ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143410 topics in this forum
-
ஜனாதிபதியின் உரையில் உள்ள யதார்த்தம் புரையோடிப்போயுள்ள தேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணப்படுமா? என்ற கேள்வி கடந்த பல தசாப்த காலமாக தமிழ் மக்கள் மத்தியில் நிறைந்து போயுள்ளது. பதவிக்கு வந்த அரசாங்கங்களும் அரசியல் தலைவர்களும் தேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணப்படும் என்று பல்வேறு வாக்குறுதிகளை அளித்த போதிலும், அவை எதுவும் நிறைவேற்றப்படாமையே வரலாறாகத் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. இதனால் தமிழ் மக்கள் மிகுந்த விரக்திக்கும் வேதனைக்கும் முகம் கொடுத்தமைக்கப்பால், நிறைந்த நம்பிக்கையீனங்களுக்கும் ஆளானார்கள். இன்றுவரை அந்த விதமான நிலைமைகளே தொடர்ந்து கொண்டிருக்கின்றன. தம…
-
- 0 replies
- 283 views
-
-
புதிய அரசியலமைப்பானது சிறுபான்மையினரின் பல பிரச்சினைகளுக்கு ஒரு தீர்வாக அமையும் புதிய அரசியலமைப்பானது இலங்கையில் வாழ்கின்ற சிறுபான்மையின மக்களின் பெரும்பாலான பிரச்சினைகளுக்கு ஒரு தீர்வாக அமையும். மேலும், தற் போது நாட்டில் காணப்படுகின்ற ஜனநாயகக் குறைபாடுகளை நீக்கும் வகையிலேயே புதிய அரசியலமைப்பு தயாரிக்கப்படும். சில அரசியல்வாதிகள் புதிய அரசியலமைப்பு தொடர்பில் பொய்ப்பிரசாரங்களை தொடர்ந்தும் மேற்கொண்டு வருகின்றார்கள். இவற்றில் எவ்வித உண்மைத்தன்மையுமில்லை. மேலும், மக்களின் குறைகளைத் தீர்த்து அவர்களின் அபிலாஷைகளை புதிய அரசியலமைப்பானது நிறைவேற்றும் என்றே நம்புகின்றேன் என இலங்க…
-
- 0 replies
- 462 views
-
-
சாய்ந்தமருதுப் பிரதேசத்திற்குத் தனியானபிரதேசசபை வழங்கப்படுவதில் தமிழர்கள் எவரும் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை ஆனால் கல்முனைத்தொகுதியில் இருக்கின்ற தமிழ்க்கிராமங்களை மூன்றுசபைகளாக் கூறுபோடமேற்கொள்ளும் சதிவேலையினை ஒருபோதும் அனுமதிக்கமுடியாது என கல்முனை மாநகரசபையின் முன்னாள் எதிர்க்கட்சித்தலைவர் கென்றிமகேந்திரன் தெரிவித்துள்ளார் கல்முனைத் தொகுதியில் பிரதேசசபைகள் பிரிக்கப்பட இருக்கும் சம்பவம் தொடர்பில் ஊடகவியலாளர் சந்திர்ப்பு சனிக்கிழமை 3 ஆம் திகதி இரவு அவரது இல்லத்தில் நடைபெற்றபோது மேற்கண்டவாறு தெரிவித்தார் இதில் கல்முனை மாநகரசபையின் தமிழ்தேசியக் கூட்டமைப்பின் எதிர்க்கட்சித்தலைவர் ஏகாம்பரம் கல்முனை மாநகரசபை உறுப்பினர்அ.விஜயரெத்தினம் பிரபல ஒப்பந்தக்காரர் எஸ்.சந்திரசேகரம் …
-
- 0 replies
- 405 views
-
-
வடக்கு, கிழக்கு உள்ளிட்ட சிறிலங்காவின் அனைத்துப் பகுதிகளிலும் அடுத்து வரும் வாரங்களில் கடும் மழை பெய்வதற்கு வாய்ப்பு இருப்பதாக சிறீலங்கா வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு, கிழக்கு, வடமத்திய, ஊவா மாகாணங்களிலும், அம்பாந்தோட்டை, மாத்தளை மாவட்டங்களிலும் சுமார் 100 மி.மீ வரையான மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது. கிழக்கு மற்றும் வடகிழக்கு பகுதிகளிலும், கடுமையான இடிமின்னலும் காணப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. அம்பாந்தோட்டை தொடக்கம் திருகோணமலை வரையான கடற்பகுதியும், புத்தளம் தொடக்கம் மன்னார் வழியாக காங்கேசன்துறை வரையான கடற்பகுதியும் கடும் கொந்தளிப்பாக காணப்படுவதுடன், காற்றின் வேகம், மணிக்கு 100 தொடக்கம் 120 கி.மீ வரை அதிகரிக்கக் கூடும். ம…
-
