விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7847 topics in this forum
-
ஆஸ்திரேலியாவின் பழங்குடியினப் பெண்கள் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் ஆஸ்திரேலியாவின் பழங்குடியினப் பெண்கள் கிரிக்கெட் அணி ஒன்று முதல்முறையாக வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. இந்தியாவில் இந்த அணியின் வரலாற்று முக்கியத்துவம் மிக்க பத்து நாள்கள் பயணத்தில் டெல்லியிலும் மும்பையிலும் நடைபெறும் கிரிக்கெட் போட்டி தொடர் ஒன்றில் விளையாட உள்ளது. பழங்குடியினரின் கிரிக்கெட் விளையாட்டானது பல இலட்சக்கணக்கான பங்கேற்பாளர்களோடு ஆஸ்திரேலியாவில் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. http://www.bbc.com/tamil/sport/2016/05/160520_cricket?ocid=socialflow_facebook
-
- 0 replies
- 349 views
-
-
பிரெஞ்சு பகிரங்க டென்னிஸ் ஞாயிறன்று ஆரம்பம் வருடாந்தம் நடத்தப்படும் மாபெரும் டென்னிஸ் (கிராண்ட் ஸ்லாம்) போட்டிகளின் வரிசையில் இரண்டாவதாக இடம்பெறும் பிரெஞ்சு பகிரங்க டென்னிஸ் போட்டிகள் எதிர்வரும் ஞாயிறன்று ஆரம்பமாகி ஜூன் மாதம் 5ஆம் திகதி நிறைவுபெறவுள்ளது. இப் போட்டிக்கான மொத்த பணப்பரிசு 32, 017,500 ஸ்டேர்லிங் பவுண்ட்களாகும். ஒற்றையர் பிரிவில் சம்பியனாகும் ஆணுக் கும் பெண்ணுக்கும் தலா 2,000,000 ஸ்டேர்லிங் பவுண்டுகள் வழங்கப்படவுள்ளன. அத்துடன் இரட்டையர், கலப்பு இரட்டையர், சக்கர இருக்கை டென்னிஸ் போட்டிகள் ஆகியவற்றுக்கும் பணப்பரிசுகள் வழங்கப்படும். இப் போட்டிக…
-
- 3 replies
- 696 views
-
-
‘ஷரபோவா மீண்டும் விளையாட முடியாமல் போகலாம்’ ஊக்கமருந்துச் சோதனையில் தோல்வியடைந்தமையைத் தொடர்ந்து, ஐந்து கிரான்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற ரஷ்ய வீராங்கனையான மரியா ஷரபோவா, இனி மேல் மீண்டும் விளையாட முடியாமல் போகலாம் என ரஷ்யா டென்னிஸ் சம்மேளனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். கடந்த ஜனவரியில் இடம்பெற்ற அவுஸ்திரேலிய பகிரங்கத் தொடரிலேயே 29 வயதான ஷரபோவா மெல்டோனியத்தை பயன்படுத்தியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், ஷரபோவா, இனியும் தொடர்களில் விளையாடுவாரா என்று வினவப்பட்டபோது, அது மிகவும் சந்தேகம், ஷரபோவா மோசமான நிலைமையில் இருப்பதாக ரஷ்ய டென்னிஸ் சம்மேளன தலைவர் ஷமில் தர்பிஷ்ஷெ…
-
- 0 replies
- 380 views
-
-
