ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143499 topics in this forum
-
தென் தமிழீழத்தில் எச்சரிக்கையாக இருப்பதற்காக பொதுமக்களைப் போல் சிறிலங்கா இராணுவமும் எச்சரிக்கைக் கருவி கேட்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்த்தன கூறியுள்ளார். கிராம மக்கள் தாக்குதல்களிலிருந்து தப்பிப்பதற்கான எச்சரிக்கைக் கருவிகளை வழங்கும் சிறப்புத் திட்டத்தை ஜயலத் ஜயவர்த்தன தொடங்கி வைத்து பேசியதாவது: பொதுமக்கள் தங்கள் மீதான தாக்குதல்களிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக எச்சரிக்கைக் கருவிகளை நாம் வழங்குகிறோம். ஆனால் வவுணதீவு, மத்திய முகாம், கல்லடி உள்ளிட்ட 5 இராணுவ முகாம்களுக்கும் ஆபத்து இருப்பதால் தங்களுக்கும் எச்சரிக்கைக் கருவிகளை எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி வழங்க வேண்டும் என்று இராணுவத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்…
-
- 0 replies
- 1k views
-
-
(2 ஆம் இணைப்பு) கொழும்பு அருகே குண்டுவெடிப்பு- 5 பேர் பலி? 50 பேர் படுகாயம்- 10 பேர் கவலைக்கிடம் [வெள்ளிக்கிழமை, 5 சனவரி 2007, 19:41 ஈழம்] [செ.விசுவநாதன்] கொழும்பு அருகே இன்று நடந்த குண்டுவெடிப்பில் 5 பேர் பலியாகி இருக்கக்கூடும் என்றும் 50 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. கொழும்பிலிருந்து 36 கிலோ மீற்றர் தொலைவில் நிட்டம்புவ அருகே உள்ள கலாப்பிட்டிய பகுதியில் பேரூந்து ஒன்றின் உள்ளே இன்று வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணியளவில் இக்குண்டு வெடித்துள்ளது. இக்குண்டு வெடிப்பில் 5 பேர் பலியாகி இருக்கக்கூடும் என்று தெரிகிறது. படுகாயமடைந்தோரில் 10 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. நிட்டம்புவவிலிருந்து கிரியுல்லவுக…
-
- 0 replies
- 1.2k views
-
-
மட்டக்களப்பு தாழங்குடாவில் இன்று நடத்தப்பட்ட கிளைமோர் தாக்குதலில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் 4 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஒருவர் படுகாயமடைந்துள்ளார். தாழங்குடா கல்முனை வீதியில் இன்று வெள்ளிக்கிழமை காலை 9.05 மணிக்கு சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்ட அதிரடிப்படையினர் ஒன்று கூடிய இடத்தில் இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அதிரடிப்படையினரில் 4 பேர் கொல்லப்பட்டனர். ஒருவர் காயமடைந்தார். மேலும் பொதுமகன் ஒருவரும் காயமடைந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
-
- 0 replies
- 1.5k views
-
-
நெடுங்கேணியில் ஆள ஊடுருவும் அணியினரால் கிளேமோர்த் தாக்குதல். முல்லைத்தீவு நெடுங்கேணிப் பகுதியில் இன்று காலை 8.30 மணியளவில் சிறிலங்காப் படையினரின் ஆள ஊடுருவும் அணியினரால் விவசாயத் திணைக்கள வாகனத்தை இலக்குவைத்து கிளேமோர்த் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இத்தாக்குதலில் விவசாயத் திணைக்கள பணியாளர்கள் இருவர் கொல்லப்பட்டதுடன் மேலும் மூவர் படுகாயமடைந்துள்ளதாக தெரியவருகின்றது. -Sankathi-