- 0 replies
- 318 views
-
-
துண்டுகளாக்கப்பட்டு குடும்பஸ்தர் படுகொலை -எஸ்.என்.நிபோஜன் கிளிநொச்சி பூநகரி பிரதேசத்தில் விவசாயி ஒருவர் துண்டுதுண்டாக வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். பூநகரி பிரதேசத்தைச் சேர்ந்த ஐந்து பிள்ளைகளின் தந்தையான கந்தையா சபாரத்தினம் (வயது 62) என்பவரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளது. துண்டுகளாக வெட்டி, எரியூட்டப்பட்டு, குழியொன்றில் புதைக்கப்பட்டிருந்த நிலையிலேயே சடலத்தின் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படும் பூநகரியைச் சேர்ந்த நபர், இந்தியாவுக்குத் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். கிளிநொச்சி நீதவானின் விசார…
-
- 1 reply
- 460 views
-
-
சாரய மம்மி கைது செல்வநாயகம் கபிலன் உருத்திரபுரம் 2ஆம் வாய்க்கால் பகுதியில், தொடர்ச்சியாக மதுபான விற்பனையில் ஈடுபட்டு வந்த 'மம்மி' என்ற பெண்னை, சனிக்கிழமை (03) இரவு கைது செய்துள்ளதாக கிளிநொச்சி மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து, குறித்த பெண்ணின் வீட்டை முற்றுகையிட்ட பொலிஸார், சந்தேக நபரை கைது செய்ததோடு, அங்கிருந்த 180 மில்லிலீற்றர் மதுபான போத்தல்களையும் மீட்டுள்ளனர். இது தொடர்புடைய மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். - See more at: http://www.tamilmirror.lk/187421#sthas…
-
- 0 replies
- 298 views
-
-
உள்ளூராட்சிமன்றத் தேர்தலை விகிதாசார முறைமையில் நடத்துக ஐ.தே.க., ஜே.வி.பி., மு.கா., பொது எதிரணி கோரிக்கை; அமைச்சர் பைசர் நிராகரிப்பு ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ் அனைத்து உள்ளூராட்சி மன்றங்களும் கலைக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கான தேர்தலை இம்முறை மாத்திரம் விகிதாசார முறைமையின் கீழ் நடத்துமாறு ஐ.தே.க., ஜே.வி.பி., ஒன்றிணைந்த எதிரணி, மு.கா. நேற்று சபையில் வலியுறுத்தியுள்ளன. எனினும் மக்களுக்கு அளித்த வாக்குறுதியின் பிரகாரம் அனை த்து தேர்தலையும் பொது வான முறைமை ஒன்றில் நடத்த வேண்டும். ஆகையால் மேற் குறித்த கட்சிகளின் கோரிக்கை யை அமைச்சர் பைசர் முஸ் தபா நிராகரித்தார். பாராளுமன்றத்தில் நேற்று …
-
- 0 replies
- 163 views
-
-
இலங்கை மட்டக்களப்பில் சகஜ நிலை திரும்பியது இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டத்திற்குள் நுழையவிடாமல் போலிஸாரால் தடுக்கப்பட்ட பொது பல சேனா உட்பட கடும்போக்கு பௌத்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் நேற்று(சனிக்கிழமை) நள்ளிரவுடன் திரும்பி விட்டனர். கூட்டத்தை கலைக்க தயார் நிலையில் காணப்பட்ட போலிஸார் இதனையடுத்து அந்த இடத்திலும் மட்டக்களப்பு நகரிலும் நேற்று சனிக்கிழமை நள்ளிரவு வரை நீடித்த பதட்ட நிலை வழக்கத்திற்கு திரும்பியுள்ளது. பொது பல சேனா உட்பட பௌத்த கடும்போக்கு அமைப்புகளைச் சேர்ந்த பௌத்த பிக்குகளும், பௌத்த அமைப்புகளும் கொழும்பிலிருந்து பொலநறுவ ஊடாக மட்டக்களப்பு நோக்கி வாகனங்களில் பயணித்த வேளை, மட்டக்களப்பு மாவட்டத்தின் வடக்கு எல்…
-
- 0 replies
- 289 views
-
-
வவுனியாவிலும் கடும் பனிப்பொழிவு வவுனியாவில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு முதல் கடும் பனிப்பொழிவு இடம்பெற்றுவருகிறது. இன்று (04) காலையும் பனிப்பொழிவு தொடர்வதால் மக்களது இயல்பு நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், சாரதிகள் கடும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். - See more at: http://www.tamilmirror.lk/187429/வவ-ன-ய-வ-ல-ம-கட-ம-பன-ப-ப-ழ-வ-#sthash.marmcWzK.dpuf
