Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. அலனும் ஹெலனும் புலிகளுக்கு ஆதரவாக செயற்படுகின்றனர் வீரகேசரி நாளேடு அரசாங்கம் குற்றச்சாட்டு ஆயுத மோதல்களின் போது பாதிக்கப்படும் சிறுவர்கள் தொடர்பாக ஆராய்வதற்கு இலங்கைக்கு வருகைதந்திருந்த ஐக்கிய நாடுகள் சபையின் விஷேட தூதுவர் அலன் றொக், மற்றும் கண்காணிப்புக்குழுவின் பேச்சாளர் ஹெலன் ஒலவ்டொட்டீர் ஆகியோர் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக செயற்படுகின்றனர். என்று அரசாங்கத்தின் பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளரும் அமைச்சருமான ஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார். இலங்கைக்கு விஜயம் செய்திருந்த ஐ.நா.வின் விஷேட தூதுவர் அலன் ரொக் சிறுவர்கள் கட்டத்தப்படுகின்றமை தொடர்பில் படையினர் மீது குற்றம் சாட்டியிருந்தார். இக்குற்றச்சாட்டுக்கள் உண்மையாக இருந்தால் ஆதாரங்களை சமர்ப்பிக்…

    • 4 replies
    • 1.6k views
  2. யாழ்ப்பாணத்தில் சிறைச்சாலையில் தஞ்சம் கோருவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு இலங்கையின் வடக்கே யாழ் குடாநாட்டில் மரண அச்சுறுத்தல் காரணமாக இளைஞர்கள் சிறைச்சாலைகளில் பாதுகாப்பைத் தேடுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த மூன்று தினங்களில் மாத்திரம் 14 பேர் இவ்வாறு, யாழ் மாவட்ட நீதிமன்றத்தின் உதவியை நாடி நீதிமன்ற உத்தரவின்பேரில் சிறையில் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். யாழ் மாவட்டத்தில் இப்போது வயது வித்தியாசமின்றி ஆட்கள் கடத்திச் செல்லப்படுவதும், கடத்திச் செல்லப்படுபவர்கள் சுட்டுக்கொல்லப்படுவதும், இரவு வேளைகளில் வீடுகளில் ஆட்கள் சுட்டுக்கொல்லப்படுவதும், பலருக்கு மரண அச்சுறுத்தல்கள் விடுக்கப்…

  3. வாகரை நோக்கி சிறீலங்காப் படையினரின் வலிந்த தாக்குதல் விடுதலைப் புலிகளால் முறியடிக்கப் பட்டுள்ளது. இன்று காலை 8 மணியளவில் கஜுவத்தை இராணுவ முகாம், மாங்கேணி இராணுவ முகாமிலிருந்து விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியான வாகரை நோக்கி கனரக ஆயுதங்கள் மற்றும் எறிகணைத் தாக்குதல்கள் சகிதம் பெருமெடுப்பிலான முன்னேற்ற முயற்சியை சிறீலங்காப் படையினர் மேற்கொண்டுள்ளனர். படையினரின் முன்னேற்ற முயற்சிக்கு ஈடுகொடுத்த விடுதலைப் புலிகள் பதில் தாக்குதலைத் தொடுத்து படையினரை விரட்டியடித்துள்ளனர். விடுதலைப் புலிகளிள் தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியாத சிறீலங்காப் படையினர் தமது நிலைகளிலிருந்துது 500 மீற்றர் தூரம் பின்வாக்கி சூனியப் பிரதேசத்தினுள் சென்றுள்ளனர் என விடுதலைப் புலிகளின் இர…

  4. நேற்று மாங்குளம் இராணுவத் தளம் வீழ்த்தப்பட்ட நாள் முல்லைத்தீவு மாங்குளம் சிறிலங்காப் படைத்தளம் தமிழீழ விடுதலைப் புலிகளிடம் வீழ்ச்சி அடைந்த 16 ஆவது ஆண்டு நிறைவு நாள் நாளை வியாழக்கிழமையாகும். 1990 ஆம் ஆண்டு நவம்பர் 23 ஆம் நாள் வன்னியின் ஆக்கிரமிப்புச் சின்னமான மாங்குளம் சிறிலங்கா படைத்தளம் தமிழீழ விடுதலைப் புலிகளிடம் வீழ்ச்சியடைந்தது. இப் படைத்தள அழிப்பில் கரும்புலி லெப்.கேணல் போர்க் உட்பட 63 மாவீரர்கள் தமது உயிர்களை ஆகுதியாக்கினர். நன்றி - புதினம் http://www.eelampage.com/?cn=29864 இணைக்கப்பட்ட விடுதலைபுலிகள் பத்திரிகையின் சில பக்கங்களை பார்க்கவும். 1.pdf

