ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142803 topics in this forum
-
எந்தவொரு நாட்டிலும் யுத்தத்தை நடத்திக்கொண்டு அபிவிருத்தியை ஏற்படுத்த முடியாது. யுத்தத்தின் மூலம் அபிவிருத்தியை ஏற்படுத்துவதற்கு மாறாக இழப்புக்களையே அதிகமாக காணக் கூடியதாக இருக்கும். சமாதானத்தின் வழியை பின்பற்றுவதன் மூலம் அபிவிருத்தியின் இலக்கை அடைய முடியும் ஈடுப்படுபவர்கள், வீடு கட்டுபவர்கள், கணவனை இழந்த பெண்கள், பிச்சையெடுப்பவர்கள் என அனைவருக்கும் கடன் வழங்கினேன். இந்த கடனை வழங்குவதற்காக, பெரியளவிலான ஆவணங்களையும், பிணையாளர்களையும் நாங்கள் கோரவில்லை. முடிந்தளவுக்கு கேட்போருக்கெல்லாம் கடன் வழங்கினோம். இந்த கடனில் 99 வீதமானவை வட்டியுடன் மீளச் செலுத்தப்பட்டுள்ளது. பிச்சையெடுப்பவர்களுக்கு வட்டியில்லாமல் கடன் வழங்கினோம். அந்த கடனைக்கொண்டு, அவர்கள் தொழில் தொடங்கியுள்ளதால்…
-
- 0 replies
- 611 views
-
-
திங்கள் 13-08-2007 17:45 மணி தமிழீழம் [தாயகன்] மூதூர் அரபா நகரில் தொடர்ந்தும் பதற்றம் நிலவுகின்றது - மக்கள் படையினரால் விரட்டியடிப்பு திருகோணமலை மூதூரில் தமிழ் மக்களை மீளக்குடியேறவிடாது தடுத்துவரும் சிறீலங்காப் படையினர், ஏற்கனவே அங்கு தங்கியுள்ள தமிழ்-முஸ்லீம் மக்களை வெளியேற்றும் நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். மூதூர் தெற்கிலுள்ள அரபா நகரில் மீளக்குடியேறியிருந்த 67 குடும்பங்களைச் சேர்ந்த 251 முஸ்லீம்கள் படையினரின் உத்தரவுக்கு அமைவாக வெளியேற்றப்பட்டு, பாலி நகரிலுள்ள பாடசாலையில் தற்காலிகமாகத் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 2006ஆம் ஆண்டு சிறீலங்காப் படையினர் மேற்கொண்ட ஆக்கிரமிப்பின்போதும் இப்பிரதேச மக்கள் இடம்பெயர்வைச் சந்தித்திருந்ததாக அந்தப் பி…
-
- 3 replies
- 1.8k views
-
-
விடுதலைப் போராட்டத்தை சர்வதேசம் ஏற்றுக் கொண்டால் பிரச்சினை தீர்ந்து விடும் [19 - August - 2007] * தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாண பாராளுமன்ற உறுப்பினர் சிவநேசனின் பேட்டி -வன்னியூரான்- தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தை சர்வதேச சமூகம் புரிந்துகொண்டு ஏற்றுக் கொண்டால் இலங்கைப் பிரச்சினையை இலகுவாக தீர்த்துவிடலாமென தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவநேசன் `தினக்குரல்'க்கு வழங்கிய பேட்டியில் தெரிவித்தார். கே : யாழ்ப்பாண பாராளுமன்ற உறுப்பினர்கள் சொந்த மாவட்டத்தில் தமது மக்களோடு நின்று பணியாற்ற முடியாதுள்ள நிலைமை பற்றி? ப : யாழ்ப்பாணத்தில் இராணுவத்தை குவித்து துணை இராணுவக் குழுக்களை சுதந்திரமாக நடமாடவிட்…
-
- 0 replies
- 1.4k views
-
-