ஃபிஃபாவின் உயர்மட்ட குழுவின் உறுப்பினருக்கு தடை சர்வதேச கால்பந்து சம்மேளனமான ஃபிஃபாவின் தார்மீக நெறிமுறைகளுக்கான குழு, ஜெர்மனிய கால்பந்து சம்மேளனத்தின் முன்னாள் தலைவரை இரண்டு ஆண்டுகளுக்கு தடை செய்ய பரிந்துரை செய்துள்ளது. ஊழல் இடம்பெற்றது, ஆனால் தான் பொறுப்பில்லை என்கிறார் நியர்ஸ்பாக் ஊழல் மோசடிகள் தொடர்பிலான குற்றச்சாட்டுகளை அடுத்தே வுல்ஃப்காங் நியர்ஸ்பாக் கால்பந்து விளையாட்டு தொடர்பான அனைத்து நடவடிக்கைகளிலிருந்தும் தடை செய்யப்பட வேண்டும் என அந்தக் குழு கோரியுள்ளது. கடந்த 2006ஆம் ஆண்டு, ஜெர்மனியில் நடைபெற்ற உலகக் கோப்பையை நடத்துவதற்கான வாய்ப்பைப் பெறுவதற்கு அவர் கையூட்டு அளிக்கப்பட்டது எனும் குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து, சென்ற ஆண்டு நவம்பரி…
-
- 0 replies
- 388 views
-
-
அஸ்டன் வில்லாவை வாங்குகிறார் சீனர் அஸ்டன் வில்லா கால்பந்தாட்டக் கழகத்தை, சீனாவைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் வாங்குவதற்குச் சம்மதித்துள்ளார் என அறிவிக்கப்படுகிறது. 60 மில்லியன் ஸ்டேர்லிங் பவுண்ட்ஸ்களுக்கு வாங்குவதற்கே அவர் சம்மதித்துள்ளார். கலாநிதி டொனி ஸியா என்ற அந்த சீனத் தொழிலதிபர், இக்கழகத்தை வாங்குவதற்கான அனுமதி, கால்பந்தாட்ட லீக்கினால் வழங்கப்பட்டவுடன், இந்த விற்பனை உத்தியோகபூர்வமாகும். 2006ஆம் ஆண்டில் 62.2 மில்லியன் ஸ்டேர்லிங் பவுண்ட்ஸ்களுக்கு அஸ்டன் வில்லா கழகத்தை வாங்கிய அமெரிக்க கோடீஸ்வரரான றன்டி லேர்னர், அக்கழகத்தை விற்பனை செய்யவுள்ளதாக 2014ஆம் ஆண்டில் அறிவித்திருந்தார். குறிப்பாக, இங்கிலாந்து பிறீமியர் லீக்கில் இம்…
-
- 0 replies
- 414 views
-
-
மும்முனை தொடருக்கான மேற்கிந்தியத் தீவுகள்; ஒரு நாள் கிரிக்கெட் குழாமில் நரேன், பொலார்ட் 2016-05-20 11:42:47 அவுஸ்திரேலியா, தென் ஆபிரிக்கா, மேற்கிந்தியத் தீவுகள் ஆகிய நாடுகளுக்கு இடையிலான மும்முனை சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் குழாமில் சுனில் நரேனும் கீரொன் பொலார்டும் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர். சுழல்பந்துவீச்சாளர் சுனில் நரேனும் சகலதுறை வீரர் கீரொன் பொலார்டும் கடந்த வருடம் நவம்பர் மாதத்தின் பின்னர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடவில்லை. நடைபெறப்போகும் மும்முனைத் தொடருக்கான முதல் நான்கு போட்டிக…
-
- 0 replies
- 279 views
-
-
அங்குரார்ப்பண ஜனாதிபதி விளையாட்டுத்துறை விருது விழா: அதி சிறந்த வீரர் சங்கக்கார, அதி சிறந்த வீராங்கனை நிமாலி 2016-05-20 10:23:42 அங்குரார்ப்பண ஜனாதிபதி விளையாட்டுத்துறை விருது (2015) விழா வில் வருடத்தின் அதி சிறந்த விளையாட்டு வீரர் விருதை இலங்கையின் முன்னாள் கிரிக்ெகட் வீரர் குமார் சங்கக்காரவும் அதி சிறந்த விளையாட்டு வீராங்கனைக்கான விருதை மெய்வல்லுநர் நிமாலி லியனஆராச்சியும் வென்றெடுத்தனர். இவ் விருதுவிழா பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் நேற்றுமுன்தினம் மாலை நடைபெற்றது. வருடத்தின் விளையாட்டுத்துறையில் அதி சிறந்த ஆளுமை மிக்கவருக்கான விருது சர…
-
- 0 replies
- 274 views
-
-
