Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஐ.நா. குழுக்களுக்கான விண்ணப்பம் படிவங்கள் http://www.tamilnaatham.com/pdf_files/2007..._2007_03_06.pdf ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான சபையின் நான்காவது கூட்டத்தொடர் இன்று திங்கட்கிழமை ஜெனீவாவில் ஆரம்பமாகின்றது. இந்த கூட்டத்தில் அதன் அங்கத்துவ நாடுகள் மற்றும் மனித உரிமை அமைப்புக்கள் ஒன்று கூடி சிறிலங்கா உட்பட பல நாடுகளின் உள்ள மனித உரிமை நிலைமைகள் தொடர்பாக ஆராயவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

    • 2 replies
    • 1.1k views
  2. தலை துண்டிக்கப்பட்டவரின் சடலம் அடையாளம் காணப்பட்டது [12 - March - 2007] [Font Size - A - A - A] ஏழாலை மயிலங்காடு புகையிலைத் தோட்டம் ஒன்றிலிருந்து கடந்த 5 ஆம் திகதி திங்கட்கிழமை மீட்கப்பட்ட இளைஞனின் சடலம் நேற்று முன்தினம் அடையாளங் காணப்பட்டுள்ளது. சுன்னாகம் புகையிரத நிலைய வீதியிலுள்ள அவரது வீட்டிலிருந்து 4 ஆம் திகதி கடத்திச் செல்லப்பட்ட துரைராசா சசிகரன் (வயது 26) என்பவரது சடலம் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டது. இந்தச் சடலத்தையே உறவினர்கள் அடையாளம் காட்டினர். யாழ்.போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்த இவரது சடலம் மல்லாகம் நீதிவான் திருமதி சரோஜினி இளங்கோவன் உத்தரவின்படி உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது http://www.thinakkural.com/news/2007…

  3. 18 அதிரடிப் படையினருக்கு கொழும்பில் தீவிர சிகிச்சை மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற்று வரும் விடுதலைப் புலிகளுக்கு எதிரான தாக்குதல்களில் காயமடைந்த படையினர் மற்றும் விசேட அதிரடிப் படைப் பொலிஸார் சிகிச்சைகளுக்காக கொழும்பிற்கு கொண்டு வரப்பட்டுள்ளனர். படையினர் இராணுவ மருத்துவமனைக்கும் விசேட அதிரடிப்படை பொலிஸார் பொலிஸ் மருத்துவமனைக்கும் கொண்டு வரப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளனர். பொலிஸ் மருத்துவமனையில் விசேட அதிரடிப் படையினர் 18 பேர் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றது. இராணுவத்திலும் இதே அளவிலானவர்கள் படுகாயமடைந்த நிலையில் கொழும்புக்கு கொண்டு வரப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பொலநறுவை மாவட்ட வைத்தியசால…

  4. மட்டுநகர் பாடசாலைகள், ஆலயங்கள் அகதிகளால் நிரம்பி வழிகின்றன புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளிலிருந்து சகல மக்களும் வெளியேற்றம் மட்டக்களப்பில் நேற்று முன்தினம் சனிக்கிழமை காலை முதல் சற்று ஓய்ந்திருந்த மோதல் இரவு மிகத் தீவிரமடைந்த அதேநேரம், தாக்குதல் அச் சத்தால் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்து அனைத்து மக்களும் வெளியேறியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. தற்போது பாதுகாப்புத் தேடி அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு வந்துள்ள சுமார் ஒரு இலட்சத்து 60,000 பேருக்கும் அரசோ, அரசசார்பற்ற நிறுவனங்களோ எதுவித உதவிகளையும் வழங்காத நிலையில் இந்த மக்கள் இருப்பிடங்களுக்காகவும் உணவுக்காகவும் அலைந்து திரிகின்றனர். மட்டுநகரிலுள்ள அனைத்துப் பாடசாலைகளும் …

