ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143523 topics in this forum
-
ரணிலுக்கு எதிரதான நம்பிக்கையில்லா பிரேரணை - முடிந்தால் வாக்கெடுப்பு நடத்துமாறு ஐதேக சவால்! [saturday 2015-06-06 08:00] பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பில் முடிந்தால் வாக்கெடுப்பு நடத்தவும் என அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு ஆதரவான தரப்பினருக்கு சவால் விடுத்துள்ளார். நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து நாடாளுமன்றில் விவாதம் நடத்தி, முடியுமென்றால் வாக்கெடுப்பு நடத்தவும். இவ்வாறான நம்பிக்கையில்லா தீர்மானங்களை முன்வைத்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் ஆவிகள், ஜனாதிபதியையும் பிரதமரையும் மஹிந்தவிடம் காட்டிக் கொடுக்க முயற்சிக்கின்றன. பிரபல்யம் அடைவதற்காக இ…
-
- 0 replies
- 204 views
-
-
நாடாளுமன்றத்தைக் கலைக்க முன்னர் கரையோர முஸ்லிம் மாவட்டத்தை உருவாக்க கோருகிறார் பசீர்! [saturday 2015-06-06 08:00] பாராளுமன்றம் கலைக்கப்படுவதற்கு முன்னதாக முஸ்லிம்களின் கரையோர மாவட்டத்திற்கான சட்ட ரீதியான அங்கீகாரத்தை வழங்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்வர வேண்டுமென ஸ்ரீல.மு.கா. தவிசாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான பசீர் சேகுதாவூத் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் ஜனாதிபதிக்கு நீண்ட கடிதமொன்றையும் அனுப்பி வைத்துள்ளார். இதனை நீங்கள் நிறைவேற்ற தாமதமானால் குறைந்த பட்சம் தமிழ் பேசும் மக்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட பகுதிகளை உள்ளடக்கிய முழு அதிகாரம் கொண்ட மேலதிக அரச அதிபர் பணிமனையாவது நிறுவித்தருமாறும் பசீர் சேகுதாவூத் கோரிக்க…
-
- 0 replies
- 288 views
-
-
அடுத்த சில நாட்களி்ல் நாடாளுமன்றம் கலைப்பு! - விஜேதாஸ ராஜபக்ச [saturday 2015-06-06 08:00] பிரதமருக்கு எதிராக பயனற்ற வகையில் நம்பிக்கையில்லா பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டுள்ளமையால், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சில நாட்களில் நாடாளுமன்றத்தை கலைப்பார் என்று நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் ஐக்கிய தேசியக் கட்சியினால் புதிய அரசாங்கம் ஒன்று அமைக்கப்பட்டது. எனினும் நடைமுறை நாடாளுமன்றத்தை முன்னெடுத்துச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் சபாநாயகரும் நாடாளுமன்ற கலைப்புக்கு பரிந்துரைத்திருப்பதால் நாடாளுமன்றம் விரைவில் கலைக்கப்படும் என்று அமைச்சர் குறிப…
-
- 0 replies
- 248 views
-
-
ஜனநாயக செயற்பாடுகளை தடுக்க முயல்வது நல்லாட்சிக்கு அவமானம்! கொக்குளாய் சம்பவம் அதிருப்தியளிக்கின்றது: - ஆனந்தன் எம்.பி கண்டனம். [saturday 2015-06-06 08:00] எமது மக்களுக்கு சொந்தமான காணிகளை அபகரித்து அதில் பௌத்த மதத்தைச் சேர்ந்த தேரரொருவர் விகாரை அமைப்பதற்குரிய நடவடிக்கை முன்னெடுத்திருந்த நிலையில் அதனை தடுத்து நிறுத்துவதற்கு ஜனநாயக ரீதியான முனைப்புக்களை மேற்கொண்ட எம்மக்கள் மீது பொலிஸாரும் புலனாய்வாளர்களும் அதிகார அழுத்தங்களை பிரயோகித்து அச்சத்துக்குள்ளாக்கி தடுக்க முனைவது நல்லாட்சிக்கு அவமானத்தையே ஏற்படுத்துவதாக உள்ளது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர்…
