Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. கோலியின் அதி துணிச்சல் ஆட்டம்: ஓர் அலசல் கோலி, கிறிஸ் வோக்ஸ் பந்தில் சிக்ஸ் அடித்த அந்த அரிதான, கடினமான ஷாட். இங்கிலாந்துக்கு எதிராக புனே ஒருநாள் போட்டியில் 64/4 என்ற நிலையிலிருந்து இந்தியாவை வெற்றிக்கு இட்டுச் சென்ற கோலி மற்றும் கேதர் ஜாதவ்வின் சதங்களில் கோலியின் ஆட்டம் வேறு ஒரு துணிச்சல் பரிமாணத்தை எட்டியுள்ளது. கேதர் ஜாதவ்வின் வேகமான அதிரடி சதமும் கோலியின் துணிச்சலுக்கு இணையாக அமைந்தது. ஆரம்ப கால சச்சின், பிறகு சேவாக், லாரா, கில்கிறிஸ்ட், ஜெயசூரியா, இன்றும் தொடரும் கிறிஸ் கெய்ல், கெவின் பீட்டர்சன் ஆகியோரது அதி துணிச்சல் ரக அலாதியான ஷாட்களை கோலி தனது 122 ரன்களில் ஆடியது குறிப்பிடத்தக்கது. மேற்கூற…

  2. தெண்டுல்கர் சாதனையை முறியடித்த கோலி வெற்றிகரமான சேசிங்கில் அதிக சதம் அடித்திருந்த கிரிக்கெட் ஜாம்பவான் தெண்டுல்கர் சாதனையை இந்திய அணி கேப்டன் விராட் கோலி தற்போது இங்கிலாந்துக்கு எதிரான போட்டியின் போது முறியடித்தார். உலகின் சிறந்த பேட்ஸ்மேன் என்பதை நிரூபிக்கும் வகையில் விராட் கோலி மீண்டும் தனது திறமையை வெளிப்படுத்தி உள்ளார். இங்கிலாந்துக்கு எதிராக நேற்று நடந்த ஒரு நாள் போட்டியில் அவர் 105 பந்தில் 122 ரன்கள் குவித்தார். இதில் 8 பவுண்டரிகளும், 5 சிக்சர்களும் அடங்கும். 177-வது ஒரு நாள் போட்டியில் விளையாடிய விராட்…

  3. தமிம் - மொமினுல் முயற்சிகளை வீணடித்த மழை: நியூசிலாந்து டெஸ்ட்டில் வங்காளதேசம் 154/3 நியூசிலாந்தில் நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டியில் வங்காளதேச வீரர்கள் தமிம் இக்பால், மொமினுல் சிறப்பாக விளையாடியபோதும், மழை குறுக்கிட்டதால் அவர்களின் முயற்சிகள் எடுபடாமல் போனது. வங்காளதேச கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான ஒருநாள் தொடரையும், 20 ஓவர் தொடரையும் நியூசிலாந்து 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்நிலையில் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின், முதல் டெஸ்ட் வெலிங்டனில் இன்று த…

  4. மத்திய கல்லூரி வெற்றியைத் தழுவியது யாழ்ப்பாண பாடசாலைகள் விளையாட்டு சங்கம் நடத்திய 20வயதுப்பிரிவு ஆண்களுக்கான காற்பந்தாட்ட தொடரில் யாழ்ப்பாண மத்திய கல்லூரி சம்பியனானது. யாழ் துரையப்பா விளையாட்டு மைதானத்தில் நேற்று இரவு நடைபெற்ற இறுதியாட்டத்தில் யாழ் மத்திய அணியை எதிர்த்து சென். ஹென்றிஸ் கல்லூரி அணி மோதியது. முதல் பாதி முடிவில் 2:1 என்று மத்திய கல்லூரி முன்னிலை வகித்தது. இரண்டாவது பாதியில் மத்திய கல்லூரி மூன்றாவது கோலை பதிவு செய்து 3:1 என்ற கணக்கில் சம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. http://onlineuthayan.com/sports/

