விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7860 topics in this forum
-
இலங்கை வீரர்களை ஊக்கப்படுத்திய தோனி (காணொளி) இலங்கை இந்திய அணிகளுக்கிடையிலான 3 ஆவது இருபதுக்கு 20 போட்டியிலும் இந்திய அணி வெற்றிபெற்று, தொடரை 3-0 என கைப்பற்றியிருந்தது. இருபதுக்கு 20 தொடர் நிறைவடைந்த பின்னர் இலங்கை அணியின் தலைவர் திசர பெரேரா பரிசளிப்பு நிகழ்வில் உரையாற்றிக்கொண்டிருந்தார். இதன்போது இந்திய அணியின் முன்னாள் தலைரும் தற்போதைய விக்கட் காப்பாளருமான தோனி இலங்கை வீரர்களிடம் கலந்துரையாடிக்கொண்டிருந்தார். இந்த காணொளி சமுகவலைத்தளங்களில் வைரலாக பரவிவருகின்றது. இதில் தோனி இலங்கை வீரர்களான உபுல் தரங்க, அகில தனஞ்சய மற்றும் சதீர சமரவிக்ரம ஆகியோருக்கு சில துடுப்பாட்ட யுத்திகள் தொடர்பில் கலந்துரையாடினார…
-
- 0 replies
- 283 views
-
-
2017இல் இலங்கை கிரிக்கெட் அணியின் பதிவுகள் 2017இல் இலங்கை கிரிக்கெட் அணியின் பதிவுகள் இலங்கை கிரிக்கெட் அணிக்கு 2017ஆம் ஆண்டு மிகவும் ஏமாற்றம் மிக்க ஆண்டாக இருந்தது. இந்த ஆண்டில் இலங்கை அணி டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 தொடர்கள் என பங்குபற்றிய 57 சர்வதேசப் போட்டிகளில் ஒரு டெஸ்ட் தொடரையும், 2 டி20 தொடர்களையும் மாத்திரமே வெற்றிபெற்று வருடமொன்றில் மோசமான தோல்விகளை சந்தித்த உலகின் 2ஆவது அணியாகவும் இடம்பிடித்தது. அதேபோன்று, டெஸ்ட் தரப்படுத்தலில் 6ஆவது இடத்தையும், ஒருநாள் மற்றும் டி20 தரவரிசையில் 8ஆவது இடத்தையும் இலங்கை அணி பெற்றுக்கொண்டது. இதன்படி, 2017இல் 13 டெஸ்ட் போட்டிகளில் பங்குபற்றி 7 போட்…
-
- 0 replies
- 387 views
-
-
டெஸ்டில் அதிக ரன்கள்: ஜெயவர்தனே, சந்தர்பால், லாராவை முந்தினார் அலஸ்டைர் குக் மெல்போர்ன் டெஸ்டில் 244 ரன்கள் குவித்ததன் மூலம் டெஸ்ட் போட்டியில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் ஜெயவர்தனே, சந்தர்பால், லாராவை பின்னுக்குத் தள்ளியுள்ளார் குக். ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஆஷஸ் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. பாக்சிங் டே மெல்போர்ன் டெஸ்ட் தற்போது நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 327 ரன்களில் ஆல்அவுட் ஆனது. பின்னர் இங்கிலாந்து முதல் இன்னிங்சில் இன்றைய 3-வதுநாள் ஆட்ட முடிவில…
-
- 0 replies
- 370 views
-
-
இலங்கை கிரிக்கெட் அணியின் ரசிகர் கயான் சேனாநாயக்கவை திருமண விருந்துபசாரத்திற்கு அழைத்த கோலி இலங்கை கிரிக்கெட் அணியின் ரசிகர் கயான் சேனாநாயக்கவை திருமண விருந்துபசாரத்திற்கு விராட் கோலி அழைத்துள்ளர். மும்பையில் நேற்று நடைபெற்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி – அனுஷ்கா திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பாலிவுட் பிரபலங்கள் மற்றும் கிரிக்கெட் நட்சத்திரங்கள் பங்கேற்று