-
- 0 replies
- 208 views
-
-
'முகமாலையில் 30ஆயிரத்துக்கும் மேற்பட்ட கண்ணிவெடிகளை அகற்றினோம்' சுப்பிரமணியம் பாஸ்கரன் கிளிநொச்சி முகமாலை பகுதியில், கடந்த 2012ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டு வரையான காலப்பகுதிக்குள், 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிலக்கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுள்ளதாக, கலோற்றஸ் நிறுவனத்தின் பிரதிநிதியொருவர் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், 'கடந்த 2012ஆம் ஆண்டு முதல் முகமாலைப்பகுதியில் கண்ணிவெடி அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்தப் பகுதி மிகவும் சவால் நிறைந்த பகுதியாக காணப்படுகின்றமையால், இவற்றை அகற்றுவதற்;கு தற்போது 500 பணியாளர…
-
- 0 replies
- 279 views
-
-
ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு தனியான இடம் – பிரதமர் ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவோரை அடக்கமாட்டோம். ஆர்ப்பாட்டங் களை செய்வதற்கு தனியான இட மொன்றை அமைக்கவேண்டுமென பிரதமர் ரணில் விக்ரமசிங்க சபையில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று சனிக்கிழமை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொது எதிரணி ஆதரவு உறுப்பினரான தினேஷ் குணவர்தன, தம் மைச் சந்திக்க வரும் மக்களை தடுத்து நிறுத்தி நீர்த் தாரைப் பிரயோகங்களை மேற்கொண்டதோடு, கண்ணீர்ப் புகைக் குண்டுகளும் அடிக்கப்பட்டுள்ளன எனக் குற்றம் சாட்டினார். அச்சமயத் தில் எழுந்த பிரதமர் ரணில் விக்கிரம…
-
- 0 replies
- 170 views
-
-
191 பேரின் உயிரை காவுகொண்ட விமான விபத்து : இன்றுடன் 42 வருடங்கள் மு.இராமசந்திரன் 191 பேரைகாவு கொண்ட பாரிய விமான விபத்து இடம்பெற்று இன்றுடன் 42 வருடங்கள் கடந்துவிட்டன. இந்தோனேசியா சுராபயாவிலிருந்து 182 ஹஜ் பயணிகளை ஏற்றிக்கொண்டு மக்கா நோக்கி பயணித்த மார்டின் எயார் டீ.சீ 8 ரக பயணிகள் விமானம் சப்த கன்னியா என அறியப்படும் ஏழுகன்னியர் மலையில் ஐந்தாவது குன்றின் மீது விமானம் மோதி சிதறியது. விமானமோட்டிகள் உட்பட 191 பேரும் அதே இடத்தில் உடல் சிதறி பலியாகினர். 1974ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 4ஆம் திகதி இரவு 10 மணி 10 நிமிடம் மஸ்கெலியா நோட்டன்பிரிட்ஜ் தெப்பட்டன் பகுதியில் இந்ந சம்பவம் இடம்பெற்றது. 191 பேரை பலியெடுத்…
-
- 0 replies
- 456 views
-
-
தமிழ்,முஸ்லிம் மக்களின் அமைதிக்கு நன்றி தெரிவிக்கும் கிழக்கு முதல்வர் கடும்போக்குவாதிகளின் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளுக்கு ஆட்கொள்ளாமல், எமது வேண்டுகோளுக்கு மதிப்பளித்து இறுதி வரை அமைதி காத்த மட்டக்களப்பு மாவட்ட வாழ் தமிழ் முஸ்லிம் மக்களுக்கு மன மார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு பகுதியில் நேற்று (03) ஏற்பட்ட அமைதியின்மை தொடர்பில் ஊடகங்களுக்கு அவர் விடுத்து ள்ள விசேட அறிக்கையிலேயே இவ்வாறு கூறியுள்ளார். மக்களுக்கு ஒழுக்கத்தை கற்பிக்கவேண்டிய மத குருமார்கள் ஒழுக்கமற்ற முறையில்செயற்பட்ட போதும் ஒழுக்கமாகவும் சிறுபான்…
-
- 0 replies
