விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7879 topics in this forum
-
டோர்ட்மன்ட் அரங்கில் ரியல் மெட்ரிட் சாதனை டோர்ட்மன்ட் அரங்கில் ரியல் மெட்ரிட் சாதனை UEFA சம்பியன்ஸ் கிண்ணத்திற்கான கால்பந்து சுற்றுப் போட்டியில் பலப்பரீட்சை நடாத்திய ரியல் மெட்ரிட் அணி, ரொனால்டோ மூலம் பெறப்பட்ட இரு கோல்களினால் டோர்ட்மன்ட் (Dortmund) அணிக்கு எதிராக 3-1 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இவ்வெற்றியின் மூலம் டோர்ட்மன்ட் கழகத்தின் மைதானத்தில் இறுதியாக விளையாடிய 7 போட்டிகளின் பின்னரான தனது முதல் வெற்றியை ரியல் மெட்ரிட் அணி பதிவு செய்துள்ளது. UEFA சம்பியன் கிண்ணத்திற்கான கால்பந்து சுற்றுப் போட்டியின் இரண்டாவது கட்ட…
-
- 0 replies
- 771 views
-
-
சாம்பியன் லீக்: மான்செஸ்டர் யுனைடெட், பிஎஸ்ஜி வெற்றி; அட்லெடிகோ மாட்ரிட் அதிர்ச்சி தோல்வி ஐரோப்பிய சாம்பியன் லீக் கால்பந்து தொடரில் மான்செஸ்டர் யுனைடெட், பிஎஸ்.ஜி, யுவுான்டஸ் அணிகள் வெற்றி பெற்றன. அட்லெடிகோ மாட்ரிட் அதிர்ச்சி தோல்வியடைந்தது. ஐரோப்பிய நாடுகளில் விளையாடும் முன்னணி கால்பந்து கிளப் அணிகளுக்கு இடையில் ஐரோப்பிய சாம்பியன் லீக் போட்டிகள் நடத்தப்படும். ஒவ்வொரு வாரமும் போட்டிகள் நடைபெறும். நேற்று 7 லீக் ஆட்டங்கள் நடைபெற்றது. ஒரு போட்டியில் அட்லெடிகோ மாட்ரிட் - செல்சியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் 2-1 என செல்சியா வெற்றி பெற்று அட்லெடிகோ மாட்ரிட் அணிக்கு…
-
- 1 reply
- 332 views
-
-
ஓட்டங்களை மட்டுமல்லாது விருதுகளையும் அள்ளிகுவித்த குமார் சங்கக்கார! பருவக்கால இறுதிக்கு பின்னர் முதல் தர கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறவுள்ள பெரும் மதிப்புக்குரிய துடுப்பாட்ட ஜாம்பவான் குமார் சங்கக்கார, ஆண்டுக்கான சிறந்த வீரர், ஆண்டுக்கான உறுப்பினர் தெரிவு சிறந்த வீரர், சில்வஸ்டர் கிளார்க் லார்ஜ் ரம் முமன்ட்த்துக்கான விருது, Kia(கிய) ஆண்டுக்கான சிறந்து துடுப்பாட்ட வீரருக்கான விருது மற்றும் வீரர்களின் ஆண்டுக்கான சிறந்த வீரர் ஆகிய ஐந்து உயரிய விருதுகள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளார். அத்துடன் 39வயதான குமார் சங்கக்கராவுக்கு, சாரே கழகத்தின் தலைவர் ரிச்சர்ட் தொம்சனினால் வாழ்நாள் உறுப்பினருக்கான கேடயம் ஒன்றும் வழங்கி கௌரவிக்கபட்டார் அதேநேரம…
-
- 2 replies
- 942 views
-
-
