Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. பார்முலா 4 கார்பந்தய விபத்தில் இரண்டு கால்களையும் இழந்த இங்கிலாந்தின் இளம் வீரர் இங்கிலாந்தில் நடைபெற்ற பார்முலா 4 கார் பந்தயத்தின்போது ஏற்பட்ட பயங்கரமான விபத்தில் 18 வயதே ஆன இளம் வீரர் இரண்டு கால்களையும் இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இங்கிலாந்தின் சுர்ரே பகுதியைச் சேர்ந்தவர் பில்லி மாங்கர். கடந்த வாரம் பார்முலா 4 கார் பந்தயம் நடைபெற்றது. டோனிங்க்டன் பார்க் சர்க்யூட்டில் நடைபெற்ற இந்த போட்டியில் ஜே.எச்.ஆர். டெவ்லெப்மென்ட்ஸ் அணி சார்பாக பில்லி மாங்கர் பங்கேற்றார். எதிர்பாராத விதமாக இவர் ஓட்டிய கார் விபத்துக்குள்ள…

  2. சம்பியன் கிண்ணத்துக்கான விஷேட தூதுவராக குமார் சங்கக்கார சர்வதேச கிரிக்கெட் வாரியமானது, தற்போதைய காலத்தில் கிரிக்கெட்டில் ஜாம்பவன்களாக காணப்பட்டிருந்த எட்டு முன்னாள் வீரர்களை இந்த வருட கோடை காலத்தில் ஆரம்பமாகவிருக்கும் சம்பியன் கிண்ணத்திற்கு விஷேட தூதுவர்களாக நியமனம் செய்துள்ளது. எதிர்வரும் ஜூன் மாதம் 1 ஆம் திகதி தொடக்கம் 18 ஆம் திகதி வரை இங்கிலாந்து மற்றும் வேல்சின் முக்கிய மூன்று மைதானங்களில் நடைபெற இருக்கும் ஐ.சி.சி சம்பியன் கிண்ணத்திற்கான மாபெரும் மோதலிற்கு இலங்கை சார்பாக குமார் சங்கக்காரவும், பாகிஸ்தான் சார்பாக சஹீட் அப்ரிடியும், பங்களாதேஷ் அணியின் சார்பாக ஹபிபுல் பஷாரும் தொடரை நடத்தும் நாடான இங்…

  3. சம்பியன்ஸ் கிண்ணத்தில் இலங்கை அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள் யார்? அனைத்து கிரிக்கெட் ரசிகர்களுக்கும் திருவிழாவாக அமையவிருக்கும் இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் ஆரம்பமாகும் 2017ஆம் ஆண்டிற்கான சம்பியன்ஸ் கிண்ணத்தில், இலங்கை சார்பாக விளையாடப்போகும் 15 பேர் கொண்ட வீரர்கள் பட்டியல் வெளியிடப்பட இன்னும் சில நாட்களே எஞ்சியுள்ளன. இத்தருணத்தில், முக்கியமான இத்தொடரில் இலங்கையின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக விளையாட தகுதி உள்ள வீரர்களை பற்றி ஒரு விரிவான ஆய்வினை ThePapare.com மேற்கொள்கின்றது. கடந்த காலங்களில் அதிவலுவான ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களை உருவாக்கியதற்கு பெயர் சொல்லப்பட்ட ஒரு நாடாக இலங்கை…

  4. ரொனால்டோ ஹாட்ரிக் கோல்! அரை இறுதியில் ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் கால்பந்துப் போட்டியின் கால்இறுதியில், பேயர்ன் முனிச் அணியை வீழ்த்தி அரை இறுதிக்குள் நுழைந்துள்ளது, ரியல் மாட்ரிட் அணி. வெவ்வேறு லீக் போட்டிகளில் வென்ற அணிகளைத் தேர்வுசெய்து, சாம்பியன்ஸ் லீக் கோப்பைப் போட்டிகள் நடத்தப்பட்டுவருகின்றன. தகுதிச் சுற்றுகள் முடிந்துள்ள நிலையில், கால்இறுதிப் போட்டியில் ரியல் மாட்ரிட் அணியும் பேயர்ன் முனிச் அணியும் மோதின. முதல் கால்இறுதிப் போட்டியில் 2-1 என்ற கணக்கில் ரியல் மாட்ரிட் வென்றதால், இந்தப் போட்டியில் பேயர்ன் அணி கூடுதலாக இரண்டு கோல்கள் அடிக்கவேண்டிய நிலை ஏற்பட்டது. இதனிடையே, நள்ளிரவு நடந்த போட்டியில் இரு அணிகளும் மோதின. …