-
- 2 replies
- 1.8k views
-
-
தமிழின அழிப்பைக் கண்டித்து கிளிநொச்சியில் கண்டனப் பேரணி. இன அழிப்பு நோக்கோடு தமிழ் மக்கள் மீது நடத்தப்படுகின்ற சிறிலங்கா அரசபடைகளின் தாக்குதல்களைக் கண்டித்து கிளிநொச்சியில் இன்று காலை கண்டனப்பேரணி நடைபெற்றுள்ளது. குறிப்பாக இலுப்பைக்கடவை படகுத்துறை தாக்குதலைக் கண்டிக்கும் கோசங்களை எழுப்பியதோடு சுலோக அட்டைகளையும் பேரணியில் கலந்து கொண்டோர் தாங்கியிருந்தனர். கிளிநொச்சி அரசாங்க அதிபர் அலுவலகத்தில் இருந்து ஆரம்பமான இக்கண்டனப் பேரணி கிளி மாவட்ட அரசார்பற்ற இணையத்தைச் சென்றடைந்து அங்கு மகஜர் கையளிப்பும் கண்டன உரைகளும் இடம்பெற்றுள்ளது. இந்நிகழ்விலும் பேரணியிலும் அரச திணைக்களங்களின் உத்தியோகத்தர்கள், அரசசார்பற்ற நிறுவனங்களின் பணியாளர்கள் வர்த்தக நிறுவனங்களின் பணி…
-
- 0 replies
- 711 views
-
-
புலிகளை வைகிறதுதேசிய பாதுகாப்பு மத்திய நிலையம் கொழும் 05 ஜன. மன்னார் இலுப்பக்கடவையில் விமானத் தாக்குதல தொடர்பாக விடுதலைப்புலிகள் உண்மைக்குப் புறம்பான முறையில் பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். இதனை இலங்கை அரசு முற்றாக மறுக்கிறது. - இவ்வாறு தேசியப் பாதுகாப்புத் தொடர்பான ஊடக மத்திய நிலையம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கபட்டடுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது - மன்னாருக்கு வடக்கே இலுப்பக் கடவையிலுள்ள விடுதலைப் புலிகளின் கடற்படைத் தளம் மீது மேற் கொள்ளபட்ட விமானப் படைத் தாக்குதல்கள் தொடர்பாக வி.புலிகள் உண்மைக்குப் புறம்பான. தவறான பிரசாரங்களை செய்துவருகிறார்கள். இதனை அரசு அடியோடு நிராகரிக்கிறது. சர்வதேச சமூகத்தைத் தவறான வழியி…
-
- 3 replies
- 1.3k views
-
-
இலங்கை இனப்பிரச்சினை குறித்து பா.ஜ.க.தலைவர்களுடன் மன்மோகன் சிங் ஆராய்வு. இலங்கை இனப்பிரச்சினை தொடர்பாக இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் இந்திய எதிர்க்கட்சித் தலைவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்த சந்திப்பில் இந்தியாவின் பிரதான எதிர்க்கட்சியான பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் அதன் தலைவர் லால்கிருஷ்ண அத்வானி, முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய், ஜஸ்வந்சிங், முன்னாள் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பிர்ஜேஸ் மிஸ்ரா ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். அத்துடன் இந்திய பிரதமருடன் வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன், இந்திய பிரதமரின் தலைமை செயலாளர் டி.கே.ஏ.நாயர், வெளிவிவகார செயலாளர் சிவசங்கர் மேனன் ஆகியோரும் கலந்து கொண்டதா…