  5. கடத்தப்பட்டோர், காணாமற்போனோர்; நேற்று மட்டும் 8 முறைப்பாடுகள் பதிவு கடத்தப்பட்டோர் மற்றும் காணா மற்போனவர்கள் தொடர்பாக எட்டு முறைப்பாடுகள் நேற்று மனித உரிமைகள்ஆணைக் குழு வின் யாழ். அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டன. உரும்பிராய் மேற்கைச் சேர்ந்த பரமசாமி திவாகரன் (வயது25) நேற்று ஞாயிற்றுக்கிழமை அதி காலை 4.30 மணியளவில் அவ ரது வீட்டில் இருந்தும் அரியாலையைச் சேர்ந்த மா. குருதராஜ் கடந்த வெள்ளிக் கிழமை நள்ளிரவு 12 மணியள வில் அவரது வீட்டில் இருந்தும் அரியாலை,நெடுங்குளத்தைச் சேர்ந்த அமிர்தலிங்கம் அழகேஸ் வரன் (வயது29) கடந்த வெள் ளிக்கிழமை நள்ளிரவு 1.40 மணி யளவில் அவரது வீட்டில் இருந் தும் மானிப்பாய், மேதர் லேனைச் சேர்ந்த யேசுதாசன் ஜெயசுதன் (வயது25) கடந்த வெள்ளிக் கிழமை அ…

  6. தமிழர்களின் அவலங்களை கருத்தில் எடுக்காமல் இராணுவ நடவடிக்கையில் அரசு முனைப்பு ஒன்றரை லட்சம் மக்கள் இடம்பெயர்ந்தமை குறித்து தமிழ்க்கூட்டமைப்பு அதிர்ச்சி, கவலை அரசு கிழக்கில் இராணுவ நடவடிக்கை யில் மாத்திரமே முனைப்புக் காட்டுகின் றது. மக்கள் இடம்பெயர்ந்து அவலப்படு வது பற்றியோ அவர்கள் உயிர் ஆபத்துக் களை எதிர்நோக்குவது பற்றியோ சிறிதும் கவலைப்படவில்லை. இவ்வாறு தமிழ் தேசியக் கூட்ட மைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது. இராணுவ நடவடிக்கையில் மாத்திரம் கவனஞ்செலுத்தாமல் மக்களைப் பற்றியும் சிந்தித்து தற்போது புலிகளின் கட்டுப் பாட்டுப் பகுதிகளில் இருந்து அரச கட் டுப்பாட்டுப் பகுதிகளுக்கு இடம்பெயர்ந் திருக்கும் ஒன்றரை லட்சம் தமிழ் மக்களுக்கு அடிப்படை வசதிகளை உடனடி யாகச் செய்து கொடு…

  7. தேர்தல் ஆணையரோடு ஜனாதிபதி ஆலோசனை திடீர்ப் பொதுத் தேர்தல் குறித்து ஆராய்வு? [Monday March 12 2007 06:38:11 AM GMT] [யாழ் வாணன்] தேர்தல் ஆணையாளர் தயானந்த திஸநாயக்காவை திடீரென அழைத்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அவருடன் சுமார் ஒன்றரை மணித்தியாலம் கலந்தாலோசனை நடத்தியிருக்கிறார். திடீர்ப் பொதுத்தேர்தலுக்கான முதற்கட்ட நடவடிக்கையாக இச் சந்திப்பு இருக்கலாம் என சில அரசியல் வட்டாரங்கள் ஊகம் தெரி விக்கின்றன. கடந்த புதன்கிழமை இச்சந்திப்பு நடை பெற்றது. எனினும் ஜனாதிபதிக்கும் தேர் தல் ஆணையாளருக்கும் இடையில் கலந் துரையாடப்பட்ட விடயங்கள் குறித்து உத்தியோகபூர்வத் தகவல் ஏதும் வெளி யாகவில்லை. அதேவேளை அன்று (புதன்கிழமை ) இரவு நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் க…