  5. ஸ்மித், கோலி இருவரில் யார் சிறந்த பேட்ஸ்மேன்? யார் சிறந்த கேப்டன்? நம்பர்கள் சொல்லும் ரகசியம் #DepthReport #3MinRead இரு ஜாம்பவான்கள். இரண்டு கோபக்கார இளைஞர்கள், இரண்டு நம்பர்1 பேட்ஸ்மேன்கள், இரண்டு கேப்டன்கள் - இனி கிரிக்கெட் உலகை ஆளப்போகும் அந்த இருவர் விராட் கோலி மற்றும் ஸ்டீவன் ஸ்மித். இருவரும் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் அல்ல. இதுவரையிலான எந்தவொரு ஜாம்பவான்களின் சாயலும் இல்லாமல் தனித்துத் தெரியும் ஜென் Z கிரிக்கெட் ஜாம்பவான்கள் இவர்கள். சச்சின் மாதிரி பேட்டிங் செய்யவும் தெரியும், கங்குலி போல கேப்டன்சியும் தெரியும். பிராட்மேன் போல வெளுக்கவும் முடியும், ஸ்டீவ்வாக் பாணியில் அணியை வழிநடத்தவும் முடியும். இப்படி காக்டெயிலாக வளர்ந்து நிற்கும் …

  6. 2017 சாம்பியன்ஸ் டிராபி வர்ணனையாளர்கள் குழு: ஐசிசி அறிவிப்பு கங்குலி. | கோப்புப் படம்.| கே.ஆர்.தீபக். 4 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திரும்பும் சாம்பியன்ஸ் டிராபி போட்டிகள் இங்கிலாந்தில் நடைபெறுகிறது, இதற்கான வர்ணனையாளர் குழுவை ஐசிசி அறிவித்துள்ளது. பிரண்டன் மெக்கல்லம், ரிக்கி பாண்டிங், கிரேம் ஸ்மித், குமார் சங்கக்காரா ஆகியோர்.சாம்பியன்ஸ் டிராபி தொடர் வர்ணனையில் அறிமுகமாகின்றனர். பாண்டிங், ஸ்மித் இருதரப்பு தொடரில் வர்ணனை செய்துள்ளனர், சாம்பியன்ஸ் டிராபியில் இதுவே முதல் முறை. மேலும் சஞ்சய் மஞ்சுரேக்கர், சவுரவ் கங்குலி, இயன் பிஷப், ஷான் போலக், ஷேன் வார்ன், ரமீஸ் ராஜா, அதார் அலி கான், மைக்கேல் ஸ்லேட்டர், ந…

  7. தோனிக்கு என்னதான் ஆச்சு... ஹெலிகாப்டர் ஷாட்லாம் எங்க போச்சு?#MSD இரண்டு உலகக்கோப்பைகள், ஒரு சாம்பியன்ஸ் டிராஃபி, ஆசிய கோப்பை, அயல் நாட்டில் பல வெற்றிகள். பாகிஸ்தானுக்கு எதிராக 148, இலங்கைக்கு எதிராக 183*, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 224. இதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். சச்சின் டெண்டுல்கருக்கு அடுத்தபடியாக தோனிக்கு இந்தியாவில் மாபெரும் ரசிகர் பட்டாளம் குவிந்ததற்கு முக்கிய காரணம் ஐபிஎல். சர்வதேச போட்டிகளில் அவர், அணியின் சூழ்நிலைக்கு ஏற்ப கியரை மாற்றிக்கொண்டிருப்பார். ஆனால் அதிரடி... சரவெடி எல்லாம் ஐபிஎல்லில் தான். எப்பேர்ப்பட்ட பவுலர்களையும் கலங்கடிக்கும் பேட்ஸ்மேன் தோனி . அது மட்டுமல்ல, மிகச்சிறந்த கேப்டனும் கூட. அவர் தலைமையில் தான் சென்…

