Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. இந்திய – மேற்கிந்திய இருபது20 தொடர் அமெரிக்காவில் நாளை ஆரம்பம் இந்­திய, மேற்­கிந்­தியத் தீவுகள் அணி­க­ளுக்­கி­டை­யி­லான இரு­பது20 கிரிக்கெட் சுற்­றுப்­போட்டி அமெ­ரிக்­காவில் நாளை ஆரம்­ப­மா­க­வுள்­ளது. இரு போட்­டிகள் இத்தொடரில் நடை­பெ­ற­வுள்­ளன. இவ்­விரு போட்­டி­களும் புளோ­ரிடா மாநிலத்தின் ஃபோர்ட் லவ்­டர்டேல் நக­ரி­லுள்ள சென்ட்ரல் புரோவார்ட் ரீஜனல் பார்க் அரங்கில் சனி, ஞாயிறு தினங்­களில் உள்ளூர் நேரப்­படி காலை 10 மணிக்கு (இலங்கை, இந்­திய நேரப்­படி இரவு 7.30) மணிக்கு ஆரம்­ப­மா­க­வுள்­ளன. அமெ­ரிக்­காவில் கிரிக்கெட் விளை­யாட்டை பிர­சித்­தப்­ப­டுத்­து­வ­தற்கு இச்­சுற்­றுப்­போட்டி உத­வி­…

  2. ஒலிம்பிக் பதக்கத்தை ஏழை சிறுவனின் மருத்துவ தேவைக்காக ஏலமிடும் போலந்து நாட்டின் வெள்ளை உள்ளம். ஒலிம்பிக் பதக்கத்தை ஏழை சிறுவனின் மருத்துவ தேவைக்காக ஏலமிடும் போலந்து நாட்டின் வெள்ளை உள்ளம். பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் நிறைவுக்கு வந்துள்ள 31 வது கோடைகால ஒலிம்பிக் போட்டிகளில் தான் பெற்றுக் கொண்ட பதக்கத்தை ஏழை சிறுவனின் மருத்துவ தேவைக்காக ஏலமிடத் துணிந்திருக்கிறார் போலந்து நாட்டை சேர்ந்த தட்டு எறிதல்(Discus Through ) வீரர் பியோட்டர் மலசோவ்ஸ்கி. 33 வயதான இந்த வீரர், ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் வென்றார். இதனிடையே அந்த நாட்டை சேர்ந்த ஓலெக் என்ற 3 வயது சிறுவன் கண் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவனுக்கு உதவி புரிவதில் ஆர்வம் காட்டுகிறா…

  3. ஐரோப்பாவின் மிக சிறந்த கால்பந்து வீரர் விருதை வெற்றிகொண்டார் கிறிஸ்ட்டியானோ ரொனால்டோ. ஐரோப்பாவின் மிக சிறந்த கால்பந்து வீரர் விருதை வெற்றிகொண்டார் கிறிஸ்ட்டியானோ ரொனால்டோ. ஐரோப்பாவின் மிக சிறந்த கால்பந்து வீரருக்கான விருதை போர்த்துக்கல் அணியின் தலைவர் கிறிஸ்ட்டியானோ ரொனால்டோ வெற்றிகொண்டுள்ளார். நேற்று இடம்பெற்ற விருது வழங்கல் விழாவில் இந்த விருதை 31 வயதான கிறிஸ்ட்டியானோ ரொனால்டோ பெற்றார்.இவரது சக போட்டியாளர்களான வேல்ஸ் அணியின் நட்சத்திரம் கெரேத் பேலே,பிரான்ஸ் அணியின் நட்ச்சத்திர வீரர் கிரீஸ்மான் ஆகியோரை தோற்கடித்தே ரொனால்டோ இந்த விருதை பெற்றார். ஐரோப்பாவை சேர்ந்த 55 நாடுகளின் ஊடகவியலாளர்கள் இந்த விருதுக்குரியவரை வாக்கெடுப்பு மூலம் தேர்வு செய…

