ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143287 topics in this forum
-
ஒன்றன்பின் ஒன்றாக நால்வரை மோதி பலிகொண்ட வாகனம் நடத்துனருடன் சேர்த்து தீயிட்டு எரிப்பு பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம்; சம்மாந்துறையில் பதற்றம் [Tuesday December 12 2006 09:18:26 PM GMT] [virakesari.lk] சம்மாந்துறை பகுதியில் வாகனம் ஒன்று அடுத்தடுத்து மோதியதில் நால்வர் பலியானதைத்தொடர்ந்து அவ்வாகனத்தின் நடத்துநர் வாகனத்திற்குள்வைத்து எரிக்கப்பட்டதனால் அப்பகுதியில் நேற்றிரவு பெரும்பதற்றம் நிலவியது. கல்முனையிலிருந்து காரைதீவு சந்தியூடாக அம்பாறைநோக்கி வந்த கெண்டர் ரக வாகனமே பாதையில் நின்றிருந்த நால்வரை அடுத்தடுத்து மோதியுள்ளது. இதில் மூவர் ஸ்தலத்திலேயே உயிர் இழந்ததோடு மேலும்ஒருவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிர் இழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. …
-
- 5 replies
- 1.8k views
-
-
கிழக்கில் அகதிகளைத் தங்க வைக்க சூனியப் பிரதேசம் நிறுவ அரசு யோசனை! புலிகளின் இணக்கத்தைப் பெற முயற்சி செஞ்சிலுவைக் குழுவிடம் உதவி கோரல் கிழக்கில் அண்மைக் காலமாக இடம்பெற்று வரும் தீவிர மோதல்களால் இடம்பெயர்ந்து சிக்குண்டிருக்கும் சுமார் 35 ஆயிரம் சிவிலியன்களைத் தங்க வைப்பதற்காக யுத்த சூனியப் பிரதேசம் ஒன்றை உருவாக்குவதற்கு அரசுத் தரப்பில் யோசனை முன்வைக்கப்பட்டிருக்கிறது. அங்கு பாதுகாப்புப் பிரதேசம் ஒன்றை (குச்ஞூஞு ஏச்திஞுண) நிறுவுவதற்கு உதவுமாறும், விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து அதற்கான இணக்கத்தைப் பெற்றுக்கொள்ளுமாறும் செஞ்சிலுவைச் சர்வதேசக் குழுவிடமும், இலங்கைப் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவிடமும் அரசு கோரிக்கை விடுத்திருக்கின்றது. இப்படி ஒரு யோசனையை அரசு, பு…
-
- 1 reply
- 845 views
-
-
அகதிகளின் கூடாரங்களை, புலிகளின் பங்கராகப் பிரச்சாரப்படுத்தும் இராணுவம் காடுகளில் தற்காலிகமாகத் தங்கியிருந்த மக்கள், இராணுவத் தாக்குதலால் விட்டுச்சென்ற கூடாரங்களை, புலிகளின் பங்கர்களாக, சிறிலங்கா படையினர் விசமப் பிரச்சாரம் செய்து வருகின்றனர். வாகரை விடுதலைப் புலிகள் கட்டுப்பாட்டுப் பகுதிகளை நோக்கி மிலேச்சத்தனமான கிபீர் தாக்குதலையும் எறிகணைத் தாக்குதலையும் நடத்திவரும் சிறீலங்கா படையினரின் கோரத்தினால் இடம்பெயர்ந்து, காடுகளில் தங்கியிருந்த மக்களின் தற்காலிக கூடாரங்கள் மீதும் எறிகணைத் தாக்குதலை இராணுவத்தினர் மேற்கொண்டதால், அந்த மக்களும் வேறு இடங்களுக்கு தப்பித்து சென்று வருகின்றனர். இவர்களது தற்காலிக கூடாரங்களை, விடுதலைப் புலிகளின் பங்கர்களாக படையினர் பொய்ப்பிரச்சார…
-
- 0 replies
- 795 views
-
-
