விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7860 topics in this forum
-
4ஆவது தடவையாகவும் ஐரோப்பாவின் சிறந்த கால்பந்து வீரராக மெஸ்ஸி தெரிவு Image courtesy - AFP ஸ்பெய்னின் பிரபல பார்சிலோனா கழகத்துக்காக விளையாடி வருகின்ற அர்ஜென்டீனாவின் நட்சத்திர கால்பந்து வீரர் லியொனல் மெஸ்ஸி, ஐரோப்பாவின் சிறந்த கால்பந்து வீரருக்கு வழங்கப்படுகின்ற தங்க சப்பாத்து (Golden Shoe) விருதை 4ஆவது தடவையாகப் பெற்றுக்கொண்டார். ஐரோப்பாவின் விளையாட்டு ஊடக சங்கம் மற்றும் ஐரோப்பிய விளையாட்டு பத்திரிகைகள் மற்றும் சஞ்சிகைகள் சங்கங்களினால் வருடாந்தம் ஏற்பாடு செய்யப்படுகின்ற இவ்விருது வழங்கும் விழா நேற்று (24) பார்சிலோனாவில் நடைபெற்றது. 2016ஆம் மற்றும் 2017ஆம் பருவகாலத்தில் லாலிகா உள்ளிட்ட அனைத்து ஐரோப்பிய கால்பந்து போட…
-
- 0 replies
- 310 views
-
-
அஸ்வின் பந்துவீச்சில் அதிகமுறை ஆட்டமிழந்த பேட்ஸ்மேனும் ஒருமுறைகூட வீழ்த்தமுடியாதவர்களும்! இந்தியா-இலங்கை அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் 2-வது போட்டி, மகாராஷ்டிர மாநிலம் நாகபுரியில் இன்று தொடங்கியுள்ளது. இந்த டெஸ்ட் போட்டியின் முதல் நாளான இன்று, இலங்கை பேட்ஸ்மேன் லஹிரு திரிமானே 9 ரன்களில் அஸ்வின் பந்துவீச்சில் போல்ட் ஆகி வெளியேறினார். இதையடுத்து அஸ்வின் வீழ்த்திய பேட்ஸ்மேன்களில் அதிகமுறை அவுட் ஆனவர் என்கிற ஒரு பெயர் திரிமானேவுக்குக் கிடைத்துள்ளது. இதற்கு முன்பு அஸ்வின் பந்துவீச்சில் அதிகமுறை ஆட்டமிழந்தவர்களாக (11) திரிமானேவும் வார்ன…
-
- 2 replies
- 317 views
-
-
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்றது ஏன்? முதன்முறையாக மனம்திறந்த கங்குலி! Chennai: சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து கடந்த 2008-ம் ஆண்டு ஓய்வுபெற்றது ஏன் என்பது குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி முதன்முறையாக மனம் திறந்துள்ளார். இந்தியக் கிரிக்கெட் அணியை உலகின் முன்னணி அணிகளுள் ஒன்றாக மாற்றியவர்களுள் முக்கியமானவராகக் கருதப்படுபவர் சவுரவ் கங்குலி. கடந்த 1995-ம் ஆண்டு முதல் 2006-ம் ஆண்டு வரை இந்திய அணிக்காக தொடர்ச்சியாக போட்டிகளில் பங்கேற்று வந்த கங்குலி, கடந்த 2008-ம் ஆண்டு நாக்பூரில் நடந்த ஆஸ்திரேலிய அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விட…
-
- 0 replies
- 228 views
-
-
டி20-யில் விக்கெட் இழக்காமல் 209 ரன்கள் குவித்து கம்ரான் அக்மல் - சல்மான் பட் ஜோடி சாதனை டி20 கிரிக்கெட் போட்டியில் விக்கெட் இழக்காமல் 209 ரன்கள் குவித்து லாகூர் ஒயிட்ஸ் அணியின் கம்ரான் அக்மல் - சல்மான் பட் ஜோடி உலக சாதனைப் படைத்துள்ளது. பாகிஸ்தானின் உள்ளூர் டி20 கிரிக்கெட் தொடரான ‘நேஷனல் டி20 கோப்பை’ தொடரில் லாகூர் ஒயிட்ஸ் - இஸ்லாமாபாத் அணிகள் ராவல்பிண்டியில் நடைபெற்ற போட்டியில் பலப்பரீட்சை நடத்தின. லாகூர் ஒயிட்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக களம் இறங்கிய கம்ரான் அக்மல் - சல்மான் பட் ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 20 ஓவர்கள் நிலைத…
-
- 0 replies
- 470 views
-
-