இங்கிலாந்து கிரிக்கெட் அணி வீரர் பென் ஸ்டொக்ஸ் கைது இங்கிலாந்து கிரிக்கெட் அணியின், டெஸ்ட் போட்டிகளுக்கான உப தலைவர் பென் ஸ்டொக்ஸ் கைது செய்யப்பட்டுள்ளார். சகலதுறை வீரரான பென் ஸ்டொக்ஸ், பிரிஸ்டலில் உள்ள இரவு விடுதியொன்றில் ஒருவரை தாக்கிக் காயப்படுத்திய சந்தேகத்தின் பேரிலேயே கைது செய்யப்பட்டுள்ளார். மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான மூன்றாவது ஒரு நாள் சர்வதேசப் போட்டியில் இங்கிலாந்து வெற்றியீட்டியுள்ள நிலையில், பென் ஸ்டொக்ஸ் கைதாகியுள்ளார். பென் ஸ்டொக்ஸூம் அவருடன் இருந்த இங்கிலாந்து அணி வீரரான அலெக்ஸ் ஹேல்ஸூம் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக நாளை (27) இடம்பெறவுள்ள போட்டியில் விளையாடும் வாய்ப்பைத் தவறவிட்டுள்…
-
- 1 reply
- 594 views
-
-
குத்துச்சண்டையில் வடமாகாணத்துக்கு ஏழு பதக்கங்கள் 1 தேசிய மட்ட குத்துச் சண்டைப் போட்டியில் வடமாகாணத்துக்கு ஒரு வெள்ளி பதக்கம், 6 வெண் கலப் பதக்கங்கள் என மொத்தமாக 7 பதக்கங்கள் கிடைத்தன. 43ஆவது தேசியமட்ட இரு பாலாருக்குமான குத்துச்சண்டைப் போட்டி மாத்தறை அக்குரல்ல குருப்பிட்டிய உள்ளக விளையாட்டரங்கில் நேற்றுமுன்தினம் நடைபெற்றது. வெள்ளிப் பதக்கத்தை 69 கிலோ எடைப் பிரிவில் வி.நிகாலஸ், வெண் கலப் பதக்கத்தை 56 கிலோ எடைப் பிரிவில் செந்தூரன், 75 கிலோ எடைப் பிரிவில் ரமேஷ், 81 கிலோ எடைப் பிரிவில் கேசவன், 91 கிலோ எடைப…
-
- 0 replies
- 370 views
-
-
இந்திய கிரிக்கெட் வீரர் கவாஸ்கரின் பெயரில் அமெரிக்காவில் விளையாட்டு மைதானம் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கரின் பெயரை அமெரிக்காவில் புதிதாக கட்டப்பட்டுள்ள விளையாட்டு மைதானத்திற்கு வைத்து கவுரவிக்க உள்ளனர். புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான சுனில் கவாஸ்கரின் பெயரை அமெரிக்காவில் கட்டப்பட்டுள்ள விளையாட்டு மைதானத்திற்கு வைத்துள்ளனர். இந்த மைதானம் அக்டோபர் மாதம் திறக்கப்பட உள்ளது. இந்தியாவில் உள்ள மைதானங்களுக்கு பொதுவாக அரசியல் தலைவர்களின் பெயர்களை மட்டுமே சூட்டுவர். …
-
- 0 replies
- 577 views
-
-
யார் இந்தப் பொடியன்... இந்திய கிரிக்கெட்டின் புது சென்சேஷன்! #ShubhangHegde கடந்த சனிக்கிழமை இரவு ப்ரோ கபடி பார்த்துவிட்டு சேனல்களை மாற்றியபோது, ஸ்டார் ஸ்போர்ட்ஸில் ஏதோ ஒரு கிரிக்கெட் போட்டியின் Presentation Ceremony நடந்துகொண்டிருந்தது. கர்நாடகா பிரீமியர் லீக் தொடரின் பரிசளிப்பு விழா. பெரும்பாலும் பார்த்துப் பழகிடாத முகங்கள். அப்போதுதான் ஒரு விருதை வாங்கிக்கொண்டு போன ஒரு வீரன், மீண்டும் இன்னொரு விருதினை வாங்கிச் சென்றான். பிஞ்சு முகம். 18-19 வயது இருக்கும் என்று நினைத்தேன். சிறிது நேரம் கழித்து, "The young promising player of the Tournament award goes to...Shubhang Hegde" - என்று வர்ணனையாளர் சாரு அறிவித்ததும், அதே இளம் வீரன் மூன்றாவது …
-
- 0 replies
- 698 views
-
-
