Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. "ஒரு தலை­மு­றை­யையே இலங்கைக் கிரிக்கெட் இழந்­து­விட்­டது" ஆதங்­கத்­துடன் லசித் மலிங்க ஒரு தலை­மு­றை­யையே இலங்கைக் கிரிக்கெட் இழந்­து­விட்­டது என்று லசித் மலிங்க ஆதங்­கத்­துடன் தெரி­வித்­துள்ளார். அதேபோல் மக்­களின் விருப்­பத்­திற்கு புதிய இளம் வீரர்­களை அணியில் சேர்த்து, சேர்­த்த­வர்கள் நல்ல பெயரைப் பெற்­றுக்­கொண்­டார்கள். அணி வீழ்ச்­சியைக் கண்­டு­விட்­டது என்றும் அவர் தனது ஆதங்­கத்தை வெளிப்­ப­டுத்­தி­யுள்ளார். இலங்கைக் கிரிக்கெட் அணி அண்மைக் கால­மாக கண்­டு­வரும் தொடர் தோல்­வி­களால் இலங்கைக் கிரிக்கெட் நிறு­வனம் கடு­மை­யான விமர்­ச­னங்­க­ளுக்கு உள்­ளா­கி­வ­ரு­கின்­றது. அதேபோல் விளை­யாட்­டுத்­துறை அமைச்­சரும் கண்­டு­கொள்­ளாமல் இருக்­கிறார் …

  2. 800 கி.மீ தூரம், 26 மணி நேர பயணம்... பாகிஸ்தானிலும் கிரிக்கெட் ஒரு மதம்! #CricketBackToPak மார்ச் 3, 2009. இலங்கை - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாள். இலங்கை கிரிக்கெட் வீரர்களின் பஸ், லாகூர் கடாஃபி ஸ்டேடியத்தை நோக்கி பயணிக்கிறது. சுற்றிலும் பாதுகாப்பு. பஸ் லிபர்டி செளக் பகுதியில் சென்றபோது அங்கு ஊடுருவியது, துப்பாக்கி ஏந்திய 12 பேர் கொண்ட கும்பல். பாதுகாப்பு வீரர்கள் சுதாரிப்பதற்குள் நடந்து முடிந்துவிட்டது தாக்குதல். இலங்கை வீரர்கள் ஆறு பேர் காயம். ஆறு போலீஸார், பொதுமக்கள் இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே பலி. அஷன் ரஸா, பாகிஸ்தானைச் சேர்ந்த அம்பயர். லாகூர் டெஸ்ட் போட்டியின் ரிசர்வ…

  3. தர்ஜினியின் உதவியால் இறுதிப் போட்டியை நெருங்கியுள்ள புனித அல்பான்ஸ் உலகின் அதிக உயரமான வலைப்பந்து வீராங்கனை தர்ஜினி சிவலிங்கத்தின் அசாத்தியமான 208 சென்டிமீற்றர் உயரம் மற்றும் அபாரமான ஷூட்டிங்கினால் புனித அல்பான்ஸ் அணி அவுஸ்திரேலியாவின் GFL தொடரின் மாபெரும் இறுதிப் போட்டியை நெருங்கியுள்ளது. வலைப்பந்து அரங்கில் கோல் ஷூட்டரான தர்ஜினி சிவலிங்கம் கூட்டமொன்றுக்கு மத்தியில் நிற்க எந்த சிரமத்திற்கும் முகம் கொடுக்கமாட்டார். அது தனது சொந்த ஊரான வட இலங்கையின் யாழ்ப்பாணம் அல்லது சுப்பர்செயின்ட்ஸ் வலைப்பந்து அரங்காக இருந்தாலும் சரியே. 37 வயதான அந்த வீராங்கனை பொதுவாக எப்போதும் அனைவரது அவதானத்துக்கும் உள்ளாவார். அவரது 208 செ…

