Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வெள்ளவத்தை கடலில் சந்தேகத்திற்கிடமான படகுகள் மீது படையினர் எச்சரிக்கை வேட்டு கொழும்பு, வெள்ளவத்தை கடற்பரப்பினுள் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு சந்தேகத்துக்கிடமான இரு சிறிய படகுகள் நுழைய முற்பட்டபோது, கடற்படையினர் எச்சரிக்கை வேட்டுகளை தீர்த்து அவற்றை பின்வாங்கச் செய்துள்ளனர். இது தொடர்பாக தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலைய அதிகாரியொருவர் தெரிவிக்கையில்; வெள்ளவத்தை பாதுகாப்பு வலய கடற் பிரதேசத்தினுள் இரு சிறிய படகுகள் நுழைய முற்பட்டுள்ளன. இதை அவதானித்த கடற்படையினர் எச்சரிக்கை வேட்டுகளைத் தீர்த்து படகுகளை பின்வாங்கச் செய்துள்ளனர். படகுகள் இரண்டும் மீன்பிடி படகுகளெனவே கருதப்படுகிறது. மீனவர்கள் பாதுகாப்பு வலய எல்லை தெரியாமல் நுழைந்திருக்க வேண்டும…

  2. தமிழ் - சிங்கள தம்பதிகள் கூட நிம்மதியாக வாழ முடியாதா?இத்தாலிய வெளிவிவகார அமைச்சு அதிகாரிகள் கேள்வி [30 - April - 2007] * இத்தாலிய வெளிவிவகார அமைச்சு அதிகாரிகள் கேள்வி -த. தர்மேந்திரா- காதலித்து திருமணம் செய்துகொண்ட தமிழ் - சிங்கள தம்பதிகள் கூட நிம்மதியாக வாழ முடியாதா? என்று இத்தாலிய வெளிவிவகார அமைச்சு அதிகாரிகள் ஆச்சரியம் தெரிவித்துள்ளனர். இத்தாலியிலுள்ள யாழ்ப்பாணத் தமிழ் இளைஞர் ஒருவரை காதலித்து திருமணம் செய்த சிங்களப் பெண் ஒருவர் விடுதலைப் புலிகளுடன் தொடர்பு உள்ளவர் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு அவசரகாலச் சட்ட விதிகளின் கீழ் பூஸா தடுப்பு முகாமில் சிங்களப் புலிகளில் ஒருவராக தடுத்து வைக்கப்பட்டுள்ளார். இத்தாலியிலுள்ள கணவனுக்கும் புல…

  3. தயவை நாடியோர் தடம் புரள்கின்றனர் "இது எந்தப் பேயின் சட்டம்? இது என்ன சட்டம்? இதன் பலாபலன் தான் என்ன? உதுதானா ஜனநாயகம்? உதுதானா மனித உரிமை? இது தானா நீங்கள் கூறும் ஐந்து நட்சத்திர ஜனநாயகம்? தினமும் வானொலியில் போதிக்கும் தர்மம் இது தானா? சனிக்கிழமைகளில் ஓதும் வேதம் இதுதானா? இந்த நாட்டில் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்காக - இந்த நாட்டு மக்களின் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்காக - கடவுளின் பெயரால் ராஜிநாமா செய்யுமாறு இந்த அரசாங்கத்திற்கு வேண்டுகோள் விடுக்கிறேன். இது 5.01.1991 அன்று மகிந்த ராஜபக்ஷ பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையின் ஒரு பகுதியாகும். உண்மையில் அன்று மகிந்த ராஜபக்ஷ போன்றோர் மனித உரிமைகள் பற்றிப் பேசி சர்வதேச மனித உரிமை அமைப்பின் கவனத்தை இலங்கையை நோக்கி ஈர்…

