ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143407 topics in this forum
-
காணிகளை இராணுவத்தினர் கைவசப்படுத்தியுள்ளதனால் மக்கள் பாதிப்பு : முல்லைத்தீவு மாவட்டத்தில் கேப்பாபுலவு மக்களின் காணிகளை இராணுவத்தினர் கையகப்படுத்தி வைத்திருப்பதனால் பொதுமக்கள் பொருளாதார ரீதியாக பெரிதும் பாதிப்படைந்துள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட செயலக முன்னாள் நிர்வாக உத்தியோகத்தர் ரட்ணராசா தெரிவித்துள்ளார். வடமாகாணத்தில் பல்வேறு இடங்களிலிருந்து இராணுவத்தினர் வெளியேறி உள்ள போதும் இன்னமும்; பொதுமக்கள் பலரின் காணிகளில் தொடர்ந்தும் நிலை கொண்டுள்ளதாகவும் தொடர்ந்தும் ராணுவத்தினர் மக்களின் காணிகளை கையப்படுத்தி வைத்திருப்பது பொதுமக்களுக்கு எதிரான செயற்பாடாகவே கருதப்படுகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் வடக்க…
-
- 0 replies
- 419 views
-
-
யாழ்ப்பாண கோட்டையில் இருந்து இராணுவம் வெளியேறுமா ? தொல்லியல் திணைக்களம் நடவடிக்கை எடுக்குமா ? குளோபல் தமிழ்ச் செய்தியாளர் தொல்லியல் திணைக்களத்தின் கட்டுபாட்டில் உள்ள யாழ்ப்பாண ஒல்லாந்தர் கோட்டையினுள் இராணுவத்தினர் தொடர்ந்து நிலை கொண்டுள்ளனர். யாழ்ப்பாண கோட்டையானது ஆசியாவிலையே சிறந்ததொரு கோட்டை என ஆய்வாளர்கள் குறிப்பிட்டு உள்ளனர். தற்போது கோட்டையுள்ள பகுதியில் முதலில் போர்த்துக்கேயர்கள் கோட்டையை வடிவமைத்தனர். அதன் பின்னர் ஒல்லாந்தர் 1658 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 22ஆம் திகதி போர்த்துக்கேயர்களிடம் இருந்து கோட்டையை கைப்பற்றிய மறுநாள் அக் கோட்டையை இடித்தழித்து விட்டு தற்போது உள்ள ஐங்கோண வடிவிலான கோட்டையை நிர்மாணித்தனர். ஒல்லாந்தர் கால…
-
- 0 replies
- 614 views
-
-
யாழில் துவிச்சக்கர வண்டி திருடர்கள் பிடிபட்டனர்-21 துவிச்சக்கர வண்டிகளும் மீட்பு யாழ்.மாவட்டத்தி்ன் பல்வேறு பகுதிகளிலும் துவிச்சக்கர வண்டிகளை திருடிய குற்றச்சாட்டின் கீழ் நேற்றையதினம் (16) 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் குறித்த நபர்களிடம் இருந்து யாழ்.பொலிஸார் 21 துவிச்சக்கர வண்டிகளை மீட்டுள்ளதாக தெரிவிக்க ப்படுகின்றது. அண்மைக்காலமாக யாழ் மாவட்டத்தின் பல பகுதிகளிலும்துவிச்சக்கர வண்டிகள் திருடப்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகளும் பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில்…
-
- 0 replies
- 298 views
-
-
பாராளுமன்றத்தில் இடம்பிடித்த மலையக மக்களின் காணி விவகாரம் Parliament is nothing but talking என்று சொல்வார்கள். அதாவது பாராளுமன்றத்தினால் பாரிய விடயங்கள் நிறைவேற்றப்படுவதில்லை. ஆனாலும் அங்கு பேச்சுக்கள் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் என்பதே இதன் அர்த்தமாகவுள்ளது. ஊடகவியலாளராக செய்தி சேகரிக்க பல தடவைகள் பாராளுமன்றம் சென்றதுண்டு.எனினும் ஒரு ஊடகவியல் மாணவராக கடந்த வாரம் பாராளுமன்றம் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. அதன்போது சில பாராளுமன்ற உறுப்பினர்களுடன் சந்திப்பை மேற்கொள்வதற்கான ஒழுங்கும் செய்யப்பட்டிருந்தது. அதன்போது மாணவர்கள் கேட்ட கேள்விகளுக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் பதிலளித்தனர். இந…
-
- 0 replies
- 301 views
-
-
