விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7860 topics in this forum
-
சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து இங்கிலாந்தின் வேய்ன் ரூனே ஓய்வு இங்கிலாந்தின் நட்சத்திர கால்பந்து வீரரான வேய்ன் ரூனே, சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். லண்டன்: சர்வதேச கால்பந்து போட்டிகளில் இங்கிலாந்து அணியின் முன்னணி வீரராக திகழ்பவர், வேய்ன் ரூனே. இங்கிலாந்து அணிக்காக அதிக கோல் அடித்த வீரர் என்ற பெருமையும் இவரையே சேரும். 31 வயதான ரூனே உள்ளூர் போட்டிகளில் எவர்டன் அணிக்காக கடந்த 2002 - 2004ல் விளையாடினார். பின்னர் பார்சிலோனா அணிக்காக 2004 - 2017ம் ஆண்டுவரை விளையாடினார். பார்…
-
- 1 reply
- 393 views
-
-
போல் நிலை: மைக்கேல் ஷூமாக்கரின் சாதனையை சமன் செய்தார் ஹாமில்டன் பெல்ஜியம் கிராண்ட் பிரிக்ஸ் பந்தயத்திற்கான தகுதிச் சுற்று முடிவில் லெவிஸ் ஹாமில்டன் போல் நிலையை அடைந்து ஷூமாக்கரின் சாதனையை சமன் செய்துள்ளார். ஜெர்மனியின் நாட்டைச் சேர்ந்த மைக்கேல் ஷூமாக்கர் பார்முலா 1 கார்பந்தயத்தில் முடிசூடா மன்னனாக திகழ்ந்தார். பனிச் சறுக்கின்போது காயம் ஏற்பட்டதால் கோமா நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உண்மையான உடல்நிலை குறித்து அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் இல்லை. இவர் பந்தயத்தில் கலந்து கொண்ட காலத்தில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். இதில் ஒன்று போல் நிலையை அடைதல். ஷூமாக்கர…
-
- 0 replies
- 248 views
-
-
மெஸ்சியை வீழ்த்தி, தலைசிறந்த வீரர் விருதை வென்ற ரொனால்டோ! ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பு, வருடத்தின் சிறந்த வீரரை ஒவ்வொரு ஆண்டும் தேர்ந்தெடுத்து விருது வழங்கி சிறப்பிக்கும். இந்த வருடத்தின் தலைசிறந்த வீரர் விருதை ரொனால்டோ பெற்றார். கால்பந்து உலகின் தலைசிறந்த வீரர்கள் பட்டியலில் போர்ச்சுகல் கேப்டனும், ரியல் மாட்ரிட் அணியின் நட்சத்திர ஆட்டக்காரருமான ரொனால்டோ -க்கு முக்கிய இடம் உண்டு. இந்த வருடம் தனது சிறப்பான ஆட்டத்தினால் ரியல் மாட்ரிட் அணியை தொடர்ந்து இரண்டாவது முறையாக சாம்பியன்ஸ் லீக் கோப்பையை கைப்பற்ற வைத்தார். இந்த தொடரில் மட்டும், அவர் 12 கோல் அடித்து ரசிகர்களை மகிழ்வித்தார். இந்த வருடத்திற்கான சிறந்த வீரர…
-
- 3 replies
- 603 views
-
-
பிரீமியர் லீக் முதல் இரண்டு வார முடிவில் கழகங்களின் நிலை ஆரம்பமாகியுள்ள இங்கிலாந்தின் மிகப் பெரிய தொடரான 2017/18ஆம் பருவகாலத்திற்கான பிரீமியர் லீக் சுற்றுப் போட்டிகள் தொடக்கம் முதலே சூடு பிடித்துள்ளதை இதுவரை இடம்பெற்றுள்ள போட்டிகளின் முடிவுகள் தெரியப்படுத்துகின்றன. புதுமுக வீரர்களுடன் களமிறங்கியுள்ள கழகங்கள் தொடக்கம் முதல் சவால் விடுப்பதை புள்ளிப் பட்டியல் காட்டுகின்றது. மொத்தம் 20 அணிகள் பங்கு கொள்ளும் இந்த சுற்றுப் போட்டிகள் இம்மாதம் 11ஆம் திகதி மிகவும் விறுவிறுப்பான ஒரு போட்டியுடன் ஆரம்பமானது. ஆதரவாளர்களின் பல்வேறுபட்ட எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியிலேயே இப்பருவகாலத் தொடர் ஆரம்பமாகியுள்ளது. இத்தாலி நாட்டின் ஒய்வு பெற்ற…