செல்வீச்சிற்குள்ளான சேருநுவர பாடசாலைக்கு கண்காணிப்புக் குழுவினர் நேரில் சென்றனர் சேருநுவர பாடசாலை மீது செல் விழுந்து வெடித்ததால் ஆசிரியர் ஒருவர் பலியானதுடன், 15 மாணவர்கள் காயமடைந்திருந்தனர். கடுமையான தாக்குதல்கள் இடம்பெற்ற அப்பகுதிக்கு செல்ல யுத்தநிறுத்த கண்காணிப்புக் குழுவை படையினர் அனுமதிக்கவில்லை. சிறீலங்கா படையினர், கண்காணிப்புக் குழுவுக்கு அனுமதி மறுத்த அதேவேளை, கொழும்பில் கருத்து வெளியிட்ட அரச தரப்பினர், கண்காணிப்புக் குழுவினர் வேண்டுமென்றே அங்கு செல்லாது தவிர்ப்பதாக குற்றம் சுமத்தினர். இறுதியில் இன்று அனுமதி வழங்கப்பட்டதையடுத்து அந்தப் பாடசாலைக்குச் சென்ற கண்காணிப்புக் குழுவின் பிரதிநிதிகள், நிலைமைகளை நேரில் அவதானித்தனர். இரு தரப்பினதும் கடுமைய…
-
- 0 replies
- 854 views
-
-
உதயனுக்கு சர்வதேச விருது:- இலங்கையில் பெறும் முதலாவது பத்திரிகை. உதயனுக்கு சர்வதேச விருது கிடைத்துள்ளது. பிரான்ஸ் நாட்டின் ""நில எல்லைகளற்ற செய்தியாளர்கள் அமைப்பு'' வருடாந்தம் பிரசித்தி பெற்ற ஊடகவியலாளருக்கும் ஊடகங்களுக்கும் சர்வதேச மட்டத்தில் வழங்கப்படும் விருதுகளில் ஒன்றே உதயனுக்கு வழங்கிக் கௌரவிக்கப்பட்டுள்ளது. செய்திகளைத் தெரிவிப்பதற்கான ஊட கங்களின் உரிமைக்கும், செய்திகளை அறிந்து கொள்வதற்கான மக்களின் உரிமைக்குமாக உதயன் போராடி வருவதற்காகவே இந்த விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கூறப்பட்ட பிரிவில் மொத்தம் நான்கு நாடுகளைச் சேர்ந்த ஊடகங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன. அவற்றில் ஒன்று உதயன். மற்றைய மூன்றும் பர்மா, லெபனான், ரஷ்யா ஆகிய நாடுகளைச் சேர்…
-
- 12 replies
- 2.6k views
-
-
ஜனாதிபதியை சந்திக்க செல்வோர் கையடக்க தொலைபேசி எடுத்து செல்ல தடை. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவை சந்திக்கச் செல்லும் எவரும் கையடக்கதொலைபேசிகளை எடுத்துச் செல்லக் கூடாதென ஜனாதிபதி செயலகம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. பாதுகாப்புக் காரணங்களுக்காக இவ்வாறான திடீர் முடிவொன்று மேற்கொள்ள நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளதா
-
- 0 replies
- 889 views
-
-
புலிகளுக்கு உதவிய 7 பேரது வங்கிக் கணக்குகளை முடக்க உத்தரவு. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு உளவுத் தகவல்கள் வழங்கினார்கள் என்ற சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்ட இராணுவ மேஜர் ஒருவர் உட்பட 7 பேரினது வங்கிக் கணக்குகளை முடக்குமாறு கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புலிகளுக்கு இராணுவ புலனாய்வுத் தகவல்களை வழங்கிய சந்தேகத்தின் பேரில் இராணுவ மேஜர் ஒருவர் உட்பட 6 இராணுவ உத்தியோகத்தர்களையும் சட்ட விரோத வைத்தியர் ஒருவரையும் கைது செய்து பொலிஸார் விசாரணைக்குட்படுத்தி வருகின்றனர். இதற்கமைய குற்றப் புலனாய்வுப் பிரிவுப் பொலிஸார் நீதிமன்றிடம் விடுத்த வேண்டுகோளுக்கமையவே, நீதிமன்றம் சந்தேக நபர்களின் வங்கிக் கணக்குகள் அனைத்தையும் முடக்குமாறு சம்பந்தப்பட்ட…
-
- 0 replies
- 1.3k views
-
-
