ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143500 topics in this forum
-
சிரேஷ்ட பத்திரிகையாளர்கள் இருவர் 4ஆம் மாடிக்கு அழைக்கப்பட்டு விசாரணை புதிதாக அமுலுக்கு வந்துள்ள பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் அரசாங்க சார்புப் பத்திரிகை நிறுவனம் ஒன்றின் சிரேஷ்ட பத்திரிகையாளர்கள் இருவர் இரகசியப் பொலிஸாரால் 4ஆம் மாடிக்கு அழைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். கடந்தவாரம் பாதுகாப்பு தொடர்பான ஒரு விடயம் தொடர்பாக சண்டே ஒப்சேவரின் இணை ஆசிரியர் லயனல் யோதசிங்க மற்றும் செய்தி ஆசிரியர் ரங்கா ஜயசூரிய ஆகிய இருவரும் நாலாம் மாடிக்கு அழைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இதேபோல் சிலுமின பத்திரிகையாளர் பிரசன்ன பொன்சேகாவும் அதேவிடயமாக விசாரணைக்கு அழைக்கப்பட்டதாகக் தெரியவருகின்றது. பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் விதிகள் ஊட…
-
- 0 replies
- 807 views
-
-
அரசியல் தீர்வுக்கான எதிர்கால முயற்சிகளை குழப்புவதற்கு வியூகங்கள் [24 - December - 2006] [Font Size - A - A - A] அதிகாரப் பகிர்வு மூலம் இன நெருக்கடிக்கு அரசியல் தீர்வொன்றை காணப்போவதாக கூறிவரும் அரசாங்கம், அதற்கு முற்றிலும் முரண்பாடான செயற்பாடுகளை படிப்படியாக முன்னெடுத்து வருவதாகக் குற்றம் சாட்டியிருக்கும் அரசியல் தலைவர்களும், புத்திஜீவிகளும் இந்த தன்னிச்சையான முடிவுகளால் சமாதானத் தீர்வு முயற்சி என்பது கேள்விக்குறியாக்கப்படும் சூழ்நிலையையே தோற்றுவித்திருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர். வடக்கு, கிழக்கு இணைப்புக்கு எதிராக உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதன் பின்னர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவும் அவரது அரசாங்கமும் வடக்கிலும் கிழக்கிலும் தனித்தனியான நிருவாகச் செய…
-
- 0 replies
- 845 views
-
-
மாலுமிகள் சர்வதேசசெஞ்சிலுவைச்சங்க குழுஊடாக வழியனுப்பப்பட்டனர். தாயகக் கடற்பரப்பில் தமிழீழ விடுதலைப்புலிகளால் காப்பாற்றப்பட்ட கப்பல் மாலுமிகள் 25பேரை விடுதலைப்புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சோ.தங்கன், சமாதான செயலகப் பணிப்பாளர் சி.புலித்தேவன் ஆகியோர் சர்வதேச செஞ்சிலுவைச் சங்க குழுவினரிடம் ஒப்படைத்து அவர்களைப் பாதுகாப்பாக வழியனுப்பிவைத்தனர். Photos:- http://www.sankathi.org/news/index.php?opt...27&Itemid=1
-
- 7 replies
- 1.8k views
-
-
பிரதமர் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை: ஜார்ஜ் பெர்னாண்டஸ் சென்னை, டிச.24-: இலங்கை பிரச்சினை தொடர்பாக பிரதமர் தாம் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கை எங்களுக்கு இல்லை என்று முன்னாள் மத்திய மந்திரி ஜார்ஜ்பெர்னாண்டஸ் கூறினார். இலங்கையில் ஈழத்தமிழர்கள் தாக்கப்படுவதை கண்டித்து சென்னை மெமோரியல்ஹாலில் நாடார் பேரவை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு நாடார் பேரவை மாநில தலைவர் ஏ.நாராயணன் தலைமை தாங்கினார். முன்னாள் மத்திய மந்திரி ஜார்ஜ்பெர்னாண்டஸ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஆர்ப்பாட்டம் செய்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- இலங்கையில் தற்போது நிலவி வரும் சூழ…
