Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. இந்திய தொடர்: இலங்கை அணிக்கு சிறப்பு பந்துவீச்சு பயிற்சியாளராக சமிந்த வாஸ் நியமனம் இந்தியாவிற்கு எதிரான தொடருக்கான இலங்கை அணியின் சிறப்பு பந்து வீச்சு பயிற்சியாளராக சமிந்த வாஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட், ஐந்து ஒருநாள் கிரிக்கெட் மற்றும் ஒரேயோரு டி20 போட்டி கொண்ட தொடர்களில் விளையாடுவதற்காக இலங்கை சென்றுள்ளது. டெஸ்ட் தொடர் வருகிற 26-ந்தேதி காலேயில் தொடங்குகிறது. கடந்த முறை இந்தியாவிற்கு எதிராக இலங்கை அணி டெஸ்ட் தொடரை 1-2 என இழந்தது. சமீபத்தில் ஜிம்பாப்வே அணிக்கெதிராக ஒருநாள் தொடரை 2-3 என இழந்தது. இதனால் இலங்கை அணியின் பந்த…

  2. விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் மேட்ச் ஃபிக்ஸிங்? அதிர்ச்சியில் விளையாட்டு உலகம் டென்னிஸ் போட்டிகளில் விம்பிள்டன் போட்டிகள் மிகவும் பிரபலம். கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற போட்டியில், தற்போது மேட்ச் ஃபிக்ஸிங் நடந்துள்ளதாகப் புகார்கள் வந்துள்ளன. கடந்த வாரம் விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகள் முடிவடைந்தன. டென்னிஸ் உலகில் அதிக கௌரவமான இந்தத் தொடரில், ஃபிக்ஸிங் நடந்துள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்தப் போட்டியில் மட்டுமல்லாமல், ஃப்ரெஞ்சு ஓப்பன் தொடரிலும் இதே போன்று மேட்ச் ஃபிக்ஸிங் நடந்துள்ளதாக, டென்னிஸ் ஒருங்கிணைந்த பிரிவான டிஐயு-வுக்கு புகார்கள் வந்துள்ளன. கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் மட்டும் 53 புகார்கள் வந்துள்ளதாகக் கூறப்பட…

  3. உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா... மகளிர் கிரிக்கெட் அணி அசத்தல்! மகளிர் உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் இன்று ஆஸ்திரேலியா - இந்திய அணிகள் மோதின. இதையடுத்து, 36 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி, ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. டாஸை வென்ற இந்திய அணியின் கேப்டன் மித்தாலி ராஜ், அதிக ரன்களைக் குவிக்கும் எண்ணத்தோடு முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தார். இதையடுத்து களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீராங்கனைகளான ஸ்மிரிதி மந்தனா மற்றும் பூனம் ரவுத் முறையே 6 மற்றும் 14 ரன்கள் எடுத்தனர். பின்னர், களத்துக்கு வந்த கேப்டன் மித்தாலி ராஜ், பொறுமையாக ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். மித்தாலியுடன் ஜோடி சேர்ந்த ஹர்மன…

  4. முன்னேறினார் ரங்கண ஹேரத் இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் ரங்கண ஹேரத் ஐ.சி.சி.யின் டெஸ்ட் பந்துவீச்சாளர்களின் தரப்படுத்தலில் 2 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். ஐ.சி.சி. இன்று வெளியிட்டுள்ள டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களுக்கான தரவரிசைப்படி ரங்கண ஹேரத் 866 புள்ளிகளைப்பெற்று 2 ஆம் இடத்தைப் பிடித்துள்ளார். முதலாமிடத்தில் இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவீந்திர ஜடேஜா உள்ளார். இவர் 898 புள்ளிகளைப்பெற்றுள்ளார். தொடர்ந்து 3 ஆவது இடத்தை இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஷ்வின் பிடித்துள்ளார். இவர் 865 புள்ளிகளைப்பெற்றுள்ளார். இந்நிலையில், நடந்து முடிந்த டெஸ்ட் போட்டியில் ரங்கண 8 முற…