    • 1 reply
    • 532 views
  4. சாமர சில்வாவுக்கு 2 வருட சகல கிரிக்கெட் போட்டி தடை கிரிக்கெட் வீரர் சாமர சில்வாவுக்கு 2 வருடங்களுக்கு சகல கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் தடை விதிக்கப்பட்டுள்ளது. போட்டி ஆட்ட நிர்ணய சதி குற்றச்சாட்டு தொடர்பான விசாரணை காரணமாகவே அவருக்கு இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. http://tamil.adaderana.lk/news.php?nid=95464

  5. இன்று மே.இ.தீவுகள் டி 20ல் மோதல் ஜேசன் ஹோல்டர் தலைமையிலான மேற்கிந்தியத் தீவுகள் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை இங்கிலாந்து 2-1 என வென்றது. டெஸ்ட் போட்டி தொடரை தொடர்ந்து இரு அணிகளும் ஒரு டி 20 ஆட்டம் மற்றும் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் மோத உள்ளன. இதில் டி 20 ஆட்டம் செஸ்டர் லீ ஸ்ட்ரிட்டில் இன்று நடைபெறுகிறது. இந்திய நேரப்படி இரவு 11 மணிக்கு இந்த ஆட்டம் நடைபெறுகிறது. கிறிஸ் கெய்ல், மார்லன் சாமுவேல்ஸ் களமிறங்குவதால் இந்த ஆட்டத்தை மேற்கிந்தியத் தீவுகள் அணி அதிக நம்பிக்கையுடன் எதிர்கொள்கிறது. அதேவேளையில் வெற்றி ஆதிக்கத்தை தொடரும் முனைப்பில் இங்கிலாந்து களமிறங்…

  6. பங்களாதேஷ் பிரீமியர் லீக்கில் 9 இலங்கை வீரர்கள் பங்களாதேஷ் பிரீமியர் லீக்கில் 9 இலங்கை வீரர்கள் ஐந்தாவது தடவையாக நடைபெறவிருக்கும் பங்களாதேஷ் பிரீமியர் லீக் (BPL) தொடரில், இலங்கையிலிருந்து 9 வீரர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இதன்படி, குமார் சங்கக்கார, சீக்குகே பிரசன்ன, ஷெஹான் ஜயசூரிய, திஸர பெரேரா, குசல் ஜனித் பெரேரா, சதுரங்க டி சில்வா, வனிந்து ஹசரங்க டி சில்வா, தசுன் சானக்க மற்றும் ஜீவன் மெண்டிஸ் ஆகிய வீரர்கள் இம்முறை பங்களாதேஷ் பிரீமியர் லீக்கில் விளையாடவுள்ளனர். பங்களாதேஷ் கிரிக்கெட் சபையினால் வெளிநாட்டு வீரர்களின் பங்குபற்றுதலுடன் நடத்தப்படுகின்ற பங்…

  7. உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. 2024-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை நடத்துவதற்கான உரிமத்தை பெற பாரீஸ் (பிரான்ஸ்), லாஸ் ஏஞ்சல்ஸ் (அமெரிக்கா) ஆகிய நகரங்கள் இடையே நேரடி போட்டி நிலவியது. இதையடுத்து சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி நடத்திய பேச்சுவார்த்தையின் அடிப்படையில் மேலும் 4 ஆண்டுகள் காத்திருந்து 2028-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை நடத்த லாஸ்ஏஞ்சல்ஸ் ஒப்புக் கொண்டது. இந்த நிலையில் பெரு தலைநகர் லிமாவில் நடந்த சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் கூட்டத்தில் 2024-ம் ஆண்டு ஒலிம்பிக் உரிமத்தை பாரீசுக்கும் 2028-ம் ஆண்டு ஒலிம்பிக் உரிமத்தை லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கும் வழங்குவது என்று ஒரு மனதாக முடிவு செய்யப்பட்டது. ஒலிம்பிக…