  4. தமிழீழ விடுதலைப் புலிகளைத் தொடர்ந்து ஆதரிப்பேன்: வைகோ. ஈழத் தமிழர்களுக்காகப் போராடும் தமிழீழ விடுதலைப் புலிகளைத் தொடர்ந்து ஆதரிப்பேன் என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளைத் தொடர்ந்து ஆதரிப்பேன் என்று வைகோ தெரிவித்து வரும் நிலையில் அவரைக் கைது செய்ய வேண்டும் என்று தமிழக முதல்வர் கருணாநிதியிடம் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கிருட்டிணசாமி வலியுறுத்தினார். அதேபோல் வைகோவை கைது செய்ய வேண்டும் என்று இந்திய அமைச்சர் இளங்கோவனும் கருத்துத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழ்நாட்டிலிருந்து வெளியாகும் "மாலைமலர்" நாளிதழுக்கு வைகோ அளித்துள்ள நேர்காணலில் கூறியுள்ளதாவது: முதல்வரை கிருட்டிணசாமி சந…

  5. புலிகளினால் மேற்கொள்ளப்படும் தாக்குதல்களை அனுமதிக்க முடியாது தலைநகர் கொழும்பு உட்பட நாட்டின் முக்கிய பொருளாதார மையங்களை இலக்கு வைத்து விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்படும் எந்தவொரு தாக்குதல்களையும் ஒருபோதும் அனுமதிக்க முடியாதென்று ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ரணில் விக்கிரமசிங்க இது தொடர்பாக விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; எமது நாட்டின் பாதுகாப்பு நிலைமை நாளுக்குநாள் பாதுகாப்பற்ற தன்மையை நோக்கிச் செல்கிறது. புலிகளை கண்டிப்பதன் மூலம் இந்நிலையிலிருந்து மீள முடியாது. அத்தோடு புலிகளின் இலக்குகளைத் தாக்க முடியவில்லையே என்பதனை காரணம் காட்டி அரசியல் இலாபம் தேட முயல முடியாது. அத்தோடு …

  6. புலிகளின் எந்தச் சவாலையும் சந்திப்பதற்கு அரசு தயார்' விடுதலைப் புலிகளால் விடுக்கப்படும் எந்தவொரு சவாலையும் சந்திப்பதற்கு முழுஅளவில் தயாராகவிருப்பதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் மாநாட்டில் அமைச்சரவை பேச்சாளரும் தகவல் மற்றும் ஊடகத்துறை அமைச்சருமான அநுர பிரியதர்ஷன யாப்பா இதனைத் தெரிவித்துள்ளார். நேற்று அதிகாலை கொழும்பிலும் அதனை அண்மித்த புறநகர்ப் பகுதியிலும் புலிகள் நடத்திய வான் தாக்குதல் தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கம் அளிக்கும் வகையிலேயே இந்த ஊடகவியலாளர் மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அமைச்சர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்; "விடுதலைப் புலிகளால் விடுக்கப்…

  7. இலங்கை விவகாரத்தில் தீர்க்கமான முடிவெடுக்கும் வழிவகைகளை பரிசீலிக்கிறது புதுடில்லி. இலங்கை இனப்பிரச்சினையில் சம்பந்தப்பட்டுள்ள இருதரப்பினரும் போர் மூலமே முடிவு காண்பது என்ற தீர்மானத்துக்கு வந்துள்ள இன்றைய இருள் சூழ்ந்த காலகட்டத்தில் என்ன விதமான நடவடிக்கையில் தான் இறங்க முடியும் என்பது பற்றி மிக விரைவில் இந்திய அரசு ஒரு முடிவுக்கு வரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. பல்வேறு விதமான யோசனைகள் தற்பொழுது பரிசீலிக்கப்பட்டு வருகின்றன என்று புதுடில்லிச் செய்தி வட்டாரங்கள் தகவல்வெளியிட்டிருக்கின்றன. இனப்பிரச்சினை விரிவடைந்துகொண்டிருக்கும் இந்த வேளையில் வெகுவாகப் பாதிக்கப்படும் பொதுமக்களுக்கு எவ்வாறு உதவ முடியும் என்பதில் இந்தியா அக்கறை கொண்டிருப்பதாகத் தெரிகின்றது…