  8. ஃபார்முக்குத் திரும்பிய தோனி... ஹர்ஷ் கோயங்காவை வறுத்தெடுத்த ரசிகர்கள்! ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த ஆட்டத்தில் புனே சூப்பர் ஜெயன்ட் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை வீழ்த்தியது. முதலில் விளையாடிய புனே அணி, 161 ரன்கள் எடுத்தது. அடுத்து, களமிறங்கிய ராயல்சேலஞ்சர்ஸ் அணி 134 ரன்கள் மட்டுமே எடுத்து, தோல்வியடைந்தது. நேற்றைய ஆட்டத்தில், புனே அணி வெற்றி பெற தோனி முக்கிய பங்காற்றினார். சால்ட்&பெப்பர் தளபதி @thalabathe கம்பேக்னா சும்மா நாப்பது அம்பது ரன் அடிச்சு பிச்சை எடுக்குறதில்ல, அம்புட்டு பேருக்கும் மரண பயத்த காட்டிட்டுப் போறதுதான் #தலைவண்டா 5:49 PM - 16 Apr 2017 …

  9. பக்ரைன் பார்முலா1 கார்பந்தயம்: செபாஸ்டியன் வெட்டல் முதலிடம் பக்ரைன் கிராண்ட்பிரி சகிர் ஓடுதளத்தில் நேற்றிரவு நடந்த போட்டியில் முன்னாள் சாம்பியன் ஜெர்மனியின் செபாஸ்டியன் வெட்டல் (பெராரி அணி) 1 மணி 33 நிமிடம் 53.374 வினாடிகளில் இலக்கை கடந்து, முதலிடத்திற்குரிய 25 புள்ளிகளை பெற்றார். சகிர் : இந்த ஆண்டுக்கான பார்முலா1 கார்பந்தயம் உலகம் முழுவதும் 20 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. இதன் 3-வது சுற்றான பக்ரைன் கிராண்ட்பிரி சகிர் ஓடுதளத்தில் நேற்றிரவு நடந்தது. பந்தய தூரம் 308.238 கிலோ மீட்டர் ஆகும். வழக்கம் போல் 10 அணிகளை சேர்ந்த 20 வீரர்கள் காரில் மின்ன…

  10. அடுத்த சீசன் ஆடப்போற சி.எஸ்.கேல இதெல்லாம் இருக்குமா? #CSKRewind ஐ.பி.எல் தொடங்கி ஒரு வாரமாகியும் சுரத்தே இல்லாமல் இருந்த நம் ஊர் கிரிக்கெட் ரசிகர்கள் இப்போதுதான் குஷி மோடிற்கு வந்திருக்கிறார்கள். காரணம், பி.சி.சி.ஐ அடுத்த ஆண்டு ஐ.பி.எல்லில் கலந்துகொள்ள சென்னை அணிக்கு விடுத்துள்ள அறிவிப்பு. சென்னை அணியின் உரிமையாளர் 'அடுத்த சீசனிலும் கேப்டன் தோனிதான்' என அறிவிக்க, ரசிகர்களுக்கு டபுள் ஆம்லேட் சாப்பிட்ட திருப்தி. சரி, ஒரு பெரிய பிரேக்கிற்குப் பிறகு சென்னை அணி ஆட வருகிறது. ஆனால் முன்பு இருந்த சில விஷயங்கள் அடுத்த ஆண்டும் இருக்குமா? ரசிகர்கள் பழையபடி விசில் போடுவார்களா என்பது பற்றிய பதிவுதான் இது. 'கேப்டன்' தோனி : ஐ.பி.எல் வரலாற…