-
- 0 replies
- 356 views
-
-
ஆசிய ஆணழகனாக முடிசூடிய லூசன் புஷ்பராஜ் சுமார் 50 வருட வரலாற்றைக் கொண்ட ஆசிய ஆணகழகன் போட்டித் தொடரில் இலங்கைக்கு முதலாவது சம்பியன் பட்டத்தை வென்று கொடுத்து 2017ஆம் ஆண்டின் ஆசியாவின் சிறந்த ஆணழகனாக இலங்கையைச் சேர்ந்த லூசன் புஷ்பராஜ் இன்று மகுடம் சூடினார். ஆசிய ஆணழகன் மற்றும் உடற்தகுதி விளையாட்டு சம்மேளனத்தினால் நடாத்தப்படுகின்ற 51ஆவது ஆசிய ஆணழகன் போட்டிகள் (Asian Bodybuilding & physique Sports Championship-2017) கடந்த 20ஆம் திகதி தென்கொரியாவின் தலைநகர் சோலில் ஆரம்பமானது. இதில் இலங்கையைப் பிரிதிநிதித்துவப்படுத்தி ஆண்களுக்கான 100 கிலோ கிராமிற்கு அதிகமான எடைப்பிரிவில் கலந்துகொண்ட லூசன், முதலிடத்தைப் பெற்றுக்கொண்டார். …
-
- 0 replies
- 586 views
-
-
இலங்கை கராத்தே வரலாற்றில் புதிய சாதனை படைத்த கிழக்கு வீரர் சௌந்தரராஜா பாலுராஜுடனான இன் சிறப்பு நேர்காணல். சிறப்பு நேர்காணல் – பாகம் 01 தெற்காசிய கராத்தே தோ சம்மேளனம் நடாத்திய நான்காவது தெற்காசிய கராதே சம்பியஷிப் போட்டித் தொடரில் தங்கப் பதக்கம் வென்றதன் மூலம் தொடர்ச்சியாக 3 தங்கப் பதக்கங்களை வென்று இலங்கை கராத்தே வரலாற்றில் புதிய சாதனை படைத்த கிழக்கு வீரர் சௌந்தரராஜா பாலுராஜுடனான இன் சிறப்பு நேர்காணல். http://www.thepapare.com
-
- 0 replies
- 431 views
-
-
”நேற்று திருமணம், இன்று போட்டி” ; தோற்றது கவலையே அகில தனஞ்சய கண்டி பல்லேகலயில் நேற்று நடைபெற்ற போட்டியில் இந்திய அணி வென்றிருந்தாலும் ஆட்ட நாயகன் விருதை வென்றது இலங்கை அணியின் மந்திர சுழற்பந்துவீச்சாளர் அகில தனஞ்சயதான். காரணம் முக்கியமான கட்டத்தில் சீரான இடைவெளியில் ரோஹித் ஷர்மாவில் ஆரம்பித்த விக்கெட், விராட் கோஹ்லி, ராகுல், பாண்டியா, ஜாதேவ், அக்ஸர் பட்டேல் வரை நீண்டது. இலங்கை - இந்திய அணிகள் மோதிய இரண்டாவது ஒருநாள் போட்டி கண்டி பல்லேகலயில் நேற்று நடைபெற்றது. இந்தப்போட்டியில் இந்திய அணி 3 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட…
-
- 2 replies
- 1k views
-
-