  5. இலங்கையை சிம்பாப்வே வீழ்த்தியதற்கான காரணத்தை கூறுகிறார் அஷ்வின் சிம்­பாப்வே அணி இலங்­கையை ஒருநாள் தொடரில் வீழ்த்­தி­யது கிரிக்­கெட்டின் ஆரோக்­கி­யத்­திற்கு நல்­லது என்று இந்­திய சுழற்­பந்­து­வீச்சாளர் ரவிச்­சந்­திரன் அஷ்வின் தெரி­வித்­துள்ளார். மும்­பையில் விளம்­பர நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அஷ்வின் கூறி­ய­தா­வது: சிம்­பாப்வே அணி இலங்­கையை வீழ்த்­தி­யதைப் பற்றிக் கூற வேண்­டு­மெனில், யார் வேண்­டு­மா­னாலும் வெல்­லலாம், யார் வேண்­டு­மா­னாலும் தோற்­கலாம் இப்­ப­டித்தான் கிரிக்கெட் ஆட்டம் போகும் என்றே கூறத் தோன்­று­கி­றது. நாளை ஆப்­கா­னிஸ்தான் வெற்றி பெறலாம். அப்­ப­டித்தான் ஒரு விளை­யாட்டு செல்ல வேண்டும். இது விளை­யாட்­டுக்கு ஆரோக்­கி­…

  6. ரோஜர் பெடரர் 8-ஆவது விம்பிள்டன் வரலாறு படைக்க வாய்ப்பு 4 படத்தின் காப்புரிமைJULIAN FINNEY/GETTY IMAGES இன்று ஞாயிற்றுக்கிழமை லண்டனில் நடைபெறவுள்ள விம்பிள்டன் இறுதிப் போட்டியில் ரோஜர் பெடரர் வெற்றிபெற்றால், விம்பிள்டன் வரலாற்றில் 8 முறை இந்த கோப்பை வென்ற முதல் ஆடவர் என்ற பெருமையைப் பெறுவார். மரின் சிலிக்கிற்கு எதிராக இன்று மோதும் ரோஜர் பெடரர் விளையாடும் 11வது விம்பிள்டன் இறுதி ஆட்டத்தில்,வெற்றிபெற்றால் 2000-ஆவது ஆண்டு பீட் சாம்ப்ராஸூம், 1889 ஆம் ஆண்டு வில்லியம்ஸ் ரென்ஷாவும் படைத்திருக்கும் சாதனையை முடியடித்து வரலாறு படைக்கலாம். படத்தின் காப்புரிமைGARETH FULLER - POOL/GETTY IMAGES கடந்த ஆண்டு ரோ…

  7. இலங்கை - சிம்பாப்வே அணிகளுக்கடையிலான டெஸ்ட் ஆரம்பம் ; நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற சிம்பாப்வே துடுப்பெடுத்தாடத் தீர்மானம் இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கிடையிலான டெஸ்ட் போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற சிம்பாப்வே அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்துள்ளது. இலங்கை மற்றும் சிம்­பாப்வே அணிகள் மோத­வுள்ள ஒரே ஒரு டெஸ்ட் போட்டி இன்று ஆரம்­ப­மா­க­வுள்­ளது. இலங்­கைக்கு சுற்றுப் பயணம் மேற்­கொண்­டுள்ள சிம்­பாப்வே அணி இலங்­கைக்கு எதி­ரான ஐந்து போட்­டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3–2 என வெற்­றி ­கொண்டு வர­லாற்று சாத­னையை நிகழ்த்­தி­யது. இந்­நி­லையில் இந்தத் தொடரில் தோற்­றதன் எதி­ரொ­லியாக இலங்கை அணியில் பல அதி­ரடி மாற்­றங்…

  8. டெஸ்ட் கிரிக்கெட்டை இங்கிலாந்து மதிக்கவில்லையா? - மைக்கேல் வான் விமர்சனத்தில் ஜோ ரூட் அதிர்ச்சி இங்கிலாந்து வீரர் ஜோ ரூட். | படம்: ஏ.பி. இங்கிலாந்து அணி வீரர்களுக்கு டெஸ்ட் கிரிக்கெட் மீது மரியாதை இல்லை என்று முன்னாள் கேப்டன் மைக்கேல் வான் வைத்த விமர்சனம் நடப்பு இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட்டை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. பிபிசி டெஸ்ட் மேட்ச் ஸ்பெஷலில் பேசிய மைக்கேல் வான், இங்கிலாந்து அணியின் மோசமான பேட்டிங் அந்த அணியின் வீரர்களுக்கு டெஸ்ட் போட்டியின் மீது மரியாதை இல்லை என்பதை காட்டுகிறது. “டி20 போட்டிகளில் விளையாடுவது போல் ஆடுகின்றனர்” என்று கடுமையாக விமர்சித்தார். 2-வது டெஸ்ட் போட்டியில் நேற்று 133 ரன…

