விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7860 topics in this forum
-
இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான அவுஸ்திரேலியா அணி அறிவிப்பு – கிளென் மக்ஸ்வெல் அணியிலிருந்து வெளியேற்றப்பட்டார். இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான அவுஸ்திரேலியா அணி அறிவிப்பு – கிளென் மக்ஸ்வெல் அணியிலிருந்து வெளியேற்றப்பட்டார். இலங்கை வந்துள்ள அவுஸ்திரேலியா அணி தற்போது டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதை தொடர்ந்து நடைபெறவுள்ள 5 ஒருநாள் ஆட்டங்கள் கொண்ட தொடருக்கான ஆஸி அணியின் விபரம் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில், இம்முறை அவுஸ்திரேலியாவின் சிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்ட, ஆஸியின் ஒருநாள் அணிக்கு முதல் தெரிவாக தெரிவுசெய்யப்படும் கிளென் மக்ஸ்வெல்க்கு இடம் வழங்கப்படவில்லை. இது தொடர்பாக கருத்து தெரிவித்த தேர்வுக்குழ…
-
- 19 replies
- 1.4k views
-
-
ஜேர்மன் கால்பந்தாட்ட கழக அணியில் பிரகாசிக்கும் இலங்கை வீரர் வசீம் ராசிக் இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து சென்று உலக நாடுகளில் தங்களது திறமைகளை நிரூபித்து சாதனைகளை நிலைநாட்டும் இலங்கையர்கள் அநேகம். அந்தவகையில் அண்மையில் ேஜர்மன் சென்றிருந்தபோது இலங்கையைச் சேர்ந்த தமிழ் பேசும் நபரொருவரைச் சந்திக்க வாய்ப்பு கிடைத்தது. அவர் தான் இலங்கையிலிருந்து சென்று ஜேர்மனில் கால்பந்தாட்டக்கழகமொன்றுக் குத் தெரிவாகி அங்கு கலக்கி வரும் வசீம் ராசிக். அவர், தனது அனுபவங்கள், சாதனைகள், சவால்களில் சிலவற்றைப் பற்றி பகிர்ந்துகொண்டார். இவர் ஜேர்மனின் தலைநகர் பேர்லினில் தனது பெற்ற…
-
- 0 replies
- 748 views
-
-
இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா ஏ-வை வீழ்த்தி இந்தியா ஏ கோப்பையை வென்றது கோப்பையை வென்ற இந்தியா ஏ. | படம்: கிரிக்கெட் ஆஸ்திரேலியா ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற நாற்தரப்பு ஒருநாள் தொடரின் இறுதிப் போட்டியில் இன்று ஆஸ்திரேலியா ஏ அணியை 57 ரன்களில் வீழ்த்தி மணீஷ் பாண்டே தலைமை இந்தியா ஏ அணி கோப்பையை வென்றது. இதன் மூலம் தொடர்ச்சியாக 3-வது முறையாக கோப்பையை வென்ற்து இந்தியா ஏ அணி. டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்தியா ஏ அணி 50 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 266 ரன்கள் எடுக்க, தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலியா ஏ அணி 209 ரன்களுக்குச் சுருண்டது. இந்தியா ஏ ஸ்பின்னர்கள் யஜுவேந்திர சாஹல் (4), கருண் நாயர் (2), அக்சர் படேல் (2) ஆகியோர் த…
-
- 0 replies
- 369 views
-
-
