விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7848 topics in this forum
-
ஆங்கிலேய ப்றிமியர் லீக் போட்டியில் செல்சி கழகம் 12 ஆவது நேரடி வெற்றி 2016-12-28 10:56:27 இங்கிலாந்தில் நடைபெற்றுவரும் ஆங்கிலேய ப்றீமியர் லீக் கால்பந்தாட்டப் போட்டிகளில் செல்ஸி விளையாட்டுக் கழகம் தொடர்ச்சியாக 12 வெற்றிகளை ஈட்டி சாதனை நிலைநாட்டியுள்ளது. போர்ன்மௌத் கழகத்திற்கு எதிராக திங்களன்று நடைபெற்ற ப்றீமியர் லீக் போட்டியில் 3 – 0 என்ற கோல்கள் அடிப்படையில் வெற்றியீட்டியதன் மூலம் இந்த சாதனையை செல்சி கழகம் படைத்தது. இப் போட்டியில் ஒரு தட்டு, இரண்டு தட்டுகள் என்ற பந்து பரிமாற்றங்களுடன் மிக வேகமாக விளையாடிய செல்சி கழகம் எதிரணியை மாத்திரம…
-
- 0 replies
- 278 views
-
-
இன்சமாம், யூசுப் சாதனை: சமன் செய்த அஸார் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்துவரும் அஸார் அலி இந்த வருடத்தில் 1000 ரன்களை கடந்தார். இந்த வருடம் விராட் கோலிக்குப் பிறகு 1000 ரன்களை கடக்கும் 2-வது ஆசிய வீரர் இவர் தான். மேலும் இன்சமாம், யூசுப், மொயின் கான், யூனிஸுக்கு பிறகு 1000 ரன்களை கடக்கும் பாக் வீரர் அஸார் அலி தான். பாக்ஸிங் டே டெஸ்ட்டில் அஸார் அலியின் ஆட்டம் காரணமாக முதல் இன்னிங்ஸில் 300 ரன்களை கடந்து ஆடி வருகிறது பாக் அணி, அஸார் 90 ரன்களில் இருந்த போது மூன்றாவது நடுவர் நாட் அவுட் பட்டனுக்கு பதில் அவுட் பட்டனை அழுத்தியது குறிப்பிடத்தக்கது. http://www.vikatan.com/news/sports/76115-azar-ali-equals-inzamam-recor…
-
- 1 reply
- 479 views
-
-
பாகிஸ்தான் கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக சீக்கிய வீரர் தேர்வு! கராச்சி: பாகிஸ்தான் தேசிய கிரிக்கெட் அகடாமிக்கு முதல் முறையாக மகேந்தர் பால் சிங் என்ற என்ற சீக்கிய வீரர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அந்நாட்டு கிரிக்கெட் பயிற்சிக்கு சீக்கியர் ஒருவர் தேர்வு செய்யப்படுவது இதுவே முதல் முறை ஆகும். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சார்பில் கராச்சியில் உள்ள தேசிய கிரிக்கெட் அகடாமி வளாகத்தில் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு பயிற்சி முகாம் நடைபெறுகிறது. இதில் பஞ்சாப் பல்கலைகழகத்தில் பயின்று வரும் மகேந்தர் பால் சிங் (21) என்பவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். …
-
- 0 replies
- 358 views
-
-