-
- 0 replies
- 833 views
-
-
கறுத்தபாலம் இராணுவ காவலரண்கள்மீது விடுதலைப் புலிகள் மோட்டார் தாக்குதல் வீரகேசரி நாளேடு ஏறாவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட செங்கலடி கறுத்தபாலம் இராணுவக் காவலரண்கள் மீது விடுதலைப் புலிகள் மோட்டார் குண்டுத் தாக்குதலை நடத்தியுள்ளனர். நேற்று அதிகாலை 4.00 மணியளவில் இந்த தாக்குதல் சம்பவம் நடைபெற்றுள்ளதாக படைத்தரப்பினர் தெரிவித்தனர். தாக்குதல் சம்பவத்தில் படைத் தரப்பினர்களுக்கு எந்தவித சேதங்களும் ஏற்படவில்லை. செங்கலடி பதுளை வீதியின் கறுத்தபாலம் இராணுவ காவலரண்களில் காவல் கடமையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பøடயினரை இலக்குவைத்து விடுதலைப் புலிகள் தாக்குதலை நடத்தியுள்ளனர். இதன் பின்னர் படையினரும் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களை இலக்குவைத…
-
- 0 replies
- 822 views
-
-
படுகொலைகள்,ஆட்கடத்தல் சம்பவங்கள் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் அவதானம் [sunday December 24 2006 09:43:58 PM GMT] [virakesari.lk] படுகொலைகள், ஆட்கடத்தல்கள், காணாமல் போகும் சம்பவங்கள் தொடர்பாக இலங்கையில் இருந்து வெளிவரும் அறிக்கைகள் தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியம் ஆழ்ந்த அவதானத்தைச் செலுத்தியுள்ளது. என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிநாட்டு விவகாரங்களுக்கான ஆணையாளர் பெனிற்றா பெஃரேரோ தெரிவித்துள்ளார். இலங்கையில் மனித உரிமைகள் பாதுகாப்பு தொடர்பாக அவர் வெள்ளிக்கிழமை ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமையகம் அமைந்துள்ள பிறஸில்ஸ் நகரில் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது; மனித உரிமைகள் பாரியளவில் மீறப்படுவது, இலங்கையில் நிலவி வரும் பிரச்சினையின் பிரதிபலிப்…
-
- 0 replies
- 853 views
-
-
யாழ் மற்றும் மன்னாரில் படையினர் மீது இனம் தெரியாத நபர்கள் துப்பாக்கிச் சூடு. யாழ்ப்பாணம் பருத்தித்துறை சுப்பர் மடம் பகுதியில் நேற்று மாலை 5.00மணியளவில் குளித்துக்கொண்டிருந்த சிறிலங்காப் படையினர் மீது இனம் தெரியாதோர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் இரண்டு படையினர் படுகாயமடைந்துள்ளதாக தெரியவருகின்றது. மன்னாரில் காவலரண் மீது தாக்குதல். இன்று காலை மன்னார் நகரப்பகுதியில் அமைந்துள்ள சிறிலங்கா படையினரின் காவலரண் மீது இனம் தெரியாத நபர்களினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கொல்லப்பட்டு மேலும் மூன்று பொலிஸார் காயமடைந்துள்ளதாக இராணுவத் தரப்பினர் செய்தி வெளியிட்டுள்ளனர். www.sankathi.com
-
- 0 replies
- 823 views
-
-