பங்களாதேஷ் அணியின் துடுப்பாட்ட பயிற்சியாளராக திலான் சமரவீர நியமனம். பங்களாதேஷ் அணியின் துடுப்பாட்ட பயிற்சியாளராக திலான் சமரவீர நியமனம். இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் துடுப்பாட்ட வீரர் திலான் சமரவீர, பங்களாதேஷ் அணியின் துடுப்பாட்ட பயிற்சியாளராக நியமனம் பெற்றுள்ளார். அடுத்து வரவுள்ள ஆப்கானிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கெதிரான தொடருக்காகவே 39 வயதான திலான் சமரவீரவின் இந்த நியமனம் அமைந்துள்ளது. பங்களாதேஷ் கிரிக்கெட் சபைத் தலைவர் நசிமுல் ஹாசனின் பணிப்புரையின் பேரில்,தற்போதைய தலைமைப் பயிற்சியாளர் சந்திக்க ஹத்துருசிங்க தனக்கு உதவியாக துறைசார்ந்த பயிற்சியாளர்களை பரிந்துரைத்திருக்கிறார். அதன் அடிப்படையில்தான் அண்மையில் மேற்கிந்திய தீவ…
-
- 0 replies
- 350 views
-
-
இங்கிலாந்தை வெல்ல முடியாமல் திணறும் பாகிஸ்தான்: 4-0 முன்னிலை அரைசத ஆட்ட நாயகன் ஜானி பேர்ஸ்டோ, வின்னிங் ஷாட் அடித்த மொயீன் அலி. | படம்: ராய்ட்டர்ஸ். ஹெடிங்லி மைதானத்தில் நேற்று நடைபெற்ற 4-வது ஒருநாள் போட்டியிலும் பாகிஸ்தானை இங்கிலாந்து வீழ்த்தி, தொடரில் 4-0 என்று முன்னிலை வகிக்கிறது. முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 247 ரன்கள் எடுக்க இங்கிலாந்து 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 252 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஜோஸ் பட்லருக்கு எதிர்பாராத காயம் ஏற்பட்டதால் ஜானி பேர்ஸ்டோ அழைக்கப்பட்டார். இவர் தனது அழைப்பை நிரூபிக்கும் விதமாக 61 ரன்கள் எடுத்ததோடு பென் ஸ்டோக்ஸுடன் 103 ரன்கள் கூட்டணி அமைத்தார். பென் ஸ்டோக்ஸ் …
-
- 0 replies
- 510 views
-
-
ரியோ ஒலிம்பிக்: ஒரு நுட்பமான அலசல் அதிக மெடல்களை வென்ற மைக்கேல் பெல்ப்ஸ், உசைன் போல்ட் மற்றும் சிமோன் பைல்ஸ் கடந்த ஆகஸ்ட் மாதம் 21-ஆம் தேதியன்று, ரியோ டி ஜெனிரோ நகரில் உள்ள மரக்கானா மைதானத்தில் வண்ணமயமான கலைநிகழ்ச்சிகளுடன் 2016 ஒலிம்பிக் போட்டிகள் நிறைவு பெற்றன. 16 நாட்கள் குறிப்பிடத்தக்க வகையில் நடந்த விளையாட்டுப் போட்டிகள், இதன் மூலம் முடிவுக்கு வந்தன. 207 நாடுகளை சேர்ந்த பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட தடகள வீரர்கள், 31 விளையாட்டுப் பிரிவுகளில் பங்கேற்றனர். ரியோ போட்டிகளின் போது மொத்தம் 306 வகை பதக்கங்கள் வழங்கப்பட்டன. பல சாதனைகள் முறியடிக்கப்பட்டது; வரலாறு நிகழ்த்தப்பட்டது; சாதனையாளர்கள் தங்களை உறுதிப்படுத்திக் கொண்டனர்; புதிய நம்பிக்கை நட்சத்திரங…
-
- 0 replies
- 679 views
-
-
வங்கதேச பந்து வீச்சு பயிற்சியாளர் வால்ஷ் கோர்ட்னி வால்ஷ் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் கோர்ட்னி வால்ஷ், வங்க தேச அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். வங்கதேச கிரிக்கெட் வாரியம் இந்த தகவலை அதிகாரப் பூர்வமாக வெளியிடும் முன்னரே மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. மூன்று ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள வால்ஷ் வரும் 2019-ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட் தொடர் வரை பந்துவீச்சு பயிற்சியாளராக நீடிப்பார். டெஸ்ட் போட்டிகளில் 519 விக்கெட்களும் ஒருநாள் போட்டியில் 217 விக்கெட்களையும் வீழ்த்தியுள்ள வால்ஷ், 2001-ம் ஆண்டு …