  5. மைதானத்திலிருந்து அவசரமாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார் முஷ்பிகுர் ரஹீம் நியூசிலாந்தின் வேகப்பந்து வீச்சாளர் ரிம் சௌத்தி வீசிய பந்தொன்று பங்களாதேஷ் அணி வீரர் முஷ்பிகுர் ரஹீமின் தலையை பதம் பார்த்ததில் மைதானத்திலிருந்து அவசர அவசரமாக வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டார். நியூசிலாந்து மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் நியூசிலாந்தின் வெலிங்டனில் இடம்பெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இப் போட்டியின் 2 ஆவது இன்னிங்ஷில் துடுப்பெடுத்தாடிய முஷ்பிகுர் ரஹீம் சௌத்தி வீசிய எகிறும் முறையான பந்தை எதிர்கொள்ள முயன்றபோதே பந்து அவரது தலையை பதம் பார்த்துள்ளது. குறித்த பந்து ம…

  6. இலங்கை, தென்னாபிரிக்க பயிற்சி போட்டி சமனிலையில் இலங்கை மற்றும் தென்னாபிரிக்க பதினொருவர் அணிகள் மோதிய 3 நாள் பயிற்சி போட்டி சமநிலையில் முடிவடைந்துள்ளது. இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடி 373 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இதில் கௌசல் சில்வா 80 ஓட்டங்களையும், கருணாரத்ன 71 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தனர். பந்துவீச்சில் தென்னாபிரிக்க பதினொருவர் அணி சார்பாக ஒலீவியர் 4 விக்கட்டுகளை கைப்பற்றினார். இந்நிலையில் தனது முதலாவது இன்னிங்ஸை ஆரம்பித்த தென்னாபிரிக்க பதினொருவர் அணி சகல விக்கட்டுகளையும் இழந்து 289 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. தென்னாபிரிக்க பதினொருவர் அணி சார்பில் புளூய் …

  7. மெஸ்சியை விமர்சித்த அதிகாரியை நீக்குகிறது பார்சிலோனா பார்சிலோனா அணியின் அதிகாரி ஒருவர் மெஸ்சி இல்லாவி்ட்டாலும் அணி சிறப்பாக செயல்படும் என்று கூறியதுடன் விமர்சனமும் செய்திருந்தார். அவரை நீக்குகிறது பார்சிலோனா. ஸ்பெயின் நாட்டின் முன்னணி கால்பந்து கிளப் அணியான பார்சிலோனாவில் அர்ஜென்டினா அணியின் கேப்டன் மெஸ்சி தொடர்ந்து விளையாடி வருகிறார். கோபா டெல் ரெய் தொடரில் அத்லெடிக் பில்பயோ அணிக்கெதிரான போட்டியில் பார்சிலோனா அணி 4-3 என வெற்றி பெற்றது. இதற்கு 78-வது நிமிடத்தில் மெஸ்சி ப்ரீ ஹிக் மூலம் அடித்த கோல்தான் முக்கியமாக காரணமாக இருந்தது. அத்துடன் பார்சிலோனா காலிறுதிக்கு முன…

  8. இரண்டு கேப்டன் இந்தியாவிற்கு ஒத்து வராது: டோனி இரண்டு கேப்டன் முறை இந்திய கிரிக்கெட்டிற்கு ஒத்து வராது என்று கேப்டன் பதவியில் இருந்து விலகிய பின் முதன்முதலாக மகேந்திரசிங் டோனி அளித்த பேட்டியில் கூறியுள்ளார். இந்திய ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்த மகேந்திர சிங் டோனி கடந்த சில நாட்களுக்கு முன் திடீரென கேப்டன் பதவியில் இருந்து ஓய்வு பெற்றார். ஆனால் தொடர்ந்து விளையாடுவேன் என்று அறிவித்தார். ஓய்வு அறிவிற்குப்பின் இன்று முதன்முதலாக டோனி பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில் ‘‘இரண்டு கேப்டன் (டெஸ்ட் அணி, ஒருநாள் அணி) இந்த…