மனைவியின் உடையால் சமூக ஊடகங்களில் சர்ச்சை: கிரிக்கெட் வீரர் முகமது ஷமி ஆவேசம் 22 போட்டிகளில் ஆடியுள்ளார் முகமது ஷமி சமூக ஊடகங்களில், தனது மனைவியின் உடை குறித்து விமர்சனம் செய்தவர்களுக்கு இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி ஆவேசமாகப் பதிலளித்துள்ளார். ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டரில் தனது மனைவியின் புகைப்படத்தை ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டிருந்த ஷமி, `அழகான நேரங்கள்' என வர்ணித்திருந்தார். இதுகுறித்து சமூக வலைத்தளங்களில் சிலர் கருத்து வெளியிட்டனர். அதில், இஸ்லாத்தைப் பின்பற்றுமாறும், அவரது மனைவி ஹிஜாப் மற்றும் நாகரீகமான உடை உடுத்துவதை உறுதிப்படுத்துமாறும் குறிப்பிட்டிருந்தனர். இதுகுறித்து, திங்கள்கிழமை கருத்து வெளியிட்டுள்ள முகமத…
-
- 0 replies
- 576 views
-
-
இப்போதைக்கு ஓய்வு இல்லை: அப்ரிடி அறிவிப்பு ஷயித் அப்ரிடி | கோப்புப் படம் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து இப்போதைக்கு ஓய்வுபெறுவதாக இல்லை என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ஷாஹித் அப்ரிடி கூறியுள்ளார். இது தொடர்பாக பாகிஸ்தான் பத்திரிகை ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் அவர் கூறியிருப்ப தாவது: பாகிஸ்தான் அணிக்காக நான் 20 ஆண்டுகளாக கிரிக்கெட் போட்டிகளில் ஆடி வருகிறேன். நான் ஓய்வு பெற விரும்புவதாக வும், எனக்கு விடை கொடுக்கும் வகையில் போட்டி ஒன்றுக்கு ஏற்பாடு செய்யுமாறும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தை நான் கேட்டுள்ளதாகவும் சில செய்திகள் வந்துள்ளன. அவை உண்மை அல்ல. எந்த கட்டத்திலு…
-
- 0 replies
- 468 views
-
-
ஆஸி.க்கு மகிழ்ச்சி! இந்தியாவுக்கு சோகம்! இது தான் பாக்ஸிங் டே வரலாறு! #BoxingDayTest ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி ஆஷஸ் தொடரை ஒரு யுத்தமாக பார்க்கிறது என்றால் அதற்கு இணையானது தான் பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியும். அதாவது எல்லா வருடமும் எதாவது ஒரு அணியுடன் ஆஸ்திரேலிய அணி டிசம்பர் 26-ம் தேதி மெல்பெர்ன் மைதானத்தில் டெஸ்ட் போட்டியில் ஆடும். அதனை வென்றே தீர வேண்டும் என்ற வெறியோடு ஒவ்வொரு முறையும் ஆக்ரோஷமாக ஆஸி அணி களமிறங்கும். பாக்ஸிங் டே வரலாறு! விக்டோரியா அணிக்கும், நியூ சவுத் வேல்ஸ் அணிக்கும் இடையே ஷெஃபீல்டு ஷீல்டு போட்டி கிறிஸ்துமஸ் சமயத்தில் மெல்பெர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடந்தது. அதில் பாக்ஸிங் டேயும் அடக்கம். நியூ சவுத் வேல்ஸ் வீரர்கள் கி…
-
- 0 replies
- 341 views
-
-
கிளப் லீக்: பெங்கால் பேட்ஸ்மேன் அவுட்டாகாமல் 413 ரன் அடித்து சாதனை கிளப் லீக் போட்டியில் மேற்கு வங்காள பேட்ஸ்மேன் பங்கஜ் ஷா அவுட்டாகாமல் 413 ரன்கள் அடித்து சாதனைப் படைத்துள்ளார். மேற்கு வங்காள கிரிக்கெட் சங்கம் சார்பில் முதல் டிவிஷன் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் பரிஷா ஸ்போர்ட்டின் அணி சார்பில் 28 வயதான பங்கஜ் ஷா 44 பவுண்டரிகள், 23 சிக்சர்கள் மூலம் அவுட்டாகாமல் 413 ரன்கள் குவித்துள்ளார். 6-வது விக்கெட்டுக்கு அஜ்மிர் சிங் (47) உடன் இணைந்து 203 ரன்களும், 7-வது விக்கெட்டுக்கு ஷ்ரேயன் சக்ரபோர்ட்டி (22) உடன் இணைந்து 191 ரன்களும் குவித்தார். இவரது அபார ஆட்டத…