  9. இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட்: தென்ஆப்பிரிக்கா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் தென்ஆப்பிரிக்கா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளது. கிறிஸ் மோரிஸ், ஆலிவர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இங்கிலாந்து - தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் 2-வது டெஸ்ட் இன்று நாட்டிங்காம் ட்ரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் தொடங்கியது. முதல் டெஸ்ட்டில் இடம்பெறாத தென்ஆப்பிரிக்க அணி கேப்டன் டு பிளிசிஸ் இந்த டெஸ்ட்டில் இடம்பிடித்தார். ஒழுங்கீனமாக…

  10. கோல்ஃப் வீராங்கனைகள் கவர்ச்சி ஆடைகள் அணிய தடை: மீறினால் 1000 டாலர் அபராதம் கோல்ஃப் விளையாட்டின்போது பெண்கள் லெக்கிங்ஸ், குட்டையான தளர்வான ஸ்கர்ட்ஸ் போன்ற ஆடைகளை அணியக்கூடாது. அப்படி அணிந்தால் 1000 டாலர் அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக பணக்கார விளையாட்டுகளில் கோல்ஃப் போட்டியும் ஒன்றாக திகழ்ந்து வருகிறது. கோல்ஃப் போட்டியில் அமெரிக்காவின் டைகர் உட்ஸ் அசைக்க முடியாத ஜாம்பவானாக திகழ்ந்தார். உலக பணக்கார விளையாட்டு வீரர்களில் ஒருவராகவும் திகழந்தார். ஆண்களைப் போல் கோல்ஃப் விளையாட்ட…

  11. காதலியின் முத்தத்தால் ஊக்கமருந்து தடைக்குள்ளான வீரர் காதலி கொடுத்த முத்தம் கார­ண­மாக அமெ­ரிக்­காவின் ஒலிம்பிக் சம்­பியன் கில் ரொபர்ட்ஸ் தடைக்குள்ளான சம்­பவம் அரங்­கே­றி­யுள்­ளது. அமெ­ரிக்­காவின் ஓட்டப் பந்­தய வீர­ரான கில் ரொபர்ட்ஸ் ரியோ ஒலிம்பிக்கில் 4X400 தொடர் ஓட்­டத்தில் தங்கப் பதக்கம் வென்றிருந்தார். அவர் கடந்த மார்ச் மாதம் ஊக்­க­ம­ருந்து பயன்­ப­டுத்­தி­யுள்­ளாரா என்­பதை பரி­சோ­தனை செய்­வ­தற்­காக அவரிடமிருந்து மாதிரி எடுக்­கப்­பட்­டது. அவ­ரிடம் எடுக்­கப்­பட்ட மாதி­ரி பரி­சோ­தனை செய்­யப்­பட்­டதில், தடை செய்­யப்­பட்ட மருந்­தான புரொ­பெ­னெ­சிட்-ஐ பயன்­ப­டுத்­தி­யமை தெரி­ய­வந்­தது. இதனால் கடந்த மே மாதம் 5ஆம் திக­தி­யி­லி­ருந்…

  12. யாழ். அரை மரதனில் தங்கம் வென்ற கிந்துஷன், சுடர்மதி இலங்கை பாட­சா­லைகள் விளை­யாட்டு விழாவின் ஓர் அம்­ச­மான அரை மரதன் போட்­டி­களின் வரி­சையில் யாழ்ப்­பா­ணத்தில் நடை­பெற்ற முதலாம் சுற்றின் முதலாம் கட்ட அரை மரதன் ஓட்டப் போட்­டியில் ஆண்கள் பிரிவில் வவு­னியா தமிழ் வித்­தி­யா­லய மாணவன் சிவ­நாதன் கிந்­துஷன் முதலாம் இடத்தைப் பெற்றார். பெண்கள் பிரிவில் முல்­லைத்­தீவு உடை­யார்­கட்டு மகா வித்­தி­யா­லய மாணவி சுப்­பி­ர­ம­ணியம் சுடர்­மதி வெற்­றி­பெற்றார். யாழ். துரை­யப்பா விளை­யாட்­ட­ரங்கின் நுழை­வா­யி­லுக்கு அருகில் நேற்­று­முன்­தினம் மாலை 4.30 மணிக்கு ஆரம்­ப­மான 21.5 கிலோ மீற்றர் தூரம்­கொண்ட அரை மரதன் ஓட்டப் போட்டி யாழ். நகர் ஊடாக க…