  8. கிழக்கில் இடம்பெயர்ந்துள்ள பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகளை அரசு மேற்கொள்ள வேண்டும் ஐ.தே.க.கோரிக்கை; மீள்குடியேற்றத்துக்கு நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் குற்றச்சாட்டு அரசாங்கம் கிழக்கை கைப்பற்றிவிட்டோம் என்று பெருமை பேசிக்கொண்டிருக்காமல் கிழக்கில் இடம்பெயர்ந்துள்ள மக்களை மீளக்குடியமர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் தற்போது இடம் பெயர்ந்துள்ள மக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டும் என்று ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார். நாட்டின் பாதுகாப்பு நிலைமை மிகவும் மோசமாகவுள்ளது. மனிதஉரிமைகள் மீறப்படும் சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம் பெற்று வருகின்றன. இவற்றைத் தடுக்க அரசாங்கம் ஆக்கபூர்வமான நடவ…

  9. கெப்பதி கொல்லாவயில் கிளேமோர் தாக்குதல் வீரகேசரி இணையம் கெப்பதி கொல்லாவயில் இன்று திங்கள் காலை இடம்பெற்ற கிளேமோர் தாக்குதலில் ஊர்காவற்படை வீரர் ஒருவர் பலியாகியுள்ளதாக தேசிய பாதுகாப்பு ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.கெபதி கொல்லாவ டொடுவேவ பகுதியில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த ஊர்காவற் படைவீரர்களை இலக்கு வைத்தே இக் கிளேமோர் தாக்குதல் இன்று காலை 7.15 மணியளவில் மேற்கொள்ளப்பட்டுள்ளது என தேசிய பாதுகாப்பு ஊடக மத்திய நிலையம் மேலும் தெரிவித்தது. வீரகேசரி இணையம் VIRAKESARI.LK

  10. சனி 10-03-2007 00:53 மணி தமிழீழம் [தாயகன்] போரின் விளைவை சிங்கள தேசமும் அனுபவிக்கும் - இளந்திரையன் சிறீலங்காப் படைகளால் ஏற்படுத்தப்பட்டுள்ள மனித அவலம் தமிழீழ மக்களுடன் மட்டும் நின்றுவிடாது, பாரிய போருக்கு வழி வகுத்து வருவதாக, தமிழீழ இராணுவப் பேச்சாளர் இளந்திரையன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் சிறீலங்காப் படையினரின் எறிகணைத் தாக்குதல்கள், மற்றும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் காரணமாக கடந்த சில நாட்களுக்குள் மட்டும் 15 ஆயிரம் மக்கள் இடம்பெயர்ந்து, பாரிய மனித அவலத்திற்குள் தள்ளப்பட்டுள்ளனர். தமிழ் மக்களை அவலத்துக்குள் தள்ளும் சிறீலங்கா அரசாங்கம் அதற்குரிய விளைவினையும் சிறீலங்காவிலும் உணர நேரிடும் என, தமிழீழ இராணுவப் பேச்சாளர் இளந்திரையன் கூறினார். இ…

    • 40 replies
    • 6.4k views
  11. ''15ஆவது ஆண்டு நிறைவில் கடற்புலிகளின் மகளிர் படையணி'' -தெ.றஞ்சித்குமார்- எதிரிக்கு பெரும் சாவாலக அமைந்துள்ள விடுதலைப் புலிகளின் கடற்படையின் பரியவளர்ச்சி அமைந்துள்ளது. சிறிலங்காப் படையினர் பல்வேறு நாடுகளில் இருந்தும் நவீனம் வாய்ந்த கடற்கலங்கள் மற்றும் கனரக ஆயுதங்களை கொள்வனவு செய்து அதன் மூலம் தமிழ் மக்களுக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வந்த சூழ்நிலையில் அதற்கு முகம் கொடுக்கும்.வகையில் கடற்புலிகள் தங்களை பலப்படுத்தினர். எதையும் சவாலாத்; தாங்கும் சக்தியை விடுதலைப்புலிகளின் கடற்புலிகள் பெற்றுள்ளார்கள். சிங்களப் படைகள் கடலில் நடாத்தும் இன வெறிபடித்த தாக்குதல்களுக்கு தகுந்த முறையில் பாடம் கற்பிக்க கடற்புலிகள் தவறியதில்லை. இன்றைய கடலாதிக்க நிலையில்…

