விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7860 topics in this forum
-
வீரர்களுக்கு மஹேல, சங்கா, முரளி ஆகியோரின் அனுபவம் தேவை ; அரவிந்த இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு மஹேல, சங்கா, முரளி, அசங்க குருசிங்க போன்ற முன்னாள் வீரர்களின் அனுவம் மற்றும் அவர்களின் அறிவுத்திறன் போன்றன தேவைப்படுவதாக இலங்கை கிரிக்கெட் குழுவின் தலைவர் அரவிந்த டி சில்வா தெரிவித்தார். “ எதிர்கால திட்டத்திற்கான பயிற்சி ” எனும் திட்டத்தின் கீழ் பயிற்றுவிப்பாளர்களுக்கான கருத்தரங்கு விளையாட்டுத்துறை அமைச்சின் டங்கன் வைட் கேட்போர் கூடத்தில் இன்று இடம்பெற்றது. குறித்த கருத்தரங்கின் பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அ…
-
- 0 replies
- 355 views
-
-
20 இன் கீழ் பீபா மகளிர் கால்பந்தாட்டம்; வட கொரியா உலக சம்பியன் 2016-12-05 09:51:44 20 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான பீபா (FIFA) உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகளில் வட கொரிய மகளிர் அணி சம்பியனானது. பிரான்ஸ் இரண்டாம் இடத்தையும் ஜப்பான் மூன்றாம் இடத்தையும் பெற்றன. பப்புவா நியூ கினியில் சனிக்கிழமை நடைபெற்ற இறுதிப் போட்டியில் பிரான்ஸை எதிர்த்தாடி வட கொரியா 3 – 1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று உலகக் கிண்ணத்தை சுவீகரித்தது. 20 வயதுக்குட்பட்ட மகளிர் உலகக் கிண்ண கால்பந்தாட்ட வரலாற்றில் 10 வருடங்களின் பின்னர் இரண்டாவது தடவையாக வட கொரியா சம்பியனா…
-
- 0 replies
- 339 views
-
-
அணித்தலைவர் ஸ்மித் சதம் ; வலுவான நிலையில் ஆஸி அவுஸ்திரேலியா மற்றும் நியுஸிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் போட்டி சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெற்று வருகின்றது. இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலிய அணி 39 ஓவர்கள் நறைவில் 4 விக்கட்டுகளை இழந்து 206 ஓட்டங்களை பெற்றுள்ளது. அவுஸ்திரேலிய அணி சார்பில் அணித்தலைவர் ஸ்டீவன் ஸ்மித் 103 ஓட்டங்களையும், டிராவிஷ் ஹெட் 48 ஓட்டங்களையும் பெற்று துடுப்பெடுத்தாடி வருகின்றனர். பந்து வீச்சில் நியுஸிலாந்து அணி சார்பில் நீஸம், பெர்கஷன் மற்றும் ஹென்றி ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கட்டுகளை கைப்பற்றியுள்ளனர். http://www.virakesari.lk/article/14137
-
- 4 replies
- 502 views
-
-