-
- 0 replies
- 432 views
-
-
வெற்றியுடன் விடைபெற்றார் ஸ்வாஞ்டைகர் ஜேர்மனி தேசிய கால்பந்தாட்ட அணியின் உணர்ச்சிபூர்வமான தலைவரான பஸ்டியான் ஸ்வாஞ்டைகர், வெற்றியுடன் சர்வதேசக் கால்பந்தாட்டப் போட்டிகளிலிருந்து விடைபெற்றார். ஜேர்மனி, பின்லாந்து அணிகளுக்கிடையிலான சிநேகபூர்வ போட்டியே, 32 வயதான ஸ்வாஞ்டைகரரின் இறுதி சர்வதேசப் போட்டியாக அமைந்திருந்த நிலையி, இப்போட்டியின் பரிசளிப்பு நிகழ்வின்போது ஸ்வாஞ்டைகர் அழுதிருந்தார். இங்கிலாந்து பிறீமியர் லீக்கின் மத்தியகள வீரராகவிருக்கும் ஸ்வாஞ்டைகர், 2004ஆம் ஆண்டு அறிமுகத்தை மேற்கொண்டிருந்தார். அது முதல் 121 போட்டிகளில் ஜேர்மனிக்காக பங்குகொண்டு 24 கோல்களை ஸ்வாஞ்டைகர் பெற்றார். போட்டியின் 66ஆவது நிமிடத்தில், மாற்று வீரரால் மா…
-
- 1 reply
- 625 views
-
-
குளிர்கால ஒலிம்பிக்கில் பங்குபற்றவும் ரஷ்யாவுக்கு தடை 2016-09-02 11:11:28 ரியோ பராலிம்பிக் விளையாட்டு விழாவில் பங்குபற்றவதற்கு ரஷ்யாவுக்கு ஏற்கனவே தடைவிதிக்கப்பட்ட நிலையில் இப்போது குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டு விழாவிலும் பங்குபற்ற தடை விதிக்கப்பட்டுள்ளது. விளையாட்டு வீர, வீராங்கனைகளுக்கு அரச ஆதரவுடன் ஊக்கமருந்து வழங்கப்பட்ட குற்றத்தின் பேரிலேயே இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டு தென் கொரியாவின் பியொங்சாங் நகரில் 2018இல் நடைபெறவுள்ளது. - See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=…
-
- 0 replies
- 270 views
-
-
இங்கிலீஷ் பிரிமியர் லீக்: பல மில்லியன் டாலர்கள் புழக்கம் இங்கிலீஷ் பிரிமியர் லீக்கில் உள்ள கால்பந்து கழகங்கள், கோடைக்கால சாளர மாற்று முறையின் கடைசி நாளில், புதிய வீரர்களை வாங்குவதில் 200 மில்லியன் டாலருக்கும் அதிகமாக செலவழித்துள்ளன. புதன்கிழமைதான் இதற்கான கடைசி நாள்; இரண்டு மாதங்களில் 1.5 பில்லியன் டாலர் கைமாறியுள்ளதாக பதிவாகியுள்ளது. பிரிமியர் லீக் மற்றும் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர்களுக்கு மத்தியில் நடந்த லாபகரமான ஒப்பந்தம் இந்த அதிபடியான செலவுகள் செய்வதற்கு உதவியுள்ளது. பிரேசில் ஆட்டக்காரர் டேவிட் லுயிச், செல்சீ அணிக்கு திரும்ப வந்ததும், லிவர்பூலின் இத்தாலிய வீர்ர் மரியோ பலொடெலி, நீஸ் பிரான்ஸ் க்ளப் அணிக்கு மாறியதும் குறிப்பிடத்தக…
-
- 0 replies
- 493 views
-
-