-
- 0 replies
- 320 views
-
-
ஒரே ஆண்டில் 1000 ரன், 30 விக்கெட்: இங்கிலாந்து வீரர் மொய்ன் அலி சாதனை இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் மொய்ன்அலி இந்த ஆண்டு டெஸ்ட்டில் 17 போட்டியில் 1078 ரன் எடுத்துள்ளார். 30 விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். சென்னை: இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் மொய்ன் அலி. இந்த ஆண்டு டெஸ்ட்டில் மொய்ன்அலி 17 போட்டியில் 1078 ரன் எடுத்துள்ளார். 30 விக்கெட் வீழ்த்தி உள்ளார். இதில் மொய்ன்அலி சாதனை படைத்து உள்ளார். ஒரே ஆண்டில் 1000 ரன், 30 விக்க…
-
- 0 replies
- 362 views
-
-
2016ம் ஆண்டின் சிறந்த டி20 போட்டி எது? #Top10T20 #2016Special டெஸ்ட் போட்டியை உலகச் சினிமா என்றால், டி 20 தான் பக்கா கமர்ஷியல் சினிமா. நிமிடத்துக்கு நிமிடம் சஸ்பென்ஸ், ஓவருக்கு ஓவர் மாறும் வெற்றி வாய்ப்பு, பரபர சேஸ், ஆட்டத்தையே மாற்றி விடும் ஒரு ரன் ..ஒரு விக்கெட் ..ஒரு நோபால் என செம த்ரில், செம டிவிஸ்ட் கிரிக்கெட்டுக்கு கியாரண்டி எப்போதுமே உண்டு. அதுவும் இந்த ஆண்டு ஆசியக் கோப்பை, உலகக் கோப்பை என டி20 போட்டிகளை நம்மவர்கள் கொண்டாடினார்கள். அப்படி இந்த ஆண்டு நடந்த முடிந்த பத்து சிறந்த டி20 போட்டிகளை பற்றிப்பார்ப்போமா? 10. இந்தியா Vs வெஸ்ட் இண்டீஸ் : - அமெரிக்காவில் நடந்த டி20 போட்டி இது. இந்திய வீரர்கள் முதன் முதலாக அமெரிக்க…
-
- 0 replies
- 637 views
-
-
அன்று சுவர்... இன்று சிற்பி...! இந்திய கிரிக்கெட்டைச் செதுக்கும் டிராவிட் Extremely pleased to see the India-A plan giving rich rewards under #RahulDravid. Jayant & Karun shinning examples. @BCCI #TeamIndia — Anurag Thakur (@ianuragthakur) December 19, 2016 இது, கருண் நாயர் முச்சதம் அடித்த சில நிமிடங்களில் பி.சி.சி.ஐ. தலைவர் அனுராக் தாக்கூர் ட்விட்டரில் வெளியிட்ட பதிவு. எல்லோரும் கருண் நாயரைப் பாராட்டிக் கொண்டிருக்கும்போது, அனுராக் தாக்கூர் சம்மந்தமில்லாமல் டிராவிட்டை பாராட்ட வேண்டிய அவசியம் என்ன? காரணம் இருக்கிறது! இரண்டு ஆண்டுகளுக்கு முன் சச்சின் டெண்டுல்கர்,செளரவ் கங்குலி, வி.வி.எஸ்.லட்சுமண் ஆகியோர் பி.சி.சி.ஐ.யி…
-
- 0 replies
- 527 views
-
-
செல்சியாவின் ஆஸ்காரை 60 மில்லியன் பவுண்டு கொடுத்து வாங்கும் சீன கிளப் பிரேசில் நாட்டின் முன்னணி நடுக்கள வீரரான ஆஸ்காரை செல்சியாவிடம் இருந்து 60 மில்லியன் பவுண்டு கொடுத்து சீனாவின் முன்னணி கால்பந்து கிளப் வாங்குகிறது. இங்கிலாந்து அணியின் முன்னணி கால்பந்து கிளப் அணி செல்சியா. இந்த அணிக்காக 25 வயதான பிரேசில் அணியின் முன்னணி நடுக்கள ஆட்டக்காரர் ஆஸ்கார் விளையாடிவருகிறார். இவரை சீனாவின் முன்னணி கிளப் அணியான ஷாங்காய் எஸ்.ஐ.பி.ஜி. அணி வாங்க விருப்பம் தெரிவித்தது. இதற்கான பேச்சுவார்த்தை நல்லபடியாக முடிந்துள்ளது. இன்னும் சில நாட்களில் ஷாங்காய் 60 மில்லியன் பவுண்டு கொடுத்து ஆ…
