Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. ரியல் மாட்ரிட் அணியுடன் ஓய்வு பெற விரும்புகிறார் நெய்மர் ரியல் மாட்ரிட் அணியுடன் ஓய்வு பெற நெய்மர் விரும்புகிறார். இதனால்தான் பார்சிலோனாவில் இருந்து பி.எஸ்.ஜி.க்கு அவர் மாறினார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரேசில் கால்பந்து அணியின் தலைசிறந்த வீரரான நெய்மர் (ஜூனியர்) திகழ்ந்து வருகிறார். இந்த தலைமுறையின் தலைசிறந்த வீரர்களான மெஸ்சி, கிறிஸ்டியானோ ரொனால்டோவுடன் இணைந்து பேசப்படுகிறார். ஆரம்ப கட்டத்தில் பிரேசில் நாட்டின் கிளப்பில் இருந்து புகழ்பெற்ற பார்சிலோனா அணிக்கு மாறினார். மெஸ்சியுடன் இணைந்து பார்சிலோனாவின் நம்பிக்கை வீரரானார். இவரை விட்டுக்கொடுக்க மனம் இல்ல…

  2. ’தோனிக்கும் எனக்கும் இடையே பிரச்னையை உருவாக்க சிலர் எண்ணுகிறார்கள்’ - மனம் திறந்த கோலி தோனிக்கும் தனக்கும் இடையில் பிரச்னையை உருவாக்க சிலர் எண்ணுவதாக, இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார். விராட் கோலி மற்றும் தோனி இடையிலான உறவுகுறித்து பல்வேறு விதமான செய்திகள் வெளியான நிலையில், அது தொடர்பாக கேப்டன் கோலி முதல்முறையாக மனம் திறந்துள்ளார். ’பிரேக்ஃபாஸ்ட் வித் சாம்பியன்ஸ்’ என்ற வெப் சீரிஸில் இதுகுறித்துப் பேசியுள்ள கோலி, ‘எனக்கும் தோனிக்கும் இடையில் பிரச்னை இருப்பதாகப் பலரும் கதைகளைக் கட்டிக்கொண்டிருக்கின்றனர். இதில், முக்கியமான விஷயம் என்னவென்றால், அதுபோன்ற கதைகளை நானோ, தோனியோ படிப்பதில்லை என்பதுதான். எங்கள் இருவரையும் …

  3. ஒருநாள் போட்டியில் இரட்டை சதம் விளாசிய 16 வயது இளம் வீராங்கனை மும்பையைச் சேர்ந்த 16 வயதே ஆன இளம் வீராங்கனை ஜெமிமா ரோட்ரிக்ஸ் ஒருநாள் போட்டியில் இரட்டை சதம் விளாசியுள்ளார். பெண்களுக்கான உள்ளூர் கிரிக்கெட் தொடரான 19 வயதிற்குபட்டோருக்கான ஒருநாள் கிரிக்கெட் லீக் தொடர் நடைபெற்று வருகிறது. அவுரங்காபாத்தில் நடைபெற்ற ஒரு போட்டியில் மும்பை- சவுராஷ்டிரா அணிகள் மோதின. மும்பை அணியில் 16 வயதே ஆகும் இளம் வீராங்கனையான ஜெமிமா ரோட்ரிக்ஸ் இடம்பிடித்திருந்தார். இவர் சவுராஷ்டிரா வீராங்கனைகளின் பந்து வீச்சை துவம்சம் செய்தார். சிறப்பாக விளையாடிய ஜெமிமா 163 பந்த…

  4. பார்சிலோனாவிற்காக 600-வது போட்டியில் களமிறங்கும் மெஸ்சி அர்ஜென்டினா கால்பந்து அணி கேப்டனான மெஸ்சி, புகழ்பெற்ற பார்சிலோனா அணிக்காக 600-வது போட்டியில் களம் இறங்க உள்ளார். அர்ஜென்டினாவின் முன்னணி கால்பந்து வீரர் லயோனல் மெஸ்சி. இவர் ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா கால்பந்து கிளப் அணிக்காக விளையாடி வருகிறார். 2004-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 16-ந்தேதியில் இருந்து தற்போது வரை சுமார் 13 வருடங்கள் அந்த அணிக்காக விளையாடி வருகிறார். தற்போது வரை அவர் 599 போட்டிகளில் விளையாடியுள்ளார். இன்றிரவு லா லிகா தொடரில் பார்சிலோனா தனது சொந்த மைதானத்தில் செவியா அணியை எத…