    • 1 reply
    • 1.2k views
  8. பாதுகாப்புக்காக மின் துண்டிக்கும் சமயங்களில் ஜெனரேட்டர்களை இயக்காதீர் என அறிவுறுத்து உல்லாச விடுதிகளில் இதனால் பெரும் திண்டாட்டம் கொழும்பு, ஏப். 30 பாதுகாப்புக் காரணங்களுக்காக அரசு கொழும்பு நகரில் இருட்டடிப்பை (மின்வெட்டு) செய்யும் வேளைகளில் உல்லாசப் பிரயாண ஹோட்டல்கள் உட்பட தொழில் நிறுவனங்களும் தமது ஜெனரேட்டர்களை இயக்கி வெளிச்சமேற்படுத்த முற்படக்கூடாது. இவ்வாறு பாதுகாப்பு அமைச்சு கண்டிப்பான உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இதனால் உல்லாசப் பிரயாண ஹோட்டல்கள் பலமணி நேரங்கள் இருளில் மூழ்கடிக்கப்படுவதால் உல்லாசப் பயணிகளுக்குப் பெரும் அசௌகரியங்களை ஏற்படுத்தி உள்ளதோடு, உல்லாசப் பிரயாணத் துறையிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளதாகக் கூறப்படுகிறது. தமிழீழ விடுதலைப் …

  9. இரு வெளிநாட்டு பயணிகள் போக்குவரத்து விமான நிறுவனங்கள் சேவை நிறுத்தம். இரண்டு வெளிநாட்டு பயணிகள் வான்போக்குவரத்து சேவை நிறுவனங்கள் கொழும்புக்கான சகல விதமான போக்குவரத்துகளையும் இடைநிறுத்துவதாக அறிவித்துள்ளன. ஹொங் கொங்கை தளமாக கொண்டு இயங்கும் கத்தே பசுபிக், மத்திய கிழக்காசியாவை தளமாக கொண்டு இயங்கும் எமிரேற்ஸ் ஆகிய விமானங்களே மறு அறிவித்தல் வரை தமது சேவைகளை இடைநிறுத்தியுள்ளன. பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டே இம்முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக இவ்நிறுவனங்கள் அறிவித்துள்ளன -Pathivu-

  10. அமெரிக்காவின் ஆலோசனைகள் மூலம் வான்புலிகளை முறியடிக்க அரசு முயற்சி: கொழும்பு ஊடகம். சிறிலங்காவின் ஆயுதப்படைகளின் வலிமையை ஆராய்ந்த அமெரிக்காவின் பசுபிக் பிராந்திய கட்டளைப்பீடம் 2002 ஆம் ஆண்டு சமர்ப்பித்த அறிக்கையை தற்போது மகிந்த அரசு தேடி எடுத்து செயற்படுத்த முற்பட்டுள்ளதாக சன்டே ரைம்ஸ் வாரஏட்டின் பாதுகாப்பு ஆய்வாளர் இக்பால் அத்தாஸ் தெரிவித்துள்ளார். சண்டே ரைம்ஸ் ஏட்டில் இக்பால் அத்தாஸ் எழுதியுள்ளதாவது: பாலாவியில் உள்ள பாதுகாப்பு அரனில் கடமையாற்றிக் கொண்டிருந்த சிறிலங்கா இராணுவத்தினர் கடந்த வியாழக்கிழமை இரவு 10.30 மணியளவில் இனந்தெரியாத 3 விமானங்களை கண்டுள்ளனர். அவை தென்பகுதி நோக்கி சென்று கொண்டிருந்தன, ஒரு விமானம் வெளிச்சத்துடன் அதிக உயரத்திலும், இரு வி…

  11. இந்தியத் தமிழர்களை பிச்சைக்காரர்போல் நடத்துகிறார் மகிந்த: தொண்டமான் குற்றச்சாட்டு [ஞாயிற்றுக்கிழமை, 29 ஏப்ரல் 2007, 11:35 ஈழம்] [கொழும்பு நிருபர்] இலங்கையில் உள்ள இந்திய வம்சாவழித் தமிழர்களான மலையகத் தமிழர்களை பிச்சைக்காரர்களைப் போல் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச நடத்துவதாக மகிந்தவின் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள இளைஞர் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் குற்றம்சாட்டியுள்ளார். அரச தலைவராக சந்திரிகா குமாரதுங்க பொறுப்பில் இருந்த போது ஏற்படுத்தப்பட்ட உடன்பாட்டின்படி மலையக பாடசாலைகளில் 300 ஆசிரியர்களை நியமனம் செய்து அதற்கான நியமன ஆணைகள் வழங்கும் நிகழ்வு மகிந்தவின் அலரி மாளிகையில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வு நடைபெறுவது குறித…