வாழ்த்தினர். கடந்த 21ம் திகதி புதுமண தம்பதியினர் இந்தியா திரும்பினர். அவர்கள் பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றனர். அதைத்தொடர்ந்து, டெல்லி தாஜ் ஹோட்டலில் விராட் கோலி – அனுஷ்கா ஜோடியின் வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. இருவீட்டாரின் உறவினர்கள் பங்கேற்ற இந்த நிகழ்ச…
-
- 5 replies
- 812 views
-
-
1000 ரன்கள் அடித்து உலக சாதனை நிகழ்த்திய ஆட்டோ ஓட்டுநர் மகனின் இன்றைய பரிதாப நிலை! ஒரே இன்னிங்ஸில் ஆயிரம் ரன்கள் எடுத்து உலக சாதனை நிகழ்த்திய பள்ளிச் சிறுவன் அடுத்த இரண்டு வருடங்களில் கிரிக்கெட்டையே மூட்டைக் கட்டி வைத்துவிட்டான் என்றால் அது எவ்வளவு பெரிய சோகமான செய்தி. பிரணவ் தனவாடே அந்த நிலைமையில்தான் தற்போது உள்ளார். 2016 ஜனவரியில் மும்பையைச் சேர்ந்த பள்ளி மாணவரான பிரணவ் தனவாடே (15) பள்ளிகளுக்கு இடையேயான போட்டியில் 1009 ரன்கள் அடித்து புதிய உலக சாதனை படைத்தார். இதன்மூலம் அவர் 117 ஆண்டுகால சாதனையையும் முறியடித்தார். அபார சாதனை படைத்த பிரணவின் தந்தை ஒரு ஆட்டோ ஓட்டு…
-
- 0 replies
- 664 views
-
-
2017-ன் சிறந்த ஒருநாள் அணியில் தோனி இடத்தைப் பறித்தது யார்? #Rewind2017 Chennai: 2017-ன் டெஸ்ட் லெவனில் 4 இந்திய வீரர்கள் இடம்பெற்றிருந்தனர். ஏனெனில், டெஸ்ட் போட்டிகளில் இந்திய வீரர்கள் பட்டையைக் கிளப்பினர். ஒருநாள் போட்டிகளிலும் இந்தியர்கள் ஆதிக்கம் செலுத்தத் தவறவில்லை. ஆனால், சாம்பியன்ஸ் டிராபி ஃபைனலில் மட்டும் ஏமாற்றம் கண்டது. பாகிஸ்தானின் அந்த ஆச்சர்ய வெற்றி மட்டுமல்ல... ஆப்கானிஸ்தான், பாப்புவா நியூ கினியா, ஜிம்பாப்வே, ஸ்காட்லாந்து போன்ற அணிகள் தொடர்ச்சியாக போட்டிகளில் பங்கேற்றது என ஒருநாள் கிரிக்கெட் பல நல்ல மாற்றங்களைக் கண்டுள்ளது. இந்த ஆண்டு நடைபெற்றுள்ள 129 போட்டிகளில் (டிசம்பர் 26 வரை) பல வீரர்கள், பல்வேறு சாதனைகள் நிகழ்த்தியுள்…
-
- 0 replies
- 364 views
-
-
தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் அணியில் டிவில்லியர்ஸ், ஸ்டெய்ன், பிலாண்டர் டேல் ஸ்டெய்ன், ஏ.பி.டிவிலியர்ஸ். - படம். | ஏ.பி. போர்ட் எலிசபெத் மைதானத்தில் ஜிம்பாபவேவுக்கு எதிராக டிசம்பர் 26-ம் தேதி தொடங்கும், உலகின் முதல் 4 நாள் பகலிரவு டெஸ்ட் போட்டிக்கான தென் ஆப்பிரிக்க அணியில் டிவில்லியர்ஸ், ஸ்டெய்ன், பிலாண்டர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். டிவில்லியர்ஸ் கடைசியாக ஜனவரி 2016-ல் டெஸ்ட் போட்டியில் ஆடினார். டேல் ஸ்டெய்னும் பெர்த்தில் கடந்த ஆண்டு தோள்பட்டைக் காயம் அடைந்து அதன் பிறகு ஆடவில்லை. மோர்னி மோர்கெலும் காயத்திலிருந்து மீண்டுள்ளார். எனவே தென் ஆப்பிரிக்க அணி அதன் அபா…
-
- 6 replies
- 509 views
-
-