அணியின் மொத்த ஸ்கோர் 2; அதில் எக்ஸ்ட்ரா ஒரு ரன்! 19 வயதுக்குட்பட்ட மகளிர் கிரிக்கெட் போட்டியில் நாகலாந்து அணி இரண்டு ரன்னுக்கு அனைத்து விக்கெட்டுகளை இழந்தது. அதில் ஒரு ரன் எக்ஸ்ட்ரா. எதிர் அணிக்கு இந்த அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது கேரளா மகளிர் அணி. மாநிலங்களுக்கு இடையேயான 19 வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் கிரிக்கெட் போட்டி தற்போது பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது. ஆந்திர மாநிலம் குண்டூரில் உள்ள ஜே.கே.சி கல்லூரி மைதானத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில் நாகலாந்து- கேரளா அணிகள் மோதின. முதல் முறையாக இந்தப்போட்டியில் களமிறங்கிய நாகலாந்து அணி டாஸ் வென்று பேட்டிங் செய்வதாக அறிவித்தது. தொடக்க வீரர்களாக மென்ஹா-முஸ்கான் ஆகிய…
-
- 1 reply
- 450 views
-
-
பவுலிங்கில் கலக்கிய அர்ஜுன் டெண்டுல்கர்... எதிரணியை திணற அடித்தது எப்படி! மும்பை: இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான சச்சினின் மகன் அர்ஜூன் டெண்டுல்கர் அண்டர்-19 போட்டி ஒன்றில் மிகவும் சிறப்பாக பவுலிங் செய்து எதிரணியை திணற அடித்து இருக்கிறார். ஒரே போட்டியில் இவர் எடுத்த 5 விக்கெட்டுக்கள் காரணமாக எதிரணி மிக சொற்ப ரன்களில் சுருண்டு இருக்கிறது. மும்பையில் அண்டர்-19 பிளேயர்கள் விளையாடும் 'பேஹர் கோப்பை' கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் மிகவும் சிறப்பாக விளையாடும் பலர் ரஞ்சி போட்டிகளுக்கும், இந்திய அண்டர்-19 அணிக்கும் தேர்வு செய்யப்படுவது வழக்கம். இந்திய கிரிக்கெட் உலகில் இந்த தொடர் அதிகம் கவனிக்கப்பட்டு வருகிறது. இந்த தொடரில் …
-
- 0 replies
- 391 views
-
-
புதிய ஒருநாள் அணித்தலைவர் ஒருவரை வேண்டி நிற்கிறதா இலங்கை? ThePapare.com இற்கு கிடைத்திருக்கும் தகவல்களின் அடிப்படையில், இலங்கை கிரிக்கெட் வாரியமானது (SLC) இந்தியாவுடன் ஆரம்பமாகவிருக்கும் ஒரு நாள் தொடரிலிருந்து இலங்கை ஒருநாள் அணிக்கு உபுல் தரங்கவுக்கு பதிலாக புதிய அணித் தலைவர் ஒருவரை நியமனம் செய்ய ஆலோசிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. உபுல் தரங்கவின் தலைமையில் இலங்கை அணி 16 ஒருநாள் போட்டிகளில் தோல்வியடைந்திருப்பதோடு இந்தியா, தென்னாபிரிக்கா, பாகிஸ்தான் ஆகிய அணிகளுடன் நடைபெற்ற மூன்று தொடர்களில் வைட் வொஷூம் செய்யப்பட்டிருக்கின்றது. இலங்கை அணி இந்த வருடம் 22 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 4 போட்டிகளில் மாத்தி…
-
- 0 replies
- 309 views
-
-
தென்ஆப்பிரிக்கா தொடரில் அஸ்வின், ஜடேஜா இடத்தை உறுதி செய்ய முடியாது: விராட் கோலி தென்ஆப்பிரிக்கா தொடரின்போது அஸ்வின் மற்றும் ஜடேஜாவிற்கு இந்தியாவின் ஆடும் லெவன் அணியில் இடம் கிடைக்கும் என உத்தரவாதம் அளிக்க முடியாது என கோலி கூறியுள்ளார். இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்று வகை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் முடிந்தவுடன் டிசம்பர் மாதம் இறுதியில் இந்திய அணி தென்ஆப்பிரிக்கா செல்கிறது. இரு அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 5-ந்தேதி தொடங்குகிறது. தென்ஆப்பிரிக்காவில் உள்ள ஆடுகளங்கள் வேகப்பந்து வ…
