இவர் 39 ஆண்டுகளாக இந்தப் பக்கம் வரவில்லை. இவரின் பழைய கடவுச்சீட்டு இருக்கிறதா”
அட இப்படியொரு பிரச்சினை இருக்கா....அப்பநான் நினைக்கவே முடியாது..
நல்லாகப் போகிறது....தொடருங்கள்..
இவ்ருக்கு மட்டுமல்ல ..பல யூத் டியூப்பர்களுக்கும் கொமன்சில் இந்த சாதியைப் போட்டபடியே இருப்பார்கள்...அவர்கள் அதனை அசடடை செய்தபடியே கடந்து செல்வார்கள்....ஆனால் இவரோ ஓவர் பீலிங் செய்கின்ற மாதிரிப் பேசுகின்றர்....இது அழிக்கமுடியாத அடையாளமாய் எமது சமூகத்தில் புரையோடியுள்ளது....இவ்ர் அதனை அசட்டையாய் விட்டு கடந்துபோவதே நல்லது...கஸ்டப்பட்டு பாடி அவ்வார்டு எடுத்த கில்மிசாவே இப்படியொரு தாக்குதலுக்கு உள்ளான குழந்தை...சிலரை மாற்ற்வே முடியாதே..
உங்களுக்குத் தெரியுமோ..அப்ப ஒருகாலத்திலை.வடமராட்சிப் பகுதியிலை..எந்த ஒரு ஒழுங்கையில் நின்று வாத்தியார் என்று கூப்பிட்டாலும்...ஒவ்வொரு வீட்டில் இருந்தும் ஓம் என்று குரல் கேட்குமாம்...இப்ப ..கனடாத் தம்பி என்றால் .. அதே நிலைதான்....இது வளர்ச்சி அய்யா...நக்கல் அல்ல...ஏனெனில் என்வீட்டிலே 3 வந்தாச்சு...இன்னும் 2 வெயிட்டிங்...😎.. நன்றி வரவுக்கு
நூடில்ஸ் ஆவது நோகாமல் இருக்குக் ..இது கொத்துரொட்டி அய்யா... நன்றி வரவுக்கு
நன்றி உங்கள் ரசனைக்கும் ...அனுதாபத்திற்கும்
மொழிப்பிரச்சினைக்கு தீர்வை காண்பதற்கான நடவடிக்கைகளை நாங்கள் எடுப்போம் என உறுதிமொழி வழங்குகின்றோம்,உங்கள் மொழியில் கருமங்களை ஆற்றுவதற்கான உரிமையை உறுதி செய்வோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இவருக்கு இதுதான் தமிழரின் தலையாய பிரச்சினை போல் தெரிகிறது...
நன்றி தங்கள் வருகைக்கும் ...கருத்துக்கும்...
புங்கையூரன்....நிலாமதி...
உண்மை நிலாமதி...என்வீட்டிலேயே இதுதான் நிலமை..
முப்பது வருடங்களாகி போராடி கிடைத்த நிலையை (கனடா வாழ்க்கை ) விசிட் விசாவில் வந்த மூன்று நாட்களில் கிடைக்கும் என எண்ணுகிறர்கள்.
தம்பி நீ கனடாவோ?
வருடங்கள் உருண்டு விட்டன
வயது போகுமுன்
வருவேன் ஊருக்கென்று
வாக்குக் கொடுத்தேன்
வந்து இறங்கியும் விட்டேன்…
வடிவான ஊராகிவிட்டது நம்மூரு..
வலம் இடம் தெரியவில்லை…
வடிவான வீடும் ஆட்களும்
வசதியாக வாழும் நம் சனத்தையும் கண்டு
வாய் நிறைந்த சிரிப்புடன்
வணக்கமும் சொன்னேன்..
வந்தார் கந்தையா அண்ணர்
வயதும் வட்டுக்கை போயிட்டுது
வந்தவுடன் கேட்ட கேள்விதான்
வயித்தை கலக்கிப் போட்டுது
விசிட்டர் விசாவில் வந்த பேரப் பொடியன்
கனடாவில் நிக்கிறான் கண்டனியோ…
போத்தல் தண்ணி குடித்து
தவண்டை அடித்த வாய்க்கு…
கோயில் கிணத்தில் தண்ணி குடிக்கப் போக….
கைமண்டையில் தண்ணி ஊத்திய ஆச்சி கேட்டா..
ஆறுமுகத்தின்ரை மருமோன்
விசிட்டர் விசாவிலை வந்தவர்….
வேலை கீலை ..செய்யிறாரோ….
பொட்டுக்கடை
பொன்னையர் வீட்டடியால் போகையில்
பொன்னற்றை…பூட்டப் பொடியனாம் தான்
அண்ணை ..அண்ணை…
அண்ணன் விசிட்டர் விசாவில் வந்தவர்
வன்கூவரில்தான் ..இருக்கிறார்…
அவர் எப்படி அண்ணை இருக்கிறார்..
பந்தடி வெட்டைக்குப் போகவும்
பயமாக்கிடக்கு..
படிச்ச பள்ளிக்குடப் பக்கம் போகவும்
கூச்சமாக் கிடக்கு
பள்ளித் தோழரையும் காணப் போகவும்
பயமாக்கிடக்கு..
பலகால ஆசை….சொந்தங்கள்
பந்தங்கள் ….காணுகின்ற ஆசை
கனடா விசிட்டர் விசாவால்.
பாதியில் முடிந்ததுவே…
ஏனென்று…கேட்பியள்
முப்பது வருசம் முந்தி வந்த
என்னிடம்..
மூத்தவனின் பேரனைத்தெரியுமோ
மருமோனைத் தெரியுமோ
வன்கூவர் அண்ணனைத் தெரியுமோ என்றால்
நான் என்ன சொல்லமுடியும்…
தம்பி நீ கனடாவோ
என்ற கேள்வி வருமுன்…
பாதியில் பயணத்தை முடித்துவிட்டேன்..
ஈழத்து + புலம்பெயர்ஸ்,
அப்ப நீங்கள் ஈழத்து புலம் பெய்ர் தமிழன் இல்லையென்றால் ஏன் யாழில் வந்து எல்லாவற்றிலும் மூக்கு நுழைக்கிறியள்.... அறியலாமா...பச்சை மண்ணும் சுட்ட மண்ணும் ஒட்டாதல்லவா.
சரி விடுவம் ..நம்ம சுமா உங்கடை தோஸ்துதானே...இந்த பிரச்சினைக்கு சுமாமூலம் தீர்வுகாண ஏன் முயற்சிக்கக் கூடாது...😄
திருக்கேதீஸ்வர மனித புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட எலும்புகள் காபன் பரிசோதனைக்காக அனுப்பப்பட இருந்த நிலையில் அதற்கான நிதி வசதிகள் மேற்கொள்வதற்காக காணாமல் போனோருக்கான அலுவலகத்திடம் அதற்கான விலை மனு கோரப்பட்டு இருந்ததாகவும் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகம் அதற்கான பதிலை அளிக்க முடியாத நிலை காணப்பட்டமையால் அதற்கு பிரிதொரு தவணையை கோரியதாகவும் தெரிவித்தார்.
அதன் அடிப்படையில் மன்னார் திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழி தொடர்பான வழக்கு விசாரணை மீண்டும் மே மாதம் 13 திகதி அழைப்பதற்காக திகதியிடப்பட்டுள்ளது.
இந்த காசெல்லாம் எடுத்து விகாரை கட்டத்தானே பாவிப்பீர்கள்... கூடக்கேளுங்கோ...😁