Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான அவுஸ்திரேலியா அணி அறிவிப்பு – கிளென் மக்ஸ்வெல் அணியிலிருந்து வெளியேற்றப்பட்டார். இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான அவுஸ்திரேலியா அணி அறிவிப்பு – கிளென் மக்ஸ்வெல் அணியிலிருந்து வெளியேற்றப்பட்டார். இலங்கை வந்துள்ள அவுஸ்திரேலியா அணி தற்போது டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதை தொடர்ந்து நடைபெறவுள்ள 5 ஒருநாள் ஆட்டங்கள் கொண்ட தொடருக்கான ஆஸி அணியின் விபரம் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில், இம்முறை அவுஸ்திரேலியாவின் சிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்ட, ஆஸியின் ஒருநாள் அணிக்கு முதல் தெரிவாக தெரிவுசெய்யப்படும் கிளென் மக்ஸ்வெல்க்கு இடம் வழங்கப்படவில்லை. இது தொட‌ர்பாக கருத்து தெரிவித்த தேர்வுக்குழ…

  2. திண்டுக்கல்லில் அஸ்வின், கோவையில் முரளி விஜய்..! ஏலம் போன கிரிக்கெட் வீரர்கள் தமிழ்நாடு பிரிமீயர் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் வீரர்களின் ஏலம் இன்று நடைபெற்றது. அஸ்வினை திண்டுக்கல் அணியும், முரளி விஜயை கோவை அணியும், தினேஷ் கார்த்திக்கை தூத்துக்குடி அணியும் ஏலம் எடுத்துள்ளன. முதலாவது தமிழ்நாடு பிரிமீயர் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் 8 அணிகளுக்கான வீரர்கள் ஏலம், சென்னையில் இன்று நடைபெற்றது. இதில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திண்டுக்கல், மதுரை, தூத்துக்குடி, காரைக்குடி, கோவை ஆகிய 8 அணிகளின் உரிமையாளர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு தங்களது அணிக்கான வீரர்களை தேர்வு செய்தனர். இந்திய கிரிக்கெட்…

  3. கடலில் நீந்தி கிரேக்கம் சென்ற அகதி ஒலிம்பிக்ஸில் பங்கேற்கிறார் சர்வதேச ஒலிம்பிக் சம்மேளனத்தின் 'அகதிகள் அணி' என்கிற பெயரில் ரியோ ஒலிம்பிக்ஸில் கலந்துக்கொள்ள விருக்கும் அணியின் வீராங்கனை, பதினெட்டு வயது யஸ்ரா மர்தினி. சிரியாவிலிருந்து வெளியேறிய இவர், ஐரோப்பா வருவதற்காக துருக்கியிலிருந்து கிளம்பினார். ஆனால் இவர் வந்த படகு கடலில் மூழ்கத் தொடங்கியது. அவரும் அவரது சகோதரியும் கிரேக்கத்தை நோக்கி நீச்சலடித்து சென்று சேர்ந்தார்கள். பல மாதங்களுக்குப்பின் ஜெர்மனியில் உள்ள அவர், ரியோ ஒலிம்பிக்ஸ் நீச்சல் போட்டியில் பங்கேற்கும் நம்பிக்கையுடன் உள்ளார். http://www.bbc.com/tamil/multimedia/2016/07/160729_refugee_team?ocid=socialflow_facebook%3FSThi…

    • 0 replies
    • 680 views
  4. ஹஷிம் ஆம்லா, ஏ.பி.டிவில்லியர்ஸ் தடுப்பாட்ட சாதனையை முறியடித்த ஆஸி. ஜோடி மாரத்தான் தடுப்பாட்டம் ஆடிய பீட்டர் நெவில். | படம்: ஏ.பி. பல்லக்கிலேயில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை வெற்றி பெற்றாலும், ஆஸ்திரேலிய பேட்டிங் ஜோடி புதிய டெஸ்ட் சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளனர். 5-ம் நாளான இன்று 268 ரன்கள் வெற்றி இலக்கை எட்டும் கனவுடன் 83/3 என்று களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 157/8 என்று தவிர்க்க முடியாத தோல்வி நிலைக்குச் சென்றது, ஆனால் மழையை எதிர்நோக்கிய ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் பீட்டர் நெவில் மற்றும் ஓ’கீஃப் ஜோடி எப்பாடுப்பட்டாவது போட்டியை டிரா செய்யலாம் என்ற பெரு முயற்சியில் ஈடுபட்டனர். இவர்கள் செய்த இந்த மாரத்தான் முயற்சி ‘ப்ளாக்க…

