விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7860 topics in this forum
-
மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கையை துவம்சம் செய்தது அவுஸ்திரேலியா 2016-09-19 10:12:23 அவுஸ்திரேலிய, இலங்கை மகளிர் அணிகளுக்கு இடையில் தம்புள்ளையில் நேற்று நடைபெற்ற முதலாவது மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 4 விக்கெட்டுகளால் அவுஸ்திரேலிய மகளிர் அணி வெற்றிபெற்றது. பந்து வீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்திய இப் போட்டி 40.3 ஓவர்களில் நிறைவுபெற்றது. இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை மகளிர் அணி 24.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 76 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய மகளிர் அணி சிரமத்திற்கு மத்…
-
- 1 reply
- 613 views
-
-
பாகிஸ்தானுக்கு ஐசிசி டெஸ்ட் சாம்பியனுக்கான தண்டாயுதம்: ஐசிசி வழங்கியது ஐசிசி தண்டாயுதத்துடன் மிஸ்பா. | படம்: ஏ.பி. முதன் முதலாக ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முதலிடம் பிடித்த பாகிஸ்தான் அணிக்கு டெஸ்ட் சாம்பியன்ஷிப்பிற்கான தண்டாயுதத்தை ஐசிசி வழங்கியது. 7 ஆண்டுகளுக்கு முன்பாக டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் விளையாடிய மைதானமான லாகூரில் இது வழங்கப்பட்டது பெருமை அளிக்கிறது என்கிறார் கேப்டன் மிஸ்பா உல் ஹக். லாகூர் கடாஃபி ஸ்டேடியத்தில் ஐசிசி தலைமை அதிகாரி டேவ் ரிச்சர்ட்சன் தண்டாயுதத்தை மிஸ்பாவிடம் வழங்கினார். உள்ளூர் ரசிகர்கள் ஆதரவில்லாமல் முழுக்கவும் பாகிஸ்தானுக்கு வெளியே விளையாடி முதலிடம் பிடிப்படு சாதாரண விஷயமல்ல. ஸ்டீவ் வா…
-
- 1 reply
- 638 views
-
-
டி வில்லியர்ஸையே மிரட்டிய பவுலர்! தென் ஆப்ரிக்க கிரிக்கெட் வீரர் டி வில்லியர்ஸ் களத்தில் இருந்தால் எதிரணிக்கு அடி வயிறு கலங்கும். ‘டிரைவ்’ ஆடுவார் என ஃபீல்ட் செட் செய்தால் ஸ்கூப் ஆடி, ஃபீல்டர்களை மட்டுமல்லாது ரசிகர்களையும் குழப்புவார். என்ன ரகம் என வரையறுக்க இயலாத 360 டிகிரி பேட்ஸ்மேன். எப்பேர்பட்ட பேட்ஸ்மேனுக்கும் ஒரு பவுலர் சிம்ம சொப்பனமாக இருப்பார் அல்லவா? அந்த வரிசையில் டி வில்லியர்ஸை அச்சுறுத்திய பவுலர் யார் என அவரது சுயசரிதை புத்தகமான, ‘ஏபி: தி ஆட்டோபயாகிரபி’யை ஆச்சரியத்துடன் புரட்டினால், இதுவரை யாருமே கேள்விப்படாத ஒரு பவுலரின் பெயரைச் சொல்லி பிரம்மிப்பூட்டுகிறார். தவிர, இணையத்தில் உலவுவது போல, ‘நான் மல்டி ஸ்போர்ட்ஸ் கில்லி அல்ல’ என, ட்வி…
-
- 0 replies
- 534 views
-
-
இந்தியாவின் முதல் டெஸ்ட் வெற்றி எங்கு கிடைத்தது தெரியுமா?? #500testsofIndia வரும் 22 ஆம் தேதி கான்பூரில் நியூசிலாந்து அணியுடன் டெஸ்ட் போட்டி விளையாடுகிறது இந்திய அணி. இது இந்தியாவின் 500வது டெஸ்ட் போட்டி. 1932 ஆம் ஆண்டில் இருந்து சர்வதேச கிரிக்கெட்டில் பங்கேற்க ஆரம்பித்தது இந்தியா. 84 வருட டெஸ்ட் கிரிக்கெட் பயணத்தில் சாதித்தது என்ன? சறுக்கியது என்ன? படங்கள், தகவலுடன் ஒரு பிளாஷ்பேக் இங்கே ... 1. முதல் டெஸ்ட் :- 1932 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராகத்தான் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஆடியது இந்திய அணி. முதல் டெஸ்ட் நடந்தது இங்கிலாந்தின் லார்ட்ஸ் மைதானத்தில். ஆம். அங்கிருந்து தான் இந்திய அணி தனது பயணத்தை துவக்கியது. இந…