  13. பிரிட்டிஷ் பார்முலா1 கார்பந்தயம்: ஹாமில்டன் முதலிடம் சில்வர்ஸ்டோன் ஓடுதளத்தில் நேற்று நடந்த பிரிட்டிஷ் கிராண்ட்பிரியில் ஹாமில்டனின் 5-வது வெற்றியாக அமைந்தது. இந்த சீசனில் அவரது 4-வது வெற்றி இதுவாகும். வெற்றி பெற்ற ஹாமில்டனை மேலே தூக்கிப்போட்டு மகிழும் ரசிகர்கள். சில்வர்ஸ்டோன் : இந்த ஆண்டுக்கான பார்முலா1 கார்பந்தயம் உலகம் முழுவதும் 20 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. இதன் 10-வது சுற்றான பிரிட்டிஷ் கிராண்ட்பிரி அங்குள்ள சில்வர்ஸ்டோன் ஓடுதளத்தில் நேற்று நடந்தது. பந்தய தூரம் 306.196 கிலோ மீட்டர் ஆகும். இலக்கை நோக்கி 10 அணிகளை சேர்ந்த 20 வீரர்கள் சீறிப்பாய்ந்தனர். இதில் உள்ளூர் நாயகன் இங்கிலாந்தின் லீவிஸ் ஹாமில…

  14. டிராவிட், ஜாகீர்கான் அவமானப்படுத்தப்படுவதாக தொடரும் கண்டனக் குரல்கள் இந்திய கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக ஜாகீர் கானும், வெளிநாட்டு சுற்றுப் பயணங்களுக்கான பேட்டிங் ஆலோசகராக ராகுல் டிராவிட்டும் நியமனம் செய்யப்பட்டது தொடர்பான குழப்பம் தொடர்ந்து நீடித்து வருகிறது. படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionடிராவிட் மற்றும் ஜாகீர் இந்திய கிரிக்கெட் அணி தொடர்பான ஆலோசனை கமிட்டியில் சச்சின் டெண்டுல்கர், சவுரவ் கங்குலி மற்றும் விவிஎஸ் லட்சுமணன் ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர். கடந்த ஜுலை 11-ஆம் தேதியன்று இந்த கமிட்டி இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ரவி சாஸ்திரியையும், அணியின் பந்துவீச்…

  15. மொனாகோவின் தியேமௌ பகாயோகோவை ரூ. 337 கோடி கொடுத்து வாங்கியது செல்சியா மொனாகோவின் நடுகள வீரரான தியேமொள பகாயோகோவை 337 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளது பிரிமீயர் லீக் அணியான செல்சியா. பிரான்ஸ் கால்பந்து அணியின் நடுகள வீரர் தியேமௌ பகாயோகோ. 22 வயதான இவர் மொனாகோ கிளப் அணிக்காக விளையாடி வருகிறார். இந்த வருடத்திற்கான யூரோப்பியன் சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில் மொனாகோ அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரையிறுதி வரை முன்னேறியது. பிரான்ஸ் நாட்டில் நடைபெறும் கால்பந்து லீக் தொடரான லீக் 1-ல் சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது. இவரது ஆட்டத்தை பார்த்து இங்கிலீஷ் பிரிமீய…

