Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. கசினோ வர்த்தமானி அறிவித்தல்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேறின! - எதிர்த்து வாக்களித்தது ஹெல உறுமய. [saturday, 2014-04-26 09:18:39] கசினோ சூதாட்டம் குறித்த இரண்டு வர்த்தமானி அறிவித்தல்கள் நேற்று பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளன. இந்த வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக ஆளும் கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஜாதிக ஹெல உறும கட்சி வாக்களித்திருந்துள்ளது. தந்திரோபாய அபிவிருத்தி சட்டம் என்ற பெயரில் மூன்று வர்த்தமானி அறிவித்தல்கள் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன. நேற்று அமுன்தினம் இந்த வர்த்தமானி அறிவித்தலின் முதலாம் அறிவிப்பு நிறைவேற்றப்பட்டது. நேற்று பாராளுமன்றில் நடைபெற்ற வாக்கெடுப்பில் மேலும் இரண்டு வர்த்தமானி அறிவித்தல்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இரண்டாம் வர்த்த…

  2. (ஜே.ஜி. ஸ்டீபன் - ப. பன்னீர்ச்செல்வம்) ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்குத் தயாரென ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ அறிவித்துள்ளார். எனவே ஜனாதிபதி தேர்தலை உடனடியாக நடத்துமாறு நாம் இந்த சபையில் சவால் விடுக்கின்றோம். நாம் தயாராகவே இருக்கின்றோம். எமது ஜனாதிபதி வேட்பாளர் குறித்து அரசு கவலைப்படத் தேவையில்லை. ஐ.தே.க உரிய நேரத்தில் மஹிந்தவை வீழ்த்தக்கூடிய சூப்பர் ஸ்டார் வேட்பாளரை நிறுத்துவோம். இதற்கு அரசாங்கம் தயாரா என ஐ.தே.க எம்.பி ஜோசப் மைக்கல் பெரேரா இன்று சபையில் கேள்வி எழுப்பினார். பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற செயல் நுணுக்க அபிவிருத்தி கருத்திட்டம் மீதான இரண்டாம் மூன்றாம் கட்டளைகள் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு சவால் விடுத்து கேள்வியும் எழுப்…

  3. குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக நாட்டில் ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்த முயற்சி! - ஜனாதிபதி மஹிந்த குற்றச்சாட்டு. [saturday, 2014-04-26 09:37:08] குறுகிய அரசியல் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதற்காக நாட்டில் ஸ்திரமற்ற நிலைமையை உருவாக்கும் முயற்சியில் சிலர் ஈடுபட்டுள்ளதாக, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அலரி மாளிகையில் நேற்று தொழிற்சங்கத் தலைவர்களுடன் நடத்திய மேதினம் தொடர்பான சந்திப்பிலேயே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இதனைத் தெரிவித்தார். அங்கு கருத்து வெளியிட்ட அவர்- வெற்றி கொண்ட சுதந்திரத்தையும், அபிவிருத்தியையும் காட்டிக் கொடுக்கும் இந்த சக்திகளுக்கு இடம் கொடுக்க வேண்டாம்.மே தினத்தில் உழைக்கும் மக்களின் சக்தியை உலகுக்கு காண்பிப்பதற்கு ஒன்று…

  4. பொதுபல சேனாவின் குற்றச்சாட்டை மன்னார் ஆயர் நிராகரிப்பு! [saturday, 2014-04-26 09:12:05] மன்னார், யாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயர்கள் தேசத்துரோகக் குற்றங்களைப் புரிந்திருப்பதான பொதுபல சேனாவின் குற்றச்சாட்டை, மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் நிராகரித்துள்ளார். மன்னார், யாழ்ப்பாணம் ஆகிய கத்தோலிக்க மறைமாவட்ட ஆயர்கள் இருவரும் தேசத்துரோகக் குற்றங்களைப் புரிந்திருப்பதாகக் குற்றம் சுமத்தியுள்ள பொதுபலசேனா அமைப்பு அவர்கள் இருவரையும் கைது செய்ய வேண்டும் என்று கோரி, காவல்துறையினரிடம் முறைப்பாடு ஒன்றைச் செய்திருந்தது. இது தொடர்பாக கருத்துத் தெரிவித்த மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப், அவர்களுடைய கூற்று அர்த்தமற்ற கூற்று என்று நிராகரித்திருக்கின்றார். பொதுபலசேனா எல்லா விடய…