சனிக்கிழமை 18 ஓகஸ்ட் 2007 06:45 ஈழம் அ.அருணாசலம் இரு தரப்பும் பேச்சுவார்த்தைக்கு திரும்பி ஒரு அரசியல் தீர்வை காணவேண்டும் என்ற அமெரிக்கா உள்ளிட்ட அனைத்துலக சமூகத்தின் அழுத்தங்கள் எதனையும் சாதிக்கவில்லை என்று "லொஸ் ஏஞ்சல்ஸ் ரைம்ஸ்" நாளேடு தெரிவித்துள்ளது. அந்த நாளேட்டுக்காக கடந்த வியாழக்கிழமை (15.08.07) ஹென்றி சூ எழுதிய ஆய்வுக்கட்டுரையின் தமிழ் வடிவம் வருமாறு: மிகச்சிறிய ஆனால் பல கருத்துக்களை உள்ளடக்கிய ஒரு சொல்லில் ஏன் நாகமுத்து நாகலிங்கம் (வயது 80) தனது வீட்டைவிட்டு வெளியேறினார். ஏன் அவர் அங்கு திரும்பிச் செல்ல விரும்பவில்லை என்பதற்கான விளக்கம் இருந்தது. அவர் கூறிய தயக்கமான வார்த்தை "அச்சம்" என்பது தான். மக்களுக்கு காரணம் தெரியாத காணாமல் போதல் நடவடிக…
-
- 1 reply
- 1k views
-
-
இனப்பிரச்சினைத் தீர்வு யோசனை யானை பார்த்த குருடனது கதையே! அரியநேத்திரன் எம்.பி. கூறுகிறார் ""சர்வகட்சி மாநாடு முன்னெடுத்துச் சென்ற இனப்பிரச்சினைக்கான தீர்வுத்திட்டம் இந்த வாரம் வெளியிடப்படும், அடுத்தவாரம் வெளியிடப்படும் என்பதெல்லாம் சர்வதேச சமூகத்தையும் தமிழர்களையும் ஏமாற்றும் ஒரு நாடகமாகும். யானை பார்த்த குருடன் கதையாகவே இருக்குமே தவிர இதனால் வடக்கு கிழக்கு வாழ் தமிழ் மக்களுக்கு எந்த விமோசனமும் கிடைக்கப்போவதில்லை.'' இவ்வாறு மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் பாக்கியசெல்வம் அரியநேத்திரன் தெரிவித்தார். சர்வகட்சி மாநாடு தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளவை வருமாறு: அமைச்சர் திஸ்ஸ விதாரண தலைம…
-
- 1 reply
- 779 views
-
-
மண்டான் இராணுவ முகாம் அகற்றப்பட்டது. ஜ சனிக்கிழமைஇ 18 ஆகஸ்ட் 2007 ஸ ஜ ஜெயராசா ஸ வடமராட்சியில் மந்திகையில் இருந்து கலிகை சந்தி ஊடாக சாவகச்சேரி செல்லும் பாதையில் அமைந்துள்ள வலிகாமத்தையும் தென்மறாட்சியையும் ஊடறுத்தச் செல்லும் பாதையில் உள்ள மண்டானில் அமைந்திருந்த படை முகாம் நேற்றுமுன்தினம் அகற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து முகாம் அமைந் திருந்த பகுதியில் படையினர் பயன்படுத்தி வந்த வீடுகளின் திறப்புக்களை அவற்றின் உரிமையாளர்களிடம் வழங்கியுள்ளனர். இந்த பிரதேசத்தில் தொடர்சியாக இராணுவத்தினருக்கு பல தாக்குதல்கள் நடாத்தபட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது. http://nitharsanam.com/?art=24156
-
- 2 replies
- 2.1k views
-
-