யாழில் கடந்த 10மாதத்தில் 69 இலட்சம் லீற்றர் கள்ளு விற்பனை யாழ்ப்பாணத்தில் இவ்வருடம் அக்டோபர் மாதம் வரையான காலப்பகுதியில் 6919663.035 லீற்றர் கள்ளு விற்பனை செய்யப்பட்டுள்ள தாக மதுவரித்திணைக்களத்தின் வடமாகாண பொறுப்பதிகாரி சோதிநாதன் தெரிவித்தார். இது பற்றி மேலும் அவர் தெரிவிக்கையில் , யாழ் மாவட்டத்தை பொறுத்தவரையில் பெப்பரவரி மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை 6919663.035 லீற்றர் கள்ளு விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஜனவரி மாதம் கள்ளு இறக்கப்படுவதில்லை இதேபோல் அக்டோபர் மாதத்திற்கு பிற்பட்ட காலங்களிலும் பெரியளவில் கள்ளு இறக்கப்படவில்லை இதனடிப்படையில் பெப்ரவரி மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை அதிகளவான கள்ளு நுகரப்பட்டு…
-
- 0 replies
- 293 views
-
-
அடுத்த ஆண்டு அமெரிக்கா முன்னெடுக்கவுள்ள பொருளாதாரக் கொள்கையினால், சிறீலங்காவின் பொருளாதாரம் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், அமெரிக்க மத்திய வங்கியான பெடரல் றிசேவ் சிஸ்டம் அடுத்த ஆண்டு வட்டிவீதங்களை அதிகரிக்கவுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்திலும் குறித்த வங்கியானது இதேபோல் வட்டி வீதத்தினை அதிகரித்ததால் சிறீலங்காவிலிருந்து 2400 மில்லியன் டொலர் முதலீடுகள் விலக்கிக்கொள்ளப்பட்டன. அமெரிக்காவின் வட்டிவீதம் மீண்டும் உயர்த்தப்பட்டால், சிறீலங்காவின் ரூபாவின்மீது அது மீண்டும் அழுத்தத்தைச் செலுத்தும். இதனால் நாம் சிலகாலங்கள் பொருளாதார நெருக்கடிகளைச் ச…
-
- 0 replies
- 244 views
-
-
கள்வனின் தாயிடம் மை வெளிச்சம் பார்ப்பது போன்றதே பிரதமரிடம் அறிக்கை கையளிப்பு-மகிந்த அம்பாந்தோட்டை துறைமுகத்தில் ஊடகவியலாளர் தாக்கப்பட்ட சம்பவம் குறித்ததான அறிக்கை பிரதமரிடம் ஒப்படைக்கப்பட்டு ள்ளது.இந்த அறிக்கை கோருவது கள்வனின் தாயிடம் மை வெளிச்சம் பார்ப்பது போன்றது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ச தெரிவித்துள்ளார். கிரிபத்கொட பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற தனியார் தொழிற்சாலையொன்றின் அங்குரார்ப்பண நிகழ்வில் பங்கேற்ற போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர், ஊடகவியலாளர் ஒருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் குறித்த அறிக்கை கடற்படைத் தளபதியினால் பிரதமரிடம் ஒப்படை க்…
-
- 0 replies
- 211 views
-
-
நெடுந்தீவில் குதிரை ஓடியவர் கைது யாழ்ப்பாணம் நெடுந்தீவில் க.பொ.த சாதாரணதர பரீட்சையில் ஆள்மாறாட்டம் செய்து பரீட்சை எழுதியவர் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார். இன்றுடன் முடிவடையும் இந்தப் பரீட்சையில் குறித்த நபர் வேறொருவருக்காக பரீட்சை எழுதிய நிலையில் கடந்த 15ஆம் திகதி சித்திர பாடத்தன்று கண்டுபிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார். ஊர்காவற்றுறை பொலிஸார் அவரை நீதிமன்றில் ஆஜர்படுத்தியவேளை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டதுடன் அவரது அடையாள அட்டை, பரீட்சை சான்றிதழ்களை பரீட்சைகள் திணைக்களத்திற்கு அனுப்பிவைக்குமாறு உத்தரவிட்டார். இதேவேளை மற்றய நபர் தலைமறைாவாகியுள்ளார். இது தொடர்பான மேலதிக விச…
-
- 0 replies
- 273 views
-
-