  5. ஓய்வு பெற்றார் ஜெர்மன் கால்பந்து நட்சத்திர வீரர் ஸ்வெயின்ஸ்டெய்கர் ஷ்வெய்ன்ஸ்டெய்கர் ஓய்வு பெற்றார். | படம்: கெட்டி இமேஜஸ். ஜெர்மனி கால்பந்து அணியின் கேப்டன் பாஸ்டியன் ஸ்வெயின்ஸ்டெய்கர் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். நடுகள வீரரான இவர் தலைமையில் கடந்த 2014-ம் ஆண்டு பிரேசிலில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரை ஜெர்மனி வென்றது. இறுதிப்போட்டியில் அர்ஜென்டினாவை 1-0 என வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது. சமீபத்தில் பிரான்ஸ் நாட்டில் நடைபெற்ற யூரோ கோப்பை கால்பந்து போட்டியில் ஜெர்மனி அரையிறுதியில் பிரான்ஸிடம் 0-2 என்ற கோல்கணக்கில் தோல்வியடைந்தது. இந்நிலையில் ஜெர்மனி அணியில் இருந்து ஓய்வு பெறுவதாக தனது டுவிட்டர் பக்கத்தில் …

  6. கிழக்கின் சமர் கால்­பந்­தாட்டம் 'கிழக்கின் சமர்" என வர்­ணிக்­கப்­படும் மட்­டக்­க­ளப்பு சிவா­னந்தா தேசிய பாட­சாலை, அக்­க­ரைப்­பற்று ஸ்ரீ இரா­ம ­கி­ருஷ்ணா தேசிய பாட­சா­லை­க­ளுக்­கி­டை­யி­லான கால்­பந்­தாட்ட போட்டி எதிர்­வரும் முதலாம் திகதி பிற்­பகல் 3.30மணி­ய­ளவில் அக்­க­ரைப்­பற்று தர்­ம­சங்­கரி விளை­யாட்டு மைதா­னத்தில் நடை­பெ­ற­வுள்­ளது. அக்­க­ரைப்­பற்று ஸ்ரீஇரா­ம­கி­ருஷ்ணா தேசிய பாட­சா­லையின் அதிபர் எம். கிரு­பை­ராஜா தலை­மையில் நடை­பெறும் போட்டி நிகழ்­வு­களில் அம்­பாறை மாவட்ட நாடா­ளு­மன்ற உறுப்­பினர் கவீந்­திரன் கோடீஸ்­வரன் பிர­தம அதி­தி­யா­கவும் கலந்து கொள்­ள­வுள்­ளார். இரண்­டா­வது வரு­ட­மாக …

  7. சானியா சாதித்த ரகசியம்! #AceAgainstOdds #SaniaAutobiography அது 2003 ம் ஆண்டு. சான்யா மிர்சா, நைஜீரியாவில் தன் சுற்றுப் பயணத்தை முடித்துவிட்டு பதக்கங்களுடன் நாடு திரும்புகிறார். அந்த ஆப்பிரிக்க மண்ணில் அவர் அடைந்த வெற்றி, அவருக்கு நிறைய தன்னம்பிக்கையை ஏற்படுத்தி இருந்தது. அவர் அங்கிருந்து மும்பையை நோக்கி பயணிக்கும் போது, அவருக்குப் பல கனவுகள். 'நம் மக்கள் நம்மை உச்சிமுகர்ந்து வரவேற்கப் போகிறார்கள், தங்கள் அன்பால் நம்மை திக்குமுக்காட வைக்கப் போகிறார்கள்...' என்ற கனவுகளுடன் இந்தியாவை நோக்கி பயணிக்கிறார். அவர் கனவுகளிலும் அர்த்தம் இல்லாமல் இல்லை. ஏனென்றால், அந்த சமயத்தில் சானியா இந்தியாவில் பிரபலமடைந்து இருந்தார். ஏற்கெனவே, அவருக்கு அத்தகைய வரவேற்…