  4. இந்திய ஒலிம்பிக் வீராங்கனைக்கு பன்றி காய்ச்சல்..! ரியோ ஒலிம்பிக் கலந்து கொண்டு நாடு திரும்பிய இந்திய தடகள வீராங்கனை ஒ.பி.ஜெய்ஷாவுக்கு பன்றி காய்ச்சல் இருப்பது சோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. பிரேசில் தலைநகர் ரியோவில் நடந்த ஒலிம்பிக்கில் இந்தியா சார்பில் மாரத்தான் போட்டியில் ஒ.பி.ஜெய்ஷா பங்கு பெற்று 89வது இடத்தை பிடித்தார். பிரேசிலில் ஜிகா வைரஸ் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. இந்த நிலையில், ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று விட்டு இந்திய வீரர்கள் நாடு திரும்பினர். அப்போது, அனைத்து வீரர்களுக்கும் பரிசோதனை செய்யப்பட்டது. இதில், ஜெய்ஷா மட்டும் அதற்கு ஒத்துழைக்காமல் சொந்த மாநிலத்துக்கு சென்று விட்டார். ஆனாலும், அவரிடம் பரிசோதனை மேற்கொள்ள…

  5. அமெரிக்க மகளிர் கால்பந்தாட்ட அணியின் கோல் காப்பாளர் ஹோப் சோலோவுக்கு 6 மாதத் தடை! 2016-08-26 11:19:54 அமெ­ரிக்க மகளிர் கால்­பந்­தாட்ட அணியின் கோல் காப்­பாளர் ஹோப் சோலோ போட்­டி­களில் பங்­குபற்று­ வ­தற்கு 6 மாத கால தடை விதிக்­கப்­பட்­டுள்­ளது. சுவீ டன் கால்­பந்­தாட்ட அணி­யி­னரை கோழைகள் என அவர் விமர்சித்­த­மையே இதற்­கான காரணம். ரியோ ஒலிம்பிக் விளை­யாட்டு விழாவில் மகளிர் கால்­பந்­தாட்டத் தொடரின் கால் இறுதிப் போட்­டியில் அமெ­ரிக்­காவை பெனால்டி முறையில் 5:4 கோல்­க ளால் சுவீடன் அணி வென்­றது. அதை­ய­டுத்து சுவீடன் வீராங்­க­னை­களை “கோழைகள் கூட்டம்” என ஹோப் சோலோ விமர்­சித்­தி­ருந்தார். …

  6. விதிமுறைகளை மீறியதால் தண்டம்! இலங்கை கிரிக்கட்அணியின் பந்து வீச்சாளர் திஸார பெரேரா மற்றும் ஆஸி வீரர் மைக்கல் ஸ்ராக் இருவரும் விளையாட்டு விதியை மீறியமைக்கு அபராதமாக இருவருக்கும் கிடைக்கும் ஊதியத்தில் 15 வீதத் தொகையைச் செலுத்த வேண்டுமென ஐ.சி.சி தெரிவித்துள்ளது. கடந்த புதன்கிழமை நடைபெற்று முடிந்த ஒரு நாள் போட்டியிலேயே இச் சம்பவம் இடம்பெற்றிருக்கின்றது. அவுஸ்|ரேலிய துடுப்பாட்ட வீரர் வோர்னரின் விக்கட்டை வீழ்த்திய பெரேரா உபயோகித்த மொழியும், உடல் அசைவுகளும் துடுப்பாட்ட வீரருக்கு கோபத்தை ஏற்படுத்தக் கூடியதாக இருந்ததே அவர் செய்த குற்றமாகும். இலங்கைத் துடுபபாட்ட …

  7. ஒலிம்பிக்கில்... வெல்லாத, வட கொரியா வீரர்களுக்கு கூலி வேலை.. ரேஷன் கார்டுகளும் பறிமுதல்! அதிபர் ஆவேசம்? பியோங்யாங்: ரியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லாத வட கொரியா வீரர்களின் ரேஷன் கார்டுகளை பிடுங்கி வைத்துக்கொள்ளவும், அவர்களை சுரங்க தொழிலுக்கு கூலி வேலை செய்ய அனுப்பவும் அந்த நாட்டு சர்வாதிகார அதிபர் கிம் ஜோங் உன் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில், 2 தங்க பதக்கங்கள் உட்பட மொத்தம் 7 பதக்கங்களை வட கொரியா வென்றுள்ளது. அதேநேரம், வட கொரியாவின் பரம எதிரி நாடான தென் கொரியாவோ, 9 தங்கம் உட்ட 21 பதக்கங்களை வேட்டையாடியுள்ளது. 5 தங்க பதக்கங்களையாவது வெல்ல வேண்டும் என அதிபர் 'உத்தரவிட்டு' அனுப்பியிருந்த நிலையில், அதைவிட குறைந்த தங்கம் ப…

