Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. நீர்கொழும்பு வைத்தியசாலையில் யுவதி மரணம் மருத்துவரை அங்கொடைக்கு அனுப்ப உத்தரவு [08 - December - 2007] நீர்கொழும்பு ஆஸ்பத்திரியில் யுவதி ஒருவர் மாடியில் இருந்து விழுந்து மரணமான சம்பவம் தொடர்பாக குற்றஞ் சாட்டப்பட்டுள்ள சந்தேக நபரான டாக்டரை அங்கொடை மனநோய் ஆஸ்பத்தியில் அனுமதித்து சிகிச்சையளிக்குமாறு நீர்கொழும்பு மேலதிக நீதிவான் மகிந்த பிரபத் ரணசிங்க பொலிஸாருக்கு உத்தரவிட்டார். இச்சம்பவம் தொடர்பான விசாரணை வெள்ளிக்கிழமை நடைபெற்ற போது சந்தேக நபர் மனநோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் மனநோய்ப்பிரிவு டாக்டர் அறிக்கை ஒன்றை நீதிமன்றத்தில் சமர்ப்பித்திருந்தார். இதனையடுத்து நீதிவான் அவரை மனநோய் சிகிச்சைக்கு உட்படுத்துமாறும் அத்துடன், சந்த…

  2. கொழும்பின் கைதுகள் தமிழர்களை வெளியேற்றவே -வேலவன்- கொழும்பில் தமிழ் மக்கள் மீதான கெடுபிடிகள் மீண்டும் பெரும்மெடுப்பில் ஆரம்பமாகிவிட்டன. கொழும்பிலும் அதனைச் சூழவுள்ள பகுதிகளிலிருந்தும் தமிழ் மக்களை விரட்டி அடிப்பதான ராஜபக்ச சகோதரர்களின் திட்டத்தின் மற்றுமொரு வழிமுறை இப்பொழுது கடைப்பிடிக்கப்படுகிறது. கொழும்பில் தமிழ் மக்கள் பெருமளவில் வாழ்வது சிங்கள இனவாதிகளுக்கு என்றுமே பிடித்த மானதாக இருந்ததில்லை. அதிலும் இலங்கையிலிருந்தே தமிழ் மக்களை முற்றுமுழுதாக ஒழித்துக்கட்ட முயற்சி எடுத்து வருகையில் சிறிலங்காவின் தலைநகரில் தமிழ் மக்களின் செறிவு அதிகரிப்பதை அவர்களால் எவ்வாறு பொறுத்துக் கொள்ளமுடியும்?. ஆனால் கொழும்பில் தமிழ் மக்களின் செறிவைக் கட்டுப்படுத்த எடுக்கும் …

  3. சிறிலங்கா தலைநகர் கொழும்பின் புறநகர்ப் பகுதியான நுகேகொடவில் வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தப்படவில்லை எனில் வன்னியில் பாடசாலைச் சிறுமிகளை சிறிலங்கா இராணுவம் கிளைமோர் தாக்குதலில் படுகொலை செய்ததை அனைத்துலகம் கண்டித்திருக்குமா? என்று நோர்வே தலைநகர் ஓஸ்லோவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். தொடர்ந்து வாசிக்க

  4. சிறிலங்காவில் தெரிவு செய்யப்பட்ட சில இடங்களில் மட்டும் சோதனைச் சாவடிகளை நிறுவுவதற்கு தலைமை நீதிமன்றத்தின் அனுமதியைப் பெற மகிந்த ராஜபக்ச அரசாங்கம் முடிவு செய்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 726 views
  5. இலங்கை இனப்பிரச்சினை தொடர்பாக அரசியல் தீர்வு காண்பதற்காக நியமிக்கப்பட்ட சிறிலங்காவின் அனைத்துக் கட்சிக் குழுவானது "இறுதித்தீர்வை" எட்டிக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 776 views
  6. கெப்பிட்டிகொல்லாவ மற்றும் வெலி ஓயாவிற்கு இடையில் இயக்கப்படும் பயணிகள் பேரூந்துகளை கிளேமோர் தாக்குதல்களிலிருந்து பாதுகாப்பதற்காக பேரூந்துகளுக்கு இரும்புக் கவசங்களைப் பொருத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. தொடர்ந்து வாசிக்க