கேள்விக்குறியாகும் இலங்கைக் கிரிக்கெட் விமல் சந்திரன் இலங்கை மற்றும் இந்தியா அணிகளுக்கிடையில் நடைபெற்ற மூன்று போட்டிகள் அடங்கிய தொடரில் இந்தியா அணி, மூன்றுக்குப் பூஜ்ஜியம் என்ற அடிப்படையில் இலங்கையணிக்கு வெள்ளையடிப்புச் செய்து தொடரை வெற்றி பெற்றுள்ளது. இலங்கை அணி இலங்கையில் வைத்துப் பெற்ற மோசமான தோல்வியாக இது அமைந்துள்ளது. இதற்கு முன்னர் அவுஸ்திரேலியா அணியுடன் 2002/03 கிரிக்கெட் பருவகாலத்தில் இலங்கை அணி, 3 போட்டிகளிலும் தோல்வியைச் சந்தித்திருந்தது. அதன் பின்னர் இலங்கை அணி மூன்று போட்டிகளிலும் தோல்விகளை இந்த தொடரில் சந்தித்துள்ளது. அவுஸ்திரேலியா தொடரின் தோல்விகள் மிக மோசமாக அமையவில்லை.…
-
- 3 replies
- 579 views
-
-
பாகிஸ்தான் - வேர்ல்ட் வெலன் அணிகள் மோதும் டி-20 போட்டிகள் அறிவிப்பு! #PAKvsWXI 2009-ம் ஆண்டில் இலங்கை அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து விளையாடிய போது தீவிரவாத தாக்குதல் நடைபெற்றது. இந்தத் தாக்குதலுக்குப் பிறகு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் நாடுகள் பாகிஸ்தானுக்குச் சென்று விளையாட மறுத்தன. பாகிஸ்தான் அணி கிரிக்கெட் நிர்வாகமும், தங்களது போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்திக்கொண்டிருந்தது. பாதுகாப்பு காரணங்களுக்காக பல்வேறு நாடுகள் பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து விளையாடுவதைத் தவிர்த்துக்கொண்டிருந்தது. சமீபத்தில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் அணி சாம்பியன் பட்டத்தை வென்றபிறகு, 'இனியாவது எங்கள் நாட்டிற்கு கிரிக்கெட் விளை…
-
- 0 replies
- 384 views
-
-
ஸ்டம்பிங்: குமார சங்ககராவின் உலக சாதனையை சமன் செய்தார் டோனி பல்லேகலேயில் நடைபெற்று வரும் 2-வது ஒருநாள் போட்டியில் இலங்கை தொடக்க வீரர் குணதிலகாவை ஸ்டம்பிங் செய்ததன் மூலம் உலக சாதனையை சமன் செய்துள்ளார் டோனி. இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டனாக செயல்பட்டு வருபவர் மகேந்திர சிங் டோனி. தனது சிறப்பான விக்கெட் கீப்பிங் பணியால் உலகளவில் பெயர் பெற்றவர். குறிப்பாக ஸ்டம்பிங் மற்றும் ரன்அவுட் செய்வதில் மிக வல்லவர். தம்புல்லாவில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியின் முடிவில் டோனி 298 போட்டிகளில் 98 பேரை ஸ்டம்பிங் செய்து அவுட்டாக்கியதன் ம…
-
- 0 replies
- 389 views
-
-
கெய்ல் அதிரடியை பின்னுக்குத் தள்ளிய மெக்கல்லம்-பிராவோ காட்டடி: கரிபியன் கிரிக்கெட்டில் ருசிகரம் ஷாட் ஆடும் மெக்கல்லம். - படம். | கெட்டி இமேஜஸ். பாசட்டெரில் நடைபெற்ற கரீபியன் பிரிமியர் லீக் டி20 போட்டிகளில் செயிண்ட் கிட்ஸ் அணியின் கிறிஸ் கெய்லின் அதிரடியை எதிரணியான டிரிபாங்கோ நைட் ரைடர்ஸ் வீரர்கள் மெக்கல்லம், டேரன் பிராவோ ஆகியோர் முறியடிக்கும் விதத்தில் காட்டடி தர்பாரில் ஈடுபட்டனர். முதலில் பேட் செய்த செயிண்ட் கிட்ஸ் அண்ட் நெவிஸ் பேட்ரியாட்ஸ் அணி 13 ஓவர்களாகக் குறைக்கப்பட்ட ஆட்டத்தில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்தது. கிறிஸ் கெய்ல் 47 பந்துகளில் 5 பவுண்டரிகள் 8 சிக்சர…