  12. ஈழமுரசுப் பத்திரிகையில் வந்த ஆக்கம் வாசிக்காதவர்களுக்காக இங்கே இணைக்கப்படுகிறது. சிறிலங்காவின் புலனாய்வுக்கட்டமைப்பில் பெண்களின் பங்களிப்பு அதிகரிக்கப்படுகின்றது. -ச.சங்கரன்- உலகில் பெண்கள் சிறந்த ஒற்றர்களாக விளங்குகின்றனர் அவர்கள் ஆண்களிடம் இருந்து புலனாய்வு தகவலகளை தந்திரமாகப் பெறுகின்றனர் அந்த வகையில் இலங்கை அரச புலனாய்வு நிறுவனமும் பெண் உளவாளிகளின் எண்ணிக்கையினை மிக வேகமாக அதிகரித்துள்ளது. சிறிலங்காவில் பெண் புலனாய்வாளர்களின் பங்கு 1998ம் அண்டு மொத்தப்புலனாய்வு மனித வளத்தில் 12வீதமாக இருந்தது என்றும், இது 2007ம் ஆண்டு 33வீதமா அதிகரித்துள்ளது என்றும் கூறப்படுகின்றது. சிறிலங்கா அரசாங்கம் தமது பெண் புலனாய்வாளருக்கான ஆட்கள் தெரிவினை …

    • 2 replies
    • 1.2k views
  13. பிரித்தானிய உள்துறைச் செயலர் தமிழ் பிரதிநிதிகள் சந்திப்பு அண்மையில் பிரித்தானிய தமிழர் அமைப்பின் பிரதிநிதிகள் பிரித்தானிய உள்துறைச் செயலர் மேன்மை தங்கிய Dr. ஜோன் றெய்ட் ஐ சந்தித்திருந்தனர். இச் சந்திப்பில் இலங்கைத்தீவின் நெருக்கடி நிலை தொடர்பில் விவாதித்த தமிழ் பிரதிநிதிகள் சிறீலங்கா அரசின் பிரித்தானிய தமிழர் மீதான விசமப் பிரச்சாரம் தொடர்பின் அதிருப்தியை வெளியிட்டிருந்தனர். இது பற்றி கருத்து தெரிவித்த உள்துறைச் செயலர் பிரித்தானிய ஊடகங்களில் வெளியான கடனட்டை மோசடி தொடர்பான செய்திக்கும் பிரித்தானிய அரசுக்கும் தொடர்பெதுவும் இல்லை என்றும் இச் செய்தியை பிரபலப்படுத்தும் தலையீட்டு அழுத்தங்கள் எதனையும் அரசு பிரயோகிக்கவில்லை என்றும் தெட்டத்தெளிவாக தெரிவித்தார். இ…

  14. இலங்கை செய்தி ஆய்வாளர் டி.பி.எஸ். ஜேயராஜ் செவ்வி இதன் மூலம் புலிகள் சொல்ல வருவது ஓர் ஆணித்தரமான அரசியல் ராணுவ செய்தி. இலங்கை அரசாங்கம் சொல்லிவருவது போல நாங்கள் ஓரங்கட்டப்படவில்லை, ஓரங்கட்டப்படவும் மாட்டோம் என்பது தான் அந்தச் செய்தி என்கிறார் இலங்கை செய்தி ஆய்வாளர் டி.பி.எஸ். ஜேயராஜ். செவ்வி: ஆணித்தரமான ஒரு செய்தியை தென்னிலங்கை மக்களுக்கு வழங்குவதே புலிகளின் நோக்கம் டி.பி.எஸ். ஜேயராஜ் அரசாங்கம் கிழக்கில் படையினர் கண்ட வெற்றிகளை வைத்துக் கொண்டு தென்னிலங்கை மக்கள் மத்தியில் தாங்கள் புலிகளை ஓரங்கட்டி விட்டோமென்றும், புலிகள் வசம் ஓரிரு சிறு விமானங்கள் தான் உள்ளன, அவற்றை நாங்கள் விரைவில் இரண்டிலொன்று பார்த்து விடுவோம் என்றும் சொல்லி வரும் வ…