  5. ஜேர்மனியில் கால்பந்து வீரராக ஜொலிக்கும் இலங்கை வீரர் வசீமின் கனவு நனவாகுமா? இலங்கையிலிருந்து உலக நாடுகளுக்கு சென்று புலம்பெயர்ந்து வாழும் பலர் அந்நாடுகளில் பல்வேறு துறைகளில் சாதனைகளைப் புரிந்து வருவதை ஊடகங்கள் வாயிலாக அடிக்கடி கேள்வியுற்றுள்ளோம். கல்வி, வியாபாரம் போன்ற துறைகளில் இவ்வாறு இலங்கையைச் சேர்ந்த பலர் முன்னேற்றம் கண்டு உலகின் முக்கிய பதவிகளில் இருந்து வருகின்றனர். அதேபோல அண்மைக்காலமாக விளையாட்டுத்துறையிலும் இலங்கையைச் சேர்ந்த ஒரு சில வீரர்கள் சர்வதேச அரங்கில் இலங்கையின் நாமத்தை ஜொலிக்கச் செய்து வருகின்றமையையும் காணமுடிகின்றது. விளையாட்டுக்கு இன, மதம், மொழி வேறுபாடு இல்லை என்பது போல நாடு, …

  6. மைலோ இறுதி மோதலில் புனித பத்திரிசியார், மணற்காடு, புனித ஹென்றியரசர் அணிகள் தற்பொழுது நடைபெற்று வரும் 5ஆவது மைலோ கிண்ண கால்பந்து போட்டிகளின் ஓர் அங்கமாக 14 மற்றும் 16 வயதிற்குட்பட்ட யாழ், கிளிநொச்சி மாவட்ட பாடசாலை அணிகளுக்கிடையிலான மோதலின் இறுதி ஆட்டங்களுக்கு புனித பத்திரிசியார், மணற்காடு றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை, புனித ஹென்றியரசர் அணிகள் தெரிவாகியுள்ளன. யாழ், கிளிநொச்சி மாவட்ட பாடசாலை அணிகளுக்கிடையிலான குறித்த சுற்றுத்தொடரின் அரையிறுதிப் போட்டிகள் நேற்றையதினம் (01) யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெற்றன. 14 வயதிற்குட்பட்டோர் பிரிவு தெரிவுச்சுற்று மற்றும் காலிறுதிப் போட்டிகள் …

  7. வியக்க வைக்கும் கிராமத்து பாடசாலையின் சாதனை.. குளோபல் தமிழ்ச் செய்தியாளர். ஒழுங்கான மைதானம் கூட இல்லாமல் தேசிய மட்டத்தில் துணுக்காய் வலயப் பாடசாலையான கோட்டைக்கட்டியகுள அ.த.க பாடசாலை எறிபந்துப் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தினைப் பெற்றுள்ளது. துணுக்காயில் இருந்து பதினைந்து கிலோமீற்றர் தூரத்திலும் கிளிநொச்சி அக்கராயனில் இருந்து பத்து கிலோமீற்றரிலும் போக்குவரத்துகள் அற்ற கிராமம் ஒன்றில் அமைந்துள்ள கோட்டைக்கட்டியகுளம் அ.த.க பாடசாலை தேசிய மட்டத்தில் வெள்ளி பதக்கம் பெறுவது என்பது நினைத்துப் பார்க்க முடியாத நிலையில் எங்களாலும் சாதிக்க முடியும் என்பதை கோட்டைக்கட்டியகுளம் பாடசாலை எறிபந்து அணியினர் வெள்ளிப் பதக்கத்தினைப் பெற்று ப…

  8. உள்நாட்டு கிரிக்கெட் போட்டியில் ஆஃப் ஸ்பின் வீசிய மலிங்கா இலங்கையின் கலக்கல் வேகப்பந்து வீச்சாளர் உள்நாட்டு ஒருநாள் போட்டி ஒன்றில் ஆஃப் ஸ்பின் வீசி 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளது ரசிகர்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. 300 ஒருநாள் போட்டி விக்கெட்டுகளைக் கடந்த மலிங்கா சமீபத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான இலங்கை தொடருக்கான அணியில் இடம்பெறவில்லை. மேலும் லாகூரில் நடந்த 3-வது டி20 போட்டிக்கு அங்கு செல்ல மறுத்த வீரர்களில் மலிங்காவும் ஒருவர். இதனையடுத்து டி20 தொடர் முழுதிலும் மலிங்கா ஆடமுடியாமல் போனது. இந்நிலையில் உள்நாட்டு ஒருநாள் கிரிக்கெட்டில் ஏ-டிவிஷன் நாக் அவுட் போட்டியில்…