    • 0 replies
    • 887 views
  12. ''மகிந்தராஜபக்ச மேற்கொண்ட சீனப்பயணத்தின் நோக்கம்'' -மனோகரன்- சுமார் அறுநூறு ஆண்டுகளுக்கு முன்னர் சீனக்கடற் தலைவர் செங்கீ இலங்கைக்கு தன்னுடைய பிரதானிகளுடன் வந்ததாக கடற்பயணங்கள் குறித்த வரலாற்று நூல்கள் கூறுகின்றன. செங்கீயின் இலங்கைக்கான வருகையை அடையாளப் படுத்தும் விதமாக அவர் பொறித்த நினைவுக்கல் இன்னமும் கொழும்பு மியூசியத்தில் உண்டென்றும் கூறப்படுகிறது. சீனாவுக்கும் இலங்கைக்குமான தொடர்புகள் இதற்கு முன்னரே இருந்ததாகவும், சீன வணிகர்களும் சீனத்துறவிகள் மற்றும் பயணிகளும் இலங்கைக்கு வந்து சென்றதாகவும் பல வரலாற்றுக் கதைகள் உண்டு. இலங்கையின் வரலாற்றை இந்தத் தொடர்புகள் குறிப்பிட்ட அளவுக்கு பாதித்திருக்கலாம். சிறிலங்கா சனாதிபதி மகிந்த ராஜபக்ச 260 பேர் கொண்ட பெ…

    • 0 replies
    • 807 views
  13. ''போரும், சமதரப்பு நிலைப்பாடும்'' -நா. யோகேந்திரநாதன்- அண்மையில் அமைச்சர் மகிந்த சமரசிங்கவும் அமெரிக்க, ஜெர்மன், இத்தாலி தூதுவர் உட்பட சில வெளிநாட்டு ராஜதந்திரிகளும் மட்டக்களப்புக்கு விஜயத்தை மேற்கொள்ளுமுகமாக மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் வந்திறங்கிய போது அங்கு எறிகணைகள் விழுந்து வெடித்துள்ளன. இச்சம்வத்தின் போது அமெரிக்க தூதுவர் உட்பட சில ராஜதந்திரகளும் பாதுகாப்புத் தரப்ப்பினர் சிலரும் காயமடைந்தனர். தமிழீழவிடுதலைப்புலிகள் தாங்களே இத்தாக்குதலை நடத்தியதாகவும், இம்மைதானம் வழமையாக இராணுவத் தேவைகளுக்கு மட்டும் பாவிக்கப்படுவதாகவும், ராஜதந்திரிகளின் வருகையைப் பற்றி தமக்கு எதுவும் தெரியாதெனவும் உடனடியாகவே அறிவித்தனர். மேலும் விடுதலைப்புலிகளின் சாதானச் செய…

    • 0 replies
    • 691 views
  14. ''அரச புலனாய்வுப் பிரிவின் சீர்திருத்தம் புலிகளின் புலனாய்வு வியூகத்தை வெல்லுமா?'' -ச. சங்கரன்- அரச புலனாய்வு நிறுவனத்தை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தனது விருப்பத்திற்கும், தனது ஆட்சி அதிகாரத்தினை நிலை நிறுத்துவதற்குமாக புனரமைப்பு செய்கிறார் விடுதலைப் புலிகளுடன் இராணுவ புலனாய்வு ரீதியில் போரிடும் ஆற்றலை வளர்த்துக் கொள்வதற்கும் விடுதலைப் புலிகளின் தந்திரோபாயங்களுக்கு எதிரான மூலோபாயங்களை வகுப்பதற்கும் விடுதலைப் புலிககளின் திட்டங்களை தகர்தெறிவதற்காகவும் சிறிலங்கா புலனாய்வு நிறுவனங்களில் மகிந்தர் சீர் திருத்தம் செய்கிறார். தற்போதைய திட்டமானது தமிழர் தாயகத்தினை மையப்படுத்தியும் விடுதலைப் புலிகளின் சர்வதேசவலைப்பின்னலினை மையப்படுத்தியும்; உருவாக்கப் பெற்றிர…