-
- 0 replies
- 340 views
-
-
மாலிங்கவின் ஆட்டம் குறித்து நிக் போத்தாஸ் மற்றும் கோஹ்லி ஆகியோரின் கருத்து அண்மைய காலங்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த தவறியிருக்கும் நட்சத்திர பந்து வீச்சாளர் லசித் மாலிங்க பற்றி இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் நிக் போத்தாஸ் மற்றும் இந்திய அணித் தலைவர் விராத் கோஹ்லி ஆகியோர் வெளிப்படையாக ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ளனர். மாலிங்க பற்றி பேசியிருந்த போத்தாஸ், இந்த வருடம் அவரின் பந்து வீச்சு மூலம் ஏற்படுத்தப்பட்டிருந்த 9 பிடியெடுப்புக்கள்த வறவிடப்பட்டிருந்ததையும், அவர் ஒரு நாள் அணிக்கு நீண்ட கால ஓய்வின் பின்னர் திரும்பி 7 விக்கெட்டுகளை மாத்திரமே வீழ்த்தியிருந்த…
-
- 0 replies
- 331 views
-
-
கேப்டன் பதவியில் இருந்து டி வில்லியர்ஸ் விலகல்! தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் டி வில்லியர்ஸ். கடந்த ஆறு வருடங்களாக தென் ஆப்பிரிக்க ஒருநாள் போட்டிகளுக்கு கேப்டனாகச் செயல்பட்டு வந்தவர், திடீரென கேப்டன் பதவியில் இருந்து விலகியிருக்கிறார். தற்போது ஓய்வில் இருக்கும் அவர், வருகிற அக்டோபர் மாதம் முதல் மீண்டும் அணிக்கு திரும்புவதாகவும், கேப்டனாக யார் நியமிக்கப்பட்டாலும் அவருடைய தலைமையின் கீழ் சிறப்பாக விளையாடுவேன் என்பதை தனது ட்விட்டர் கணக்கில் வீடியோவாகப் பதிவு செய்திருக்கிறார். சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற சாம்பினஸ் டிராபி தொடரில் டி வில்லியர்ஸ் தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணி மோசமான பின்னடைவைச் சந்தித்தது. தவிர, டி வில்…
-
- 0 replies
- 328 views
-
-
ஆஸ்திரேலிய வழியில் ஆடுகிறது இந்தியா; மாற்றத்துக்குக் காரணம் கோலி: ‘மிஸ்டர் கிரிக்கெட்’ புகழாரம் இந்திய அணி இப்போது கிரிக்கெட்டை ஆஸ்திரேலிய பாணியில் ஆடுகிறது, இந்த மாற்றத்துக்கு முக்கிய காரணம் கேப்டன் விராட் கோலிதான் என்கிறார் ஆஸ்திரேலியாவின் ‘மிஸ்டர் கிரிக்கெட்’ மைக் ஹஸ்ஸி. தி இந்து (ஆங்கிலம்) நாளிதழுக்கு முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் மைக் ஹஸ்ஸி கூறியதாவது: கடினமான ஆஸ்திரேலிய கிரிக்கெட் பண்பாட்டை இந்திய அணியும் கடைபிடிக்கத் தொடங்கியுள்ளது. கேப்டன் கோலி வெற்றிக்கான தீவிர வேட்கை கொண்டவர். கடந்த கால இந்திய அணியில் இத்தகைய தன்மைகளைப் பார்த்ததில்லை. கடினமாக ஆடிய இந்திய அணி…
-
- 0 replies
- 350 views
-
-