'2015 உலகக்கோப்பை அரையிறுதியில் நடந்தது என்ன?' சுயசரிதையில் டி வில்லியர்ஸின் ஃப்ரீ ஹிட் ஒருமுறை இயக்குநர் சிகரம் பாலசந்தர், ரஜினியிடம் சுயசரிதை எழுதும் எண்ணம் உண்டா என கேட்டார். அதற்கு ரஜினி ‘நான் மகாத்மா காந்தி சுயசரிதை படிச்சிருக்கேன். சுயசரிதைன்னா உண்மை இருக்கனும். உண்மையை எழுதுனா பல பேரோட பகையை சம்பாதிக்க வேண்டி இருக்கும். ஸோ.. இப்போதைக்கு அந்த ஐடியா இல்லை’ என பதிலளித்திருப்பார். ரஜினி சொல்வது போல, சுயசரிதை என்பது சுயதம்பட்டமாக இல்லாமல், உண்மையை உள்ளபடி எடுத்துரைக்கும்படி இருக்க வேண்டும். இல்லையேல் பெரிதாகப் பேசப்படாது. எம்ஜிஆரின் ‘நான் ஏன் பிறந்தேன்’, கருணாநிதியின் ‘நெஞ்சுக்கு நீதி’, கண்ணதாசனின் ‘வனவாசம்’ இந்த மூன்று சுயசரிதையில் எது பெஸ்ட…
-
- 0 replies
- 482 views
-
-
ஆஸ்திரேலிய அணியுடனான தொடரிலிருந்து விலகினார் அஞ்சேலோ மத்தியூஸ் ஆஸ்திரேலிய அணியுடனான தொடரிலிருந்து விலகினார் அஞ்சேலோ மத்தியூஸ். இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் அஞ்சேலோ மத்தியூஸ் தசைப்பிடிப்பு உபாதையால் அவுஸ்திரேலிய தொடரில் இருந்து வெளியேறியுள்ளார். ஆஸ்திரேலியாவுடன் இடம்பெறவுள்ள இறுதி ஒருநாள் போட்டி மற்றும் 2 T20 சர்வதேசப் போட்டிகளிலும் அஞ்சேலோ மத்தியூஸ் பங்கு கொள்ளமாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘ஸ்ரீலங்கா கிரிக்கட்’ இன்னும் அஞ்சேலோ மத்தியூஸ்ற்குப் பதிலாக மாற்று வீரரை அணிக்கு அழைக்காத நிலையில் உப்புல் தரங்க அணிக்கு அழைக்கப்படலாம் என்று அறியக் கிடைக்கிறது. அணித்தலைவர் மத்தியூஸ் நேற்றைய போட்டியில் 40 ஓட்டங்கள் சேர்த்த நிலையில் தசைப…
-
- 0 replies
- 415 views
-
-
ஐஸ்எஸ்எல் கால்பந்து: சென்னை அணியில் ஜமைக்கா வீரர் டுவைன் கெர் ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் 3-வது சீசன் போட்டிகள் வரும் அக்டோபர் 1-ம் தொடங்குகிறது. இந்நிலையில் இந்த தொடரில் கலந்து கொள்ளும் நடப்பு சாம்பியனான சென்னையின் எப்சி அணிக்காக ஜமைக்கா கால்பந்து அணியின் டுவைன் கெர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள் ளார். கோல்கீப்பரான கெர் இந்த சீசனுக்காக மட்டும் சென்னை அணிக்காக விளையாட உள்ளார். 29 வயதான கெர் ஐஸ்லாந்தில் உள்ள கிளப் ஒன்றில் விளையாடி வந்தார். அந்த கிளப்பின் ஒப்பந்த காலம் முடிவடைந்ததை தொடர்ந்து சென்னை அணியில் இணைந்துள்ளார். கடந்த 2007-ம் ஆண்டு ஜமைக்கா அணிக்காக சர்வதேச போட்டிகளில் கெர் அறிமுகமானார். இதுவரை அவர் 15 …
-
- 0 replies
- 474 views
-
-
ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 444 ஓட்டங்களைக் குவித்து உலக சாதனை படைத்தது இங்கிலாந்து 2016-08-30 23:01:49 பாகிஸ்தானுடனான 3 ஆவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 444 ஓட்டங்களைக்குவித்து புதிய உலக சாதனை படைத்துள்ளது. இங்கிலாந்தின் நோட்டிங்ஹாம் நகரில் இன்று நடைபெறும் இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழப்புக்கு 444 ஓட்டங்களைக் குவித்தது. அலெக்ஸ் ஹேல்ஸ் ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இது புதிய சாதனையாகும். 2006 ஆம் ஆண்டு நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி 9 விக்கெட் இழப்புக்கு 443 ஓட்டங்களைக் குவித்தம…