அம்பாறையில் விசேட அதிரடிப்படையினர் ஊடுருவி தாக்கும் முயற்சி முறியடிப்பு. அம்பாறை தாண்டியடி மற்றும் காஞ்சிரங்குடா சிறீலங்கா இராணுவ முகாமிலிருந்து விசேட அதிரடிப்படையின் ஒருகுழுவினர் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுபகுதியான காஞசிகுடிச்சாறு பகுதியை நோக்கி நேற்று காலை 10.30 மணியளவில் 2 கிலொமீற்றர் தூரம் முன்னகர்ந்த போது விடுதலைப்புலிகளின் காவல் பணியினை மேற்கொள்ளும் அணியினர் எதிர்கொண்டு தாக்கியதில் அவர்கள் தமது நிலைகளுக்கு தப்பிசென்றுள்ளதாக அறியமுடிகிறது. இதேவேளை விடுதலைப்புலிகள் இவர்கள் மீது மேற்கொண்ட எறிகணைத்தாக்குதலில் 3 விசேட அதிரடிப்படையினர் காயமடைந்துள்ளதாகவும் அவர்கள் அம்பாறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அம்பாறை தகவல்கள் தெரிவிக்கின்றன. …
-
- 0 replies
- 760 views
-
-
சர்வதேச நிதி முகாமைத்துவ அமைப்பு கொழும்பு அலுவலகத்தை மூடுகிறது. சர்வதேச நிதி முகாமைத்துவ அமைப்பான ஐ.எம்.எஃப் தனது கொழும்பு பிரதிநிதியின் அலுவலகத்தை மூடிவிட முடிவு எடுத்துள்ளது. தற்போதுள்ள அதன் மூத்த பிரதிநிதியான லூயிஸ் வல்டிவிசோவின் பதவிக்காலம் எதிர்வரும் மாதம் முடிவடைவதுடன் இந்த அமைப்பு தனது அலுவலகத்தை மூடப்போவதாக கூறியுள்ளது. இந்த முடிவானது சிறிலங்காவிற்கும் ஐ.எம்.எஃப்பிற்கும் இடையில் ஒரு நீண்ட இடைவெளியை ஏற்படுத்தக்கூடியது என அவதானிகள் தெரிவித்துள்ளனர். ஐ.எம்.எஃப்பின் உயரதிகாரியான லூயிஸ் வல்டிவிசோ தகவல் தருகையில் நீண்டகாலமாக இந்த அமைப்பு சிறிலங்காவில் எந்த திட்டத்தையும் நடைமுறைப்படுத்த முடியாது போனது தான் அதை மூடுவதற்கு முக்கிய காரணமாக அமைந்ததாக …
-
- 0 replies
- 890 views
-
-
விடுதலைப் புலிகள் மீது சர்வதேச நாடுகளின் நடவடிக்கை தேவை:- சிறிலங்கா. தமிழீழ விடுதலைப் புலிகளால் காப்பாற்றப்பட்ட ஜோர்தானிய சரக்குக் கப்பலின் மாலுமிகள் தொடர்பாக சிங்கப்பூரை தளமாகக் கொண்டு இயங்கும் பிராந்திய பாதுகாப்பின் உண்மைத்தன்மையை அறியும் அமைப்பிடம் சிறிலங்கா அரசு முறையிட்டுள்ளது. இது தொடர்பில் சிறிலங்கா கடற்படையின் பேச்சாளர் டி.பி.கே.தசாநாயக்க தெரிவிக்கையில், விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்ட கப்பலினதும் அதன் மாலுமிகளினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்த சர்வதேச அழுத்தங்கள் விடுதலைப் புலிகளின் மீது போடப்பட வேண்டும். விடுதலைப் புலிகளால் கப்பல் கைப்பற்றப்பட்டது சர்வதேச கடல் பாதுகாப்புச் சட்டங்களை மீறும் செயல். விடுதலைப் புலிகள் கப்பலை தாக்குதல் நடவடிக்கைக்க…
-
- 0 replies
- 1.1k views
-
-
வி.நவரத்தினம் அவர்களுக்கு நாட்டுப்பற்றாளர் விருது ஞாயிற்றுக்கிழமை 24 டிசெம்பர் 2006 (யோகராஜன்) தமிழ் மக்களின் விடிவிற்காக, தமிழ் தேசமொன்றின் மீள்வருகைக்குமாக உழைத்த ஒரு உன்னத மனிதரை தமிழினம் 22.11.2006அன்று இழந்துவிட்டது. அமரர் வி.நவரத்தினம் அவர்கள் அற்புதமான இலட்சியவாதியாகத் திகழ்ந்தார். தான் அணைத்துக்கொண்ட இலட்சியத்திற்காக நூற்றாண்டொன்று முழுவதும் தனது வாழ்வை அர்ப்பணித்தார். சுயநல வாழ்வு எனும் குறுகிய வட்டத்திற்குள் தனது நீண்ட வாழ்வை சிறைப்படுத்திக் கொள்ளாமல் உயர்ந்த வாழ்வு வாழ்ந்தார். தனது இனப்பற்றாலும் தேசப்பற்றாலும் தமிழ்ச் சமூக மேன்மைக்காக இறுதிவரை சேவையாற்றினார். தனது மக்கள் விடுதலை அடையவேண்டுமென்ற உயரிய எண்ணத்திற்கு தனது அறிவாற்றல், படைப்பாற்றல், செயலாற்ற…