  8. இலங்கை கிரிக்கெட்டின் எதிர்காலம் குஷால் மெண்டிஸ் -மத்தியூஸ் தகவல் இலங்கை கிரிக்கெட்டின் எதிர்காலம் குஷால் மெண்டிஸ் -மத்தியூஸ் தகவல். இலங்கை கிரிக்கெட் அணியின் இளம் கன்டுபிடிப்பாக கருதப்படும் 20 வயதான குஷால் மெண்டிஸ், அண்மைய நாட்களில் இலங்கை கிரிக்கெட் ரசிகர்களின் இதயங்களில் நீங்காத இடம் பிடித்துவிட்டார். அறிமுகமான போட்டி முதல்கொண்டு அனைத்திலும் தனது திறமைகளை சிறப்பாக நிரூபித்துவரும் குஷால் மெண்டிஸ், தனது துல்லியமான துடுப்பாட்டம் மூலமாக அணியின் வெற்றிகளுக்கும் காரணமாக திகழ்கிறார். நேற்று இடம்பெற்ற ஆஸ்திரேலிய அணிக்கெதிரான 2 வது ஒருநாள் போட்டியின் போதும் ஆரம்பத்திலேயே இலங்கை அணி இரு விக்கெட்டுக்களை பறிகொடுத்தாலும், அசராமல் நின்று அடித்தாடி அரைச்சதம்…

  9. டில்ஸ்கூப் மன்னன் டில்ஷானின் ஓய்வு அறிவித்தல் சரியான நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட முடிவா? (ஆழமான அலசல்) டில்ஸ்கூப் மன்னன் டில்ஷானின் ஓய்வு அறிவித்தல் சரியான நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட முடிவா? (ஆழமான அலசல்) இலங்கை கிரிக்கெட் அணியின் அதிரடி நாயகனும், ஆரம்ப துடுப்பாட்ட வீரருமான திலகரட்ன டில்ஷான் சர்வதேச கிரிக்கெட்டுக்கு விடைகொடுப்பதாக இன்று அறிவித்துள்ளார். 1999 இல் சர்வதேச கிரிக்கெட் அறிமுகத்தை மேற்கொண்ட டில்ஷானின் 17 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்வு இந்த திடீர் ஓய்வு அறைவிப்பு மூலமாக முடிவுக்கு வருகிறது. கிரிக்கெட்டில் சாதிக்க தெரிந்த சாதனையாளர்கள் பலருக்கு தாங்கள் உச்சத்தில் இருக்கும் போதே, சர்சைகளில் சிக்காமல் ஓய்வு அறிவித்தலை வெளியிட்டிருக்க முடிவதில்லை …

  10. பெயெர்ன் முனிச்சில் ( FC Bayern München) பயிற்சி பெற 11 வயது சிறுவன் தேர்வு சந்தன் நாயக் ஒரிசா மாநிலம் புவனேஸ்வரில் உள்ள சபர் சகி என்ற சேரி பகுதியைச் சேர்ந்தவன் சந்தன் நாயக். 11 வயதான இந்த சிறுவன் ஜெர்மனியில் உள்ள பெயெர்ன் முனிச்சில் கால்பந்து பயிற்சிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஜெர்மனியில் இருக்கும் பேயெர்ன் முனிச் மிகவும் புகழ்பெற்ற கால்பந்து கிளப். இந்த கிளப் ஆண்ட்ரூ முல்லெர், அர்ஜென் ராப்பன், பிராங்க் ஹென்றி, பியரே ரிபெரி மற்றும் ஜெரோம் அஜினிம் போடெங் ஆகிய கால்பந்து வீரர்களை உருவாக்கியுள்ளது. தற்போது இந்த கால்பந்து கிளப்பில் பயிற்சி பெறுவதற்கு சபர் சகியின் சந்தன் நாயக் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவருடை…