- 398 views
-
-
சீன பிக்கு 11 நாட்களாக விமானநிலையத்தில் : மொழி தெரியாததால் சிக்கல் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சீனாவை சேர்ந்த பிக்கு ஒருவர் கடந்த 11 நாட்களாக தங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. களனி பிரதேச பௌத்த விகாரைக்கு தொடர்புபட்டுள்ள மாநாயக்க பௌத்த பல்கலைக்கழகத்திற்கு செல்வதற்காக இலங்கை வந்துள்ளதாக குறித்த பிக்கு தெரிவித்துள்ளார். இதன்பின்னர், குறித்த பல்கலைக்கழகத்திற்கு பிக்குவை அனுப்பி வைத்தபோதிலும், அவர்கள் மீண்டும் விமான நிலையத்திற்கே திருப்பி அனுப்பி வைத்துள்ளனர். இந்த பிக்கு சீன மொழியில் மாத்திரம் பேசுவதால், அவரிடம் மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ளவது கடினமாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பில், பல்கலைக்கழக நி…
-
- 0 replies
- 264 views
-
-
வலிவடக்கில் படையினருக்காக மேலும் 70 ஏக்கர் காணி ஆக்கிரமிப்பு யாழ்ப்பாணம் வலி.வடக்கு பிரதேசத்தில் மக்களின் காணிகள் விடுவிக்கப்படும்போது அங்கு இராணுவ முகாம் தொடர்ந்தும் இருக்கும் என தெரிவித்த படையினர் முகாமிற்காக கோரிய காணியை விட மேலதிக மாக 70 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வலிகாமம் வடக்கில் அண்மையில் 454 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டது. காங்கேசன்துறை மற்றும் தையி ட்டி பிரதேசங்களில் உள்ள காணிகளே மக்களிடம் கையளிக்கப்பட்டன. விடுவிக்கப்படும் காணிகளின் நடுவில் இரண்டு இராணுவ முகாம்கள் இருக்கும் என படையினரால் முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்தது. காங்கேசன்துறையில் 40 ஏக்…
-
- 0 replies
- 213 views
-
-
பட்ஜெட்டில் முல்லைத்தீவை மறந்த நிதியமைச்சர்- சாள்ஸ் எம்.பி வேதனை இலங்கையின் 2017ஆம் ஆண்டிற்காக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்காவினால் பாராளுமன்றில் சம ர்ப்பிக்கப்பட்டுள்ள வரவு செலவுத் திட்டத்தில் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு ஒரு முன்மொழிவுகள் கூட இடம்பெறாதமை கவலையளிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார். 2017ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே மேற்க ண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் உரையாற்றுகையில் , இந்த நாட்டின் 2017ஆம் ஆண்டிற்காக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்காவினால் இங்கு சமர்ப்பிக்கப்ப ட்டுள்ள வரவு செலவுத் திட்டத்தில் முல்லைத்தீவு மாவட்டத்திற்க…
-
- 0 replies
- 209 views
-
-
யாழ் பல்கலை மாணவர் கொலைக்கு உரிய நீதி பெற்றுக் கொடுக்கப்படும்-சுமந்திரன் அநியாயமாக பறிக்கப்பட்ட சுலக்சன் , கஜனின் உயிர்களிற்காக கோபம் கொதிக்கும் இந்த சம்பவத்திற்கு நீதியை கோராமல் எந்த நிகழ்வையும் நடாத்த முடியாது. என்பது உண்மையென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். யாழ். கொக்குவில் பகுதியில் 2016-10-20 அன்று பொலிசாரினால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட பல்கலைக் கழக மாணவர்களான சுலக்சன் , கஜன் ஆகியோரின் 45ஆம் நினைவு நாளினை முன்னிட்டு நேற்றைய தினம் இறுவெட்டு வெளியிட்டு வைக்கப்பட்டதோடு வீதியும் திறந்து வைக்கப்பட்டது.இந் நிகழ்வுகள் சுன்னாகத்தில் அமைந்துள்ள சுலக்ச…
-
- 0 replies
- 168 views
-
-