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளின் புதிய விதிகள் அறிமுகம் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளின் புதிய விதிகள் அறிமுகம் சர்வதேச கிரிக்கெட் பேரவையின் (ஐ.சி.சி) புதிய விதிகள் இந்த மாதம் 28ஆம் திகதியிலிருந்து அமலுக்கு வருகின்றன. இதன்படி, ஐ.சி.சியினால் நடைமுறைக்கு கொண்டு வரவுள்ள நான்கு புதிய விதிகள் பங்களாதேஷ் – தென்னாபிரிக்கா மற்றும் இலங்கை – பாகிஸ்தான் டெஸ்ட் போட்டித் தொடர்களின்போது நடைமுறைக்கு வரும் என ஐ.சி.சி இன்று (26) அறிவித்தது. கிரிக்கெட்டின் புதிய விதிப்படி மைதானத்தில் வீரர்கள் ஒழுங்கீனமாக நடந்து கொண்டால் நடுவரால் வெளியேற்றப்படுவார்கள். அத்த…
-
- 1 reply
- 1.1k views
-
-
ஐபிஎல் ஏலத்தில் சிஎஸ்கேவுக்கு தோனி மீண்டும் கிடைப்பாரா? முன்னாள் வீரர் சந்தேகம்! Ads by Kiosked ஐபிஎல் ஏலத்தில் தோனியைத் தேர்வு செய்ய கடும் போட்டி நடக்கும் என்று முன்னாள் வீரர் நிகில் சோப்ரா கணித்துள்ளார். 2013-ஆம் ஆண்டில் இந்தியாவில் நடைபெற்ற ஐபிஎல் 20-20 கிரிக்கெட் போட்டியில் சூதாட்டம் நடைபெற்றதாக புகார் எழுந்தது. அதுதொடர்பாக விசாரணை நடத்த உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட முன்னாள் நீதிபதி முத்கல் குழு, தனது அறிக்கையை கடந்த ஆண்டு தாக்கல் செய்தது. குருநாத் மெய்யப்பன், ராஜ் குந்த…
-
- 0 replies
- 357 views
-
-
மெக்சிகோ நிலநடுக்கத்தில் உயிரிழந்த தீவிர ரசிகனான சிறுவனுக்கு ரொனால்டோ இரங்கல் மெக்சிகோவில் 7.1 ரிக்டர் அளவில் ஏற்பட்ட கடும் நிலநடுக்கத்தில் உயிரிழந்த தீவிர ரசிகனான சிறுவனுக்கு கிறிஸ்டியானோ ரொனால்டோ இரங்கல் தெரிவித்துள்ளார். மெக்சிகோவில் கடந்த சில நாட்களுக்கு முன் 7.1 ரிக்டர் அளவில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் சுமார் 300-க்கு மேற்பட்டோர் பலியானார்கள். ஒரு பள்ளிக்கூடம் இடிந்து விழுந்தது. இதில் 20-க்கும் மேற்பட்ட பள்ளிச் சிறுவர்கள் உயிரிழந்தனர். அதில் ஒருவன் சான்டியாகோ பிளோர்ஸ் மோராவும் ஒருவர். இவன் கிறிஸ்டியானோ…
-
- 0 replies
- 335 views
-
-
13ஆவது தடவையாகவும் சம்பியன் பட்டத்தை சுவீகரித்த யாழ் பல்கலைக்கழகம் University of Jaffna - Champions Inter University Football Championship 2017 (Photo Courtesy – MoraSpirit) பதுளை, வின்சன்ட் டயஸ் அரங்கில் நடைபெற்ற 2017ஆம் ஆண்டுக்கான பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான கால்பந்து சம்பியன்ஷிப் போட்டியில் பேராதனை பல்கலைக்கழகத்தை வீழ்த்தி யாழ்ப்பாண பல்கலைக்கழகம் கிண்ணத்தை சுவீகரித்தது. இறுதிப் போட்டியில் 1-0 என்ற கோல் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற யாழ் பல்கலைக்கழகம், 19 தடவைகள் நடைபெற்ற பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான கால்பந்து சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் 13 ஆவது தடவையாக சம்பியன் பட்டத்தை வென்றது குறிப்பிடத்தக்க விடயமாகும். யாழ் பல…