-
- 0 replies
- 403 views
-
-
இந்தாண்டின் மிஸ் பண்ணியிருக்கவே கூடாத 10 டெஸ்ட் போட்டிகள்! #Top10Tests டெஸ்ட் கிரிக்கெட் அழிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறதோ என பலரும் கடந்த சில ஆண்டுகளாக கவலைப்பட்டுக் கொண்டிருந்தார்கள். அது இனி தேவையில்லை. டெஸ்ட் கிரிக்கெட் எப்போதும் பெஸ்ட் கிரிக்கெட் தான், அதை கொண்டாடவும், வரவேற்கவும், ஆராதிக்கவும் கிரிக்கெட் ரசிகர்கள் எப்போதுமே தயாராக இருப்பார்கள் என்பதை இந்தாண்டு நிரூபித்தது. உலகம் முழுவதும் சுமார் 45 டெஸ்ட் போட்டிகள் நடந்து முடிந்திருக்கின்றன. பல தொடர்களில் பல்வேறு ஆச்சர்ய முடிவுகள் கிடைத்திருக்கின்றன. இந்தியா, தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, பாகிஸ்தான், வங்கதேசம் போன்ற அணிகள் எதிரணிகளுக்கு அதிர்ச்சி வைத்தியம் தந்தன. அப்படி, இந்த ஆண்டு நடந்த தி…
-
- 0 replies
- 528 views
-
-
பிபா தரவரிசை: முதல் இடத்துடன் 2016-ஐ நிறைவு செய்தது அர்ஜென்டினா பிபா கால்பந்து தரவரிசையில் அர்ஜென்டினா 2016-ம் ஆண்டை முதல் இடத்துடன் வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. பிரேசில் 2-வது இடத்தைப் பெற்றுள்ளது. அமெரிக்காவில் நடைபெற்ற கோபா அமெரிக்கா கால்பந்து தொடரில் சிலியிடம் தோல்வியடைந்து 2-வது இடம் பிடித்த அர்ஜென்டினா, இந்த வருடம் முடிவில் முதல் இடத்தோடு நிறைவு செய்துள்ளது. அர்ஜென்டினா இந்த ஆண்டில் 15 போட்டிகளில் விளையாடி 10-ல் வெற்றி பெற்றுள்ளது. மூன்று போட்டியில் தோல்வியும், இரண்டு போட்டிகளை டிராவும் செய்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் பெல்ஜியத்திடம் இருந்து முதல் இடத்தை பற…
-
- 0 replies
- 333 views
-
-
பிக் பாஷ் லீக்: சிட்னி தண்டரை வீழ்த்தியது மெல்போர்ன் ரெனேகட்ஸ் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பிக் பாஷ் லீக் தொடரில் சிட்னி தண்டர் அணியை 48 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது மெல்போர்ன் ரெனேகட்ஸ். இந்தியாவில் ஐ.பி.எல். தொடர் நடத்தப்படுவது போல் ஆஸ்திரேலியாவில் பிக் பாஷ் லீக் தொடர் நடைபெற்று வருகிறது. 2016-17-க்கான தொடர் நேற்று முன்தினம் (20-ந்தேதி) தொடங்கியது. இன்று நடைபெற்ற 3-வது போட்டியில் மெல்போர்ன் ரெனேகட்ஸ் - சிட்னி தண்டர் அணிகள் மெல்போர்ன் மைதனாத்தில் மோதின. டாஸ் வென்ற சிட்னி தண்டர் அணி பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங…
-
- 1 reply
- 427 views
-
-