-
- 0 replies
- 176 views
-
-
தேசிய அரசு குறித்து ஐதேகவுடன் எந்த உடன்பாடும் இல்லை! - என்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் [saturday 2015-06-06 08:00] ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையில் எவ்வித புரிந்துணர்வு உடன்படிக்கையும் கைச்சாத்திடப்படவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். தேசிய அரசாங்கமொன்றை அமைப்பது தொடர்பில் இரு கட்சிகளுக்கும் எவ்வித உடன்பாடும் ஏற்படுத்திக் கொள்ளப்படவில்லை என ஊடக அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளார். தேசிய அரசாங்கமொன்றை அமைப்பது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது, ரணில் விக்ரமசிங்க மீண்டும் பிர…
-
- 0 replies
- 317 views
-
-
சிங்கள குடிறே;றங்களால் பாதிப்பிற்குள்ளான முல்லைத்தீவு கொக்குளாய் பகுதியில் நில அபகரிப்புக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்த மூவர் இலங்கை காவல்துறையினரால்; கைதுசெய்யப்பட்டுள்ளனர். கொக்குளாய் மத்தியில் தமிழர் ஒருவருடைய காணியை அடாத்தாக அபகரித்து பௌத்த துறவியொருவர் விகாரையொன்றை அமைத்து வருகின்றார். கடந்த ஆட்சிக் காலத்தில் முன்னெடுக்கப்பட்ட இந்த விகாரை அமைப்புப் பணிகள் இப்போதும் முழுவீச்சில் இடம்பெற்று வருகின்றது. இதற்கு எதிர்ப்பு வெளியிட்ட காணி உரிமையாளரான திருஞானசம்பந்தர் மணிவண்ணதாசன் கடந்த காலங்களில் பல்வேறு முறைகளிலும் ஊர் மக்களோடு இணைந்து போராடினார். ஆனால் அபகரிக்கப்பட்ட அவரின் காணி மீள வழங்கப்படவில்லை. மாறாக பௌத்த விகாரரையை நிரந்தரப்படுத்தும் முயற்சிகள் தீவிரம் பெற்றன…
-
- 3 replies
- 572 views
-
-
கொழும்பு வந்தார் பாகிஸ்தான் இராணுவத் தளபதி JUN 05, 2015 | 13:21by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் பாகிஸ்தான் இராணுவத் தளபதி ஜெனரல் ரஹீல் ஷரீப், ஐந்து நாள் பயணமாக இன்று பிற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார். அவரை சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் கிரிசாந்த டி சில்வா வரவேற்றார். சிறிலங்காவில் தங்கியிருக்கும் போது, அவர் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா உள்ளிட்டோரை சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார். சிறிலங்காவுடனான பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து, அவர் கவனம் செலுத்துவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. http://www.puthinappalakai.net/2015/06/05/news/6788
-
- 0 replies
- 516 views
-
-