  5. மோட்டார் சைக்கிளில் வந்து, கடுவளை ரணால பகுதியிலுள்ள வர்த்தக நிலையத்தில் வைத்து பெண்ணொருவரின் தங்கச்சங்கிலியை அறுத்தவரை நோக்கி மேற்கொண்ட துப்பாக்கிப்பிரயோகத்தில் அக்கடை உரிமையாளரின் உறவினர் ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரிவித்த பொலிஸார், சங்கிலியை அறுத்தவர் தப்பியோடிவிட்டதாக தெரிவித்தனர். சிகரட் வாங்குபவர் போல வந்தவரே இவ்வாறு கொள்ளையடித்து கொண்டு தப்பியோடிவிட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/108262-2014-04-26-10-41-39.html

  6. ஈழத்து காந்தி எனப் போற்றப்படும் தந்தை செல்வாவின் 37 ஆவது ஆண்டு நினைவுநாள் நிகழ்வுகள் இன்று காலை 9.30 மணியளவில் யாழில் அமைந்துள்ள தந்தை செல்வா சதுக்கத்தில் இடம்பெற்றது. தந்தை செல்வாவின் சிலைக்கு மலை மாலை அணிவிக்கப்கட்டு மலரஞ்சலி செலுத்தியதைத் தொடர்ந்து நினைவுப் பேருரை இடம்பெற்றது. நிகழ்வின் நினைவுப் பேருரையை ஓய்வு நிலை நீதிபதி திருநாவுக்கரசு நிகழ்த்தினார். இந்த நிகழ்வில் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஈ.சரவணபவன் சிறிதரன் தமிழரசுக் கட்சியின் செயலாளர் மாவை சேனாதிராஜா மற்றும் தழிழ் தேசிய கூட்டமைப்பின் மாகாணசபை உறுப்பினர்கள் தந்தை செல்வாவின் ஆதரவாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். http://ww…

  7. நெடுந்­தீ­வி­லி­ருந்து குதி­ரை­களைக் கடத்­தி­ய­வர்­க­ளுக்கு உத­வி­ய­தாகச் சந்­தே­கிக்­கப்­ப­டு­கின்ற நெடுந்­தீவுப் பொலிஸ் பொறுப்­ப­தி­கா­ரிக்கு உட­ன­டி­யாக இட­மாற்றம் வழங்­கப்­பட்­டுள்­ளது என யாழ்.மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் விமல சேனா தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், நெடுந்தீவிலிருந்து பிற இடங்களுக்கு சிலர் குதிரைகளைக் கடத்துவதாகவும் அதற்கு நெடுந்தீவுப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உடந்தையாக இருப்ப தாகவும் எமக்குத் தகவல் கிடை-த்திருந் தது. இதற்கமைய உடனடியாகவே குறி த்த பொலிஸ் நிலையப் பொறுப்பதி காரி க்கு முல்லைத்தீவு மாவ-ட்டத்-திற்கு இட மாற்றம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இக்குழுவின் செயற்பாடுகளை விசாரிப்பதற்காக உதவிப் பொலிஸ் அத்தியட்…