ஐசிசி சிறந்த கிரிக்கெட் வீரர் விருது பெறுவதில் மகிழ்ச்சியே' 2016-ஆம் ஆண்டுக்கான ஐசிசி (சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்) சிறந்த கிரிக்கெட் வீரராக, இந்திய சுழல் பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் அறிவிக்கப்பட்டுள்ளார். 2016 ஐசிசி சிறந்த கிரிக்கெட் வீரராக அஸ்வின் அறிவிப்பு அதே போல், 2016 ஐசிசி சிறந்த டெஸ்ட் வீரர் விருதும் அஸ்வினுக்கு கிடைத்துள்ளது. மேலும், ஐசிசி டெஸ்ட் அணியிலும் அஸ்வின் இடம் பெற்றுள்ளார். ஐசிசி டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணிகளுக்கான அதிகாரபூர்வ அறிவிப்புகள் இன்று (வியாழக்கிழமை) வெளியிடப்பட்டுள்ளன. ஐசிசியின் சிறந்த வீரருக்கான விருதைப் பெறும் மூன்றாவது இந்திய வீரர் அஸ்வின் ஆவார். முன்னதாக, சச்சின் டெண்ட…
-
- 1 reply
- 413 views
-
-
ஐ.சி.சி. டெஸ்ட் அணியில் இடம்பிடித்த ரங்கன ஹேரத் சர்வதேச கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ள 2016 ஆம் ஆண்டுக்கான ஐ.சி.சி. டெஸ்ட் அணியில் இலங்கை அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரங்கன ஹேரத் இடம்பிடித்துள்ளார். ஆண்டுக்கு ஒருமுறை ஐ.சி.சி. டெஸ்ட் அணி அறிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் இந்த வருடம் அறிவி்க்கப்பட்டுள்ள ஐ.சி.சி. டெஸ்ட் அணியில் இலங்கை அணியைச் சேர்ந்த ரங்கன ஹேரத் மற்றும் இந்திய அணியைச் சேர்ந்த அஸ்வின் ஆகியோர் சுழற்பந்துவீச்சாளர்களாக தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஐ.சி.சி.டெஸ்ட் அணியின் தலைவரான இங்கிலாந்து அணியின் டெஸ்ட் தலைவர் அலஸ்ரியா குக் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். ஐ.சி.சி. தெரிவுசெய்துள்ள 2…
-
- 1 reply
- 535 views
-
-
கிவிடோவாவுக்கு கத்திக்குத்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் விம்பிள் டன் முன்னாள் சம்பியனான செக். குடியரசு டென் னிஸ் வீராங்கனை கிவிடோவாவின் வீட்டுக்குள் புகுந்த மர்மநபர் அவரை கத்தியால் குத்தி தாக்குதல் மேற்கொண்டுள்ளார். உலக தரவரிசையில் 11-ஆவது இடம் வகிக் கும் கிவிடோவா காலில் ஏற்பட்ட காயம் காரணமாக தற்போது ஓய்வில் இருக்கிறார். செக்.குடியரசின் கிழக்கு பகுதியில் புரோஸ்டெஜோவ் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப் பில் வசித்து வருகிறார். நேற்றுமுன்தினம் காலை அந்த அடுக்குமாடிக் குடியிருப்புக்குள் புகுந்த மர்மநபர் கிவிடோவாவின் வீட்டு கதவை உடைத்து அதிரடியாக உள்ளே புகுந்துள்ளார். அப்…
-
- 0 replies
- 359 views
-
-
மீண்டும் வருகிறார் முஸ்தபிஸுர் பங்களாதேஷ் அணியின் முன்னணி இடது கை வேகப்பந்து வீச்சாளர் முஸ்தபிஸுர் ரஹ்மான் 9 மாதங்களுக்குப் பின் மீண்டும் சர்வதேச போட்டிக்கு திரும்ப உள்ளார். இவர் தன்னுடைய இடது கை வேகப்பந்து வீச்சால் எதிர் அணிகளுக்கு கடும் நெருக்கடி கொடுத்தார். இதனால் விரைவில் உலகளவில் புகழ்பெற்றார். இந்தியாவில் நடைபெற்ற உலகக் கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரில் கடைசியாக விளையாடினார். அதன்பின் ஐ.பி.எல். தொடரில் விளையாடும்போது அவருக்கு காயம் ஏற்பட்டது. காயம் குணமடைந்தவுடன் இங்கிலாந்தில் உள்ள உள்ளூர் அணிக்காக விளையாடினார். அப்போது அவரின் தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. இதனால் அறுவை …