சமபல அண்டைய நாடுகளுக்கிடையிலான மோதல் - ச.விமல் சமபலமாக உள்ள அயல் நாட்டு அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் அடங்கிய தொடர் அவுஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகளுக்கிடையில் அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ளது. உலகக்கிண்ணத்தின் இறுதிப்போட்டி அணிகள் இரண்டும் மோதுகின்றன. இந்த இரு அணிகளும் விளையாடும் போட்டிகள், போட்டித்தன்மை மிக்கவையாக மாறியுள்ளன. நியூசிலாந்து அணி, ஒரு நாள் சர்வதேசப் போட்டிகளில் பலமான நிலையிலேயே உள்ளது. இந்த வருடத்தில் ஏற்கெனவே இரண்டு அணிகளும் மோதியுள்ளன. நியூசிலாந்தில் நடைபெற்ற மூன்று போட்டிகள் அடங்கிய தொடரில், 2-1 என்ற ரீதியில் நியூசிலாந்து அணி வென்றிருந்தது. இறுதியாக இந்தியாவில் நடைபெற்ற தொடரிலும் நியூசி…
-
- 0 replies
- 354 views
-
-
கடைசி நிமிடத்தில் கோல் அடித்து பார்சிலோனா வெற்றியை தடுத்த ரியல் மாட்ரிட் கேப்டன் ரியல் மாட்ரிட் அணியின் கேப்டன் செர்ஜியோ ரமோஸ் கடைசி நிமிடத்தில் கோல் அடித்து பார்சிலோனாவின் வெற்றியை தடுத்தார். ‘எல் கிளாசிகோ’ என்று அழைக்கப்படும் பரம எதிரிகளான பார்சிலோனா - ரியல் மாட்ரிட் அணிகள் நேற்று ஸ்பெயினில் உள்ள கேம்ப் நவு மைதானத்தில் ‘லா லிகா’ லீக் போட்டியில் மோதின. இந்த போட்டியை நேரில் பார்க்க 98 ஆயிரத்து 485 ரசிகர்கள் வந்திருந்தனர். சொந்த மைதானத்தில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் பார்சிலோனா அணி களம் இறங்கியது. அதே சமயத்தில் 6 புள்ளிகள் முன்னில…
-
- 0 replies
- 444 views
-
-
இந்திய மகளிர் அணி இப்போ ஆசிய சாம்பியன்! மகளிர் ஆசிய கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் தாய்லாந்தின் பாங்காக் நகரில் நடந்து வருகிறது. இதில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதின. முதலில் ஆடிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 121 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக மிதாலி ராஜ் 73 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதையடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 104 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணியின் ஏக்டா பிஷ்ட் இரண்டு விக்கெட்டுகள் கைப்பற்றினார். இதன்மூலம் 17 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி வெற்றி பெற்ற இந்திய அணி, ஆசிய சாம்பியனானது. …
-
- 0 replies
- 344 views
-
-
ஆண்டின் டாப் 3 கோல்கள்: மெஸ்ஸி, நெய்மரைக் கடந்து முக்கியத்துவம் பெற்ற மலேசிய வீரர் இந்த ஆண்டின் 3 டாப் கோல்களுக்கான பரிசுப் பட்டியலில் மெஸ்ஸி, நெய்மர் போன்றோரைக் கடந்து மலேசிய கால்பந்து வீரர் மொஹமது ஃபைஸ் சுப்ரி என்பவரது கோல் ஃபிபா பட்டியலில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. மலேசிய சூபர் லீக் கால்பந்து போட்டியில் பெனாங் அணிக்காக ஆடிய மொகமது ஃபைஸ் சுப்ரி, பஹாங் அணிக்கு எதிராக அடித்த கோல் பல சர்வதேச கோல்களை பின்னுக்குத் தள்ளியுள்ளது. அதாவது 1997-ம் ஆண்டு பிரேசில் நட்சத்திரம் ரொபர்ட்டோ கார்லோஸ் பிரான்ஸுக்கு எதிராக அடித்த மறக்க முடியாத ஃப்ரீ கிக் கோலை இது பலவகையிலும் நினைவூட்டுவதாக அமைந்துள்ளது. இடது புறத்தில், சற்றே ஓரமாக, கோலிலிருந்து சுமார் 11…