    • 0 replies
    • 376 views
  8. பொலிஸ் கான்ஸ்டபிள்களுக்கான விண்ணப்பங்கள் கோரல் பெண் உப பொலிஸ் பரிசோதகர் மற்றும் பெண் பொலிஸ் கான்ஸ்டபிள்களுக்கான ஆட்சேர்ப்பிற்கான விண்ணப்பங்கள் பொலிஸ் திணைக்களத்தினால் கோரப்படவுள்ளதாக யாழ். தலைமைப் பொலிஸ் நிலையத்தில் நடைபெற்ற வாராந்த பத்திரிகையாளர் சந்திப்பின் போது யாழ். பிரதேச சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் டபிள்யு.பி.விமலசேன வெள்ளிக்கிழமை (25) தெரிவித்தார். யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் றொஹான் டயஸின் வேண்டுகோளுக்கு இணங்க வட மாகாணத்தில் 100 பெண் உப பொலிஸ் பரிசோதகர்களுக்கும், 400 பெண் பொலிஸ் கான்ஸ்டபிள்களுக்குமான விண்ணப்பங்கள் இலங்கை பொலிஸ் திணைக்களத்தினால் கோரப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார் http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08…

    • 0 replies
    • 338 views
  9. கல்விக்குக் கைகொடுப்போம் என்னும் தொனிப்பொருளில் மறைந்த தினக்குரல் ஊடகவியலாளர் செல்வரத்தினம் ரூபனின் அஞ்சலி நிகழ்வு நேற்று நடைபெற்றது. செந்தமிழ் விளையாட்டுக்கழக தலைவர் ஜெயந்தன் தலைமையில் நேற்று பிற்பகல் 3.00 மணியளவில் அராலி மத்தி அம்பாள் கடற்றொழிலாளர் சங்க மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் உதயன் குழுமப் பணிப்பாளருமாகிய ஈ.சரவணபவன் கலந்துகொண்டிருந்தார். இதன் போது இயற்கை மரணமடைந்த ஊடகவியலாளர் ரூபனின் உருவப்படத்துக்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி உரையாற்றிய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் உதயன் குழுமப் பணிப்பாளருமாகிய ஈ.சரவணபவன். இத்தகைய இயற்கை மரணம் எய்தியவர…

  10. நானாட்டான் பிரதேசசபையின் மாதாந்த பொதுக்கூட்டம் கடந்த வியாழக்கிழமை(24) இடம் பெற்ற போது சபை உறுப்பினர்கள் ஒருமித்து வெளிநடப்புச்செய்துள்ளதுடன், சபை புறக்கணிப்பில் ஈடுபடப்போவதாகவும் ஏகமனதாக தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, நானாட்டான் பிரதேச சபையின் 2014ம் ஆண்டிற்கான மாதாந்த பொதுக்கூட்டம் ஒவ்வொரு மாதமும் மூன்றாவது வியாழக்கிழமை நடைபெறுவது வழமையாகும். இம்மாதம் மூன்றாவது வியாழக்கிழமை விடுமுறை நாள்கள் அதிகமாக இருந்ததால் நான்காவது வியாழக்கிழமை காலை 9.00 மணிக்கு சபை அமர்வு இடம்பெறும் என்று தெரிவித்து செயலாளரினால் ஒப்பமிடப்பட்டு சபை உறுப்பினர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டிருக்கிறது. இந்நிலையில் அறிவித்தலுக்கு அமைய வியாழக்கிழமை (24.04.2014) அமர்…

    • 0 replies
    • 381 views
  11. போலி அகதிகளை இலங்கைக்கு நாடுகடத்த அவுஸ்ரேலியா திட்டம்! - கோதபாய ராஜபக்ஷவுடன் பேச்சு. [saturday, 2014-04-26 09:54:20] போலி புகலிடக் கோரிக்கையாளர்களை நாடு கடத்துவதற்கு அவுஸ்திரேலியா திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கை அரசாங்கத்துடன் அவுஸ்திரேலியா அரசாங்கம் இது தொடர்பில் இணக்கப்பாடுகளை ஏற்படுத்திக் கொண்டுள்ளது. கடந்த காலங்களில் அவுஸ்திரேலியாவில் போலியான முறையில் புகலிடம் பெற்றுக் கொண்டவர்களை நாடு கடத்துவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.இந்த விடயம் குறித்து இலங்கை அரசாங்கத்துடன் அவுஸ்திரேலிய எல்லைப் பாதுகாப்புப் பிரிவு இணைந்து செயற்பட்டு வருகிறது. கடந்த கால அரசாங்கங்களின் போது சட்டவிரோதமான முறையில் நாட்டுக்கு பிரவேசித்து புகலிடம…