-
- 3 replies
- 1.4k views
-
-
செய்தித்துளிகள்: கேப்டன் பதவியில் அசார் அலி நீடிப்பு இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்த பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஒருநாள் போட்டி தொடரை 1-4 என்ற கணக்கில் இழந்தது. இதனால் ஒருநாள் போட்டி அணியின் கேப்டன் அசார் அலிக்கு நெருக்கடி ஏற்பட்டது. இதனால் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ள மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கு டி 20 அணியின் கேப்டன் சர்ப்ராஸ் அகமது பொறுப்பு வகிக்கக்கூடும் என தகவல்கள் வெளியானது. இந்நிலையில் அசார் அலியை மீண்டும் கேப்டனாக நியமித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் உத்தரவிட்டுள்ளது. அசார் அலி தலைமையில் பாகிஸ்தான் அணி 25 ஆட்டத்தில் 15 தோல்விகளை சந்தித்துள்ளது. மேலும் ஒருநாள் போட்டி தரவரிசையில் 9-வது இடத…
-
- 0 replies
- 365 views
-
-
களத்தில் நெஞ்சை நிமிர்த்தும் பழைய ஆக்ரோஷம் ஆஸி. அணிக்கு தேவை: வீரர்களைத் தூண்டும் ஸ்மித் படம். | ஏ.எஃப்.பி. ஆஸ்திரேலிய அணி வீரர்கள் சமீப காலமாக களத்தில் அமைதியாக இருக்கின்றனர், இது சரிபட்டு வராது, பழைய பாணி ஆக்ரோஷம் தேவை என்று கேட்பன் ஸ்மித் வலியுறுத்தியுள்ளார். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடர் பிறகு ஆஸ்திரேலியாவில் அந்த அணிக்கு எதிரான 3 டெஸ்ட் போட்டிகள் ஆகியவை வரும் நிலையில் ஆஸ்திரேலிய வீரர்கள் ஆக்ரோஷ அணுகுமுறையில் நெஞ்சை நிமிர்த்தி எதிரணியினரை சீண்டும் பழைய பாணி கிரிக்கெட்டுக்குச் செல்ல வேண்டுமென்று வலியுறுத்தியுள்ளார். இது குறித்து ஸ்டீவ் ஸ்மித் கூறியதாவது: இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் டேவிட் வார்ன…
-
- 0 replies
- 281 views
-
-
இலங்கை கிரிக்கெட் அணி வீரர்களை சந்தித்தார் பிரதமர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் இலங்கை கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான சந்திப்பொன்று பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது. குறித்த சந்திப்பு இன்று (20) இன்று இடம்பெற்றுள்ளது. ஆஸி அணியுடனான டெஸ்ட் போட்டியின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் குறித்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த சந்திப்பில் பிரதமர் இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் திலங்க சுமதிபால, செயலாளர் மொஹான் டி சில்வா, தேசிய கிரிக்கெட் அணி வீரர்கள் மற்றும் பாடசாலை மட்டத்திலான கிரிக்கெட் விரர்கள் என பலரும் கலந்துக்கொண்டனர். http://www.virakesari.lk/article/11557