  8. இலங்கை கிரிக்கெட் அணியின் களத்தடுப்பு பயிற்சியாளராக நிக் போதஸ் இலங்கை கிரிக்கெட் அணியின் களத்தடுப்பு பயிற்சியாளராக தென்னாபிரிக்க அணியின் முன்னாள் வீரர் நிக் போதஸ் நியமிக்கப்படவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது. நிக் போதஸ் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 8 ஆம் திகதியில் இருந்து இலங்கை அணியின் களத்தடுப்பு பயிற்சியாளராக தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பெறுப்பேற்பார். 42 வயதான நிக் போதஸ், தென்னாபிரிக்க அணியின் விக்கெட் காப்பளரும் துடுப்பாட்ட வீரரும் ஆவார். கடந்த 2011 ஆம் ஆண்டு நிக் போதஸ் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்றார். அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் 11 ஆயிரம் ஓட்டங்களையும் 50…

  9. கிரிக்கெட் அணிகளும் பயிற்றுநரின் தேசிய அடையாளமும் சர்­வ­தேச கிரிக்கெட் அரங்கில் இன்று பயிற்­று­நர்­களின் தேசிய அடை­யா­ளங்கள் குறித்து எந்த அணி­களும் அக்­கறை கொண்­ட­தா­கவோ அதனால் கவலை கொண்­ட­தா­கவோ தெரி­ய­வில்லை. ஆனால் இலங்கை இந் நிலைமை தலை­கீ­ழாக இருக்­கின்­றது. லோர்ட்ஸ் டெஸ்டில் இங்­கி­லாந்து வெல்ல மென்ச்­செஸ்டர், ஓல்ட் ட்ரபோர்ட் டெஸ்டில் அதே அணி பாகிஸ்­தா­னினால் பதம் பார்க்­கப்­பட்­டது. ஓல்ட் ட்ரபோர்ட் டெஸ்ட் முடிவில் பாகிஸ்தான் அணித் தலைவர் மிஸ்பா உல் ஹக்கும் இங்­கி­லாந்து பயிற்­றுநர் சக்லெய்ன் முஷ்­தாக்கும் ஆர்வ மிகு­தி­யுடன் உரை­யா­டி­ய­வண்ணம் இருந்­தனர். …

  10. என்னதான் வேண்டும் அர்ஜுனவுக்கு? -பேரின்பராஜா திபான், கனகலிங்கம் கோபிகிருஷ்ணா இலங்கைக்கு கிரிக்கெட் உலகக் கிண்ணத்தைப் பெற்றுக் கொடுத்தவரும் கிரிக்கெட் சபையின் முன்னாள் தலைவரும் தற்போதைய துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சருமான அர்ஜுன ரணதுங்க, நேற்று முன்தினம் இடம்பெற்ற கலந்துரையாடலொன்றில், இலங்கை கிரிக்கெட் சபை பற்றியும் இலங்கையில் கிரிக்கெட் பற்றியும் தனது கருத்துகளை வெளிப்படுத்தியிருந்தார். இலங்கையின் சாதனை வீரரான முத்தையா முரளிதரனைத் "துரோகி"யாக்கும் செயற்பாடுகள் இடம்பெற்றுவரும் நிலையில், அர்ஜுனவின் கலந்துரையாடல், முக்கியமானதாகக் கருதப்பட்டது. ஆனால், அர்ஜுனவின் வழக்கமான பாணியிலான முறைப்பாடுகளே, இதன்போது காணப்பட்டன. …

  11. கஜிஸ்கோ றபடாவுக்கு விருது மழை தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியின் வளர்ந்துவரும் இளம் வீரரான கஜிஸ்கோ றபடா, தென்னாபிரிக்க கிரிக்கெட் சபையின் வருடாந்த விருதுகளை அள்ளியெடுத்துக் கொண்டார். 21 வயதான றபடா, இதுவரை 6 டெஸ்ட் போட்டிகளிலும் 20 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளிலும் 16 இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டிகளிலும் மாத்திரமே விளையாடியுள்ள போதிலும், அவ்வணியின் முக்கிய வீரராக மாறியுள்ளமை குறிப்பிடத்தக்கது. விருது விவரம்: சிறந்த கிரிக்கெட் வீரர்: கஜிஸ்கோ றபடா சிறந்த டெஸ்ட் வீரர்: கஜிஸ்கோ றபடா சிறந்த ஒ.நா.ச.போ வீரர்: கஜிஸ்கோ றபடா சிறந்த இ-20 ச.போ வீரர்: இம்ரான் தாஹிர் வீரர்களின் சிறந்த வீரர்: கஜிஸ்கோ றபடா இரசிகர்களின் சிறந்த வீரர்:…