  12. இலங்கைக்கு எதிராக பொருளாதாரத் தடை - பிரித்தானியாவுக்கு ஆர்வமில்லையாம். [saturday, 2014-04-26 09:21:21] இலங்கைக்கு எதிராக பொருளாதாரத் தடைகளை விதிப்பதில் ஆர்வம் காட்டவில்லை என்று பிரித்தானியா தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜோன் ரான்கீன், ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் முன்னேற்றம் ஏற்பட வேண்டும். பொருளாதாரத் தடை விதிப்பது ஓர் முக்கியமான விடயமன்று. இலங்கைக்கு எதிராக பொருளாதாரத் தடைகளை விதிக்கும் அதிகாரம் ஐ.நா மனிதஉரிமைப் பேரவைக்கு கிடையாது. எனது அறிவுக்கு எட்டிய வகையில் எந்தவொரு நாடும் இலங்கைக்கு எதிராக பொருளாதாரத் தடைகளை விதிக்குமாறு கோரவில்லை. இலங்கையுடன் வலுவான பொருளா…

  13. நெடியவனுக்கு எதிரான சிகப்பு எச்சரிக்கை இணையத்தில் 26 ஏப்ரல் 2014 நெடியவனுக்கு எதிரான சிகப்பு எச்சரிக்கை இணையத்தில் பிரசூரிக்கப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்களில் ஒருவராக அரசாங்கத்தினால் அடையாளப்படுத்தப்பட்டுள்ள நெடியவனுக்கு எதிராக சர்வதேச காவல்துறையின் சிகப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நெடியவன் தொடர்பிலான இணைய சிகப்பு எச்சரிக்கை இதுவரையில் வெளியிடப்படவில்லை என அண்மையில் நோர்வே தெரிவித்திருந்தது. எனினும், தற்போது சிகப்பு எச்சரிக்கை இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இலங்கை பயங்கரவாதத்துடன் தொடர்புடைய குற்றவாளிகளின் வரிசையில் நெடியவனின் பெயரை சர்வதேச காவல்துறை இணைத்துள்ளது. அண்மையில் அரசாங்கத்தினால் நெடியவன் மற்றும் அவரது தன்னார்வ தொண்டு நிறு…

  14. மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கொக்கட்டிச்சோலை பகுதியில் மீன்பிடித் தொழிலில் 60 வயதிற்கும் மேற்பட்ட பெண்கள் மிகவும் ஆர்வம் காட்டி வருகின்றனர். மேற்படி பகுதியிலுள்ள கால்வாய்களிலும் நீரோடைகளிலும் 15 பெண்கள் நீரினுள் மூழ்கி மீன்களை பிடிக்கின்றனர். சுமார் 10 வருடங்களுக்கும் மேலாக இவ்வாறு மீன்களை பிடித்து வருவதாக இப்பெண்கள் தெரிவித்தனர். நாளாந்தம் பிடிக்கும் சிறிய மீன்களை 100 முதல் 150 ரூபாவுக்கு விற்பனை செய்வதாகத் தெரிவித்த இப்பெண்கள், சில வேளைகளில் தங்களது வீடுகளுக்கும் கொண்டுசெல்வதாகவும் கூறினர். (படங்கள்: எம்.எஸ்.எம்.நூர்தீன்) http://tamil.dailymirror.lk/--main/108102-2014-04-25-03-20-00.html