  11. 5.77 நிமிடத்தில் 9 ஒலிம்பிக் தங்கம் #UsainMagic சென்னை வார் மெமோரியலில் இருந்து கலங்கரை விளக்கம் வரையிலான மூன்றரை கிலோ மீட்டர் தூரம் ஓடினால் என்ன வாங்கலாம். நம்மால் மூச்சு மட்டுமே வாங்க முடியும். ஆனால் உசேன் போல்ட் 9 தங்கப் பதக்கங்களை வாங்கியுள்ளார். 2004,2008,2012,2016 ஆகிய நான்கு ஒலிம்பிக் போட்டிகளில் உசேன் போல்ட் மொத்தம் ஓடியதே மூன்றரை கிலோமீட்டர்தான். இந்த மூன்றரை கிலோ மீட்டரை ஓட போல்ட் எடுத்துக் கொண்ட நேரம் 5.77 நிமிடங்கள் மட்டுமே. கூகுளில் தேடுங்கள், பஸ்ஸில் செல்லவே 13 நிமிடங்கள் ஆகுமாம். 2004 ஒலிம்பிக்கின், 200 மீட்டர் போட்டியில் தோல்வியுடன் தொடங்கிய போல்ட், இலக்கை அடைய எடுத்துக் கொண்ட நேரம் 21.05 வினாடிகள். ஆனால் …

  12. கிரிக்கெட் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கிறார் டில்ஷான் சர்வதேச ஒருநாள் மற்றும் இருபதுக்கு-20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறவுள்ளதாக இலங்கை அணியின் சிரேஷ்ட வீரரும் ஆரம்பதுடுப்பாட்ட வீரருமான திலகரட்ண டில்ஷான் தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலிய அணிக்கெதிராக தம்புள்ளையில் இடம்பெறவுள்ள 3 ஆவது ஒருநாள் சர்வதேச போட்டியுடனும் கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் இடம்பெறவுள்ள 2 ஆவது இருபதுக்கு-20 போட்டியுடனும் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் இருந்து ஓய்வுபெறவுள்ளதாக 39 வயதுடைய டில்ஷான் தெரவித்துள்ளார். இலங்கை அணியின் சகலதுறை ஆட்டக்காரரான டில்ஷான், 87 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 5492 ஓட்டங்களையும் 39 விக்கெட்டுகளையு…

  13. முன்னாள் சகாவான மார்ட்டினா ஹிங்கிஸை வீழ்த்தி இரட்டையர் தரவரிசையில் தொடர்ந்தும் முதலிடத்தில் சானியா 2016-08-25 10:35:47 மகளிர் இரட்­டையர் டென்னிஸ் தர­வ­ரி­சையில் இந்­தி­யாவின் சானியா மிர்ஸா தொடர்ந்தும் முத­லி­டத்தை தக்க வைத்­துக்­கொண்­டுள்ளார். அமெ­ரிக்­காவில் நடை­பெற்ற சின்­சி­னாட்டி மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்­டி­களின் இரட்­டையர் பிரிவில் செக்.குடி­ய­ரசின் பர்­போரா ஸ்டிரை­கோ­வா­வுடன் இணைந்து சம்­பியன் பட்டம் வென்­றதன் மூலம் சானியா மிர்ஸா தனது முத­லி­டத்தை தக்க வைத்­துக்­கொண்டார். சானி­யாவின் முன்னாள் சகா­வான சுவிட்­ஸர்­லாந்தின் மார்ட்­டினா ஹிங்கிஸ் மற்றும் அமெ­ரிக்­காவின் கோ…

  14. பெய்ஜிங் ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற சீன வீராங்கனைகள் மூவர் உட்பட 15 பேர் ஊக்கமருந்து சோதனையில் தோல்வி 2008 ஆம் ஆண்டு சீனாவின் பெய்ஜிங் நகரில் நடை­பெற்ற ஒலிம்பிக் விளை­யாட்டு விழாவின் பளு­தூக்­குதல் போட்­டி­களில் தங்கப் பதக்கம் வென்ற சீன வீராங்­க­னைகள் உட்­பட 15 பேர் ஊக்­க­ம­ருந்து சோத­னையில் தோல்­வி­யுற்­றுள்­ளனர் என சர்­வ­தேச பளு­தூக்­குதல் சம்­மே­ளனம் நேற்று தெரி­வித்­துள்­ளது. பெய்ஜிங் ஒலிம்பிக் போட்­டிகள் நடை­பெற்று 8 வரு­டங்­க­ளான நிலையில் இந்த அறி­விப்பு வெளி­யா­கி­யுள்­ளது. சென் ஸியேஸியா மகளிர் 48 கிலோ­கிராம் எடைக்­குட்­பட்­டோ­ருக்­கான பிரிவில…