-
- 0 replies
- 377 views
-
-
நுவான் குலசேகர கைது (UPDATE) இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளரான நுவான் குலசேகர, கடுவலையில் ஏற்பட்ட விபத்து சம்பவமொன்றில் சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். அவர் செலுத்திய கார், மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் பலியாகியுள்ளார். கண்டி -கொழும்பு பிரதான வீதியில் கடுவலை ரன்முத்துகல பிரதேசத்தில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. கொழும்பு நோக்கி பயணித்த 28 வயதுடைய இளைஞனே பலியாகியுள்ளதுடன் நுவான் குலசேகரவும் கொழும்பு நோக்கி பயணித்தபோதே அந்த விபத்து நிகழ்ந்துள்ளது. விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர். …
-
- 2 replies
- 612 views
-
-
பாராலிம்பிக் நிறைவு விழா: தேசிய கொடி ஏந்திச் சென்றார் மாரியப்பன் மாரியப்பன் தங்கவேல் பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோ நகரில் பாராலிம்பிக் போட்டிகள் கடந்த 7-ம் தேதி கோலாகலமாக தொடங்கியது. மொத்தம் 160 நாடுகளை சேர்ந்த 4,342 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். 22 விளை யாட்டுக்களில் 528 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டது. 11 நாட்கள் நடந்த இந்த விளை யாட்டு திருவிழாவின் நிறைவு விழா நிகழ்ச்சிகள், வரலாற்று சிறப்பு மிக்க மரக்கானா ஸ்டேடியத்தில், வண்ணமயமான வாண வேடிக் கைகளுடன் இந்திய நேரப்படி நேற்று அதிகாலை நடை பெற்றது. பல்வேறு நடன மற்றும் இசை நிகழ்ச்சிகளுக்கு முன்னதாக, சைக்கிள் பந்தயத்தின்போது உயிரிழந்த ஈரான் வீரர் பஹ்மன் கோல…
-
- 0 replies
- 407 views
-
-
வேகமான 200 விக்கெட் சாதனை நோக்கி அஸ்வின். வேகமான 200 விக்கெட் சாதனை நோக்கி அஸ்வின். இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னணி சூழல் பந்து வீச்சாளரான அஸ்வின் ,வேகமான 200 டெஸ்ட் விக்கெட் சாதனை நோக்கி காத்திருக்கிறார். எதிர்வரும் 22 ம் திகதி கான்பூர் மைதானத்தில் இந்திய, நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட் இடம்பெறவுள்ளது. இந்தப் போட்டி இந்தியாவின் 500 வது டெஸ்ட் என்பதோடு மாத்திரமல்லாமல் , ரவிச்சந்திரன் அஸ்வினின் சாதனைக்காகவும் இந்திய ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். இதுவரை 36 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அஸ்வின், 193 டெஸ்ட் விக்கெட்டுக்களைக் கைப்பற்றியுள்ளார்.அண்மையில் நிறைவுக்கு வந்த மேற்கிந்திய தீவுகள் அணியுடனான த…
-
- 0 replies
- 343 views
-
-
