விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7860 topics in this forum
-
10 சிக்சர்களுடன் 41 பந்துகளில் 94 ரன்கள் விளாசல்: கோரி ஆண்டர்சன் சரவெடியில் நியூஸிலாந்து வெற்றி பந்தை சிக்சருக்கு தூக்கி அடிக்கும் கோரி ஆண்டர்சன். | படம். ஏ.எப்.பி. நியூஸிலாந்தின் மவுண்ட் மாங்கனுயில் நடைபெற்ற 3-வது, கடைசி டி20 போட்டியிலும் வங்கதேசத்தை வீழ்த்திய நியூஸிலாந்து ஒருநாள் தொடரை 3-0 என்று கைப்பற்றியது போலவே டி20 தொடரிலும் 3-0 என்று வெற்றி பெற்றது. முதலில் பேட் செய்த நியூஸிலாந்து 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 194 ரன்களை எடுத்தது. கோரி ஆண்டர்சன் ஒருநாள் போட்டிகளில் 2014-ல் 36 பந்துகளில் சதம் அடித்தார், இன்று அதிவேகே டி20 சதத்திற்கான சாதனையையும் சொந்தமாக்கிக் கொண்டிருப்பார், ஆனால் 20 ஓவர்களுக்குள் அதைச் செய்ய முடிய…
-
- 5 replies
- 528 views
-
-
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் மீது துப்பாக்கி சூடு: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷபூர் ஷத்ரான் சென்ற வாகனம் மீது அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தினார்கள். இதில் ஷபூர் உயிர்தப்பினார். ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியில் இடம்பிடித்துள்ள வேகப்பந்து வீச்சாளர் ஷபூர் ஷத்ரான். 29 வயதாகும் இவர் அந்த அணிக்காக 39 ஒருநாள் மற்றும் 27 டி20 போட்டிகளில் பங்கேற்றுள்ளார். கடைசியாக அயர்லாந்து அணிக்கெதிராக கடந்த ஆண்டு ஜூலை 12-ந்தேதி சர்வதேச போட்டியில் விளையாடி உள்ளார். தற்போதும் அந்த அணிக்காக விளையாடி வருகிறார். இவர்…
-
- 0 replies
- 358 views
-
-
ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் மோதும் முதல் டெஸ்ட் நாளை தொடக்கம் ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் ஆகிய இரு அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி நாளை பிரிஸ்மேனில் தொடங்குகிறது. பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 3 டெஸ்ட், 5 ஒரு நாள் போட்டியில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியாவுக்கு சென்று உள்ளது. இரு அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி நாளை பிரிஸ்மேனில் தொடங்குகிறது. சமீபத்தில் ஆஸ்திரேலியா தனது சொந்த மண்ணில் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இழந்தது. இதனால் பாகிஸ்தான் டெஸ்ட் தொடரை கைப்பற்றும் கட்டாயத்தில் உள்ளது. பாகிஸ்தான் அணி பயிற்சி ஆட்டத்தில் வெற்றி பெற்றது. இதனால் நம்பிக்க…
-
- 30 replies
- 2.3k views
-
-
சாம்பியனாகியும் நம்பர் ஒன்னை மிஸ் செய்த சானியா பிரிஸ்பென் சர்வதேச டென்னிஸ், இறுதிப் போட்டியில் சானியாமிர்சா-பெதனி மட்டேக் இணை, ரஷ்யாவின் மகரோவா, வெஸ்னியா இணை மோதினர். இதில் 6-2, 6-3 என்ற செட் கணக்குகளில் சானியா இணை வெற்றி பெற்று, சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. ஆனாலும், சர்வதேச அரங்கில், இரட்டையர் பிரிவில் முதல் இடத்தை சானியா இழந்துள்ளார். சானியா மிர்சா கடந்த 2015-ஆம் ஆண்டு, ஏப்ரல் 13-ஆம் தேதி முதல், பெண்கள் இரட்டையர் பிரிவு டென்னிஸில் தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் வீராங்கனையாக இருந்தது குறிப்பிடத்தக்கது. http://www.vikatan.com/news/sports/77223-sania-loses-no-1-spot-in-tennis.art
