விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7860 topics in this forum
-
எமது அணி திறமையின் மீது நம்பிக்கை வையுங்கள் : விமர்சனங்களுக்கு தகுந்த பதிலடி: இலங்கையின் வெற்றிகுறித்து சங்கா,மஹேல தென்னாபிரிக்க அணிக்கு எதிரான இருபது-20 தொடரை இலங்கை சிறப்பான முறையில் வெற்றிக்கொண்டுள்ளது. எமது இலங்கை அணி வீரர்களின் திறமை மீது நம்பிக்கை வைத்து அவர்களுக்கு ஆதரவு வழங்க வேண்டும் என இலங்கை அணியின் முன்னாள் தலைவரும் ஜாம்வானுமாகிய குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார். தென்னாபிரிக்க அணிக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி மூன்று டெஸ்ட், மூன்று இருபது20 மற்றும் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கின்றது. தென்னாபிரிக்க அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இலங்கை படுதோல்வியடைந்தது. …
-
- 0 replies
- 207 views
-
-
http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-01-25#page-12
-
- 0 replies
- 486 views
-
-
சகவீரர் ஊக்க மருந்தில் சிக்கியதால் 4X100 மீ ஒலிம்பிக் தங்கப்பதக்கத்தை இழந்தார் உசைன் போல்ட் 2008 பெய்ஜிங் ஒலிம்பிக்கில் ரிலே ஓட்டக்குழுவினர். | படம்.ஏ.பி. 2008 பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டிகளில் உசைன் போல்ட்டுடன் 4X100மீ பந்தயத்தில் ஓடிய நெஸ்டா கார்ட்டர் ஊக்க மருந்து எடுத்துக் கொண்டதாக நிரூபிக்கப்பட்டதால் உசைன் போல்ட் தங்கப்பதக்கத்தை இழந்தார். நெஸ்டா கார்ட்டர் அளித்த சிறுநீர் மாதிரிகளில் தடை செய்யப்பட்ட ‘மெதில்ஹெக்சானியமின்’ என்ற ஊக்கமருந்து இருந்தது மறு ஆய்வின் போது தெரியவந்ததாக சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தெரிவித்துள்ளது, இதனையடுத்து ‘ஜமைக்கா தடகள அணி தகுதியிழப்பு செய்யப்படுகிறது’ என்று ஒலிம்பிக் கூட்டமைப்பு தெரி…
-
- 0 replies
- 262 views
-
-
கருண் நாயர் முச்சதம் அடித்தது போல் இந்தியாவுக்கு எதிராக வார்னர் விளாச வேண்டும்: ஸ்மித் விருப்பம் வார்னர், கேப்டன் ஸ்மித். | படம்.| ஏ.எஃப்.பி. இந்தியாவை இந்திய மண்ணில் வீழ்த்த வேண்டுமெனில் பெரிய ஸ்கோர் தேவை, அதற்கு வார்னர், கருண் நாயர் போல் முச்சதம் விளாச வேண்டும் என்று ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்மித் விருப்பம் தெரிவித்துள்ளார். இது குறித்து ஈ.எஸ்.பி.என். கிரிக் இன்ஃபோ இணையதளத்திற்கு ஸ்மித் அளித்த பேட்டியில் கூறியதாவது: இந்திய தொடரில் நமது மூத்த வீரர்கள் தங்கள் ஆட்டத்தை இன்னும் மேம்படுத்த வேண்டும். இதைத்தான் நாம் இலங்கையில் சரிவர செய்யவில்லை. அதனால் நாங்கள் விரும்பிய முடிவுகள் கிட்டவில்லை. எனவே எங்கள் விரு…
-
- 4 replies
- 359 views
-
-
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டோனிக்கு பத்ம பூஷண் விருது இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் டோனிக்கு பத்ம பூஷண் விருது வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. புது டெல்லி: ஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு மத்திய அரசு உயரிய விருதான பத்மஸ்ரீ, பத்மவிபூஷண், பத்மபூஷண் விருதுகளை வழங்கி கவுரவப்படுத்தி வருகிறது. அந்த வகையில் 2016-ம் ஆண்டிற்கான பத்ம ஸ்ரீ, பத்ம பூஷண், பத்ம விபூஷண் விருதுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன. பத்ம பூஷண் விருது இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் டோனிக்கு அறிவிக்கப்பட்டுள்ள…