யார் மச்சி கெத்து? #TNPL செமிஃபைனல் அலசல் ‘நம்ம ஊரு நம்ம கெத்து’ #NammaOoruNammaGethu என்ற ஆர்ப்பாட்டத்துடன் தொடங்கிய, தமிழ்நாடு பிரிமியர் லீக் #TNPL தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. எட்டு அணிகள் பங்கேற்ற இந்த தொடரில் லீக் சுற்று முடிவில், சேப்பாக், திண்டுக்கல் அணி தலா 5 வெற்றி, 2 தோல்வியுடன் முதலிரண்டு இடங்களைப் பிடித்துள்ளன. தூத்துக்குடி, கோவை அணிகள் தலா 4 வெற்றி, 3 தோல்விகளுடன் முறையே மூன்றாவது, நான்காவது இடத்தைப் பிடித்தன. முதல் நான்கு இடங்களைப் பிடித்த சேப்பாக்கம், திண்டுக்கல், தூத்துக்குடி, கோவை அணிகள் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளன. திருநெல்வேலியில் நாளை நடக்கவுள்ள முதல் அரையிறுதியில் திண்டுக்கல் & தூத்துக்குடி அணிகள் மோத உள்ளன. சனி…
-
- 5 replies
- 1.9k views
-
-
ஹமில்டனை முந்தினார் றொஸ்பேர்க் சிங்கப்பூர் கிரான்ட் பிறிக்ஸை அபாரமாக வென்ற மெர்சிடிஸ் அணியின் ஜெர்மனியச் சாரதியான நிக்கோ றொஸ்பேர்க், சம்பியன்ஷிப் புள்ளிகளில், சக மெர்சிடிஸ் அணியின் பிரித்தானியச் சாரதியான லூயிஸ் ஹமில்டனை முந்தினார். ரெட் புல் அணியின் அவுஸ்திரேலியச் சாரதியான டேனியல் றிக்கார்டோவிடமிருந்து, இறுதி நேரங்களில் பலத்த போட்டியை எதிர்கொண்டே, றொஸ்பேர்க் வெற்றி பெற்று, ஹமில்டனை விட எட்டு சம்பியன்ஷிப் புள்ளிகளை பெற்றுள்ளார். இரண்டாமிடத்தை றிக்கார்டோ பெற்றார். பந்தயத்தினை மூன்றாவதாக ஆரம்பித்த ஹமில்டன், பந்தயத்தின் நடுவினிலே, பெராரி அணியின் பின்லாந்துச் சாரதியான கிமி றைக்கோனனிடம் போட்டியை எதிர்கொண்டு, ஒரு இடம் பின்தங்கி …
-
- 0 replies
- 483 views
-
-
மர்லன் சாமுவேல்ஸ் மரியாதை தெரியாதவர்: பென் ஸ்டோக்ஸ் சாடல் AP படம். | தி கார்டியன். இங்கிலாந்து ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ், தனது சுயசரிதை நூலில் மே.இ.தீவுகள் வீரர் மர்லான் சாமுவேல்ஸ் குறித்து காட்டமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். மர்லன் சாமுவேல்ஸ் தகராறுக்கு புகழ்பெற்றவர், பிக் பாஷ் லீகில் ஷேன் வார்னுக்கும் இவருக்கும் மோதல் ஏற்பட்டது, பிறகு 2015-ல் கிரெனடா டெஸ்ட் போட்டியில் ஸ்டோக்ஸ் அவுட் ஆன பிறகு அவரை கேலி செய்யும் விதமாக சல்யூட் அடித்து சர்ச்சையில் சிக்கினார் சாமுவேல்ஸ். அதன் பிறகு உலகக்கோப்பை டி20 இறுதிப் போட்டியில் பென்ஸ்டோக்ஸ், மர்லன் சாமுவேல்ஸ் மீண்டும் நேருக்கு நேர் தகராறில் ஈடுபட்டனர். சாமுவேல்ஸ் 85 ரன்கள் எடுத்து …
-
- 0 replies
- 441 views
-
-
ரியோ பாராலிம்பிக்கில் மிதிவண்டி போட்டியில் விபத்து, போட்டியாளர் பலி பிராமன் கோல்பார்நெஸ்ஹாடு ரியோ பாராலிம்பிக்கில் ஆடவர் மிதிவண்டி போட்டியின்போது விபத்திற்குள்ளாகி இறந்த ஈரான் மதிவண்டி போட்டியாளரான பிராமன் கோல்பார்நெஸ்ஹாடுக்கு அஞ்சலி செலுத்தப்படுகிறது, 48 வயதான இந்த விளையாட்டு வீரர் திடீரென கீழே விழுந்து சாலையோர கல்லில் அவரது தலை மோதி கழுத்து எலும்பு உடைந்தது. பிராமன் கோல்பார்நெஸ்ஹாடு (இடது) தென் ஆப்ரிக்க வீரர் டானி வில்சனை முந்தி செல்ல துரத்தி செல்கிறார் கிராமன் கோல்பார்நெஸ்ஹாடுவின் இறப்பு உண்மையிலேயே இதயத்தை நெகிழச் செய்துள்ளது என்று கூறியிருக்கும் சர்வதேச பாராலிம்பிக் குழுவின் தலைவர் பிலிப் கிரேவன், இந்த சம்பவம் …
-
- 0 replies
- 406 views
-
-