-
- 0 replies
- 359 views
-
-
இந்திய தொடர் மிகவும் கடினமாக இருக்கும்: ஆஸி. வீரர்களுக்கு ஸ்மித் எச்சரிக்கை இந்திய தொடர் மிகவும் கடினமாக இருக்கும் என்று ஆஸ்திரேலிய அணியின் வீரர்களுக்கு கேப்டன் ஸ்மித் எச்சரித்துள்ளார். ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகளுக்கான இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலியா 3-0 எனக் கைப்பற்றியுள்ளது. இந்த வெற்றிக்குப் பிறகு ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்மித் வீர்ரகளுக்கு ஒரு எச்சரிக்கை விடுத்துள்ளார். அதில் இனி வரப்போகும் இந்திய தொடர் மிகவும் கடினமாக இருக்கப்போகிறது என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஸ்ம…
-
- 0 replies
- 332 views
-
-
மான்செஸ்டர் அணிக்காக 249 கோல்கள் அடித்து பாபி சார்ல்டன் சாதனையை சமன் செய்தார் ரூனே மான்செஸ்டர் அணிக்காக 249 கோல்கள் அடித்து முன்னாள் ஜாம்பவான் பாபி சார்ல்டன் சாதனையை சமன் செய்துள்ளார் வெயின் ரூனே. இங்கிலாந்து அணியின் முன்னணி கால்பந்து வீரர் வெயின் ரூனே. 31 வயதாகும் ரூனே அந்நாட்டின் பிரபலமான மான்செஸ்டர் யுனைடெட் அணியில் விளையாடி வருகிறார். கடந்த 2004-ம் ஆண்டில் இருந்து அந்த அணிக்காக விளையாடி வரும் அவர் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். எஃ.ப்.ஏ. கோப்பைக்கான 3-வது சுற்றில் மான்செஸ்டர் அணி இன்று ரீடிங் அணியை எதிர்கொண்டது. அப்போது ஆட்டம் தொடங…
-
- 0 replies
- 372 views
-
-
39 போட்டியில் தோல்வியை சந்திக்காமல் பார்சிலோனா சாதனையை சமன் செய்தது ரியல் மாட்ரிட் லா லிகா தொடரில் கிரனாடாவை 5-0 என வீழ்த்தியன் மூலம் தொடர்ச்சியாக 39 தோல்வியை சந்திக்காமல் பார்சிலோனா சாதனையை சமன் செய்தது ரியல் மாட்ரிட். ஸ்பெயின் நாட்டின் கால்பந்து கிளப்புகளில் பார்சிலோனா, ரியல் மாட்ரிட் அணிகள் முன்னணி கிளப்பாக விளங்கி வருகின்றன. இந்த இரண்டிலும் பார்சிலோனா சிறந்த அணியாக விளங்கி வருகிறது. பார்சிலோனா அணி தொடர்ச்சியாக 39 போட்டிகளில் தோல்வியை சந்திக்காமல் வீறுநடை போட்டு சாதனைப் படைத்திருந்தது. அந்த சாதனையை எந்த கிளப் அணி…
-
- 0 replies
- 277 views
-
-
11 நாடுகளில் சதம் யூனுஸ்கான் புதிய சாதனை அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் பாகிஸ் தான் அணி யூனுஸ்கானின் சதத்தால் 3ஆ-வது நாள் ஆட்டத்தில் 8 விக்கெட்டுக்களை இழந்து 271 ஓட்டங்களை எடுத்தது. அவுஸ்திரேலிய மண்ணில் யூனுஸ்கான் சதம் அடிப்பது இதுவே முதல்முறை. மேலும் டெஸ்ட் அந்தஸ்து பெற்ற அனைத்து அணிகளுக்கு எதிராகவும் சதம் அடித்தவர் என்ற சாதனையையும் யூனுஸ்கான் படைத்தார். இத்துடன் டெஸ்ட் போட்டிகள் நடைபெற்ற 11 நாடுகளில் சதம் அடித்த முதல் வீரர் என்ற சாதனையையும் நிகழ்த்தி உள்ளார் யூனுஸ்கான். சங்கக்கார, மஹேல, ராகுல் டிராவிட், முகமது யூசுப் ஆகியோர் 10 நாடுகளில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் சத…
-
- 0 replies
- 340 views
-
-