-
- 4 replies
- 891 views
-
-
அக்ரமைக் கடந்த டேல் ஸ்டெய்ன் சாதனையுடன் டெஸ்ட் தொடரை வென்றது தென் ஆப்பிரிக்கா ராஸ் டெய்லரை வீழ்த்திய டேல் ஸ்டெய்ன். | படம்: ராய்ட்டர்ஸ். செஞ்சூரியனில் நடைபெற்ற 2-வது டெஸ்ட் போட்டியில் டேல் ஸ்டெய்ன் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்ற 2-வது இன்னிங்சில் 195 ரன்களுக்குச் சுருண்டது நியூஸிலாந்து, தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடரை வென்றது. இதன் மூலம் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 1-0 என்று கைப்பற்றியது தென் ஆப்பிரிக்கா, முதல் டெஸ்ட் போட்டி தென் ஆப்பிரிக்காவுக்கு சற்றே கடினமாக இருந்த நிலையில் கன மழை, மைதான நிலைமை காரணமாக கைவிடப்பட்டது. ரிச்சர்ட் ஹேட்லியை மீண்டும் பார்ப்பது போன்ற ஒரு அபாரமான ஸ்விங் பவுலிங்கை டேல் ஸ்டெய்ன் நேற்று வெளிப்படுத்…
-
- 0 replies
- 485 views
-
-
இந்தியா-மே.தீவுகள் டெஸ்ட் தொடர் -ச.விமல் இந்தியா, மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையிலான நான்கு போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடர், 2-0 என்ற அடிப்படையில் இந்தியாவுக்கு வெற்றியை வழங்கியுள்ளது. எதிர்பார்த்த தொடர் வெற்றி என்ற போதிலும் இந்தியாவுக்கு இதை விட பெரிய தொடர் வெற்றி ஒன்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதை இந்திய அணி அடையாமல் போய் விட்டதா என்ற கேள்வி தொக்கு நிக்கின்றது. இதை வைத்தே இந்த தொடரை ஆராய முடியும். இன்னுமோர் வெற்றி கிடைத்து இருந்தால் இந்தியா அணி தரப்படுத்தலில் முதலிடத்தை பெற்று இருக்க முடியும். ஆனால் இறுதிப் போட்டி மழையால் கழுவப்பட்டது. மழை இல்லாவிட்டால் இந்திய அணிக்கு வெற்றி கிடைத்து இருக்கும். முதலிட…
-
- 0 replies
- 449 views
-
-
ஒலிம்பிக்கில் ஒழுங்கீனமாக நடந்துகொண்ட பிரெஞ்சு வீர, வீராங்கனைகளுக்கு தடை! 2016-08-31 11:51:29 ரியோ ஒலிம்பிக் விளையாட்டு விழாவின்போது ஒழுங்கீனமாக நடந்துகொண்ட காரணத்துக்காக பிரெஞ்சு டென்னிஸ் சம்மேளனம் தனது நாட்டைச் சேர்ந்த மூவருக்கு தற்காலிக தடை விதித்துள்ளது. டென்னிஸ் வீரர் பெனொய்ட் பாய்ரே, வீராங்கனைகளான கிறிஸ்டினா மிலாடேனோவிக், கரோலின் கார்சியா ஆகிய மூவரே தடைக்குள்ளானவர்களாவர். இந்த மூவரினதும் நடத்தை சம்மேளனத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியுள்ளதாக சம்மேளனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. …
-
- 0 replies
- 365 views
-
-
தான் பந்து வீசியதிலேயே கடினமான பேட்ஸ்மென் யார்? - ஷோயப் அக்தர் கருத்து கொல்கத்தா, 1999, டெஸ்ட் போட்டியில் அக்தர் பந்தில் பவுல்டு ஆன சச்சின் டெண்டுல்கர். | கோப்புப் படம். வாசிம் அக்ரம் நடத்திய தி ஸ்போர்ட்ஸ்மென் என்ற ஷோ-வில் ஷோயப் அக்தர் தான் வீசியதிலேயே கடினமான பேட்ஸ்மென் யார் என்ற தகவலை வெளியிட்டார். “நிறைய பேட்ஸ்மென்களைக் கூற முடியும். ஆனால் அவர்களை விடவும் வீழ்த்துவதற்கு மிகவும் கடினமான வீரர் இன்சமாம் உல் ஹக்தான். அவரை நான் வலைப்பயிற்சியில் கூட வீழ்த்த முடிந்ததில்லை. அவரை விட என்னை சிறப்பாக ஆடிய வீரர் இல்லை என்றே கூறிவிடலாம். அவரது கால்நகர்த்தல்கள் விரைவாக இருக்கும். அவர் கிரீசில் பந்தை ஆட நிலைப்படுத்திக் கொள்ளும் விதம்…