  9. பெண்கள் கிரிக்கெட்: 136 வைடுகள் வீசிய மணிப்பூர், நாகாலந்து அணி வீராங்கனைகள் பிசிசிஐ நடத்திய 19 வயதிற்குட்பட்டோருக்கான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் மணிப்பூர், நாகாலந்து வீராங்கனைகள் 136 வைடு பந்துகள் வீசினர். இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் 19 வயதிற்கு உட்பட்டோருக்கான வடகிழக்கு- பீகார் ஒருநாள் கிரிக்கெட் தொடர் தொடங்கப்பட்டுள்ளது. இந்த தொடரில் ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத்தில் நடைபெற்ற போட்டியில் மணிப்பூர் - நாகாலாந்து அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த நாகாலாந்து அணி 38 ஓவர்களில் 215 ரன்கள் …

  10. டோனியின் ஓய்வு மிகப்பெரிய நான்கு பேரின் ஓய்வு போன்றது: கில்கிறிஸ்ட் சொல்கிறார் டோனி ஓய்வு பெற்ற பிறகு, அந்த இடம் இந்திய அணிக்கு பெரிய வெற்றிடமாகும். அதை நிரப்ப நீண்ட காலமாகும் என்ற விக்கெட் கீப்பர் மற்றும் பேடஸ்மேன் ஜாம்பவான் கில்கிறிஸ்ட் கூறியுள்ளார். ஆஸ்திரேலிய அணியின் முன்னணி விக்கெட் கீப்பராகவும், அதிரடி பேட்ஸ்மேனாகவும் திகழ்ந்தவர் கில்கிறிஸ்ட். இந்திய அணியில் இருந்து டோனி ஓய்வு பெறும்போது அந்த இடம் மிகப்பெரிய வெற்றிடமாக திகழும். அந்த இடத்தை நிரப்ப நீண்ட காலம் ஆகும் என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து கில்கிறிஸ்ட் கூறுகையில் ‘‘டோனி 3-வது இடத்தில் இருந்து 7-வது…

  11. முதல் டெஸ்ட்: வெஸ்ட் இண்டீசை 219 ரன்னில் சுருட்டியது ஜிம்பாப்வே ஜிம்பாப்வேயிற்கு எதிரான முதல் டெஸ்டில் வெஸ்ட் இண்டீஸ் சுழற்பந்து பந்து வீச்சை தாக்குபிடிக்க முடியாமல் 219 ரன்னில் சுருண்டது. ஜிம்பாப்வே - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி புலவாயோவில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி அந்த அணியின் பிராத்வைட், பொவேல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். பிராத்வைட் 3 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த கைல் கோப் 16 ரன்னில் ஏமாற்றம் அளித்தார். …

  12. டெல்லி டி20 போட்டியின்போது வாக்கி டாக்கியை பயன்படுத்திய கோலி: ஐ.சி.சி. விதியை மீறினாரா? டெல்லியில் நடைபெற்ற டி20 கிரிக்கெட் போட்டியின்போது இந்திய கேப்டன் விராட் கோலி வாக்கி டாக்கி பயன்படுத்தினார். இது ஐ.சி.சி. விதிமுறை மீறலா? என்ற விவாதத்தை எழுப்பியது. இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி நேற்றிரவு டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங் செய்து கொண்டிருந்தது. அப்போது வெளியில் இருந்த கேப்டன் விராட் கோலி வாக்கி டாக்கியில் பேசிக்கொண்டிருந்தார். இதை பல செய்தி நிறுவனங்கள் படம் எடுத்தனர்.…