சிறிலங்கா இராணுவத்தின் துப்பாக்கியாலேயே ரவிராஜ் படுகொலை – நீதிமன்றத்தில் காவல்துறை தகவல் JUN 05, 2015 | 13:08by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ந.ரவிராஜ் படுகொலைக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி, சிறிலங்கா இராணுவத்துக்குச் சொந்தமானது என்று கண்டறியப்பட்டுள்ளதாக, குற்றப்புலனாய்வு பிரிவினர்,இன்று கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். ரவிராஜ் படுகொலை வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, இந்தப் படுகொலைக்குப் பயன்படுத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும், முச்சக்கர வண்டியொன்று தற்போது கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் தகவல் வெளியிட்டனர். அந்த முச்சக்கரவண்டியை தமது பொறுப்பில் வ…
-
- 0 replies
- 556 views
-
-
துறைமுக நகரத் திட்டம் மீளத் தொடங்கும் – சீன நிறுவனம் நம்பிக்கை JUN 05, 2015 | 11:20 by கார்வண்ணன்in செய்திகள் சிறிலங்காவில் இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ள கொழும்பு துறைமுக நகரத் திட்டம், மீள ஆரம்பிக்கப்பட வாய்ப்புகள் உள்ளதாக, அதன் கட்டுமானப் பணியை மேற்கொண்ட சீனாவின் தொலைத்தொடர்பு கட்டுமான நிறுவனத்தின் உதவித் தலைவர் சன் சியூ தெரிவித்துள்ளார். மக்காவுவில் நேற்று நடந்த கருத்தரங்கு ஒன்றில் பேசிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அங்கு கருத்து வெளியிட்ட சீனாவின் தொலைத்தொடர்பு கட்டுமான நிறுவனத்தின் உதவித் தலைவர் சன் சியூ, “ஒவ்வொரு நாட்டுக்கும் சொந்தமான பிரச்சனைகள் இருக்கும். சிறிலங்காவின் உள்நாட்டு விவகாரத்தில் தலையீடு செய்யும் நோக்கமோ, அதற்கான ஆற்றலோ எமது நிறுவனத்தி…
-
- 0 replies
- 445 views
-
-
விடுதலைப் புலிகளின் தொடக்க கால உறுப்பினராக வாழ்க்கையைத் தொடங்கிப் பின்பு முக்கிய உறுப்பினராக மாறியவர் திலீபன். 1987-ல் இலங்கை - இந்தியா இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்திய அமைதிப்படை இலங்கை சென்றது. அதனிடம் ஐந்து அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தித் தண்ணீர் கூட அருந்தாமல் உண்ணாவிரதம் தொடங்கினார் திலீபன். அவரது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத காரணத்தால் உண்ணாவிரதம் தொடங்கிய 11- வது நாள் போராட்டப் பந்தலிலேயே உயிர் துறந்தார். ஈழ விடுதலைப் போராட்டத்தின் போக்கை மாற்றிய திலீபனின் வாழ்வையும் மரணத்தையும் விறுவிறுப்பான திரைப்படமாக வடித்தெடுத்திருக்கிறார் அறிமுக இயக்குநர் ஆனந்த மூர்த்தி . அவரைச் சந்தித்தோம். திலீபனைத் தெரியும். அந்தத் திலீபனைத் திரையில் காட்டப்போகு…
-
- 0 replies
- 1.9k views
-
-
இனப்படுகொலையாளிகளிற்கு பாவமன்னிப்பு வழங்குவது பற்றி தமிழ் மக்களே தீர்மானிக்கமுடியும்.சுரேன் சுரேந்திரன்களோ கூட்டமைப்பிலுள்ள ஒருசிலரோ அல்லவென தெரிவித்துள்ளார் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் வடமாகாணசபை உறுப்பினருமான கே.சிவாஜிலிங்கம். பதிவு இணைய செய்தி யாழ்.ஊடக அமையத்தினில் இன்று அவர் நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டினில் மேலும் தெரிவிக்கையினில் 67 ஆண்டுகள் கடந்தும் தமிழ் மக்களது பிரச்சினைக்கு இலங்கை அரசுகள் தீர்வெதனையும் தரவில்லை.இந்நிலையினில் சர்வதேச மத்தியஸ்தத்தின் கீழான பேச்சுக்களினை இலங்கை அரசு நிராகரித்துவருவதுடன் சர்வதேச தரப்புக்களது நிதியினில் செயற்படும் அரசசார்பற்ற அமைப்புக்கள் சிலவற்றை முன்வைத்து எமது கோரிக்கைகளினை பலவீனப்படுத்த முற்பட்டுள்ளது. அந்த வகையினில் புலம…