  16. அதிர வைக்கும் இந்திய அணிப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியின் சம்பளம்! இந்தியக் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டிருக்கும் ரவி சாஸ்திரியின் ஆண்டு சம்பளம் பலரையும் வியக்கவைத்துள்ளது. கேப்டன் கோலியுடனான கருத்து வேறுபாடு காரணமாக, கும்ப்ளே இந்திய அணியின் பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகினார். சாம்பியன்ஸ் ட்ராபியுடனேயே கும்ப்ளேவின் பதவிக்காலம் முடிவதாக இருந்தது. ஆனால், மேற்கிந்தியத் தீவுகள் தொடருக்கும், கும்ப்ளேவே பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். தொடக்கத்தில் அதை ஏற்ற கும்ப்ளே, பின்னர் மறுத்துவிட்டார். இதன் காரணமாக, பயிற்சியாளர் இல்லாமலேயே மேற்கிந்தியத் தீவுகள் தொடரை விளையாடியது இந்தியா. இதையடுத்து, இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு சே…

  17. மிதாலி ராஜ் சதம்; ராஜேஸ்வரி அபார பந்து வீச்சு: நியூஸி.யை நொறுக்கி அரையிறுதியில் இந்தியா பவுலிங் நாயகி ராஜேஸ்வரி கெயக்வாட் விக்கெட்டை கொண்டாடுகிறார். | படம்.| ராய்ட்டர்ஸ். கேப்டன் மிதாலி ராஜ். | படம்.| ராய்ட்டர்ஸ். டெர்பியில் மிதாலி ராஜ் சதம், வேதா கிருஷ்ணமூர்த்தியின் இறுதிக்கட்ட அதிரடி மூலம் 265 ரன்கள் குவித்த இந்திய அணி பிறகு நியூஸிலாந்தை 79 ரன்களுக்குச் சுருட்டி உலகக்கோப்பை அரையிறுதிக்குள் நுழைந்தது. இந்திய அணி 186 ரன்களில் மிகப்பெரிய வெற்றியுடன் உலகக்கோப்பை அரையிறுதிக்குள் கம்பீரமாக நுழைந்தது. 2010-க்குப் பிற…

  18. விம்பிள்டன்: பெண்கள் ஒற்றையர் பிரிவில் வீனஸை வீழ்த்தி முகுருசா சாம்பியன் விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரில், பெண்கள் ஒற்றையர் பிரிவில் வீனஸ் வில்லியம்ஸை வீழ்த்தி முகுருசா சாம்பியன் பட்டம் வென்றார். இங்கிலாந்தின் லண்டன் நகரில் விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இன்று பெண்களுக்கான ஒற்றையர் பிரிவின் இறுதிப் போட்டி நடைபெற்றது. இதில் 10-ம் நிலை வீராங்கனையான 37 வயதான அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸும், 14-ம் நிலை வீராங்கனையான 23 வயதே ஆன ஸ்பெயின் நாட்டின் கார்பின் முகுருசாவும் பலப்பரீட்சை நடத்தினார்கள். முதல் …

  19. இன்று ஆரம்பிக்கிறது விம்பிள்டன் கோலாகலம் சர்வதேச டென்னிஸ் போட்டிகளில், முக்கியமான தொடராகக் கருதப்படும் விம்பிள்டன் சம்பியன்ஷிப் தொடரின் பிரதான சுற்று, இன்று ஆரம்பிக்கவுள்ளது. உலகின் முன்னணி வீரர்கள் பலரும், தங்களது திறமைகளை வெளிப்படுத்தக் காத்திருக்கின்றனர். 16ஆம் திகதிவரை இடம்பெறவுள்ள இந்தத் தொடரில், மொத்தமாக 31,600,000 ஸ்டேர்லிங் பவுண்ட்ஸ், பரிசுத் தொகையாக வழங்கப்படவுள்ளது. பிரதான தொடர் ஆரம்பிக்கும் இன்றைய தினமே, முக்கியமான வீரர்கள் பலரும் பங்குபற்றும் போட்டிகள் இடம்பெறவுள்ளன. ஆண்கள் ஒற்றையர் போட்டிகளில், தொடருக்கான தரப்படுத்தல்களில், அன்டி மரே, நொவக் ஜோக்கோவிச், ரொஜர் பெடரர், ரப…