-
- 0 replies
- 863 views
-
-
சிறிலங்காவில் பெற்றோலின் விலை 5 ரூபாயினால் நேற்று வியாழக்கிழமை நள்ளிரவிலிருந்து அதிகரிக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. ஒரு லீற்றர் ஓக்ரேன் 90 பெற்றோலின் விலை 97 ரூபாயாகவும் ஒரு லீற்றர் ஓக்ரேன் 95 பெற்றோலின் விலை 100 ரூபாயாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளன. உலக சந்தையில் ஏற்பட்ட எண்ணை விலை அதிகரிப்பே இந்த விலை உயர்வுக்கான காரணம் என்று பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. பெற்றோலின் விலையில் அதிகரிப்பு ஏற்படாவிட்டால் 175 மில்லியன் ரூபாயை இழக்க வேண்டி ஏற்படும் என்று கடந்த வாரம் கூட்டுத்தாபனம் அறிவித்திருந்தது. பெற்றோலியக் கூட்டுத்தாபன முகாமையாளர் அசந்தா டீ மெல் தெரிவிக்கையில், முத்துராஜவெலவில் இருந்து டீசல் கொண்ட…
-
- 0 replies
- 699 views
-
-
திடீர்த் தேர்தலுக்கு அரசு திட்டம்: ஜே.வி.பி. நாடாளுமன்ற உறுப்பினர் கூறுகின்றார் திடீர்ப் பொதுத் தேர்தல் ஒன்றை நடத்தும் நோக்கத்துடனேயே அரசாங்கம் "மக்களைக் கவரும்" நிகழ்ச்சி நிரலை தற்போது முன்னெடுத்து வருகின்றது எனத் தெரிவித்திருக்கும் ஜே.வி.பி.யின் நாடாளுமன்ற உறுப்பினர் கே.லால்காந்த, மக்களுக்கு வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்றாது, நாளாந்தம் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பால் அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையை மக்கள் இழந்துவிட்டனர் என்றும் தெரிவித்தார். மக்களின் நம்பிக்கையை இழந்து வரும் அரசாங்கம் தேர்தல் ஒன்றுக்குத் தயாராகி வருகின்றது என்பதுதான் உண்மை. ஆனால், இது மறைக்கப்படுகின்றது. இது போன்றதொரு சந்தர்ப்பத்தில் அரசாங்கம் உண்மைகளை வெளியிடாது. வடக்கு - கிழக்குப் பிரச்சி…
-
- 0 replies
- 655 views
-
-
சிறிலங்காவிற்கு தரக்குறைவான ஆயுதங்களை பாகிஸ்தான் விற்பனை செய்துள்ளதாக கொழும்பு ஊடகங்கள் வெளியிட்ட தகவல்களை சிறிலங்காவுக்கான பாகிஸ்தான் தூதரகம் மறுத்துள்ளது. இது தொடர்பில் தூதரகம் தெரிவித்துள்ளதாவது: பாகிஸ்தானின் ஆயுதங்கள் மிகச்சிறந்த தரம் வாய்ந்தவை, சிக்கனமானவை, இலகுவாக பயன்படுத்தக்கூடியவை. எமது ஆயுதப்படைகளின் தேவையையும் பாகிஸ்தான் நிறுவனங்கள் தான் பூர்த்தி செய்கின்றன. இந்த அறிக்கையை வெளியிட்டவர்களின் நம்பகத்தன்மையில் சந்தேகம் உள்ளது. சிறிலங்காவின் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் இது தொடர்பாக எம்முடன் தொடர்பு கொள்ளாமல் மூன்றாவது நாட்டுடன் கருத்துக்களை பகிர்ந்தது எமக்கு ஆச்சரியமாக உள்ளது. ஏனெனில் எமக்கும் சிறிலாங்காவிற்கும் இடையில் ஆழமான நட்புறவு உள்ளது. …
-
- 0 replies
- 718 views
-
-