  11. தேசியமட்ட சதுரங்கப் போட்டிக்கு கிளிநொச்சியிலிருந்து 49 மாணவர்கள் தெரிவு இலங்கை சதுரங்கச் சம்மேளனத்தின் 2017 ம் ஆண்டுக்கான தேசிய மட்ட இளையோர் சதுரங்கப் போட்டிக்கு கிளிநொச்சி மாவட்டத்தில் இருந்து 49 மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். கிளிநொச்சி மாவட்டச் சதுரங்கச் சங்கத்தின் ஒழுங்குபடுத்தலில் கிளிநொச்சி வலயக்கல்வி அலுவலகத்தின் ஆதரவுடன் கடந்த 11 ஆம் மற்றும் 12 ஆம் திகதிகளில் கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற கிளிநொச்சி மாவட்ட இளையோர் சதுரங்கப் போட்டிகளில் இவர்கள் தெரிவு செய்யப்பட்டனர். தெரிவுசெய்யப்பட்டவர்கள் 17 ஆம் திகதி தொடக்கம் 20 ஆம் திகதி வரை கொழும்பு டீ.எஸ். சேனநாயக்கா கல்லூரியில் நடைபெறவ…

  12. சென்னை அணிக்கு பிசிசிஐ அழைப்பு - மீண்டும் 'டாஸ் ' போடுகிறார் தோனி! சூதாட்டப் புகார் காரணமாக, சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு ஐபிஎல் தொடரில் பங்கேற்க இரு ஆண்டுகளுக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனால், கடந்த ஆண்டும் நடப்பு ஐபிஎல் தொடரிலும் சென்னை, ராஜஸ்தான் அணிகள் பங்கேற்கவில்லை. இந்த நிலையில், சஸ்பென்ட் செய்யப்பட்ட இரு அணிகளுக்கும், 2018-ம் ஆண்டு தொடருக்கான ‘Invitation To Tender for media rights -க்கு பிசிசிஐ அழைப்பு விடுத்துள்ளது. இதையடுத்து, சென்னை மற்றும் ராஜஸ்தான் அணி நிர்வாகங்கள் கடும் உற்சாகம் அடைந்துள்ளன. சென்னை அணி, இரு முறை ஐபிஎல் சாம்பியன். ராஜஸ்தான் அணியும் கோப்பையை ஒரு முறை வென்றுள்ளது. இந்த அணிகளுக்குத் தடை விதிக்கப்ப…

  13. 'என்னைத் தண்டித்தது போதும்' - மரியா ஷரபோவா உருக்கம்! முன்னணி டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவா, கடந்த ஆண்டு மெல்டோனியம் என்ற ஊக்கமருந்தைப் பயன்படுத்திய புகாரில் சிக்கி, டென்னிஸ் விளையாட இரண்டு ஆண்டுகள் தடைசெய்யப்பட்டார். தவறை ஒப்புக்கொண்டதால், அவரது தடைக்காலம் பின்னர் 15 மாதங்களாகக் குறைக்கப்பட்டது. அவரது தடைக்காலம் முடிந்து, வரும் 26-ம் தேதி ஜெர்மனியில் நடைபெற உள்ள 'Porsche Grand Prix' போட்டியில் கலந்துகொண்டு விளையாடப்போகிறார். ஐந்து முறை கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்ற ஷரபோவா, 'Porsche Grand Prix' தொடரில் வைல்டு கார்டுமூலம் தகுதிப் போட்டிகளில் கலந்துகொள்ளாமல், நேரடியாகக் கலந்துகொள்ளும் வாய்ப்பு வழங்கப்பட்டது. இதனை, டென்னிஸ் பி…

  14. ஊக்கமருந்து விவகாரத்தில் சிக்கிய ஆப்கானிஸ்தான் அதிரடி பேட்ஸ்மேன்: ஐ.சி.சி. சஸ்பெண்ட் செய்தது தடை செய்யப்பட்ட ஊக்கமருந்தை பயன்படுத்திய விவகாரத்தில் ஆப்கானிஸ்தான் அதிரடி பேட்ஸ்மேனான மொகமது சேஷாத்தை ஐ.சி.சி. சஸ்பெண்ட் செய்துள்ளது. ஆப்கானிஸ்தான் அணியின் முன்னணி பேட்ஸ்மேனும், விக்கெட் கீப்பருமாக திகழந்து வருபவர் மொகமது ஷேசாத். ஆப்கானிஸ்தான் அணிக்காக 2010-ம் ஆண்டில் அறிமுகமான சேஷாத், 58 ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ளார். இவருக்கு கடந்த ஜனவரி மாதம் 17-ந்தேதி துபாயில் உள்ள ஐ.சி.சி. அகாடமியில் ஊக்கமருந்து சோதனைக்காக மாதிரி …