  13. விடைபெறுகிறார் இந்திய கிரிக்கெட் போராளி ஆஷிஷ் நெஹ்ரா - THE HINDU இந்திய கிரிக்கெட் வரலாற்றில் முட்கள் நிறைந்த பாதையில் அதிகம் பயணித்தவர் என்று ஆஷிஷ் நெஹ்ராவைக் கூறலாம். 1999-ம் ஆண்டு இந்திய அணிக்குள் அடியெடுத்து வைத்த நெஹ்ரா, மற்ற பந்து வீச்சாளர்களை விட அதிக காலம் இந்திய அணிக்காக ஆடியவர். ஆனால் இந்த 18 ஆண்டுகளில் அவர் விளையாடிய போட்டிகள் மிகவும் குறைவு. 17 டெஸ்ட் போட்டிகளிலும், 120 ஒருநாள் போட்டிகளிலும், 26 டி 20 போட்டிகளிலும் மட்டுமே அவர் பங்கேற்றுள்ளார். அடிக்கடி காயம் அடைந்ததும், தேர்வாளர்கள் அவர் விஷயத்தில் காட்டிய பாரபட்சமுமே இதற்கு காரணம். …

  14. தேசிய மட்டத்தில் முதல் பதக்கம் வென்ற மண்டூர் சாதனை வீரன் குகேந்திரன் தேசிய அரங்கிற்குள் நுழைந்து பதக்கமொன்று வெல்வது வார்த்தைகளால் சொல்லும் அளவுக்கு இலகுவான விடயமல்ல. இந்த வெற்றிக்காக செய்யவேண்டிய தியாகம்,படவேண்டிய கஷ்டங்கள் எண்ணிலடங்காதவை. அவ்வாறானதொரு பின்னணியில் தடைகளையெல்லாம் தாண்டி 33 வருடகால அகில இலங்கை பாடசாலைகள்விளையாட்டு விழா வரலாற்றில் மண்டூர் 40 அரசினர் தமிழ் கலவன் பாடசாலைக்கு முதலாவது தேசிய மட்ட வெற்றியைப் பெற்றுக்கொடுத்த குகேந்திரன் உடன்.

  15. கிரிக்கெட் விருது வழங்கும் விழாவில் ஹேரத், அசேலவுக்கு அதிக கௌரவம் இலங்கை கிரிக்கெட்டில் திறமைகளை வெளிப்படுத்திய வீரர்களை கௌரவிக்கும் வகையில் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தினால் நடாத்தப்படுகின்ற டயலொக் கிரிக்கெட் விருதுகள் வழங்கும் விழாவில் 2016ஆம் ஆண்டின் சிறந்த வீரருக்கான விருதை முதற்தடவையாக இலங்கை அணியின் நட்சத்திர சுழற்பந்து ஜாம்பவானான ரங்கன ஹேரத் பெற்றுக்கொண்டார். இதன்படி, கடந்த 3 வருடங்களாக வருடத்தின் சிறந்த வீரருக்கான விருதினைப் பெற்றுவந்த இலங்கை அணியின் முன்னாள் தலைவர் அஞ்செலோ மெதிவ்சைப் பின்தள்ளி இவ்விருதைத் தட்டிச் சென்ற ஹ…

  16. "போட்டியை வெல்ல திறமை வேண்டும்" தினேஷ் சந்­திமால் கிரிக்கெட் போட்­டியில் வெற்­றி­பெற ஆன்­மீ­க­வா­தி­களின் ஆசீர்­வாதம் மட்டும் போதாது திற­மையும் வேண்டும் என்று இலங்கை டெஸ்ட் அணித் தலைவர் தினேஷ் சந்­திமால் தெரி­வித்தார். ஐக்­கிய அரபு எமி­ரேட்­ஸுக்கு சென்று பாகிஸ்­தா­னுடன் விளை­யா­டிய இலங்கை இரண்டு போட்­டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை முழு­மை­யாக வென்று சாதித்­தது. இந்தத் டெஸ்ட் தொடரை சந்­திமால் தலை­மை­யி­லான இலங்கை அணி வெல்­வ­தற்கு எனது ஆசீர்­வா­தமே காரணம் என்று பெண் ஆன்­மீ­க­வாதி ஒருவர் பேஸ்­புக்கில் பதி­வேற்­றிய படம் ஒன்று பலத்த சர்ச்­சையை உருவாக்­கி­யது. இந்­நி­லையில் நேற்று இலங்கைக் கிரிக்கெட் நிறு­வனக் கேட்போர் கூடத்தில் நடை­பெற்ற ஊ…