"ஊக்க மருந்து பயன்பாடு இதுவரை இல்லாத வகையில் அதிகரிப்பு":ஐஓசி விளையாட்டுத்துறையில் ஊக்க மருந்து பயன்பாடு இதுவரை இல்லாத அளவுக்கு மாபெரும் குற்றச்செயலாக அதிகரித்துள்ளது என்று சர்வதேச ஒலிம்பிக் சம்மேளனத்தின் தலைவர் எச்சரித்துள்ளார். பீஜிங் போட்டியில் பங்குபெற்ற பலர் ஊக்க மருந்து பரிசோதனையில் தோல்வியடைந்துள்ளனர் ஊக்க மருந்து பயன்படுத்திய குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் தனி நபர்களுக்கு மட்டுமல்ல, தேசிய விளையாட்டு சம்மேளனங்களுக்கும் வாழ்நாள் தடை விதிக்கப்படும் என தாமஸ் பாக் கூறியுள்ளார். கடந்த 2014ஆம் ஆண்டு ரஷ்யாவின் சோச்சி நகரில் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக் போட்டியில், அரச ஆதரவுடன் ஊக்க மருந்து பயன்பாடு இடம்பெற்றுள்ளது எனும் குற்றச்சாட்டுகளின…
-
- 0 replies
- 380 views
-
-
பாராட்டப்பட வேண்டிய இலங்கை கிரிக்கெட் சபை இலங்கை கிரிக்கெட் சபை, ஏனைய அமைப்புகள், ஏனைய அரச அமைப்புகள் உள்ளிட்ட அதிகார அமைப்புகள் தவறு செய்யும்போதெல்லாம், அவற்றுக்கான விமர்சனங்களை முன்வைப்பதென்பது, ஊடகங்களினதும் ஏனைய சிவில் அமைப்புகளினதும் கடமையாகும். அதன்மூலமே, அதிகார அமைப்புகள், தங்கள் தங்கள் கடமைகளைத் தொடர்ச்சியாகத் தவறின்றி முன்வைப்பது உறுதிசெய்யப்படும். அதேபோல், அந்த அமைப்புகள், சிறப்பான கடமைகளை ஆற்றும்போது, அதைப் பாராட்ட வேண்டியதும் கடமையாகும். இலங்கை கிரிக்கெட் சபை மீதும் அதன் நிர்வாகத்தினர் மீதும் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருந்தன. அந்த விமர்சனங்களுக்கு, அவர்கள் பொருத்தமா…
-
- 0 replies
- 403 views
-
-
இலங்கை அணி பிரகாசிக்கும் என எதிர்பார்க்க முடியும் - குமார் சங்கக்கார நம்பிக்கை 2016-05-17 14:03:37 இளம் வீரர் குசல் மெண்டிஸ் வளர்ச்சிய அடையும்போது இலங்கை கிரிக்கெட் அணிக்கு பெரும் பங்களிப்பு செய் வார் என குமார் சங்கக்கார நம்பிக்கை வெளியிட்டுள்ளார். ''21 வயதே உடைய குசல் மெண்டிஸ் சாதுரியமாகவும் பந்து விழும் இடத்தை சரியாகக் கணித்தும் மிகவும் சிறப்பாக துடுப்பெடுத்தாடி வருகின்றார். அவரைக் கொண்டு கிரிக்கெட் அரங்கில் நிறைய எதிர்பார்க்கலாம். வருடங்கள் செல்ல செல்ல அவர் சிறப்பு வாய்ந்த ஒருவராக உயர்வார்'' என குமார் சங்கக்கார மேலும் தெரிவித்தார். இங்கிலாந்துக்கு எதிராக ஆரம்பமா…
-
- 0 replies
- 540 views
-
-
EURO 2016 உதைபந்தாட்ட போட்டி செய்திகள், கருத்துக்கள் இந்தவருடம் ஆனி மாதம் 10ம் திகதியில் இருந்து 10 ஆடி வரை ஐரோப்பியகிண்ண உதைபந்தாட்டபோட்டி பிரான்ஸ்சில் நடைபெற இருக்கிறது. போட்டிகளின் விபரங்கள் போட்டி நடைபெறபோகும் இடங்கள் இன்று ஜேர்மனி தனது அணியில் எந்த வீரர்கள் இடம்பெறுவார்கள் என்று அறிவித்துள்ளது. …
-
- 163 replies
- 26.2k views
-
-