  15. தோல்விகளால் துவளும் அவுஸ்ரேலிய அணிக்கு புதிய தலைவர் நியமனம்,ஸ்மித் நாடு திரும்புகிறார்-வோர்னர் தலைவராகிறார் தோல்விகளால் துவளும் அவுஸ்ரேலிய அணிக்கு புதிய தலைவர் நியமனம்,ஸ்மித் நாடு திரும்புகிறார்-வோர்னர் தலைவராகிறார். இலங்கைக்கான கிரிக்கெட் சுற்றுலாவை மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணிக்கும், இலங்கை அணிக்கும் இடையிலான 2 வது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 82 ஓட்டங்ககளால் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இப்போது 2 போட்டிகள் நிறைவுக்கு வந்துள்ள நிலையில், 1-1 என்று சமநிலை பெற்றுள்ளது, இந்த நிலையில் கிரிக்கெட் ஆஸ்திரேலியா இந்த தொடருக்காக புதிய அணித்தலைவரை அறிவித்துள்ளது. அவுஸ்திரேலிய அணியின் அனைத்து வகையான போட்டிகளுக்கும் தலைவரா…

  16. இலங்கை வருகிறார் அதிரடி மன்னன் கிளென் மக்ஸ்வெல் . T20 யிலாவது மீண்டெழுமா ஆஸ்திரேலியா? இலங்கை வருகிறார் அதிரடி மன்னன் கிளென் மக்ஸ்வெல் . T20 யிலாவது மீண்டெழுமா ஆஸ்திரேலியா? இலங்கைக்கான கிரிக்கெட் சுற்றுலாவை மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணிக்கும், இலங்கை அணிக்கும் இடையிலான தொடரின் T20 போட்டிகளுக்கான குழாமில் ஆஸ்திரேலியாவின் அதிரடி மன்னன் என புகழப்படும் மக்ஸ்வெல் இணைக்கப்பட்டுள்ளார். முன்னதாக இலங்கைக்கான சுற்றுலாவுக்காக தேர்வு செய்யப்பட்ட அணியிலிருந்து மக்ஸ்வெல் நீக்கப்பட்டிருந்தார். அவர் பங்கெடுத்த இறுதி 10 ஒருநாள் போட்டிகளில் போதிய திறமை வெளிப்பாடுகளை காட்டவில்லை எனும் அடிப்படையில், அவர் நீக்கப்பட்டு அணிக்கு ட்ரெவ்ஸ் ஹெட் சேர்க்கப்பட்டார். சூழல் பந…

  17. பாகிஸ்தான் vs இங்கிலாந்து முதல் ஒருநாள் போட்டி-டக்வோர்த் லூயிஸ் முறையில் இங்கிலாந்து அணி வெற்றி. பாகிஸ்தான் vs இங்கிலாந்து முதல் ஒருநாள் போட்டி-டக்வோர்த் லூயிஸ் முறையில் இங்கிலாந்து அணி வெற்றி. இங்கிலாந்துக்கான கிரிக்கெட் சுற்றுலாவை மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணிக்கும், பாகிஸ்தான் அணிக்கும் இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி இங்கிலாந்தின் சவுத்தாம்டன் மைதானத்தில் இடம்பெற்றது. போட்டியில் 44 ஓட்டங்களால் இங்கிலாந்து அணி டக்வோர்த் லூயிஸ் முறையில் வெற்றி பெற்று 5 போட்டிகள் கொண்ட தொடரில் இங்கிலாந்து முன்னிலை பெற்றுள்ளது.. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணியின் தலைவர் அசார் அலி முதலில் துடுப்பாடும் விருப்பை வெளியிட்டார். அதன…

  18. யூசெய்ன் போல்ட்டுடன் இரவைக் கழித்த பிரேஸில் யுவதி 'அவமானத்தினால் சாகிறேன்' என்கிறார் 2016-08-24 15:12:43 உலகின் அதிவேக மனிதரான ஜெமெய்க்காவின் யூசெய்ன் போல்ட்டுடன் இரவைக் கழித்த யுவதி, 'நான் அவமானத்தில் சாகிறேன்' எனக் கூறியுள்ளார். 100 மீற்றர், 200 மீற்றர் ஓட்டத்தில் ஒலிம்பிக் சம்பியனாகவும் உலக சம்பியனாகவும் திகழும் யூசெய்ன் போல்ட் கடந்த ஞாயிறன்று தனது 30 ஆவது பிறந்த தினத்தைக் கொண்டாடினார். யூசெய்ன் போல்ட், காதலி கெசி பெனட் ரியோ ஒலிம்பிக் விளையாட்டு விழாவின் கடைசி நாளாகவும் அது அமை ந்தது. அன்றைய இரவில் பிரேஸிலைச் சேர்ந்த ஜேடி துவார்ட்டே என் பவருடன் இரவைக…