இலங்கை - மலேஷியாவுக்கிடையில் ஐந்து உடன்படிக்கைகள் கைச்சாத்து (கோலாலம்பூரிலிருந்து ரொபட் அன்டனி) இலங்கைக்கும் மலேஷியாவுக்கும் இடையில் பொருளாதாரம், வர்த்தகம் மற்றும் கலாசார துறைகைளில் ஐந்து உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டன. இளைஞர் ஒத்துழைப்பு, சுற்றுலாத்துறை, விவசாயம், வெளிநாட்டு வேலைவாய்ப்பு கலாசாரம் ஆகிய துறைகளிலேயே குறித்த ஐந்து உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டன. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் மலேஷிய பிரதமர் அப்துல் ரஸ்ஸாக் ஆகியோர் முன்னிலையில் இரண்டு நாடுகளினதும் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் இந்த உடன்படிக்கைகளில் கைச்சாத்திட்டனர். http://www.virakesari.lk/article/14449
-
- 1 reply
- 397 views
-
-
இளைஞர், யுவதிகள் மீண்டும் ஆயுதம் ஏந்தும் நிலைமைக்கு தள்ளப்படுவர் பாராளுமன்ற உறுப்பினர் கெஹெலிய எச்சரிக்கை (எம்.சி.நஜிமுதீன்) அரசாங்கம் நாட்டு வளங்களை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்யும் நடவடிக்கையை தொடர்ந்தும் முன்னெடுத்து வருகிறது. அத்துடன் புதிய அரசியலமைப்பை நிறைவேற்றிக்கொள்வதற்கு மிகுந்த அவசரம் காட்டி வருகிறது. எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் அரசியலமைப்பு சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து அதனை நிறைவேற்றிக்கொள்வதற்கு எதிர்பார்க்கின்றனர். எனவே அரசாங்கத்தின் இவ்வாறான நடவடிக்கைகளினால் இளைஞர், யுவதிகள் மீண்டும் ஆயுதம் ஏந்தும் நிலைக்கு தள்ளப்படும் அபாயம் உள்ளதாக …
-
- 0 replies
- 245 views
-
-
தமிழர்களுடனான அதிகாரப் பகிர்வுக்கு அளவுகோல் உண்டு கூறுகிறார் பிரதமர் ரணில் தமிழர்களுடனான அதிகாரப் பகிர்வு சம்பந்தமான இணக்கப்பாட்டுக்கு கட்டாயம் ஒரு அளவு இருக்கின்றது. இவ்வாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். இந்தியாவின் 'தஹிந்து' ஊடகத்துக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்வதற்கு அளவுகோல் இருக்கின்றதா ? என்று எழுப்பப்பட்ட கேள்விக்குப் பிரதமர், இணக்கத்துக்கு அளவுகோல் இருக்கத்தான் வேண்டும். இந்த விடயம் தொடர்பில் மாகாண முதலமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள், ஆளுநர்களுடன் கதைத்து ள்ளோம். மேலும் கொழும்பு அரசுக்கும் - மாகாணத்த…
-
- 1 reply
- 481 views
-
-
இலங்கை விஞ்ஞான முன்னேற்றச் சங்கத்தினால் நடத்தப்பட்ட அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான புத்தாக்கப் போட்டியிலே (16) தேசிய மட்டத்தில் மட்டக்களப்பு-கல்குடா கல்வி வலயத்தைச் சேர்ந்த செங்கலடி விவேகானந்தா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் மாணவி வெள்ளிப் பதக்கத்தை பெற்றுக் கொண்டார். கொழும்பு பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியின் போது தரம் 06 இல் கல்வி கற்றுக் கொண்டிருக்கும் புவனேசராசா நகுமி என்ற மாணவியினது மாவிடிக்கும் இயந்திரம் இரண்டாம் இடத்தினைப் பெற்றுக் கொண்டது.வெள்ளிப் பதக்கத்தைப் பெற்ற இம்மாணவியை வித்தியாலய அதிபர் க.சிவலிங்கராஜா வாழ்த்தியதோடு அம்மாணவியை தயார்படுத்திய ஆசிரியை தயாமதி பிரேம்குமாருக்குப் பாராட்டுக்களையும் தெரிவித்தார். http://battinaatham.co…
-
- 0 replies
- 260 views
-
-