விடுதலைப் புலிகளை கிழக்கிலிருந்து வெளியேற்றுவோம்: சரத் பொன்சேகா [புதன்கிழமை, 13 டிசெம்பர் 2006, 20:37 ஈழம்] [கொழும்பு நிருபர்] பாரிய தாக்குதல்களால் சீரழிந்திருக்கும் கிழக்குப் பகுதியில் இருந்து பொதுமக்கள் ஆயிரக்கணக்கில் இடம்பெயர்ந்து கொண்டிருக்கும் வேளையில், அங்கிருந்து விடுதலைப் புலிகளை முற்றாக வெளியேற்றுவோம் என்று சிறிலங்கா இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். வாகரையில் விடுதலைப் புலிகளின் இரு முன்னரங்க எல்லைப் பகுதிகளை ஏற்கனவே இராணுவம் பிடித்துவிட்டது என கொழும்பு ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் அவர் தெரிவித்தார். கிழக்கிலிருந்து விரைவில் விடுதலைப் புலிகள் வெளியேற்றப்படுவார்கள். கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் சண்டையில் 350 முதல்…
-
- 0 replies
- 1.1k views
-
-
சிறிலங்காவின் உண்மையான முகத்தை மன்மோகன் சிங்கிடம் அதிகாரிகள் எடுத்துச் சொல்வதில்லை: வைகோ [புதன்கிழமை, 13 டிசெம்பர் 2006, 19:12 ஈழம்] [புதினம் நிருபர்] சிறிலங்காவின் உண்மையான முகத்தை இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் அதிகாரிகள் எடுத்துச் சொல்வதில்லை என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டிலிருந்து வெளிவரும் ஜூனியர் விகடன் இதழுக்கு அவர் வழங்கிய நேர்காணல்: "இந்திய அரசாங்கம் சிறிலங்கா இராணுவத்துக்கு ஆயுதங்களையும், வெடிமருந்துப் பொருட்களையும் அனுப்பிக் கொண்டிருக்கிறதா?" "மன்மோகன்சிங் அவர்களின் தலைமையில் மத்தியில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் அரசாங்கம் இலங்கை விவகாரத்தில் ஈழத் தமிழகர்களுக்கு எதிராக எடுக்கவிருந்த பல …
-
- 1 reply
- 1k views
-
-
கொழும்பு பங்கு சந்தையில் நேற்று பாரிய வீழ்ச்சி உணரப்பட்டுள்ளது. கிழக்கில் தொடரும் மோதல்கள் மற்றும் அனைத்து கட்சி பிரதிநிதிகள் குழுவில் இருந்து ஜே.வி.பி வெளியேறியமை ஆகியவற்றால் பங்கு பரிமாற்றங்கள் வீழ்ச்சி அடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது இதுவரை இல்லாத அளவில் இலங்கை நாணயத்தின் மதிப்பு டொலர் பெறுமதிக்கு எதிராக கடுமையான வீழச்சியை சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது இவ்வாறான நிலை தொடருமானால் இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்வதற்கு வெளிநாட்டு முதலீட்டாளர்கள் முன்வரமாட்டார்கள் என பொருளியல் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர் http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&
-
- 1 reply
- 1.1k views
-
-
வெளிநாடுகளிலிருந்து அண்மைக் காலத்தில் 293 இலங்கையர்கள் நாடு கடத்தல் - பண்டார வன்னியன் றுநனநௌனயலஇ 13 னுநஉநஅடிநச 2006 14:09 வெளிநாடுகளிலிருந்து அண்மைக் காலத்தில் 293 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளதாக குடிவரவு, குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது. அரசியல் தஞ்சம் கோரியவர்கள், போலி விசாக்கள் மூலம் நாடுகளுக்குள் ஊடுருவியவர்கள், சட்டவிரோத மார்க்கங்கள் ஊடாக சென்றவர்கள், குறிப்பிட்ட நாடுகளின் சட்ட திட்டங்களை மீறியவர்கள் ஆகியோரே இவ்வாறு நாடு கடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மலேசியாவிலிருந்து 57 பேரும் ஜப்பானிலிருந்து 50 பேரும் சிங்கப்பூரிலிருந்து 42 பேரும் ஏனையோர் ஐரோப்பிய நாடுகள் பலவற்றிலிருந்தும் நாடு கடத்தப்பட்டுள்ளனர். நாடு கடத…