  19. முதலிடத்தில் பாகிஸ்தான்: எழுந்து நின்று பாராட்டுங்கள் -கனகலிங்கம் கோபிகிருஷ்ணா பாகிஸ்தான் கிரிக்கெட்டின் அண்மைக்கால வரலாற்றில், இரண்டு தினங்கள் முக்கியமானவை. முதலாவது, மார்ச் 4, 2009 - பாகிஸ்தானுக்குச் சென்றிருந்த இலங்கை கிரிக்கெட் அணி மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட தினம்: இரண்டாவது, ஓகஸ்ட் 28, 2010 - பாகிஸ்தானின் அப்போதைய தலைவர் சல்மான் பட் உட்பட மூன்று வீரர்கள், பணத்துக்காக ஸ்பொட் ஃபிக்சிங்கில் ஈடுபட்டார்கள் என்பது வெளிப்படுத்தப்பட்ட தினம். ஏனைய நாடுகளாக இருந்திருந்தால், இந்த இரண்டு சம்பவங்களாலும் ஏற்பட்ட விளைவுகளால், மோசமான நிலைமையை அடைந்திருக்கும். ஆனால், இரண்டாவது சம்பவம் இடம்பெற்று 6 ஆண்டுகள் ஆகுவதற்கு 6 நாட்கள் முன்னதாக,…

  20. உபாதையிலும் களத்தில் குதித்தார் மலிங்க (படங்கள் இணைப்பு) இலங்கை அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்க நேற்று (23) ஆர். பிரேமதாச மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அவருக்கு இவ்வருடம் விளையாட முடியாது என்றாலும் அவர் பயிற்சியில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இவ்வருட ஐ.பி.எல். போட்டிகளில் விளையாடச் சென்ற மலிங்கவை கிரிக்கெட் சபை இலங்கைக்கு அழைத்திருந்தது. இதன்படி மருத்துவ பரிசோதனையின் பின்னர் இந்த வருடத்தில் எந்த போட்டிகளிலும் பங்கேற்க கூடாது என ஆலோசனை வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அடுத்து இடம்பெறவுள்ள தென்னாபிரிக்கா அணிக்கெதிரான போட்டியிலும் மலிங்க பங்கேற்க மாட்டார் என கிரிக்கெட் …

  21. லோக்கல், கலக்கல், செம தில்! அமர்க்களம் ஆரம்பம் #TNPL-T20 வேஷ்டி சட்டையில் மீனாட்சி அம்மன் கோவிலில் தரிசனம் செய்து, திருநெல்வேலியில் இருட்டுக்கடை அல்வா சாப்பிட்டு, சங்கம் தியேட்டரில் சினிமா பார்த்து, பார்ட் டைம் தமிழனாகவே வலம் வந்தார் ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் மேத்யூ ஹைடன். தமிழ்நாடு பிரிமியர் லீக் (டிஎன்பிஎல்) டி&20 தொடரை ப்ரமோட் செய்வதற்கான நிகழ்ச்சிகளில்தான் இந்த அமர்க்களம். பயிற்சியாளர் அவதாரம் எடுத்துள்ள லான்ஸ் க்ளூஸ்னர், மைக்கேல் பெவன், பிரட் லீ இனி தங்கள் பங்குக்கு என்ன செய்யப் போகின்றனரோ? ‘எதிரணியைச் சேர்ந்தவர் என்றாலும், களத்தில் சாதித்தால் ஆராதிப்பர் என்பதால் சென்னை ரசிகர்கள் மீது எனக்கு தனி பிரியம்’ என்றார் இந்திய ஒருநாள் அண…