Aug 18, 2007 at 08:44 AM சிறிலங்கா முனன்னால் ஜனாதிபதி சந்திரிக்கா கொழும்பு வந்து மீன்டும் அரசியலுக்குள் நுழைவார் என பரபரப்பான செய்திகள் அண்மைக்காலமாக வெளிவந்து கொண்டிருந்தன. ஆனால் சந்திரிகா வருவதை தவிர்த்துக்கொண்டார். ஆயினும் யாரும் எதிர்பார்க்காத சூழ்நிலையில் கொழும்பு வந்து அறிக்கை விடத்தொடங்கி விட்டார்.ஆட்சியை விட்டு விலகியிருப்பது சிக்கலாகப் போய்விட்டது.பெரிதாக எதுவும் அலட்டிக்கொள்வதில்லை. தனது பாதுகாப்புச்செலவீனங்களை மகிந்த அரசாங்கம் குறைத்துவிட்டது.தனது பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்; இருப்பதால் இது பெரிய அநியாயமென ஒப்பாரி வைத்ததோடு தேவைக்கேற்ப கொழும்பு வந்து போரவர் . ஆனால் அவர் வரும்போதெல்லாம் சுதந்திரக்கட்சி அதிருப்தியாளர்கள் அவரைச் சந்திப்பதும் ஆறுதல்…
-
- 1 reply
- 715 views
-
-
ஆவணி 18,2007 இலங்கை அரசாங்கத்துக்கு கிழக்கின் மீது ஏற்பட்டிருக்கும் `திடீர்காதல்' தமக்கு பாரிய சந்தேகங்களை தோற்றுவித்துள்ளதாக தெரிவித்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன், கிழக்கை அபிவிருத்தி செய்வதற்கான மக்கள் ஆணை இந்த அரசாங்கத்துக்கு வழங்கப்படவில்லையெனவும் தெரிவித்தார். இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் `சமாதானத்துக்கான வணிகம்' (Business for peace Forum) எனும் கருத்தமர்வு நேற்று முன் தினம் வியாழக்கிழமை ஜெய் கில்டன் ஹோட்டலில் நடைபெற்றபொழுது, அதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே சம்பந்தன் இதனை தெரிவித்தார். கிழக்கில் பாரிய அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்கப்போவதாக அறிவித்துள்ள அரசாங்கம், அப்பகுதி மக்களின் பிரதிநிதிகளென்ற வகைய…
-
- 0 replies
- 539 views
-
-
சனி 18-08-2007 16:03 மணி தமிழீழம் வன்முறைகளுக்கு எதிராக செயற்படும் அனைத்துலகத் தேவாலயங்களின் சபைப் பிரதிநிதிகள் குழு இன்று மன்னார் மறைமாவட்ட ஆயரைச் சந்தித்து பேச்சு நடத்தியுள்ளனர். இந்தியாவைச் சேர்ந்த அருணா ஞானதாசன் தலைமையிலான தேவாலயங்களின் சபைக் குழுவினர் மன்னார் சென்று மன்னார் ஆயர் இராசப்பு ஜோசப் அவர்களைச் சந்தித்துள்ளனர். சந்திப்பின் போது உண்மை இல்லாது போனால் இலங்கையில் சமாதானமும் அமைதியும் சாத்திமில்லா ஒன்று என மன்னார் ஆயார் தேவாலயங்களின் பிரதிநிதிகளிடம் தெரிவித்துள்ளார். தேவாலய பிரதிநிதிகள் குழு வடக்கு கிழக்கிற்கு பயணங்களை மேற்கொண்டிருந்தனர். -நன்றி பதிவு.
-
- 0 replies
- 564 views
-
-
Aug 18, 2007 at 04:41 PM யாழ்ப்பாணம் கல்வியங்காட்டுப் பகுதியில் உள்ள சிறிலங்காப் படையினரின் காவலரண் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இத் தாக்குதலில் படைச்சிப்பாய் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இச்சம்பவம் இன்று அதிகாலை 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. காயமடைந்த படைச்சிப்பாய் பலாலி மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளது. -நன்றி சங்கதி.