-
- 1 reply
- 317 views
-
-
பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற மாரியப்பனுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிப்பு மாரியப்பன் தங்கவேல் | கோப்புப் படம். பாராலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதலில் தங்கப் பதக்கம் வென்ற மாரியப்பனுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2016-ம் ஆண்டு பிரேசிலில் உள்ள ரியோ டி ஜெனிரோவில் பாராலிம்பிக் போட்டியில், சேலம் மாவட்டம், தமிழகத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவர் மாரியப்பன் தங்கவேலு உயரம் தாண்டும் போட்டியில் கலந்து கொண்டார். அவர் அதிகபட்சமாக 1.89 மீட்டர் உயரம் தாண்டி, பாராலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்தார். சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி அருகே உள்ள பெரியவடகம்பட்டி என்ற கு…
-
- 0 replies
- 307 views
-
-
'கிரிக்கெட்டை மேம்படுத்த வேண்டும்' வா.கிருஸ்ணா கிழக்கு மாகாணத்தில் விளையாட்டு மைதானங்களைப் புனரமைத்து கிரிக்கெட் விளையாட்டினை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கப்போவதாக, இலங்கை கிரிக்கெட் தேர்வுக்குழுவின் தலைவரும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான சனத் ஜயசூரிய தெரிவித்தார். மட்டக்களப்பு சென்றலைட் விளையாட்டுக்கழகத்தின் 25வது ஆண்டு நிறைவினையொட்டிய நிகழ்வு, கடந்த வெள்ளிக்கிழமை (20) மட்டக்களப்பில் நடைபெற்றது. மட்டக்களப்புக்கு விஜயம் செய்த சனத் ஜெயசூரியவுக்கு, மெதடிஸ்த மத்திய கல்லூரியில் மகத்தான வரவேற்பளிக்கப்பட்டது. …
-
- 0 replies
- 835 views
-
-
7 மாதங்களுக்குப் பின் அணிக்குத் திரும்புகிறார் டி வில்லியர்ஸ்..! அதே வேகம், அதே அதிரடி என உற்சாகமாக அணிக்குத் திரும்பியிருக்கிறார் டி வில்லியர்ஸ். கடந்த ஜூன் மாதத்தில் கரீபிய மண்ணில் நடந்த வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா இடையிலான முத்தரப்பு போட்டியில் முழங்கையில் ஏற்பட்ட காயம் காரணமாக அணியில் இருந்து ஒதுங்கினார். காயத்துக்கு சிகிச்சை எடுத்துக் கொண்டார். இருந்தாலும் பூரண குணமடைய நீண்ட காலம் ஆனது. இதனால் அணியில் இருந்து பல மாதங்கள் ஒதுங்கியே இருந்தார். இதோ இந்த தொடரில் வந்துவிடுவார், அந்த தொடரில் வந்துவிடுவார் என ரசிகர்கள் ஒவ்வொரு முறை எதிர்பார்க்கும்போதும் ஃபிட்னெஸ் சோதனையில் தோல்வியைத் தழுவி விளையாட முடியாத சூழ்நிலையில் இருந்தார். …
-
- 0 replies
- 233 views
-
-
அவுஸ்திரேலிய ஓபன் ; 14 வருடங்களுக்கு பிறகு அரையிறுதிக்கு முன்னேறிய வீனஸ் வில்லியம்ஸ் அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் இடம்பெற்றுவரும் அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் அமெரிக்காவைச் சேர்ந்த வீனஸ் வில்லியம்ஸ் 14 வருடங்களுக்கு பிறகு அரையிறுதிக்கு தகுதிப்பெற்றுள்ளார். அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவுக்கான காலிறுதிப்போட்டியில் ரஸ்யாவின் அனஸ்டாசியா பவ்ல்யுசென்கோவாவை எதிர்கொண்ட வீனஸ் வில்லியம்ஸ் 6-4 என்ற அடிப்படையில் முதல் செட்டை வென்ற நிலையில், இரண்டாவது சுற்று 6-6 என சமநிலையில் முடிவடைந்தது. இந்நிலையில் டை பிரேக்கர் செட்டை எதிர்கொண்ட வீனஸ் 7 -3 என்ற அடிப்படையில் வென்று அரையிறுதிக்கு தகுதி…