இத்தாலி பகிரங்க டென்னிஸில் அண்டி மறே, செரீனா சம்பியன்கள்: 85 வருடங்களின் பின்னர் பிரித்தானிய ஆடவர் சம்பியன் இத்தாலி பகிரங்க டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் சம்பியன் பட்டத்தை அண்டி மறேயும் மகளிர் ஒற்றையர் சம்பியன் பட்டத்தை செரீனா வில்லியம்ஸும் சுவீகரித்தனர். மட்றிட் பகிரங்க டென்னிஸ் போட்டியில் நொவாக் ஜோகோவிச்சிடம் அடைந்த தோல்வியை ரோம் பகிரங்க டென்னிஸ் இறுதிப் போட்டியில் அடைந்த வெற்றியின் மூலம் அண்டி மறே நிவர்த்தி செய்துகொண்டார். மழை காரணமாக டென்னிஸ் அரங்கு ஆபத்தைத் தோற்றுவிக்கலாம் என ஜோகோவிச் முறைப்பாடு செய்த போதிலும் போட்டியைத் தொடருமாறு மத்தியஸ்தர் ஸ்டெய்னர் கேட்டுக்கொண்டார்.…
-
- 0 replies
- 332 views
-
-
ஸ்டார்க், ஹேசில்வுட்டுடன் கமின்ஸும் இணைந்தால் ஆஸி.யை கண்டு எதிரணிகள் அஞ்சும்: ரியான் ஹாரிஸ் ஆஸி. வேகப்பந்து வீச்சாளர் பேட் கமின்ஸ். | படம்: ஏ.எஃப்.பி. காயத்தினால் பாதிக்கப்பட்டு அணிக்குள் வருவதும் போவதுமாக இருந்து வரும் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பேட் கமின்ஸ் தற்போது முழுமையாக குணமடைந்து விட்டார். விரைவில் அஸ்திரேலியா ஏ அணிக்காக பேட் கமின்ஸ் மீண்டும் டெஸ்ட் போட்டிகளுக்குரிய பந்தில் வீச வருகிறார் என்று அவர் காயத்திலிருந்து மீளவும் தனது பழைய வேகப்பந்து வீச்சை மீண்டும் பெறவும் உதவிய வேகப்பந்து வீச்சாளர் ரியான் ஹாரிஸ் தெரிவித்துள்ளார். பேட் கமின்ஸ் ஓடிவந்து பந்தை வீசும் விதம் காயங்கள் ஏற்பட பெரும் காரணமாக அமைந்ததையடுத்து ரியான் ஹா…
-
- 0 replies
- 246 views
-
-
14-வது பட்டம் வென்றது சானியா - ஹிங்கிஸ் ஜோடி இத்தாலி ஓபனில் பட்டம் வென்ற சானியா மிர்சா-மார்ட்டினா ஹிங்கிஸ் ஜோடி. படம்: கெட்டி இமேஜஸ். ரோம் நகரில் நடைபெற்ற இத்தாலி ஓபன் டென்னிஸ் மகளிர் இரட்டையர் பிரிவில் நம்பர் ஒன் ஜோடியான இந்தியாவின் சானியா மிர்சா, ஸ்விட்சர்லாந்தின் மார்ட்டினா ஹிங்கிஸ் ஜோடி பட்டம் வென்றது. இந்த ஜோடி வெல்லும் 14-வது பட்டம் இதுவாகும். இறுதிப்போட்டியில் சானியா ஜோடி 6-1, 6-7(5), 10-3 என்ற செட்கணக்கில் போராடி ரஷ்யாவின் கேத்ரினா மகரோவா, எலினா வெஸ்னினா ஜோடியை தோற்கடித்தது. சிவப்பு நிற களிமண் தரையில் சானியா-ஹிங்கிஸ் ஜோடி பட்டம் வெல்வது இதுவே முதன்முறை. இந்த ஆண்டில் களிமண் தரை ஆடுகளத்தில் நடைபெற்ற போட்டியில் இருமுறை…
-
- 0 replies
- 447 views
-
-
விராட் கோலியின் ‘மாஸ்டர் கிளாஸ்’ மூலம் நிறைய கற்றுக் கொண்டேன்: ஸ்டீவ் ஸ்மித் விராட் கோலியை பாராட்டும் ஸ்மித். | படம்: ஏ.பி. சமீபத்தில் முடிந்த உலகக்கோப்பை டி20 போட்டித் தொடரில் ஆஸ்திரேலியாவை வெளியேற்றிய கோலியின் அருமையான 82 ரன் இன்னிங்ஸ் தனக்கு நிறைய கற்றுக் கொடுத்ததாக ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் கூறியுள்ளார். அன்று விராட் கோலி 39 பந்துகளில் 50 ரன்களை எடுத்தார், அதன் பிறகு 12 பந்துகளில் மேலும் 32 ரன்களை விளாசி 5 பந்துகள் மீதமுள்ள நிலையில் இந்தியாவுக்கு வெற்றி தேடித் தந்தார், ஆஸ்திரேலியா வெளியேறியது. இந்த இன்னிங்ஸில் 2 சிக்சர்களையே கோலி அடித்தார். இது குறித்து ஆஸ்திரேலிய ஊடகம் ஒன்றிற்கு ஸ்மித் கூறியதாவது: அன்று கோலி ஆடிய இன்னிங்…