-
- 0 replies
- 603 views
-
-
Posted on : Sat Aug 18 8:06:34 EEST 2007 மீண்டும் அமைச்சுப் பதவிகளை இ.தொ.கா. விரைவில் ஏற்கும் வீறாப்புடன் அமைச்சுப் பதவிகளை உதறிவிட்டுச் சென்ற இலங்கைத் தொழி லாளர் காங்கிரஸ் உறுப்பினர்கள் அடுத்த வார இறுதியில் மீண்டும் அமைச்சுப் பதவி களை ஏற்றுக்கொள்ளவிருக்கின்றனர் என அக்கட்சியின் உள்வீட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்விடயம் தொடர்பான திரை மறை வுப் பேச்சுகள் வெற்றியடைந்ததைத் தொடர்ந்து இ.தொ.கா. தலைவர் ஆறுமுகன் தொண்டமான் நேற்று இந்தியா புறப்பட்டார். வாய்வார்த்தைக்காக வீறாப்புடன் வெளி யேறிய நாம் மீண்டும் போய் மண்டியிடக் கூடாது எனக் கட்சிக்குள் ஒரு சாரார் வலியு றுத்திய போதும், பதவிகளில் இருந்தவர் கள் மீண்டும் அவற்றைப் பெற்றே தீர வேண்டும் என பிடிவாதமாக இருக்கின்ற ன…
-
- 4 replies
- 1.4k views
-
-
குருநகரிலிருந்து பொம்மைவெளி வரை முட்கம்பி வேலி Written by Pandaravanniyan - Aug 18, 2007 at 10:16 AM விடுதலைப்புலிகளின் ஊடுருவலைத் தடுப்பதற்கெனக் கூறி யாழ். நகரக் கரையோரப்பகுதிகளில் குருநகரிலிருந்து பொம்மைவெளி வரை சிறிலங்காப் படையினர்முட்கம்பியிலான வேலிகளை அமைத்துவருகின்றனர். இதனைப் பொன்னாலை வரை அமைக்கத் திட்டமிட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. குருநகர் கரையோரத்திலிருந்து ஆரம்பிக்கும் இந்தப் பாதுகாப்பு வேலி யாழ். கோட்டை, பண்ணைக்கரை யோராமூடாக கொட்டடி, நாவாந்ததுறை, காக்கைதீவு, பொம்மைவெளிவரை சுமார் ஐந்து கிலோ மீற்றர் தூரத்திற்குச் செல்கிறது. தென்னை மற்றும் பனங்குற்றிகளைப் பத்து அடிதூரத்திற்கு ஒன்றென நாட்டி சுமார் எட்டு முதல் பத்து முட்கம்பிகள் வரி…
-
- 2 replies
- 1.6k views
-
-
தமிழர் போராட்டம் நீதியான ஐனநாயக விடுதலை அம்சங்களைக் கொண்டது: பேராசிரியர் சுமணசிறி லியனகே [சனிக்கிழமை, 11 ஓகஸ்ட் 2007, 07:16 ஈழம்] [ஐரோப்பிய நிருபர்] இலங்கைத் தீவில் தமிழர்கள் நடத்துகின்ற போராட்டமானது நீதியான, ஜனநாயக விடுதலை அம்சங்களைக் கொண்டது என்று சிறிலங்காவின் பேராதனைப் பல்கலைக்கழக சமூகவியல் பேராசிரியர் சுமணசிறி லியனகே கூறியுள்ளார். சுவிசின் பேர்ண் பல்கலைக்கழக அரசியல் விவகார நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த "மறக்கப்பட்ட முரண்பாடு- சிறிலங்கா யுத்தத்தை நோக்கி" என்ற தலைப்பில் உரையாற்ற அண்மையில் சுவிஸ் சென்றிருந்த பேராசிரியரான சுமணசிறி லியனகே, சுவிசிலிருந்து வெளியாகும் மாதமிருமுறை இதழான "நிலவரம்" (ஓகஸ்ட் 10) ஏட்டுக்கு வழங்கிய சிறப்பு நேர்காணலின் முதல…
-
- 4 replies
- 1.8k views
-
-
கிழக்கின் உத்தி வடக்கிற்கு ஏன் பயன்படாது? [வெள்ளிக்கிழமை, 17 ஓகஸ்ட் 2007, 19:58 ஈழம்] [அ.அருணாசலம்] சிறிலங்கா இராணுவம் வடக்கில் ஒரு வலிந்த பெரும் சமருக்கு தன்னை தயார்படுத்தி வரும் போதும், அவர்களால் கிழக்கில் பின்பற்றப்பட்ட உத்திகள் வடக்கில் பயன்படுத்த இயலாது என்று வியூகங்களுக்கான பக்கம் என்ற இணையத்தளம் தனது கட்டுரையில் தெரிவித்துள்ளது. அதன் தமிழ் வடிவம் வருமாறு: இராணுவம் வடக்கில் உள்ள விடுதலைப் புலிகளின் பகுதிகள் மீது மேற்கொள்ள உத்தேசித்துள்ள இறுதித் தாக்குதல் பருவ மழை, துருப்புக்களின் பற்றாக்குறை, வடக்கை தக்க வைப்பதில் உறுதியாக உள்ள விடுதலைப் புலிகள் ஆகிய காரணிகள் காரணமாக தாமதமடைந்துள்ளது. பெருமளவான படையினர் தற்போதும் கைப்பற்றப்பட்ட கிழக்குப் பகுதியில…