  8. டுமினியின் திடீர் முடிவு! தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியின் சகலதுறை ஆட்டக்காரர் ஜீன் போல் டுமினி டெஸ்ட் போட்டிகள் மற்றும் முதல்தரப் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார். இங்கிலாந்துக்கு எதிராக கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற நான்கு போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில், முதல் போட்டியில் மட்டுமே இணைத்துக்கொள்ளப்பட்டிருந்தார். அதன்பின் எந்தவொரு டெஸ்ட் போட்டியிலும் அவர் கலந்துகொள்ளவில்லை. டெஸ்ட் போட்டிகளில் இருந்து விலகினாலும் ஒருநாள் மற்றும் இ-20 போட்டிகளில் விளையாடவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 33 வயதாகும் டுமினி இதுவரை 46 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். அவற்றில் 2,103 ஓட்டங்களைப் பெற்றிருக்கும் அவர், பந்துவீச்சில் 42 விக்கட…

  9. சிவகுருநாதன் ஞாபகார்த்த கிண்ணத்தை சுவீகரித்த ஆனந்த கல்லூரி Tamil சிவகுருநாதன் ஞாபகார்த்த கிண்ணத்தை சுவீகரித்த ஆனந்த கல்லூரி யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி, கொழும்பு ஆனந்த கல்லூரி ஆகிய இரு பாடசாலைகளுக்கிடையிலான சிவகுருநாதன் ஞாபகார்த்தக் கிண்ணம், பனிக்கர் தனபாலசிங்கம் ஞாபகார்த்த கேடயத்துக்கான கிரிக்கெட் போட்டி இன்றையதினம் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மைதானத்தில் இடம்பெற்றிருந்தது. 50 ஓவர்களைக் கொண்டிருந்ததாக அமைந்திருந்த இந்தப்போட்டியில் ஆனந்த கல்லூரி 5 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது. முதலில் துடுப்பெடுத்தாடிய யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி தனது ஆரம்ப வ…

  10. உலக லெவன் கிரிக்கெட் அணி பாகிஸ்தான் சென்றடைந்தது: வரலாறு காணாத பாதுகாப்பு பாகிஸ்தானுக்கு எதிராக டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக ஐ.சி.சி.யின் உலக லெவன் அணி பாகிஸ்தான் சென்றடைந்துள்ளது. இலங்கை அணி கடந்த 2009-ம் ஆண்டு பாகிஸ்தான் சென்று விளையாடியது. அப்போது தீவிரவாதிகள் இலங்கை வீரர்கள் சென்ற வாகனம் மீது தாக்குதல் நடத்தினார்கள். இதில் 6 இலங்கை வீரர்கள் காயம் அடைந்தனர். 6 பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் இரண்டு பொதுமக்கள் உயிரிழந்தனர். இச்சம்பவத்தால் இலங்கை அணி உடனடியாக பாகிஸ்தான் தொடரை ரத்து செய்து சொந்த நாடு திரும்பியது. அதன்பின் எந்த நாடும் பாக…

  11. தரப்பட்டுத்தல் பட்டியலில் முதலிடத்தைப் பிடிக்கும் ஜெர்மனி உலக காற்பந்தாட்ட சம்மேளனம் FIFA நேற்று வெளியிட்ட , தரப்படுத்தல் பட்டியலில் , ஜெர்மனி முதலிடத்தைப் பிடித்துள்ளது . செக் குடியரசுக்கு எதிராகவும் , நோர்வேக்கு எதிராகவும் , இந்த மாதம் விளையாடி வென்ற காரணத்தால் , அதற்கு முன்னணி வகிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது . லயனல் மெஸ்ஸியின் ஆர்ஜெண்டீனா , நான்காம் இடத்துக்கு இறங்கி உள்ளது. ரொனால்டோவின் போர்த்துக்கல் அணி , மூன்றாம் இடத்துக்கு முன்னேறி உள்ளது. பிரித்தானியாவின் சிறந்த அணியாகி உள்ள வேல்ஸ் ,இங்கிலாந்தை 15ம் இடத்துக்கு தள்ளி விட்டு , 13ம் இடத்துக்கு தாவி இருக்கின்றது. முதல் பத்து இடத்திலுள்ள அணிகளின் பட்டியல் இதோ : ஜேர்மனி , ப…