வடக்கில் 971 குடும்பங்கள் தற்போதும் நலன்புரி முகாம்களில்- பாதுகாப்பு செயலர் வடக்கு கிழக்கு மாகாணங்களில் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் எதுவும் இல்லை எனவும் வடக்கில் தற்போதும் 971 குடும்பங்கள் நலன்புரி முகாம்களில் தங்கியுள்ளதாகவும் பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டி ஆராய்ச்சி தெரிவித்துள்ளார். காலியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்று உரையாற்றும் போதே அவர் இந்த கருத்தை குறி ப்பிட்டார். வட பகுதியின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் காணப்படுவதாக இணையத்தளங்களில் வெளியாகியுள்ள பல்வேறு தகவல்கள் முற்றிலும் தவறானது என கருணாசேனா ஹெட்டிஆராய்ச்சி கூறியுள்ளார். இரண்டு வாரங்களுக்கு முன்னர் தாம் வட…
-
- 0 replies
- 255 views
-
-
கண்டிக்கு 'கு' போட்டு எழுதுகின்றனர் தமிழிலும் எழுதவேண்டும் என்பதற்காக சில இடங்களில் எழுதுகின்றனர். சிங்களத்தில் பெரிதாக எழுதுகின்றனர். எழுதவேண்டும் என்பதற்காக தமிழ் மொழியில் சின்னதாக எழுதுகின்றனர். தற்போது அக்கிராசனத்தில் அமர்ந்திருக்கும் எனது கட்சியைச் சேர்ந்தவர் கண்டி மாவட்டத்தைச் சேர்ந்தவர். எனினும், 'க' என்ற எழுத்துக்கு பதிலாக 'கு' போட்டு எழுதுகின்றனர். அதன் அர்த்தத்தை அவரிடமே கேட்டுக்கொள்ளுங்கள் என்று அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் தற்போது நடைபெற்று கொண்டிருக்கின்ற அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். - See more at: http://www.tamilmirror.lk/187251/கண-ட-க-…
-
- 1 reply
- 662 views
-
-
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை அமர்வினை நடாத்த Le Blanc Menil (93) நகரசபை அனுமதித்ததற்கு சிறிலங்கா தூரதரகத்தின் எச்சரிக்கை கடிதம் வரலாம் என நகரபிதா அவர்கள் தெரிவித்துள்ளார். பாரிசின் புறநகர் பகுதியான நகரசபையின் முறையான அங்கீகாரத்துடன் நகரசபை மண்டபத்தில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நேரடி அரசவை அமர்வு வெள்ளியன்று பிரான்சில் தொடங்கியுள்ளது. இந்த அமர்வின் அங்குராப்பண நிகழ்வில் உரையாற்றும் பொழுதே நகரபிதா Thierry Meignen அவர்கள் இக்கருத்தினை தெரிவித்துள்ளார். நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை அமர்வினை நகரசபையில் நடாத்துவதற்கு தாங்கள் அனுமதித்திருப்பது தொடர்பில், பிரென்சு மத்திய அரசாங்கம் மாற்றுக்கருத்தொன்றினையும் தெரிவி…
-
- 1 reply
- 404 views
-
-
அரச வாகனங்களை முறைகேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார். எனினும் கருணாவுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளில் நியாயமில்லை என அவரின் தரப்பினரால் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமகால அரசாங்கத்தின் நடவடிக்கையினால் அதிருப்தி அடைந்துள்ள கருணா, இதுவரை காலமும் மறைத்து வைக்கப்பட்டிருந்த பல இரகசியங்களை வெளியிடவுள்ளதாக தெரிவித்துள்ளார். கருணாவின் நெருக்கமான சகாக்களின் வாக்குமூலத்தின் அடிப்படையில் சிங்கள ஊடகம் ஒன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது. வாகனம் ஒன்றை தவறான முறையில் பயன்படுத்தப்பட்டமை தொடர்பில் வாக்குமூலம் ஒன்று பெற்ற…
-
- 0 replies
- 288 views
-
-