அப்பாவி மக்கள் மீதான தாக்குதலை நாம் மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றோம்: விடுதலைப் புலிகள். மன்னாரில் அப்பாவிப் பொதுமக்கள் மீதான விமானத் தாக்குதலுக்காக இலங்கை அரசாங்கம் மிக மோசமான விளைவுகளை எதிர்நோக்க வேண்டியிருக்குமென விடுதலைப் புலிகள் எச்சரித்துள்ளனர். மன்னாரில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிலுள்ள இலுப்பைக்கடவை படகுத்துறை பகுதியின் குடிமனைப் பகுதியில் செவ்வாய்க்கிழமை விமானப் படையினர் நடத்திய கடும் தாக்குதலில் 20 இற்கும் மேற்பட்ட அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்டனர். எனினும், கடற்புலிகளின் முகாம்களே விமானப் படையினரின் துல்லியமான தாக்குதலுக்கிலக்கானதாகவும் 30 இற்கும் மேற்பட்ட புலிகள் கொல்லப்பட்டதாகவும் அரசும் படைத்தரப்பும் கூறி வருகின்றன. …
-
- 0 replies
- 756 views
-
-
வட-கிழக்கு பிரிப்பானது இனப்பிரச்சினை தீர்வு தொடர்பான சத்தியத்தை பின் தள்ளியுள்ளது. அரசியலமைப்பு உடனடியாக திருத்தப்படவேண்டும் என்கிறார் பிரதியமைச்சர் டிலான் பெரேரா நாட்டின் அரசியலமைப்பு உடனடியாக திருத்தப்படவேண்டும் அல்லது மாற்றப்படவேண்டும். அரசியல் தீர்மானங்களை மாற்றும் அதிகாரம் நீதிமன்றத்திற்கு உள்ளமை ஆரோக்கியமான விடயமல்ல. இந்த அரசியலமைப்பு தொடர்ந்து இருந்தால் நாட்டின் இனப்பிரச்சினையை தீர்க்கவும் முடியாது. அரசாங்கத்தால் அரசியல் தீர்மானங்களை மேற்கொள்ளவும் முடியாது என்று நீதி மற்றும் நீதிமன்ற மறுசீரமைப்பு விவகார பிரதியமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்தார். எமது அரசியலமைப்பில் அதிகமான குறைபாடுகள் காணப்படுகின்றன. வடகிழக்கு பிரிப்பானது இனப்பிரச்சினை தீர்வு தொடர்பான சாத்திய…
-
- 0 replies
- 607 views
-
-
கல்வியமைச்சின் முன் அனுமதியை பெற வேண்டும்! கல்வியமைச்சின் அனுமதியின்றி உள்ளூர் மற்றும் வெளிநாட்டு அரச சார்பற்ற நிறுவனங்கள் பாடசாலை விடயங்களில் தலையீடு செய்வது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதாக கல்வியமைச்சின் செயலாளர் ஆரியரத்ன ஹேவாகே தெரிவித்தார். கல்வியமைச்சில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இங்கு மேலும் கருத்து வெளியிட்ட அவர்; உள்ளூர் மற்றும் வெளிநாட்டு அரச சார்பற்ற நிறுவனங்கள் பாடசாலைகளில் அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்வது தமது நிகழ்ச்சி திட்டங்களுக்கு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை பயன்படுத்துவது என்பன முற்றாக தடை செய்யப்பட்டுள்ளன. எக்காரணம் கொண்டும் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு அரச சார்பற்ற நிறுவனங்கள…
-
- 0 replies
- 907 views
-
-