  9. இந்தியாவிற்கு எதிராக ஆஸ்திரேலியா மோசமாக விளையாடலாம்: லயன் ஆருடம் இந்தியாவிற்கு எதிராக நடைபெற இருக்கும் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியா மோசமாக விளையாடலாம் என லயன் கூறியுள்ளார். ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக அடுத்த மாதம் இந்தியா வருகிறது. முதல் போட்டி பிப்ரவரி 23-ந்தேதி புனேவில் தொடங்குகிறது. 2-வது போட்டி பெங்களூருவில் மார்ச் 4-ந்தேதி முதல் 8-ந்தேதி வரையும், 3-வது டெஸ்ட் ராஞ்சியில் மார்ச் 16-ந்தேதி முதல் 20-ந்தேதி வரையும், 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் மார்ச் 25-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை தரம்சாலாவிலும் நடக்கி…

  10. இயன் சேப்பல் விமர்சனத்திற்கு தக்க பதிலடி கொடுத்த மிஸ்பா உல் ஹக் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் இயன் சேப்பல் விமர்சனத்திற்கு பாகிஸ்தான் அணியின் கேப்டன் மிஸ்பா உல் ஹக் தக்க பதிலடி கொடுத்துள்ளார். ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் இயன் சேப்பல் விமர்சனத்திற்கு பாகிஸ்தான் அணியின் கேப்டன் மிஸ்பா உல் ஹக் தக்க பதிலடி கொடுத்துள்ளார். ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் சமீபத்தில் முடிவடைந்தது. இதில் பாகிஸ்தான் அணி 0-3 என தோல்வியடைந்து ஒயிட்வாஷ் ஆனது. இதனால் சரியாக விளையாடாத பாகிஸ்தான் அணியை ஆ…

  11. ஐ. சி. சி.யில் முழு அந்­தஸ்து பெற ஆப்­கா­னிஸ்தான் விருப்பம் சர்­வ­தேச கிரிக்கெட் பேர­வையில் முழு அந்­தஸ்து பெறு­வ­தற்­கான தனது விருப்­பத்தை ஆப்­கா­னிஸ்தான் கிரிக்கெட் சபை வெளிப்­ப­டுத்­தி­யுள்­ளது. எனினும் இதற்­கான விண்­ணப்­பத்தை ஆப்­கா­னிஸ்தான் இன்னும் சம்­பி­ர­தா­ய­பூர்­வ­மாக சமர்ப்­பிக்­க­வில்லை. ஆப்­கா­னிஸ்தான் தனது விண்­ணப்­பத்தை அடுத்த மாதம் சமர்ப்­பிக்கும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது. அதன் பின்னர் இந்த விண்­ணப்பம் குறித்து சர்­வ­தேச கிரிக்கெட் பேரவைக் கூட்­டத்தில் கலந்­தா­லோ­சிக்­கப்­படும். சர்­வ­தேச கிரிக்கெட் பேர­வையின் திருப்­திக்­கு­ரிய தேவைகள் அடங்­கிய விரி­வான அறிக…

  12. இலங்கை இரு­பது 20 குழாமில் புது­முகம் தி­க்ஷில (நெவில் அன்­தனி) தென் ஆபி­ரிக்­கா­வுக்கு எதி­ராக எதிர்­வரும் 20ஆம் திகதி ஆரம்­ப­மா­க­வுள்ள சர்­வ­தேச இரு­பது 20 கிரிக்கெட் தொட­ருக்­கான இலங்கை குழாமில் துடுப்­பாட்ட சக­ல­துறை வீரர் தி­க் ஷில டி சில்வா அறி­முக வீர­ராக இணைக்­கப்­பட்­டுள்ளார். காலி மகிந்த கல்­லூ­ரியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும் சிலாபம் மேரியன்ஸ் கழக வீர­ரு­மான தி­க்ஷில இது­வரை எந்­த­வொரு சர்­வ­தேச கிரிக்கெட் போட்­டி­யிலும் விளை­யா­டி­ய­தில்லை. இதே­வேளை, சர்­வ­தேச இரு­பது 20 கிரிக்கெட் அரங்கில் மற்­றொரு அறி­முக வீர­ராக சுழல்­பந்­து­வீச்­சாளர் லக்ஷான் சந்­த­கானும் இலங்கை …