  12. டெஸ்ட் பந்­து­வீச்­சாளர் தர­நி­லையில் மீண்டும் முத­லா­மி­டத்தில் அஷ்வின் மேற்­கிந்­தியத் தீவு­க­ளுக்கு எதி­ராக அன்­டி­கு­வாவில் நடை­பெற்ற முத­லா­வது டெஸ்ட் கிரிக்கெட் போட்­டியில் 83 ஓட்­டங்­க­ளுக்கு 7 விக்­கெட்­டுகளை வீழ்த்­திய இந்­திய சுழல்­பந்­து­வீச்­சாளர் ரவிச்­சந்­திரன் அஷ்வின் ஐ. சி. சி. பந்­து­வீச்­சாளர் தர­நி­லையில் மீண்டும் முதலாம் இடத்தைப் பிடித்­துள்ளார். இங்­கி­லாந்­துக்கு எதி­ரான லோர்ட்ஸ் டெஸ்ட் போட்­டியில் 10 விக்கெட் குவி­யலைப் பதிவு செய்­ததன் மூலம் முதலாம் இடத்தை முதல் தட­வை­யாக அடைந்த பாகிஸ்­தானின் யாசிர் ஷா ஐந்தாம் இடத்­திற்கு பின்­தள்­ளப்­பட்டுள்ளார். அவர் ஓல்ட் ட்ரஃபோர்டில் நடை­பெற்ற இ…

  13. மேற்­கிந்­தியத் தீவு­க­ளுடன் முழு அள­வி­லான தொடரில் ஆப்­கா­னிஸ்தான் முதல் ­த­ட­வை­யாக விளை­யா­ட­வுள்­ளது மேற்­கிந்­தியத் தீவு­களில் முழு­ அ­ள­வி­லான மட்­டுப்­ப­டுத்­தப்­பட்ட ஓவர் கிரிக்கெட் தொடர்­களில் ஆப்­கா­னிஸ்தான் விளை­யா­ட­வுள்­ளது. ஸிம்­பாப்­வேயை விட சர்­வ­தேச கிரிக்கெட் பேர­வையில் பூரண டெஸ்ட் அந்­தஸ்­து­டைய நாடு ஒன்­றுடன் ஆப்­கா­னிஸ்தான் முழு அள­வி­லான தொடர் ஒன்றில் விளை­யா­ட­வி­ருப்­பது இதுவே முதல் தட­வை­யாகும். 5 போட்­டிகள் கொண்ட சர்­வ­தேச ஒருநாள் போட்­டிகள், 3 சர்­வ­தேச இரு­பது 20 போட்­டிகள் அடங்­கிய இந்த இரண்டு வகை கிரிக்கெட் தொடர்கள் அடுத்த வருடம் ஜூன் மாதம் நடை­பெ­ற­வுள்­ள­தாக ஆப்­கா­னிஸ்தா…

  14. தொடரும் முரளியின் சர்ச்சை ; ஐ.சி.சி.யின் திடீர் தீர்மானம் இலங்கை அணியின் சுழற்பந்து ஜாம்பவான் முத்தையா முரளிதரன் இந்த வருடத்திற்கான ஹோல் ஒப் பேம் உறுப்புரிமைக்கு சர்வதேச கிரிக்கெட் வாரியத்தால் பரிந்துரைக்கப்பட்டுள்ளார். இலங்கையின் முதல் வீரராக இவர் தெரிவுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இவருடன் அவுஸ்திரேலிய பெண்கள் அணியின் முன்னாள் தலைவர் கரேன் ரோல்டன், அவுஸ்திரேலியாவின் அர்த்துர் மொரிஸ் மற்றும் இங்கிலாந்து அணியின் ஜோர்ஜ் லோமன் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். உலகத்தில் உள்ள சிறப்புமிக்க கிரிக்கெட் வீரர்களுக்கான ஒரு பாரிய அந்தஸ்தாக இந்த ஹோல் ஒப் பேம் உறுப்புரிமை கருதப்படுகிறது. இவர்களில் தெரிவுசெய்…