-
- 0 replies
- 1.2k views
-
-
திருமலையில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் 40 பேர் கைது [புதன்கிழமை, 13 டிசெம்பர் 2006, 17:29 ஈழம்] [தெ.சந்திரநாதன்] திருகோணமலை மாவட்டத்தில் கடந்த திங்கட்கிழமை சிறிலங்காவின் முப்படையினரும் இணைந்து பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் நடத்திய பாரிய சோதனை நடவடிக்கையில் 40 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட 40 இளைஞர்களும் விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டனர் என்று திருகோணமலை சிறிலங்கா காவல்துறை தெரிவித்துள்ளது. திருகோணமலையில் நடைபெற்ற பல வன்முறைச் சம்பவங்களுக்கு இவர்களே காரணம் என்றும் காவல்துறை குறிப்பிட்டுள்ளது. மட்டக்களப்பு, யாழ்ப்பாண மாவட்டங்களைச் சேர்ந்த பெருமளவிலான இவர்கள், திருகோ…
-
- 0 replies
- 790 views
-
-
ஈரோஸ் அமைப்பின் நிறுவனர் இரத்தினசபாபதி காலமானார் [புதன்கிழமை, 13 டிசெம்பர் 2006, 18:38 ஈழம்] [கி.தவசீலன்] 1988 ஆம் ஆண்டு வரையில் செயற்பட்ட ஈழப்போராட்ட இயக்கங்ளில் ஒன்றான ஈரோஸ் அமைப்பின் நிறுவனரான "இரட்ணா" என அழைக்கப்படும் இ.இரத்தினசபாபதி லண்டனில் உள்ள மருத்துவமனையொன்றில் நேற்று செவ்வாய்க்கிழமை (12.11.06) காலை காலமானார். 1938 ஆம் ஆண்டு யாழ். இணுவில் கிராமத்தில் பிறந்த இவர் பத்திரிகைத்துறையிலும், இலக்கியத்திலும் ஈடுபாடு கொண்டிருந்தார். நீண்ட காலமாக லண்டனில் வாழ்ந்து வந்த போதும் மார்க்சிய சிந்தனையிலும், இலங்கைத் தமிழர்களில் அரசியலிலும், உலக அரசியல் போராட்டங்களிலும் தீவிர நாட்டம் கொண்டவராக விளங்கினார். 1976 ஆம் ஆண்டளவில் ஈரோஸ் அமைப்பை லண்டனி…
-
- 0 replies
- 1.3k views
-
-
சிறிலங்கா அரசு மீது போர்நிறுத்த கண்காணிப்புக்குழு குற்றச்சாட்டு [புதன்கிழமை, 13 டிசெம்பர் 2006, 18:51 ஈழம்] [கொழும்பு நிருபர்] தங்களது உரிமைக்குள் செயற்பட விடுவதில்லை, ஆயிரக்கணக்கான மக்கள் அகப்பட்டுள்ள சண்டை நடைபெறும் கிழக்குப் பகுதிக்குள் செல்ல அனுமதிப்பதில்லை என சிறிலங்கா அரசு மீது இலங்கை போர்நிறுத்த கண்காணிப்புக் குழு குற்றம் சாட்டியுள்ளது. கிழக்குப் பகுதியின் நிலைமையை தங்களால் கண்காணிக்க முடியவில்லை என்றும் அந்தப் பகுதிகளுக்குள் சிறிலங்கா இராணுவம் தங்களை அனுமதிப்பதில்லை என்றும் அது கூறியுள்ளது. எண்ணற்ற முறை வாகரைப் பகுதிக்குள் செல்வதற்கு முயற்சி செய்தோம். அண்மையில் கல்லாறு பகுதிக்கு செல்ல முயற்சி செய்தோம். சிறிலங்கா இராணுவத்தின் கட்டுப்பாட்டினால்…
-
- 0 replies
- 829 views
-
-
ஆய்வறிக்கையின் பின்னணியில் இந்தியா? [புதன்கிழமை, 13 டிசெம்பர் 2006, 18:16 ஈழம்] [க.நித்தியா] அனைத்துக் கட்சி கூட்டத்துக்காக நிபுணர்கள் குழு தயாரித்துள்ள சர்ச்சைக்குரிய தீர்வுத் திட்டத்தில் இந்தியாவின் தலையீடு பாரிய அளவில் இடம்பெற்றுள்ளதாக சிறிலங்கா அரசுக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆய்வறிக்கையும் பரிந்துரையும் நிபுணர் குழுவினரால் கையளிக்கப்பட்ட மறுநாளே "ஹிந்து" நாளிதழில் (டிசம்பர் 7) அந்த அறிக்கை விவரங்கள் வெளிவந்தது அதற்கு ஒரு காரணமாக கூறப்படுகிறது. எனவே ஆய்வறிக்கை குறித்து இந்தியா ஏற்கனவே அறிந்துள்ளது என சிறிலங்கா அரசு சந்தேகப்படுகிறது. ஆய்வறிக்கையைக் கையளித்தவர்களில் ஒருவரான விக்னேஸ்வரனுக்கு இந்தியாவுடன் நெருங்கிய தொடர்பு இருப்பதாக நம்ப…