    • 5 replies
    • 1.7k views
  7. சிறிலங்கா கடற்படையினரால் 300-க்கும் மேற்பட்ட தமிழ்நாட்டு மீனவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதில் "உள்நோக்கம்" எதுவும் இல்லை என்று இந்திய கடற்படையின் தமிழ்நாடு பிரிவு தளபதி ஹல்டெரென் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

  8. சிறிலங்காவில் வகை-தொகையின்றி கைது செய்யப்பட்ட தமிழர்களை விடுவிக்க வேண்டும் என்று ஜப்பான் நாட்டைச் சேர்ந்த அனைத்து வகையான இனவெறி மற்றும் இனப்பாகுபாட்டுக்கு எதிரான அனைத்துலக இயக்கம் வலியுறுத்தியுள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 1k views
  9. மாத்தரை கப்புறுப்பிட்டி வீதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் 12:15 மணியளவில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயணைப்புப் படையினரால் தீயை கட்டுப்பாட்டிற்குக் கொண்டுவர முடியாததனால் கடற்படை ,வான்படை தீயணைப்புப் படையினரின் உதவியும் பெறப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு ஊடக அமைச்சர் லக்ஷ்மன் யாப்பாவும் சென்றுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. எந்தவித உயிர்ச் சேதமும் இல்லை எனவும் அறியப்படுகின்றது. ஆயினும் அருகிலிருந்த கடைத் தொகுதிகளுக்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது என தெரியவருகின்றது. சூரிய கிரகணமா? விபத்தா என்பது இன்னும் தெரியவரவில்லை. ஜானா

    • 2 replies
    • 2.5k views
  10. சிறிலங்காவில் கொல்லப்பட்ட வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமரை இந்திய அரசாங்கமானது "மீண்டும் வெளிவிவகார அமைச்சராக்கிய" விநோத சம்பவம் நிகழ்ந்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 1.6k views
  11. கொழும்பு குண்டுவெடிப்புக்களும் தென்னிலங்கையின் பதற்றமும் -எரிமலை- கொழும்பிலே கடந்த வாரம் இடம்பெற்ற இரண்டு குண்டுவெடிப்புக்களும் அதனைத் தொடர்ந்து பரவிவரும் வதந்திகளும் சிங்கள மக்கள் மத்தியில் பாரிய குழப்பத்தையும் அச்சத்தையும் தோற்றுவித்துள்ளது. சிங்களப் பகுதிகளிலே இயல்பு வாழ்க்கை முற்றாகச் சீர்குலைந்துள்ளதோடு அங்கு பரவிவரும் வதந்திகள் காரணமாக தென்னிலங்கையிலே மக்கள் தமது வீடுகளை விட்டு வெளியேறக் கூட அச்சமடைந்துள்ளதுடன் பாடசாலைகள், அலுவலகங்கள் என்பன பெருமளவிற்கு வெறிச்சோடிக் காணப்படுகின்றன. அத்துடன் அண்மையில் கொழும்பில் விநியோகப்படும் குழாய்த் தண்ணீரில் நஞ்சு கலக்கப்பட்டுள்ளது என்ற வதந்தி காரணமாக மக்கள் குழாய் நீரைக் குடிப்பதற்கோ அல்லது சமையலுக்கு உபயோகிப்பத…

    • 0 replies
    • 1.1k views
  12. இன்னும் 2, 3 அடிகள் விழுந்தால்தான் தமிழீழ விடுதலைப் புலிகள் பேச்சுக்கு வருவார்கள் என்று சிறிலங்காவின் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 2 replies
    • 1.4k views
  13. தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை சுட்டுக்கொல்ல இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி ஆலோசனை நடத்தியது உண்மைதான் என்று தமிழ்நாட்டிலிருந்து வெளிவரும் வார இதழான துக்ளக்கின் ஆசிரியர் "சோ" தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