-
- 0 replies
- 465 views
-
-
தமிழ்மக்களது ஆயுதப்போராட்ட வரலாற்றின் முதல் மாவீரன் பொன்.சிவகுமாரனின் 41 ஆம் ஆண்டு நினைவுதினம் இன்று வெள்ளிக்கிழமை உரும்பிராயில் அவரது நினைவுச்சிலை அமைந்துள்ள இடத்தில் நடைபெற்றது. மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் ஏற்பாட்டில் பிற்பகல் 2 மணிக்கு நடைபெற்ற இந்த நிகழ்வில் முன்னதாக பொன்.சிவகுமாரனின் திருவுருவச் சிலைக்கு மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த நிகழ்வில் அனந்தி சசிதரன், வலி.வடக்கு பிரதேச சபை உபதவிசாளர் சஜீவன் உட்பட பலர் கலந்துகொண்டனர். http://www.pathivu.com/news/40625/57//d,article_full.aspx
-
- 0 replies
- 470 views
-
-
யாழ்.நீதிமன்றக் கட்டத் தொகுதியின் மீது தாக்குதல் நடத்தினார் என்ற சந்தேகத்தின் பேரில் கைதான மாணவர்களை விடுவிக்க நீதிமன்றம் பின்னடித்துவருகின்றது. கடந்த மாதம் 20 ஆம் திகதி யாழ்.நீதிமன்றக் கட்டத் தொகுதியின் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் தொடர்பாக சம்பவ இடத்தில் வைத்து 43 பேர் கைது செய்யபபட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். இவர்கள் தொரபான வழக்கு விசாரணை நேற்று முன்தினம் 3 ஆம் திகதி யாழ்.நீதவான் நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன் போது குறித்த வழக்கின் சந்தேக நபரான பல்கலைக்கழக மாணவனுக்கு பிணை வழங்குமாறு சட்டத்தரணி கோரியிருநத்hர். இதன்படி மன்றில் சமர்ப்பிக்கப்பட்ட பிணை விண்ணப்பம் இன்று வெள்ளிக்கழமை காலை கட்டளைக்காக எடுத்துக கொள்ளப்படும் என்று உத்தரவிடப்பட்…
-
- 0 replies
- 361 views
-
-
பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுக்களிற்கு உள்ளாகியிருக்கும் வடமாகாண பொதுச்சேவை ஆணைக்குழவின் செயலாளர் தெய்வேந்திரன் உடனடியாக அமுலுக்கு வரும் வகையினில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.அவரது இடத்திற்கு முன்னாள் யாழ்.மேலதிக அரசாங்க அதிபர் ரூபினி வரதலிங்கம் நியமிக்கப்பட்டுள்ளார். பரீட்சை விடைத்தாள்களினில் மோசடிகள் செய்து ஆட்களை தெரிவு செய்தமை அதற்கு இலஞ்சம் பெற்றுக்கொள்ளப்பட்டமை தொடர்பினில் அவர் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தது.இந்நிலையினில் அண்மையினில் அத்தகைய நடவடிக்கை ஒன்றின் போது அவர் வடமாகாண ஆளுநர் அலுவலக அதிகாரிகளால் கையும் மெய்யுமாக பிடிக்கப்பட்டிருந்தார்.இதன் தொடர்ச்சியாகவே அவர் இடமாற்றத்திற்குள்ளாகியுள்ளார். முன்னதாக வடமாகாண ஆளுநர் சந்திரசிறி மற்றும் அமைச்சர…
-
- 0 replies
- 309 views
-
-
வலிகாமத்தின் கந்தரோடை அருளானந்த பிள்ளையார் கோயிலின் பூங்காவனத் திருவிழாவின் இசை நிகழ்ச்சியில் இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் எண்மர் படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.இவர்கள் அனைவரும் தற்போது தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடந்த புதனிரவு இரவு இடம்பெற்ற குழு மோதல் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையினில் ஆலய சூழலினில் இசை நிகழ்ச்சி நடைபெற்றுக்கொண்டிருந்த நேரம் மதுபோதையில் வந்த இளைஞர்கள் சிலர் இசை நிகழ்சியினை நிறுத்துமாறு கோரி கூச்சலிட்னர். இததனைத் தொடர்ந்து அப்பகுதியில் கூடிய இளைஞர்கள் தங்களுக்குள் மோதிக்கொண்டனர். இதனையடுத்து இசை நிகழ்ச்சி நிறுத்தப்பட்டது. சம்பவம் தொடர்பில் இலங்கைப் பொலிஸாருக்கு தெரியப்படுத்தியதை அடுத்து, ஸ்தலத்திற்…