500-வது டெஸ்ட் போட்டியை காண அசாரூதீனுக்கு பிசிசிஐ அழைப்பு அசாரூதீன் இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி கான்பூரில் வருகிற 22-ம் தேதி தொடங்குகிறது. இது இந்திய அணியின் 500-வது டெஸ்ட் போட்டியாகும். இதனை நினைவு கூரும் வகையில் இந்தப் போட்டியில் டாஸ் போடுவதற்கு வெள்ளி நாணயம் பயன்படுத்த இந்திய கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளது. மேலும் இந்திய அணியின் முன்னாள் டெஸ்ட் கேப்டன்களை அழைத்து கவுரவப்படுத்தவும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் திட்டமிட்டுள்ளது. முன்னாள் கேப்டன்களான சந்து போர்டே, வெங்சர்க்கார், கபில்தேவ், ரவிசாஸ்திரி, கவாஸ்கர், சவுரவ் கங்குலி, சச்சின் டெண்டுல்கர், காந்த், ராகுல் டிராவ…
-
- 0 replies
- 431 views
-
-
தினேஸ் சந்திமால் வைத்தியசாலையில்..! (படங்கள் இணைப்பு) இலங்கை கிரிக்கெட் அணியின் உபதலைவர் தினேஸ் சந்திமால் கொழும்பு தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது. நேற்று முன்னதினம் இடம்பெற்ற உள்ளூர் கிரிக்கெட் போட்டி ஒன்றின் போது வலது கையில் ஏற்பட்ட உபாதை காரணமாகவே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உபாதைக்குள்ளான சந்திமாலுக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு மேலும் பல மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவிக்கின்றது. மருத்துவ பரிசோதனைகளுக்கு பின்னரே இவருடைய உடல் நலம் தொடர்பில் கருத்து தெரிவிக்க முடியும் எனவும் கிரிக்…
-
- 0 replies
- 575 views
-
-
ஆஸியுடன் மோதும் இலங்கை ; முதலாவது ஒருநாள் போட்டி நாளை இலங்கை மகளிர் மற்றும் ஆஸி மகளிர் அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி நாளை (18) தம்புள்ளை ரங்கிரி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெறவுள்ளது. ஆஸி மற்றும் இலங்கை அணிகளுக்கிடையில் 4 ஒருநாள் மற்றும் ஒரு டி20 போட்டிகள் ஆகியன இடம்பெறவுள்ளன. இதில் முதல் இரண்டு போட்டிகள் தம்புள்ளை ரங்கிரி மைதானத்திலும், இறுதி இரண்டு ஒருநாள் போட்டிகள் கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்திலும் இடம்பெறவுள்ளதோடு டி20 போட்டி கொழும்பு எஸ்.எஸ்.சி. மைதானத்திலும் இடம்பெறவுள்ளன. இந்த போட்டியில் இலங்கை அணியின் தலைவராக சாமரி அதபத்து தெரிவுசெய்யப்பட்டுள்ளார். இந்நி…
-
- 0 replies
- 416 views
-
-
பிறீமியர் லீக்: செல்சியை வென்றது லிவர்பூல் இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையே இடம்பெறும் பிறீமியர் லீக் தொடரின், நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற போட்டியில், செல்சியை லிவர்பூல் தோற்கடித்துள்ளது. செல்சியை, 2-1 என்ற கோல் கணக்கில் லிவர்பூல் தோற்கடித்திருந்தது. லிவர்பூல் சார்பாக, டெஜான் லெவ்றோன், போட்டியின் 17ஆவது நிமிடத்தில் கோலைப் பெற்றிருந்ததுடன், அணித்தலைவர் ஜோர்டான் ஹென்டர்ஸன், 25 அடி தூரத்திலிருந்து, போட்டியின் 36ஆவது நிமிடத்தில் கோலொன்றைப் பெற்றிருந்தார். இந்நிலையில், பிரான்ஸின் பரிஸா ஜேமா கழகத்திலிருந்து 32 மில்லியன் ஸ்டேர்லிங் பவுண்ஸ்களுக்கு, மீண்டும் செல்சிக்கு திரும்பிய டேவிட் லூயிஸ் கொடுத்த பந்தை டியகோ கொஸ்டா கோலாக்கி, செ…