  15. கசாப்புக் கடைக்காரனின் ஜீவகாருண்யப் பேச்சு -கனகலிங்கம் கோபிகிருஷ்ணா அவுஸ்திரேலிய அணியின் சுழற்பந்துவீச்சு ஆலோசகராக, இலங்கையின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான முத்தையா முரளிதரன் நியமிக்கப்பட்டமையைத் தொடர்ந்து, அவ்விடயம் தொடர்பான சர்ச்சைகளுக்குக் குறைவில்லை. இதற்கு முன்னரே, மஹேல ஜெயவர்தன, இங்கிலாந்துக்கான துடுப்பாட்ட ஆலோசகராகச் செயற்பட்ட போதும்கூட, இவ்வாறான நிலைமை தான் ஏற்பட்டிருந்தது. இலங்கை கிரிக்கெட் சபையைப் பொறுத்தவரை, குறிப்பாக அதன் தலைவர் திலங்க சுமதிபாலவைப் பொறுத்தவரை, இலங்கை அணியின் முன்னாள் வீரரான முரளி, இலங்கைக்கெதிரான தொடருக்கு முன்பாக, அவுஸ்திரேலிய அணியுடன் இணைந்து செயற்படுவது, நெறிமுறைகளுக்கு எதிரானது. …

  16. ஜெர்மனி கால்பந்து கிளப்பில் சென்னை மாணவன் பி.ஜே.ரெக்ஸ். சென்னை ராஜலெட்சுமி பொறியியல் கல்லூரியில் பி.டெக் முதலாம் ஆண்டு படித்து வருபவர் பி.ஜே.ரெக்ஸ். 18 வயது கால்பந்து வீரரான இவர் பள்ளியில் பயிலும்போது பல்வேறு கிளப் போட்டிகளில் விளையாடி உள்ளார். இவர் இடம் பெற்ற எஸ்பிஓஏ பள்ளி அணி கடந்த 2014-ம் ஆண்டு மே மாதத்தில், பெங்களூருவில் நடைபெற்ற தேசிய இளைஞர் கால்பந்து போட்டியில் பட்டம் வென்றது. இந்த தொடரில் நாடு முழுவதிலும் இருந்து 40 பள்ளி அணிகள் கலந்து கொண்டன. இந்த தொடரை கர்நாடகா மாநில கால்பந்து சங்கத்தால் அங்கீ கரிக்கப்பட்ட கோவா கால்பந்து கிளப் நடத்தியது. இதே ஆண்டில் நவம்பர் மாதம் சிங்கப்பூரில் 26 நாடுகள் பங்கேற்ற கால்பந்து போட…

  17. இந்தியாவில் அயர்லாந்தை வரவேற்கிறது ஆப்கன் அயர்­லாந்­துக்கு எதி­ரான சர்­வ­தேச மட்­டுப்­ப­டுத்­தப்­பட்ட ஓவர் கிரிக்கெட் தொடர்­களை இந்­தி­யாவில் உள்ள தனது தத்து மைதா­ன­மான கிரேட்டர் நொய்டா விளை­யாட்­ட­ரங்கில் நடத்­து­வ­தற்கு ஆப்­கா­னிஸ்தான் முன்­வந்­துள்­ளது. ஐந்து சர்­வ­தேச ஒருநாள் போட்­டிகள், 3 சர்­வ­தேச இரு­பது 20 கிரிக்கெட் போட்­டிகள் ஆகி­ய­வற்றில் அயர்­லாந்தை எதிர்த்­தா­ட­வுள்ள ஆப்­கா­னிஸ்தான், தொடர்ந்து நான்கு நாள் கிரிக்கெட் போட்டி ஒன்­றிலும் விளை­யா­ட­வுள்­ளது. இப் போட்­டிகள் யாவும் அடுத்த வருடம் மார்ச் 8ஆம் திக­தி­முதல் 31 ஆம் திக­தி­வரை நடை­பெ­ற­வுள்­ளது. இந்தத் தொடர்கள் தங…

  18. ரொனால்டோவின் சொந்த உல்லாச ஹோட்டல் திறக்கப்பட்டது போர்த்­துகல் கால்­பந்­தாட்ட வீரர் கிறிஸ்­டி­யானோ ரொனால்டோ தனது சொந்த உல்­லாச ஹோட்­டலை திறந்­து­ வைத்­துள்ளார். கிறிஸ்­டி­யானோ ரொனால்­டோவின் பெயரின் முதல் எழுத்­துக்­ க­ளை யும் அவரின் கால்­பந்­தாட்ட அங்கி இலக்­கத்­தையும் குறிக்கும் வகையில் CR7என இந்த ஹோட்­ட­லுக்குப் பெய­ரி­டப்­பட்­டுள்­ளது. போர்த்­துக்கல் நாட்டில் ரொனால்டோ பிறந்த மெடேய்ரா எனும் தீவி­லுள்ள ஃபன்சால் நகரில் இந்த ஹோட்டல் நிர்­மா­ணிக்­கப்­பட்­டுள்­ளது. கடந்த வெள்­ளிக்­கி­ழமை இதை ரொனால்டோ திறந்­து­ வைத்­துள்ளார். பெஸ்­டெனா ஹோட்டல் குழு­மத்­துடன் இணைந்து உல்­…