-
- 3 replies
- 1.5k views
-
-
இனவாதிகளுக்கு சீற்றத்தை கொடுத்துள்ள தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் டில்லி பயணம். இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், தமிழக முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதி ஆகியோருக்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய தூதுக் குழுவினருக்குமிடையே கடந்த வியாழன், வெள்ளி இரு தினங்களும் இடம்பெற்ற விசேட சந்திப்பு இலங்கைத் தமிழர்கள் மத்தியில் நம்பிக்கையையும் தெம்பையும் ஊட்டியுள்ள அதேநேரம் தென்னிலங்கை அரசியல்வாதிகள் மத்தியிலும் கடும்போக்கையுடைய சிங்கள இனவாத சக்திகள் மத்தியில் பெரும் கிலேசத்தையும் ஆத்திரத்தையும் தோற்றுவித்துள்ளது. இலங்கைத் தமிழர்கள் இன்று எதிர்கொண்டு வரும் மிகமோசமான நெருக்கடி நிலைமைகள் பாரிய நடவடிக்கைகளினால் எதிர்கொள்ளப்படும் மனித அவலங்கள், சமாதான பேச…
-
- 2 replies
- 2.2k views
-
-
சிறிலங்கா இராணுவத்தில் ஏற்படப் போகும் பாரிய மாற்றங்கள். சிறிலங்காவின் இராணுவத் தளபதியான லெப். ஜெனரல் சரத் பொன்சேகாவிற்கு அண்மையில் வழங்கப்பட்ட ஒரு வருட பதவி நீடிப்பு இராணுவ அதிகாரிகள் மட்டத்தில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தப் போவதாக கொழும்பு ஊடகமொன்று தெரிவித்துள்ளது. இராணுவத் தளபதியின் இந்த பதவி நீடிப்பு அவருக்கு அடுத்த நிலையில் இராணுவத் தளபதியாகும் கனவுடன் இருந்த மேஜர் ஜெனரல் நந்தா மல்லவராச்சியை ஓய்வெடுக்கும் நிலைக்கு தள்ளியுள்ளது. பணியில் இருந்து ஓய்வெடுப்பதற்கு ஏதுவாக நந்தா மல்லவராச்சி தற்போது விடுமுறையில் இருக்கின்றார். மேஜர் ஜெனரல் நந்தா மல்லவராச்சி மாவிலாறு இராணுவ நடவடிக்கையை முன்னின்று நடத்தியதுடன் ஆறு மாதங்கள் கிழக்கிலேயே தங்கியிருந்து பணி புரிந…
-
- 0 replies
- 1.3k views
-
-
விடுதலைப் புலிகளின் பாதுகாப்பில் மகிழ்வுடன் இருக்கின்றோம்: ஜோர்தானிய கப்பல் கப்டன். தமிழீழ விடுதலைப் புலிகளின் பாதுகாப்பில் மகிழ்வுடன் இருக்கின்றோம் என்று ஜோர்தானிய கப்பலின் கப்டனான ஈராக் நாட்டைச் சேர்ந்த ரமாஸ் எஸ் அப்துல் ஜபார் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் தெரிவித்துள்ளதாவது: இந்தியாவின் காக்கி நாடாவில் இருந்து அரிசி ஏற்றிக்கொண்டு தென்னாபிரிக்கா நோக்கிச் சென்று கொண்டிருந்த போது இலங்கைக்கு வடக்குப் பகுதி கடல் பரப்பில் கப்பலின் இயந்திரம் செயலிழந்து விட்டது. அதனை திருத்தும் நிலை எம்மால் இயலாது போன நிலையில் கப்பல் கரைக்கு நெருக்கமாக அடித்துச் செல்லப்பட்டபோது எமது கப்பலை சில படகுகள் சூழ்ந்து விட்டன. படகுகளில் இருந்தவர்கள் கப்பலில் ஏறி வ…
-
- 2 replies
- 2.5k views
-
-