-
- 0 replies
- 802 views
-
-
யாழ். பயங்கரவாத நகரமாகிவிட்டது: உள்ளூர் அமைப்புக்கள் [புதன்கிழமை, 13 டிசெம்பர் 2006, 16:48 ஈழம்] [பூ.சிவமலர்] வெள்ளை வானில் வந்து ஆட்களைக் கடத்திச் செல்லும் அடையாளம் தெரியாத ஆயுததாரிகளால் யாழ். நகரம் பயங்கரவாத நகரமாகியுள்ளது என உள்ளூர் அமைப்புக்கள் தெரிவித்தன. அடையாளம் தெரியாத ஆயுததாரிகளால் யாழ். மாவடத்தின் வழமை நிலை முற்றாகச் சீர்குலைந்து விட்டது என்று மனிதாபிமான அமைப்புக்களின் கூட்டமைப்பு (CHA) அண்மையில் வெளியிட்ட "விரைவான அமைதியும் பிரச்சினையும் குறித்த ஆய்வு" என்ற அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. ஆயுததாரிகளின் அச்சுறுத்தல் காரணமாக வேறு வழியின்றி யாழ். மாவட்டத்திலிருந்து கட்டாயமாக வெளியேற வேண்டிய நிலைக்கு பொதுமக்கள் தள்ளப்பட்டுள்ளனர் என அவ்வறிக்கை க…
-
- 0 replies
- 641 views
-
-
நாட்டின் எந்தப் பகுதியிலும் விடுதலைப் புலிகளுக்கு உரிமையில்லை: சிறிலங்கா இராணுவம் [புதன்கிழமை, 13 டிசெம்பர் 2006, 18:00 ஈழம்] [கொழும்பு நிருபர்] இலங்கையின் எந்தப் பகுதியிலும் விடுதலைப் புலிகளுக்கு சிறுதுளி உரிமையும் இல்லை என்பதை இலங்கை போர்நிறுத்த கண்காணிப்புக் குழு நினைவில் வைத்திருக்க வேண்டும் என அதன் தலைவருக்கு சிறிலங்கா இராணுவம் அறிவுறுத்தியுள்ளது. போர்நிறுத்த உடன்பாட்டை மீறி, முன்னரங்க நிலைகளைத் தாண்டி சிறிலங்கா இராணுவத்தினர் முன்னகர்வதாக போர்நிறுத்த கண்காணிப்புக்குழு விடுத்த அறிக்கைக்கு பதிலளிக்கும் முகமாக இராணுவம் இதனைத் தெரிவித்துள்ளது. மேலும் போர்நிறுத்த உடன்படிக்கையை சிறிலங்கா இராணுவம் மீறியுள்ளதாக கண்காணிப்புக் குழு கூறியிருப்பதையும் இரா…
-
- 0 replies
- 782 views
-
-
பொது மக்கள் மீது தாக்குதல்: ஐநா கண்டனம்! ----------------------------------------------------------------- இலங்கையின் கிழக்குப் பகுதியில் நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளது. நேற்றும் இலங்கை இராணுவம் மட்டக் களப்பில் மக்கள் வசிப்பிடங்கள் மீது எறிகணைத் தாக்குதலை நடத்தியுள்ளது. இந்நிலையில் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்துவதை உடனடி யாக நிறுத்த வேண்டுமென ஐக்கிய நாடுகள் சபை கண்டித்துள்ளது. பொதுமக்களைத் தாக்குவது மனித உரிமைகளை மீறுவதாகும் என இலங்கை இராணுவத்துக்கும் விடுதலைப் புலிகள் அமைப்புக்கும் ஐநா கண்டனம் தெரிவித்துள்ளது. புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள வாகரைப் பகுதியில் சென்ற சனிக்கிழமை முதல் இராணுவம் நடத்திவரும் கடும் தாக்குதலால் பல அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளன…
-
- 1 reply
- 898 views
-
-