  19. அஸ்வினும் போத்தமும், பெரிய வெற்றியும்: சில புள்ளி விவரங்கள் ஜேசன் ஹோல்டருக்கு வீசும் ஆட்ட நாயகன் அஸ்வின். | படம்: ஏ.பி. ஒரு டெஸ்ட் போட்டியில் 7 விக்கெட்டுகளையும் சதமும் எடுத்த வகையில் அஸ்வின் 3-வது ஆல்ரவுண்டராக திகழ்கிறார். முதல் டெஸ்ட் போட்டியின் 2-வது இன்னிங்சில் அஸ்வின் உயர்தர ஆஃப் ஸ்பின் பந்து வீச்சை எட்டினார். இதனால் மே.இ.தீவுகள் இன்னிங்ஸ் தோல்வி அடைந்தது. இந்த போட்டியின் சில புள்ளிவிவரங்கள் வருமாறு: ஆசியாவுக்கு வெளியே இந்தியா இதற்கு முன் பெரிய வெற்றியைப் பெற்றது 2005-06-ல் ஜிம்பாப்வேவுக்கு எதிராக. அப்போது இன்னிங்ஸ் மற்றும் 86 ரன்களில் இந்தியா வெற்றி பெற்றது. அதன் பிறகு நேற்று இன்னிங்ஸ் மற்றும் 92 ரன்கள் வித்தியாசத்தில்…

  20. முரளியின் செயற்பாடுகள் குறித்து இலங்கை கிரிக்கெட் நிறுவனம் கவலை அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சு ஆலோசகரான, இலங்கை அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரனின் செயற்பாடுகள் குறித்து வருந்துவதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது. முரளிதரனுக்கு எதிராக இரண்டு குற்றச்சாட்டுக்கள் இதுவரை முன்வைக்கப்பட்டுள்ளதாக, இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் திலங்க சுமதிபால குறிப்பிட்டுள்ளார். அணி முகாமையாளர் சரித் சேனாநாயகவை கடுமையாக சாடியமை, அனுமதியின்றி பல்லேகல சர்வதேச விளையாட்டு மைதானத்தில் அவுஸ்திரேலிய அணியினருக்கு பயிற்சியளித்தமை போன்றனவே அவருக்கு எதிரான குற்றச்சாட்டுக்களாகும். எதுஎவ்வாறு இருப்பினும், இது குறித்து அவுஸ்திரேலிய கிரிக்…

  21. ” இலங்கை எதிர் அவுஸ்திரேலியா ” டெஸ்ட் தொடர் நாளை ஆரம்பம் – அணிகள் மீதான பார்வை ” இலங்கை எதிர் அவுஸ்திரேலியா ” டெஸ்ட் தொடர் நாளை ஆரம்பம் – அணிகள் மீதான பார்வை இலங்கை வந்துள்ள கங்காருப்படையணி மூன்று டெஸ்ட் ஆட்டங்கள், ஐந்து ஒருநாள் ஆட்டங்கள் மற்றும் இரு T20 ஆட்டங்களில் பங்கெடுக்கிறது. டெஸ்ட் தொடரின் முதல் போட்டியானது கண்டி பல்லேகேல மைதானத்தில் நாளை (26ம் திகதி)ஆரம்பமாகிறது. 2ம் 3ம் டெஸ்ட் போட்டிகள் முறையே காலி மற்றும் கொழும்பில் ஆகஸ்ட் மாதம் 4ம், 13ம் திகதிகளிலும் ஆரம்பமாகவுள்ளது. இந்த டெஸ்ட் தொடருக்கான இரு அணிகளின் விபரங்களும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அணிகள் (விளையாடும் பதினொருவர்) மீதான பார்வை. இலங்கை அணி சொந்…