மட்டக்களப்பு கரடியனாற்றுப்பகுதியை நோக்கிய இராணுவ தாக்குதல் முயற்சி முறியடிப்பு கடந்த சனிக்கிழமை இரவு 8.30 மணியளவில் துணைஆயுதக் கூலிக்குழுக்களுடன் சேர்ந்து சிறீலங்கா இராணுவத்தினர் மட்டக்களப்பு கறுப்பு பாலப் பகுதி, செங்கலடி இராணுவமுகாமில் இருந்து விடுதலைப்புலிகளின் கரடியனாறு பகுதிநோக்கி மேற்கொண்ட இராணுவதாக்குதல் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது. இத்தாக்குதல் சம்பவத்தில் 3 சிறிலங்கா இராணுவத்தினர் காயமடைந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. இதேவேளை சிறீலங்கா இராணுவத்தினர் மேற்கொண்ட எறிகணைத்தாக்குதலால் இப்பகுதியில் இருவீடுகள், வீட்டுத்தோட்டம், வயல்கள் என்பன சேதமடைந்துள்ளதாக குடிசார் தகவல்கள் தெரிவிக்கின்றன http://www.pathivu.com/index.php?suba…
-
- 0 replies
- 1.1k views
-
-
மீண்டும் சிக்கலில் சிறிலங்கா ஏயர்லைன்ஸ் [ஞாயிற்றுக்கிழமை, 24 டிசெம்பர் 2006, 17:47 ஈழம்] [கொழும்பு நிருபர்] இலங்கையில் ஏற்பட்டுள்ள பாதுகாப்புச் சூழ்நிலை காரணமாகவும் எரிபொருட்களின் விலை அதிகரித்திருப்பினாலும் சிறிலங்கா ஏயர்லைன்ஸ் நிறுவனம் பெரும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது. அண்மையில் கூடிய சிறிலங்கா ஏயர்லைன்சின் பணிப்பாளர் சபை இந்த சூழ்நிலை காரணமாக இந்த ஆண்டுக்கான மிகை ஊதியத்தை அடுத்த ஆண்டு மார்ச்சில் வழங்கத் தீர்மானித்துள்ளது. இது தொடர்பாக கருத்துத் தெரிவித்துள்ள சிறிலங்கன் ஏயர்லைன்ஸ் நிறுவனத்தின் தொடர்பாடல் இணைப்புத் தலைவர் சந்தன டி சில்வா, மிகை ஊதியக் கொடுப்பனவு தொடர்பாக வருட இறுதி அறிக்கையிலேயே தீர்மானிக்கப்படும். தவறான பிரசாரங்களும் எரிபொருள்…
-
- 0 replies
- 1.2k views
-
-
வாகரைக்கு நவம்பர் 29-க்குப் பின்னர் உணவு அனுப்பப்படவில்லை: யூனிசெஃப் [ஞாயிற்றுக்கிழமை, 24 டிசெம்பர் 2006, 18:37 ஈழம்] [கி.தவசீலன்] மட்டக்களப்பு வாகரைப் பகுதிக்கு கடந்த மாதம் 29 ஆம் நாளுக்குப்பின்னர் உணவுப் பொருட்கள் எவையும் அனுப்பப்படவில்லை என யுனிசெஃப் தெரிவித்துள்ளது. உணவு பொருட்கள் நவம்பர் மாதம் அனுப்பப்பட்ட பின்னர் இன்று வரை சிறிதளவு உணவுப் பொருட்கள் கூட அங்கு அனுப்பி வைக்கப்படவில்லை என யுனிசெஃப்பின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இலங்கையில் வன்முறைகள் அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து பெருமளவு மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அது தவிர கடத்தல்கள், காணாமல் போதல்கள், படுகொலைகள் அதிகரித்துள்ளன என அவர் மேலும் தெரிவித்தார். இதேவேளை உள்நாட்டில் இடம்பெயரும் மக்கள…
-
- 1 reply
- 996 views
-
-
எதிர்வரும் புதுவருடம் தொடக்கம் வடக்கும், கிழக்கும் இருவேறு மாகாண சபைகளாக இயங்க ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 2007 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் வடக்கு, கிழக்கு மாகாண சபைகளுக்காக தனித்தனி நிதியொதுக்கீடுகள் நடைபெற்றிருந்த நிலையில் கிழக்கு மாகாண ஆளுநராக ரியர் அட்மிரல் மொஹான் விஜயவிக்கிரம நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டார். வடக்கு, கிழக்கு இணைப்பு வலுவற்றதென்றும் சட்டவிரோதமென்றும் உயர்நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பளித்திருந்தது. இதையடுத்தே எதிர்வரும், ஜனவரி மாதம் தொடக்கம் வடக்கும், கிழக்கும் இருவேறு மாகாண சபைகளாக செயற்பட ஆரம்பிக்குமென தெரிவிக்கப்படுகிறது. இதுபற்றி மேலும் அறிய வருவதாவது, வடக்கு மாகாண சப…