2017இல் தேசிய மட்டத்தில் ஜொலித்த வடக்கு, கிழக்கு மெய்வல்லுனர் நட்சத்திரங்கள் 2017இல் தேசிய மட்டத்தில் ஜொலித்த வடக்கு, கிழக்கு மெய்வல்லுனர் நட்சத்திரங்கள் 2017ஆம் ஆண்டானது வழமையான ஒருசில உள்ளூர் மற்றும் சர்வதேச மெய்வல்லுனர் போட்டித் தொடர்களை கொண்ட வருடமாக அமைந்திருந்ததுடன், இதில் சுவட்டு மற்றும் மைதான நிகழ்ச்சிகள், ஒரு சில தனிபர் நிகழ்ச்சிகளில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த வீர வீராங்கனைகள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இவ்வருடத்தை பொறுத்தமட்டில் தேசிய மெய்வல்லுனர் குழாமிற்கான 2 …
-
- 0 replies
- 374 views
-
-
ஒருநாள் அணியில் அஸ்வின், ஜடேஜா இடம்பெறாததற்கு இதுதான் காரணம்: தேர்வுக்குழுத் தலைவர் விளக்கம்! சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் அஸ்வினும் ஜடேஜாவும் பந்துவீசியதை அவர்களை அணியிலிருந்து நீக்கவில்லை என தேர்வுக்குழுத் தலைவர் பிரசாத் பேட்டியளித்துள்ளார். மூத்த சுழற்பந்து வீச்சாளர்களான அஸ்வின், ஜடேஜா ஆகியோருக்கு இந்திய ஒருநாள், டி20 அணிகளில் இடம் அளிக்கப்படுவதில்லை. இளம் சுழற்பந்து வீச்சாளர்களான, மணிக்கட்டை பயன்படுத்தி பந்துவீசக்கூடிய குல்தீப் யாதவ், யுவேந்திர சாஹல் ஆகியோர் சிறப்பாக ஆடி வருவதால் இனி அஸ்வின், ஜடேஜாவுக்கு ஒருநாள், டி20 அணிகளில் வாய்ப்பு கிடைப்பது கடினம் என தெரிகிற…
-
- 0 replies
- 408 views
-
-
சென்னை திரும்பிய அஸ்வின்: புதிரான ட்வீட்டால் கவலையடைந்துள்ள ரசிகர்கள்! மோசமான நாள். வீட்டுக்குத் திரும்பியுள்ளேன். ஊரிலிருந்து கிளம்பியபிறகு நடந்த சில விஷயங்கள் சரியில்லை. பிரார்த்திக்கிறேன் என்று ட்வீட் செய்தார் கிரிக்கெட் வீரர் அஸ்வின். இந்திய அணி இன்று தென் ஆப்பிரிக்காவுக்குச் செல்லவுள்ள நிலையில் இதுபோன்ற ஒரு ட்வீட்டை அவர் வெளியிட்டதால் கிரிக்கெட் ரசிகர்கள் கவலையும் குழப்பமும் அடைந்துள்ளார்கள். அஸ்வினின் உறவினர் ஒருவருக்கு உடல்நிலை சரியில்லாததால் இன்று மும்பையிலிருந்து தென் ஆப்பிரிக்காவுக்குச் செல்லவிருந்த அஸ்வின், சென்னைக்குத் திரும்பியுள்ளதாகக…
-
- 0 replies
- 283 views
-
-
2017-ன் சிறந்த டெஸ்ட் லெவனுக்கு கேப்டன் கோலி... அணியில் மூன்று இந்தியர்கள் யார்? #Rewind2017 Chennai: ஸ்மித் - கோலி வார்த்தைப் போர், ஸ்மித் - ரூட் வாய்க்கா தகராறு, புனே பிட்ச் பிரச்னை, டெல்லி மாசுப் பிரச்னை, அஷ்வின் - ஜடேஜா விக்கெட் வேட்டை, கேப்டன்களின் சத வேட்டை, வங்கதேசத்தின் எழுச்சி என டெஸ்ட் கிரிக்கெட், இந்த ஆண்டு கமர்ஷியல் படம்போல கலந்துகட்டி அடித்தது. டெஸ்ட் கிரிக்கெட்டை மேம்படுத்த, நான்கு நாள் போட்டிகளையும் அறிமுகப்படுத்திவிட்டது ஐ.சி.சி. 2017-ம் ஆண்டில் இதுவரை 45 போட்டிகள் (டிசம்பர் 25 வரை) நடந்துள்ளன. பல வீரர்கள் இந்த வருடம் முழுவதும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளனர். அவர்களுள், இந்த ஆண்டின் சிறந்த டெஸ்ட் அணியில் இடம் ப…