  22. வீரர்களைக் கையாளுதலே முக்கியம்: அலடைஸ் இங்கிலாந்து தேசிய கால்பந்தாட்ட அணியின் முகாமையாளராக, தனது புதிய பதவிக்கு, வீரர்களைக் கையாளும் தனது திறன்கள் முக்கியம் என தான் நம்புவதாக இங்கிலாந்து அணியின் புதிய முகாமையாளராகியுள்ள சாம் அலடைஸ் தெரிவித்துள்ளார். ஐந்து, இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகங்களை முகாமை செய்திருந்த 61 வயதான அலடைஸ், யூரோ 2016 கிண்ணப் போட்டிகளின் இறுதி 16 அணிகளுக்கான சுற்றில், ஐஸ்லாந்துடன் வெளியேற்றப்பட்டமையைத் தொடர்ந்து, பதவி விலகிய றோய் ஹொட்ஜ்சனை கடந்த வெள்ளிக்கிழமை (22) பிரதீயீடு செய்திருந்தார். இந்நிலையில், கருத்துத் தெரிவித்த அலடைஸ், தான் சரியான அனுபவத்துடன் சரியாக அனுபவத்தை கொண்டிருப்பதாக நம்புவதாகவும், அணிக்கு பல திறன்க…

  23.  உயர்தரமிக்க வீரர்கள் இருவரின் இரட்டைச் சதங்கள் இரண்டு டெஸ்ட் போட்டிகளை ஆழமாக இரசிக்கும் இரசிகர்களுக்கு, மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கும் இந்திய அணிக்குமிடையிலான போட்டியும், இங்கிலாந்து அணிக்கும் பாகிஸ்தான் அணிக்குமிடையிலான போட்டியும் விருந்தாகவே அமைந்துள்ளன. அதில் முக்கியமாக, இரு அணிகளையும் சேர்ந்த உயர்தரமிக்க துடுப்பாட்ட வீரர்களான விராத் கோலி, ஜோ றூட் இருவரும், இரட்டைச் சதங்களைப் பெற்றுக் கொண்டமை, இன்னமும் விருந்தாக அமைந்து கொண்டது. 21ஆம் திகதி ஆரம்பித்த டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாளில், தனது முதலாவது இரட்டைச் சதத்தைப் பூர்த்திசெய்த விராத் கோலி, வெளிநாடொன்றில் வைத்து இரட்டைச் சதம் பெற்ற முதலாவது இந்திய அணித் தலைவர்…

  24. முத்தையா முரளிதரன் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் பயிற்சி ஆலோசகராக இணைவு இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் இலங்கைக்கு கிரிக்கெட் விஜயத்தை மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் பயிற்சி ஆலோசகராக இன்று இணைந்துகொண்டார். முத்தையா முரளிதரன் இம்முறை போட்டித் தொடரின்போது அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் பந்து வீச்சுப் பிரிவின் ஆலோசகராக செயற்படுகின்றார். அவர் அவுஸ்திரேலிய அணியின் பந்துவீச்சு ஆலோசகராக செயற்படும் முதலாவது சந்தர்ப்பம் இதுவல்ல. 2014 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்ற போட்டிகளின்போது முரளி, அவுஸ்திரேலிய அணியின் சுழற்பந்து வீச்சு அலோசகராக செயற்பட்ட…

  25. போலந்தில் சர்வதேச தடகள சம்மேளனம் சார்பாக நடத்தப்பட்டு வரும் ஜுனியர் தடகளப் போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா, ஈட்டி எறிதல் பிரிவில் உலக சாதனையுடன் தங்கம் வென்றுள்ளார். போலந்தின் பிட்கோசெஸ்க் நகரில் நடந்து வரும் இந்த போட்டியில் 18 வயது நீரஜ், 86.48 மீட்டர் வீசினார். இதற்கு முன் லாத்வியா வீரர் சிஜிஸ்முன்ட்ஸ், 84.69 மீட்டர் துாரம் வீசியதே 20 வயதுக்குட்பட்டோருக்கான போட்டியில் உலக சாதனையாக இருந்தது. முதல் முயற்சியில் 79.66 மீட்டர் வீசிய நீரஜ் 2வது முயற்சியில்தான் இந்த உலக சாதனையை படைத்தார். லண்டன் ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதலில் தங்கம் வென்றுள்ள டிரினிடாட் டொபாக்கோ வீரர் கெசோன் வால்காட், இந்த ஆண்டில் அதிகபட்சமாக 86.35 மீட்டர்தான் வீசியது குறிப்பிடத்தக்கது. இதற்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.