  20. விசில் போடு: இரண்டாவது இன்னிங்ஸ்க்கு தயாராகும் சென்னை சூப்பர் கிங்ஸ் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மீது விதிக்கப்பட்ட 2 ஆண்டுகள் தடை இன்றுடன் முடிவடைகிறது. இதையடுத்து, தனது இரண்டாவது இன்னிங்சை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடங்குவது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுடெல்லி: இந்தியன் பிரீமியர் லீக் எனப்படும் ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர், ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அதிலும் மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அட்டகாச ஆட்டத்தில் கிரிக்கெட் ரசிகர்கள் சொக்கித்தான் போனார்கள். கேப்டன் தோனி தவிர சுர…

  21. குமார் சங்கக்கார விசாரணைக்கு உட்படுத்தப்படுவாரா? தமது தரப்பினர் மீது எழுந்திருக்கும் குற்றச்சாட்டுகள் குறித்து, வேண்டும் என்றால் இலங்கை கிரிக்கெட் சபை விசாரணைகளை நடத்தலாம் என்று இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் தற்பொழுது இங்கிலாந்து உள்ளூர் போட்டிகளில் விளையாடி வருபவருமான குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார். அண்மையில் நடந்த ஜிம்பாப்வேயுடனான ஒருநாள் தொடரில் இலங்கை அணி அதிர்ச்சித் தோல்வி அடைந்தது தொடக்கம் அணியில் அதிரடி மாற்றங்கள் பல இடம்பெற்றுள்ளன. அஞ்செலோ மெதிவ்ஸ் தலைமைப் பதவியில் இருந்து விலகியதோடு டெஸ்ட் மற்றும் மட்டுப்படுத்தப்பட்ட போட்டி அணிகளுக்கு வெவ்வேறு தலைவர்கள் நியம…

  22. NatWest t20 போட்டியில் சங்ககாராவின் துடுப்பாட்டம்.... Middlesex v Surrey at Lord's, Jul 13, 2017 http://www.espncricinfo.com/

  23. பிரச்சினை ஓய்கிறது: ஒருநாள் போட்டிக்கு திரும்பும் கெய்ல், பிராவோ, நரைன் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியத்துடன் ஏற்பட்ட மோதல் முடிவுக்கு வருவதால் கெய்ல், பிராவோ, சுனில் நரைன் ஆகியோர் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாட இருக்கின்றனர். வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்களான கிறிஸ் கெய்ல், வெயின் பிராவோ, கீரன் பொல்லார்டு, சுனில் நரைன் ஆகியோர் அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்துடன் மோதல் ஏற்பட்டதால், டி20 கிரிக்கெட் போட்டியை தவிர மற்ற விளையாட்டுகளில் பங்கேற்க முடியாமல் இருந்தனர். அதற்குக் காரணம் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியத்தின்படி ஒ…

  24. சொந்த மண்ணில் 300 விக்கெட்டுக்கள் வீழ்த்தி ஆண்டர்சன் சாதனை சொந்த மண்ணில் 300 விக்கெட்டுக்கள் வீழ்த்தி இங்கிலாந்து அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் சாதனைப் படைத்துள்ளார். நாட்டிங்காம் டிரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் இங்கிலாந்து - தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்கியது. டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்க அணி கேப்டன் டு பிளிசிஸ் பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி அந்த அணியின் டீன் எல்கர், ஹெய்னோ குன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். அணியின் ஸ்கோர் 18 ஆக இருக்கும்போது டீன் எல்கர் ஜேம்ஸ் ஆண்டர்சன் பந்தில்…

  25. 2011 உலகக்கோப்பையில் இந்தியாவிடம் இலங்கை தோல்வி: விசாரணை நடத்த ரணதுங்கா வலியுறுத்தல் 2011-ம் ஆண்டு நடந்த உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இலங்கை அணி இந்தியாவிடம் தோல்வியடைந்தது குறித்து விசரணை நடத்தப்பட வேண்டும் என முன்னாள் கேப்டன் ரணதுங்கா வலியுறுத்தி உள்ளார். கொழும்பு: மும்பை வான்கடே மைதானத்தில் கடந்த 2011-ம் ஆண்டு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி நடைபெற்றது. இதில் இந்தியா- இலங்கை அணிகள் மோதின. முதலில் ஆடிய இலங்கை அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 274 ரன்கள் குவித்தது. அதன்பின்னர் ஆடிய இந்திய அணியின் நட்சத்திர வீரர் சச்சின் தெண்டுல்கர் 18 ரன்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.