-
- 0 replies
- 430 views
-
-
அத்தபத்துவின் மகிழ்ச்சி என்ன தெரியுமா ? எனது கதவுகள் திறந்தே உள்ளன. எவரும் வந்து என்னுடன் பேசலாம். ஒரு வீதமாவது இலங்கை அணிக்கு என்னால் ஏதும் செய்ய முடியுமென்றால் அதுவே எனக்கு மகிழ்ச்சியென இலங்கை அணியின் முன்னாள் தலைவர் மார்வன் அத்தப்பத்து தெரிவித்துள்ளார். இந்திய சஞ்சிகையொன்றுக்கு வழங்கிய செவ்வியொன்றிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். ஒரு தடவை சிறப்பான திறமையை வெளிப்படுத்தினால் எல்லா காலமும் அவ்வாறே இருக்க முடியும் என நினைக்க முடியாது. அனைவரும் கஷ்டமான காலங்களை கடந்ததுதான் ஆக வேண்டும். விராட் கோலியாக இருந்தால் கூட அப்படித்தான். அனால், அதனைக் கடக்க கடினமாக உழைக்க வேண்டும், பயிற்சி பெற வேண்டும். பொறுமையுடன்…
-
- 0 replies
- 518 views
-
-
ஹார்திக் பாண்டியாவுக்கு சங்கா கூறியது என்ன ? இந்தியாவின் ஹார்திக் பாண்டியா மிகவும் சிறப்பான வீரர் என கிரிக்கெட் ஜாம்பவான் குமார் சங்ககாரா தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்தியா- அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் வெற்றிபெற்று தொடரைக் கைப்பற்றியுள்ளது. அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் ஹர்த்திக் பாண்டியா சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அவர் இத் தொடரில் 2 ஆவது முறையாக ஆட்ட நாயகன் விருதைப் பெற்றுள்ளார். நேற்று இடம்பெற்ற மூன்றாவது போட்டியில் ஹார்திக் பாண்டியா, 72 பந்துகளில் 78 ஓட்டங்களைப் பெற்று அணியின் வெற்றிக்கு வித்திட்டார். …
-
- 0 replies
- 636 views
-
-
தமிழ் குத்துச்சண்டை வீரர் போட்டியின் போது பலி ( காணொளி இணைப்பு ) சிங்கப்பூரில் இடம்பெற்ற குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்றிருந்த தமிழ் குத்துச்சண்டை வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார். சிங்கப்பூரில் ஆசியா பைட்டிங் சாம்பியன்ஷிப் போட்டி இடம்பெற்றது. இதில் பிரதீப் சுப்ரமணியன் என்ற தமிழ் வீரர் பங்கேற்றிருந்தார். இவர் பிரபல வீரர் ஸ்டீவன் லிம் என்பவரை எதிர்கொண்டார். இதில் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். இதன்போது பலத்த தாக்குதலுக்குள்ளான பிரதீப் மேடையிலேயே சரிந்து விழுந்த நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். வைத்தியசாலைக்கு செல்லும் போதே அவர் மாரடைப்பு மற்றும் மூச்சு திணறல் ஏற்ப…
-
- 0 replies
- 804 views
-
-