-
- 0 replies
- 383 views
-
-
நான் அரசியலுக்கு வந்தால் என்ன நடக்குமென்று அனைவருக்கும் தெரியும்- மஹிந்த மிரட்டல் பௌத்த விகாரைகளுக்கு பூசைத் தட்டுக்களுடன் சென்று அரசியல் நாடாத்திவரும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தன்னை அரசியல் மேடைகளில் ஏற்ற சிலர் முயற்சிப்பதாக தெரிவித்துள்ளார். நேற்றுமுன்தினம் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் வைத்தே இவ்வாறு தெரிவித்துள்ளார். நான் அரசியலிலிருந்து விலகியபின் விகாரைகளுக்கு சென்று வருகின்றேன். அதனை சிலர் நான் விகாரைகளில் அரசியல் செய்வதாகக் கூறிவருகின்றனர். நான் என் மீது அன்பு வைத்துள்ள மக்களின் அழைப்பிலிருந்து தப்பிக்கவே விகாரைகளுக்கு சென்றுவருகின்றேன். என் விகாரைப் பயணங்களை எவரும் விமர்சனம் செய்ய முடியாது. இவ்வாறு விமர்சிப்பதன் மூலம் விகாரைக்கு செல்லு…
-
- 0 replies
- 362 views
-
-
பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரரணை பாராளுமன்ற செயலாளர் நாயகத்திடம் கையளிப்பு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தஸநாயக்கவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இந்த நம்பிக்கையில்லா பிரேரணையில் சுமார் 112 பாராளுமன்ற உறுப்பினர்கள் கைச்சாட்டுள்ளதாக மஹிந்த ஆதரவு பாராளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார். பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை நேற்று இரவு சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டதாக மஹிந்த ஆதரவு பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்த்தன தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. - See more at: http://onlineuthayan.com/News_More.php?id=653594070205827523#sthash.BWJWkPm6.dpuf
-
- 0 replies
- 291 views
-
-
வசாவிளான் ஞானவைரவர் ஆலயத்தில் 25 வருடங்களின் பின்னர் விசாக மடை வலி.வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்துக்குள் அமைந்துள்ள வசாவிளான் தெற்கு ஞானவைரவர் ஆலயத்தில் வைகாசி விசாக மடை உற்சவத்தை மேற்கொள்ள பலாலி பாதுகாப்புப் படைத்தலைமையகம் அனுமதி வழங்கியுள்ளது. . மேலும் வைகாசி விசாக தினத்தை முன்னிட்டு பொதுமக்கள் ஞானவைரவர் ஆலயத்தில் இன்று காலை 8 மணிக்கு பொங்கல் பொங்கி மடை பரவி தமது வழிபாடுகளை நிறைவேற்றினர். மேற்படி பகுதியிலிருந்து பொதுமக்கள் இடம்பெயர்ந்த பின்னர் உயர்பாதுகாப்பு வலயமாக மாற்றப்பட்டு கடந்த 25 வருடங்களாக இந்த ஆலயத்துக்கு பொதுமக்கள் செல்ல இராணுவத்தினர் அனுமதிக்கவில்லை. இந்த நிலையில் இவ்வாண்டு நீண்ட இடைவெளிக்குப் பின்னர் இராணுவத்தினர் அனுமதி வழங்கியதை தொடர்ந்து மக…
-
- 0 replies
- 589 views
-
-