-
- 0 replies
- 344 views
-
-
இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் போட்டி: அஸ்வின், ஜடேஜா, சமிக்கு ஓய்வு இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் போட்டி தொடரில் இந்திய அணியில் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, முகமது சமி, உமேஷ் யாதவ் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்படுகிறது. மும்பை: இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. 5 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் 3 போட்டிகள் முடிந்து இருக்கிறது. இதில் இந்தியா 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. 4-வது டெஸ்ட் போட்டி வருகிற 8-ந்தேதி மும்பையில் தொடங்குகிறது. டெஸ்ட் தொடர் முடிந்த பிறகு இரு அணிகளும் 3 ஒரு…
-
- 31 replies
- 2.1k views
-
-
பாக்.எதிரான ஒருநாள் போட்டி: ஆஸ்திரேலியா திணறல் ஆஸ்திரேலியா- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதல் ஒரு நாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 78 ரன்னுக்கு 5 விக்கெட்டை இழந்து விளையாடி வருகிறது. பிரிஸ்பென்: ஆஸ்திரேலியா- பாகிஸ்தான் அணிகள் 5 போட்டிக் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகின்றன. இதன் முதல் போட்டி பிரிஸ்பேனில் இன்று தொடங்கியது. டாஸ் ஜெயித்த ஆஸ்திரேலியா பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீரர் டேவிட் வார்னர் 7 ரன்னிலும், கேப்டன் சுமித் ரன் எதுவும் எடுக்காமலும் அவுட் ஆனார்கள். அதன்பின் கிறிஸ்லீன் (16), ஹேட் (39), மிஷ்சேல் மார்ஷ் (4) ஆகியோர் அ…
-
- 4 replies
- 1.4k views
-
-
கேப்டன் பதவியில் இருந்து தோனி விலகல் இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து மகேந்திர சிங் தோனி விலகினார். இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் அவர் இடம் பெறுவதற்கு வாய்ப்புள்ளது. பிசிசிஐ-யின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே, அவர் வகித்து வந்த இந்திய டெஸ்ட் கிரிக்கெட் கேப்டன் பதவியில் இருந்து விலகியிருந்தார். http://www.vikatan.com/news/india/76889-dhoni-steps-down-as-captain-of-the-indian-cricket-team.art ஒருநாள், டி20 கேப்டன் பொறுப்பிலிருந்து எம்.எஸ்.தோனி திடீர் விலகல் தோனி. | கோப்புப் படம்: சந்தீப் சக்சேனா. …
-
- 26 replies
- 6.5k views
-
-
விரைவாக 1000 ஓட்டங்களைப் பெற்று விவியன் ரிச்சர்ட்ஸின் சாதனையை சமன் செய்த பாகிஸ்தான் வீரர் அவுஸ்திரேலியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3 ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி பெர்த் மைதானத்தில் நடைபெற்றது. இன்றைய போட்டியில் பாகிஸ்தான் முதலில் துடுப்பெடுத்தாடியது. அந்த அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 263 ஓட்டங்களைப் பெற்றது. பாகிஸ்தான் அணியின் 22 வயதான இளம் வீரர் பாபர் அஸாம் 100 பந்தில் 4 பவுண்டரி, 1 சிக்சருடன் 84 ஓட்டங்களைப் பெற்றார். அவர் இந்த போட்டிக்கு முன் 20 போட்டியில் 3 சதம், 5 பவுண்டரியுடன் 953 ஓட்டங்கள் எடுத்திருந்தார். இன்றைய போட்டியில் 47 ஓட்டங்களை எடுத்ததன் மூலம் விரைவாக …