-
- 0 replies
- 380 views
-
-
குக் பதவி விலகுகிறாரா? இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணித் தலைமைப் பொறுப்பிலிருந்து அலஸ்டர் குக் விலகுவதற்கான நேரம் வந்துவிட்டதாக, இங்கிலாந்தின் முன்னாள் அணித் தலைவர் மைக்கல் வோகன் தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கு எதிராக நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 4 போட்டிகளிலும் தோல்வியடைந்ததால் இங்கிலாந்து அணி மீது விமர்சனங்கள் எழுகின்றன. இதுகுறித்து அலஸ்டயர் குக் கூறியதாவது, தோல்விக்கு எந்தவித சாக்குபோக்கு காரணமும் சொல்ல முடியாது. இந்திய அணி எங்களை விட சிறப்பாக விளையாடியது. வெற்றிக்கு இந்தியா தகுதியான அணி தான். இந்த டெஸ்டில் கடைசி நாள் கடினமாக இருக…
-
- 1 reply
- 551 views
-
-
42 வருடங்களின் பின்னர் தரநிலைவரிசையில் முதலிரு இடங்களில் இந்திய சுழல் பந்துவீச்சாளர்கள் 2016-12-22 10:47:21 (நெவில் அன்தனி) இந்தியாவின் சுழல் பந்துவீச்சு சகலதுறை வீரர் களான ரவிச்சந்திரன் அஷ்வின், ரவீந்த்ர ஜடேஜா ஆகிய இருவரும் டெஸ்ட் கிரிக்கெட் விளையாட்டு பந்துவீச்ச தரநிலை வரிசையில் முதல் இரண்டு இடங்களில் இருக்கின்றனர். 1974க்குப் பின்னர் பந்துவீச்சுக்கான தரநிலை வரிசையில் இந்திய சுழல்பந்துவீச்சாளர்கள் இருவர் முதல் இடங்களை அடைந்திருப்பது இதுவே முதல் தடவையாகும். கடைசி டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட் குவியலைப் பதிவு செய்த ஜடேஜா 66 புள்…
-
- 0 replies
- 321 views
-
-
அபார வெற்றிகளும் இன்னிங்ஸ் தோல்விகளும் சென்னை டெஸ்டில் முதல் இன்னிங்ஸில் 477 ஓட்டங்களை பெற்ற பிறகு இன்னிங்ஸ் மற்றும் 75 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டுள்ளது இங்கிலாந்து அணி. இதன்மூலம் முதல் இன்னிங்ஸில் அதிக ஓட்டங்களை பெற்று இன்னிங்ஸ் தோல்வியை சந்தித்த அணிகளின் வரிசையில் இங்கிலாந்து முதலிடத்தைப் பிடித்துள்ளது. முன்னதாக இங்கிலாந்து அணி, 2001-இல் ஓவலில் நடைபெற்ற ஆஷஸ் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 432 ஓட்டங்களை பெற்ற பிறகு அவுஸ்திரேலியாவிடம் இன்னிங்ஸ் தோல்வியை சந்தித்ததே சாதனையாக இருந்தது. டெஸ்ட் வரலாற்றில் ஓர் அணி தனது முதல் இன்னிங்ஸில் 400 அல்லது அதற்கு மேற்பட்ட ரன்களை குவித்த பிறகு இன்னிங்ஸ் தோல்வியை சந்திப்பது இது 6-ஆவது…
-
- 0 replies
- 284 views
-
-