    • 2 replies
    • 1.2k views
  5. சு.க.- ஐ.தே.க. புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு. சிறிலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. எஸ்.விஜெபால தொடர்ந்துள்ள இந்த வழக்கில் சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளர் மைத்திரிபால சிறிசேன, ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் மலிக் சமரவிக்கிரம ஆகியோர் பிரதிவாதிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். இனப்பிரச்சனைக்குத் தீர்வு காணுதல் உள்ளிட்ட 6 அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு இரு கட்சிகளும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை உருவாக்கியிருந்தன. www.puthinam.com

  6. யாழிற்கு ஏ-9 ஊடாக பொருட்களைக் கொண்டு செல்லப் போவதாக அரசு அறிவிப்பு? யாழ்ப்பாணத்திற்கு ஏ9 வீதியூடாக பொருட்களை கொண்டு செல்லத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு, ஜனாதிபதி அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகத்திற்கு தெரிவித்துள்ளதாக அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயக அலுவலகத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே அனுப்பத் தயாராகவுள்ள அனைவரையும் உடனடியாக அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் அலுவலகத்தில் பதிவுகளை மேற்கொள்ளுமாறு மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இவ் அனுப்பு நடவடிக்கை தொடர்ச்சியாகவா அல்லது ஒரு தடைவ மட்டுமா என்பது குறித்து எதுவும் தெரிவிக்கப்பட்வில்லை என்பது குறிப்பிடத்தக்கது. www.sankathi.com

  7. தமிழ் மக்கள் மீதான இன அழிப்பை நிறுத்தி சமாதானத்திற்கான சூழ்நிலையை இலங்கை அரசாங்கம் உருவாக்கவேண்டும் என தமிழக முதலமைச்சர் மு.கருணாநிதி தெரிவித்துள்ளார். சமாதானப் பேச்சுவார்த்தைகள் மூலம் மட்டுமே இலங்கையின் இனப்பிரச்சினையை தீர்க்கமுடியும் என அவர் தெரிவித்துள்ளார். தமிழக அரச செயலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இவ்வாறு தெரிவித்த கருணாநிதி அங்கு மேலும் கூறியதாவது: அப்பாவி தமிழர்களை படுகொலை செய்வதையும் அவர்கள் மீது அடக்கு முறைகளை பிரயோகித்து இம்சைப்படுத்துவதையும் இலங்கை அரசு நிறுத்தி சமாதானத்திற்கான வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் இந்திய விஜயத்தின் போது இப்பிரச்சினையை மத்திய அரசாங்கத்தின் முக்கிய கவனத்திற்கு கொண்டு ச…

    • 2 replies
    • 1.2k views
  8. மதவாச்சி சோதனைச் சாவடி மீது தாக்குதல் மூவர் பலி, ஐவர் படுகாயம். மதவாச்சி சோதனைச் சாவடியில் கடமையலிருந்த படைச்;சிப்பாய்கள் மீது இனம் தெரியாத நபர்களினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 3ஊர்காற் படைவீரர்கள் கொல்லப்பட்டதுடன் ஐவர் படுகாயமடைந்துள்ளனர். இச் சம்பவம் இன்று அதிகாலை 2.00மணியளவில் இடம்பெற்றுள்ளது. இதே வேளை ஐவர்வரும் படுகாயமடைந்த நிலையில் அனுராதபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். www.sankathi.com

  9. ஏரோ லங்கா என்ற தனியார் விமான நிறுவனம் நாளை முதல் யாழ்பாணத்துக்கு புதிய சேவைகளை ஆரம்பிக்கவுள்ளது. இவ்வானூர்தி நிறுவனம் 45 ஆசனங்களை கொண்டுள்ளதோடு ஒருவழிக்கட்டணமாக எண்ணாயிரத்து 200 ஐ ஒரு வழிகட்டணமாக அறவிடவுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. http://www.pathivu.com/index.php?subaction...rom=&ucat=1&