நாட்டின் ஒரு பகுதியை பிரித்துக் கொடுக்க தென்னிலங்கை மக்கள் ஒரு போதுமே விரும்பமாட்டார்கள். இந்த நாட்டில் சகல இன மக்களும் ஒற்றுமையாக வாழ வேண்டும். அதற்காக அரசு சகல நடவடிக்கைகளையும் மேற்கொள்கின்றது. பிரதமர் இரட்ணசிறி விக்கிரமநாயக்க அம்பாந்தோட்டையில் 150 வீடுகளை கடல்கோளினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கையளிக்கும் வைபவத்தில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போது இவ்வாறு கூறினார். சர்வதேச `கெயர்' நிறுவனம் இந்த வீடுகளை நிர்மாணித்துக் கொடுத்துள்ளது. பிரதமர் இரட்ணசிறி விக்கிரமநாயக்க தொடர்ந்து பேசுகையில்; "சமாதானப் பேச்சுவார்த்தைகளை குழப்பியது யார்? அரசாங்கமா விடுதலைப் புலிகளா என்பதை நாடு அறியும். அரசாங்கம் சமாதானப் பேச்சுகளுக்கு எப்போதுமே தயாராகவுள்ளது. ஆ…
-
- 0 replies
- 1.2k views
-
-
யுத்தத்தாலன்றி சமாதானத்தாலேயே விடுதலைப் புலிகள் பலமிழப்பு [05 - January - 2007] [Font Size - A - A - A] விடுதலைப் புலிகள் அமைப்பின் இராணுவ பலம் குறிப்பிடும்படியான அளவுக்குக் குறைந்து போனது சமாதான நடவடிக்கைகள் பலமாக இருந்த காலகட்டத்திலேயே என்பதை மறந்து விடக் கூடாது. இந்த வகையில் புலிகள் அமைப்புக்கு இராணுவ ரீதியில் பாரிய பின்னடைவை ஏற்படுத்திய நிகழ்வு கருணா குழுவினர் வெளியேறியதே. 2002 இல் சமாதான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட சந்தர்ப்பத்திலேயே கருணா குழுவினர் புலிகள் அமைப்பிலிருந்து வெளியேறினர். இவ்வாறு கருணா குழுவினர் வெளியேறியதற்கு சமாதான நடவடிக்கைகளே முக்கிய பின் புலமாக அமைந்தது. சமாதான காலத்திலேயே அவர்கள் அதுவரை வாழ்ந்த யுத்தத்தோடு இணைந்த வாழ்க்கையை விட வேற…
-
- 0 replies
- 799 views
-
-
சமுர்த்தி வங்கியில் 96 இலட்சம் மோசடி நுவரெலியாவிலுள்ள சமுர்த்திஅபிவிருத்தி வங்கியின் முகாமையாளர் உட்பட 19 பேர் உடனடியாக பணி நீக்கம் செய்யப்பட்டதையடுத்து அந்த வங்கி சீல் வைக்கப்பட்டுள்ளது. 1900 வாடிக்கையாளர்களை கொண்ட நுவரெலிய சமுர்த்தி அபிவிருத்தி வங்கியில் 96 இலட்சம் ரூபா பண மோசடி இடம்பெற்றிருப்பது தெரியவந்ததையடுத்தது சமுர்த்தி அபிவிருத்தி அதிகார சபையினால் அது சீல்வைக்கப்பட்டுள்ளது. இந்த மோசடியில் வங்கியின் முகாமையாளர் உட்பட 19 பேர் தொடர்புபட்டுள்ளனர் என செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த சீல் வைப்பு சம்பவத்தையடுத்து வங்கியை தீ மூட்ட முயற்சித்த இளைஞர் ஒருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். வங்கியிலுள்ள ஆவணங்களை தீக்கிரையாக்கும் நோக்குடனேயே வங்கியை தீ மூட்ட…
-
- 3 replies
- 1.5k views
-
-
முல்லைத்தீவில் விமானதாக்குதல் நிஷாந்தி (வீரகேசரி) முல்லைதீவில் சிலாவத்துறையில் ஸ்ரீலங்கா விமானப்படையின் கிபீர் விமானங்கள் வெள்ளிக்கிழமை விமான தாக்குதல் மேற்கொண்டுள்ளன. சிலாவத்துறையிலுள்ள வடுதலைப்புலிகளின் கடற்படையின் தளமொன்றை தாக்கியழித்துள்ளதாக தேசிய பாதுகாப்பு ஊடகமத்திய நிலையம் தெரிவித்துள்ளது எனினும் தாக்க்குதலின் போதான சேத விபரம் இன்னும் தெரியவரவில்லை.