10 ஆயிரம் ரன்னை தவறவிட்ட யூனுஸ்கான் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் யூனுஸ்கான் சிட்னி டெஸ்டில் 13 ரன்னில் 10 ஆயிரம் ரன்னை தவற விட்டார். பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் யூனுஸ்கான். 39 வயதான இவர் சிட்னி டெஸ்டில் முதல் இன்னிங்சில் 175 ரன்கள் குவித்தார். இதன் மூலம் அவரது டெஸ்ட் ரன்களின் எண்ணிக்கை 9964 ஆக உயர்ந்தது. 2-வது இன்னிங்சில் 36 ரன் எடுத்ததில் யூனுஸ்கான் 10 ஆயிரம் ரன்னை கடந்த முதல் பாகிஸ்தான் வீரர் என்ற பெருமையை பெறுவார். ஆனால் அவர் 13 ரன்னில் ஆட்டம் இழந்ததால் 10 ஆயிரம் ரன்னை தவற விட்டார். யூனுஸ்கான் 115 டெஸ்டில் விளையாடி 9…
-
- 0 replies
- 504 views
-
-
பிக் பாஷ் டி20 லீக்: இரண்டாக உடைந்த மெக்கல்லத்தின் பேட் பிக் பாஷ் டி20 லீக் தொடரில் விளையாடிக் கொண்டிருந்து நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மெக்கல்லத்தின் பேட் இரண்டாக உடைந்தது. ஆஸ்திரேலியாவில் பிக் பாஷ் டி20 லீக் தொடர் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற போட்டியில் பெர்த் ஸ்கார்ச்செர்ஸ் - பிரிஸ்பேன் ஹீட் அணிகள் மோதின. முதலில் விளையாடிய பெர்த் ஸ்கார்ச்செர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 73 ரன்கள் குவித்தது. அடுத்து 174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பிரிஸ்பேன் ஹீட் அணியின் பியர்சன், பிர…
-
- 0 replies
- 488 views
-
-
தென் ஆப்பிரிக்க அணியை விட்டுச் செல்கிறார் கைல் அபாட் கைல் அபாட். | கெட்டி இமேஜஸ். தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் கைல் அபாட் தென் ஆப்பிரிக்க அணியை விடுத்து இங்கிலாந்து கவுண்டி ஹாம்ப்ஷயர் அணிக்கு விளையாட முடிவெடுத்துக் கிளம்புகிறார். கைல் அபாட்டுடன் இது குறித்து கிரிக்கெட் தென் ஆப்பிரிக்கா வாரியம் மேற்கொண்ட பேச்சு வார்த்தை முயற்சிகள் தோல்வியடைந்தன, தென் ஆப்பிரிக்காவுக்கு தொடர்ந்து விளையாடுமாறும் தென் ஆப்பிரிக்காவை விட்டுச் செல்ல வேண்டாம் என்றும் அபாட்டை கிரிக்கெட் வாரியத்தினால் சமாதானப்படுத்த முடியவில்லை. எனவே தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்துடனான கைல் அபாட்டின் ஒப்பந்தம் உடனடியாக முடிவுக்கு வருகிறது. …
-
- 0 replies
- 461 views
-
-
1996 உலக சம்பியன் அணி முன்னாள் கிரிக்கெட் வீரர்களுக்கு நிதியுதவி 1996 ஆம் ஆண்டு கிரிக்கெட் உலக சம்பியனான அணி வீரர்கள் இணைந்து முன்னாள் வீரர்களுக்கு உதவிகளை வழங்குவதற்கான அறக்கட்டளை ஒன்றை கடந்த செவ்வாய்க்கிழமை அங்குரார்ப்பணம் செய்தனர். இதன் மூலம் முன்னாள் வீரர்கள் இருவருக்கு நிதி உதவிகளையும் அன்றைய தினம் வழங்கிவைத்தனர். அர்ஜுன ரணதுங்க தலைமையிலான இலங்கை கிரிக்கெட் அணி 1996 ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தை வென்று இலங்கையை உலக அளவில் பிரகாசிக்க வைத்தது. அந்த அணி வீரர்கள் அனைவரும் இணைந்து 3.6 மில்லியன் ரூபா நிதியுடன் புதிய அறக்கட்டளை ஒன்றை நேற்றுமுன்தினம் அங்குரார்ப்பணம் செய்…
-
- 0 replies
- 422 views
-
-
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக கங்குலி நியமிக்கப்பட வாய்ப்பு? இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக கங்குலி நியமிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. புதுடெல்லி: லோதா கமிட்டியின் பரிந்துரைகளை அமல்படுத்த தவறியதால் இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் அனுராக் தாகூர், செயலாளர் அஜய் ஷிர்கே ஆகியோரை நீக்கி, சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதையடுத்து செல்வாக்குமிக்க இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் பதவியை ஏற்கப்போவது யார்? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது. இந்த பணிக்கு தகுதியான நபரை…