  13. சுப்ரீம் கோர்ட் அதிரடி: பி.சி.சி.ஐ. தலைவர் பதவியில் இருந்து அனுராக் தாக்கூர் நீக்கம் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய தலைவர் அனுராக் தாக்கூர், செயலாளர் அஜய் ஷிர்கே ஆகியோரை அப்பதவிகளில் இருந்து நீக்கி சுப்ரீம் கோர்ட் இன்று உத்தரவிட்டுள்ளது. புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் முக்கிய செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மை இருக்கும் வகையில் புதிய நிர்வாகிகள் நடந்துகொள்ள வேண்டும் என கடந்த ஜூலை மாதம் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருந்தது. ஆனால், இந்த உத்தரவுக்கு மதிப்பளிக்கா…

  14. திரும்ப வருகிறார் மரியா ஷரபோவா! முன்னணி டென்னிஸ் வீராங்கனையான மரியா ஷரபோவா, சென்ற ஆண்டு ஊக்கமருந்து தொடர்பான புகாரில் சிக்கி டென்னிஸ் விளையாட்டில் இருந்து இரண்டு ஆண்டுகள் தடை செய்யப்பட்டார். தவறை ஒப்புக்கொண்டதால் தடைக்காலம் 15 மாதங்களாகக் குறைக்கப்பட்டது. வரும் ஏப்ரல் மாதம் அந்தத் தடை முடியப்போகிறது. ஏப்ரல் 26-ம் தேதி ஜெர்மனியில் நடைப் பெற உள்ள 'Porsche Grand Prix' போட்டியில் கலந்துகொண்டு விளையாடப்போகிறார். ஐந்து முறை கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்ற ரஷ்யா வீராங்கனை மரியா ஷரபோவா, மெல்டோனியம் என்ற மருந்தைப் பயன்படுத்தியதற்காக கடந்த ஆண்டு ஆஸ்திரேலியா ஓப்பன் டென்னிஸ் போட்டியில் இருந்து நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. http://www.vikatan.com/ne…

  15. வடக்கு, கிழக்கில் கராத்தே வெற்றியாளர்கள் மட்டக்களப்பில் சர்வதேச பயிற்சியாளர்களினால் நடாத்தப்பட்டுவந்த பயிற்சி முகாம் நிறைவு நிகழ்வு மற்றும் திறந்த கராத்தே போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கான பதக்கங்கள் வழங்கும் நிகழ்வும் நேற்று முன்தினம் நடைபெற்றது. கடந்த 03 ஆம் திகதி தொடக்கம் மட்டக்களப்பு மாவட்ட சோட்டக்கான் கராத்தே சங்கத்தின் ஏற்பாட்டில் சர்வதேச கராத்தே வீரர்களினால் பயிற்சி வகுப்புகள் மட்டக்களப்பு சோட்டாக்கான் கராத்தே சங்க பாடசாலையில் நடைபெற்று வந்தது. இந்த பயிற்சி வகுப்பில் வடக்கு, கிழக்கு மாகாணத்தில் இருந்து சுமார் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டிருந்தனர். இந்த பயிற்சி வகுப்புகளை சர்தேச கராத்தே சாம்பியனும் சர்வதேச கராத்தே சங்கத்…