  12. முதலிடத்தை பிடிப்பது யார்? சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசையில், முதலிடத்தை பிடிப்பதற்கு கடும் போட்டி நிலவுகிறது. அணிகளுக்கான தற்போதைய தரவரிசையில் தென்னாபிரிக்கா 119 தரப்புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. அவுஸ்திரேலியா, இந்தியா ஆகிய அணிகள் தலா 117 தரப்புள்ளிகளுடன் சமநிலை வகித்தாலும், புள்ளிகள் அடிப்படையில் அவுஸ்திரேலியா (5,505) 2ஆவது இடத்திலும், இந்தியா (5,266) 3ஆவது இடத்திலும் உள்ளன. இந்த நிலையில், இந்திய – அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையே நடைபெறவுள்ள 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடரின் முடிவைப் பொறுத்து தரவரிசையில் மாற்றங்கள் ஏற்படும் வாய்ப்புள்ளது. இந்த தொடரை இந்தியா …

  13. பேட்டிங்கில் தோனியிடமிருந்து சில ஆச்சரியங்களை எதிர்பார்க்கலாம்: ரவி சாஸ்திரி இலங்கைக்கு எதிரான 5-வது ஒருநாள் போட்டி வெற்றிக்குப் பிறகு.. - படம்.| பிடிஐ. தோனி தனது ஆரம்பகால அதிரடி பேட்டிங்குக்கு எப்போது திரும்புவார் என்று அவரது ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கும் வேளையில் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி அதற்கான சாத்தியங்களை ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் எதிர்பார்க்கலாம் என்று சூசகமாகத் தெரிவித்துள்ளார். சமீபத்தில் இந்தியா டுடே நேர்காணலில் தோனி பற்றிய பலரது சந்தேகங்களுக்கு விடையளிக்கும் விதமாக ரவி சாஸ்திரி, “தோனி இவ்வாறு ஆடிவரும் போது நாம் எப்படி மாற்றி யோசிக்க முடியும்?” என்று 2019 உலகக்க…

  14. பலகோடி ரூபாய் பெறுமான குளிர்பான விளம்பர ஒப்பந்தத்தை மறுத்தார் விராட் கோலி பலகோடி ரூபாய் பெறுமான குளிர்பான விளம்பர ஒப்பந்தத்தை விராட் கோலி வேண்டாம் என்று மறுத்துள்ளார். தி இந்து (ஆங்கிலம்) நாளிதழுக்கு அவர் இந்தத் தகவலை உறுதி செய்த போது, காற்றடைக்கப்பட்ட எந்த ஒரு குளிர் பானத்தையும் தான் அருந்துவதில்லை என்ற காரணத்தினால் இந்த வாய்ப்பை மறுத்ததாகத் தெரிவித்தார். கோலி கடைபிடிக்கும் கொள்கைக்கு இது சற்றும் பிசகாமல் உள்ளது. அதாவது தான் எதை மற்றவர்களுக்குக் கூறுகிறோமோ அதை நாம் முதலில் கடைபிடிக்க வேண்டும் என்ற கொள்கைதான் அது. அவரே ஒருமுறை நிருபர் ஒருவரிடம் கூறும்போது, தன்னால்…