  15. டோணியை பிடிக்காவிட்டால்... உங்களுக்கு மருத்துவர் தேவைப்படுகிறார் என அர்த்தம்... ரசிகர்கள் கலக்கல் டெல்லி: டோணி யின் ரசிகர்கள் அவருக்கு ஆதரவாக ஹேஷ்டேக்கை உருவாக்கி ஹேட்டர்களுக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர். ஏற்கனவே தோனியை அவமதிக்கும் நோக்கில் கருத்து பதிவிட்ட புனே அணி உரிமையாளரின் சகோதரர் ஹர்ஷ் கோயங்காவுக்கு தோனியின் மனைவி சாக்ஷி பதிலடி கொடுத்த நிலையில் தற்போது தோனி ரசிகர்கள் அவருக்கு ஆதரவாக ஒன்று சேர்ந்துள்ளனர். புனே அணியின் கேப்டன் பதவியில் இருந்து டோணி அண்மையில் நீக்கப்பட்டார். ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவன் ஸமித், அந்த அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். நடப்பு ஐபிஎல் தொடரில், முதல் ஆட்டத்தில் புனே அணி, மும்பை இந்தியன்ஸ் அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் …

  16. டிரான்ஸ்பர் தொகை 808 கோடி ரூபாய்: கால்பந்து வரலாற்றில் சரித்திரம் படைப்பாரா பவுலோ டைபாலா? அர்ஜென்டினாவின் இளம் வீரரான பவுலோ டைபாலாவை 808 கோடி ரூபாய் டிரான்ஸ்பர் தொகை கொடுத்து வாங்க கால்பந்து கிளப் அணிகள் தயாராக உள்ளன. ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில் நேற்று நள்ளிரவு நடைபெற்ற காலிறுதி போட்டியில் பார்சிலோனாவை யுவான்டஸ் 3-0 என வீழ்த்தியது. இதற்கு அர்ஜென்டினா அணியின் முன்கள வீரரான பவுலோ டைபாலா முக்கிய காரணமாக இருந்தார். முதல் இரண்டு கோல்களையும் இவர்தான் அடித்தார். 23 வயதான டைபாலா அர்ஜென்டினாவின் இன்ஸ்டிட்யூடோ டி கோர்டோபா கிளப்பில் 2011-ம் ஆண்டு தனது கால்பந்…

  17. சாம்பியன்ஸ் லீக்: 100 கோல்களைப் போட்டு கிறிஸ்டியானோ ரொனால்டோ சாதனை ரியல் மெட்ரிட் அணியின் நட்சத்திர கால்பந்தாட்ட வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ சாம்பியன்ஸ் லீக் கால்பந்தாட்டப் போட்டிகளில் 100 கோல்களைப் போட்டு சாதனை படைத்துள்ளார். சாம்பியன்ஸ் லீக் கால்பந்தாட்டப் போட்டித் தொடரின் பேயார்ன் மியுனிக் அணிக்கு எதிரான காலிறுதிப் போட்டியிலேயே அவர் இந்த சாதனையை எட்டினார். சாம்பியன்ஸ் லீக் கால்பந்தாட்டப் போட்டிகளின் முதலாவது காலிறுதிப் போட்டி ரியல் மெட்ரிட் மற்றும் பேயார்ன் மியுனிக் அணிகளுக்கு இடையில் நேற்று (12) நடைபெற்றது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் ரியல் மெட்ரிட் அணி வெற்றி பெற்றது…