-
- 10 replies
- 2.5k views
-
-
[சனிக்கிழமை, 18 ஓகஸ்ட் 2007, 06:09 ஈழம்] பேதுருதாலகால மலை மீது அமைந்திருந்த வான் போக்குவரத்து ராடார் நிலையத்தின் அலைவாங்கி சேதமடைந்ததனாலும், வான் போக்குவரத்து கட்டுப்பாட்டு அதிகாரிகளின் பற்றாக்குறையினாலும் சிறிலங்காவின் வான் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையம் பெரும் நெருக்கடிகளை சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் வான் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்தின் வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாவது: பேதுருதாலகால மலை மீது அமைந்திருந்த வான் போக்குவரத்து ராடார் நிலையத்தின் அலைவாங்கி கடந்த சில வாரங்களாக செயலிழந்துள்ளது. அதனைத் திருத்தி மீண்டும் சேவையில் ஈடுபடுத்துவதற்கு பல மாதங்கள் செல்லலாம். எனவே வானூர்திகளின் பாதையை நெறிப்படுத்துவதற்காக வான் போக்குவரத்…
-
- 0 replies
- 859 views
-
-
மணற்காடு கடற்பரப்பில் கடற்மசர்: சிறிலங்கா கடற்படை [வெள்ளிக்கிழமை, 17 ஓகஸ்ட் 2007, 19:41 ஈழம்] [கொழும்பு நிருபர்] யாழ். வடமராட்சி பருத்தித்துறை மணற்காடு கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினருக்கும், தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற் புலிகளுக்கும் இடையே சுமார் இரண்டு மணி நேரமாக மோதல் நிகழ்ந்ததாக சிறிலங்கா கடற்படையினர் தெரிவித்துள்ளனர். இந்த மோதல் குறித்து சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிக்கேடியர் பிரசாத் சமரசிங்க கூறியதாவது: மணற்காடு கடற்பரப்பில் கரையில் இருந்து சுமார் 50 கடல் மைல் தொலைவில் சுற்றுக்காவல் பணியில் ஈடுபட்டிருந்த கடற்படையினர் சந்தேகத்திற்கு இடமான படகு ஒன்றை அவதானித்துள்ளனர். அந்த படகை நெருங்கி அதனைச் சோதனையிட முயற்சித்த போது படகில் இருந்து கடற்ப…
-
- 2 replies
- 2.1k views
-
-
Posted on : 2007-08-18 ஜாடிக்கு ஏற்ற மூடியாக இரட்டை வேட அணுகுமுறை கடந்த வாரம் இலங்கைக்கு வருகை தந்திருந்த, ஐக்கிய நாடுகள் மனிதாபிமான விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பு அலுவலகத்தின் பிரதிச் செயலாளர் ஜோன் ஹோம்ஸ் கொழும்பில் தெரிவித்த கருத்து ஒன்று பெரும் சர்ச்சையை உருவாக்கி விட்டிருக்கின்றது. "மனிதநேயத் தொண்டுப் பணியாளர்கள் தமது கடமையை ஆற்றுவதற்கு உலகில் பயங்கரமான - ஆபத்தான - இடங்களில் ஒன்று இலங்கை'' என்ற சாரப்பட அவர் தெரிவித்த கருத்தே பெரும் வாதப் பிரதிவாதங்களைத் தோற்றுவித்து குழப்பகரமான கூற்றுகளை வெளியிட வைத்திருக்கின்றது. இந்த விவகாரத்தை ஒட்டி இலங்கை அரசும் ஐ.நா. அதிகாரி ஜோன் ஹோம்ஸ் தரப்பும் நடந்து கொண்ட விதங்கள் ஜாடிக்கு மூடியாகக் கனகச்சிதமாகப் பொருந்தியிருப்பது…
-
- 0 replies
- 929 views
-
-
சனி 18-08-2007 02:36 மணி தமிழீழம் [மயூரன்] இலங்கை இனப்பிரச்சினைக்கான தீர்வு யோசனைகள் அடுத்த வாரம் ஜனாதிபதியிடம் கையளிப்பு இலங்கை இனப்பிரச்சினைக்கான தீர்வு யோசனைகள் அடுத்த வாரம் ஸ்ரீலங்கா ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ளன. அனைத்து கட்சி பிரதிநிதிகள் குழுவினால் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்த யோசனைகளை அடுத்த வாரம் ஜனாதிபதியிடம் கையளிக்கவுள்ளதாக அந்த குழுவின் தலைவரும் அமைச்சருமான திஸ்ஸ் விதாரன நேற்று தெரிவித்துள்ளார். பதிவு