சிங்களக் கிராமங்களில் பதுங்கு குழிகள்! ஹொரவப்பொத்தான, சேருநுவர உட்பட பல்வேறு சிங்கள குடியேற்ற கிராமங்களில் வீட்டுக்கு வீடு பதுங்கு குழிகளை அமைக்குமாறு சிறிலங்காப் படையினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஹொரவப்பொத்தான பிரதேசத்திலுள்ள சிங்களக் கிராமங்களான, கல்லாறு, சேருநுவர, சிறீமங்களபுர, றைற் லிங் வன், றைற் லிங் ரூ, லெப்ட் லிங் ரூ, மேதகம உட்பட, பல்வேறு எல்லைக் கிராமங்களுக்கும் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு வருகிறது. சில சிங்களக் கிராமங்களுக்கு நேரில் சென்று பார்வையிட்ட கிராமிய விவசாய அபிவிருத்தி அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன, இதற்கான முன்னெடுப்புக்களை உடன் மேற்கொள்ளுமாறு கோரியுள்ளதாகத் தெரிகிறது. சிங்கள கிராம மக்கள் தற்போது இடம்பெயர்ந்து வரும் நிலையில…
-
- 3 replies
- 1.6k views
-
-
இலங்கையில் இடம்பெற்று வரும் மோசமான மனித உரிமை மீறல்களை கட்டுப்படுத்துவதற்கு சுயாதீன விசாரணை குழு ஒன்று அமைக்கப்பட வேண்டும் என அம்னஸ்ரி இன்ரநசனல் எனப்படும் சர்வதேச மன்னிப்புச் சபை வலியுறுத்தியுள்ளது சர்வதேச மன்னிப்புச் சபையின் குளிர் பருவகால அறிக்கை வெளியாகியுள்ளது அந்த அறிக்கையில் உலகில் மிக மோசமான மனித உரிமை மீறல்கள் இடம்பெற்று வரும் மூன்று நாடுகளில் ஒன்றாக இலங்கை குறிப்பிடப்பட்டுள்ளது ஈரான் மற்றும் கொங்கோ குடியரசு ஆகிய நாடுகளுடன் இலங்கையும் மனித உரிமை மீறல் தொடர்பில் அதிக கவனம் செலுத்த வேண்டிய நாடுகள் பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளது சிறிலங்கா அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான நீண்டகால போரினால் அப்பாவி மக்களே அதிகம் பாதிக்கப்பட…
-
- 0 replies
- 845 views
-
-
சிறீலங்கா கடற்படைக்கு ஆயுதவிற்பனையில் பிரித்தானியா இஸ்ரேல் மும்மரம் UK backed Israeli deal to enhance Lanka’s firepower - Presidential probe on shady arms transactions By: Shamindra Ferdinando Courtesy: The Island - December 13, 2006 The controversy over the alleged irregularities in a multi-million US dollar deal, to upgrade the firepower of Fast Attack Craft (FACs), has taken a shocking turn with the revelation that the British Government assured Sri Lanka that the transaction was above board.Britain also offered the Sri Lankan government an opportunity to inspect the 30 mm KCB cannons at a US government bonded store in St. Louis. The British High…
-
- 0 replies
- 1.1k views
-
-
மட்டக்களப்பு- திருமலையில் வன்முறைகள் மோசம்: போர்நிறுத்த கண்காணிப்புக் குழு எச்சரிக்கை. மட்டக்களப்பிலும் திருகோணமலையிலும் வன்முறைகள் மோசமடைந்து வருவது குறித்து இலங்கை போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழு அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது. மட்டக்களப்பிலும் திருகோணமலையிலும் வன்முறைகள் மோசமடைந்து வருவது குறித்து இலங்கை போர்நிறுத்த கண்காணிப்புக் குழு அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது. கிழக்கில் கிளர்ந்துள்ள வன்முறை, போர்நிறுத்த உடன்படிக்கையை முறித்ததோடு மட்டுமல்லாமல் பெரும் அபாயத்துக்குள் சென்றுள்ளது. ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களின் குறிப்பாக வாகரையில் இடம்பெயர்ந்து வாழும் மக்களின் வாழ்க்கையைப் பெரிதும் பாதித்துள்ளது என்று அதன் அறிக்கை தெரிவித்துள்ளது. விடுதலைப் புலி…