    • 3 replies
    • 1.9k views
  15. விடுதலைப் புலிகளின் செயல்-கருணாநிதி அதிர்ச்சி ஏப்ரல் 29, 2007 சென்னை: கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் 12 பேரை விடுதலைப்புலிகள் கடத்திக் கொண்டு போயிருக்கும் செயல் அதிர்ச்சியூட்டுவதாக உள்ளது என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். சட்டசபையில் விடுதலைப்புலிகள் பற்றி காங்கிரஸ் எம்எல்ஏ ஞானசேகரன் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசினார். அதற்கு பதிலளித்த முதல்வர் கருணாநிதி, விடுதலைப்புலிகளை ஆதரித்து தான் தீருவோம், எங்களை எது வேண்டுமானாலும் செய்யுங்கள், ஒரு கை பார்க்கிறோம் என்ற அறை கூவல் பிரபலமான நாளிதழில் வந்திருந்தது. மேலும் அதில் விடுதலைப்புலிகளை நாங்கள் என்றும் ஆதரிப்போம், இலங்கை இறுதி போர் நடந்து வருகின்றது. அதை ஆதரிப்போம் என்றிருக்கிறது. அ…

  16. மங்களவை வீழ்த்திய மகிந்தவின் "இடியப்பம்- மது" [ஞாயிற்றுக்கிழமை, 29 ஏப்ரல் 2007, 22:32 ஈழம்] [க.திருக்குமார்] அனைத்துலகத்திலும் உள்ளுரிலும் சிறிலங்கா அரசுக்கு தோன்றியுள்ள நெருக்கடிகள் காரணமாக பதவியில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சரான மங்களவை வீட்டுக்கு அழைத்து இடியப்பமும் மதுவும் கொடுத்து அரவணைத்துள்ளார் மகிந்த ராஜபக்ச என்று கொழும்பில் இருந்து வெளிவரும் ஆங்கில ஊடகமான "சண்டே லீடர்" தெரிவித்துள்ளது. சண்டே லீடர் வார இதழின் அரசியல் ஆய்வில் இடம்பெற்றுள்ள தகவல்கள்: சிறிலங்காவின் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தான் எந்த நேரமும் வெடித்துச் சிதறும் எரிமைலை ஒன்றின் மீது இருப்பது போல் உணர்ந்துள்ளார். நாட்டின் பல பிரிவுகளில் தோன்றியுள்ள நிர்வாகச் சீர்கேடுகள், மனித …

  17. நாங்கள் துடுப்பாட்டப்போட்டியில் இலங்கை அணிக்கு ஆதரவு தெரிவிக்கலாமா?.நாங்கள் சிறிலங்கனா?

  18. சேது சமுத்திரக் கால்வாய்த்திட்டம் முன்வைக்கப்பட்ட காலத்திலிருந்தே இந்தியாவின் சுற்றுச்சூழல் அக்கறையாளர்கள் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வந்துள்ளனர். இலங்கையில் அத்திட்டம் பற்றிய கவலைக்கான காரணங்கள் பல. எனினும், ஒரு தமிழ் இடதுசாரிப் பத்திரிகையில் மட்டுமே அது பற்றிய சமூக அக்கறை மீண்டும் மீண்டும் வற்புறுத்தப்பட்டது. சில ஆங்கில ஏடுகளிலும் சூழலியல் பற்றிய அக்கறையுள்ள சிலர் ஒரு சில கட்டுரைகளை எழுதியிருந்தனர். கடற்படையினரின் தலைமைப்பீடத்தில் இலங்கையின் இறைமைக்கு இக் கால்வாய் ஒரு மிரட்டலாக அமையும் என்ற கவலையைத் தெரிவித்திருந்தாலும், அது பற்றிப் போதிய அழுத்தம் இல்லாததாலோ என்னவோ, இலங்கை அரசாங்கம் இந்தியாவிடம் காத்திரமான எதிர்ப்பு எதையுமே தெரிவிக்கவில்லை. கண்துடைப்பாக இங்கே, இலங்கை…