-
- 1 reply
- 785 views
-
-
எண்ணெய்த் தாச்சியில் தவறி விழுந்த இரண்டு வயது சிறுமி பலி [17 - August - 2007] [Font Size - A - A - A] பொகவந்தலாவை ஜெபல்டன் தோட்டத்தில் எண்ணெய் தாச்சியில் தவறி விழுந்த இரண்டு வயது குழந்தையொன்று பரிதாபகரமாக உயிரிழந்துள்ளது. மிக்ஸர் பொரித்துக் கொண்டிருந்த தாய் தொலைக்காட்சியில் நாடகமொன்றை ரசிப்பதில் கவனம் செலுத்திய போது விளையாடிக் கொண்டிருந்த குழந்தை அந்த எண்ணெய் தாச்சியில் விழுந்துள்ளது. தீக் காயங்களுக்கு உட்பட்ட நிலையில் குழந்தையை அவசர சிகிச்சைக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு கொண்டு சென்றபோதும் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. நன்றி - தினக்குரல்
-
- 4 replies
- 2.2k views
-
-
கொழும்பு நகருக்குள் பிரவேசிக்கும் நுழைவாயில்களில் படையினரும் பொலிசாரும் பாரிய தேடுதல் வேட்டை வீரகேசரி நாளேடு கொழும்பு நகரருக்குள் வாகனங்கள் பிரவேசிக்கும் நுழைவாயில்களில் படையினரும் பொலிசாரும் இணைந்து நேற்று பாரிய தேடுதலில் ஈடுபட்டமையினால் பெரும் வாகன நெரிசல் ஏற்பட்டதுடன் பயணிகளும் பெரும் அசெகளியங்களுக்குள்ளாகினர். காலிவீதி,நீர்கொழும்பு வீதி,கண்டி வீதி பாராளுமன்ற வீதி என்பவற்றினூடாக கொழும்பு நகருக்குள் பிரவேசித்த வாகனங்கள் நகருக்கான நுழைவாயில்களில் மறிக்கப்பட்டு தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது இதனால் கொழும்புக்குள் பிரவேசிக்கும் வாகனங்கள் அனைத்தும் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டி நிலை ஏற்பட்டது. காலை 9 மணிக்கு ஆரம்பமான இந்த திடீர் சோதனை நடவடிக்க…
-
- 0 replies
- 833 views
-
-
அனைத்துலக அரசியல் சூழ்நிலையில் மத்திய கிழக்கு நெருக்கடிநிலை - சில வரலாற்றுப் படிப்பினைகள்; -புரட்சி (தாயகம்)- அண்மைக்காலமாக சர்வதேச ரீதியாக இடம்பெறும் அரசியல் நடவடிக்கைகளானது உலகம் அமெரிக்காவின் ஒரு துருவ ஒழுங்கிற்குள் இருந்து பல்துருவ ஒழுங்கிற்கு அல்லது பனிப்போர் கால இரு துருவ உலக ஒழுங்கிற்கு மாறுவதற்கான சாத்தியங்களை அதிகரிக்கப்பண்ணியுள்ளதா என எண்ணவைத்துள்ளது. அதாவது ஒரு பக்கத்தில் ருஸ்யாவானது அதிபர் புட்டின் தலைமையில் மீண்டும் அரசியல், பொருளாதார மற்றும் படைத்துறை வல்லாண்மையினைப் பெற்று கிழக்கு ஐரோப்பா, மத்திய ஆசியா மற்றும் தென்கிழக்கு ஆசிய பிராந்தியங்களிலே செல்வாக்கினை பெற்றுவருவதை அவதானிக்கலாம். மறுபக்கத்திலே அமெரிக்காவானது நேட்டோவினை அகட்டி பரவலாக்குதல் என…
-
- 0 replies
- 1.4k views
-
-
மாவீரர்களின் சாதனைகளால் தான் தமிழினம் தலைநிமிர்ந்து நிற்கின்றது: ச.பொட்டு [வியாழக்கிழமை, 16 ஓகஸ்ட் 2007, 19:34 ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] மாவீரர்களது சாதனைகளால் தான் தமிழினம் தலைநிமிர்ந்து நிற்கின்றது என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் ச.பொட்டு தெரிவித்துள்ளார். புல்மோட்டை கடற்பரப்பில் கடந்த திங்கட்கிழமை (13.08.07) சிறிலங்கா கடற்படையினருடன் நடைபெற்ற நேரடி மோதலின் போது வீரச்சாவடைந்த லெப். கேணல் தியாகன், லெப். கேணல் கன்னியப்பன், கப்டன் அகப்போர் ஆகிய மாவீரர்களின் வீரவணக்க நிகழ்வு முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் நடைபெற்றது. இந்நிகழ்வில் உரையாற்றிய ச.பொட்டு மேலும் கூறியதாவது: தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் சா…