-
- 1 reply
- 445 views
-
-
ரசிகரை நோக்கி ட்ரவுசரை தூக்கி வீசி பரபரப்பை ஏற்படுத்திய யுவான்டஸ் கோல்கீப்பர் பஃபன் பார்சிலோனாவிற்கு எதிரான ஆட்டம் முடிந்த பின்னர் யுவான்டஸ் கேப்டனும், கோல் கீப்பரும் ஆன இத்தாலியின் முன்னாள் வீரர் பஃபன் ரசிகரை நோக்கி ட்ரவுசரை தூக்கி வீசி பரபரப்பை ஏற்படுத்தினார். ஐரோப்பிய கால்பந்து பெடரேசன் சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில் நேற்றைய போட்டி ஒன்றில் ஸ்பெயின் நாட்டின் முன்னணி கால்பந்து அணியான பார்சிலோனாவும், இத்தாலியின் முன்னணி கிளப் அணியான யுவான்டஸ் அணியும் மோதின. இந்த ஆட்டம் டிராவில் முடிந்தது. டிராவில் முடிந்ததால் பார்சிலோனா அணி காலிறுதிக்கு முந்தைய 16 அணிக…
-
- 0 replies
- 425 views
-
-
கடந்த வாரம் இலங்கை கிரிக்கெட்டில் இடம்பெற்ற மகத்தான சில சம்பவங்கள், ஏனைய உள்ளூர் போட்டிகளின் முடிவுகள் மற்றும் இலங்கை கிரிக்கெட்டில் அடுத்த முக்கிய விடயங்கள் குறித்த ஒரு ஆழமான பார்வை விளையாட்டு கண்ணோட்டம் – பாகம் 01
-
- 1 reply
- 298 views
-
-
இலங்கை வந்தடைந்த ஹத்துருசிங்கவுக்கு விரைவில் நியமனம்! இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக, இலங்கை அணியின் முன்னாள் வீரர் சந்திக ஹத்துருசிங்கவை நியமிக்க இலங்கை கிரிக்கெட் சபை நெருங்கியுள்ளதாக கிரிக்கெட் சபை வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்நிலையில் அவுஸ்திரேலியாவில் வசித்து வருகின்ற ஹத்துருசிங்க, நேற்று(21) மாலை இலங்கை வந்தடைந்தார். இலங்கை கிரிக்கெட் சபையின் அதிகாரிகளைச் சந்திப்பதற்காக கொழும்புக்கு வருகை தந்துள்ள சந்திக ஹத்துருசிங்க, நேற்று இரவு இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் இடம்பெற்ற விசேட பேச்சுவார்த்தையொன்றில் கலந்துகொண்டார். சுமார் 3 மணித்தியாலங்கள் இடம்பெற்ற இப்பேச்சுவார்த்தையில் இலங்கை கிரிக்கெட் சபையின்…
-
- 1 reply
- 579 views
-
-
ஒரு காலோடு கால்பந்தில் அசத்தி உலகை தன்பக்கம் ஈர்த்துள்ள ஹீ courtsey - AFP ஒரு காலினை மாத்திரம் கொண்ட சீன நாட்டு கால்பந்து வீரர் ஒருவர் விளையாடும் காணொளி (Video) ஒன்று சீன ரசிகர்களுக்கு மத்தியிலான சமூக வலைதளங்களில் வைரலாக பரவியதை அடுத்து விளையாட்டு உலகம் அவர் பக்கம் திரும்பியுள்ளது. ஹீ யியி (He Yiyi) என்ற பெயரினைக் கொண்ட 21 வயதாகும் மாற்றுத் திறனாளி கால்பந்து வீரரான இவர், புற்று நோயின் காரணமாக சிறு வயதில் தனது இடது காலினை இழக்க வேண்டிய துர்பாக்கிய நிலைக்கு ஆளாகியிருந்தார். தற்போது ஊன்று கோல் மூலம் கால்பந்துப் போட்டிகளில் விளையாடிவரும் ஹீ, “ சிறகுகளை இழந்த தேவதை (Angel with Broken Wings) “, “ ஒற்றைக் காலுடனான கால…
-
- 0 replies
- 372 views
-
-