  10. சிறிலங்காவின் சனாதிபதி மகிந்தராஜபக்ச பதவி ஏற்று ஓராண்டு பூர்த்தியை முன்னிட்டு 19 ஆம் திகதி காலை தனது சொந்த மாவட்டத்தில் (அம்பாந்தோட்டை) வீரவில என்னும் இடத்தில் சிறிலங்காவில் இரண்டாவது சர்வதேச விமான நிலையத்திற்கு அடிக்கல் நாட்டிவிட்டுப் பேசுகையில் யாருடைய அழுத்தத்திற்கும் அரசாங்கம் பணிந்து செயற்படமாட்டாது என முழங்கினார். ஆனால் அன்று இரவு சனாதிபதியின் ஊடகப் பேச்சாளர் ஏ-9 பாதை- அதாவது முகமாலைச் சோதனைச்சாவடி- யாழ். குடாநாட்டிற்கான அத்தியாவசியப் பொருட்களைக் கொண்டு செல்ல ஒருநாள் மட்டும் திறக்கப்படுவதற்கு சனாதிபதி மகிந்த ராஜபக்ச உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவித்தார். இது தொடர்பான தகவலை முதலில் வழங்கிய பி.பி.சி, இப்பாதையானது அடுத்த நாள் அதாவது 20 ஆம் திகதி திறக்கப்படும் என அ…

  11. வாகரை நோக்கி சிங்களப் படைகள் பாரிய படைநடவடிக்கை விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதியான வாகரையை ஆக்கிரமிக்கும் நோக்குடன் சிங்களப் படைகள் இன்று பாரிய படை நடவடிக்கை ஒன்றை ஆரம்பித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. டாங்கிகள், கவச ஊர்திகளுடன் பெருமளவான படையினர் யுத்த சூனியப் பகுதிகளுக்குள் நுழைந்து விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகள் நோக்கி நகர முயன்றவேளை விடுதலைப் புலிகள் படை நகர்விற்கு எதிராக தமது பதில் தாக்குதல்களை ஆரம்பித்தனர். இதனையடுத்து இரு தரப்பினருக்குமிடையே கடுமையான மோதல்கள் நடைபெற்று வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. படையினரின் இந்த ஆக்கிரமிப்பு முயற்சி தொடர்பான செய்தியை விடுதலைப் புலிகள் படைத்துறைப் பேச்சாளர் திரு. இராசையா இளந்திரையன் அவர்க…

  12. அடுத்த வரவுசெலவுத்திட்ட உரை தமிழீழத் தலைநகர் திருமலையில்!நாடாளுமன்றத்தில் ஈழவேந்தன் எம்.பி. பேச்சு இலங்கையின் வரவுசெலவுத்திட்டத்தில் நாம் ஆற்றுகின்ற கடைசி உரை இதுதான். தமிழீழத்தின் தலைநகரமான திருகோணமலையில்தான் அடுத்த வருடம் தமிழீழ நாடாளுமன்றத்தில் எமது வரவுசெலவுத் திட்டம் தொடர்பாக நாம் உரையாற்றுவோம். இவ்வாறு நேற்று நாடாளுமன்றில் தெரிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மா.க.ஈழவேந்தன். வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பின் ஐந்தாவது நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது: தலைவர் பிரபாகரனின் மாவீரர் தின உரை தமிழ் மக்களின் வாழ்வில் ஒரு திருப்பு முனையாக அமையும். எதிர்வரும் 26…

  13. அடக்கி வாசிக்கும் இணைத்தலைமை! நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை வாஷிங்ட னில் நடைபெற்ற இணைத்தலைமை நாடுகளின் ஒருநாள் கூட்டம் முடிந்து, வழமைபோன்று உத்தியோகபூர்வ அறிக்கை வெளியிடப்பட்டுவிட்டது. எதிர்பார்க்கப்பட்ட பல ஊகங்களுக்கு மத்தியிலும் அந்த அறிக்கையில் கனதியாகவோ, காட்டமாகவோ எதுவும் குறிப்பிடப்பட்டிருப்பதாகக் கூற இயலவில்லை. கடந்தமுறை நடைபெற்ற கூட்டத்தின் பின்னர், தெரி விக்கப்பட்ட முக்கிய விடயங்கள் மீள வலியுறுத்தப்பட்டா லும், மக்களை வாட்டும், வதைக்கும் தற்போதைய சூடான விடயங்கள் மற்றும் விவகாரங்கள் குறித்து மிக அடக்கியே வாசிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் செயற்பாடுகளை அடியொற்றி அவற்றை அங்கீகரிக்கும் அல்லது அவற்றுக்குத் தாளம் போடும் வகை யிலேயே இணைத்தலைமை நாடுகளின் கூட்…