-
- 0 replies
- 515 views
-
-
2019 வரை மெத்தியூஸே அணித் தலைவர் ; திலங்க சுமதிபால இலங்கை அணித் தலைவரை மாற்றுவது தொடர்பில் கலந்தாலோசிக்கவில்லை. அடுத்த உலகக்கிண்ணம் வரை அஞ்சலோ மெத்தியூஸ் தான் அணித்தலைவரென இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் திலங்க சுமதிபால தெரிவித்தார். இலங்கை கிரிக்கெட் சபையின் கோட்போர் கூடத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், இலங்கை அணித் தலைவர் அஞ்சலோ மெத்தியூஸை மாற்றுவது தொடர்பில் நாம் கலந்துரையாடவில்லை. அணியில் தற்போது இருக்கும் குறைநிறைகளை பற்றியே நாம் ஆராய்ந்தோம்…
-
- 0 replies
- 416 views
-
-
“சுதந்திரக் கிண்ணம் ” கிரிக்கெட் தொடரை நடத்த தீர்மானம் : இலங்கை கிரிக்கெட் நிறுவனம் “சுதந்திரக் கிண்ணம்” ஒருநாள் கிரிக்கெட் தொடரை நடத்துவதற்கு இலங்கை கிரிக்கெட் நிறுவனம் ஏற்பாடுசெய்து வருகின்றது. எதிர்வரும் 2018 ஆம் ஆண்டு இலங்கை சுதந்திரமடைந்து 70 ஆண்டுகள் நிறைவைக் கொண்டாடவுள்ள நிலையில் “சுதந்திரக் கிண்ணம் ” என்ற பெயரில் ஒருநாள் கிரிக்கெட் தொடரை நடத்த இலங்கை கிரிக்கெட் நிறுவனம் ஏற்பாடு செய்து வருகின்றது. இத் தொடர் குறிப்பாக 2018 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதமளவில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான தகவல்கள் எதிர்வரும் காலத்தில் அறிவிக்கப்படும். இத் தொடரில் இந்தியா உட்பட சில நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்…
-
- 0 replies
- 330 views
-
-
மீண்டும் இருபது-20 போட்டிகளில் டில்சான் ஹொங்கொங்கில் இடம்பெறவுள்ள ஹொங்கொங் இருபது-20 பிலிட்ஸ் தொடரில் இலங்கை அணியின் முன்னணி வீரரான திலகரட்ன டில்சான் விளையாடவுள்ளார். இந்த தொடரில் சிட்டி கைட்ஸ் அணிக்காக டில்சான் விளையாடவுள்ளார். இதேவேளை ஹொங்கொங் இருபது 20 பிலிட்ஸ் தொடரில் முன்னணி வீரர்களான குமார் சங்கக்கார டெரன் சமி மற்றும் அப்ரிடி ஆகியோர் விளையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது. சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து டில்சான் ஓய்வு பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/
-
- 0 replies
- 455 views
-
-
சேஸிங்கில் வல்லவரான விராட் கோலியுடன் கலந்துரையாட விரும்பும் ஜோ ரூட் சேஸிங்கில் வல்லவரான விராட் கோலியுடன் அமர்ந்து கலந்துரையாட வேண்டும் என்று இங்கிலாந்து அணியின் முன்னணி பேட்ஸ்மேன் ஜோ ரூட் தனது விருப்பத்தை கூறியுள்ளார். இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 351 ரன்கள் என்ற இமாலய சேஸிங்கை எட்டி வெற்றி பெற்றது. ஒரு கட்டத்தில் இந்தியா 63 ரன்களுக்குள் நான்கு விக்கெட்டுக்களை இழந்து தத்தளித்தது. அதன்பின் விராட் கோலியும், கேதர் ஜாதவும் சிறப்பாக விளையாடி அணியை சரிவில் இருந்து ம…
-
- 0 replies
- 391 views
-
-