எங்களை எங்கள் வீடுகளுக்கு செல்ல அனுமதியுங்கள்; வயாவிளான் மக்கள் கோரிக்கை எங்களுடைய குலதெய்வத்திற்கான வழிபாட்டை மேற்கொள்ள இன்று இராணுவம் அனுமதி வழங்கியது போல எங்களுடைய சொந்த இடங்களிலும் நாம் மீள்குடியேற அனுமதிக்க வேண்டும் என வயாவிளான் தெற்கு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வலி.வடக்கு மக்கள் யுத்தம் காரணமாக தங்களுடைய வீட்டை விட்டு வெளியேறிய பின்னர் குறித்த பகுதியை இராணுவத் தேவைக்காக உயர்பாதுகாப்பு வலயமாக பிரகடணம் செய்துள்ளனர். 25 ஆண்டுகளாக மக்கள் தங்களுடைய நிலங்களில் மீள்குடியேற்றம் செய்வதற்கு அனுமதிவழங்கவில்லை. இன்று வயாவிளான் தெற்கு ஞான வைரவர் ஆலயத்தில் வைகாசி விசாக உற்சவத்தை மேற்கொள்ள பாதுகாப்புப் படை அனுமதி வழங்கியிந்தது. மிகுந்த எதிர்பார்ப்புடனும் மகிழ்…
-
- 0 replies
- 404 views
-
-
எங்கள் காணிகளில் விகாரை வேண்டாம்; உணவு தவிர்ப்பிலிருந்த மூவர் பொலிஸாரால் கைது முல்லைத்தீவு, கொக்கிளாயில் தமிழ் மக்களுக்குச் சொந்தமான காணியில் விகாரை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று அடையாள உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட காணி உரிமையாளர்கள் மூவரை முல்லைத்தீவு பொலிஸார் கைது செய்துள்ளனர். கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் உணவு தவிர்ப்பு போராட்டத்திற்கு அனுமதி பெறாமல் அவற்றை முன்னெடுத்ததாகக் கூறியே மேற்படி மூவரும் கைது செய்யப்பட்டதாக முல்லைத்தீவு பொலிஸார் கூறினர். கொக்கிளாய், கொக்குத்தொடுவாய் மற்றும் கருநாட்டுக்கேணி ஆகிய கிராம மக்கள் இணைந்து கவனயீர்ப்புப் போராட்டம் செய்வதுடன், காணி உரிமையாளர்களான யோகராசா ஜூட் நிமலன், திருஞானசம்பந்தர் மணிவண்ணதாஸ், எஸ்.சிவலோகேஸ…
-
- 0 replies
- 397 views
-
-
சிரித்து வாழும் வயதில் சிந்தையை இழக்காதே; போதைக்கு எதிரான பேரணி "போதைப் பாவனையை ஒழித்து வளமான எதிர் காலத்தை உருவாக்குவோம்" என்ற தொனிப் பொருளில் போதைப் பாவனைக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி ஒன்று தெல்லிப்ழையில் இருந்து மல்லாகம் வரை இடம்பெற்றது. "சிரித்து வாழும் வயதில் சிந்தையை இழக்காதே, குடிப்பவர்கள் எல்லோரும் நடிப்பவர்கள், உடலை அழிக்கும் மாவை விட உடம்பை வழர்க்கும் மாவே மேலானது, இனி வரும் தலைமுறைக்கு இனிய வாழ்வு சாத்தியமா? போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாதைகளை பேரணியில் ஈடுபட்டோர் தாங்கியிருந்தனர். இப் பேரணியில் தெல்லிப்பழைப் பகுதியில் உள்ள பாடசாலைகளின் மாணவர்கள், மதுவரி திணைக்கள உத்தியோகத்தர்கள் சுகாதார பிரிவினர், பொலிஸார், பிரதேச சபை பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் எ…
-
- 0 replies
- 2.6k views
-
-