42 பந்துகளில் சதமடித்து அசத்திய அஃப்ரிடி! சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்றுவிட்ட பாகிஸ்தான் வீரர் ஷாகித் அஃப்ரிடி, இங்கிலாந்து உள்ளூர் டி20 தொடரில் 42 பந்துகளில் சதமடித்து அசத்தினார். டெர்பிஷைர் அணிக்கு எதிரான போட்டியில், ஹாம்ஷைர் அணிக்காக தொடக்க வீரராகக் களமிறங்கிய அஃப்ரிடி, 7 சிக்ஸர்கள் மற்றும் 10 பவுண்டரிகள் உதவியுடன் 43 பந்துகளில் 101 ரன்கள் குவித்தார். டி20 பிளாஸ்ட் தொடரின் காலிறுதிப் போட்டியான அதில், அஃப்ரிடியின் சதத்தின் உதவியால், ஹாம்ஷைர் அணி 8 விக்கெட் இழப்புக்கு 249 ரன்கள் குவித்தது. உள்ளூர் தொடரில் ஹாம்ஷைர் அணி குவித்த அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். 250 ரன்கள் என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய டெர்பி…
-
- 0 replies
- 352 views
-
-
நிறவெறி கருத்து: மன்னிப்பு கேட்ட பாய்காட் மேற்கிந்திய தீவுகள் வீரர்களுக்கு எதிராக நிறவெறி கருத்தை தெரிவித்தற்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுக் கொண்டார் பாய்காட். சமீபத்தில் எட்ஜ்பாஸ்டனில் பகலிரவு போட்டியின் போது கேள்வி பதில் ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது, இதன்போது விவ் ரிச்சர்ட்ஸ், சோபர்ஸ், கர்ட்லி ஆம்பரோஸ் ஆகியோர் சர் பட்டம் வழங்குவது தொடர்பாக கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த பாய்காட், மேற்கிந்தியதீவுகள் வீரர்களுக்கு இது பளபளப்பான கலர் காகிதங்களை சொரிவது போன்றாகும், எனக்கு இருமுறை மறுக்கப்பட்டது, ஒருவேளை நான் என் முகத்தை கறுப்பாக்கிக் கொண்டிருந்தால் கிடைத்திருக்கலாம் என தெரிவித்தார். …
-
- 0 replies
- 355 views
-
-
கோலியும் அனுஷ்காவும் இணைந்து இலங்கையில் முன்னெடுத்த காரியம் ( படங்கள் இணைப்பு ) இந்திய அணித் தலைவர் விராட் கோலியும் அவரது பெண் தோழியுடான அனுஷ்கா சர்மாவும் இணைந்து இலங்கையில் மரக்கன்று ஒன்றை நாட்டி வைத்த புகைப்படங்கள் இணையங்களில் உலாவி வருகின்றது. மரக்கன்றுகளை அவர்கள் தங்கியிருந்த ரிசோர்ட் ஒன்றில் நாட்டி வைத்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கைக்கு கோலி தலைமையில் கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டெஸ்ட் போட்டிளைக் கொண்ட டெஸ்ட் தொடரை வென்றுள்ளது இந் நிலையில் 5 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரில் முதலாவது போட்டியில் வெற்றிபெற்று 1-0 என முன்னிலை பெற்றுள்ள இந்திய அணி, ஒரு போட்டியைக் கொண்ட இருபதுக்கு -20 போட்டியிலு…
-
- 4 replies
- 635 views
-
-
உப்பு சப்பில்லாத போட்டிகள்... இந்தியாவில் கிரிக்கெட் மோகம் குறைகிறதா? #2MinRead சுரத்தே இல்லாமல் சென்றுகொண்டிருக்கிறது இந்தியா - இலங்கை இடையேயான கிரிக்கெட் தொடர். இதற்குக் காரணம், இந்தியா பலமான அணி என்பதல்ல; இலங்கை படுபலவீனமான அணியாக இருப்பதே. இலங்கை மட்டுமல்ல, வெஸ்ட் இண்டீஸ் அணியும் கிரிக்கெட் உலகில் பலவீனமான அணியாக இருக்கிறது. இவர்கள் மட்டுமல்ல, சமீப காலங்களில் பெரும்பாலும் ஒன் சைடு மேட்ச்சாகவே நடக்கின்றன. போர்க்குணம்கொண்டு கடைசி ஓவரின் கடைசிப் பந்து வரை போராடும் அணிகளும் இங்கே குறைவுதான். தோல்வியின் விளிம்பிலிருந்து மீண்டு, கடும் சவால் தரும் அணிகளையும் இங்கே காண முடியவில்லை. எளிதில் கணித்துவிடக்கூடிய மேட்ச்சாக அமைவதாலோ என்னவோ, கிரிக்கெட் மோக…