-
- 0 replies
- 635 views
-
-
2018 உலக கிண்ணத்துடன் ஓய்வு பெறுகிறார் வெய்ன் ரூனி. 2018 உலக கிண்ணத்துடன் ஓய்வு பெறுகிறார் வெய்ன் ரூனி. இங்கிலாந்து கால்பந்து அணியின் தலைவரும் நட்சத்திர வீரருமான வெய்ன் ரூனி, 2018 இல் ரஸ்யாவில் இடம்பெறவுள்ள கால்பந்து உலக கிண்ணப் போட்டிகளுடன் ஓய்வு பெறவுள்ளதாக அறிவித்துள்ளார். 30 வயதாகும் வெய்ன் ரூனி, இப்போது உலக கிண்ண தகுதிகாண் போட்டிகளில் இங்கிலாந்து சார்பில் பங்கேற்று வருகின்றார்.2014 ஆகஸ்ட் மாதம் இங்கிலாந்து அணியின் தலைவராக வெய்ன் ரூனி நியமனம் பெற்றார். அணித்தலைவராக நியமனம் பெற்றதன் பின்னர் இங்கிலாந்து அணி முக்கிய 6 தொடர்களில் பங்கெடுத்தது, ஆயினும் ஒன்றிலும் இங்கிலாந்து காலிறுதியை தாண்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில்தான் தனத…
-
- 0 replies
- 447 views
-
-
டில்ஷானின் இறுதிப் போட்டியால் எவ்வளவு இலாபம் கிட்டியது தெரியுமா? தம்புள்ளை கிரிக்கெட் மைதானத்தில் கடந்த 28ம் திகதி இடம்பெற்ற போட்டியால், பெருமளவு இலாபம் கிட்டியுள்ளது. இதன்படி, இலங்கை மற்றும் அவுஸ்திரேலியாவுக்கு இடையில் இடம்பெற்ற குறித்த 3வது ஒருநாள் போட்டியில், நுழைவுச் சீட்டுக்கள் (டிக்கெட்டுக்கள்) விற்பனையால் 4.6 மில்லியன் இலாபம் கிடைத்துள்ளதாக, அந்த மைதானத்தின் பொறுப்பதிகாரி மற்றும் முகாமையாளர் சுஜீவ கொடலியத்த குறிப்பிட்டுள்ளார். இதேவேளை குறித்த போட்டியைப் பார்வையிட சுமார் 50,000 பேர் வருகை தந்த போதும், 20,000 பேருக்கு மாத்திரம் பார்வையிடும் வாய்ப்புக்கள் விளையாட்டரங்கில் செய்யப்பட்டிருந்தாக அவர் கூறியுள்ளார். ஓய்வை அறிவித்துள்ள, இலங்கை அணி…
-
- 0 replies
- 557 views
-
-
கிரிக்கெட்டில் புதிய நோ போல் சமிக்ஞை அறிமுகம் (வீடியோ இணைப்பு) சர்வதேச கிரிக்கெட் வாரியம் மூன்றாவது நடுவர் மூலமாக நோ போல் சமிக்ஞை வழங்குவதனை பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான ஒருநாள் போட்டியில் அறிமுகப்படுத்தியுள்ளது. சர்வதேச கிரிக்கெட் வாரியம் மூன்றாவது நடுவர் மூலமாக நோ போல் சமிக்ஞை வழங்குவது தொடர்பில் தீர்மானித்த நிலையில், தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. http://www.virakesari.lk/article/10778
-
- 0 replies
- 360 views
-
-