  22. ரியோ ரியல் ஹீரோஸ்! எப்போதும் போலவே இந்த முறையும் அமெரிக்காவும் சீனாவும் தங்க வேட்டை யாட, ரியோ ஒலிம்பிக்-2016 இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. எண்ணற்ற மகிழ்ச்சிகள், அதிர்ச்சிகள், பிரிவுகள், உறவுகள், வேதனைகள், சாதனைகள் என கலந்துகட்டிய உணர்வுத் திருவிழாவில் இருந்து விறுவிறு ஹைலைட்ஸ் இங்கே! கோல்டு ஃபிஷ் பசிகொண்ட திமிங்கலம் போல பாய்கிறார் நீச்சல் வீரர் மைக்கேல் பெல்ப்ஸ். அள்ளிக்கோ அசத்திக்கோ என ஆடித் தள்ளுபடி ஆஃபர் போல தங்கப்பதக்கங்களை வரிசையாகக் கபளீகரம் பண்ணுகிறார் பெல்ப்ஸ். போட்டி தொடங்கிய இரண்டே நாட்களில் நான்கு தங்கங்களை வீட்டுக்கு கூரியர் பண்ணிவிட்டார். ஒரு போட்டிக்கு முன்னர், முகத்தைக் கோபமாக வைத்துக்கொண்டு அமர்ந்திருந்தார். அந்…

  23. கிரிக்கெட் போட்டியில் ஹோர்ன் ஒலிக்கு தடை இன்று நடைபெறும் கிரிக்கெட் போட்டியின் போது ரசிகர்கள் ஹூட்டர்ஸ் ஒலி மற்றும் ஹோர்ன் ஒலி பயன்படுத்துவதை தடை செய்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது. இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடரின் இரண்டாவது போட்டி இன்று கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் பகலிரவு போட்டியாக நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/10566

  24. சங்காவின் சதத்தின் துணையுடன் சர்ரே அணி அரை இறுதிக்கு தகுதி சங்காவின் சதத்தின் துணையுடன் சர்ரே அணி அரை இறுதிக்கு தகுதி. இங்கிலாந்தின் கழக மட்ட அணிகளுக்கு இடையில் நடைபெறும் ரோயல் லண்டன் கிண்ணத்தின் 3 ஆவது காலிறுதிப் போட்டியில் இலங்கையின் முன்னாள் நட்சத்திர வீரர் சங்காவின் ஆட்டமிழக்காத சதத்தின் துணையுடன் சர்ரே அணி அரை இறுதிக்கு தகுதி பெற்றது. நோர்த்தம்டம்ஷயார் மற்றும் சர்ரே அணிகள் மோதிய இந்தப் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நோர்த்தம்டம்ஷயார் அணி முதலில் துடுப்பாட்டத்தைத் தீர்மானித்தது. இதன் படி முதலில் துடுப்பெடுத்தாடிய நோர்த்தம்டம்ஷயார் அணி 49 ஓவர்களில் சகல விக்கட்டுகளையும் இழந்து 276 ஓட்டங்களைப் பெற்றது. சர்ரே அணியின் பந…

  25. 2016/2017 பருவகால லா லிகா(LA Liga) போட்டிகள் ஆரம்பமானது-ஓர் அலசல். 2016/2017 பருவகால லா லிகா(LA Liga) போட்டிகள் ஆரம்பமானது-ஓர் அலசல். 1929 ஆம் ஆண்டு ஸ்பெயின் நாட்டின் கழகங்களுக்கிடையிலான முதற்தர காற்பந்து தொடராக ஆரம்பிக்கப்பட்ட லா லிகா போட்டிகள் உலகின் தலை சிறந்த காற்பந்து கழக அணிகளை உருவாக்குவதில் முன்னிலையில் உள்ளது. பார்சிலோனா, ரியல் மாட்ரிட் என உலகப் புகழ் பெற்ற அணிகளின் தாயகமாக லா லிகா தொடர் விளங்குகின்றது. 1929 பார்சிலோனா அணி ‘லா லிகா’ தொடரின் முதலாவது சாம்பியன் பட்டம் வென்றது. ரியல் மாட்ரிட் தனது முதல் சாம்பியன் பட்டத்தை 1932 ஆம் ஆண்டு பெற்றது. ஆரம்ப காலகட்டத்தில் அத்லெடிகோ பில்பாவோ தொடர் வெற்றிகளை பெற்று கிண்ணங்களை பெற்றிருந்தாலும் பிற கா…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.