றியல் மட்ரிட், சிற்றி வென்றன ஐரோப்பிய கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையே இடம்பெற்றுவரும் சம்பியன்ஸ் லீக் குழுநிலைப் போட்டிகளில், நேற்று இடம்பெற்ற போட்டிகளில், றியல் மட்ரிட், மன்செஸ்டர் சிற்றி, டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர், நாப்போலி, ஆர்.பி லெய்ப்ஸிக் ஆகிய அணிகள் வெற்றிபெற்றுள்ளதுடன், லிவர்பூல், செவில்லா அணிகளுக்கிடையிலான போட்டி சமநிலையில் முடிவடைந்தது. ஸ்பானிய லா லிகா கழகமான றியல் மட்ரிட், 6-0 என்ற கோல் கணக்கில், சைப்ரஸ் கழகமான அப்போயல் நிக்கோஸியாவை வென்று, இறுதி 16 அணிகளுக்கான சுற்றுக்குத் தகுதிபெற்றுக் கொண்டது. றியல் மட்ரிட் சார்பாக, கிறிஸ்டியானோ ரொனால்டோ, கரிம் பென்ஸீமா ஆகியோர் தலா 2 கோல்களையும் லூகா மோட்ரிட், நாச்சோ மொன்றியல் ஆகியோர் தலா ஒவ்வொ…
-
- 0 replies
- 507 views
-
-
வென்றது பரிஸ் ஸா ஜெர்மைன் பிரெஞ்சுக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான லீக் 1 தொடரில், நேற்று இடம்பெற்ற போட்டியொன்றில் பரிஸ் ஸா ஜெர்மைன் வென்றுள்ளது. பரிஸ் ஸா ஜெர்மைன், 4-1 என்ற கோல் கணக்கில், நன்டீஸை வென்றது. பரிஸ் ஸா ஜெர்மைன் சார்பாக, எடின்சன் கவானி இரண்டு கோல்கலையும் ஏஞ்சல் டி மரியா, ஸ்கேவியர் பஸ்டோரே ஆகியோர் தலா ஒவ்வொரு கோலையும் பெற்றனர். அந்தவகையில், இப்போட்டியின் முடிவில் 35 புள்ளிகளைப் பெற்றுள்ள பரிஸ் ஸா ஜெர்மைன், லீக் 1 புள்ளிகள் தரவரிசையில் முதலிடத்திலுள்ளது. பரிஸ் ஸா ஜெர்மனை விட நான்கு புள்ளிகள் குறைவாகப் பெற்றுள்ள மொனாக்கோ இரண்டாமிடத்தில் காணப்படுகின்றது. …
-
- 0 replies
- 303 views
-
-
ஸ்டெம்பிற்கு பின்னால் நின்று பேட்டிங் செய்த சமாரா சில்வா - வைரலாகும் வீடியோ இலங்கை வீரர் சமாரா சில்வா புதிய பாணியில் பந்தை எதிர்கொள்ள முயன்று அவுட் ஆன வீடியோ இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது. கொழும்பு: இலங்கையில் நடைபெற்ற உள்ளூர் கிரிக்கெட்டில் எம்.ஏ.எஸ். யுனிசலா மற்றும் டீஜே லங்கா ஆகிய இரு அணிகள் மோதின. அப்போது பேட்டிங் செய்த சமாரா சில்வா புதிய பாணியில் பந்தை அடிக்க முயன்றார். வேகமாக வந்த பந்தை ஸ்டம்பிற்கு வெளியே சென்று அடிக்க வெண்டும். அதே போல் சில்வாவும் பந்தை அடிப்பதற்காக வெளியே சென்றார். பந்து வீசப்பட்டது. வேகமாக வந்த பந்தை சில்வா முன்ன…
-
- 0 replies
- 660 views
-
-
‛‛இந்தியன் டீமுக்கு செலக்ட் ஆகப்போறேன்னு எனக்கு முன்னாடியே தெரியும்!’’ - விஜய் சங்கர் #VikatanExclusive #INDvSL ‘‘கடைசி பந்தில் அணியின் வெற்றிக்கு ஆறு ரன்கள் தேவை. ஸ்ட்ரைக்கர் எண்டில் நீங்கள் நிற்கிறீர்கள். இந்த மாதிரியான சூழலில் யார் பெளலராக இருந்தால் வசதியாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?’’ ‘‘வேர்ல்டுலயே யார் பெஸ்ட் பெளலரோ, அவர்தான் வேணும். அவரோட பந்துல சிக்ஸ் அடிச்சி வின் பண்ணணும். அந்த பெளலர் பந்தை அடிச்சாத்தான், எனக்கு கான்ஃபிடன்ஸ் கிடைக்கும்’’ என்றார் தமிழக கிரிக்கெட் வீரர் விஜய் சங்கர். அந்த நம்பிக்கைதான் அவர் 18 மாத காயத்திலிருந்து மீண்டு வரக் காரணம்; இன்று முதன்முதலாக இந்திய அணியின் ஜெர்ஸி அணியக் காரணம். இலங்கைக்…
-
- 0 replies
- 597 views
-
-
ஆசியக் கோப்பை கிரிக்கெட்டில் சாம்பியன்! வரலாறு படைத்தது ஆப்கானிஸ்தான் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 185 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது. Photo Courtesy: Afghan Cricket Board 19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசியக் கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டி இன்று கோலாலம்பூரில் நடந்தது. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன. கத்துக்குட்டி அணியான ஆப்கானிஸ்தானை எளிதில் வீழ்த்தி பாகிஸ்தான் கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர்களின் எதிர்பார்ப்பு பொய்த்துப் போனது. முதலில் பேட் செய்த …