இன்று உலக சுற்றாடல் தினம் உலகளாவிய ரீதியில் உலக சுற்றாடல் தினம் இன்று அனைத்துலக மக்களாலும் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. இயற்கையை பாதுகாத்து சாதகமான சுற்றுப்புறச் சூழலை உருவாக்கி அதன் மூலம் சுற்றாடலை பாதுகாக்க வேண்டும் என்ற உலகளாவிய விழிப்புணர்விலேயே இச் சுற்றாடல் தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. உலக சுற்றாடல் தினம், ஓர் சர்வதேச தினமாக ஐ.நா.வின் பொதுச்சபையினால் 1972 ஆம் ஆண்டு பிரகடனப்படுத்தப்பட்டது. அத்தினத்திலேயே ஐ.நா.வின் மனித சுற்றாடல் மாநாடு ஆரம்பமானது. முதலாவது சர்வதேச சுற்றாடல் தினம் 1973 ஆம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகின்றது. அன்றிலிருந்து சுற்றாடல் தினம் வெவ்வேறு தொனிப்பொருட்களில் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. இவ்வகையில் 42 ஆவது சர்வதேச சுற்றாடல் தி…
-
- 0 replies
- 1.5k views
-
-
மகிந்த தரப்பு எடுத்த முயற்சியைத் தோற்கடித்தார் மைத்திரி! [Friday 2015-06-05 14:00] சிறி லங்கா சுதந்திரக் கட்சியின் அதிகாரத்தைக் கைப்பற்ற எடுத்த முயற்சியை அந்தக் கட்சியின் தலைவர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வலுவிழக்கச் செய்துள்ளதாக தெரியவருகிறது. அத்துடன், கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தின் பலத்தை மைத்திரிபால சிறிசேன உறுதிப்படுத்தியுள்ளதாகவும் தெரியவருகிறது. ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் சிலர் எதிர்வரும் பொதுத் தேர்தலை இலக்குவைத்து மேற்கொள்ளவிருந்த சூழ்ச்சித் திட்டம் குறித்து அரச புலனாய்வுப் பிரிவு ஊடாக அறிந்துகொண்ட ஜனாதிபதி இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார். ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் ராஜபக்ச ஆதரவாள…
-
- 0 replies
- 508 views
-
-
இலங்கையில் 11 வீத பாடசாலை மாணவர்கள் புகைத்தலுக்கு அடிமை! - உலக சுகாதார நிறுவனம் அதிர்ச்சித் தகவல் [Friday 2015-06-05 07:00] இலங்கையில் 13 முதல் 15 வயதுக்கு இடைப்பட்ட பாடசாலை மாணவர்களில் 11 சதவீதமானவர்கள், புகைப்பழக்கத்துக்கு அடிமையாகியுள்ளனர் என்று உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. அந்த அறிக்கையின் பிரகாரம், 16 சதவீதமான மாணவர்களும் 5 சதவீதமான மாணவிகளும் புகையிலை பாவனைக்கு உட்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது. புகைத்தல் மற்றும் புகையிலை பாவனையால் ஏற்படும் விளைவுகள் தொடர்பில் 80 சதவீதமான மாணவர்கள் அறிந்திருக்கின்ற போதிலும் அவர்கள் அது தொடர்பில் கவனத்திற் கொள்வதில்லை என்றும் குறிப்பிடப்படுகின்றது. 13 முத…
-
- 0 replies
- 460 views
-
-
வடக்கில் சமூக சீரழிவு செயல்களை கட்டுப்படுத்த விசேட வேலைத்திட்டம்! - சுமந்திரன் தகவல் [Friday 2015-06-05 07:00] வடக்கில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் மற்றும் போதைப் பொருள், மது பாவனையை முடிவுக்குக் கொண்டுவர விசேட சமூக வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாகவும், இதற்காக அரச மற்றும் தனியார் அமைப்புகளுடன் பேச்சு நடத்தி வருவதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். நீண்டகால நிகழ்ச்சித் திட்டமாக முன்னெடுக்கப்படவுள்ள இந்தத் திட்டத்தில் விழிப்புணர்வு நடவடிக்கைகளை விரைவில் ஆரம்பிக்கவுள்ளதுடன், மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் சரியான கல்வி புகட்டல்களையும், வழிகாட்டல்களையும் வழங்கத் தீர்மான…
-
- 0 replies
- 336 views
-