  19. தமிழ்ப் பிரச்சினைத் தீர்வுக்கு ஜனாதிபதிக்கு உதவும் வகையில் தமிழ் அபிப்பிராய உருவாக்கம் தொடங்கியுள்ளதா? -(பீஷ்மர்) [29 - April - 2007] ஜனாதிபதி அவர்களுக்கு நிச்சயமாக இரண்டு முகங்கள் உண்டு. ஒன்று, அவர் சிங்களத்துவத்தின் ஏகோபித்த முன்வைப்பு என்பதாகும். இன்றும் தான் ஜே.வி.பி., ஹெல உறுமயவின் எதிர்க்கப்பட முடியாத ஜனாதிபதியாவார். அதாவது சிங்களத்துவ நிலை பாடுகளுக்கு அடிப்படையில் அவர் முரண்படமாட்டார் என்பதற்கு சார்பான அபிப்பிராயமுண்டு. மற்றைய முகம், அவர் தமிழர்களின் பிரச்சினையையும் உணர்ந்தவர் என்ற நிலைப்பாடாகும். அமைச்சரவை நிலையில் ஒரேயொரு வட, கிழக்கு தமிழ் அமைச்சர் தான் இருந்தாலும் அவர் விடுதலைப் புலிகளை சாராத வட, கிழக்கு கட்சிகளின் ஆதரவைப் பெற்றுள்ளவர். இந்…

  20. சென்னை: நான் விடுதலைப் புலிகளின் ஆதரவாளன் கிடையாது. தடை செய்யப்பட்ட புலிகள் அமைப்புக்கு தமிழகத்தில் இடம் இல்லை என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். சட்டசபையில், காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்குப் பதில் அளித்து முதல்வர் கருணாநிதி இன்று பேசினார். அவர் பேசுகையில், நான் விடுதலைப் புலிகளின் ஆதரவாளன் அல்ல. தடை செய்யப்பட்ட புலிகள் அமைப்பு தமிழகத்தைக் களமாகக் கொண்டு செயல்பட ஒரு போதும் அனுமதிக்கப்பட மாட்டாது. தமிழகத்தில் புலிகளின் நடமாட்டமும், செயல்பாடுகளும் அதிகரித்து விட்டதாக கூறுவதை ஏற்க முடியாது. இரும்புக் குண்டுகள், வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதை வைத்து அவை விடுதலைப் புலிகளுக்காக கடத்தப்பட்டன என்று கூறி விட முடியாது. வெடிபொருள், இர…

  21. படுவான்கரையில் இடம் பெயர்ந்த மக்களின் வீடுகள் உடைக்கப்பட்டு உடைமைகள் சூறை மட்டக்களப்பு, படுவான்கரைப் பகுதியில் இராணுவ நடவடிக்கையால் மக்கள் இடம் பெயர்ந்த அனைத்துப் பகுதிகளிலும் அவர்களது வீடுகள் உடைக்கப்பட்டு உடமைகள் முற்றாகச் சூறையாடப் பட்டுள்ளதுடன் சகல அரச அலுவலகங்களும் உடைக்கப்பட்டு கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. வெல்லாவெளி பிரதேச செயலர் பிரிவில் மேற்கொள்ளப்படவுள்ள மீள் குடியேற்ற நடவடிக்கை தொடர்பாக வெள்ளிக்கிழமை படுவான்கரைப் பகுதிக்குச் சென்று திரும்பிய அரச அதிகாரிகளே இதனைத் தெரிவித்துள்ளனர். மாவட்ட மேலதிக அரச அதிபர் மகேசன் தலைமையில் சென்ற உயர் மட்ட அதிகாரிகள் அங்குள்ள நிலமைகளை பார்வையிட்டுள்ளனர். படுவான்கரையில் பாலையடிவெட்டை, வெல்லாவெளி கண்டுமணி வித்த…