இலங்கை - பங்களாதேஷ் மோதும் அரையிறுதிப்போட்டி இன்று 19 வயதிற்குட்பட்டோருக் கான ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இந்த போட்டி இன்று மதியம் 2.30 மணியளவில் கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் இடம்பெறவுள்ளது. இந்நிலையில் நேற்று இடம்பெற்ற இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான முதலாவது அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி 77 ஓட்டங்களால் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/14598
-
- 5 replies
- 1.1k views
-
-
ஸ்ரீலங்கா கிரிக்கெட் டயலொக் தேசிய விருது விழா 2016; தனஞ்செய, ஷஷிகலா அதி சிறந்த சகலதுறை வீர, வீராங்கனை 2016-12-21 10:56:26 இலங்கையில் நடத்தப்படும் ப்றீமியர் லீக் பிரதான கிரிக்கெட் போட்டிகளில் வருடத்தின் அதி சிறந்த சகலதுறை வீரருக்கான ஸ்ரீலங்கா கிரிக்கெட் டயலொக் தேசிய விருதை தமிழ் யூனியன் கழக வீரர் தனஞ்செய டி சில்வா வென்றெடுத்தார். ப்றீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகளில் 65 வருடங்களின் பின்னர் சம்பியனான தமிழ் யூனியன் கழகம் சார்பாக கித்ருவன் வித்தானகே, டயலொக் வெற்றி விருதை ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத் தலைவர் பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபாலவிடமிருந்து பெறுகின்றார். …
-
- 0 replies
- 263 views
-
-
இது தொடக்கம் மட்டுமே; இன்னும் அதிகம் சாதிக்க விரும்புகிறோம்: விராட் கோலி சென்னையில் வெற்றி பெற்று டிராபியை பிசிசிஐ தலைவர் அனுராக் தாக்கூரிடமிருந்து பெறும் கேப்டன் விராட் கோலி. | படம்.| பிடிஐ. 18 டெஸ்ட் போட்டிகளில் இந்தியா தோல்வியடையாமல் ஆடி வருகிறது. இது ஒரு ‘சிறுதுளியே’ என்கிறார் விராட் கோலி, இன்னமும் நிறைய சாதனைகள் செய்ய விரும்புகிறோம் என்கிறார் கேப்டனும், தொடர் நாயகனுமான கோலி. மேலும் 2016-ம் ஆண்டில் 9-வது டெஸ்ட் போட்டியை சென்னை வெற்றி மூலம் வென்றுள்ளது. செய்தியாளர்களிடம் பேசிய விராட் கோலி கூறியதாவது: இரண்டு பின்னடைவுகளுக்குப் பிறகு 2016-ம் ஆண்டு அணிக்கு சிறப்பாகவே அமைந்தது. ஆஸ்திரேலியாவில…
-
- 1 reply
- 401 views
-
-
இலங்கை, தென்னாபிரிக்க பயிற்சி போட்டி சமனிலையில் இலங்கை மற்றும் தென்னாபிரிக்க பதினொருவர் அணிகள் மோதிய 3 நாள் பயிற்சி போட்டி சமநிலையில் முடிவடைந்துள்ளது. இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடி 373 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இதில் கௌசல் சில்வா 80 ஓட்டங்களையும், கருணாரத்ன 71 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தனர். பந்துவீச்சில் தென்னாபிரிக்க பதினொருவர் அணி சார்பாக ஒலீவியர் 4 விக்கட்டுகளை கைப்பற்றினார். இந்நிலையில் தனது முதலாவது இன்னிங்ஸை ஆரம்பித்த தென்னாபிரிக்க பதினொருவர் அணி சகல விக்கட்டுகளையும் இழந்து 289 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. தென்னாபிரிக்க பதினொருவர் அணி சார்பில் புளூய் …
-
- 38 replies
- 3.1k views
-