-
- 0 replies
- 314 views
-
-
கிளென் மேக்ஸ்வெலுக்கு அபராதம்: ஆதரவும் எதிர்ப்பும் மேக்ஸ்வெல். | கோப்புப் படம்: கே.ஆர்.தீபக். மேத்யூ வேட் குறித்து பொதுவெளியில் வெளிப்படையாக விமர்சனம் செய்த அதிரடி வீரர் கிளென் மேக்ஸ்வெலுக்கு ஆஸ்திரேலிய லீடர்ஷிப் குழு அபராதம் விதித்துள்ளது. அபராதம் என்பதற்கும் மேலாக கிளென் மேக்ஸ்வெலின் கிரிக்கெட் எதிர்காலமே கேள்விக்குறியாகியுள்ளதாகவே ஆஸ்திரேலிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. விக்டோரிய அணியின் கேப்டன் மேத்யூ வேட் யார் எந்த நிலையில் களமிறங்க வேண்டும் என்பதை தீர்மானிக்கிறார், நான் அவருக்குப் பின்னால் களமிறங்குவது வேதனை அளிக்கிறது, இது எனது டெஸ்ட் கிரிக்கெட் வாய்ப்பை பறித்துள்ளது என்று ஊடகங்களில் கிளென் மேக்ஸ்வெல்…
-
- 0 replies
- 449 views
-
-
ஐபிஎல் போட்டிகளில் ஆடி காயமடைய வேண்டாம்: ஆஸி. வீரர்களுக்கு மைக்கேல் கிளார்க் எச்சரிக்கை மைக்கேல் கிளார்க். | படம்: ஏ.எஃப்.பி. அடுத்த ஆண்டு நடைபெறும் ஐபிஎல் போட்டிகளில் ஆடுவதை ஆஸ்திரேலிய வீரர்கள் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் அறிவுரை வழங்கியுள்ளார். 2016 ஐபிஎல் போட்டிகளில் ஐபிஎல் போட்டிகளில் ஆடிய முக்கிய ஆஸ்திரேலிய வீரர்கள் காயமடைந்ததை அடுத்து மைக்கேல் கிளார்க் கூறும்போது, “வீரர்களின் பணிச்சுமையை அதிகரிக்கிறது ஐபிஎல். இதனால் ஓய்வு இன்றி கடுமையான களைப்பு ஏற்படுகிறது. சாதகமான அம்சம் பணம் வருகிறது என்பதுதான். ஆனால் அதற்கு கொடுக்கும் விலை அதிகமாக உள்ளது. களைப்பு, ஓய்வின்மை. நமக்கு சிறந்த…
-
- 0 replies
- 265 views
-
-
பிரபல கால்பந்து வீரர் கிரிஸ்டியானோ ரொனால்டோ உள்பட பிற வீரர்கள் வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு ரியல் மேட்ரிட் கால்பந்து அணியின் பிரபல வீரர் கிரிஸ்டியானோ ரொனால்டோ மற்றும் பிற வீரர்கள் வரி செலுத்துவதை தவிர்க்கும் விதமாக மில்லியன் கணக்கான டாலர் வருவாயை வெளிநாட்டு வங்கிகளில் ரகசியமாக முதலீடு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கிரிஸ்டியானோ ரொனால்டோ மின்னஞ்சல்கள், ரகசிய உடன்படிக்கைகள், ரகசிய ஒப்பந்தங்கள் என சுமார் 18 மில்லியன் கசிந்த ஆவணங்களின் அடிப்படையில் இந்த தகவலை பல ஐரோப்பிய செய்தித்தாள்கள் வெளியிட்டுள்ளன. ரொனால்டோவை தவிர்த்து ஜோஸ் மொரின்ஹோ, மான்செஸ்டர் யுனைடட் அணியின் பயிற்சியாளர் ஜோர்ஜ் மெண்டீஸ் ஆகிய பி…
-
- 0 replies
- 243 views
-
-