  17. நான்கு நாட்கள் டெஸ்டிற்கு நான் பெரிய ரசிகன் அல்ல: குமார் சங்ககரா நான்கு நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டிற்கு நான் பெரிய ரசிகன் அல்ல என்று இலங்கை அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் சங்ககரா கூறியுள்ளார் டி20 கிரிக்கெட் அறிமுகமான பின்னர் ரசிகர்களிடையே டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கான ஆதரவு படிப்படியாக குறைந்து வருகிறது. மேலும், பெரும்பாலான போட்டிகள் ஐந்து நாட்கள் வரை நீடிப்பதில்லை. வீரர்களும் தங்களது உடற்தகுதியை ஐந்து நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்கு ஏற்ற வகையில் கட்டுக்கோப்பாக வைப்பதில்லை. டி20 லீக் தொடர் நடைபெற்று வருவதால் பெரும்பாலான வீரர்கள் டெஸ்ட் போட்டிகளை விரும்…

  18. விபுலானந்தன் நினைவுக் கிண்ணம் கொக்குவில் இந்து, யாழ். மத்தி வசம் நேற்று நிறைவடைந்த பாடசாலை அணிகளுக்கிடையிலான விபுலானந்தன் ஞாபகார்த்த கூடைப்பந்தாட்ட சுற்றுத் தொடரின் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற யாழ்ப்பாணம் கொக்குவில் இந்துக் கல்லூரி பெண்கள் பிரிவிலும், யாழ். மத்திய கல்லூரி ஆண்கள் பிரிவிலும் சம்பியன் பட்டங்களை வென்றுள்ளன. “சிவன் ஃபவுன்டேசன்” அனுசரணையில் யாழ்ப்பாணம் ம…

  19. ஆஸி, இலங்கை அணிகளிடம் எளிதாக வென்ற இந்தியா நியூசிலாந்திடம் தடுமாறியதா? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே கான்பூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியை 6 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்தியா, ஒருநாள் போட்டி தொடரை வென்றது. படத்தின் காப்புரிமைREUTERS/DANISH SIDDIQUI விளம்பரம் இத்தொடரை வென்ற இந்தியா தொடர்…

  20. இந்தியா எதிர் நியூசீலாந்து ஒருநாள் போட்டி தொடர் செய்திகள் நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர்: இந்திய அணி தேர்வு! நியூசிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிராக இந்தியா விளையாடப் போகும் ஒருநாள் போட்டிக்கு 15 பேர் கொண்ட அணியை பிசிசிஐ தேர்வு செய்துள்ளது. நியூசிலாந்து கிரிக்கெட் அணி, இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேறகொண்டு மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் மூன்று டி20 போட்டிகளை விளையாட உள்ளது. நியூசிலாந்துக்கு எதிரான தொடர் வரும் 22-ம் தேதி தொடங்குகிறது. முதல் ஒருநாள் போட்டி மும்பையில் இருக்கும் வான்கடே மைதானத்தில் நடக்க உள்ளது. இதையொட்டி, முதல் மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்கான 15 வீரர்கள் கொண்ட அணியை பிசிசிஐ தேர்வு செய்துள்ளது. இந்தப் பட…

  21. அர்ஜென்டினாவின் மார்ட்டின் டெல்போட்ரோவை வீழ்த்தி 95-வது ஏடிபி பட்டம் வென்றார் ரோஜர் பெடரர்: செக் குடியரசின் இவான் லென்டில் சாதனை முறியடிப்பு சுவிஸ் உள்ளரங்க டென்னிஸ் போட்டியில் பட்டம் வென்ற சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர். - AFP சுவிட்சர்லாந்து உள்ளரங்க மைதானத்தில் நடைபெற்ற டென்னிஸ் தொடரில் அர்ஜென்டினாவின் மார்ட்டின் டெல்போட்ரோவை வீழ்த்தி ரோஜர் பெடரர் சாம்பியன் பட்டம் வென்றார். பாஸல் நகரில் நடைபெற்ற இந்தத் தொடரின் இறுதி ஆட்டத்தில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடர் இறுதிப் போட்டியில் 6-7, (5—7), 6-4, 6-3 என்ற செட் கணக்கில் டெல்போட்ரோவை வீழ்த்தினார். சுவிட்சர்லாந்து உள்ளரங்க மைதானத் தொடரில் பெட…