  14. சிறிலங்காவில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கண்காணிப்புக் குழு அமைக்க மனித உரிமைகள் கண்காணிப்பகம் மற்றும் அனைத்துலக மன்னிப்புச் சபை ஆகியன வலியுறுத்தியுள்ளன. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 667 views
  15. இ.தொ.காவின் செயற்பாடு 08.12.2007 தலைநகர் கொழும்பிலும் சுற்றுப்புறங்களிலும் கடந்த சில நாட்களாக வகை தொகையின்றி கைது செய்யப்பட்டு இன்னும் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழர்களின் விவரப் பட்டியலை நாளை மறுதினம் சமர்ப்பிக்கும்படி உயர் நீதிமன்றம் பொலிஸாருக்குக் கட்டளை பிறப்பித்திருக்கின்றது. இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் கட்சி தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனுக்களை விசாரணைக்கு ஏற்றே இந்த உத்தரவை உயர்நீதிமன்றம் பிறப்பித்திருக்கின்றது. இந்த விடயங்கøளை ஒட்டி, மலையகத் தமிழரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் செயற்பாடு குறித்து தமிழர் தரப்பில் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்படுவதால் அது குறித்து இப்பத்தியில் சிலவற்றைச் சுட்டிக்காட்டுவது…

  16. 14 இலங்கையர்கள் கரீபியன் தீவில் கைது [08 - December - 2007] கரீபியன் தீவொன்றில் வைத்து 14 இலங்கையர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கரீபியன் தீவானது மொன்டிசேராவில் படகொன்றில் சென்று நேற்று முன்தினம் வியாழக்கிழமை தரையிறங்கிய போதே இந்த 14 இலங்கையர்களும் அந்நாட்டு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். வெனிசுலா ஊடாக படகொன்றில் சென்ற இவர்கள் அமெரிக்காவினுள் நுழையும் நோக்கில் மொன்டி சேரா தீவினுள் தரையிறங்கியிருக்கலாமென அந்நாட்டு பொலிஸார் தெரிவித்தனர். இவர்கள் 14 பேரும் இலங்கையர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ள போதும் இவர்களிடம் எதுவித ஆவணங்களும் இல்லாததால் இவர்கள் குறித்து மேலதிக விபரங்கள் எதுவும் தெரியவரவில்லையென அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது குற…

  17. அமெரிக்க ஜனாதிபதியும் அம்பலமாகும் பொய்களும் [08 - December - 2007] சதாம் ஹுசெய்ன் குவித்து வைத்திருந்த பேரழிவு தரும் ஆயுதங்கள் உலகிற்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்கியதாகக் காரணம் கூறிக் கொண்டு சுமார் ஐந்து வருடங்களுக்கு முன்னர் ஈராக்கை ஆக்கிரமித்த அமெரிக்கா இன்றுவரை அந்த ஆயுதங்களில் எந்தவொன்றையுமே கண்டுபிடிக்கவில்லை. சுயாதிபத்தியம் கொண்ட நாடொன்றை ஆக்கிரமிப்பதற்காக முன்னாள் பிரிட்டிஷ் பிரதமர் ரொனி பிளயருடன் சேர்ந்து முழு உலகிற்குமே படுபொய்யைக் கூறிய அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ.புஷ் ஈரான் அணுவாயுதங்களைத் தயாரிப்பதற்கான திட்டங்களை முன்னெடுக்கிறது என்று குற்றஞ்சாட்டி அந்த நாட்டுக்கு எதிராகவும் கடந்த இரு வருடங்களாகப் போர் முரசு கொட்டி வருகின்றார். மூன்றாம் உலகப் …

  18. கிளிநொச்சி, தமது கண்ணுக்கெட்டிய தூரத்திலிருப்பதாக தெரிவித்த அமைச்சா கெஹலிய, பிரபாகரனின் பின் சென்றால் தமிழ் மக்களின் விடுதலையை த.தே.கூட்டமைப்பினால் ஒரு போதும் வென்றெடுக்க முடியாதெனவும் குறிப்பிட்டார். வியாழன் அன்று பாராளுமன்றில் அவசரகால சட்ட நீடிப்புப் பிரேரணைக்கு பதிலளித்து உரையாற்றிய அவர் மேலும் தெரிவித்ததாவது :- 'நாட்டின் தற்போதுள்ள போர்ச் சூழல் நிலக்கான முழுப் பொறுப்பையும் பிரபாகரனே ஏற்கவேண்டும். கடந்த கால சகல பேச்சுவார்த்தைகளும் தோல்வியடைந்தமைக்கும் புலிகளே பொறுப்பு. மனச்சாட்சியுடன் சிந்திக்கும் த.தே.கூட்டமைப்பு எம்.பி.க்கள் பிரபாகரன் அரசியல் தீர்வில் நாட்டமற்றவரென்பதை ஏற்றுக்கொள்வார்கள். புலிகளுக்கு இச் சபையில வக்காலத்து வாங்காவிட்டால் கூட்டமைப்பு எ…