-
- 0 replies
- 319 views
-
-
சம்பியன்ஸ் லீக்கில் மன்செஸ்டர் சிற்றி இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையே இடம்பெற்று வந்த பிறீமியர் லீக்கின் இறுதி நாள் ஆட்டங்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற நிலையில், மன்செஸ்டர் சிற்றியின் சம்பியன்ஸ் லீக் தகுதி ஏறத்தாள உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன், பிறீமியர் லீக் புள்ளிகள் தரவரிசையில் இரண்டாமிடத்துடன் ஆர்சனல் முடித்துக் கொண்டது. மன்செஸ்டர் சிற்றி, சுவான்சீ சிற்றி அணிகளுக்கிடையிலான போட்டியில் இரண்டு அணிகளும் தலா ஒவ்வொரு கோல்களைப் பெற்று போட்டி சமநிலையில் முடிவடைந்த நிலையில், பிறீமியர் லீக் புள்ளிகள் தரவரிசையில் 66 புள்ளிகளைப் பெற்று மன்செஸ்டர் சிற்றி நான்காமிடத்தில் உள்ளது. இந்நிலையில் இன்று பௌர்ண்மௌத் உடனான போட்டியில் 19-0 என்ற கோல்கண…
-
- 0 replies
- 312 views
-
-
ஹமில்டனும் றொஸ்பேர்க்கும் மோத வென்றார் மக்ஸ் வெர்ஸ்ட்டப்பன் ஸ்பானிஷ் கிரான்ட் பிறிக்ஸில் மெர்சிடிஸ் அணியின் பிரித்தானியச் சாரதியான லூயிஸ் ஹமில்டனும் ஜெர்மனியச் சாரதியான நிக்கோ றொஸ்பேர்க்கும் மோதிக் கொள்ள, ரெட் புல் அணியின் பெல்ஜியச் சாரதியான மக்ஸ் வெர்ஸ்ட்டப்பன், போர்மியுலா வண் வரலாற்றின் இளம் வெற்றியாளராக மாறினார். மேற்படி பந்தயத்தின் முதலாவது சுற்றிலேயே றொஸ்பேர்க்கை முந்த முயன்ற தற்போதைய போர்மியுலா வண் சம்பியனான ஹமில்டன் புற்தரைக்கு சென்று சுழன்று றொஸ்பேர்க்குடன் மோதியதில் அதன் பின்னர் இப்பந்தயம் ரெட்புல்லுக்கும் பெராரிக்குமிடையிலானதாக மாறியிருந்தது. இந்நிலையில்,…
-
- 0 replies
- 411 views
-
-
இலங்கையில் பாக்.–மே.தீ.வுகள் தொடர் மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான தொடர் ஒன்றை இலங்கையில் நடத்துவதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் சபை ஆலோசித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. பாகிஸ்தானில் நிலவுகின்ற பாதுகாப்பு குறைபாடுகள் காரணமாக சர்வதேச கிரிக்கெட் அணிகள் அங்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடுவதற்கு அச்சம் தெரிவித்துவருகின்றன. இதனால் பாகிஸ்தான் கிரிக்கெட் சபைக்கு ஏகப்பட்ட நஷ்டம் ஏற்பட்டு வருகின்றது. இந்நிலையில் ஐக்கிய அரபு இராச்சியத்தில் பாகிஸ்தான் அணி தொடர்களை நடத்திவருகிறது. எனினும் அங்கு போட்டிகளை நடத்துவதால் ஈட்டப்படுகின்ற வருமானம் போதா நிலை காண…