ஐஎஸ்எல் கால்பந்து தொடர் நவம்பர் 17-ல் தொடக்கம்: முதல் ஆட்டத்தில் கொல்கத்தா - கேரளா மோதல் ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் 4-வது சீசன் வரும் நவம்பர் 17-ல் தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் இரு முறை சாம்பியனான அட்லெடிகோ டி கொல்கத்தா, கடந்த முறை 2-வது இடம் பிடித்த கேரளா பிளாஸ்டர்ஸ் அணியுடன் மோதுகிறது. இந்த ஆட்டம் கொல்கத்தாவில் நடைபெறுகிறது. இம்முறை பெங்களூரு எப்சி, ஜாம்ஷெட்பூர் எப்சி ஆகிய இரு அணிகள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளன. இதனால் அணிகளின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. மொத்தம் 90 லீக் ஆட்டங்கள் நடைபெறும். அரை இறுதி ஆட்டங்கள் 2018-ம் ஆண்டு மார்ச் மாதம் 2-வது வாரம் நடைபெறுகிறது. இதற்கான தேதி மற்றும் இடங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட…
-
- 1 reply
- 624 views
-
-
நேற்று மாத்தறையில் கோலாகலமாக ஆரம்பம் விளையாட்டுத்துறை அமைச்சுடன் இணைந்து விளையாட்டுத்துறை அபிவிருத்தி திணைக்களம் ஏற்பாடு செய்துள்ள 43ஆவது தேசிய விளையாட்டு பெருவிழா நேற்று 22ஆம் திகதி முதல் நாளை 24ஆம் திகதி வரை மாத்தறை கொடவில விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமானது. சமாதானம், சகோதரத்துவம், நல்லிணக்கம் மற்றும் ஐக்கியம் என்ற தொனிப்பொருளில் நடைபெறவுள்ள இம்முறை தேசிய விளையாட்டுப் போட்டிகள் நேற்று பிற்பகல் 3.00 மணிக்கு ஆரம்பமானது. கடந்த வருடம் யாழ்.துரையப்பா மைதானத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்ற தேச…
-
- 3 replies
- 794 views
-
-
அதிசிறந்த காற்பந்தாட்ட வீரர் தெரிவுக்கு போட்டியிடும் மூவர் உலக காற்பந்தாட்ட சம்மேளனம் , இந்த வருடத்துக்கான அதி சிறந்த காற்பந்தாட்ட வீரரைத் தெரிவு செய்ய மூவரைப் பொறுக்கி இருக்கின்றது . இந்தத் தெரிவு விபரம் , கடந்த வெள்ளியன்று FIFA வினால் இலண்டனிலிருந்து அறிவிக்கப்பட்டது . இந்த மூவர் பெயர்ப் பட்டியலில் 25 வயதான பிரேசில் சுப்பர் ஸ்டார் நெய்மர், 32 வயதான போத்துக்கல் நட்சத்திர வீரர் கிறிஸ்டினோ ரொனால்டோ , 30 வயதான ஆர்ஜென்டீனிய நட்சத்திர வீரர் மெஸ்ஸி ஆகிய மூவரும் இந்தப் பட்டியலில் அடங்குகிறார்கள் . பார்சலோனா கழகத்துக்காக விளையாடிய நெய்மர் , காற்பந்தாட்ட சரித்திரத்தில் சாதனை படைக்கும் 266 மில்லியன் டொலர் தொகைக்கு , பாரிஸ் கழகமொன்றினால் …
-
- 0 replies
- 379 views
-
-
தோனியின் ஹெலிகாப்டர் ஷாட் ஏன் அவ்வளவு ஸ்பெஷல்?! சச்சின் என்றால் ஸ்ட்ரெய்ட் ட்ரைவ், ராகுல் டிராவிட் என்றால் லேட் கட், விராட் கோலி என்றால் கவர் ட்ரைவ், ரோஹித், ரிக்கி பாண்டிங் என்றால் புல் ஷாட்... இந்த வரிசையில் மகேந்திர சிங் தோனிக்கு... ஹெலிகாப்டர் ஷாட். நவீன கிரிக்கெட் உலகில் எல்லோரும் எல்லா ஷாட்களும் ஆடுகின்றனர் எனிலும், குறிப்பிட்ட சில ஷாட்களை அவர்கள் அடித்தால்தான் அழகு. சந்தோஷம். பிரமிப்பு. நியூஸிலாந்துக்கு எதிரான ஒரு போட்டியில் சச்சின் ஹெலிகாப்டர் ஷாட்டை அறிமுகப்படுத்தி இருக்கலாம், ஆனால் அதைப் பிரபலப்படுத்தியது தோனிதான். இன்றும் தோனி களத்தில் இருக்கும்போது கண்ணுக்குக் குளிர்ச்சியாக ஒரேயொரு ஹெலிகாப்டர் ஷாட் அடி…