  22. கரவெட்டியில் இளைஞர் கடத்தல் கரவெட்டி குஞ்சர்கடைப் பகுதியில் வீதியால் பயணித்துக்கொண்டிருந்த இளைஞன் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட வெள்ளைவான் கும்பல், காயமடைந்த குறித்த இளைஞனை கடத்திச் சென்றுள்ளது. நேற்றுக்காலை 7.30 மணியளவில் குறித்த நபர் யாழ்.பருத்தித்துறை வீதியூடாக துவிச்சக்கரவண்டியில் பயணித்துக்கொண்டிருந்த போதே இச்சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படும் அதேவேளை, இது தொடர்பாக தமக்கு முறைப்பாடு எதுவும் கிடைக்கவில்லையென யாழ்.மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன. தினக்குரல்

  23. வங்காலைப் பகுதியில் கைதான 2 மீனவர்களை காணவில்லை மன்னார் வங்காலைப் பகுதியில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை பிற்பகல் படையினரால் கைது செய்யப்பட்ட இரு மீனவர்கள் காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. வெள்ளிக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் இவ்விருவரும் மோட்டார் சைக்கிளொன்றில் வங்காலை - நானாட்டான் வீதியில் வங்காலையிலிருந்து மாவிலங்கேணி நோக்கிச் சென்று கொண்டிருக்கையில் தோமஸ்புரி பகுதியிலுள்ள இராணுவ முகாமில் வழிமறிக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். இது பற்றி கேள்வியுற்ற இருவரதும் உறவினர்கள் உடனடியாக இராணுவ முகாமுக்குச் சென்று விசாரித்த போது, அது பற்றி தங்களுக்கு எதுவும் தெரியாதெனவும் தாங்கள் எவரையும் கைது செய்யவில்லையென்றும் கூறியுள்ளனர். இதேநேரம், வங்…

  24. தடை தளர்த்தப்பட்ட சிறிது நேரத்தில் கடலுக்கு சென்ற மீனவர் மீது ஷெல் தாக்குதல் - யாழ். கடல் நீரேரியில் ஒருவர் பலி யாழ். கடல் நீரேரியில் நேற்று சனிக் கிழமை காலை பெருமளவு மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருக்கையில் அவர்களை நோக்கி நடத்தப்பட்ட பலத்த ஷெல் தாக்குதலில் மீனவரொருவர் உயிரிழந்துள்ளார். கடந்த 11 நாட்களுக்கு முன் கடல் நீரேரிப் பகுதியில் இடம்பெற்ற மோதலொன்றையடுத்து நேற்று வரை மீன் பிடிக்கத் தடை விதிக்கப்பட்டிருந்தது. நேற்றுக்காலை மீண்டும் மீன் பிடிக்க அனுமதிக்கப்பட்டது. இதையடுத்து கொழும்புத்துறை, பாஷையூர் மீனவர்கள் பெருமளவானோர் தொழிலுக்குச் சென்றிருந்தனர். கடற்றொழிலாளர்கள் கடலுக்குச் சென்ற சிறிது நேரத்திலேயே கரையோர பகுதிகளிலிருந்து கடல் நீரேரி நோக்கி …

  25. பலாலி வான் தாக்குதல் குறித்து அரசாங்கம் கண்காணிப்புக் குழுவிடம் முறையிடவில்லை -பேச்சாளர் ஒமர்ஸன் கூறுகிறார் `பலாலி படைத்தளம் மீது விடுதலைப் புலிகளின் விமானத் தாக்குதலையடுத்து அரசாங்கம் சம்பவம் பற்றி எங்களிடம் முறையிடவுமில்லை. நாங்கள் அங்கு செல்ல அனுமதி கேட்கவுமில்லை' என இலங்கை போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் பேச்சாளர் தோபினூர் ஒமர்ஸன் தெரிவித்தார். விடுதலைப் புலிகளின் விமானத் தாக்குதலின் பின்னர் பலாலி படைத்தளம் சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட அரசிடமிருந்து அனுமதி கிடைத்ததாவென கேட்ட போதே ஒமர்ஸன் இவ்வாறு கூறினார். கடந்த செவ்வாய்க்கிழமை புலிகள் நடத்திய இத் தாக்குதலினால் மயிலிட்டி பகுதியில் 6 படையினர் கொல்லப்பட்டதுடன் மேலும் 13 பேர் காயமடைந்ததாகவ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.