மார்கழி மாதத்து திரு வெம்பாவை முன்னிட்டு கடல் மார்க்கமாக சிதம்பரம் செல்வதற்கு பக்தர்களை ஆயத்தமாகுமாறும் சிவசேனை அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. அதேவேளை விரைவாக பதிவுகளை மேற்கொள் ளுமாறும் கோரிக்கை விடுத்துள்ளது. திருவெம்பாவைக் காலத்தில் பக்தர்கள் செல்வதற்கு காங்கேசன்துறையிலிருந்து காரைக்காலுக்குக் கப்பல் சேவையினை மேற்கொள்ள இலங்கை- இந்திய அரசுகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன. இது தொடர்பாக சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு க. சச்சிதானந்தன் கருத்து தெரிவிக்கையில், அண்மையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நாவலர் விழாவில் சைவர்கள் வழிபாட்டுப் பயணமாக திரு வெம்பாவைக் காலத்தில் சிதம்பரம் செல்வதற்கு அரசு வசதி செய்யவேண்டும் என ஆளுநரிடம் மக்கள் சார்பாக கோரிக்கை முன்வைத்த…
-
- 0 replies
- 381 views
-
-
வடக்கு சம்பவங்களுக்கு முன்னாள் புலி உறுப்பினர்கள் சம்பந்தமில்லை வட மாகாணத்தில் அண்மைய நாட்களில் இடம்பெற்ற எந்தவொரு அமைதியற்ற செயற்பாடுகளுக்கும் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் எவரும் சம்பந்தப்பட்டிருக்கவில்லை என்று புனவாழ்வு ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் ஜானக ரத்நாயக்க கூறினார். பனர்வாழ்வு பயிற்சி வெற்றிகரமாக அமைந்ததால் அவர்கள் மீண்டும் ஒருபோதும் மோதலுடன் தொடர்புபட மாட்டார்கள் என்று அவர் கூறியுள்ளார். எதிர்வரும் இரண்டு வருட காலப்பகுதியில் புனர்வாழ்வளிக்கும் நடவடிக்கைகளை முற்றாக நிறைவு செய்து கொள்ள முடியும் என்று எதிர்பார்ப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்க…
-
- 0 replies
- 283 views
-
-
சீருடையிலிருந்த மாணவனை தாக்க முற்பட்டாரா கமால் குணரத்ன? பாடசாலைச் சீருடையில் இருந்த மாணவன் ஒருவனை, தாக்க முயற்சித்தார் என்று இராணுவத்தில் இருந்து அண்மையில் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. கடந்த 14ஆம் திகதி கொழும்பு டி.எஸ்.சேனநாயக்க வித்தியாலயம் அருகே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ராவய இதழ் செய்தி வெளியிட்டுள்ளது. க.பொ.த சாதாரணதரத் தேர்வு எழுதும் அந்த மாணவன், கணிதபாட முதல்தாளை் எழுதி விட்டு வரும் போதே, மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன அந்த மாணவனின் சீருடையில் பிடித்து இழுத்து, அச்சுறுத்தியதுடன் தாக்கவும் முயன்றார். இன்று தேர்வுகள் மு…
-
- 0 replies
- 171 views
-
-
தனிப்பட்ட முறையில் என்னிடம் விடுக்கப்பட்ட கோரிக்கையை அடுத்து நடவடிக்கை எடுத்தேன் கச்சதீவு ஆலய கடித விவகாரம் தொடர்பில் ஆறுமுகன் விளக்கம் (நமது நிருபர்) தனிப்பட்ட முறையில் விடுக்கப்பட்ட கோரிக்கையை அடுத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் கலந்துரையாடி கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத் திருவிழாவில் 100 தமிழக மீனவர்களை அனுமதிப்பதற்கான அனுமதியை பெற்றுக்கொடுத்தேன் என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார். கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்திருவிழாவுக்கு தமிழக மீனவர்களை அனுமதிப்பது தொடர்பில் இலங்க…
-
- 0 replies
- 214 views
-
-
நீதிமன்ற விடுமுறை காலப்பகுதியிலும் ரவிராஜ் கொலை வழக்கு விசாரணை (எம்.எப்.எம்.பஸீர், க.கமலநாதன்) தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ். மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் படுகொலை தொடர்பிலான சாட்சி விசாரணைகளை நீதிமன்ற விடுமுறைக் காலப்பகுதியிலும் விசேடமாக முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி தற்போது சிங்களம் பேசும் சிறப்பு ஜூரிகள் முன்னிலையில் இடம்பெற்று வரும் சிறப்பு விசாரணைகள் நீதிமன்ற விடுமுறை காலப்பகுதியில் தொடர மேல் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. நேற்று முதல் மேல் நீதிமன்றின் ஆண்டின் இறுதி விடுமுறைக் காலப்பகுதி ஆரம்பமான நிலையில் மீள நீதிமன்ற நடவடிக்…