  15. UEFA தொடரில் முதல் வெற்றியை சுவைத்த பார்சிலோனா, செல்சி, ரியல் மட்ரிட் Getty UEFA சம்பியன் கிண்ணத்திற்கான கால்பந்து சுற்றுப்போட்டியானது இவ்வாரம் 13ஆம் மற்றும் 14ஆம் திகதிகளில் ஆரம்பமாகியது. போட்டியின் ஆரம்பம் முதலே ஒவ்வொரு அணியும் தமக்கு கிடைக்கப்பெறும் வாய்ப்புக்களை சிறந்த முறையில் பயன்படுத்தி அதிக எண்ணிக்கையிலான கோல்களைப் பெறும் முயற்சியில் ஈடுபட்டதை காணக்கூடியதாக இருந்தது. ஜரோப்பாவின் சிறந்த கால்பந்து கழகங்களிற்கிடையிலான UEFA இன் சம்பியன் கிண்ணத்திற்கான கால்பந்து சுற்றுப்போட்டி இவ்வாரம் 13ஆம் திகதி ஆரம்பமாகியது. இப்பருவகாலத்திற்கான சம்பியன்ஸ் கிண்ண சுற்றுப் போட்டியில் 13ஆம் திகதி 8 போட்டிகளும், 14ஆம் திகதி 6 போட்டி…

  16. "ஐ.பி.எல் ஃபைனலில் டிரெஸிங் ரூமில் பேசியது என்ன?" - கலகல ரோஹித் ஷர்மா ‛புனே அணிக்கு எதிரான ஐ.பி.எல் இறுதிப்போட்டியில் குறைவான ஸ்கோரே எடுத்திருந்தாலும், பாசிட்டிவ் சிந்தனையும் ஸ்கோர் போர்டை பற்றிக் கவலைப்படாத மனநிலையுமே, மும்பை அணி சாம்பியன் பட்டம் வெல்லக் காரணம்’ என்றார் மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் ஷர்மா. சென்னையின் எக்ஸ்பிரஸ் அவென்யு ஷாப்பிங் மாலில் உள்ள அடிடாஸ் நிறுவனத்தின் 'ஹோம் கோர்ட்' (home court) திறப்பு விழாவில் இந்திய அணியின் துணைக் கேப்டன் ரோஹித் ஷர்மா பேசியது: ‛‛சென்னைக்கு வருவது என் வீட்டுக்கு வருவதைப் போன்றது. இங்கு வருவதை நான் மிகவும் விரும்புகிறேன்" என்று சென்னையில் விளையாடுவதைப் பற்றி நெகிழ்வாகப் பேசினார். …

  17. பிரிமா கிண்ணத்திற்கான மோதலுக்கு வடக்கு, கிழக்கு அணிகளும் தயார் பிரிமா கிண்ணத்திற்கான மோதலுக்கு வடக்கு, கிழக்கு அணிகளும் தயார் பாடசாலை மட்ட கிரிக்கெட் வீரர்களின் திறமைகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் தேசிய மட்டத்திற்கு சிறந்த வீரர்களை உருவாக்கும் எண்ணக்கருவுக்கு அமைய இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் பூரண ஒத்துழைப்புடன் 11ஆவது தடவையாக நடைபெறவுள்ள 15 வயதிற்குட்பட்ட பிரிமா கிண்ண கிரிக்கெட் போட்டிகளின் மாகாண மட்டப் போட்டிகள் எதிர்வரும் 20ஆம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் ஆரம்பமாகவுள்ளன. இதன்படி, செப்டம்பர் முதலாம் திகதி முதல் நாடளாவிய …

  18. பாடசாலை கிரிக்கெட் வியூகத்தில் மஹேல, சிதத் வெத்தமுனி, திலின கன்தம்பி இலங்கை கிரிக்கெட் அணி அண்மைக் காலமாக சந்தித்து வருகின்ற தொடர் தோல்விகளுக்கு பாடசாலை மட்ட கிரிக்கெட்டில் காணப்படுகின்ற குறைபாடுகளே காரணம் என முன்னாள் வீரர்கள் பலர் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். அதிலும் குறிப்பாக, இலங்கை அணி அண்மைக்காலமாக சந்தித்து வருகின்ற தோல்விகளுக்கு பாடசாலை கிரிக்கெட்டும் பொறுப்புக்கூற வேண்டும் எனவும், பாடசாலை மட்டத்தில் விளையாடுகின்ற வீரர்கள் பொருத்தமான முறையில் திறமைகளை அடிப்படையாகக் கொண்டு அடையாளம் காணப்படாமை போன்ற காரணிகள் கிரிக்கெட் விளையாட்டு இவ்வாறு பின்னடைவை சந்திக்க காரணியாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு வந்தன. இந்நி…