  18. ஐரோப்பிய லீக் காலிறுதி முதல் லெக்: ரியல் மாட்ரிட், அட்லெடிகோ மாட்ரிட், மொனாகோ வெற்றி ஐரோப்பிய லீக் கால்பந்து தொடரின் காலிறுதி முதல் லெக்கில் ரியல் மாட்ரிட், அட்லெடிகோ மாட்ரிட், மொனாகோ அணிகள் வெற்றி பெற்றன. கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது 100-வது கோலை பதிவு செய்தார். ஐரோப்பிய நாடுகளில் உள்ள கால்பந்து கிளப் அணிகளுக்கு இடையிலான சாம்பியன்ஸ் லீக் தொடரில் பார்சிலோனா, ரியல் மாட்ரிட், அட்லெடிகோ மாட்ரிட், யுவான்டஸ், டார்ட்மண்ட், மொனாகோ, லெய்செஸ்டர் பெயர்ன் முனிச் ஆகிய 8 அணிகள் காலிறுதிக்கு தகுதி பெற்றன. காலிறுதியில் ஒவ்வொரு அணியும் எதிரணியை தங்களது சொந்த மைதானத்தில் ஒரு முறையும், எதிரணி …

  19. நம்ப முடிகிறதா!!! 4 பந்தில் 92 ரன்கள் விட்டுக்கொடுத்த வங்காளதேச பந்து வீச்சாளர் மோசமான தீர்ப்புகளை வழங்கிய நடுவர்களை பழிவாங்குவதற்காக வங்காள தேச பந்து வீச்சாளர் 4 பந்தில் 92 ரன்கள் விட்டுக்கொடுத்து மோசமான சாதனையை படைத்துள்ளார். வங்காள தேசத்தில் டாக்கா 2-வது டிவிசன் கிரிக்கெட் லீக் தொடர் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு போட்டியில் ஆக்சியோம் - லால்மதியா அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த லால்மதியா அணி 14 ஓவரில் 88 ரன்களில் சுருண்டது. ஆனால், நடுவர்கள் மோசமான தீர்ப்பு வழங்கியதால்தான் நாங்கள் 88 ரன்னில் சுருண்டோம் என்று அந்த அணி …

  20. ஒக். 1ம் திகதி முதல் சர்வதேச கிரிக்கெட் விதிமுறைகளில் அதிரடி மாற்றங்கள்! களத்தில் ஒழுங்கீனமாக நடந்துகொள்ளும் வீரரை நடுவர்களே களத்தை விட்டு வெளியேற்ற அனுமதியளிப்பது உட்பட, சர்வதேச கிரிக்கெட் போட்டி விதிமுறைகளில் சில முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. புதிய விதிமுறைகள் எதிர்வரும் ஒக்டோபர் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கிரிக்கெட் விளையாட்டின் விதிமுறைகளை நிர்ணயிக்கும் ‘மெரில்போன்’ கிரிக்கெட் சங்கமே இவ்வறிவித்தலை வெளியிட்டுள்ளது. புதிய விதிமுறைகளின்படி: • களத்தில் ஒழுங்கீனமாக நடந்துகொள்ளும் வீரரை அந்த ஆட்டத்தை விட்டு தற்காலிகமாகவோ, குறிப்பிட்ட காலத்துக்கோ அல்லது நிரந்தரமாகவோ விலக்கிவைக்கும்…

  21. மெஸ்சி போலவே ஆடி மெஸ்சியை வீழ்த்திய டிபாலா..! #BarcelonaVsJuventus டிபாலா - அடுத்த மெஸ்சி! இதுதான் ஐரோப்பிய கால்பந்து உலகின் தற்போதைய பேச்சு. மெஸ்சியின் கண் முன்னே, மெஸ்சியைப் போலவே பக்கவாக இரண்டு லெஃப்ட் ஃபுட் கோல் அடித்ததில் இருந்தே இந்த ஒப்பீடு சூடுபிடிக்கத் தொடங்கி விட்டது. இருவரும் அர்ஜென்டினாவைச் சேர்ந்தவர்கள். தங்கள் நாட்டுக்காக விளையாடிய முதல் போட்டியில் சிவப்பு அட்டை பெற்றவர்கள் என பல ஒற்றுமைகள். இத்தாலியின் டியூரின் நகரில் சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் முதற்கட்ட காலிறுதிப் போட்டி நேற்று நடந்தது. இதில் ஸ்பெயினை சேர்ந்த கிளப் பார்சிலோனா, இத்தாலியைச் சேர்ந்த கிளப் யுவென்டஸ் மோதின. இந்த இரு அணிகளும் மோதிய 2…