-
- 0 replies
- 118 views
-
-
மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு மலேசியா சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் மலேசிய மன்னர் சுல்தான் முஹம்மதுக்குமிடையிலான சந்திப்பு நேற்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது. மலேசிய அரச மாளிகைக்கு சென்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை, மலேசிய மன்னர் மகிழ்ச்சியுடன் வரவேற்றார். மிகவும் சுமுகமாக இடம்பெற்ற இச்சந்திப்பின் போது இலங்கையின் புதிய அரசாங்கத்தின் நடவடிக்கைகளைப் புகழ்ந்து பேசிய மலேசிய மன்னர், ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையிலான இணக்க அரசாங்கத்தின் செயற்பாடுகளையும் பாராட்டினார். இலங்கைக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குமாறு தான் மலேசிய அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்கியுள்ளதாகக் குறிப்பிட்ட மன்னர் சுல்தான் முஹம்மத், இலங்கையின் …
-
- 0 replies
- 272 views
-
-
பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியாவிடின் நல்லிணக்கத்தில் வெற்றிபெற முடியாது போகும் மலேஷிய பிரதமருடனான சந்திப்பில் ஜனாதிபதி எடுத்துரைப்பு (கோலாலம்பூரிலிருந்து ரொபட் அன்டனி) எனது அரசாங்கம் நல்லிணக்கம் மற்றும் பொருளாதார அபிவிருத்தி என்ற இரண்டு விடயங்களையுமே பிரதானமாக கொண்டு செயற்படுகின்றது. பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியாவிடின் நல்லிணக்கத்தில் வெற்றிபெற முடியாது. எனவே நல்லிணக்கம் மற்றும் பொரு ளாதார அபிவிருத்தி என்ற இரண்டு விடயங்களிலும் அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றோம் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். இதேவேளை, சர்வதேச மேடைக ள…
-
- 0 replies
- 142 views
-
-
மு.கா.செயலாளர் சர்ச்சைக்கு தீர்வு தேசியப் பட்டியல் மூலம் எம்.பி.ஆகின்றார் ஹசன் அலி? (ஆர்.ராம்) ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உத்தி யோக பூர்வ செயலாளர் யார் என்பது தொடர்பில் நீடித்து வந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. அதன்பிரகாரம் ஹசன் அலியினால் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்த மனு வாபஸ் பெறப்பட்டுள்ளது. அத்துடன் எதிர்வரும் பேராளர் மாநாட்டில் சகல உரிய அதிகாரங்களுடனான செயலாளர் நாயகமாக ஹசன் அலியை தொடர்ந்தும் பதவியில் நீடிப்பதற்கும் இணக்கம் காணப்பட்டுள்ளது. அதேநேரம் ஹசன் அலிக்கு ஏற்கனவே வாக்குறுதி அளிக்கப்பட்டதன் பிரகாரம் தேசிய…
-
- 0 replies
- 138 views
-
-