    • 0 replies
    • 873 views
  15. அகதிகளை சுமக்கும் மட்டக்களப்பு மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில தினங்களான அரச படையினர் மேற்கொண்டுவரும் தொடர்ச்சியான தாக்குதல் சம்பவங்களால் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் தமது வாழ்விடங்களை உடைமைகளை இழந்து இடம்பெயர்ந்துள்ள பெரும் அவல நிலைமையொன்று உருவாகியுள்ளது. விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசங்களான வெல்லாவெளி, பட்டிப்பளை, வவுணதீவு, கிரான், செங்கலடி பிரதேச செயலகப் பிரிவுகளை நோக்கி அரச படையினர் மேற்கொண்டு வரும் மிகக் கடுமையான ஷெல் தாக்குதல்களையடுத்தே அப்பிரதேசங்களைச் சேர்ந்த சுமார் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் தமது இருப்பிடங்களை விட்டு வெளியேறி இராணுவக் கட்டுப்பாட்டு பிரதேசங்களை நோக்கி இடம்பெயரத் தொடங்கியுள்ளனர். மட்டக்களப்பு நகர…

  16. சனி 10-03-2007 01:38 மணி தமிழீழம் [மயூரன்] மட்டக்களப்பில் 40 000 பொதுமக்கள் 48 மணிநேரத்தில் இடப்பெயர்வு விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதியான படுவான்கரைப் பகுதியில் சிறீலங்கா படையினர் மேற்கொண்ட அகோர பலகுழல் எறிகணைத் தாக்குதலில் 40 000 பொதுமக்கள் இடம்பெயர்ந்துள்ளதாகவும் தெரியவருகிறது. மட்டக்களப்பின் கொக்கட்டிச்சோலை மற்றும் அயல்கிராமங்களில் இருந்தும் இடம்பெயர்ந்துள்ள மக்களால் பெரும் மற்றொரு மனிதஅவலம் சர்வதேச சழூகத்துக்கு தெரியாமல் இடம்பெறபோவதாக மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஜெனந்தமூர்த்தி தெரிவித்துள்ளார். இதேவேளை சிறீலாங்கா இராணுவத்தால் திறக்கப்பட்ட மூன்றாவது களமுனை புல்லுமலைப் பகுதியில் விடுதலைப்புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. சிறீலங்கா…

  17. வடக்கு கிழக்கு பிரிப்பை சட்டபூர்வமானதாக்கும் செயற்பாடு வடக்கையும், கிழக்கையும் உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு அமைய பிரித்த மஹிந்தவின் அரசு, அந்தப் பிரிப்புக்கு சட்டரீதியான வலுவைக் கொடுப்பதற்கான சட்ட மூலத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்கான ஏற்பாடுகளைச் செய்திருக்கின்றது. அதற்கான உரிய சட்ட வரைவு நாடாளு மன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருக்கின்