  16. கேப்டனாக கடைசி போட்டி: அதிரடி காட்டிய தோனி இங்கிலாந்துக்கு எதிரான பயிற்சி போட்டியில் கேப்டனாக தோனி இருக்கிறார். கேப்டனாக கடைசியாக களமிறங்கியுள்ளார் தோனி. மும்பையில் நடந்து வரும் போட்டியில் முதலில் களமிறங்கிய இந்திய ஏ அணி 50 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 304 ரன்கள் எடுத்தன. அதிகபட்சமாக ராயுடு 100 ரன்கள் எடுத்தார். தோனி 40 பந்துகளில் 68 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். குறிப்பாக எட்டு பவுண்டரிகளும், 2 சிக்சர்களையும் பறக்க விட்டார். யுவராஜ் 48 பந்துகளில் 56 ரன்கள் எடுத்தார். யுவராஜ் ஆறு பவுண்டரிகளும், 2 சிக்சர்களும் அடித்தார். இதையடுத்து 305 ரன் என்ற இலக்குடன் இங்கிலாந்து களமிறங்க உள்ளது. http://www.vikatan.com/news/sports/77…

  17. 2016 ஆம் ஆண்டின் சிறந்த கால்பந்தாட்டக்காரர் யார்..? 2016 ஆம் ஆண்டுக்கான ஃபிஃபா விருது போர்ச்சுகல் அணியின் முன்னணி கால்பந்து வீரரான ரோனால்டோவிற்கு வழங்கப் பட இருக்கிறது.ஒவ்வொரு வருடமும் சிறந்து விளங்கும் கால்பந்தாட்ட வீரர்களை கவுரவிக்கும் வகையில் விருதுகள் வழங்கப்படுவது வழக்கம்.அதன் படி 2016 ஆண்டிற்கான சிறந்த கால்பந்தாட்ட வீரர் என்ற கவுரவத்தை பெற்றிருக்கிறார் ரோனால்டோ. சிறந்த வீரருக்கான வாக்கெடுப்பில் ரோனால்டோ 34.54 சதவிகிதம் பெற்று முதலிடமும், அர்ஜெண்டினாவை சேர்ந்த மெஸ்ஸி 26.42 சதவிகிதம் பெற்று இரண்டாம் இடமும் பிடித்தனர்.பெரும் எதிபார்ப்புக்கு இடையில் ரோனால்டோ தேர்வு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. http://www.vikatan.com/news/sports/77411…

  18. தோனி - யுவராஜ்: நண்பர்களின் இணையத்தளக் குறும்பு (காணொளி இணைப்பு) தோனி-யுவராஜ் இருவரும் பரம வைரிகளாகவே சித்தரிக்கப்பட்டுவந்த நிலையில், யுவராஜ் வெளியிட்டிருக்கும் ஒரு வீடியோ அந்த எண்ணத்தை உடைத்தெறிந்திருக்கிறது. தோனியின் தோளில் கைபோட்டு இறுக்கிக்கொண்டே யுவராஜ் சில கேள்விகளைக் கேட்க, அதற்கு புன்னகை மாறாத முகத்துடன் தோனி பதிலளிக்கும் வீடியோவை யுவராஜ் தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவேற்றியிருக்கிறார். இங்கிலாந்து ஏ அணிக்கெதிரான போட்டி முடிந்த சற்று நேரத்தில் பதிவுசெய்யப்பட்ட இந்த வீடியோவில், தலைவர் பதவியில் இருந்து விலகியுள்ள தோனியிடம் யுவராஜ் ஓரிரு கேள்விகளைக் கேட்டிருக்கிறார். ‘கிரிக்கெட் வீரராக…