-
- 1 reply
- 401 views
-
-
5 நாள்களும் ஈடன் கார்டன்ஸில் பேட்டிங் செய்து சாதனை செய்த புஜாரா! கொல்கத்தாவில் நடைபெற்று முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய பேட்ஸ்மேன் புஜாரா 5 நாள்களும் பேட்டிங் செய்து சாதனை படைத்துள்ளார். இதுபோல 5 நாள்களும் பேட்டிங் செய்த 9-வது வீரர் என்கிற பெருமையை அவர் பெற்றுள்ளார். ஜெய்சிம்ஹா, ரவி சாஸ்திரிக்குப் பிறகு இதுபோல விளையாடிய 3-வது இந்தியர், புஜாரா. கொல்கத்தா டெஸ்டில் முதல் நாளன்று புஜாரா 8 ரன்களுடன் களத்தில் இருந்தார். மழையால் 2-வது நாளும் பாதிக்கப்பட்டதால் அந்த நாளின் முடிவில் 47 ரன்களுடன் களத்தில் இருந்த புஜாரா 3-ம் நாளில் 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். …
-
- 0 replies
- 418 views
-
-
சச்சின் சாதனையை கோலி எட்டிவிடுவாரா? சர்வதேச கிரிக்கெட்டில் 50-வது சதம்! கொல்கத்தாவில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய கேப்டன் விராட் கோலி அபாரமாக விளையாடி சதமெடுத்துள்ளார். இது அவருடைய 18-வது டெஸ்ட் சதமாகும். சச்சின் டெண்டுல்கர் சர்வதேச கிரிக்கெட்டில் 100 சதங்கள் எடுத்துள்ளார். இந்நிலையில் இந்திய கேப்டன் விராட் கோலி இன்றைய சதத்துடன் சர்வதேச கிரிக்கெட்டில் தனது 50-வது சதத்தை எடுத்துள்ளார். 29 வயது கோலி - டெஸ்ட், ஒருநாள், டி20 என மூன்றிலும் சேர்த்து மேலும் 350 இன்னிங்ஸ்களை விளையாடி, தற்போது உள்ளதுபோல ஒவ்வொரு வருடமும் சிறப்பாக விளையாடுகிறபட்சத்தில் சர்வதேச க…
-
- 0 replies
- 440 views
-
-
யாழ். ஹாட்லி மாணவன் மிதுன்ராஜ் புதிய சாதனை ஹோமாகம மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான சேர் ஜோன் டாபட் கனிஷ்ட மெய்வல்லுநர் போட்டிகளின் இரண்டாம் நாளான இன்றைய தினம் ஹாட்லி மாணவன் சுசீந்திரகுமார் மிதுன்ராஜ் 15 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான தட்டெறிதல் நிகழ்ச்சியில் புதிய சாதனை நிலைநாட்டியுள்ளார். இவர் தட்டெறிதல் போட்டியில் 53.23 மீற்றர் தூரம் எறிந்தே இந்த புதிய சாதனையை நிலைநாட்டினார். முன்னைய சாதனையைவிட இது 7 மீற்றர் அதிகமானதாகும். இதே போட்டியில் இவரது கல்லூரியைச் சேர்ந்த பிரேமகுமார் மிதுஷான் 43.43 மீற்றர் தூரத்தைப் பதிவு செய்து வெண்கலப் பதக்கத்தை வென்றார். புதனன்று நடைபெற்ற 15 வயத…
-
- 8 replies
- 1.9k views
-
-
17 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற ஜனா நோவோட்னா புற்றுநோயால் மரணம் 17 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியன் பட்டம் வென்ற செக் குடியரசு டென்னிஸ் வீராங்கனை ஜனா நோவோட்னா புற்றுநோயால் மரணமடைந்தார். அவருக்கு வயது 49. செக்குடியரசு நாட்டின் முன்னாள் டென்னிஸ் வீராங்கனை ஜனா நோவோட்னா. முன்னாள் நம்பர் 2 வீராங்கனையான இவர், 17 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை பெற்று சாதனைப் படைத்துள்ளார். 49 வயதான இவர் புற்று நோயால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என பெண்கள் டென்னிஸ் அசோசியேசன் செய்தி வெளியிட்டுள்ளது. இரட்டையர் பிரிவில் கொடிகட்டிப் பற…