-
- 0 replies
- 350 views
-
-
ஓய்வுபெற்றார் சர்வான் மேற்கிந்தியத் தீவுகளின் முன்னாள் அணித்தலைவர் ராம்நரேஷ் சர்வான், சர்வதேசப் போட்டிகளிலிருந்து ஓய்வுபெற்றுள்ளார். 36 வயதான சர்வான், மேற்கிந்தியத் தீவுகள் சார்பாக 87 டெஸ்ட் போட்டிகளில் 15 சதங்கள் உள்ளடங்கலாக 40.01 என்ற சராசரியில் 5,842 ஓட்டங்களையும் 181 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் 5 சதங்கள் உள்ளடங்கலாக 42.67 என்ற சராசரியில் 5,804 ஓட்டங்களையும் பெற்றதோடு, 18 இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டிகளில் விளையாடி, 2 அரைச்சதங்களையும் பெற்றார். இவற்றுக்கு மேலதிகமாக, 4 டெஸ்ட் போட்டிகள் உட்பட, 11 சர்வதேசப் போட்டிகளுக்கு, மேற்கிந்தியத் தீவுகள் அணிக்குத் தலைமை தாங்கியிருந்தார். இறுதியாக, 2013ஆம் ஆண்டிலேயே சர்…
-
- 0 replies
- 444 views
-
-
ஊக்கமருந்து பயன்படுத்தினார்களாம் வில்லியம்ஸ் சகோதரிகள் வில்லியம்ஸ் சகோதரிகள் ஊக்கமருந்து பயன்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டையடுத்து அவர்களிடம் இருந்து பதக்கங்களை திரும்ப பெற்று நடவடிக்கை எடுக்கப்படுமா என கேள்விகள் எழுந்துள்ளன. ரஷ்ய செய்தி நிறுவனம் ஒன்று, வில்லியம்ஸ் சகோதரிகள் மற்றும் அமெரிக்க ஜிம்னாஸ்டிக் வீராங்கனை சிமொன் பைல்ஸ் ஆகியோர் ஊக்கமருந்து பயன்படுத்தியதாகவும், அவர்கள் பயன்படுத்திய ஊக்கமருந்தின் பட்டியலையும் செய்தியாக வெளியிட்டிருந்தது. இதனையடுத்து வில்லியம்ஸ் சகோதரிகள் மீது நடவடிக்கை எடுக்கப் பட…
-
- 0 replies
- 470 views
-
-
பங்களாதேஷ் சுற்றுப்பயணத்திற்கான இங்கிலாந்து அணி விபரம் அறிவிப்பு – டெஸ்ட் அணியில் மூன்று புது முகங்கள். பங்களாதேஷ் சுற்றுப்பயணத்திற்கான இங்கிலாந்து அணி விபரம் அறிவிப்பு – டெஸ்ட் அணியில் மூன்று புது முகங்கள். அடுத்த மாதம் இங்கிலாந்து அணி, மூன்று ஒருநாள் சர்வதேச போட்டி மற்றும் இரு டெஸ்ட் போட்டிகளில் பங்கெடுக்க பங்களாதேஷ்க்கு செல்ல உள்ளது. இந்நிலையில் பங்களாதேஷ் தொடருக்கான இங்கிலாந்து அணியின் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் சர்வதேச போட்டிகளுக்கான அணி விபரங்களே அறிவிக்கப்பட்டுள்ளது. டெஸ்ட் போட்டிகளுக்காக 17 பேர் கொண்ட அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் இளம் வீரர்களான அன்சாரி, பென் டக்கட், ஹசீப் ஹமீத் போன்ற இளம் வீரர்களுக்கு இடம் வழங்கப்பட்டுள்ளது. 2…
-
- 1 reply
- 360 views
-
-
