்ப தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. http://www.tamilwin.com/statements/01/131183?ref=home
-
- 0 replies
- 247 views
-
-
தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலை ; 43ஆவது நினைவுதினம் அனுஷ்டிப்பு ( ஆர் . கே. வி ) தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலை சம்பவத்தின் 43ஆவது நினைவுதினம் யாழில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. வரலாற்றின் கறைபடிந்த அத்தியாயங்களுள் ஒன்றாக காணப்படும் 4 ஆவது தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலை சம்பவத்தின் 43 ஆவது நினைவுதினம் இன்று செவ்வாய்க்கிழமை யாழில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் தலைமையில் யாழ்.வீரசிங்கம் மண்டபத்திற்கு முன்பாக நடைபெற்ற இந்நிகழ்வில், குறித்த படுகொலைச் சம்பவத்தை நேரில் கண்ட சட்டத்தரணியால் பொதுச்சுடர் ஏற்றிவைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து வடக்கு மாகாண பதில் முதலமைச்சரும் விவசாய அமைச்சருமான பொன்னு…
-
- 1 reply
- 612 views
-
-
சுன்னாக பொலிஸ் வழக்கு : சந்தேக நபர்களுக்கு பிணை மறுப்பு சுன்னாகத்தில் கைது செய்யப்பட்டு பொலிஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்டிருந்த சிறிஸ்கந்தராசா சுமணன் என்ற இளைஞனை சித்திரவதை செய்து கொலை செய்தது தொடர்பிலான வழக்கில் பொலிஸ் உத்தியோகத்தர்களினதும் பிணை மனு யாழ் மேல் நீதிமன்றத்தினால் இன்று நிராகரிக்கப்பட்டுள்ளது. மேலும வெளிநாடு சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ள ஒருவருக்கு எதிராக சர்வதேச பிடியானை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் எதிரிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளவர்களில் 5 பொலிஸ் உத்தியோகத்தர்கள் மன்றில் அன்று ஆஜர்ப்படுத்தப்பட்டிருந்த நிலையில் இரண்டு எதிரிகளுக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டிருந்தது. …
-
- 0 replies
- 374 views
-
-
யாழ் பல்கலையின் 32 வது பட்டமளிப்பு விழா ஆரம்பம் யாழ் பல்கலைக்கழகத்தின் 32 வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றுள்ளது. 32 ஆவது பட்டமளிப்பு விழாவின் முதலாவது அமர்வு வேந்தர் பத்மநாதன் தலைமையில் ஆரம்பமாகியுள்ளது. அத்துடன் நாளையும் பட்டமளிப்பு விழா நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இப் பட்டமளிப்பு நிகழ்வில் 2151 மாணவர்கள் பட்டதாரிகளாக பட்டம்பெறவுள்ளனர். இதன்படி 164 மாணவர்கள் பட்டபின் தகமை சான்றிதளை பெற்றுக்கொள்ளவுள்ளதுடன் 1275 மாணவர்கள் உள்ளக மாணவர்களாக பட்டம் பெற்றுக்கொள்ளவுள்ளனர். அதேபோன்று 484 மாணவர்கள் வெளிவாரி பட்டதாரிகளாக பட்டம்பெறவுள்ளதுடன் 32 மாணவர்கள் டிப்ளோமா பட்டதாரிகளாக பட…
-
- 3 replies
- 464 views
-
-
மஹிந்தவிடம் சீனா விளக்கம் கோரியுள்ளது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிடம் சீனா விளக்கம் கோரியுள்ளது. என்ன காரணத்திற்காக சீன துறைமுக அபிவிருத்தி திட்டத்திற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ எதற்காக எதிர்ப்பு வெளியிடுகின்றார் என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இலங்கைக்கான சீனத் தூதுவர் யீ ஸியான்லீயாங், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை இன்றைய தினம் சந்தித்துள்ளார். மஹிந்தவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த சந்திப்பு நடத்தப்பட்டுள்ளது. ஹம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பில் இந்த சந்திப்பு நடத்தப்பட்டுள்ளது. இதேவேளை வெளிநாடு ஒன்றுக்கு 15000 ஏக்கர் காணி வழங்கப்படுவதனையே எதிர்ப்பதாக சீனத் தூதுவருக்கு தெளிவுபடுத்தியதாக மஹிந்தவின் அலுவல…
-
- 1 reply
- 397 views
-