ரியல் மாட்ரிட்டின் தொடர் வெற்றிக்கு முற்றுப் புள்ளி வைத்த செவில்லா வாலென்சியா 40 போட்டிகளில் தோல்வியை சந்திக்காமல் வீறுநடை போட்டு கம்பீரமாக சென்ற ரியல் மாட்ரிட் அணிக்கு செவில்லா வாலென்சியா முற்றுப்புள்ளி வைத்துள்ளது. ஸ்பெயின் நாட்டின் முன்னணி கால்பந்து கிளப் அணியான ரியல் மாட்ரிட் 40 போட்டிகளில் தொடர் வெற்றி பெற்று சாதனைப் பெற்றிருந்தது. இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (15-ந்தேதி) லா லிகா தொடரில் ரியல் மாட்ரிட் அணி, செவில்லா வாலென்சியா அணியை எதிர்கொண்டது. இந்த ஆட்டத்தின் முதல்பாதி நேரத்தில் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை. 67-வது நிமிடத்தில்…
-
- 0 replies
- 258 views
-
-
ஐ.பி.எல். கிரிக்கெட்: இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் மறுப்பு இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ரன் குவிக்கும் எந்திரம் என்று அழைக்கப்படும் ஜோ ரூட் ஐ.பி.எல். போட்டியில் விளையாட மறுத்து விட்டார். இது குறித்த விரிவான செய்தியை கீழே பார்க்கலாம். லண்டன் : இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ரன் குவிக்கும் எந்திரம் என்று அழைக்கப்படும் ஜோ ரூட் இதுவரை ஐ.பி.எல். கிரிக்கெட்டில் விளையாடியதில்லை. இந்த சீசனில் ஐ.பி.எல். போட்டியில் விளையாட வைக்க சில அணி நிர்வாகங்கள் அவரை அணுகின. ஆனால் அவர் மறுத்து விட்டார். இது குறித்து 26 வயதான ஜோ ரூட் கூறுகையில், ‘இந்த ஆண்டு…
-
- 0 replies
- 465 views
-
-
ஆடுகளம் 5 மணி 15 நிமிடங்கள் நீடித்த ‘யுத்தம்’ அவுஸ்திரேலிய ஓபன் டென்னிசில் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்த ஆட்டம், இவா கார்லோவிச் (குரோஷியா) - ஹோரோசியா ஜிபல்லோஸ் (அர்ஜென்டினா) ஆகிய வீரர்கள் இடையிலான மோதல் தான். இருவரும் நீயா நானா என்று சளைக்காமல் மல்லுகட்டியதால் இந்த ஆட்டத்தின் முடிவை அறிய 5 மணி 15 நிமிடங்கள் காத்திருக்க வேண்டி இருந்தது. அதுவும் வெற்றியை நிர்ணயிக்கும் கடைசி செட்டில் இருவரும் தங்களது சர்வீசை மட்டுமே புள்ளியாக மாற்றிக்கொண்டே வந்ததால் அனுமார் வால் போல் நீண்டு கொண்டே போனது. ஒரு வழியாக 42-வது கேமில் கார்லோவிச் வெற்றிக்குரிய புள்ளியை எடுத்து பரபரப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தார். கடைசி செட் மட்டும் 2 மணி 37 நிமிடங்கள் நடந்தது. …
-
- 0 replies
- 505 views
-
-
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான குமார் சங்கக்காரா, ரசிகர்களிடம் பல விடங்களை பற்றி மனம் திறந்து பேசியுள்ளார். இந்நிலையில் அவுஸ்ரேலிய ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு சங்கக்காரா வெளிப்படையாக பதிலளித்துள்ளார். அந்த ரசிகர், “நீங்கள் பல டெஸ்ட் அணிகளுக்கு எதிராக சிறப்பாக விளையாடி வெற்றி தேடித் தந்துள்ளீர்கள், உலகக்கிண்ணம் வென்ற அணியிலும் இடம் பிடித்துள்ளீர்கள், உங்களது கிரிக்கெட் வாழ்க்கை சிறப்பாகவே இருந்தது. ஆனால் அவுஸ்ரேலிய அணிக்கு எதிராக வெற்றி பெற்ற இலங்கை அணியில் இருந்ததே இல்லையே, ஏன்?” என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த சங்கக்காரா, ஆமாம், அது ஏமாற்றம் அளிக்கும் விடயமாகவே இருந்தது. 2004ம் ஆண்டு வெற்றி வாய்ப்பு அதிகமாக இருந்த…