-
- 0 replies
- 216 views
-
-
உண்மையான சகலதுறை வீரர் ஒருவர் எப்படி இருக்க வேண்டும்? தற்போதைய நாட்களில் கிரிக்கெட் விளையாட்டானது முழுதுமாக துடுப்பாட்ட வீரர்களுக்கு சாதமாகி வருகின்ற காரணத்தினால், சகலதுறை வீரர்களுக்கான தேவை ஒவ்வொரு அணிக்கும் அத்தியவசியமாகி வருகின்றது. சகல துறை வீரர்கள் எந்தளவுக்கு பெறுமதி வாய்ந்தவர்கள் என்பதனை ஹர்திக் பாண்டியா, ரவிச்சந்திரன் அஷ்வின், சகிப் அல் ஹஸன் மற்றும் சொஹைப் மலிக் போன்ற வீரர்கள் தங்களது அணிகளுக்கு உணர்த்தியிருக்கின்றனர். இதில் குறிப்பாக அஷ்வினை வைத்திருக்கும் இந்திய அணி டெஸ்ட் போட்டிகளில் அவரது சிறப்பாட்டம் காரணமாக 5 விஷேட துடுப்பாட்ட வீரர்களுடன் மாத்திரமே களமிறங்குகின்றது. (எனினும் இந்திய அணிக்கு இந்த உத்தி சொந்த மண் அல்லாத …
-
- 0 replies
- 416 views
-
-
முரளிக்கு நடந்த அநீதிக்கு ஸ்டீவ் வோ கவலை கிரிக்கெட் உலகில் அண்மைக் காலமாக முன்னிலை பந்துவீச்சாளர்களாக வலம் வந்த இலங்கை, பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் மேற்கிந்திய தீவுகள் ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஒரு சில சுழல் பந்துவீச்சாளர்கள் பந்தை வீசி எறிவதாக குற்றம் சுமத்தப்பட்டு வருவதை அதிகளவில் அவதானிக்க முடிகின்றது. இதன் காரணமாக குறித்த வீரர்களின் கிரிக்கெட் எதிர்காலம் கேள்விக்குரியாக மாறியதையும் காணமுடிந்தது. இந்நிலையில், உலகின் தலைசிறந்த சுழல் பந்துவீச்சாளர்களில் ஒருவராக போற்றப்படும் முத்தையா முரளிதரன் டெஸ்ட் போட்டிகளில் 800 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தாலும், அவரது கிரிக்கெட் வாழ்க்கையின் ஆரம்பகாலத்தில் பல்வேறு சர்ச்சைகளுக்கும், பிரச…
-
- 1 reply
- 526 views
-
-
2017-ல் அதிக கோல்: மெஸ்சியை துரத்துகிறார் டோட்டன்ஹாம் வீரர் ஹாரி கேன் 2017-ம் ஆண்டில் அதிக கோல்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் முதல் இடத்தில் உள்ள மெஸ்சியை டோட்டன்காம் வீரர் ஹாரி கேன் துரத்துகிறார். கால்பந்து விளையாட்டில் மெஸ்சி, கிறிஸ்டியானோ ரொனால்டோ, நெய்மர் முன்னணி வீரர்களாக திகழ்ந்து வருகிறார்கள். 2017-ம் ஆண்டு மட்டும் மெஸ்சி பார்சிலோனா மற்றும் அர்ஜென்டினா அணிகளுக்காக இதுவரை 54 கோல்கள் அடித்துள்ளார். நேற்று நடைபெற்ற எல் கிளாசிகோவில் அடித்த ஒரு கோலும் இதில் அடங்கும். இந்த வருடத்தில் அதிக கோல்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் மெஸ்சி இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இ…
-
- 1 reply
- 630 views
-
-