    • 2 replies
    • 501 views
  15. மீண்டும் சீனாவுக்குப் பறக்கிறார் ஜனாதிபதி மஹிந்த! [Friday, 2014-04-25 08:48:19] ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ அடுத்தமாதம் இரண்டாம் வாரத்தில் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு சீனாவுக்குச் செல்லவுள்ளதாக அலரி மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன. இதன்போது சீனாவுடன் பல ஒத்துழைப்பு உடன்படிக்கைகளில் அவர் ஒப்பமிடுவார் என்றும் தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதியுடன் அமைச்சர்கள் பலரும் சீனாவுக்கு விஜயம் செய்வர் என்றும் கூறப்படுகிறது. சர்வதேச ரீதியில் இலங்கைக்கு எதிரான அழுத்தங்கள் அதிகரித்துவரும் நிலையிலேயே, அவற்றை சமாளித்து எதிர்கொள்ளும் தந்திரோபாயத்தின் ஓர் அங்கமாகவே, ஜனாதிபதி சீனாவுக்கு விஜயம் செய்கிறார் என்று சில வட்டாரங்கள் தெரிவித்தன. http://seithy.com/breifNews.php?newsID=108076&c…

  16. ரஷ்யாவிற்கும், சிறீலங்காவிற்கும் இடையில் அணுசக்தி தொடர்பான அறிவை பரிமாற்றிக்கொள்ளும் வகையிலான செயற்றிட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன்பொருட்டு, ரஷ்யாவின் அணுசக்தி அதிகார சபையின் பிரதிநிதிகள் சிலர் சிறீலங்காவிற்கு பயணம் மேற்கொள்ளவுள்ளதாக அணுசக்தி அதிகார சபையின் தலைவர் கலாநிதி ரஞ்ஜித் விஜேவர்த்தன குறிப்பிட்டார். சிறீலங்காவின் அணு ஆராய்ச்சி ஆய்வு கூடமொன்றை நிர்மாணிப்பது தொடர்பில் அவர்களுடன் கலந்துரையாடவுள்ளதாக அவர் தெரிவித்தார். அணுசக்தி தொடர்பான வளங்களை அதிகரிக்க வேண்டிய தேவை தற்போது ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அதிகார சபையின் தலைவர், அதற்காக பாடசாலைகளில் அணுசக்தி தொடர்பான பாடவிதானங்களை அதிகரிக்க உள்ளதாக சுட்டிக்காட்டினார். செயன்முறை ரீதியில் விடயங்களை கற்க வேண்டியுள்…

    • 3 replies
    • 368 views
  17. ரமழான் பெருநாளை முன்னிட்டு சவூதி அரேபிய அரசாங்கத்தினால், இலங்கைக்கு 200 மெற்றிக் தொன் பேரீட்சை பழங்கள், இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் அப்துல் அஸீஸ் அல் ஜும்மாவினால் வெளிவிவகார அமைச்சர் நியோமல் பெரேராவிடம் இன்று(25) கையளிக்கப்பட்டது. http://tamil.dailymirror.lk/--main/108170-2014-04-25-10-24-07.html

    • 2 replies
    • 721 views
  18. ரீ.எல்.ஜவ்பர்கான், எஸ்.பாக்கியநாதன் தற்போதைய வெப்பமான காலநிலைக் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளரிப்பழம் மற்றும் சிகப்பு வத்தவப்பழங்கள் அதிகளவு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. ஆரையம்பதி பிரதேச செயலகப்பிரிவுள்ளள கிரான்குளம், புதுக்குடியிருப்பு தாளங்குடா மற்றும் கொக்கட்டிச்சோலை பகுதிகளிலும் வெள்ளரிப்பழம் அதிகளவில் செய்கை பண்ணப்பட்டு வருகின்றது. ஒரு வெள்ளரி பழம் 75 ரூபாய் முதல் 150 ரூபாய் வரையும் விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது. இதேவேளை மட்டக்களப்பில் செவ்வாய்க்கிழமை மு.ப.11.30 மணிக்கு வெப்பநிலை 33.4 பாகை சென்றிகிரேட் என வானிலை நிலையப் பொறுப்பதிகாரி கே.சூரியகுமாரன் தெரிவித்தார். இவ் அளவீடுகள் தலா முண்று மணித்தியாலங்களுக்கு ஒருதடவை அளவிடப்…