  18. ஐரோப்பிய ஒன்றியத்தின் தீர்மானத்தை தடுக்கும் முயற்சியில் மகிந்த சமரசிங்க ஜஞாயிற்றுக்கிழமைஇ 11 மார்ச் 2007இ 17:23 ஈழம்ஸ ஜக.திருக்குமார்ஸ ஜெனீவாவில் நாளை ஆரம்பமாகும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அமைப்பின் நான்காவது மாநாட்டில் கலந்து கொள்ளும் சிறிலங்காவின் மனித உரிமைகள் பேரனர்த்த நிவாரண அமைச்சர் மகிந்த சமரசிங்க சிறிலங்காவிற்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியத்தினால் கொண்டுவரபட தீர்மானித்திருக்கும் தீர்மானத்தை தடுக்கும் முயற்சிகளில் ஈடுபடுவார் என தெரிவிக்கப்படுகின்றது. நாளை திங்கட்கிழமை (12.03.07) ஆரம்பமாகி 30 ஆம் நாள் வரை நடைபெறவுள்ள இந்த கூட்டத் தொடரில் உலகில் மனித உரிமைகளை மேம்படுத்துதல்இ பாதுகாத்தல் தொடர்பாக விவாதிக்கப்பட உள்ளது. இதில் மகிந்த சமரசிங்க தலைமையிலான …

    • 6 replies
    • 1.5k views
  19. திங்கள் 12-03-2007 01:52 மணி தமிழீழம் [தாயகன்] வல்லையில் பேரூந்து விபத்து - 2 பேர் பலி, 18 பேர் காயம் யாழ் வல்லை வெளியில் நேற்று மாலை பேரூந்து ஒன்று விபத்துக்கு உள்ளானதில் இரண்டு பேர் விபத்து நடைபெற்ற இடத்தில் பலியானதுடன், 18 பேர் காயமடைந்துள்ளனர். சிறீலங்காப் படையினரின் ஊரடங்கு அமுலுக்கு வருவதற்கு முன்னர், பயணிகளை உரிய இடத்திற்கு அழைத்துச் செல்லும் நோக்கில் வேகமாகப் பேரூந்தை செலுத்தியதால் இந்த விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகின்றது. காயமடைந்த 18 பேரில் நான்கு பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களில் தங்கராசா முரளிதரன் என்ற 12 வயதுச் சிறுவனும் அடங்குகின்றார். pathivu.com

  20. தமிழர் தாயகத்தில் மணலாற்றுப் பகுதியில் ஆக்கிரமிப்பு நடவடிக்கையை மேற்கொள்ள சிறிலங்காப் படையினர் முழுமையான தயார்படுத்தலை மேற்கொண்டுள்ள நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகள் அதனை எதிர்கொள்ளத் தயாராக இருக்கின்றனர் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வனுக்கும் இலங்கைக்கான நோர்வேயின் தூதுவர் ஹான்ஸ் பிறட்ஸ்கருக்கும் இடையிலான சந்திப்பு இன்று திங்கட்கிழமை 11.30 மணிமுதல் 1.30 மணிவரை கிளிநொச்சியில் உள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறை நடுவப் பணியகத்தில் நடைபெற்றது. இச்சந்திப்பு முடிவுற்ற பின்னர் சு.ப.தமிழ்ச்செல்வன் ஊடகவியலாளர்களுக்கு கூற…

    • 66 replies
    • 9.3k views
  21. 9 போராளிகள்- 4 தேசிய துணைப்படை வீரர்களின் வீரச்சாவு அறிவித்தல்கள் தமிழீழ விடுதலைக்காக களப்பலியாகிய 9 போராளிகளினதும் 4 தேசிய துணைப்படை வீரர்களினதும் வீரச்சாவு அறிவித்தல்களை தமிழீழ விடுதலைப் புலிகள் வெளியிட்டுள்ளனர். விபரம் வருமாறு: 09.03.2007 இல் யாழ். நாகர்கோவில் பகுதியில் சிறிலங்காப் படையினருடன் இடம்பெற்ற நேரடி மோதலின் போது தேசிய துணைப்படை வீரர்கள் இருவர் வீரச்சாவடைந்துள்ளனர். தேசிய துணைப்படை வீரர் 2 ஆம் லெப். ஜேசுதாஸ் என்று அழைக்கப்படும் ப.சி.ஐயாத்துரைகமம் 160 ஆம் கட்டை பரந்தன், கிளிநொச்சியைச் சேர்ந்த முனியாண்டி ஜேசுதாஸ், தேசிய துணைப் படை வீரர் வீரவேங்கை ரவிக்குமார் என்று அழைக்கப்படும் இலக்கம் 92 ரயர் கடையடிச் சந்தி விநாயகபுரம் கிளிந…