  19. மலிங்க தயாராம் கிரிக்கெட் நிறுவனம் தயாரில்லையாம் தென்­னா­பி­ரிக்க அணிக்கு எதி­ராக நடை­பெ­ற­வுள்ள இரு­ப­துக்கு 20 கிரிக்கெட் தொடரில் விளை­யாடும் வாய்ப்பை இலங்கை அணியின் முன்­னணி வேகப்­பந்து வீச்­சா­ள­ரான லசித் மலிங்க இழந்­துள்ளார். மலிங்க இன்னும் முழு உடல் தகுதி பெறா­மையே அவர் அணியில் இடம்­பெ­றா­த­தற்கு காரணம் என்று தெரிவிக்கப்படுகிறது. அத்­தோடு கடந்த மாதம் அவ­ருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்­பட்­ட­தால் சீரான பயிற்­சி­யிலும் அவர் ஈடு­ப­ட­வில்லை. அதன் கார­ண­மாகவே மலிங்­கவை அணியில் சேர்த்­துக்­கொள்­ள­வில்லை என்றும் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. ஆனாலும் எதிர்­வரும் பெப்­ர­வரி மாதம் அவுஸ்­தி­ரே­லிய அணி­யுடன் நடை­பெ­ற­வுள்ள இரு­ப­துக்கு 20 க…

  20. ஐபிஎல் அணிக்கு கேப்டனாக நீடிப்பேன்: தோனி பயிற்சியில் தோனி. | படம்.| ஏ.எஃப்.பி. மும்பை பிரபர்ன் மைதானத்தில் நடைபெறும் இங்கிலாந்துக்கு எதிரான இந்தியா ஏ அணியின் கேப்டன் தோனி ஐபிஎல் கிரிக்கெட் அணிக்கு தொடர்ந்து கேப்டனாக நீடிப்பேன் என்று கூறியுள்ளார். மும்பை பிரபர்ன் மைதானத்தில் நீலச் சீருடையில் தோனி தனது கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய ஏ அணியை வழிநடத்துகிறார். இன்று டாஸ் சென்ற போது எல்.சிவராமகிருஷ்ணனிடம் தோனி கூறும்போது, “இது எனக்கு சிறப்பு வாய்ந்த போட்டி, கேப்டனாக (இந்தியா) எனது கடைசி போட்டி, ஆனால் ஐபிஎல் அணிக்கு கேப்டனாக நீடிப்பேன், ஜார்கண்ட் அணிக்கும் கேப்டன் பொறுப்பு வகிக்க வாய்ப்புள்ளது”…

  21. கனரக மட்டையுடன் இந்திய ‘சுழற்பந்து வீச்சை’ ஆதிக்கம் செலுத்த வார்னர் கடும் பயிற்சி யாசிர் ஷாவை சிட்னி டெஸ்ட் போட்டியில் எக்ஸ்ட்ரா கவருக்கு மேல் சிக்ஸ் அடிக்கும் வார்னர். | படம்.| ராய்ட்டர்ஸ். துணைக்கண்டத்தின் ‘குறைந்த பவுன்ஸ்’, ‘சுழற்பந்து வீச்சு’ ஆகியவற்றை ஆதிக்கம் செலுத்த கனரக மட்டையைக் கொண்டு பயிற்சியில் ஈடுபட்டுள்ளார் ஆஸ்திரேலிய அதிரடி தொடக்க வீரர் டேவிட் வார்னர். இது குறித்து ஆஸ்திரேலிய ஊடகமான சிட்னி மார்னிங் ஹெரால்ட் வெளியிட்டுள்ள செய்திகளின் படி, டேவிட் வார்னர் வழக்கமாக 1.23 கிலோ எடைகொண்ட மட்டையைத்தான் பயன்படுத்தி வருகிறார். ஆனால் இம்முறை இந்தியாவுக்கு எதிராக 1.28 கி…