  19. அயர்லாந்துடன் இன்று மோதல்:புத்துயிர் பெறுமா மே.இ.தீவுகள் அணி; மீண்டும் களமிறங்குகிறார் அதிரடி வீரர் கிறிஸ் கெயில் கிறிஸ் கெயில் - படம்: விவேக் பென்ரே அயர்லாந்து - மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் போட்டி பெல்பாஸ்ட் நகரில் இன்று நடக்கிறது. இப்போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்காக கிறிஸ் கெயில் நீண்ட நாட்களுக்குப் பிறகு களம் இறங்குகிறார். மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணி, தற்போது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை அந்த அணி இழந்தபோதிலும், ஒரு டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றது கிரிக்கெட் உலகில் சற்று தாக்கத்தை …

  20. கோலியைச் சீண்டிய ஆஸ்திரேலிய பத்திரிகையாளர்... பதிலடிகொடுத்த இந்தியா, பாகிஸ்தான் ரசிகர்கள்! பாகிஸ்தானில், நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஐ.சி.சி அனுமதியுடன் சர்வதேசப் போட்டிகள் நடைபெறுகின்றன. இந்நிலையில், இந்திய அணியின் கேப்டன் கோலியை, ஆஸ்திரேலிய பத்திரிகையாளர் ஒருவர் துப்புரவுப் பணியாளர் எனச் சீண்ட, அதற்கு இந்தியா, பாகிஸ்தான் ரசிகர்கள் இணைந்து தக்க பதிலடிகொடுத்துவருகின்றனர். பாகிஸ்தானில் நடைபெற்ற தீவிரவாதிகளின் தாக்குதலுக்குப் பிறகு, அங்கு சர்வதேசப் போட்டிகள் நடைபெறாமல் இருந்துவந்தது. இந்நிலையில், அங்கு மீண்டும் போட்டிகளை நடத்துவதற்கு பாகிஸ்தான் கடுமையான முயற்சி எடுத்தது. இதன் பலனாக, தற்போது பாகிஸ்தானில் அந்த அணிக்கு எதிராக, டுபிளெசிஸ் தலைமை…

  21. மெஸ்ஸிக்கு இது முதல் கோல்... நம்பமுடிகிறதா? சாம்பியன்ஸ் லீக் அப்டேட்! பல்வேறு நாடுகளைச் சேர்ந்த, உலகின் டாப் மோஸ்ட் கால்பந்து க்ளப்புகள் கலந்துகொள்ளும் 2017-18 சீஸனுக்கான சாம்பியன்ஸ் லீக் தொடரின் முதல் சுற்று நேற்று தொடங்கியது. ஸ்பெயினின் பார்சிலோனா, ஃபிரான்சின் பாரீஸ் செயிண்ட் ஜெர்மைன் (பிஎஸ்ஜி), ஜெர்மனியின் பேயர்ன் முனிச், இங்கிலாந்தின் மான்செஸ்டர் யுனைடெட் மற்றும் செல்சீ அணிகள் தொடக்க ஆட்டத்திலேயே பட்டையைக் கிளப்பின. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இத்தாலியின் யுவெண்டஸ் அணி, பார்சிலோனாவிடம் மண்ணைக் கவ்வியது.ஸ்பெயினின் அட்லெடிகோ மாட்ரிட் மற்றும் இத்தாலியின் ரோமா அணிகளுக்கிடையான ஆட்டம் டிராவில் முடிந்தது. பார்சிலோனா சூப்பர் ஸ்டார் லியோனல் மெஸ்ஸி, தன் கரி…