விராட் கோலியுடனான சந்திப்பு எனக்கு சிறந்த தருணம்: ஹசீப் ஹமீத் ‘மொகாலி டெஸ்டிற்குப் பிறகு விராட் கோலி என்னை சந்தித்தார். இந்த சந்திப்பு எனக்கு சிறந்த தருணம்’ என்று இங்கிலாந்து அணியின் இளம் வீரர் ஹமீத் கூறியுள்ளார். இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் மொகாலியில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அந்த அணியின் 19 வயதே ஆன தொடக்க வீரரான ஹசீப் ஹமீத், இந்திய பந்து வீச்சை நேர்த்தியாக எதிர்கொண்டார். ரன்கள் அதிக அளவில் குவிக்கவில்லை என்றாலும், சமாளித்து விளையாடினார். அவரது ஆட்டம் …
-
- 0 replies
- 269 views
-
-
இறுதிப் போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் பெண்களுக்கான ஆசிய கோப்பைப் போட்டியின் இறுதிச்சுற்றில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோத உள்ளன. நாளை தாய்லாந்தின் பாங்காக் நகரில் நடக்கும் போட்டியில் இரண்டு அணிகளும் பலப்பரிட்சை செய்ய உள்ளன. முன்னர், இந்தியா மற்றும் பாக்., மோதிய லீக் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆசிய கோப்பை 20 ஓவர் போட்டிகளாக நடைபெறுகிறது. இறுதிச் சுற்றுக்கு முன்னேறிய இந்திய அணியை எந்த நாடும் லீக் போட்டிகளில் வீழத்தவில்லை. http://www.vikatan.com/news/sports/74091-india-to-take-on-pakistan-in-finals.art
-
- 0 replies
- 265 views
-
-
இந்த முறையும் இவர் தான் உலகின் தலைசிறந்த தடகள வீரர்! உலகின் வேகமான மனிதர் உசேன் போல்ட் ஆறாவது முறையாக உலகின் சிறந்த தடகள வீரர் விருதைப் பெற்றுள்ளார். தடகள விளையாட்டுக் கூட்டமைப்புக்களின் பன்னாட்டுச் சங்கம் IIAF (International Association of Athletics Federations) ஒவ்வொரு ஆண்டும் தலை சிறந்த தடகள வீரர் மற்றும் வீராங்கனையை தேர்ந்தெடுத்து விருதளிப்பது வழக்கம். ஒன்பது முறை ஒலிம்பிக் சாம்பியனான போல்ட் இதுவரை 5 முறை உலகின் தலைசிறந்த தடகள வீரர் விருதை பெற்றுள்ளார். இந்த ஆண்டும் விருதை தக்க வைத்து ஆறாவது முறையாக தலைசிறந்த தடகள வீரர் என்னும் மகுடத்தை சூட்டிக் கொண்டுள்ளார். தலைசிறந்த தடகள வீராங்கனையாக எத்தியோப்பியா நாட்டின் அல்மாஸ் அயனா தேர்ந்தெட…
-
- 0 replies
- 430 views
-
-
கார்ல்சன்: வெல்ல முடியாத ராஜா! இந்தமுறையும் உலக செஸ் போட்டியை வென்று மூன்றாவதுமுறையாக மகுடம் சூடியுள்ளார் நார்வேயைச் சேர்ந்த மேக்னஸ் கார்ல்சன். செஸ் உலகின் தன்னிகரற்ற வீரர் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார். ‘நான் நிச்சயம் உலக சாம்பியன் ஆவேன். அதற்கான முயற்சிகளில் கட்டாயம் ஈடுபடுவேன்’ என்று 13 வயதில் சொன்னார் கார்ல்சன். கிளாசிகல், ரேபிட், பிளிட்ஸ் என மூன்று வகைப் போட்டிகளிலும் உலக செஸ் சாம்பியன் பட்டம் பெற்று சொன்ன வாக்கைக் காப்பாற்றியுள்ளார். இளம் வயதிலேயே உலகின் நெ.1 வீரர், உலக சாம்பியன் என அடுத்தடுத்த உயரங்களைத் தொட்டதால் அவரை ஜீனியஸ் என்று செஸ் உலகம் கொண்டாடுகிறது. இந்த ஹாட்ர…
-
- 2 replies