-
- 0 replies
- 1.2k views
-
-
தமிழ்நாட்டிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு உணவுடன் கப்பல் [வெள்ளிக்கிழமை, 5 சனவரி 2007, 02:17 ஈழம்] [காவலூர் கவிதன்] சென்னை துறைமுகத்திலிருந்து காங்கேசன்துறை துறைமுகத்திற்கு உணவுப்பொருட்களுடன் புறப்படும் கப்பல், வியாழக்கிழமை இரவு காங்கேசன்துறையைச் சென்றடையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அரிசி, உருளைக்கிழங்கு, சீனி, பருப்பு போன்ற அத்தியாவசி உணவுப்பொருட்களுடன், தனியார் நிறுவனத்தினால் நேரடியாக தமிழ்நாட்டிலிருந்து கொண்டுவரப்படும் உணவுகள், யாழ் அரசாங்க அதிபரூடாக விநியோகிக்கப்படுமென, கொழும்பு அதிகாரிகள் கூறியுள்ளனர். தமிழ்நாட்டிலிருந்து யாழ் குடாநாட்டுக்கு உணவுப்பொருட்கள் நேரடியாக அனுப்பிவைக்க ஏற்பாடு செய்திருப்பதாக, சிறீலங்கா அரசு கடந்த சில வாரங்களாகச் சொல்லிவந்த…
-
- 1 reply
- 1k views
-
-
மன்னாரில் முன்னகர்வு முறியடிப்பு வெள்ளி 05-01-2007 04:13 மணி தமிழீழம் [மகான்] நேற்று முன்தினம் மாலை 6.30 மணியளவில் கொக்குபடையான் பகுதியூடாக முன்னகர முற்பட்ட சிறீலங்கா படைமுயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப்புலிகளின் முறியடிப்பு தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியாதசிறீலங்கா இராணுவத்தினர் முன்னகர்வை கைவிட்டு ஓட்டமேடுத்ததாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
-
- 0 replies
- 946 views
-
-
கடந்த வருடத்தில் இலங்கையில் 829 எயிட்ஸ் நோயாளர்கள் கண்டுபிடிப்பு 04.01.07. கடந்த வருடத்தில் இலங்கையில் 829 எயிட்ஸ் நோயாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டனர் என இலங்கை எயிட்ஸ் தடுப்பு பிரிவு இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. இலங்கையில் கொழும்பில் ஆகக்கூடிய எயிட்ஸ் நோயாளர்கள் கண்டு பிடிக்கப்பட்டதாகவும் கொழும்பிற்கு அடுத்ததாக யாழ்ப்பாணத்தில் அதிக நோயாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளிலிருந்து சென்றவர்களும் உல்லாசப்பிரயாணிகளுமே இலங்கையில் அதிகம் எயிட்சை பரப்பிவருகின்றனர் என தெரிவிக்கப்படுகிறது. கடந்த வருடத்தில் எயிட்ஸ் தாய்மார் பெற்ற பிள்ளைகள் 20பேர் இறந்துள்ளனர் என்றும் பிறக்கும் போதே எயிட்ஸ் நோயுடன்…
-
- 0 replies
- 818 views
-
-
வடக்கு கிழக்கு நிலைமை தொடர்பாக பாராளுமன்றத்தில் செவ்வாய் விவாதம்04.01.07 வடக்கு கிழக்கு நிலைமை பற்றி எதிர்வரும் செவ்வாய்கிழமை பாராளுமன்றத்தில் விசேட விவாதம் ஒன்று நடைபெற உள்ளது. கட்சித்தலைவர்கள் கூட்டம் இன்று பாராளுமன்றத்தில் சபாநாயகர் தலைமையில் நடைபெற்ற போது இம்முடிவு எடுக்கப்பட்டது. தமிழ் தேசியக்கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஆர்.சம்பந்தன் வடக்கு கிழக்கு நிலமைகள் தொடர்பாக விவாதம் ஒன்றிற்கு நேரம் ஒதுக்குமாறு சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்திருந்தார். இதனையடுத்து செவ்வாய்கிழமை வடக்கு கிழக்கு நிலமை தொடர்பாக விவாதத்தை வைத்துக்கொள்வதென சபாநாயகர் அறிவித்துள்ளார். www.tamilwebradio.com
-
- 0 replies
- 770 views
-
-