  14. கிளைமோர் தாக்குதலில் படைச்சிப்பாய் பலி! நேற்று செவ்வாய் கிழமை தென்மராட்சி வரணி ஞானியர் வளவு பகுதியில் இனம் தெரியாத நபர்களால் 52வது இராணுவ அணிமீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் ஒரு இராணுவம் கொல்லப்பட்டும் 3 பேர் காயங்களுக்கும் உள்ளானதாகவும் இவர்களை பலாலி இராணுவ மருத்துவ மனைக்கு கொண்டு சென்றுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இதேவேளை புதன்கிழமை மாலை 4 மணியளவில் வடமராட்சி வதிரி பகுதியில் இனம்தெரியாத நபர்களால் இராணுவத்தின் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாகவும் இத் தாக்குதல்கள் 5 நிமிடநேரம் நீடித்ததாகவும் பின்னர் அக்குழுவினர் தப்பிச் சென்றுள்ளதாகவும் அறியமுடிகிறது. www.pathivu.com

  15. ஏ-9 பாதை விவகாரமும் `கௌரவப்' பிரச்சினையும் ஏ-9 பாதை விவகாரம் இன்று இலங்கை அரசியல் அரங்கை ஆக்கிரமித்து நிற்கும் பாரிய ஒரு சர்ச்சையாக மாற்றப்பட்டிருக்கிறது. கடந்த மாதம் அரசாங்கத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே ஜெனீவாவில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிவடைந்தமைக்கு இந்த ஏ-9 விவகாரமே காரணமாயமைந்தது. இப்போது சமாதான முயற்சிகள் என்று கூறப்படுபவற்றில் எந்தவொரு முன்னோக்கிய நகர்வுமே இப்பாதை தொடர்பான சர்ச்சைக்குக் காணப்படக்கூடிய தீர்விலேயே முற்றுமுழுதாகத் தங்கியிருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது. அரசாங்கப் படைகளுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையேயான மோதல்கள் தீவிரமடைந்ததையடுத்து கடந்த ஆகஸ்ட் 11 ஆம் திகதி முதல் ஏ-9 பாதை ஊடான போக்குவரத்தை முகமாலையில் இரா…

  16. மன்னார் பேசாலை கடற் தளம் மீது தாக்குதல் மன்னார் பேசாலை கடற்படைத்தளம் இன்றிரவு 9.30க்கு விடுதலைப்புலிகளின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாக சற்று முன்னர் அங்கிருந்து எமக்குக் கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன. சேதவிபரம் எதுவும் இதுவரை தெரியவரவில்லை. அதேபோன்று அரச தரப்பிலிருந்தும் எதுவித தகவல்களும் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=2& www.pathivu.com பதிவுக்கு கஷ்டகாலமோ??????

  17. ஈழப் பிரச்சனையில் இந்தியா இரட்டை வேடமிடுகிறது- முதல்வர் கருணாநிதி துணை போக வேண்டாம்: மூத்த ஊடகவியலாளர் சோலை (புதன்கிழமைஇ 22 நவம்பர் 2006 19:45 ஈழம்) (புதினம் நிருபர்) ஈழப் பிரச்சனையில் இந்திய அரசாங்கம் இரட்டை வேடமிடுகிறது என்பதை தமிழக முதல்வர் கருணாநிதி புரிந்து கொண்டு துணை போகக்கூடாது என்று தமிழகத்தின் மூத்த ஊடகவியலாளர் சோலை வேண்டுகோள் விடுத்துள்ளார். மறைந்த தமிழக முதல்வர் எம்.ஜி.ஆரின் மூத்த ஆலோசகரும் மூத்த ஊடகவியலாளருமான சோலை (வயது 75) குமுதம் குழுமத்தின் றிப்போர்ட்டர் வாரம் இருமுறை இதழில் எழுதியுள்ள கட்டுரை: "இலங்கை இனச் சிக்கலில் தனது நிலையை மைய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்" என்று முதல்வர் கலைஞர் தெரிவித்தார். பிரதமரைச் சந்திக்க மைய அமைச்சர் டி.ஆர்…