இந்த ஆண்டு டெஸ்ட் சீசன் முடிவில் இந்திய அணி முதலிடத்தை பிடிக்கும்: ஒரு நாள் போட்டி கேப்டன் தோனி நம்பிக்கை தோனி. | படம்: பிடிஐ. இந்த ஆண்டு சீசன் முடிவில் இந்திய கிரிக்கெட் அணி டெஸ்ட் போட்டிகளுக்கான தர வரிசையில் முதலிடத்தை பிடிக்கும் என ஒருநாள் போட்டிக்கான கேப்டன் தோனி தெரிவித்தார். இந்திய கிரிக்கெட் அணி வரும் மாதங்களில் சொந்த மண்ணில் நியூஸிலாந்து, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, வங்கதேசம் ஆகிய அணிகளுக்கு எதிராக 13 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. தற்போது டெஸ்ட் தர வரிசையில் 110 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ள இந்திய அணி இந்த சீசன் முடிவில் முதலிடத்தை மீண்டும் பிடிக்கும் என தோனி தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது: …
-
- 0 replies
- 354 views
-
-
இந்திய கிரிக்கெட் அணி அடுத்து விளையாடும் டெஸ்ட்-ஒருநாள் தொடர்கள்! இந்தியாவுக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரை 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது மேற்கிந்தியத்தீவுகள் அணி. முதல் போட்டியில் அந்த அணி 1 ரன் வித்தியாசத்தில் வென்றிருந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 2-ஆவது போட்டி மழையால் கைவிடப்பட்டதால், மேற்கிந்தியத் தீவுகள் தொடரை வென்றதாக அறிவிக்கப்பட்டது. இந்த வருடம் இந்தியாவில் நியூசிலாந்து, இங்கிலாந்து ஆகிய இரு அணிகள் சுற்றுப்பயணம் செய்யவுள்ளன. நியூசிலாந்து தொடர் இந்தியாவுடனான 3 டெஸ்ட் ஆட்டங்கள், 5 ஒருநாள் ஆட்டங்கள் கொண்…
-
- 0 replies
- 457 views
-
-
இந்திய – மேற்கிந்திய இருபது20 தொடர் அமெரிக்காவில் நாளை ஆரம்பம் இந்திய, மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையிலான இருபது20 கிரிக்கெட் சுற்றுப்போட்டி அமெரிக்காவில் நாளை ஆரம்பமாகவுள்ளது. இரு போட்டிகள் இத்தொடரில் நடைபெறவுள்ளன. இவ்விரு போட்டிகளும் புளோரிடா மாநிலத்தின் ஃபோர்ட் லவ்டர்டேல் நகரிலுள்ள சென்ட்ரல் புரோவார்ட் ரீஜனல் பார்க் அரங்கில் சனி, ஞாயிறு தினங்களில் உள்ளூர் நேரப்படி காலை 10 மணிக்கு (இலங்கை, இந்திய நேரப்படி இரவு 7.30) மணிக்கு ஆரம்பமாகவுள்ளன. அமெரிக்காவில் கிரிக்கெட் விளையாட்டை பிரசித்தப்படுத்துவதற்கு இச்சுற்றுப்போட்டி உதவி…
-
- 8 replies
- 1.2k views
-
-
ஓய்வின்போது மனம் திறந்த டில்ஷான் (வீடியோ இணைப்பு) இலங்கை அணிக்கு தலைவராக செயற்பட்ட காலத்தில் அணியின் சில வீரர்கள் மற்றும் பயிற்றுவிப்பாளர்களின் ஆதரவு தனக்கு கிடைக்கவில்லை என ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வுபெற்ற இலங்கை அணியின் சகலதுறை வீரர் திலகரட்ண டில்ஷான் கூறியுள்ளார். நேற்று (28) ஆஸி அணிக்கெதிராக தம்புள்ளை ரங்கிரி மைதானத்தில் இடம்பெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டி நிறைவடைந்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோதே அவர் இதனை தெரிவித்தார். இதன் போது மேலும் கருத்து தெரிவித்த அவர், இலங்கை அணியின் தலைமை பொறுப்பை ஏற்கும் எண்ணம் என்னிடம் இருக்கவில்லை. எனினும் அணியின் தலைவராக ஆறு மாதத்திற்கு மாத்திரம் …
-
- 0 replies
- 420 views
-