திருப்பு முனை ஏற்படுத்தியது மைக் கேட்டிங்கிற்கு வீசிய பந்து அல்ல: ஷேன் வார்ன் கோப்புப் படம். | ராய்ட்டர்ஸ். ஷேன் வார்னின் ‘நூற்றாண்டின் சிறந்த பந்து’ என்று வர்ணிக்கப்பட்ட மைக் கேட்டிங்கை வீழ்த்திய அந்த பந்து தனது திருப்பு முனை அல்ல மாறாக அதற்கு 6 மாதங்கள் முன்னதாக ரிச்சி ரிச்சர்ட்சனை வீழ்த்திய பந்துதான் என்று கூறியுள்ளார் வார்ன். இது குறித்து அவர் ஆஸ்திரேலிய ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் ரிச்சி ரிச்சர்ட்சனை வீழ்த்திய அந்தப் பந்து பற்றி குறிப்பிட்டுள்ளார். இது மெல்பர்ன் கிரிக்கெட் மைதானத்தில் மே.இ.தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டியாகும். அந்தத் தொடரின் முதல் டெஸ்டில் ஷேன் வார்ன் தேர்வு செய்யப்படவில்லை, போட்டி டிராவில் …
-
- 1 reply
- 393 views
-
-
'எம்.எஸ்.தோனி' படம் என் புகழ்பாடாமல் வாழ்க்கைப் பயணத்தையே பதிகிறது: தோனி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத், தோனி. | படம்: ஏ.பி, “எம்.எஸ்.தோனி-தி அன் டோல்ட் ஸ்டோரி” என்ற திரைப்படம் என் புகழ்பாட எடுக்கப்பட்டதல்ல, எனது போராட்டங்கள், பயணங்கள் பற்றியதே என்று இந்திய ஒருநாள் கேப்டன் தோனி தெரிவித்துள்ளார். இம்மாதம் 30-ம் தேதி உலகம் முழுதும் ரிலீஸ் ஆகும் இந்தத் திரைப்படத்தின் விளம்பர பரப்புதலுக்காக தன் மனைவி சாக்ஷி, படத் தயாரிப்பாளர் அருண் பாண்டே ஆகியோருடன் அமெரிக்கா சென்றுள்ளார் தோனி. திரைப்படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய தோனி, “நான் பாண்டேயிடம் ஒரு விஷயத்தை தெளிவாகக் கூறினேன், என்னை உய…
-
- 1 reply
- 542 views
-
-
ஷகிப் அல் ஹசன் பயணித்த ஹெலிகொப்டர் விபத்து ; ஒருவர் பலி பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரர் ஷகிப் அல் ஹசன் பயணித்த ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளாகியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் நான்கு பேர் காயமடைந்துள்ளனர். ஷகிப் அல் ஹசன் மற்றும் அவரது மனைவி ஆகியோரை விளம்பர படப்பிடிப்பில் இறக்கிவிட்ட பின்னர் டாக்கா நோக்கி பயணித்த குறித்த ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளாகியுள்ளது. ஹெலிகொப்டரில் ஏற்பட்ட தொழினுட்ப கோளாறு காரணமாக விபத்து விபத்து இடம்பெற்றுள்ளது. குறித்த விபத்து ஷகிப் அல் ஹசன் தரையிறங்கிய இடத்திலிருந்து சுமார் 1.5 கிலோமீற்றர் தூரத்தில் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் கருத்து தெரிவித்த ஷகிப் அல் ஹசன் தா…
-
- 0 replies
- 460 views
-
-
கொடுத்தவனே பறித்துக்கொண்டான்டி... ஒருவர் அன்பாகக் கொடுப்பதை நாம் எப்பொழுதுமே அவர் நினைவாகப் பத்திரமாகப் பேணி வைப்பது வழமை. பொருளின் பெறுமதியை விட . அதை அன்போடு கொடுத்தவர்தான் எமக்கு முக்கியமானதாகின்றது. அதுவே எதிரியாகி விட்டால் கதை வேறு. தந்ததைத் திருப்பிக் கொடுப்பதில்தான் எம் கவனம் இருக்கும். நல்ல முறையான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து காத்திருந்துஇ தந்ததிற்கு மேலாக முடிந்தால் இரண்டு மடங்காக திருப்பிக் கொடுக்கும்போதுதான் மனம் ஆறுதலடையும். இலங்கை விஜயம் செய்த ஆஸ்திரேலிய கிரிக்கட் ஆட்டக்காரர்கள் தமது விஜயத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்புகிறார்கள். இலங்கை கிரிக்கட் அணியைப் பற்றி பல விமர்சனங்கள் கொ…
-
- 0 replies
- 628 views
-