  18. யாழில் அழுகிய நிலையில் சடலம் மீட்பு. யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் சிதைவடைந்த நிலையில் சடலமொன்று மீட்க்கப்பட்டு யாழ் போதனா மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இன்று கோப்பாய்ப் பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற கோப்பாய்ப் பொலிஸார் அழுகிய நிலையில் சடலத்தை மரணவிசாரணைகளுக்காக இன்று பிற்பகல் 2.00மணிக்கு யாழ் போதனா மருத்துவ மனையில் ஒப்படைத்துள்ளனர். இச் சடலம் அழுகிய நிலையில் காணப்படுவதனால் இச் சடலத்தை அடையாளம் காணமுடியாமல் உள்ளதென சம்பவஇடத்துக்குச் சென்ற மக்கள் தெரிவித்துள்ளனர். www.sankathi.com

  19. சிவ் சங்கர் மேனன் இன்று கொழும்பு வருகை! இலங்கையின் தற்போதைய நிலவரங்களை ஆராயும் வகையில் வெளியுறவுச் செயலாளர் சிவ்சங்கர் மேனனை இன்று புதன்கிழமை கொழும்புக்கு வருகைதந்துள்ளார். இந்திய வெளியுறவுச் செயலாளர் இங்கு வருகை தரும் அதேவேளை, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ இந்தியாவுக்கான விஜயத்தை எதிர்வரும் சனிக்கிழமை மேற்கொள்ளவிருக்கின்றார். நான்கு நாள் விஜயத்தை மேற்கொள்ளும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ சனிக்கிழமை தெஹ்ராடுன்னில் நடைபெறவிருக்கும் இந்திய மாநகர மேயர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றவிருக்கின்றார். இங்கு சிறந்த ஆட்சி குறிதது இந்திய மேயர்கள் மத்தியில் அவர் கருத்துகளை தெரிவிக்கவிருக்கின்றார். இந்த மாநாட்டின் பின்னர் எதிர்வரும் திங்கட்கிழமை ஜனாதிபதி மகிந்த…

  20. பயங்கரவாதம் என்ற போர்வையில் தனி நாட்டை அமைக்க புலிகள் முயற்சித்தால் கிள்ளி எறிவோம் சபையில் அமைச்சர் மங்கள சூளுரை இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு அரசாங்கம் முன்னுரிமை வழங்கி வருகின்றது. இருந்தபோதிலும் பயங்கரவாத செயற்பாடுகளை புலிகள் கைவிடவில்லை. பயங்கரவாதம் என்ற போர்வையில் தனிநாட்டை அமைக்கும் முயற்சியில் புலிகள் ஈடுபடுவார்களேயானால் அதனை கிள்ளி எறிவதற்கும் அரசாங்கம் தயங்காது என்று வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார். சமாதான நடவடிக்கைகள் புலிகளின் கைகளிலேயே தங்கியுள்ளது. விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளை சர்வதேச சமூகம் அங்கீகரிக்காது. பேச்சு மூலம் தீர்வு காண்பதற்கு அரசாங்கம் தயாராகவே உள்ளது என்றும் அவர் மேலும் கூறினார். வரவு செலவுத் திட்டம் தொடர்பான வ…

  21. இணைத்தலைமை கண்டித்த பின் இன்று மன்னாரில் கிபீர் குண்டுவீச்சு. http://www.alertnet.org/thenews/newsdesk/SP267909.htm

  22. யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை முழுமையாகச் செயற்படுத்த இணைத் தலைமை நாடுகள் வலியுறுத்தல் [புதன்கிழமை, 22 நவம்பர் 2006, 06:46 ஈழம்] [ச.விமலராஜா] யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை முழுமையாகச் செயற்படுத்த வேண்டும் என்று இலங்கைக்கு உதவி வழங்கும் இணைத் தலைமை நாடுகள் வலியுறுத்தியுள்ளன. அமெரிக்காவின் வொசிங்ரனில் நடைபெற்ற மாநாட்டின் முடிவில் வெளியிடப்பட்ட இணைத் தலைமை நாடுகளின் அறிக்கை: டோக்கியோ உதவி வழங்கும் நாடுகளின் இணைத் தலைமை நாடுகளான- நோர்வே, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஜப்பான் ஆகியவை நவம்பர் 21 ஆம் நாள் வொசிங்ரனில் சந்தித்தன. இலங்கையில் வன்முறைகள் அதிகரித்து வருவதால் உயிரிழப்புகள் அதிகரித்துள்ளமை தொடர்பாகவும் மனித உரிமைகள் மீறல் தொடர்பாகவும் இணைத் தலைமை நாடு…

