விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7847 topics in this forum
-
ஒரு மில்லியன் டொலரை நஷ்ட ஈடாக கேட்க உள்ளோம் : கிரிக்கெட் சபை இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரருக்கு ஐ.சி.சி.யால் தடை விதிக்கப்பட்டிருந்தமையால் இலங்கை கிரிக்கெட் சபைக்கு பாரிய இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே சர்வதேச கிரிக்கெட் சபையிடம் ஒரு மில்லியன் டொலரை நஷ்டஈடாக கேட்க உள்ளோம் என இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது. குசேல் ஜனித் பெரேரா தடை செய்யப்பட்ட ஊக்கமருந்தை பாவித்ததாக கூறி ஐ.சி.சி.யால் தடைவிதிக்கப்பட்டது. ஆனால் ஆய்வில் அது பொய்யானது. எனவே நஷ்டஈடு கேட்கும் உரிமை எமக்குள்ளது. இதற்கு முன்னதாக குசல் ஜனித் பெரேராவை இலங்கை அணியில் இணைத்து நாட்டுக்காக விளையாட வாய்ப்பளிப்பதே முக்கிய நோக்கமாகும். http://www.virakesari.lk/article/6340
-
- 2 replies
- 873 views
-
-
ஐ.சி.சி. கிரிக்கெட் குழுவின் அங்கத்தவரானார் மஹேல இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜெயவர்தன சர்வதேச கிரிக்கெட் சபையின் கிரிக்கெட் குழுவின் அங்கத்தவராக நியமிக்கப்பட்டுள்ளதாக ஐ.சி.சி. அறிவித்துள்ளது. http://www.virakesari.lk/article/6343
-
- 0 replies
- 497 views
-
-
ஐஸ் ஹொக்கியில் கலக்கிய புட்டின் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின், ஐஸ் ஹொக்கியில் தனது திறமைகளை வெளிக்காட்டினார். 2014ஆம் ஆண்டு சோச்சி குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் இடம்பெற்ற மைதானமொன்றில் இடம்பெற்ற சிநேகபூர்வப் போட்டியொன்றிலேயே, அவர் இவ்வாறு சிறப்பான திறமையை வெளிக்காட்டினார். அதிகாரிகள், வணிகர்கள், முன்னாள் வீரர்கள் உள்ளடங்கிய அணியை வழிநடத்திய புட்டின், தொழில்முறையல்லாத வீரர்கள் அடங்கிய அணிக்கெதிராக இப்போட்டியில் விளையாடியிருந்தார். இப்போட்டியில், புட்டினின் அணி, 9-5 என்ற கணக்கில் வெற்றிபெற்றிருந்தது. சிவப்பு நிற ஜேர்சியை அணிந்திருந்த புட்டின், கோல் பெறுவதற்கான இரண்டு உதவிகளை வழங்கியிருந்தார். அவரது ஜேர்சியின் பின்புறத்த…
-
- 0 replies
- 280 views
-
-
பிரபல கிரிக்கட் வர்ணனையாளர் உயிரிழப்பு கிரிக்கட்டின் குரல் என்று அனைவராலும் போற்றப்பட்ட வர்ணனையாளர் டோனி கோசியர் உடல்நிலை பாதிப்பால் நேற்று மரணம் அடைந்தார். உயிரிழக்கும் போது அவருக்கு 75 வயது. சமீபகாலமாக கழுத்து, கால் பகுதியில் ஏற்பட்ட கிருமி தொற்று காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த அவர் உயிரிழந்துள்ளார். மேற்கிந்திய தீவுகளைச் சேர்ந்த டோனி கோசியர் கிரிக்கெட்டில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். எழுத்தாளரர், பத்திரிகையாளர், வர்ணனையாளர் என பன்முக திறன் கொண்டவராக திகழ்ந்தார். 1965ம் ஆண்டு மேற்கிந்திய தீவுகள் அணி அவுஸ்திரேலியா சென்ற போது தனது வர்ணனையாளர் பணியை தொடங்கிய அவர் சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக வர்ணனை மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். டோனி கோசி…
-
- 0 replies
- 355 views
-
-
டோனியின் ஓய்வு குறித்து முடிவெடுக்க அவருக்கு வாய்ப்பளிக்க வேண்டும் இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியில் தலைவர் பொறுப்பில் இருந்து டோனியை மாற்றி விட்டு விராட் கோலியை நியமிக்க இதுவே சரியான தருணம் என்று இந்திய அணியின் முன்னாள் தலைவர் கங்குலி கருத்து தெரிவித்து இருந்தார். இது குறித்து முன்னாள் தலைவர் அசாருதீனிடம் கருத்து கேட்ட போது, ‘அது கங்குலியின் தனிப்பட்ட கருத்தாகும். அதனை நான் மதிக்கிறேன். எப்போது ஓய்வு பெறுவது என்பது குறித்து முடிவு எடுக்கும் வாய்ப்பை டோனிக்கு அளிக்க வேண்டும். அந்த வாய்ப்பு வழங்ககப்படுவதற்கு டோனி தகுதியானவர். டோனி சிறந்த தலைவராக விளங்கி வருகிறார். அவரது தலைமையில் இந்திய அணி உலக கோப்பை போட்டிகளில் வென்று இருப்பதுடன், இந்தியா ம…