-
- 0 replies
- 430 views
-
-
இங்கிலாந்து மகளிர் எவ். ஏ. கிண்ண கால்பந்தாட்டத்தில் ஆர்சனல் கழகம் 14ஆவது தடவையாக சம்பியனானது 2016-05-16 12:01:29 இங்கிலாந்தின் மகளிர் எவ். ஏ. கிண்ண கால்பந்தாட்டப் போட்டியில் ஆர்சனல் மகளிர் அணி 14ஆவது தடவையாக சம்பியன் பட்டத்தை சுவீகரித்துள்ளது. இங்கிலாந்து கால்பந்தாட்ட சங்கத்தினால் 46ஆவது வருடமாக நடத்தப்பட்ட மகளிர் எவ். ஏ. கிண்ண கால்பந்தாட்ட இறுதி ஆட்டத்தில் செல்சி மகளிர் அணியை லண்டன் வெம்ப்ளி விளையாட்டரங்கில் எதிர்கொண்ட ஆர்சனல் மகளிர் அணி 1 – 0 என்ற கோல் அடிப்படையில் வெற்றிகொண்டு கிண்ணத்தை சுவீகரித்தது. போட்டியின் 18ஆவது நிமிடத்தி…
-
- 0 replies
- 342 views
-
-
வெற்றியுடன் நிறைவுசெய்த பயேர்ண் மியூனிச் ஜேர்மனி கால்பந்தாட்டத் தொடரான புண்டெஸ்லீகாவின் இறுதி லீக் போட்டியில் வெற்றிபெற்ற அந்த லீக்கின் சம்பியன்களான பயேர்ண் மியூனிச், அவ்வணியின் பயிற்றுநரான பெப் கார்டியோலாவின் இறுதிப் போட்டியை, வெற்றியுடன் முடித்தது. இப்போட்டிக்கு முன்னதாக சம்பியன்களாகத் தெரிவாகியிருந்த பயேர்ண் மியூனிச் சார்பாக, றொபேர்ட் லெவன்டொவ்ஸ்கி ஒரு கோலையும் கோட்ஸே 2 கோல்களையும் பெற்றுக் கொடுக்க, எதிரணியான ஹன்னோவெர் அணி தடுமாறியது. அவ்வணியால், ஒரேயொரு கோலையே பெற இயலுமாக அமைய, 3-1 என்ற கோல் கணக்கில் அவ்வணி வெற்றிபெற்றது. இதன்படி, போட்டிக்கான புள்ளி அட்டவணையில், இரண்டாமி…
-
- 0 replies
- 418 views
-
-
வடக்கின் நீலங்களின் சமர் வெற்றிக்கிண்ணம் கிளிநொச்சி இந்துக்கல்லூரியின் கையில் கிளிநொச்சியின் துடுப்பாட்டத்தில் இரண்டு கல்லூரிகளுக்கு இடையே வருடந்தோறும் நடைபெறுகின்ற வடக்கின் நீலங்களின் சமர் கடினப்பந்து துடுப்பாட்ட போட்டியானது நேற்று முடிவுக்கு கொண்டு வரப்பட்ட நிலையில் கிளிநொச்சி இந்துக்கல்லூரி அணி சமரின் வெற்றிக் கிண்ணத்தை தனதாக்கிக்கொண்டது நேற்று முன்தினம் நாணய சுழற்சியில் வெற்றி ஈட்டிய கிளிநொச்சி இந்துக் கல்லூரி அணி களத்தடுப்பை தீர்மானித்து களமிறங்கியது இரண்டு நாட்களைக் கொண்டு நடத்தப்பட்ட டெஸ்ட் கடினப்பந்து போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய கிளிநொச்சி மத்திய கல்லூரி 35.வது பந்து பரிமாற்றத்தின் நான்காவது பந்து …
-
- 0 replies
- 272 views
-
-
"நம்ம தல தோனி" இந்த கிரிக்கெட்ல பேட்ஸ்மேன அவுட் ஆக்க மட்டுமே பந்து வீசுவாங்க... ஆனா அதை தடுத்து, ரன் எடுக்கிறதுலதான் பேட்ஸ்மேனோட வெற்றி அடங்கி இருக்கு. அந்த கிரிக்கெட்ல கிறுக்குத்தனமான ஒரு வெறியும், ஒரு புத்திசாலித்தனமான திறமையும் இருந்தால், ஒரு நாள் கோடிக்கணக்கான மக்கள் பார்க்கிற இண்டர்நேஷனல் மேட்ச்சையும் ஆட முடியும். இதற்கு எடுத்துக்காட்டு நம்ம 'தல' தோனி. தொடரும்....