-
- 0 replies
- 499 views
-
-
சர்வதேச கிரிக்கெட் சபையின் ஊழல் ஒழிப்புப் பிரிவினர் இலங்கையில் விசாரணை இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீது சுமத்தப்பட்ருக்கும் குற்றச்சாட்டுக்கள் குறித்து சர்வதேச கிரிக்கெட் சபை விசாரணைகளை ஆரம்பிக்கவுள்ளது. இதற்காக, சர்வதேச கிரிக்கெட் சபையின் ஊழல் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகள் இலங்கை வந்துள்ளனர். இது குறித்துத் தெரிவித்த சர்வதேச கிரிக்கெட் சபையின் இலஞ்ச ஊழல் தடுப்புப் பிரிவின் பொது முகாமையாளர் அலெக்ஸ் மார்ஷல், “கிரிக்கெட்டின் கௌரவத்தைத் தக்க வைத்துக்கொள்வதே இந்தப் பிரிவின் பொறுப்பு. அதற்காக, தேவைகள் ஏற்படின் விசாரணைகளையும் இப்பிரிவு நடத்தும். இலங்கை கிரிக்கெட் அணி குறித்து தற்போது விசாரணைகள் ஆரம்பமாகிவிட்டன. இதுவரை ஒரு சிலரிடம் விசாரணைகள் நடத…
-
- 0 replies
- 373 views
-
-
விராட் கோலியை சிறந்த கேப்டனாக வளர்க்கும் டோனி: வார்னர் பாராட்டு விராட் கோலியை சிறந்த கேப்டனாக வளர்த்து வரும் டோனியை செயலை ஆஸ்திரேலிய துணை கேப்டன் வெகுவாக பாராட்டியுள்ளார். இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்று 2-0 என முன்னிலையில் இருக்கிறது. இந்திய அணியின் முன்னாள் கேப்டன் டோனி விக்கெட் கீப்பராக செயல்பட்டு வருகிறார். என்றாலும் விராட் கோலிக்கு அதிக அளவில் உதவி வருகிறது. சில நேரங்களில் கேப்டன் போன்றே செயல்படுகிறார். டோனியின் செயல்…
-
- 0 replies
- 1k views
-
-
தொடர் வெற்றிகளால் லா லிகா தொடரில் பார்சிலோனா முன்னிலை தொடர் வெற்றிகளால் லா லிகா தொடரில் பார்சிலோனா முன்னிலை லா லிகா சுற்றுப் போட்டியின் ஜந்தாவது வர நிறைவில் தாம் ஆடிய அனைத்துப் போட்டிகளிலும் வெற்றி பெற்று 15 புள்ளிகளுடன் பார்சிலோனா அணி புள்ளிப் பட்டியலில் முன்னிலை வகிக்கின்றது. அதேவேளை லா லிகா சுற்றுப் போட்டியின் நடப்புச் சம்பியன் ரியல் மெட்ரிட் அணி நடைபெற்று முடிந்த ஜந்தாவது வாரப் போட்டியில் அதிர்ச்சித் தோல்வியுற்றதன் மூலம் புள்ளிப் பட்டியலில் 8வது இடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளது. மலாகா மற்றும் வெலன்ஸியா கழகங்களு…
-
- 0 replies
- 379 views
-
-
கவுன்டி கிரிக்கெட்டில் 2017-ல் மட்டும் 8 சதங்கள் விளாசி சங்ககரா அசத்தல் இலங்கை அணியின் முன்னாள் நடசத்திர வீரரான சங்ககரா 2017-ல் மட்டும் இங்கிலாந்து கவுன்டி போட்டியில் 8 சதங்கள் விளாசி சாதனைப் படைத்துள்ளார். இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர பேட்ஸ்மேன் சங்ககரா. 39 வயதாகும் இவர் கடந்த 2015-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 20-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை கொழும்பில் நடைபெற்ற இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியோடு சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார். ஆனால் இங்கிலாந்தில் நடைபெறும் கவுண்டி போட்டியில் 2017-ம் ஆண்டு வரை விளையாடுவேன் என்று அறிவித்தார். அதன்படி இ…