-
- 1 reply
- 444 views
-
-
பாக். மண்ணில் கிரிக்கெட்: பாதுகாப்பு அனுமதி, வீரர்கள் ஒப்பந்தம் குறித்து யோசிக்கும் வெ.இண்டீஸ் பாகிஸ்தான் மண்ணில் விளையாடுவதற்கு பாதுகாப்பு அனுமதி மற்றும் வீரர்கள் ஒப்பந்தம் தொடர்பான பிரச்சினை குறித்து வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் யோசித்து வருகிறது. 2009-ம் ஆண்டு பாகிஸ்தான் மண்ணில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். அதன்பிற்கு எந்தவொரு கிரிக்கெட் அணியும் பாகிஸ்தான் சென்று விளையாடவில்லை. இதனால் எப்படியாவது முன்னணி அணிக்கெதிரான தொடரை பாகிஸ்தான் மண்ணில் நடத்தியே தீர வேண்டும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தொடர் முயற்சியில் ஈடுபட்ட…
-
- 0 replies
- 310 views
-
-
டெஸ்ட் போட்டியின் உணவு இடைவேளைக்கு முன்னர் சதமடித்து டேவிட் வார்னர் சாதனை கிரிக்கெட் டெஸ்ட் போட்டியின் தொடக்க நாளில் உணவு இடைவேளைக்கு முன்பே சதமடித்த ஐந்தாவது வீரர் என்ற பெருமையை ஆஸ்திரேலியாவின் தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் படைத்துள்ளார். அதிவேக சதமடித்த டேவிட் வார்னர் இன்று ( செவாய்க்கிழமை) சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக நடந்த டெஸ்ட் போட்டியின் போது, இடது கை தொடக்க ஆட்டக்காரரான வார்னர் 78 பந்துகளில் சதமடித்து இந்த சாதனையை எடுத்துள்ளார். டெஸ்ட் போட்டியின் முதல் நாளான இன்று, உணவு இடைவேளைக்கு நான்கு நிமிடங்களுக்கு முன்னர், வார்னர் இந்த மைல்கல்லை எட்டினார். …
-
- 1 reply
- 445 views
-
-
முதல் டி20 கிரிக்கெட்: வங்காள தேசத்தை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது நியூசிலாந்து கேன் வில்லியம்சின் அபார ஆட்டத்தால் முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் வங்காள தேசத்தை 6 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது நியூசிலாந்து. வங்காள தேசம் அணி மூன்று வகை கிரிக்கெட் தொடரிலும் விளையாடுவதற்காக நியூசிலாந்து சென்றுள்ளது. ஏற்கனவே முடிவடைந்த இரு அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடரை நியூசிலாந்து 3-0 எனக் கைப்பற்றியது. இந்நிலையில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் இன்று தொடங்கியது. நேப்பியரில் நடைபெற்ற முதல் போட்டியில் வங்காள தேசம் அணி டாஸ் வென்று பேட்டிங் தேர…
-
- 0 replies
- 238 views
-
-
பாகிஸ்தான் நடுவர் அலீம் தார் சாதனை பாகிஸ்தானின் நடுவர் அலீம் தார் அதிக டெஸ்ட் போட்டிகளில் நடுவராகப் பணியாற்றியவர் என்ற சாதனையை நிலைநாட்டியுள்ளார். தென் ஆபிரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையில் கேப் டவுனில் நடைபெறும் டெஸ்ட் போட்டியானது அவர் மத்தியஸ்தம் வகிக்கும் 332ஆவது போட்டியாகும். அலீம் தார் 2000ஆம் ஆண்டு முதன் முதலில் டெஸ்ட் போட்டி ஒன்றில் நடுவராகப் கடமையாற்றியிருந்தார். இதற்கு முன்னர் அதிக டெஸ்ட்களில் நடுவராகப் பணியாற்றியவர் தென் ஆபிரிக்காவின் ரூடி கேர்ட்சன் ஆவார். இவர் 331 டெஸ்ட் போட்டிகளில் நடுவராகப்பணியாற்றியதுடன் 2010 இல் ஓய்வு பெற்றார். - See more…