  22. எத்தனை காயம், எத்தனை தோல்வி... ஆனாலும், இவன் ஓய்வதில்லை... நடால் எனும் கம்பேக் நாயகன்! #FedalSlam #Nadal ரஃபேல் நடால் - டென்னிஸ் உலகம் போற்றும் ஒரு மாபெரும் வீரன். 16-வது கிராண்ட் ஸ்லாம் பதக்கத்தை வென்று, சரித்திரம் படைக்க முன்னேறிக்கொண்டிருக்கிறான் அந்தப் போராளி. சீனியர் டென்னிஸ் போட்டிகளில் கால் பதித்து 16 ஆண்டுகளில் 16 பட்டங்கள். போதாக்குறைக்கு 2 ஒலிம்பிக் தங்கங்கள் வேறு! மொத்த உலகமும் இன்று அவரின் வெற்றியை உச்சிமுகர்ந்து கொண்டிருக்கிறது. நாமும் வெறும் வெற்றிப் பாடல்கள் பாடிக்கொண்டிருந்தால் அந்த நாயகனின் வலியும் போராட்டமும் கண்காணாமல் போய்விடும். காரணம் நடாலின் வாழ்க்கை டென்னிஸ் வீரர்களுக்கு மட்டுமல்ல, காயமும் தோல்வியும் ஆட்கொண்ட ஒவ்வொர…

  23. தென் ஆபி­ரிக்­காவின் மூவகை கிரிக்கெட் அணி­க­ளுக்கும் டு ப்ளெசிஸ் தலைவர் மூவகை சர்­வ­தேச கிரிக்கெட் போட்­டி­க­ளிலும் தென் ஆபி­ரிக்க கிரிக்கெட் அணித் தலை­வ­ராக பவ் டு ப்ளெசிஸ் பதவி வகிக்­க­வுள்ளார். ஏ. பி. டி வில்­லிர்ஸைத் தொடர்ந்து சர்­வ­தேச ஒருநாள் கிரிக்­கடெ் அணியின் தலை­வ­ராக டு ப்ளெசிஸ் நிய­மிக்­கப்­பட்­டதை அடுத்து இது உறு­தி­யா­கி­யுள்­ளது. ஏற்­க­னவே தென் ஆபி­ரிக்­காவின் டெஸ்ட் அணித் தலை­வ­ராக கடந்த வருடம் ஆகஸ்ட் மாதத்­திலும் சர்­வ­தேச இரு­பது 20 கிரிக்கெட் அணியின் தலை­வ­ராக 2013 பெப்­ர­வ­ரி­யி­லி­ருந்தும் பவ் டு ப்ளெசிஸ் பதவி விகித்­து­வ­ரு­கின்றார். 2019 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்­டி­க­ளிலும் தென் ஆபி­ரிக்கா அணியைத் தலை­வ­ரா…

  24. இலங்கை கிரிக்கெட் மைதானத்தில் இருந்து முரளீதரன் பெயர் நீக்கம் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைLAKRUWAN WANNIARACHCHI/AFP/GETTY IMAGES Image captionமுத்தையா முரளீதரன் (வலது) இலங்கையில் கண்டி மாவட்டத்திலுள்ள பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் பொறிக்கப்பட்டிருந்த முன்னாள் இலங்கை சுழல் பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனின் பெயர் அகற்றப்பட்டுள்ளதாக…

  25. பாகிஸ்தானுக்கு வீரர்களை அனுப்பி பலிக்கடாவாக்க ஒருபோது தயாரில்லை ; தயாசிறி பாகிஸ்தானுடான இலங்கையின் கிரிக்கெட் தொடரானது டுபாயிலேயே நடைபெறவுள்ளது. எமது வீரர்களை அங்கு பலிக்கடாவாக்க நாங்கள் ஒருபோதும் தயாரில்லையென இணை அமைச்சரவைப்பேச்சாளரும் விளையாட்டுத்துறை அமைச்சருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது இணை அமைச்சரவைப் பேச்சாளர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில், கேள்வி: பாகிஸ்தான் அணியுடன் விளையாட இலங்கை…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.