பிரசவத்துக்குப் பின்னர் முதல் தடவையாக அபுதாயில் களமிறங்குகிறார் செரீனா உலகின் முன்னிலை டென்னிஸ் நட்சத்திரங்களில் ஒருவரான செரீனா வில்லியம்ஸ், பிரசவத்திற்கு பின் மீண்டும் இவ்வாரம் போட்டிகளுக்குத் திரும்புகிறார். அபுதாபியில் நாளை மறுதினம் ஆரம்பமாகும் முபாதலா உலக வல்லவர் டென்னிஸ் கண்காட்சித் தொடரின் பங்குபற்றுவதன் மூலம் டென்னிஸ் களத்தில் தனது மீள்பிரவேசத்தை ஆரம்பிக்கிறார் 36 வயதான செரீனா வில்லியம். உலகின் முதல் நிலை வீராங்கனையாக விளங்கிய செரீனா வில்லியம்ஸ், கடந்த வருடம் கர்ப்பிணியான நிலையில் போட்டிகளிலிருந்து ஒதுங்கியிருந்தார். கடந்த செப்டெம்பர் மாதம் அவருக்குப் பெண் குழந்தை பிறந்தது. அதன்பின், தனத…
-
- 0 replies
- 296 views
-
-
டெஸ்ட் போட்டி வரலாற்றில் இன்று முக்கியமான நாள்! டி-20 போட்டிகளின் ஆதிக்கம் அதிகரித்து உள்ளூர் அளவில் தற்போது டி10 போட்டிகள் நடைபெறும் அளவுக்கு கிரிக்கெட் போட்டிகள் மாற்றம் அடைந்துள்ளன. ஆனால், டி20 போட்டிகளின் வரவு டெஸ்ட் போட்டிகளை அழித்து விடும் என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டது. சமீபகாலமாக டெஸ்ட் போட்டிகளைக் காண மைதானங்களுக்கு மிக குறைந்த அளவிலே மக்கள் வருகிறார்கள். இதனால் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு டெஸ்ட் கிரிக்கெட் எதிர்காலம்குறித்து பல்வேறு பரிந்துரைகள் வந்தது. அதில் முக்கியமான ஒரு பரிந்துரை, 4 நாள்கள் கொண்ட டெஸ்ட் போட்டிகளுக்கு அனுமதி வழங்குவது. ஐ.சி.சி-யும் இதுகுறித்து ஆலோசித்து சோதனை அடிப்படையில் ந…
-
- 0 replies
- 314 views
-
-
விக்ராந்த், விஷ்ணு இல்லாத சென்னை சிசிஎல் அணி முதல் போட்டியில் தோல்வி! திரை நட்சத்திரங்கள் கலந்துகொள்ளும் நட்சத்திர கிரிக்கெட் எனப்படும் சி.சி.எல் போட்டி நேற்று முதல் தொடங்கியது. ஹைதராபாத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் விளையாடிய சென்னை ரைனோஸ் அணியை பெங்கால் அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. பெங்கால் அணி டாஸ் வென்று பேட்டிங் செய்ய முடிவெடுத்தது. ஷாம் சென்னை சென்னை அணியின் கேப்டனாகவும் ஜாய் பெங்கால் அணி கேப்டனாகவும் செயல்பட்டார்கள். நிர்ணயிக்கப்பட்ட 10 ஓவர்களில் பெங்கால் அணி அதிரடியாக விளையாடி 2 விக்கெட் இழப்புக்கு 91 ரன…
-
- 0 replies
- 361 views
-
-
36 வயதினிலே... : 26 வயது வீரர்களை விஞ்சும் திறன்; தோனிக்கு ரவி சாஸ்திரி புகழாரம்! ரவிசாஸ்திரி, தோனி. - படம். | விவேக் பெந்த்ரே. தன்னை விட 10 வயது இளம் வீரர்களைக் காட்டிலும் உடல் தகுதியிலும் சுறுசுறுப்பிலும் முன்னிலை வகிக்கிறார் தோனி என்று இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி மீண்டுமொரு முறை தோனிக்காக வாதாடியுள்ளார். எனவே தோனியை விமர்சிப்பவர்கள் அவர்கள் 36 வயதில் என்ன சாதித்தார்கள் என்பதைப் பார்க்கட்டும் என்கிறார் ரவிசாஸ்திரி. ரவிசாஸ்திரி இது குறித்து கூறியதாவது: நாங்கள் ஒன்றும் முட்டாள் அல்ல. கடந்த 30-40 ஆண்டுகளாக இந்த கிரிக்கெட்ட…