-
- 0 replies
- 363 views
-
-
சிட்னி டெஸ்டில் மிஸ்பாதான் கேப்டன்: பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சிட்னி டெஸ்டில் பாகிஸ்தான் அணியின் கேப்டனாக மிஸ்பா உல் ஹக் செயல்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியா சென்று விளையாடி வருகிறது. மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலியா 2-0 எனக் கைப்பற்றி முன்னிலையில் இருக்கிறது. ‘பாக்சிங் டே’ டெஸ்ட் டிராவில் முடியும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பாகிஸ்தான் அணி இன்னிங்ஸ் மற்றும் 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து. இதனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறு…
-
- 1 reply
- 322 views
-
-
வாரம் 96 லட்சம் - மைக்கேல் ஷூமேக்கர் மெடிக்கல் பில் இதுவரை ரூ.116 கோடி! ‘ஒரு தலைவலி, காய்ச்சல் என்றாலே 500 ரூவா காலியாகிடுதுப்பா” - இப்படிப் புலம்பாதவர்களே இருக்க முடியாது. மருத்துவச் செலவுகள் என்பது தவிர்க்க முடியாததாக ஆகிவிட்ட காலகட்டம் இது. எதிர்பாராதவிதமாய் ஒரு விபத்தில் மாட்டிக் கொண்ட கார் பந்தய ஜாம்பவான் மைக்கேல் ஷூமேக்கரின் மெடிக்கல் பில் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இவரது மருத்துவச் செலவாக இதுவரை ரூ. 116 கோடி செலவிடப்பட்டுள்ளது. ஜெர்மன் நாட்டைச் சேரந்த 45 வயதான பார்மூலா -1 கார் பந்தய வீரர் மைக்கல் ஷூமேக்கர் கடந்த 2013 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 19 ஆம் தேதி, பிரான்சில் உள்ள ஆல்ப்ஸ் மலைப் பகுதியில் பனிச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டுக் கொ…
-
- 0 replies
- 421 views
-
-
ரொனால்டோவின் கடின உழைப்பு எனக்கு உத்வேகம் அளித்தது: விராட் கோலி கிறிஸ்டியானோ ரொனால்டோவின் கடின உழைப்பினால் அதிக அளவில் உத்வேகம் அடைந்துள்ளேன் என்று இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார். கால்பந்து உலகில் கொடிகட்டிப் பறப்பவர் போர்ச்சுக்கல் நாட்டின் கிறிஸ்டியானா ரொனால்டோ. ஸ்பெயின் நாட்டின் ரியல் மாட்ரிட் அணிக்காக விளையாடும் அவர், கடின உழைப்பால் 31 வயதிலும் தலைசிறந்த வீரராக திகழ்ந்து வருகிறார். இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருக்கும் விராட் கோலி தனது கடின முயற்சியால் தலைசிறந்த வீரராக திகழ்ந்து வருகிறார். தனது கடின உழைப்…
-
- 0 replies
- 460 views
-
-
2016-இல் விளையாட்டு உலகம் - சாதனைகளும், சர்ச்சைகளும் கடந்த 2016-ஆம் ஆண்டில், விளையாட்டு உலகில் பல சாதனைகள் முறியடிக்கப்பட்டன; புதிய வரலாறு நிகழ்த்தப்பட்டது; சாதனையாளர்கள் தங்களை உறுதிப்படுத்திக் கொண்டனர்; புதிய நம்பிக்கை நட்சத்திரங்கள் உருவாகியுள்ளனர். 2016-இல் நடந்த விளையாட்டு உலக சாதனைகள் மற்றும் நிகழ்வுகள் குறித்த தொகுப்பை இங்கு காணலாம். டென்னிஸ் : புதிய நம்பிக்கை நட்சத்திரங்களாக உருவெடுத்த அன்ஜெலீக் கெர்பர், வாவ்ரிங்கா டென்னிஸ் போட்டிகளில் மிகவும் முக்கியமானதாக கருதப்படும் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஆஸ்திரேலிய மற்றும் ஃபிரெஞ் ஓபன் பட்டங்களை ஜோகோவிச் வென்றார். விம்பிள்டன் பட்டத்தை பிரிட்டன் வீரர் ஆண…