-
- 3 replies
- 1.1k views
-
-
மீண்டும் சாதனை படைத்தார் அனித்தா வட மாகாணத்தைச் சேர்ந்த அனித்தா ஜெகதீஸ்வரன் கோலூன்றிப் பாய்தலில் 3.48 மீற்றர் உயரத்தைத் தாவி மீண்டும் தேசிய சாதனை படைத்துள்ளார். அவர் இவ்வருடத்தில் மாத்திரம் தொடர்ச்சியாக 4 ஆவது முறையாகவும் தேசிய சாதனையை முறியடித்த வீராங்கனையாக வரலாற்றில் இடம்பிடித்தார். விளையாட்டுத்துறை அமைச்சுடன் இணைந்து விளையாட்டுத்துறைத் திணைக்களம் ஏற்பாடு செய்துள்ள 43 ஆவது தேசிய விளையாட்டு பெருவிழாவின் மெய்வல்லுனர் போட்டிகள் இன்று காலை மாத்தறை, கொடவில விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமாகின. போட்டிகளின் முதல் நாளான இன்று காலை நடைபெற்ற பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் வட மாகாணத்தைச் சேர்ந்த அனித்தா ஜெகதீஸ்வரன் 3.4…
-
- 4 replies
- 1.7k views
-
-
பிரமோதய விக்கிரமசிங்கவின் குற்றச்சாட்டுக்களை விசாரிக்குமாறு அணி வீரர்கள் கடிதம் இலங்கையின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரமோதய விக்ரமசிங்க சுமத்தியுள்ள குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணை நடத்துமாறு தினேஷ் சந்திமால், உபுல் தரங்க உட்பட இலங்கையின் நாற்பது முன்னணி வீரர்கள் கையொப்பமிட்டு இலங்கை கிரிக்கெட் சபையிடம் கடிதமொன்றைக் கையளித்துள்ளனர். இலங்கையில் அண்மையில் நடந்த இந்திய அணிக்கு எதிரான அனைத்துப் போட்டிகளிலும் இலங்கை படுதோல்வியடைந்தது. இந்நிலையில், தனியார் தொலைக்காட்சி சேவை ஒன்றின் நேர்காணலில், மேற்படி போட்டிகளின்போது சந்தேகத்துக்கு இடமான சில அசாதாரண நிகழ்வுகளைக் காண முடிந்தது என்று தெரிவித்திருந்தார். போட்டிக்கு முன்ன…
-
- 0 replies
- 310 views
-
-
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் இந்தியா முதலிடம் ஆஸ்திரேலியா அணியுடனான ஒருநாள் தொடரில் 2-0 என்று முன்னிலை பெற்றுள்ள இந்திய அணி சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் முதலிடத்தை பிடித்துள்ளது. துபாய்: ஆஸ்திரேலியா அணியுடனான ஒருநாள் தொடரில் 2-0 என்று முன்னிலை பெற்றுள்ள இந்திய அணி சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் முதலிடத்தை பிடித்துள்ளது. இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்துள்ள ஆஸ்திரேலியா அணி ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது. சென்னையில் நடந்த முதல் போட்டியை இந்தியா…
-
- 0 replies
- 1k views
-