-
- 1 reply
- 601 views
-
-
இந்தியாவுக்கு எதிரான இலங்கை T20 குழாம் அறிவிப்பு இந்தியாவுக்கு எதிரான எதிர்வரும் T20 தொடருக்கான 15 பேர் கொண்ட வலுவான இலங்கை குழாமை இலங்கை கிரிக்கெட் சபை (SLC) அறிவித்துள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான மூன்று போட்டிகளைக் கொண்ட T20தொடரின் முதல் போட்டி டிரம்பர் 20 ஆம் திகதி நடைபெறவுள்ளதோடு அடுத்த இரண்டு போட்டிகளும் முறையே டிசம்பர் 22, 24 ஆம் திகதிகளில் நடைபெறும். சகலதுறை வீரர் திசர பெரேரா தலைமையிலான இலங்கை குழாமில் மிகப்பெரிய அதிர்ச்சி தரும் மாற்றமாக அனுபவ வேகப்பந்து விச்சளர் லசித் மாலிங்க இடம்பெறவில்லை. அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டதாக இலங்கை கிரிக்கெட் சபையின் ஊடக அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. மாலிங்க கடைசியாக இந்தியாவுக்கு எ…
-
- 14 replies
- 1.5k views
-
-
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மீண்டும் டோனி,ரெய்னா 11-வது ஐ.பி.எல்.20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் டோனி,ரெய்னா களமிறங்குவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. சென்னை: 11-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு ஏப்ரல் 4-ந்தேதி முதல் மே 31-ந்தேதி வரை நடக்கிறது. இரண்டு ஆண்டு தடைக்கு பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல் ஆகிய 2 அணிகள் இதில் பங்கேற்கின்றன. குஜராத் லயன்ஸ், ரைசிங்புனே ஆகிய அணிகளின் ஒப்பந்தம் முடிகிறது. …
-
- 1 reply
- 466 views
-
-
'பூஜ்ஜியத்துடன் துவங்கிய ராஜ்ஜியம்' டிசம்பர் 23, 2004-ம் ஆண்டு வங்கதேசத்தின் சிட்டகாங் மைதானத்தில் நீளமான தலைமுடியுடன் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த அந்த 23 வயது இளைஞன் களமிறங்குகிறான். சந்தித்த முதல் பந்திலேயே ரன்-அவுட் முறையில் டக்-அவுட்டாகி வெளியேறுகிறான். ஆனால், அதன்பிறகான காலகட்டங்களில் மைதானத்தில் அவனது நடவடிக்கைகள் மின்னல் வேகத்தில் இருந்தன. ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியின் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த இளைஞனுக்கு சச்சின் டெண்டுல்கரால் கிரிக்கெட்டின் மீதான ஆர்வம் அதிகரிக்க, பள்ளியில் உடற்கல்வி ஆசிரியரால் கால்பந்தில் இருந்து கிரிக்கெட்டில் விக்கெட் கீப்பிங்கிற்கு மாற, மற…
-
- 0 replies
- 626 views
-
-
தென்ஆப்பிரிக்கா ஒருநாள் தொடர்: கேதர் ஜாதவ், சர்துல் தாகூருக்கு இடம்; அஸ்வின், ஜடேஜா மீண்டும் அவுட் தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான 6 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் கேதர் ஜாதவ், சர்துல் தாகூர் இடம்பிடித்துள்ளனர். இந்தியா - தென்ஆப்பிரிக்கா இடையில் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட், 6 போட்டிகள் கொண்ட ஒருநாள், 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கிறது. ஜனவரி 5-ந்தேதியில் இருந்து பிப்ரவரி மாதம் 24-ந்தேதி வரை சுமார் இரண்டு மாத காலம் தென்ஆப்பிரிக்க…