-
- 1 reply
- 900 views
-
-
குடாநாட்டின் பேராபத்து இப்போது "சிக்குன் குனியா" பட்டகாலிலே படும் கெட்ட குடியே கெடும் என்பது முதுமொழி. அது மெத்தவும் சரி என்பதனை எடுத்துக்காட்டுவது போன்று, குடாநாட்டு மக்களை ஒன்றுக்குப்பின் மற்றதாக, பலதரப்பட்ட அவலங்களும் கஷ்டங்களும் ஒரேயடியாக வந்து வாட்டி வதைக்கின்றன. கடந்த நான்கரை மாதங்களாக அவர்களின் அடிப்படை வாழ்வாதாரங்கள் பல வழிகளாலும் செயற்கையாகவும் இயற்கையாகவும் தவிடுபொடியாக்கப்பட்டு வருகின்றன. இரண்டு வாரங்களுக்குப் போதுமான உணவு மற்றும் அத்தியாவசியப் பொருள்களே கையிருப்பில் இருந்தவேளை, திடீரென மின்னாமல், முழங்காமல் எவ்வித முன்னறிவித்தலோ, அசுகையோ இல்லாமல் ஓகஸ்ட் 11ஆம் திகதி ஏ9 வீதி மூடப்பட்டது. அதன் விளைவு ஊரடங்கு உட்பட்ட இறுக்கமான புறச்சூழ்நிலை தோ…
-
- 0 replies
- 814 views
-
-
தமிழர் தாயகப் பிரிப்பு பெரும் சந்தேசகத்தை ஏற்படுத்தியுள்ளது:-ஜெயானந்தமூர்த்தி. வடகிழக்கு மாகாணத்தை பிரித்து வடக்குக்கு வேறாகவும் கிழக்குக்கு வேறாகவும் இரு நிருவாக அலகுகள் அமைக்கப்பட்டுள்ளதுடன் திருகோணமலை மாவட்டத்தை மாத்திரம் கிழக்கிலிருந்து வேறாக்கி தனி நிருவாக அலகு உருவாக்கப்பட்டுள்ள செயலானது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதுடன் தமிழர் தாயகத்தைத் துண்டாடும் சிங்கள பேரினவாதத்தின் ஒரு திட்டமிட்ட செயலாகுமென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெயானந்தமூர்த்தி தெரிவித்துள்ளார். அவர் இது தொடர்பாக விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது. தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றவென்றே மாகாணசபை முறைமை சிறிலங்காவில் அறிமு…
-
- 1 reply
- 824 views
-
-
தாக்குதல் அச்சத்தையடுத்து கொழும்பின் பாதுகாப்பு அதிகரிப்பு. சிறிலங்கா தலைநகர் கொழும்பில் எதிர்வரும் 24 ஆம் நாள் தொடக்கம் 30 ஆம் நாள் வரை விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தப் போவதாக அரசுக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. கொழும்பின் இராணுவ மையங்கள் மீது விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தலாம் எனத் தகவல்கள் தெரிவித்ததையடுத்து கொழும்புத் துறைமுகம், இராணுவ மையங்கள், விமான நிலையம் ஆகியவற்றின் பாதுகாப்பு வெகுவாக அதிகரிக்ககப்பட்டுள்ளன. www.puthinam.com
-
- 1 reply
- 913 views
-
-
இலங்கைத் தமிழர் பிரச்சினையைக் முதல்வர் கையாண்ட முறைக்கு ராமதாஸ் பாராட்டு - பண்டார வன்னியன் ளுரனெயலஇ 24 னுநஉநஅடிநச 2006 09:09 “இலங்கைத் தமிழர் பிரச்சினையில் தெளிவான நிலைப்பாட்டை எடுத்து தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி செயற்பட்டு வருகிறார். அதற்காக நான் அவரைப் பாராட்டுகிறேன். என்று பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார் கோவையில் நேற்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் இவ்வாறு கூறினார். மேலும் அவர் கூறியதாவது: கடந்த இரு தினங்களுக்கு முன் இலங்கையைச் சேர்ந்த மாணவர் பிரதிநிதிகள் முதல்வரைச் சந்தித்தனர். அவர்களிடையே பேசும்போது, “உங்களைப் பாதுகாப்பதற்காக தொடர்ந்து செயல்படுவேன். இப்போது ஏற்பட்டுள்ள இன்னல்களுக்கு எல்ல…