- 703 views
-
-
இலங்கை அணிக்கு இரு புதிய பயிற்றுவிப்பாளர்கள் நியமனம் இலங்கை அணியின் முன்னாள் தலைவர் ஹசான் திலகரட்ன இலங்கை அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதேவேளை உப்புல் சந்தன இலங்கை அணியின் களத்தடுப்பு பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது. http://www.virakesari.lk/
-
- 0 replies
- 541 views
-
-
இடத்தை இழக்கப்போவது யார்? இலங்கை அணித் தலைவர் அஞ்சலோ மெத்தியூஸ் மற்றும் உப தலைவர் சந்திமால் ஆகியோர் காயத்திலிருந்து குணமடைந்துள்ள நிலையில் இம்மாத இறுதியில் தென்னாபிரிக்காவுக்கு எதிராக நடைபெறவுள்ள டெஸ்ட் தொடரில் பங்கேற்கின்றனர். இருவரும் அணியில் இடம்பெறும் பட்சத்தில் அணியிலிருந்து நீக்கப்படப்போவது யார் என்பது குறித்த கேள்வி எழுந்துள்ளது. அண்மையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், அஞ்சலோவும் சந்திமாலும் அணியில் இணையும் பட்சத்தில் யார் நீக்கப்படுவார்கள் என்று பயிற்சியாளர் கிரஹம் போர்ட்டிடம் கேட்டபோது, அதற்கு இப்போதே பதிலளிக்க முடியாது என்று மறுத்துவிட்டார். அண்மையில் ச…
-
- 0 replies
- 254 views
-
-
கணினியில் விளையாட வந்துவிட்டது ஒரு 'வாவ்' கேம்! - DON BRADMAN CRICKET 17 டிரெய்லர் கிரிக்கெட் லவ்வர்கள் கணினிகளில் கிரிக்கெட் கேமுக்கு என குறிப்பிட்ட ஜி.பி ஒதுக்கிவிடுவார்கள். உலகம் முழுவதும் கணினிகள், மொபைல், லேப்டாப், டேப்லெட் என எந்த வடிவத்திலும் அதிகம் விளையாடப் படும் கேம்களில் கிரிக்கெட்டுக்கும் முக்கிய இடம் உண்டு. தற்போதைய சூழ்நிலையில், தெருவில் கிரிக்கெட் ஆட முடியாதவர்கள், வயதானவர்கள் என அத்தனை பேரும் தங்களது கிரிக்கெட் ஆசையைத் தீர்த்துக் கொள்வது கிரிக்கெட் வீடியோ கேம் ஆடுவது மூலமாகத் தான். இந்தியாவை ஆஸ்திரேலியா தோற்கடித்தால், அன்று இரவே, லேப்டாப்பில் கிரிக்கெட் கேமை போட்டு, ஆஸ்திரேலியாவைத் துவைத்து எடுத்து டென்ஷனைத் தீர்த்துக…
-
- 0 replies
- 338 views
-
-
இரண்டு ஆண்டுகள் சதமடிக்காதவரை எப்படி சேர்க்க முடியும்?- மேக்ஸ்வெலுக்கு லீ மேன் பதில் டேரன் லீ மேன். | படம்: ஏஎப்பி. உள்நாட்டு கிரிக்கெட்டில் மேத்யூ வேடிற்குப் பின் களமிறங்குவதால் தனது டெஸ்ட் வாய்ப்பு பறிபோவதாக கிளென் மேக்ஸ்வெல் கூறிய குற்றச்சாட்டுக்கு பயிற்சியாளர் டேரன் லீ மேன் பதில் அளித்துள்ளார். சிட்னியில் இது குறித்து டேரன் லீ மேன் கூறும்போது, “அடிலெய்ட் டெஸ்ட் திட்டத்திலேயே மேக்ஸ்வெல் இல்லை. கடந்த 2 ஆண்டுகளாக மேக்ஸ்வெல் சதம் அடிக்கவில்லை. சதமடித்தால்தான் தேர்வுக்கு பரிசீலிக்க முடியும். 2 ஆண்டுகளாக சதம் அடிக்காத வீரரை தேர்வு செய்ய முடியுமா என்ன? மேத்யூ வேடிற்கு பின்னால் களமிறங்குவது போன்ற விவகாரங்களை…
-
- 0 replies
- 313 views
-
-