-
- 0 replies
- 317 views
-
-
கிளாசிகோ... கேடலோனியா... மெஸ்ஸி Vs ரொனால்டோ... இது கால்பந்தையும் தாண்டிய பகை! #ElClasico ‘எல் கிளாசிகோ’ – கால்பந்து உலகின் சென்ஷேசன் வார்த்தை. நார்கோலெப்சி பிரச்னை இருப்பவரையும் நடுநிசி வரை கண் உறங்காமல் வைத்திருக்கும் மந்திர வார்த்தை. சீரான இதயத்தை சி.பி.ஆர் இன்ஜின் போல் அலறவைக்கக்கூடிய வார்த்தை. அப்படி என்ன இந்த கிளாசிகோவில் ஸ்பெஷல்? ரியல் மாட்ரிட், பார்சிலோனா என்னும் மாபெரும் இரு அணிகள் தங்கள் கௌரவத்திற்காகப் போராடும் 90 நிமிட யுத்தமே இந்த எல்-கிளாசிகோ. சாம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டியை விட கிளாசிகோ மேட்ச்சுக்கு ரசிகர்கள் அதிகம். இன்று இந்த சீசனின் முதல் கிளாசிகோ மோதல். மொத்தக் கால்பந்து உலகமும் காத்துக்கிடக்கிறது. #ElClasico …
-
- 3 replies
- 407 views
-
-
இலங்கை – பங்களாதேஷ் இடையிலான போட்டி அட்டவணை வெளியீடு இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையில் எதிர்வரும் ஜனவரி மாதம் ஆரம்பமாகவுள்ள கிரிக்கெட் சுற்றுத் தொடர்களுக்கான போட்டி அட்டவணை நேற்று (14) உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதன்படி, இவ்விரு அணிகளுக்கிடையிலான டெஸ்ட் மற்றும் T-20 தொடர்கள் ஆரம்பமவாதற்கு முன்னர் இலங்கை மற்றும் ஜிம்பாப்வே அணிகளுடனான முத்தரப்பு ஒரு நாள் போட்டித் தொடரை நடத்துவதற்கு அந்நாட்டு கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளது. இறுதியாக 2010ஆம் ஆண்டிலேயே பங்களாதேஷில் முத்தரப்பு ஒரு நாள் போட்டித் தொடரொன்று இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. 7 போட்டிகளைக் கொண்ட இந்த போட்டித் தொடரின் அனைத்துப் போட்டிகளு…
-
- 1 reply
- 510 views
-
-
கிறிஸ் கெய்ல் ஏமாற்றம்: மே.இ.தீவுகளை வீழ்த்தியது நியூஸிலாந்து நியூஸிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டக் பிரேஸ்வெல். 4 விக்கெட்டுகள். - படம். | ஏ.எஃப்.பி. அதிரடி தொடக்க வீரர் கிறிஸ் கெய்ல் 22 ரன்களில் வெளியேறி ஏமாற்றமளிக்க முதல் ஒருநாள் போட்டியில் மே.இ.தீவுகளை நியூஸிலாந்து அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்று முன்னிலை வகிக்கிறது. வாங்கரேயில் நடைபெற்ற முதல் போட்டியில் டாஸ் வென்ற கேன் வில்லியம்சன் முதலில் மே.இ.தீவுகளை பேட் செய்ய அழைக்க அந்த அணி 50 ஒவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 248 ரன்களை எடுத்தது. தொடர்ந்து ஆடிய நியூஸிலாந்து 46 ஓவர்களில் 5 விக்கெட்டு…
-
- 1 reply
- 345 views
-