-
- 3 replies
- 1.4k views
-
-
யாழ். படுகொலைகளுக்கு இராணுவமும் துணை இராணுவக் குழுக்களுமே காரணம்: விடுதலைப் புலிகள் [வெள்ளிக்கிழமை, 17 ஓகஸ்ட் 2007, 17:09 ஈழம்] [ப.தயாளினி] யாழ். குடாநாட்டில் நிகழ்த்தப்பட்டு வரும் படுகொலைகளுக்கு சிறிலங்கா இராணுவமும் அதனுடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுக்களுமே காரணம் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் மனிதாபிமான விவகாரங்களுக்கானப் பேச்சாளர் நவரூபன் செல்வி குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பில் நேற்று வியாழக்கிழமை அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: பொதுமக்கள், சிறிலங்கா அரசாங்க பணியாளர்கள் மற்றும் பாடசாலை மாணவர்களை சிறிலங்கா அரசாங்கத்தின் இராணுவமும் அதனுடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுக்களும் தொடர்ச்சியாக இலக்கு வைத்து வருகின்றன. யாழ். குடாநாட்டில்…
-
- 0 replies
- 732 views
-
-
எம்மீது அவலங்களைத் திணித்தவர்களுக்கு தீர்ப்பெழுதும் காலத்தில் வாழ்கின்றோம்: க.வே.பாலகுமாரன் செஞ்சோலை வளாகத்தில் இடம்பெற்ற படுகொலை என்பது நிச்சயமாக எந்த முறையிலும் எவராலும் மறுத்துச் சொல்ல முடியாத அப்பழுக்கற்ற ஒரு இனப்படுகொலையின் வெளிப்பாடாக அமைகின்றது. ஆகவே என்றோ ஒருநாள் இந்தப் படுகொலைச் சம்பவங்களுக்குக் காரணமானவர்களுக்கான தீர்ப்புக்களை வழங்க வேண்டிய கால கட்டத்தில் நாம் இருக்கின்றோம் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர் க.வே.பாலகுமாரன் தெரிவித்துள்ளார். கடந்த வருடம் ஓகஸ்ட் மாதம் 14 ஆம் நாள் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு வள்ளிபுனம் செஞ்சோலை வளாகத்தில் படுகொலை செய்யப்பட்ட மாணவிகளது முதலாவது ஆண்டு நினைவு நிகழ்வு கிளிநொச்சி பண்பாட்டு மண்டபத்…
-
- 2 replies
- 1.4k views
-
-
தானாகவே மூச்சு அடங்கிப் போன அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழு இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான சிபாரிசுகளை முன்வைப்பதற்காக நாடாளு மன்றில் அங்கம் வகிக்கும் தென்னிலங்கைக் கட்சிகளின் பிரதிநிதிகளை ஒன்று கூட்டி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நியமித்த அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழுவின் கூட் டம் திடீரென காலவரையறை குறிப்பிடப்படாது ஒத்தி வைக்கப்பட்டிருக்கின்றது. இதோ முடிவுக்கு வந்துவிட்டது, தனது இறுதி யோச னையை அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழு இந்தா சமர்ப்பிக்கப்போகின்றது என்றெல்லாம் உறுதியாக நம்பப் பட்ட வேளையிலேயே, அது திடீரென மூச்சை நிறுத்தி யிருக்கின்றது. இந்த அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழுவை இந்தப் பணிக்காக ஸ்தாபித்தவரே ஜனாதிபதிதான். …
-
- 3 replies
- 1.9k views
-