அடிபட்ட நபருக்காக மாற்று வீரரை களமிறக்கும் புதிய விதிமுறை: நியூசிலாந்தில் அறிமுகம் போட்டியின்போது காயமடையும் வீரருக்குப் பதிலாக பேட்டிங், பவுலிங் மற்றும் விக்கெட் கீப்பர் போன்ற பணிகளை செய்யும் வகையில் புதிய வீரரை களமிறக்கும் விதியை நியூசிலாந்து அறிமுகம் செய்கிறது. இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து போன்ற நாடுகளில் கிரிக்கெட் போட்டி முக்கிய விளையாட்டாக கருதப்பட்டு வருகிறது. இப்போட்டியைக் காண ரசிகர்கள் அதிக அளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் ரசிகர்களின் ஆர்வத்தை எந்த வகையிலும் குறைக்காத வகையில் ஐ.சி.சி. புதுப்புது முறையை அறிமுகப்பட…
-
- 0 replies
- 340 views
-
-
ஓய்வுபெற்றார் ஃபார்முலா-1 சாம்பியன் ராஸ்பெர்க் மெர்சிடீஸ் அணியின் நிக்கோ ராஸ்பெர்க் அண்மையில் ஃபார்முலா-1 சாம்பியன் பட்டம் கைப்பற்றி அசத்தியிருந்தார். இந்நிலையில் அவர் தற்போது ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் ஃபேஸ்புக்கில், 'எனது உச்சத்தை அடைந்து விட்டேன். ஓய்வு பெற இது சரியான தருணம்' என கூறியுள்ளார். மேலும், 'கடந்த 25 வருட ரேஸிங் களத்தில் ஒரு முறையாவது ஃபார்முலா-1 சாம்பியன் பட்டம் கைப்பற்ற வேண்டும் என்பது என் கனவு. கடின உழைப்பால், அது தற்போது நிறைவேறியுள்ளது' என்றும் ராஸ்பெர்க் கூறியுள்ளார். அவர் 23 க்ராண்ட் பிரிக்ஸ்களை கைப்பற்றியுள்ளார். http://www.vikatan.com/news/world/74024-f-1-champion-nico-rosberg-retired.art
-
- 1 reply
- 379 views
-
-
நான் எதிர்கொண்டதிலேயே மிகச்சிறந்த பவுலர் கிளென் மெக்ரா: மனம் திறக்கும் ராகுல் திராவிட் இந்த ஜனவரி 9, 2005-ம் ஆண்டு புகைப்படத்தில் சுனாமி நிதிதிரட்டல் ஆட்டத்திற்காக புகைப்படத்திற்கு நிற்கும் திராவிட், கிளென் மெக்ரா. | கெட்டி இமேஜஸ். இந்தியாவின் ‘சுவராக’ திகழ்ந்த ராகுல் திராவிட் தான் எதிர்கொண்ட வேகப்பந்து வீச்சாளர்களில் மிகச்சிறந்தவர் கிளென் மெக்ராதான் என்று மனம் திறந்து பகிர்ந்து கொண்டுள்ளார். மும்பையில் ‘லிங்க் சொற்பொழிவு வரிசை’யில் நேற்று உரையாற்றிய ராகுல் திராவிட் கூறியதாவது: என் தலைமுறையில் ஆஸ்திரேலியா மிகச்சிறந்த அணி. இவர்கள் அனைவரிலும் நான் எதிர்கொண்ட மகா பவுலர், கிரேட் ஆஸ்திரேலிய பவுலர் மட்டுமல்லாத…
-
- 0 replies
- 353 views
-
-
விபத்தில் வீரர்களை இழந்த அணிக்காக விளையாடுகிறார் ரொனால்டினோ! விமான விபத்தில் 19 வீரர்களைப் பறிகொடுத்த சபிகோயன்ஸ் அணிக்காகப் பிரேசில் ஜாம்பவான் ரொனால்டினோ விளையாடப் போகிறார். கால்பந்து விளையாட்டில் இருந்து ஓய்வு பெற்ற ரொனால்டினோ, அந்த அணியின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுத்திருக்கிறார். கால்பந்து விளையாட்டுக்கு பெயர் போன பிரேசில் நாட்டைச் சேர்ந்த சபிகோயன்ஸ் அணி கடந்த 1973-ம் ஆண்டு உருவானது. பிரேசிலின் சிறிய நகரமான சபிகோவை மையமாகக் கொண்டு இயங்கி வந்தது. இரு நாட்களுக்கு முன், கோபா சவுத் அமெரிக்கா கால்பந்து தொடரின் இறுதி ஆட்டத்தில், பங்கேற்பதற்காகக் கொலம்பியாவின் மெட்லீன் நகருக்கு விமானத்தில் சென்று கொண்டிருந்தபோது, விபத்து ஏற்பட்…