  22. திங்கள் 12-03-2007 01:13 மணி தமிழீழம் [தாயகன்] வவுனியாவில் இராணுவம் எறிகணை வீச்சு - இரண்டு சிறுவர்கள் படுகாயம் வவுனியா ஓமந்தைப் படை முகாமில் இருந்து நேற்று காலை 9.00 மணிமுதல் பாலமோட்டை, கிழவிக்குளம் கிராமங்கள் மீது சிறிலங்காப் படையினர் கடுமையான எறிகணைத் தாக்குதல் நடத்தினர். இந்த எறிகணைத் தாக்குதலில் கிழவிக்குளம் கிராமத்தைச் சேர்ந்த 9 வயதுடைய விஜயசிங்கம் தனுஸ்காந்த், 10 வயதுடைய இலங்கேஸ்வரன் மிதுசன் ஆகியோர் படுகாயமடைந்தனர். படுகாயம் அடைந்த இலங்கேஸ்வரன் மிதுசன் உயிருக்கு ஆபத்தான நிலையில் வவுனியா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார். பதிவு.கொம்

  23. ஞாயிறு 11-03-2007 03:16 மணி தமிழீழம் [தாயகன்] மட்டக்களப்பு புல்லுமலை முறியடிப்புச் சமரில் கப்டன் குட்டியழகி என்ற பெண் போராளி வீரச்சாவடைந்திருந்தார். இவரது வித்துடல் விடுதலைப் புலிகளின் முழுப் படைய மதிப்புடன் நேற்று மட்டக்களப்பு தரவை மாவீரர் துயிலும் இல்லத்தில் விதைக்கப்பட்டது. நன்றி : பதிவு

  24. இலங்கைத் தமிழர் பிரச்சினை பற்றி சிங்கள, தமிழ் மக்களுக்கு அரசு வெவ்வேறு செய்திகளை கூறுகின்றதா? பீஷ்மர் செய்திகளுக்கு என்றுமே அவை சொல்லப்படும் கோணங்கள் உண்டு. ஆனால் எந்தக் கோணத்தில் சொன்னாலும் ஓர் அடிப்படைச் செய்தித் தரவு இருக்கும். அது மாறுவதில்லை. மாறவும் கூடாது. இலங்கை அரசாங்கம் குறிப்பாக அதன் வானொலிச் செய்திகளில் செய்திகளைக் கேட்கும் பொழுது சிங்கள, தமிழ் மொழிகளில் கூறப்படுவனவற்றின் வேறுபாடு திகைப்பை ஏற்படுத்துகின்றது. உதாரணமாக சனியன்று காலை அந்த வானொலிச் செய்தியில் அரசாங்கத்தின் மனிதவுரிமை மீறல்கள் பற்றிய தென்னிலங்கை நிறுவனங்கள் சில எடுக்கும் நிலைப்பாடு பலத்த விமர்சனத்துக்கு உள்ளானது. சுதந்திர ஊடக அமைப்பைச் சேர்ந்த சுனந்த தேசப் பிரிய அரசாங்கத்தின் மனிதவுரி…

    • 0 replies
    • 649 views
  25. மட்டக்களப்பபில் ஐந்து விசேட அதிரடிப்படையினர் காயம் மட்டக்களப்பு மேற்கு கொகம்பகஸ்தலாவ (Kohombagasthalawa) பகுதியில் நேற்று இரவு 7.30 மணியளவில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் ஐந்து விசேட அதிரடிப்படையினர் காயமடைந்துள்ளதாக சிறீலங்கா தேசிய பாதுகாப்பு ஊடக மையம் தகவல் வெளியிட்டுள்ளது. இதன் போது காயமடைந்தவர்களை அநுராதபுர வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தகவல்வெளியிட்டுள்ளன

    • 0 replies
    • 820 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.