-
- 0 replies
- 277 views
-
-
மொனாக்கோ வீரர் கிலியன் பப்பேவை கடன் வாங்கும் பாரிஸ் செயின்ட்-ஜெர்மைன் நெய்மரை 1600 கோடி ரூபாய்க்கு வாங்கிய பாரிஸ் செயின்ட்-ஜெர்மைன், தற்போது மொனாக்கோ நட்சத்திரம் பப்பேவை லோனுக்கு வாங்க இருக்கிறது. பிரான்ஸ் நாட்டில் உள்ள கால்பந்து கிளப் அணிகளுக்கு இடையே நடைபெறும் முக்கியமான தொடர் லீக்-1. இந்த தொடரில் முன்னணி அணியாக பாரிஸ் செயின்ட்-ஜெர்மைன் (பி.எஸ்.ஜி.) விளங்குகிறது. இந்த அணி சுமார் 1600 கோடி ரூபாய் கொடுத்து பார்சிலோனா அணியில் விளையாடிய நெய்மரை வாங்கியது. நெய்மருக்காக பல கோடிகளை செலவழித்துள்ளதால் மற்ற வீரர்களை அந்த அணி ஒப்பந்தம் செய்ய விரும்பாது என்று எதிர்பார்க்கப்பட்டது. தற்போது நெய்மர், கவானி, டி ம…
-
- 0 replies
- 385 views
-
-
இலங்கை, வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் அணிகள் பாகிஸ்தான் பயணம்: 20 ஓவர் போட்டியில் விளையாடுகிறது இலங்கை மற்றும் வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் அணிகள் பாகிஸ்தான் சென்று 20 ஓவர் போட்டியில் விளையாடுகிறது. கராச்சி: 2009-ம் ஆண்டு இலங்கை கிரிக்கெட் அணி, பாகிஸ்தான் சென்று விளையாடிய போது மைதானத்துக்கு செல்லும் வழியில் அணியின் பஸ் மீது தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டு திடீர் தாக்குதல் நடத்தினார்கள். இதில் இலங்கை வீரர்கள் லேசான காயத்துடன் உயிர் தப்பினார்கள். அதன் பிறகு பெரிய அணிகள் எதுவும் பாகிஸ்தான் சென்று விளையாடவில்லை. 2015-ம் ஆண்டில் ஜிம்பாப்வே அணி மட்டும் ஒரு முறை சென்று விளையாடியது. எல்லா அணிகளும் செ…
-
- 0 replies
- 273 views
-
-
தெண்டுல்கரின் வரலாற்றுச் சாதனைக்கு அச்சுறுத்தலாக இருக்கும் அலஸ்டைர் குக் சச்சின் தெண்டுல்கரின் வரலாற்றுச் சாதனைகளுக்கு இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் அலஸ்டைர் குக் அச்சுறுத்தலாக இருந்து வருகிறார். ‘இந்திய கிரிக்கெட் கடவுள்’ என்று அழைக்கப்படும் சச்சின் தெண்டுல்கர் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 200 போட்டியில் விளையாடி 51 சதங்களுடன் 15921 ரன்கள் குவித்துள்ளார். 51 சதங்களும், 15921 ரன்களும் என்பது வரலாற்றுச் சாதனை. சச்சின் காலத்தில் விளையாடிய ரிக்கி பாண்டிங் 13378, கல்லீஸ் 1…
-
- 0 replies
- 1.2k views
-
-