தவறான இலக்குகள் மீதான குண்டுவீச்சை நிறுத்துங்கள்! பொதுமக்களைக் கொல்வதை ஏற்கமுடியாது என்கிறது ஐ.தே.க. 04.01.07. மன்னார் படகுத்துறைக் கிராமம் மீது நேற்றுமுன்தினம் இலங்கை விமானப்படையினர் மேற்கொண்ட அப்பாவிப் பொது மக்கள் உயிரிழக்கக் காரணமாக அமைந்த விமானத் தாக்குதலை ஐக்கிய தேசியக் கட்சி வன்மையாகக் கண்டித்துள்ளது. இது தொடர்பாகக் கட்சியின் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்க கருத்துக் கூறுகையில் ""விமானப்படையினரால் செவ்வாய்க்கிழமை மன்னார் படகுத் துறைப் பகுதியில் மேற்கொள் ளப்பட்ட விமானத் தாக்குதல் காரணமாக பொதுமக்கள் இறந் தனர் என்று தெரிவிக்கப்படுகின் றது. இதையிட்டு நாம் கவலையடைகிறோம். புலிகளைத் தாக்க விரும்பினால் இலக்…
-
- 0 replies
- 901 views
-
-
சிங்கள ஊடகத்தில் வந்த செய்தி தினக்குரல் பத்திரிகையில் இருந்து ஆனந்தசங்கரியா இப்படி? தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி புதிய கதை ஒன்றைச் சொல்லுகிறார். இம்முறை அவர் கூறும் கதை யாதெனில், வடக்கும், கிழக்கும் வேறாகப் பிரிக்கப்படக் கூடாது என்பதாகும். அவருடைய இந்தக் கூற்று பல வருடங்களுக்குப் பின்னர் வீ.ஆனந்த சங்கரியும் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனும் சமமான கருத்தை உடையவர்களாக இருக்கும் ஒரு சந்தர்ப்பத்தை எடுத்துக் காட்டுவதாகவே எந்த ஒருவருக்கும் தென்பட இடமுண்டு. வீ.ஆனந்தசங்கரி நீண்ட காலமாக தமிழ் மக்களின் குடியியல் உரிமைகளுக்காகத் தோன்றிப் பேசி வந்த ஒரு அரசியல் வாதியாகும். புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் தமிழ் மக்களின் குடியுரிமைகளை குரூரமான…
-
- 0 replies
- 1.2k views
-
-
யாழ் பல்கலைக்கழக இறுதியாண்டு மாணவன் கடத்தல் [வெள்ளிக்கிழமை, 5 சனவரி 2007, 02:18 ஈழம்] [காவலூர் கவிதன்] யாழ். கொக்குவில் கிழக்கைச் சேர்ந்த அருணகிரிநாதன் நிருபராஜ் (வயது 25) புதன்கிழமையிலிருந்து காணாமல் போயுள்ளதாக, அவரது உறவினர் யாழ் மனிதஉரிமை அமைப்பிடம் முறைப்பாடு செய்துள்ளனர். தங்களது குடும்பத்தைச் சேர்ந்த இந்த மாணவன், யாழ் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானத்துறையில் இறுதியாண்டில் படித்துக்கொண்டிருந்ததாகவும
-
- 0 replies
- 737 views
-
-
இணையத்தளங்களுக்கு சிங்களஅரசால் எச்சரிக்கை! ஒட்டுக்குழு ஒன்றின் இணையத்தில் சுட்ட செய்தியொன்று|| புலிகள் தொடர்பான தவறான தகவல்களை வெளியிடும் இணையத்தளங்களிலின் நடவடிக்கை சட்டத்தின் கீழ் குற்றமாகும் இணையத்தளங்களில் வெளியிடப்படும் புலிகள் தொடர்பான தவறான தகவல்களை அரசாங்கம் உன்னிப்பாக அவதானித்து வருகின்றதென தேசிய பாதுகாப்பு ஊடக மையம் தெரிவித்துள்ளது. புலிகள் பற்றிய தவறான தகவல்களை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் மாத்திரமின்றி பொதுவான சட்டத்தின் கீழும் குற்றமாகக் கருதமுடியுமென ஊடக மையத்தின் பணிப்பாளர் நாயகம் லக்ஷ்மன் குலுகல்ல தெரிவித்துள்ளார். இலங்கையின் நடைபெறும் உண்மையான சம்பவங்களை சர்வதேச சமூகத்திற்கு அறியத் தருவது அனைத்துப் பிரஜைகளின் பொறுப்பாகும். ஊடக சுதந்…
-
- 0 replies
- 974 views
-