    • 7 replies
    • 2.6k views
  19. கசினோ சூதாட்ட சட்டத்தின் மூலம் மீதான வாக்கெடுப்பின் போது சபையில் பிரசன்னமாகி அதனை எதிர்த்து வாக்களிப்பதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு முதுகெலும்பு இல்லாது போய் விட்டது என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பாராளுமன்றத்தின் இன்று வெள்ளிக்கிழமை அமர்வின் போது இடம்பெற்ற செயல் நுனுக்க அபிவிருத்தி கருத்திட்டத்தின் கீழான கட்டளை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். சுமந்திரன் எம்.பி இங்கு மேலும் கூறுகையில், அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள மேற்படி கட்டளையான கசினோ சூதாட்டத்தை கொண்டதான நிகழ்ச்சி நிரல் இல்லை என்று இங்கு அமைச்சர்களால் கூறப்படுகின்…

    • 1 reply
    • 470 views
  20. சாவகச்சேரிக்கு இன்று வருகிறது பரீட்சார்த்த ரயில்! [Friday, 2014-04-25 16:02:31] வடக்கிற்கான ரயில்சேவை இன்று சாவகச்சேரி வரை பரீட்சார்த்தமாக மேற்கொள்ளப்படவுள்ளது. தற்போது வடக்கிற்கான ரயில் சேவை பளை வரையே நடைபெறுகிறது. அதற்கு அப்பால் கொடிகாமம், சாவகச்சேரி ரயில் நிலையங்கள் வரை ரயில் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. சாவகச்சேரி வரையான ரயில் பாதைகள் மற்றும் ரயில் தரிப்பு நிலையங்களின் வேலைகள் பூர்த்தியடைந்த நிலையில் இன்று சாவகச்சேரிக்கு பரீட்சார்த்த ரயில் சேவை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://seithy.com/breifNews.php?newsID=108094&category=TamilNews&language=tamil

    • 3 replies
    • 509 views
  21. ரிஷாத் பதியுதீனுக்கு எமது பலத்தைக் காட்டுவோம்! - நடப்பது தர்மயுத்தம் என்கிறது பொது பல சேனா. [Friday, 2014-04-25 16:38:25] மதவாதத்திற்கு எதிரான தர்ம யுத்தத்தினை நாம் ஆரம்பித்துள்ளோம் என்று பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். கொழும்பில் விசேட ஊடகவியலாளர் சந்திப்பில், கருத்து வெளியிட்ட அவர், பௌத்த மதத்திற்கு எதிராக நாட்டில் பல வேலைத்திட்டங்கள் இடம்பெறுகின்றது. பௌத்தர்களை மதமாற்றும் வேலைத்திட்டத்தில் முஸ்லிம் தீவிரவாத அமைப்புக்கள் செயற்படுகின்றதோடு சட்டவிரோத முஸ்லிம் குடியேற்றத்தினை அமைச்சர் ரிஷாத் பதியுதீன் செய்வதை கண்டித்தே கடந்த காலங்களில் நாம் குரல்கொடுத்தோம். எனினும் அதை கவனத்தில் கொள்ளாது எம்மையே த…

    • 1 reply
    • 338 views
  22. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உயர் மட்டக் குழுவினர் இன்று காலை நெடுந்தீவுப் பிரதேசத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தனர். இதன் போது கூட்டமைப்பின் ஆதரவாளர்களினால் மாலை அணிவிக்கப்பட்டு அவர்களுக்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. நெடுந்தீவுப் பிரதேசத்திற்கு சென்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரைச் சந்திக்கக் கூடாதென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பிரதிநிதிகள் அப்பகுதி மக்களை மிரட்டியுள்ளனர் எனக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார். கூட்டமைப்பின் பொதுச் செயலாளரும் நடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா, எஸ்.சிறிதரன் எம்.பி வடக்கு மாகாணத்தின் சுகாதார அமைச்சர் வைத்தியர் ப.சத்தியலிங்கம், மீன்பிடி மற்றும் போக்குவரத்து அமைச்சர் ப.டெனீஸ்வரன், மாகாண சபை உற…