  22. உலகக் கிண்ணப் போட்­டி­களில் 48 நாடுகள்; பீபா வாக்­கெ­டுப்பு இன்று இன்னும் ஒன்­பது வரு­டங்­களில் நடை­பெ­ற­வுள்ள உலகக் கிண்ண கால்­பந்­தாட்டப் போட்­டி­களில் பங்­கு­பற்றும் நாடு­களின் எண்­ணிக்­கையை 48ஆக உயர்த்த சர்­வ­தேச கால்­பந்­தாட்ட சம்­மே­ள­னங்­களின் சங்கம் (பீபா FIFA) திட்­ட­மிட்­டுள்­ளது. உலகக் கிண்ணப் போட்­டி­களில் நாடு­களின் பங்­கேற்பை அதி­க­ரிப்­ப­தற்கு பீபா தலைவர் ஜியானி இன்­பன்­டீனொ பெரும் அக்­க­றை­யுடன் செயற்­பட்டு வரு­கின்றார். இந் நிலையில் சூரிச்சில் இன்று கூடும் பீபா பிர­தி­நி­திகள் அணி­களின் எண்­ணிக்­கையை அதி­க­ரிப்­பதா என்­பது குறித்து நடத்­தப்­படும் வாக்­கெ­டுப்பில் கலந…

  23. பேட்ஸ்மேன் தரவரிசை: விராட் கோலியை துரத்தும் கேன் வில்லியம்சன் பேட்ஸ்மேன் தரவரிசையில் மூன்று வகை கிரிக்கெட்டிலும் நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் முதன்முறையாக ஐந்து இடத்திற்குள் முன்னேறியுள்ளார். இந்த தலைமுறையின் சிறந்த வீரர்களாக கருதப்படுபவர்கள் விராட் கோலி (இந்தியா), ஸ்டீவ் ஸ்மித் (ஆஸ்திரேலியா), ஜோ ரூட் (இங்கிலாந்து), கேன் வில்லியம்சன் (நியூசிலாந்து). இவர்களிடையே ரன் குவிப்பதில் கடும்போட்டி நிலவி வருகிறது. ஒருநாள் போட்டியில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் இந்திய அணி கேப்டன் விராட் கோலி டெஸ்ட் போ…

  24. கோஹ்லிக்காக தோனி கேப்டன்சியைப் பறித்ததா பி.சி.சி.ஐ.!? குபீர் பின்னணி கடந்த ஜனவரி நான்காம் தேதி இரவு, கேப்டன் பதவியில் இருந்து தோனி விலகினார் என பி.சி.சி.ஐ அறிவிக்க, நாடு முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தார்கள். இந்தியாவின் தலைசிறந்த கேப்டன்களில் ஒருவர் தோனி. ஐ.சி.சி நடத்திய கோப்பைகள் அனைத்தையும் இந்தியா ஜெயிப்பதற்கு காரணமான முக்கியமான நபர் மகேந்திர சிங் தோனி. உலகிலேயே ஐ.சி.சி கோப்பைகள் அனைத்தையும் வைத்திருக்கும் ஒரே கிரிக்கெட் வீரரும் சரி, கேப்டனும் சரி தோனி மட்டும் தான். இந்தச் சூழ்நிலையில் தோனி ஏன் விலகினார் என்பது மர்மமாகவே இருந்தது. தோனி இதுவரை வெளிப்படையாக கடிதம் மூலமோ, பேட்டி மூலமோ, சமூக வலைதளங்கள் மூலமோ அதிக…

  25. இந்தியா-வங்காளதேசம் டெஸ்ட் போட்டியை நடத்த ஐதராபாத் கிரிக்கெட் சங்கம் மறுப்பு இந்தியா-வங்காளதேசம் அணிகள் இடையிலான டெஸ்ட் போட்டியை நடத்த ஐதராபாத் கிரிக்கெட் சங்கம் மறுத்துள்ளது. இது குறித்த செய்தியை விரிவாக பார்க்கலாம். புதுடெல்லி : வங்காளதேச கிரிக்கெட் அணி அடுத்த மாதம் (பிப்ரவரி) இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளது. அந்த அணி இந்திய மண்ணில் டெஸ்ட் போட்டியில் பங்கேற்க இருப்பது இதுவே முதல் முறையாகும். இந்த போட்டி ஐதராபாத்தில் பிப்ரவரி 8-ந்தேதி தொடங்குவதாக இருந்தது. இந…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.