-
- 0 replies
- 722 views
-
-
உதயன்' பணிமனைக்குள் புகுந்துபொலிஸ் அலுவலர் மீது சூடு! ஆயுதபாணிகள் இருவர் நேற்றுக்காலை கைவரிசை யாழ். நகரில் கஸ்தூரியார் வீதியில் அமைந்திருக்கும் "உதயன் சஞ்சீவி' பத்திரிகை நிறுவன வளாகத்தினுள் நேற்றுக்காலை தீடீரெனப் பிரவேசித்த ஆயுதபாணிகள் இருவர் அங்கு காவல் கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரைச் சுட்டு விட்டுத் தப்பிச்சென்றனர். பத்திரிகை நிறுவனத்தில் கடமையில் இருந்த பணியாளர்கள் வேட்டுச் சத்தங்க ளால் பீதியடைந்து பாதுகாப்புத்தேடி ஓடினர். இதனால் பெரும் பதற்றம் ஏற்பட் டது. முற்பகல் 10.50 மணியளவில், அலு வலகத்தின் நுழைவாயில் வழியாக திடீ ரெனப் பிரவேசித்த அடையாளம் தெரியாத இந்த இரு நபர்களும் அலுவலகத்தின் பாது காப்புப் பிரிவில் காவல் கடமையில் ஈடு பட்டிருந்த பொலிஸ் அலு…
-
- 0 replies
- 854 views
-
-
கடத்திச் சென்றபோது தப்பிஓடிய இளைஞர் கருணாகுழுவினரால் சுட்டுக்கொலை. கல்முனை- பாண்டிருப்பில் இளைஞர் ஒருவர் கருணாகுழுவினரால் கடத்திச் செல்லப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டார் பாண்டிருப்பு காளிகோவிலடியைச் சேர்ந்த தங்கராஜா காந்தன் (வயது16) என்ற இளைஞனே கருணாகுழுவினரால் சுட்டுக்கொல்லப்பட்டவராவார். இச்சம்பம் நேற்று இரவு 9.00மணியளவில் தனது வீட்டில் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்தபோது - கல்முனையிலுள்ள கருணாகுழுவினரின் அரசியல் துறை அலுவலகத்திலிருந்து 2மோட்டார் சைக்கிளில் வந்த கருணாகுழு உறுப்பினர்கள் நால்வர் வீட்டுக்குள் நுழைந்து ஆயுதமுனையில் குடும்பத்தினரை அச்சுறுத்தி இவரைக் கடத்திக்கொண்டு சென்றுள்ளனர். பாண்டிருப்பு -எல்லைவீதி வழியாக இவரைக் கடத்திக்கொண்டு சென்றப…
-
- 0 replies
- 1k views
-
-
மட்டக்களப்பு வாகரைப் பகுதியில் விடுதலைப் புலிகளுக்கு எதிராகத் தாக்குதல் நடத்துவதில் இருந்து நாங்கள் பின்வாங்கி விட்டோம் என சிறிலங்கா இராணுவம் தெரிவித்துள்ளது. விடுதலைப் புலிகள் மக்கள் வசிப்பிடங்களில் இருந்து தாக்குதல்களை நடத்துவதால் நாங்கள் தாக்குதலை நிறுத்தியுள்ளோம் என இராணுவம் இன்று செவ்வாய்க்கிழமை கூறியுளள்து. "விடுதலைப் புலிகள் வாகரை மருத்துவமனைக்கு அருகில் இருந்து தாக்குதலை நடத்துகிறார்கள் என்று நிச்சயமான தகவல் கிடைத்த பின்னர் இன்று எங்களால் எதிர்த்துத் தாக்குதலை நடத்த முடியவில்லை" என இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் பிரசாத் சமரசிங்க ரொய்ட்டர் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறினார். விடுதலைப் புலிகள் பகுதிகளில் இருந்து வெளியேறிய மக்கள், விட…
-
- 12 replies
- 3.2k views
-