  19. அவரசகால சட்டத்தை மேலும் ஒருமாத காலம் நீடிப்பதற்கான பிரேரணை 126 மேலதிக வாக்குகளால் பாராளுமன்றில் நிறைவேறியது. ஆதரவாக 141 வாக்குகளும எதிராக 15 வாக்குகளும் அளிக்கபடப்டன. வாக்கெடுப்பில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், மலையக மக்கள் முன்னணி ஆகியன கலந்து கொள்ளவில்லை. த.தே.கூட்டமைப்பு எம்.பி.களுடன் இணைந்து பிரேரணைக்கு எதிராக மே.ம.முன்னணியின் தலைவர் மனோ கணேசனும், ஐ.தே.க.எம்.பி. மகேஸ்வரனும் வாக்களித்தனர். இதே வேளை 2008 ம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டத்தின் பாதுகாப்பு அமைச்சிற்கான செலவினங்கள் தொடர்பான குழுநிலை விவாதத்தின் இறுதியில் த.தே.கூட்டமைப்பினர் கேட்டுக் கொண்டதற்கு அமைய தனித்தனியாக பெயர் குறிப்பிட்டு வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஆதரவாக 141 வாக்குகளு…

  20. 'புலிகளின் குரல் வானோலி நிலையம மீது இலங்கை விமானப்படை மேற்கொண்ட வான்வழித் தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்து இவ்வார ஆரம்பத்தில் 'யுனெஸ்கோ' வால் விடுக்கப்பட்ட ஊடக அறிக்கை தொடர்பான விவாகாரம் மீள முழுமையாகப் பரிசிலிக்கப்படும் என 'யுனெஸ்கோ' பணிப்பாளர் நாயகம் கொய்சிரோ மட்சுரா உறுதியளித்துள்ளார். இவ்வாறு இலங்கை வெளிவிவகார அமைச்சு நேற்று வெளியிட்ட பத்திரிகை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றத

  21. தமிழ் மக்களின் கைதுக்கு எதிராக இ.தொ.கா. தாக்கல் செய்த மனு விசாரணைக்கு ஏற்புகைதானோரது விபரங்களை சமர்ப்பிக்க உத்தரவு வீரகேசரி நாளேடு தமிழ் மக்கள் கைது செய்யப்படுகின்றமைக்கு எதிராக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தாக்கல் செய்த அடிப்படை மனித உரிமை மீறல் மனுவினை உயர் நீதிமன்றம் நேற்று விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது. இ.தொ.கா. வின் செயலாளர் ஆறுமுகன் தொண்டமான், தலைவர் முத்து சிவலிங்கம் ஆகியோர் தாக்கல் செய்திருந்த அடிப்படை மனித உரிமை மீறல் மனு மீதான பூர்வாங்க விசாரணை நேற்று பிரதம நீதியரசர் சரத் என். சில்வா, நீதியரசர்களான நிமால் காமினி அபயரட்ண, பாலப்பட்டபெந்தி ஆகியோர் முன்னிலையில் நேற்று நடைபெற்றது. இதன் போது மனுவினை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதியரசர்கள் கைது செய்யப்பட்ட…