-
- 1 reply
- 378 views
-
-
21 ரன்னுக்குள் ஆல்அவுட் ஆக்கி இந்திய மகளிர் அணி உலக சாதனை! #AsiaT20 பேங்காக்கில் ஆசிய மகளிர் டி20 கோப்பைத் தொடர் நடந்து வருகிறது. இதில் இந்திய மகளிர் அணி, ஒரு போட்டியைக் கூடத் தோற்காமல் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது. ஹர்மன் பீத் கவுர் தலைமையில் இந்திய மகளிர் அணி ஆசிய கோப்பையில் கலந்து கொண்டுள்ளது. மிதாலி ராஜ், ஜூலன் கோஸ்வாமி, மன்ஸி ஜோஷி உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் இந்திய அணியில் இடம்பெற்றிருக்கின்றனர். ஆசிய கோப்பையைப் பொறுத்தவரையில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், நேபால், தாய்லாந்து உள்ளிட்ட ஆறு அணிகள் மோதுகின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணியோடு ஒரு முறை மொத வேண்டும். இம்முறையில் ஒவ்வொரு அணியும் தலா ஐந்து போட்டிகளில் விளையாடு…
-
- 0 replies
- 404 views
-
-
விராட் கோலி நடத்தை: சுனில் கவாஸ்கர் அதிருப்தி விராட் கோலி. | படம்: ஏஎப்பி. மொஹாலி டெஸ்ட் போட்டியின் 3-ம் நாள் ஆட்ட இறுதியில் விராட் கோலி மைதானத்தில் நடந்து கொண்ட விதம் சுனில் கவாஸ்கரின் அதிருப்திக்கு ஆளாகியுள்ளது. 3-ம் நாள் முடிவில் இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் ஆட்டமிழந்து செல்லும் போது, விராட் கோலி தனது விரலை வாயில் வைத்து ‘உஷ்’ என்பது போல் செய்கை செய்தார். இந்தச் செய்கை குறித்து சுனில் கவாஸ்கர் கூறும்போது, “என்ன கூறியிருந்தாலும் சரி, இத்தகைய நடவடிக்கைகள் முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டியவை. அவுட் ஆகி வெறுப்பில் செல்லும் வீரரின் வெந்த புண்ணில் வேலைப்பாய்ச்சும் விதமாக செய்வது நாகரிகமல்ல. அவரே அவ…
-
- 0 replies
- 350 views
-
-
டயலொக் ஸ்ரீலங்கா கிரிக்கெட் விருது விழா சர்வதேச மற்றும் உள்ளூர் கிரிக்கெட் அரங்குகளில் அதீத ஆற்றல்களை வெளிப்படுத்திய அதி சிறந்த கிரிக்கட் வீரர்களுக்கு மகுடம் சூட்டும் விழாவான டயலொக் ஸ்ரீலங்கா கிரிக்கெட் விருது விழா பத்தரமுல்லை வோட்டர்ஸ் எஜ் அரங்கில் இன்று இரவு நடைபெறவுள்ளது. இந்த மாபெரும் விருது விழாவின்போது சர்வதேச மற்றும் உள்ளூர் அரங்குகளில் திறமையை வெளிப்படுத்திய கிரிக்கெட் வீராங்கனைகளுக்கும் விருதுகள் காத்திருக்கின்றன. இந்த விருதுவிழாவின்போது வருடத்தின் அதிசிறந்த கிரிக்கெட் வீரருக்கான பிரதான விருது வழங்கப்படும். நடந்து முடிந்த …
-
- 5 replies
- 549 views
-