உதைபந்தாட்டமும் இடக்குமுடக்கான கேள்விகளும் நடுவரின் சரியான தீரப்புக்களும் உதைபந்தாட்ட விதிமுறைகள் பலதும் மேலெழுந்தவாரியாக எப்போதும் ஒரேமாதிரியாக இருந்தாலும் உள்ளே சென்று பார்த்தால் அவ்வப்போது பல சிறிய திருத்தங்கள் செய்யப்பட்டிருக்கும். அவற்றை விளங்கிக்கொள்ளவும் அறிந்துகொள்ளவும் இந்திரியை ஒரு கேள்வி பதில் திரியாக ஆரம்பித்துள்ளேன். உங்களிடம் இருக்கும் கேள்விகளையும் இங்கே முன்வைக்கலாம். நகைச்சுவையாகவும் மற்றவர்களுக்கு உதவும் வகையிலும் இத்திரியைக் கொண்டுசெல்வதற்கு உங்கள் ஆதரவை வேண்டுகின்றேன். கேள்வி தண்டனை உதை சாதாரண 90 நிமிட விளையாட்டு நேரத்தில் விளையாட்டுவீரர் இலக்கம் 9 இனால் சரியானமுறையில் உதைக்கப்பட்ட தண்டனை உதை இலக்கு …
-
- 2 replies
- 412 views
-
-
தொப்பி வடிவில் மைதானம் பிபா உலகக் கிண்ணத்திற்கு தயாராகும் கட்டார் 2022ஆ-ம் ஆண்டு, பிபா உலகக் கிண்ணக் கால்பந்துத் தொடர் கட்டாரில் நடைபெறவுள்ளது. தீவிரவாதத்துக்கு கட்டார் ஆதரவு தெரிவிப்பதாகக் கூறி ஐக்கிய அரபு அமீரகம், சவூதி அரேபியா உள்ளிட்ட ஐந்து நாடுகள் கட்டார் உடனான உறவை முறித்துக்கொண்டுள்ளன. இந்தப் பிரச்சினையை தீர்ப்பதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்றுவருகிறது. இது ஒருபுறமிருக்க, எதிர்வரும் 2022ஆ-ம் ஆண்டு நடைபெறவிருக்கும் பிபா உலகக் கிண்ணக் கால்பந்துத் தொடருக்கான முன்னேற்பாடுகளை கட்டார் நாடு தொடங்கியுள்ளது. அதன் ஒருபகுதியாக, அரேபியத் தொப்பி வடிவிலான கால்…
-
- 0 replies
- 343 views
-
-
தோல்விகள் மூலம் நிறைய பாடம் கற்று விட்டேன்: ஷிகர் தவான் சொல்கிறார் தோல்விகள் மூலம் நிறைய பாடம் கற்று விட்டேன் என்று இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் தெரிவித்தார். தம்புல்லா: தோல்விகள் மூலம் நிறைய பாடம் கற்று விட்டேன் என்று இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் தெரிவித்தார். இந்தியா-இலங்கை அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் தம்புல்லாவில் நேற்று முன்தினம் இரவு நடந்த முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. ஷிகர் தவான்…
-
- 0 replies
- 307 views
-
-
இலங்கை கிரிக்கெட் அணிக்கான இனிப்பு பிஸ்கட் தடையும் ரசிகர்களின் கோபமும்! இலங்கை கிரிக்கெட் அணி தொடர்ந்து மோசமான தோல்விகளை சந்தித்து வருவதால் பொறுமையிழந்த ரசிகர்கள் நேற்றுமுன்தினம் நடைபெற்ற போட்டியின் முடிவில் தங்கள் எதிர்ப்பை காட்டிவிட்டனர். ஆத்திரமடைந்த ரசிகர்கள் இலங்கை வீரர்கள் சென்ற பஸ்ஸையும் மறித்து 'ஹூ' என கோஷமிட்டு தங்கள் எதிர்ப்பை காட்டியுள்ளனர். இதேவேளை இலங்கை வீரர்களுக்கு போட்டியின் இடைவேளையின் போது வழங்கப்படும் இனிப்பு பிஸ்கட்டை தடை செய்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்திய – இலங்கை அணிகள் மோதிய முதலாவது ஒருநாள் போட்டி தம்புள்ளையில் நேற்று முன்தினம் பகலிரவு போட…
-
- 0 replies
- 186 views
-