-
- 33 replies
- 2k views
-
-
ருவான்டா கிரிக்கெட் வீரர் உலக சாதனை சிறிய ஆப்ரிக்க நாடான ருவாண்டாவின் கிரிக்கெட் அணியின் தலைவர் புதிய உலக சாதனை ஒன்றை படைத்துள்ளார். சாதனைப் படைத்துள்ள எரிக் துசீங்கிஸிமானா வலைப்பயிற்சியில் இதுவரை சாதனையாக இருந்த 51 மணி நேரத்தை எரிக் துசீங்கிஸிமானா முறியடித்துள்ளார். ருவாண்டாவில் முதலாவது சர்வதேச கிரிக்கெட் மைதானம் ஒன்றை கட்டுவதற்கு நிதி திரட்டும் நோக்கிலேயே தொடர்ச்சியாக அவர் வலைப்பயிற்சியில் ஈடுபட்டார். அந்த நாட்டில் கிரிக்கெட் விளையாட்டு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் மேலும் ஒரு நடவடிக்கையாக இது பார்க்கப்படுகின்றது. இப்படியான நடவடிக்கைகள் மூலமாக ருவாண்டாவில் மேலும் பலர் கிரிக்கெட் விளையாட்டை முன்னெடுக்க …
-
- 0 replies
- 602 views
-
-
தவணுக்கு பதில் கே.எல்.ராகுலுக்கு வாய்ப்பு தரவேண்டியது ஏன்?- ஒரு பார்வை இலங்கைக்கு எதிராக தனது 2-வது டெஸ்ட் சதத்தை லோகேஷ் ராகுல் எடுத்த போது மட்டையை உயர்த்தும் காட்சி. | படம்: ஏ.எஃப்.பி. இந்திய அணியில் ஒரு சில வீரர்களுக்கு கூடுதலாக வாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. இதில் ஷிகர் தவணும் ஒருவர். ஆனால் தற்போது குறைந்த ஓவர்கள் கிரிக்கெட்டில் இவருக்குப் பதிலாக கவுதம் கம்பீரை கொண்டு வர வேண்டும் என்று குரல்கள் எழுந்து வருகின்றன. கவுதம் கம்பீர் மன உறுதி படைத்த வீரர், அனுபவமிக்கவர், ஆக்ரோஷமானவர் என்பதில் மாற்றுக் கருத்துகள் இல்லை. ஆனால் ஷிகர் தவணுக்குப் பதிலாக 3 வடிவங்களிலும் கே.எல்.ராகுல் இந்திய அணியில் தேர்வு செய்யப்படுவதில் கூடுதல் நன்மைகள் ஏற்…
-
- 0 replies
- 429 views
-
-
17ஆவது கனிஷ்ட தேசிய மெய்வல்லுநர் போட்டி; வலல்ல மாணவி ஹர்ஷிகா தேசிய சாதனை, அருணோதயாவின் ஜொய்சனுக்கு தங்கம் (நெவில் அன்தனி) தியகம மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டரங்கில் நேற்று ஆரம்பமான 17ஆவது கனிஷ்ட தேசிய மெய்வல்லுநர் போட்டிகளில் ஒரு தேசிய சாதனையும் 3 புதிய சாதனைகளும் நிலைநாட்டப்பட்டன. 20 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் 3.34 மீற்றர் உயரத்தை தாவிய வலல்ல ஏ. ரத்நாயக்க மத்திய கல்லூரியைச் சேர்ந்த ஹர்ஷனி தர்மரத்ன புதிய தேசிய சாதனையை நிலைநாட்டினர். இதற்கு முன்னைய சாதனை 3.33 மீற்றராக இருந்தது. இப் போட்டியில் தெல்லிப்பழை மகாஜனா கல்லூரியைச் சேர்ந்த ஜே. அனிதா 3.00 மீற்றர் உயரம் தாவி இ…
-
- 1 reply
- 376 views
-