-
- 0 replies
- 440 views
-
-
இந்தியா - இலங்கை ஒருநாள் தொடர்: முதல் இரண்டு போட்டிகளின் நேரம் மாற்றம் இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் இரண்டு போட்டிகளின் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இலங்கை அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. தற்போது மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் முடிந்தவுடன் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெறுகிறது. முதல் போட்டி டிசம்பர் 10-ந்தேதி தரம்சாலாவிலும், 2-வது போட்டி டிசம்பர் 13-ந்தேதி மொகாலியிலும், 3-வது மற்றும் கடைசி போட்டியி ட…
-
- 0 replies
- 402 views
-
-
ஒருநாள் போட்டியில் 7 சிக்சர், 27 பவுண்டரியுடன் 490 ரன்கள் எடுத்து சாதனை: தென் ஆப்ரிக்கா வீரருக்கு குவியும் பாராட்டு தென் ஆப்ரிக்காவை சேர்ந்த ஷேன் டேட்ஸ்வெல் ஒருநாள் போட்டியில் அதிரடியாக விளையாடி 490 ரன்கள் எடுத்து சாதனை புரிந்துள்ளார். தென் ஆப்ரிக்காவை சேர்ந்த ஷேன் டேட்ஸ்வெல் ஒருநாள் போட்டியில் அதிரடியாக விளையாடி 490 ரன்கள் எடுத்து சாதனை புரிந்துள்ளார். தென் ஆப்ரிக்காவில் உள்ளூர் அணிகளுக்கு இடையே கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகிறது. அங்குள்ள நார்த்வெஸ்ட் யுனிவர்சிடி புக்கே அணிக்கும், போட்ச் டார்ப் அணிக்கும் இடையே நேற்று ஒருநாள் போட்டி நடைபெற்றது. முதலில்…
-
- 0 replies
- 418 views
-
-
இங்கிலீஷ் பிரிமீயர் லீக்: டோட்டன்ஹாமை 2-0 என வீழ்த்தியது அர்செனல் இங்கிலீஷ் பிரிமீயர் லீக் கால்பந்து தொடரில் நார்த் லண்டனில் இன்று நடைபெற்ற போட்டியில் டோட்டன்ஹாம் அணியை அர்செனல் வீழ்த்தியது. இங்கிலீஷ் பிரிமீயர் லீக் கால்பந்து தொடரின் இன்றைய ஆட்டம் ஒன்றில் அர்செனல் - டோட்டன்ஹாம் அணிகள் நார்த் லண்டனில் பலப்பரீட்சை நடத்தின. ஆட்டம் தொடங்கியது முதலே அர்செனல் வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். ஆட்டத்தின் 36-வது நிமிடத்தில் மெசுட் ஒசில் இடது பக்கம் கார்னர் பகுதியில் இருந்து அடித்து பந்தை, முஸ்டாஃபி தலையால் முட்டி கோல் அடித்தார். அடுத்த ஐந்…
-
- 0 replies
- 185 views
-
-
இலங்கையில் அடுத்த ஆண்டு முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட்: இந்தியா, வங்காள தேசம் பங்கேற்பு இலங்கையில் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 8-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெறுகிறது. இதில் இந்தியா, வங்காள தேசம் பங்கேற்கிறது. இலங்கை சுதந்திரம் அடைந்து 70-வது ஆண்டு ஆவதை கொண்டாடும் வகையில் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரை நடத்த அந்நாட்டுக்கு கிரிக்கெட் வாரியம் முடிவு செய்தது. அந்த தொடருக்கு ‘நிதாஹாஸ் டிராபி’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இலங்கையுடன் இந்தியா, வங்காள தேசம் அணிகள் பங்கேற்கின்றன. இந்த தொடர் 2018 மார்ச் மாதம் 8-ந்தேதி …
-
- 0 replies
- 366 views
-