    • 0 replies
    • 833 views
  23. நுவரெலியா வசந்த காலத்தை முன்னிட்டு இலங்கை இராணுவத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்ட உணவு விழா நுவரெலியாவில் நடைபெற்றது. மக்கள் மத்தியில் ஆரோக்கிய உணவின் பெறுமதி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த உணவு விழா நேற்று முன்தினம் மாலை நிறைவு பெற்றது. நாட்டின் அனைத்து பிரதேசத்தினதும் உணவுக் கலாசாரங்கள் ஒரே இடத்தில் வெளிப்படுத்தப்பட்டமை இந் நிகழ்வின் பிரதான அம்சமாகும். பல்வேறு விதமான ஒன்பது மாகாணங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் உணவு வகைகள் இங்கே நியாய விலையில் விற்பனை செய்யப்பட்டன. அத்தோடு காதுக்கு இனிமையான இசையும் இடையிடையே வழங்கப்படுகின்றமை புதிய ஒரு அனுபவமாகும். இராணுவத்தினரின் உபசரிப்பு மிகவும் வரவேற்கக்கூடி…

    • 0 replies
    • 466 views
  24. அம்பாந்தோட்டைத் தாக்குதலை நியாயப்படுத்திய ஜனாதிபதி! [Friday, 2014-04-25 08:39:53] அம்பாந்தோட்டையில் ஐதேக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தாக்கப்பட்டதை நியாயப்படுத்தும் வகையில், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நேற்று கருத்து வெளியிட்டுள்ளார். அலரிமாளிகையில், நேற்று ஊடக ஆசிரியர்களை சந்தித்த ஜனாதிபதியிடம் அம்பாந்தோட்டைத் தாக்குதல் குறித்து வினவப்பட்டது. அதற்கு அவர், பல்வேறு தாக்குதல் சம்பவங்களை சுட்டிக்காட்டி அதனை நியாயப்படுத்தினார். 'அப்பிரதேசத்தில் உள்ள ஐதேக முக்கியஸ்தர்களான சஜித் பிரேமதாஸ, வெத ஆராய்ச்சி ஆகியோருடன் அங்கு சென்றிருந்தால் இந்த பிரச்சினை தோன்றியிருக்காது. எந்தப் பிரதேசத்திற்கு அரசியல்வாதிகள் செல்லும் போது அப்பகுதி மக்களுடன் சென்று பார்த்தால் பி…

  25. இலங்கை சிறுமி வரைந்த ஓவியம் ஐநா மன்றத்தின் சுற்றுச்சூழல் செயற்திட்டத்துக்கான ஆசிய பசிபிக் பிராந்திய சிறார் ஓவியப்போட்டியில் இந்த ஆண்டு இலங்கையைச் சேர்ந்த எட்டுவயது மாணவியின் ஓவியம் சிறந்த ஓவியமாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது. இதற்காக அந்த சிறுமிக்கு ஆயிரம் அமெரிக்க டாலர்கள் பரிசும், நைரோபியில் நடக்கும் இந்த பரிசளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்கு அவருக்கும், அவரது பெற்றோர் மற்றும் ஆசிரியருக்கான விமான பயணச் செலவும் வழங்கப்படும். ஐநா மன்றத்தின் சுற்றுச்சூழல் செயற்திட்டத்தின் சார்பில் உலகு தழுவிய அளவில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்தில் ஆண்டுதோறும் பல்வேறு போட்டிகள் நடத்தப்படுகின்றன. இந்த ஆண்டுக்கான சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பிரச…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.