பிரதி அமைச்சர் சரத் குமார தலைமறைவாகியுள்ளார். கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் மோசடிகள் தொடர்பில் சரத்குமார மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. நீர்கொழும்பில் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தித் திட்டமொன்றில் பாரியளவில் பணத்தை மோசடி செய்துள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ள சரத் குமாரவை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவிற்கு அமைய காவல்துறையினர் நேற்றைய தினம் சரத் குமாரவின் வீடு மற்றும் ஏனைய அவர் செல்லக்கூடிய இடங்களை சோதனையிட்டுள்ள போதிலும் அந்த எந்தவொரு இடத்திலும் சரத் குமார இருக்கவில்லை என காவல்துறை தலைமையகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சரத் குமார நாட்டை விட்டு தப்பிச் செல்வதனை தடுக்க நீதிமன்ற உத்தரவு பெற்றுக் கொள்ளப்…
-
- 0 replies
- 277 views
-
-
காதலர், பெண்கள், எயிட்ஸ் என பல தினங்கள் நினைவு கூறுகின்ற போதும் ஏன் தேயிலை தினம் மறைக்கப்பட்டது? நாட்டில் காதலர் தினம், பெண்கள் தினம், சிறுவர் தினம், எயிட்ஸ் தினம் எனப் பல்வேறு தினங்கள் அனுஷ்டிக்கப்படுகின்ற போதும் எதற்காக தேயிலை தினம் மறைக்கப்பட்டது. மலையக மக்கள் எழுச்சி பெறக் கூடாது என்ற காரணத்திற்காகவா சர்வதேச தேயிலை தினம் இவ்வளவு காலம் மறைத்து வைக்கப்பட்டிருந்தது என அருட்தந்தை சக்திவேல் கேள்வி எழுப்பியுள்ளார். சர்வதேச தேயிலை தினத்தை முன்னிட்டு மலையக உரிமைக் குரல், மலையக சமூக ஆய்வு மையம், மலையக தமிழ் இளம் தமிழ் ஊடகவியலாளர்கள் சங்கம், மலையக தொழிலாளர் வர்க்க தோழமை அமைப்பு ஆகியவற்றின் ஏற்பாட்டில் கொழும்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வின் போதே அருட்தந…
-
- 4 replies
- 372 views
-
-
இலங்கையுடன் திறந்த வான் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட இந்தியா தீர்மானம் (லியோ நிரோஷ தர்ஷன்) இலங்கையுடன் திறந்த வான் ஒப்பந்தத்தில் இந்தியா கைச்சத்திட தீர்மானித்துள்ளது. பஹாமஸ் தலைநகர் நாசோவில் நடந்த அனைத்துலக சிவில் விமான பேச்சுக்களின் போதே இந்த ஒப்பந்தம் குறித்து தீர்மானங்கள் எட்டப்பட்டுள்ளது. ஒப்பந்தம் கைச்சாத்திடும் பட்சத்தில் இந்தியாவின் சென்னை, மும்பை, டெல்லி, கொல்கத்தா, ஹைதராபாத் மற்றும் பெங்களூரு ஆகிய ஆறு விமான நிலையங்களுக்கு இலங்கையில் கட்டுப்பாடற்ற விமானப் பயணங்களை மேற்கொள்ள முடியும். இந்நிலையின் இந்தியா இவ்வாறான திறந்த வான் ஒப்பந்தத்தை இலங்கை உள்ளிட்ட ஜமைக்கா, கயானா, செக் குடியரசு, பின்லாந்து மற்றும்…
-
- 0 replies
- 267 views
-
-
சமுக வலையத்தளங்களுக்கு எதிராக புதிய சட்டம் (லியோ நிரோஷ தர்ஷன்) இலங்கையின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் செயற்படும் சமூக வலைத்தளங்களுக்கு எதிராக புதிய சட்டங்களை கொண்டு வருவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. சைபர் குற்றத்தின் கீழ் சமூக வலைத்தளங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு தேவையான சட்டங்கள் நாட்டில் காணப்படாத நிலையில் புதிய சட்டங்களை உருவாக்கி அதனூடாக நடவடிக்கை தீர்மானிக்கப்பட்டுள்ளது. http://www.virakesari.lk/article/14466
-
- 0 replies
- 214 views
-
-
140 மில்லியன் அமெரிக்க டொலரை இலங்கைக்கு வழங்க உலக வங்கி இணக்கம் உலக வங்கி இலங்கைக்கு 1340 மில்லியன் அமெரிக்க டொலரை குறைந்த வட்டி அடிப்படையில் கடனை வழங்குவதற்கு அனுமதியளித்துள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. ஏற்கனவே இரண்டு கட்ட நிதி இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில் மேலதிகமாக குறித்த தொகை வழங்கப்பட்டுள்ளமை விசேட அம்சமென நிதியமைச்சு அறிவித்துள்ளது. http://www.virakesari.lk/article/14465
-
- 0 replies
- 190 views
-