-
- 0 replies
- 466 views
-
-
டெஸ்ட் போட்டிகளுக்கு குட்பை சொல்கிறாரா அதிரடி வீரர் டிவில்லியர்ஸ்? அதிரடிக்கு இன்னொரு பெயர் டிவில்லியர்ஸ். இவருக்கு 31 பந்தில் சதமடிக்கவும் தெரியும், 200 பந்துகளைச் சந்தித்து 31 ரன் எடுக்கவும் தெரியும். தான் சார்ந்த அணிக்கு, ஆட்டத்தின் போக்கைப் பொறுத்து எவ்வளவு ரன்கள் தேவையோ அதற்கேற்ப கியரை மாற்றி பேட்டிங் செய்யும் வல்லமை இவருக்கு உண்டு. மூன்று ஃபார்மெட்டுகளிலும் மிகச்சிறப்பாக விளையாடக்கூடிய தலைசிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவர் டிவில்லியர்ஸ். தென் ஆப்பிரிக்க அணியைச் சேர்ந்த டிவில்லியர்ஸ் கடந்த ஜூன் மாதத்துக்கு பிறகு சர்வதேச போட்டிகளில் காயம் காரணமாக விளையாடவில்லை. இந்தியா மற்றும் இங்கிலாந்து டெஸ்ட் தொடரை தென் ஆப்பிரிக்க அணி தோற்றதால் ஹாஷிம் ஆம்லா கே…
-
- 1 reply
- 505 views
-
-
விராட் கோலியே உலகின் சிறந்த பேட்ஸ்மேன்: இங்கிலாந்து முன்னாள் கேப்டன் வாகன் புகழாரம் டெஸ்ட், ஒருநாள் போட்டி மற்றும் 20 ஓவர் ஆட்டம் ஆகிய கிரிக்கெட்டின் 3 நிலைகளிலும் விராட் கோலியே உலகின் சிறந்த பேட்ஸ்மேனாக திகழ்ந்துள்ளார் என இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் புகழாரம் சூட்டியுள்ளார். புதுடெல்லி: இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 350 ரன் குவித்தும் தோல்வியை தழுவியது. இந்திய அணி கேப்டன் விராட் கோலி, கேதர் ஜாதவ் ஆகியோரின் அதிரடியான சதமே இங்கிலாந்தின் தோல்விக்கு காரணமாக அமைந்தது. …
-
- 0 replies
- 508 views
-
-
‘மக்கள் கேப்டனாக’ அம்பயரிடம் ரிவ்யூ கேட்ட தோனி! - வைரல் வீடியோ இந்தியாவின் தலைசிறந்த கேப்டன்களில் மிக முக்கியமானவரான மகேந்திர சிங் தோனி இரண்டு வாரங்களுக்கு முன்னதாக கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதையடுத்து விராட் கோஹ்லி ஒருநாள் போட்டிகள் மற்றும் டி20 போட்டிகளுக்கு கேப்டனாக அறிவிக்கப்பட்டார். கேப்டன் பொறுப்பைத் துறந்திருந்தாலும், வார்ம் அப் போட்டி ஒன்றில் இந்திய ஏ அணிக்கு தலைமை தாங்கினார் தோனி. பத்து ஆண்டுகளுக்கு முன்னதாக அதாவது 2007ம் ஆண்டு டி20 உலகக்கோப்பையை இந்தியா வென்றது. செப்டம்பர் 24, 2007-ம் ஆண்டு உலகக்கோப்பையை தோனி தலைமையிலான இந்திய அணி ஜெயிக்க, உடனடியாக அப்போது ஒருநாள் போட்டிகளுக்கு கேப்டனாக இருந்த டிராவிட் பதவி விலகினார்.…
-
- 0 replies
- 456 views
-
-
உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியம்: குஜராத்தில் இன்று அடிக்கல் நாட்டப்பட்டது குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ரூ.700 கோடி செலவில் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. அகமதாபாத்: குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரின் மோதிரா பகுதியில் இருந்த சர்தார் பட்டேல் ஸ்டேடியம் 54 ஆயிரம் பேர் அமர்ந்து போட்டியை பார்க்கும் வகையில் உருவாக்கப்பட்டிருந்தது. இதில் பல்வேறு சர்வதேச போட்டிகள் நடைபெற்றுள்ளன. மிக பழமையான இந்த ஸ்டேடியத்தை இடித்துவிட்டு உலகின் மிகப்பெரிய ஸ்டேடியமாக உருவாக்குவதற்கு முடிவு செய்யப்பட்டது. அதன்படி சம…
-
- 0 replies
- 374 views
-