  22. ஆசிய மெய்வல்லுனருக்கான தெரிவுப்போட்டிகள்: வடக்கின் நட்சத்திரம் புதிய இலங்கை சாதனை 800 மீற்றர் ஓட்டப்போட்டியில் கடற்படையின் கயந்திகா அபேரத்ன இலங்கை சாதனையைப் படைத்தார். இந்த சாதனைக்காக அவர் 02 நிமிடங்கள் மற்றும் 2.55 விநாடிகளை எடுத்துக்கொண்டார். வடக்கின் நட்சத்திரமான அனிதா ஜெகதீஸ்வரன் மகளிருக்கான கோலூன்றிப் பாய்தலில் 03.45 மீற்றருக்குத் தாவி புதிய இலங்கை சாதனையைப் புதுப்பித்தார். மகளிருக்கான முப்பாய்ச்சலில் விதுஷா லக்ஷானி மற்றுமொரு இலங்கை சாதனையை நிலைநாட்டினார். 13.67 மீற்றருக்கு தாவிய அவர் இந்த சாதனையைத் தன்வசப்படுத்தினார். இந்த சாதனைகளுடன் ஆசிய மெய்வல்லுனர் போட்டிகளுக்கான தெரிவுப்போட்டிகள்…

  23. பாகிஸ்தானின் முன்னணி கிரிக்கெட் வீரர் யூனிஸ் கான் ஓய்வு குறித்து அறிவிப்பு! பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் 9,000 ரன்களுக்கு மேல் எடுத்தவருமான யூனிஸ் கான் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து தான் ஓய்வு பெறப் போவதாக அறிவித்துள்ளார். யூனிஸ் கான் கடந்த 2000-ம் ஆண்டு மார்ச் மாதம் இலங்கைக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் முதன்முறையாக பாகிஸ்தான் அணி சார்பில் களம் இறங்கினார். அவர் கடந்த நவம்பர் 2015-ம் ஆண்டில் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். தற்போது, பாகிஸ்தான் அணி மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிராக விளையாடப் போகும் டெஸ்ட் தொடருக்குப் பிறகு கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப் போவதாக அவர் அ…

  24. இறுதி பத்து ஓவரில் போட்டியின் திசையை மாற்றிய மே.தீவுகள் : பாகிஸ்தானை வீழ்த்தி அபார வெற்றி! (காணொளி இணைப்பு) பாகிஸ்தான் அணிக்கெதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் மே.தீவுகள் அணி 4 விக்கட்டுகளால் அபார வெற்றிபெற்றது. முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 50 ஓவர்கள் நிறைவில் 5 விக்கட்டுகளை இழந்து 308 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இதில் மொஹமட் ஹபீஸ் 88 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். இந்நிலையில் 309 ஓட்டங்களை வெற்றியிலக்காக கொண்டு துடுப்பெடுத்தாடிய மே.தீவுகள் அணி 49 ஓவர்களில் வெற்றியிலக்கை அடைந்தது. ஒருகட்டத்தில் மேற்கிந்திய தீவுகள் அணி 13 ஓவர்களுக்கு 138 ஓட்டங்களை பெறவேண்டிய கட்டாயத்தில் இருந்தது. …

  25. ஊக்க மருந்து பரிசோதனையில் தோல்வி- ஒலிம்பிக் பதக்கம் பறிக்கப்படுமா? -------------------------------------------------------------------------------- ரியோ ஒலிம்பிக்ஸில் மராத்தன் ஓட்டபோட்டியில் தங்கப்பதக்கம் வென்ற கென்ய வீராங்கனை ஊக்க மருந்து பரிசோதனையில் தோல்வியடைந்துள்ளார். கடந்த ஆண்டு ரியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில்-மராத்தன் ஓட்டத்தில் பெண்கள் பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற முதல் கென்யர் எனும் பெயரை ஜெமிமா சம்காங் பெற்றிருந்தார். போட்டி காலத்துக்கு வெளியே நடைபெற்ற பரிசோதனையில், அவர் சோர்வு ஏற்படாமல் இருக்க, ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்யும் ஈ பி ஓ எனும் ஊக்கமருந்தை உட்கொண்டிருந்தது தெரியவந்தது. சோர்வு ஏற்படுவதை தாமதிப்பன் மூ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.