  22. மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரபல வர்த்தகரும் ஆட்டோ சாரதியும் ஆயுததாரிகளினால் கடத்தல். இக் கடத்தல் சம்பவத்தைத் தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை ஒன்று ஏற்பட்டுள்ளது மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரபல வர்த்தகரும் கட்டட ஒப்பந்தக்காரர் சங்கத்தின் தலைவருமான மகேந்திரன் என அழைக்கப்படும் முத்துக்குமார் மகேந்திர ராஜாவும், செங்கலடி பிரதேச ஆட்டோ சாரதியான செங்கலடி பிரதான வீதியைச் சேர்ந்த பொன்னம்பலம் சந்திரகுமார் (வயது 39) ஆகிய இருவரும் இனந்தெரியாத ஆயுததாரிகளினால் கடத்திச் செல்லப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் செங்கலடி இருந்து கார் ஒன்றில் (மகேந்திர ராஜாவுடைய கார்) மட்டக்களப்பு நோக்கி சென்று கொண்டிருக்கும் வேளையில் தன்னாமுனை பிரதேசத்தில் வைத்து ஆயுததாரிகளினால் கடத்தப்பட்டுள்ளனர். …

    • 0 replies
    • 956 views
  23. மன்னார் அடம்பனில் இலங்கை இராணுவத்தினரின் முன்னேற்ற முயற்சி வெற்றிகரமாக முறியடிப்பு. வெள்ளிக்கிழமை காலை மன்னார் அடம்பன் பகுதியில் இலங்கை இராணுவத்தினர் மேற்கொண்ட பெருமெடுப்பிலான முற்னேற்ற முயற்சி விடுதலை புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. பலத்த பல்குழல் ரொக்கட் தாக்குதல் மற்றும் ஆட்றலி எறிகணை தாக்குதல்களை மேற்கொண்டிவாறு படையினர் முன்னேற முயற்சித்ததாகவும் காலை 9 மணி தொடக்கம் பிற்பகல் 3 மணிவரை கடும் சமர் நடைபெற்றதாகவும் மன்னார் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதன் போது ஏற்பட்டுள்ள சேதவிபரங்கள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. தமிழ் நெற்.

  24. யுத்த நிறுத்த உடன்படிக்கையை கிழித்தெறிந்து புலிகளை இலங்கையில் தடை செய்ய வேண்டும்அரசாங்கத்திடம் ஜே.வி.பி. கோரிக்கை வீரகேசரி நாளேடு விடுதலைப் புலிகளுக்கு எதிராக அரசாங்கம் மேற்கொண்டு வரும் பதில் தாக்குதல்களை கைவிட்டு முழு மூச்சிலான தாக்குதல்களை நடத்தி புலிகளை அழித்தொழிக்க வேண்டும். யுத்த நிறுத்த உடன்படிக்கையை கிழித்தெறிந்து புலிகளை இலங்கையில் தடை செய்ய வேண்டும் என்று ஜே.வி.பி. கோரிக்கை விடுத்துள்ளது. கெபித்திகொல்லாவையில் கடந்த 5 ஆம் திகதி இடம்பெற்ற குண்டு தாக்குதலை கண்டித்த ஜே.வி.பி. யின் அரசியல் சபை விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தோல்வியின் காரணமாய் செய்வதறியாது குழம்பிப் போயுள்ள…

  25. ஜனாதிபதி மஹிந்த ஜப்பானுக்கு விஜயம் வீரகேசரி நாளேடு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாளை ஞாயிற்றுக்கிழமை ஜப்பானுக்கு விஜயம் செய்யவுள்ளார். 11ஆம் திகதி வரை அங்கு தங்கியிருக்கும் ஜனாதிபதி பலதரப்பட்டவர்களையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.ஜப்பானிய பிரதமர் யூசுவேக புக்குடாவின் அழைப்பினை ஏற்றே ஜனாதிபதி இவ்விஜயத்தினை மேற்கொள்கிறார். இதன்போது இலங்கைக்கும், ஜப்பானுக்குமிடையேயான வரலாற்று உறவுகள் மற்றும் அபிவிருத்தித் திட்டங்கள் போன்ற பல விடயங்கள் தொடர்பாக ஆராயப்படவுள்ளதோடு ஜப்பானிய ஜனாதிபதி சந்திக்கவுள்ளார். அத்தோடு அதிவேக நெடுஞ்சாலைகளை அமைப்பதில் இலங்கைக்கு ஜப்பõன் பாரிய அளவில் நிதியுதவி செய்து வருகிறது. இது தொடர்பாகவும் கலந்துரையாடவுள்ளது. 200 இலங்கையர…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.