கடந்தவாரம் திருகோணமலைத் துறைமுகத்துக்கு வந்திருந்த அமெரிக்க கடற்படையின் மரைன் கொமாண்டோ படையினர், கடற்புலிகளின் கரும்புலித் தாக்குதல் படகுகளின் செயற்பாட்டு முறையை அறிந்து கொள்வதில் ஆர்வம் காண்பித்தனர். சிறிலங்கா கடற்படையில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள மரைன் படைப்பிரிவுக்குப் பயிற்சி அளிக்கும் நோக்கிலும், சிறிலங்கா கடற்படையுடனான உறவை வலுப்படுத்தும் நோக்கிலும், யுஎஸ்எஸ் சோமசெற் என்ற அமெரிக்க கடற்படையின் ஈரூடக போக்குவரத்துக் கப்பல் கடந்த22 ஆம் திகதி திருகோணமலைத் துறைமுகத்துக்கு வந்தது. இந்தக் கப்பலில் அமெரிக் கடற்படையின் 11ஆவது மரைன் நடவடிக்கை அணியைச் சேர்ந்த மரைன் கொமாண்டோக்களும் திருகோணமலை வந்திருந்தனர். மூன்று நாட்கள் சிறிலங்கா கடற்படை ம…
-
- 0 replies
- 493 views
-
-
இலங்கைக்கு பொருத்தமான புதிய அரசியலமைப்புகள் தயாரிக்க முடிந்தால், நாட்டிற்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள யுத்த குற்றச்சாட்டுகளை நீக்கிக் கொள்ள முடியும் என பிரபல 6 நாடுகள் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அமெரிக்கா, பிரித்தானியா, ஜேர்மன் பிரான்ஸ், கனடா மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளே இதனை சுட்டிக்காட்டியுள்ளது. பெரும்பான்மையினர் போன்று சிறுபான்மையினரின் உரிமை பாதுகாக்கப்படும் வகையில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என இதில் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது வரையில் வடமாகாண சபையில் ஏற்பட்டுள்ள பல்வேறு சிக்கலான அழுத்தங்கள், புதிய அரசியலமைப்புடன் ஒத்துப்போகும் என இதன் மூலம் நம்பிக்கை வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது …
-
- 0 replies
- 346 views
-
-
பொலிஸ்மா அதிபருக்கு தொலைபேசி அழைப்பு ; தவறு என்றார் ஜனாதிபதி இரத்தினபுரியில் நடைபெற்ற பகிரங்க கூட்டமொன்றில் பொலிஸ் மா அதிபருக்கு வந்த தொலைபேசி அழைப்பு எடுக்கப்பட்டு அவருக்கு பணிப்புரைகள் வழங்கப்பட்ட காணொளி காட்சியை நானும் பார்த்தேன். அது தவறானது. அது குறித்து விளக்கம் கோரவுள்ளேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சபையில் தெரிவித்தார். பராளுமன்றத்திற்கு இன்று வருகைதந்த ஜனாதிபதி மைத்தரிபால சிறிசேன, 2017ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் தேசிய கலந்துரையாடல் அமைச்சு, தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அமைச்சு, அனர்த்த முகாமைத்துவ அமைச்சு ஆகியவற்றின் செலவுத்தலைப்புக்கள் மீதான குழு நிலை விவாதத்தில் உரையாற்றினார். பொலிஸ்மா அதிபர் பே…
-
- 3 replies
- 581 views
-
-
கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான தினேஷ் குணவர்தன, கடந்த அரசாங்கத்தில் நகர அபிவிருத்தி அமைச்சராக பதவி வகித்த போது, 63.6 மில்லியன் பணத்தை ஏப்பம் விட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கனடா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளின் இரட்டை குடியுரிமை பெற்றுள்ள தமிழர் ஒருவர் கொழும்பு வெள்ளவத்தை 37 ஒழுங்கையில் ஆடம்பர தொடர் மாடி வீடுகளை நிர்மாணிக்க 2005- 2007 ஆம் ஆண்டுகளில் நகர அபிவிருத்தி அதிகார சபையிடம் விண்ணப்பப் பத்திரம் ஒன்றை சமர்ப்பித்திருந்தார். இந்த விண்ணப்பத்தை ஆராய்ந்த நகர அபிவிருத்தி அதிகார சபை 7 மாடிகளை கொண்டதாக அந்த தொடர்மாடி வீடுகளை நிர்மாணிக்க அனுமதி வழங்கியுள்ளது. எனினும் இரட்டை குடியுரிமை கொண்டுள்ள தமிழர் அமைச்சர் தினேஷ் குணவ…
-
- 0 replies
- 255 views
-