-
- 0 replies
- 783 views
-
-
புதிய வெளிவிவாகரத்துறைச் செயலாளர் நியமனம்: மகிந்த - மங்கள முறுகல் [ஞாயிற்றுக்கிழமை, 24 டிசெம்பர் 2006, 05:39 ஈழம்] [பா.பார்த்தீபன்] புதிய வெளிவிவகாரத்துறைச் செயலாளரை நியமிப்பது தொடர்பில் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவுக்கும் வெளிவிவகாரத்துறை அமைச்சர் மங்கள சமரவீரவிற்கும் இடையில் முறுகல் நிலை தோன்றியுள்ளது. வெளிவிவகாரத்துறைச் செயலாளர் பதவிக்கு இந்தியாவுக்கான சிறிலங்கா தூதுவரான ரொமேஷ் ஜயசிங்கவின் பெயரை மங்கள சமரவீர கடந்த வாரம் மகிந்தவிடம் பரிந்துரை செய்திருந்தார். எனினும் ஜயசிங்கவை அப்பதவிக்கு நியமிக்கப்போவதில்லை என தனக்கு நெருக்கமானவர்களிடம் மகிந்த தெரிவித்ததே முறுகலுக்கான காரணம் என தெரியவருகிறது. தற்போது வெளிவிவகாரத்துறைச் செயலாளராக பணியாற்றும…
-
- 0 replies
- 727 views
-
-
'மகிந்த சதுக்கம்" அமைப்பதற்கென சூழவுள்ள முக்கிய இடங்கள் அபகரிப்பு! 'மகிந்த சதுக்கம்" ஒன்றை நிறுவுவதற்காக ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தை சூழவுள்ள இடங்கள் சுவீகரிக்கப்படுமென அப்பிரதேசத்திலுள்ள பிரதான சொத்துகளின் உரிமையாளர்களுக்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ அறிவித்தல் விடுத்துள்ளார். நகர அபிவிருத்திக்கு பொறுப்பாகவிருக்கும் அமைச்சரின் சிபாரிசுகளின் பேரிலேயே ஜனாதிபதி இந்த உத்தரவை விடுத்திருக்கிறார். ஜனாதிபதி மாவத்தை, சதாம் வீதி, சேர் பரோன் ஜயதிலக மாவத்தை, முதலிகே மாவத்தை மற்றும் வைத்தியசாலை வீதி என்பவற்றை எல்லைகளாகக் கொண்ட 4 ஏக்கர்களுக்கும் மேற்பட்ட நிலப்பரப்பு மகிந்த சதுக்கத்துக்கு அவசியமாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, கோட்ட…
-
- 0 replies
- 757 views
-
-
புதுவருடம் முதல் வடக்கு, கிழக்கு தனித்தனி மாகாண சபைகளாக இயங்கும். எதிர்வரும் புதுவருடம் தொடக்கம் வடக்கும், கிழக்கும் இருவேறு மாகாண சபைகளாக இயங்க ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 2007 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் வடக்கு, கிழக்கு மாகாண சபைகளுக்காக தனித்தனி நிதியொதுக்கீடுகள் நடைபெற்றிருந்த நிலையில் கிழக்கு மாகாண ஆளுநராக ரியர் அட்மிரல் மொஹான் விஜயவிக்கிரம நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டார். வடக்கு, கிழக்கு இணைப்பு வலுவற்றதென்றும் சட்டவிரோதமென்றும் உயர்நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பளித்திருந்தது. இதையடுத்தே எதிர்வரும், ஜனவரி மாதம் தொடக்கம் வடக்கும், கிழக்கும் இருவேறு மாகாண சபைகளாக செயற்பட ஆரம்பிக்குமென தெ…
-
- 0 replies
- 737 views
-