  23. ஏ-9 வீதியைத் திறக்க உதவுமாறு யாழ் ஆயர் கோரிக்கை யாழ்ப்பாண குடாநாட்டின் மனித அவலங்களை போக்குவதற்கு ஏ9 வீதியைத் திறக்குமாறு கோரும் அழுத்தத்தை அரசாங்கத்திற்கு வழங்குமாறு யாழ்ப்பாண குடாநாட்டிற்கான விஜயத்தை மேற்கொண்ட அவுஸ்ரேலியத் தூதர் கிரேக் பிரெஞ், சுவிஸ் தூதர் ரூத்பிளின்ட், பிரித்தானிய உதவித் துதர் லெஸ்லி கிரேக் ஆகியோரிடம் யாழ் ஆயர் சௌந்தரநாயகம் அடிகளார் தலைமையிலான பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் கோரியுள்ளனர். யாழ்ப்பாணம் சென்ற வெளிநாட்டு தூதுவர்கள் மற்றும் சர்வதேச உதவி நிறுவனங்களின் பிரதிநிதிகளிடம் குடாநாட்டு நிலைமைகள் தொடர்பாக எடுத்துக் கூறப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. நேற்று யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்த இவர்கள் இன்று ( 22.11.06) …

  24. ஈழத்தமிழர்களை பட்டினிபோடுவதே ஜனாதிபதி மஹிந்தவின் போர் உத்தி! சீறுகிறார் திருமாவளவன் யாழ்ப்பாணத்துக்கான பிரதான நெடுஞ்சாலையை மூடுவதன் மூலம் ஈழத்தமிழர்களைப் பட்டினி போடுவதைத் தனது போர் உத்தியாக இலங்கை அரசு மேற்கொண்டுள்ளது என்று விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் தொல்.திருமாவளவன் கடும் விசனம் தெரிவித்துள்ளார். இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைக் கண்டித்து 33 மணிநேர உண்ணாவிரதப் போராட்டம் மீனவர் மேம்பாட்டு சங்கம் சார்பில் சென்னையில் திங்கட்கிழமை ஆரம்பமானது. அதில் திருமாவளவன் கலந்துகொண்டு பேசுகையிலேயே மேற்கண்ட வாறு தனது விசனத்தை வெளிப்படுத்தினார். இலங்கையில் கொழும்பு மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய நகரங்களை இணைக்கும் தேசிய பிரதான நெடுஞ்சாலையைக் கடந்த மூன்று…

  25. ஈழத்தமிழர்களை பட்டினிபோடுவதே ஜனாதிபதி மஹிந்தவின் போர் உத்தி! சீறுகிறார் திருமாவளவன் யாழ்ப்பாணத்துக்கான பிரதான நெடுஞ்சாலையை மூடுவதன் மூலம் ஈழத்தமிழர்களைப் பட்டினி போடுவதைத் தனது போர் உத்தியாக இலங்கை அரசு மேற்கொண்டுள்ளது என்று விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் தொல்.திருமாவளவன் கடும் விசனம் தெரிவித்துள்ளார். இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைக் கண்டித்து 33 மணிநேர உண்ணாவிரதப் போராட்டம் மீனவர் மேம்பாட்டு சங்கம் சார்பில் சென்னையில் திங்கட்கிழமை ஆரம்பமானது. அதில் திருமாவளவன் கலந்துகொண்டு பேசுகையிலேயே மேற்கண்ட வாறு தனது விசனத்தை வெளிப்படுத்தினார். இலங்கையில் கொழும்பு மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய நகரங்களை இணைக்கும் தேசிய பிரதான நெடுஞ்சாலையைக் கடந்த மூன்று மாதங்களாக இல…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.