-
- 0 replies
- 382 views
-
-
கிரிக்கெட் தொடர் ரத்து: இந்திய கிரிக்கெட் வாரியம் மீது பாகிஸ்தான் வழக்கு கிரிக்கெட் தொடர் ரத்து செய்யப்பட்டதால் இந்திய கிரிக்கெட் வாரியம் மீது பாகிஸ்தான் வழக்கு தொடர முடிவு செய்துள்ளது. கராச்சி: இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் இடையே 2015-ம் ஆண்டு முதல் 2023-ம் ஆண்டு வரை 6 போட்டி தொடர் நடத்த இரு நாட்டு கிரிக்கெட் வாரியங்களும் முடிவு செய்து ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. ஆனால் பாகிஸ்தான் ராணுவம் எல்லையில் அத்துமீறி தொடர்ந்து தாக்குதல் நடத்தி வந்ததால் கிரிக்கெட் போட்டி தொடருக்கு இந்திய அரசு அனுமதி வழங…
-
- 0 replies
- 298 views
-
-
முன்னாள் இந்திய அணித்தலைவர் சவுரவ் கங்குலி லண்டனில் துப்பாக்கி முனையில் சிக்கிய சம்பவம் தற்போது தெரியவந்துள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிவாகை சூடிய அணித்தலைவர் என வர்ணிக்கப்பட்டவர் சவுரவ் கங்குலி. சச்சின், லட்சுமண், டிராவிட் உள்ளிட்ட ஜாம்பவான்கள் இடம் பெற்ற அணியை வெற்றிகரமாக வழிநடத்தியவர் கங்குலி. இவர் கடந்த 1996ல் பிரித்தானியா சென்ற போது, தனது வாழ்க்கையில் நடந்த மோசமான நிகழ்வை தற்போது வெளியிட்டுள்ளார். கடந்த 1996 ஆம் ஆண்டு லண்டன் சென்ற போது, ஒரு கும்பலிடம் துப்பாக்கி முனையில் சிக்கிய சம்பவத்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்து விளக்கிய கங்குலி, லண்டனின் பின்னர் பகுதியில் உள்ள சுரங்கப்பாதையில் நாங்கள் ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்த போது எங்கள் கே…
-
- 0 replies
- 361 views
-
-
ஆஸ்திரேலிய அணியின் உதவி பயிற்சியாளராக பாண்டிங் நியமனம் இலங்கை அணிக்கெதிரான டி20 கிரிக்கெட் தொடருக்கான ஆஸ்திரேலிய அணியின் உதவி பயிற்சியாளராக பாண்டிங் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இலங்கை அணி பிப்ரவரி மாதம் ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து மூன்று டி20 கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது. முதல் போட்டி 17-ந்தேதியும், 2-வது போட்டி 19-ந்தேதியும், 3-வது மற்றும் கடைசி போட்டி 22-ந்தேதியும் நடக்கிறது. 23-ந்தேதி ஆஸ்திரேலியா இந்தியாவில் டெஸ்ட் போட்டியில் மோதுகிறது. 22-ந்தேதி போட்டியை முடித்துக் கொண்டு 23-ந்தேதி இந்தியாவிற்கு ஆ…
-
- 0 replies
- 254 views
-
-
யாழ். சென். ஜோன்ஸ் - குருநாகல் புனித ஆனாள் போட்டி வெற்றிதோல்வியின்றி முடிவு யாழ். சென் ஜோன்ஸ் அணிக்கும் குருநாகல் புனித ஆனாள் அணிக்கும் இடையில் வார இறுதியில் நடைபெற்ற பாடசாலை கிரிக்கட் போட்டி வெற்றிதோல்வியின்றி முடிவடைந்தது. இந்தப் போட்டியில் துடுப்பாட்டத்தில் எவரும் குறிப்பிட்டுக் கூறுமளவுக்கு பிரகாசிக்காதபோதிலும் செய்ன் ஜோன்ஸ் வீரர்களான யதுசன் வசந்தன்இ கானாமிர்தன் அருளானந்தம் ஆகிய இருவரும் ஓர் இன்னிங்ஸில் தலா 5 விக்கெட்டுக்களைக் கைப்பற்றி பந்துவீச்சில் திறமையை வெளிப்படுத்தினர். நத்தார் பண்டிகைக்கு முன்னர் கண்டி திரித்துவ கல்லூரியை அதிர்ச்சி அடை யச் செய்து வெற்றி கொண்டிருந்த செய்ன் ஜோன்ஸ…
-
- 46 replies
- 4.6k views
-