  22. விராட் கோலி புதிய சாதனை! சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 9,000 ரன்களைக் கடந்த வீரர் என்ற சாதனையை இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி படைத்தார். Photo Credit: BCCI கான்பூரில் நடந்துவரும் நியூசிலாந்து அணிக்கெதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் அவர் இந்த மைல்கல்லை எட்டினார். இந்த போட்டியில் 83 ரன்களைக் குவித்த போது சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 9,000 ரன்களை எட்டினார். 194ஆவது இன்னிங்ஸில் 9,000 ரன்களைக் கடந்த விராட் கோலி, 205 இன்னிங்ஸ்களில் 9,000 ரன்களைக் கடந்து சாதனை படைத்திருந்த தென்னாப்பிரிக்காவின் டிவிலியர்ஸின் சாதனையை முறியடித்தார். இந்த பட்டியலில் 228 இன்னிங்ஸ்கள், 235 இன்னிங்ஸ்களுடன் முறையே கங்குலி மற்றும் சச்சின் டெண்டுல்கர் ஆ…

  23. தோனியை விமர்சிக்காதீர்கள்: மூத்த பத்திரிகையாளரிடம் திராவிட் திராவிட், தோனி. - கோப்புப் படம். | ஏ.எஃப்.பி. பெங்களூரு இலக்கிய விழா ஒன்றில் மூத்த பத்திரிகையாளர் ராஜ்தீப் சர்தேசாயிடம் தோனியை விமர்சிக்காதீர்கள் என்றார் ராகுல் திராவிட். அதாவது, தான் எப்போது ஓய்வு பெற வேண்டும் என்று அவரே முடிவு செய்யும் அளவுக்கு அதிகாரமிக்க வீரராகி விட்டாரா தோனி என்ற கேள்வி திராவிடிடம் முன் வைக்கப்பட்டது. அதற்குப் பதில் அளித்த ராகுல் திராவிட், மூத்த பத்திரிகையாளர் ராஜ்தீப் சர்தேசாயிடம் கூறும்போது, “தோனியை விமர்சிக்க வேண்டாம், ஆஷிஷ் நெஹ்ரா கூட தனது கடைசி போட்டி எது என்பதை முடிவு செய்கிறார…

  24. லா லிகா கால்பந்து: ரியல் மாட்ரிட்டை 2-1 வீழ்த்தி அதிர்ச்சியளித்தது ஜிரோனா லா லிகா கால்பந்து தொடரில் பலம் வாய்ந்த ரியல் மாட்ரிட் அணியை 2-1 என வீழ்த்தி ஜிரோனா அதிர்ச்சி அளித்துள்ளது. ஸ்பெயின் நாட்டின் முன்னணி கால்பந்து கிளப் அணிகளுக்கு இடையிலான 2017-18 சீசன் ‘லா லிகா’ லீக் தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற ஒரு போட்டியில் முன்னணி அணியான ரியல் மாட்ரிட், கேட்டலோனியாவில் அமைந்துள்ள ஜிரோனா அணியை எதிர்கொண்டது. அரசியல் நெருக்கடிக்கிடையே ஜிரோனா அணி களம் இறங்கியது. ஆட்டத்தின் 12-வது நிமிடத்தில் ரியல் மாட்ரிட் அணியின் கிறிஸ்டியானோ ரொனால்டோ கோல் நோக்கி அடித்த பந்தை ஜி…

  25. கிறிஸ் கெய்ல் தனது ஆணுறுப்பை காண்பித்ததால் குழந்தை போன்று கதறி அழுதேன் – மேற்கிந்திய அணியின் முன்னாள் மசாஜ் ஊழியர் நீதிமன்றில் சாட்சியம் மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணியின் அதிரடி வீரரான கிறிஸ் கெய்ல் தனது ஆணுறுப்பை தன்னிடம் காண்பித்தபோது தான் குழந்தை போன்று கதறி அழுததாக அவ்வணியின் பெண் மசாஜ் ஊழியராக பணியாற்றிய யுவதி ஒருவர் நேற்று முன்தினம் தெரிவித்தார். லியனே ரஸல் எனும் இந்த யுவதி, அவுஸ்திரேலிய நீதிமன்றமொன்றில் நடைபெறும் வழக்கு விசாரணையில் சாட்சிமளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். 2015 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவில் ஒருநாள் சர்வதேச உலக கிண்ணப் போட்டிகள் நடை பெற்றபோது மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணியினருக்கான மசாஜ் ஊழியராக பணி யாற்றியவர் லியன…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.