-
- 1 reply
- 248 views
-
-
மென்செஸ்டர் யுனைட்டட் கழக பஸ்ஸை தாக்கியவர்களுக்கு தடை விதிக்க நடவடிக்கை மென்செஸ்டர் யுனைட்டட் அணியின் பயிற்றுநர் தாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய இரசிகர்களுக்கு வாழ் நாள் தடை விதிக்கப்படும் என வெஸ்ட் ஹாம் கழகம் எச்சரித்துள்ளது. மென்செஸ்டர் யுனைட்டட் அணியினர் பயணம் செய்த பஸ் வண்டியின் யன்னல் ஒன்றும் தாக்கி நொறுக்கப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதல் சம்பவம் காரணமாக மென்செஸ்டர் யூனைட்டட் அணிக்கும் வெஸ்ட் ஹாம் அணிக்கும் இடையிலான போட்டி 45 நிமிடங்கள் தாமதித்தே ஆரம்பமானது. ‘‘பொலியென் மைதானத்திற்கு வெளியில் சில ஆதரவாளர்கள் அடாவடித்தனத்தில் ஈடுபட…
-
- 0 replies
- 268 views
-
-
கேப்டன் பதவியை திணிக்கக்கூடாது: சுனில் கவாஸ்கர் சுனில் கவாஸ்கர். | கோப்புப் படம். 2019 உலகக் கோப்பைக்கு இந்திய அணியை தோனி தான் வழிநடத்த வேண்டுமா என்பதை தேர்வுக்குழுவினர் இப்போதே முடிவு செய்ய வேண்டும் என்று கங்குலி கருத்து தெரிவித்திருந்தார். மேலும் குறைந்த ஓவர் கிரிக்கெட் போட்டிக்கும் கோலியை கேப்டனாக நியமிப்பது குறித்து தேர்வுக்குழு முடிவு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார். இந்நிலையில் இதுதொடர்பாக சுனில் கவாஸ்கர் ஆங்கில தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் “அனைத்து வடிவிலான கிரிக்கெட் போட்டிகளுக்கும் விராட் கோலியை கேப்டனாக இருக்க சொல்லி நிர்பந்தத்தை ஏற்படுத்தக் கூடாது. கேப்டன் பொறுப்பை ஏற்றுக்கொள்ளும் வகையில…
-
- 0 replies
- 297 views
-
-
குசல் பெரேராவின் தடை நீக்கம் இலங்கை கிரிக்கட் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரும் விக்கட்காப்பாளருமான குசல் பெரேராவுக்கு சர்வதேச கிரிக்கட் சபையால் விதிக்கப்பட்டிருந்த தடை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நீக்கப்பட்டுள்ளது. தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்துகளை பாவித்ததாக குற்றம் சுமத்தப்பட்டு,மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் குசல் தோல்வி அடைந்ததாக தெரிவிக்கப்பட்டதையடுத்து, அவருக்கு சர்வதேச கிரிக்கட் சபையால் குறித்த தடை விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. குறித்த தடைக்கு எதிராக குசல் பெரேரா சட்ட ரீதியான நடவடிக்கையை மேற்கொண்டிருந்தார். இதற்கமைய குசல் பெரேராவுக்கு ஊக்க மருந்து சோதனையை நடத்திய கட்டாரைத் தளமாக கொண்ட நிறுவனம், தாம் முன்வைத்த அறிக்கை பிழைய…
-
- 2 replies
- 524 views
-
-
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்றார் சர்லோட் எட்வேர்ட்ஸ் இங்கிலாந்து பெண்கள் அணியின் தலைவியான சர்லோட் எட்வேர்ட்ஸ், தனது இருபதாண்டு விளையாடும் காலத்துக்கு பிறகு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார். இதில், பத்தாண்டுகள் அணியின் தலைவியாக இருந்துள்ளார். வீரர்களிலோ அல்லது வீராங்கனைகளிலோ இங்கிலாந்து அணியை 200க்கு மேற்பட்ட சர்வதேசப் போட்டிகளில் தலைமை தாங்கிய முதலாமவராக கடந்த வருடம் மாறியிருந்தார். பெண்களின் விளையாட்டு நடைபெறுகின்றது என்றும் வீராங்கனையாகவும் அணித்தலைவியாகவும் தனது பங்களிப்பு தொடர்பில் மிகுந்த பெருமையுடன் தான் விடைபெறுவதாக அவர் தெரிவித்துள்ளார். 23 டெஸ்ட் போட…
-
- 0 replies
- 232 views
-
-
ஹாங்காங் உள்நாட்டு டி20 கிரிக்கெட் லீகில் மைக்கேல் கிளார்க் மைக்கேல் கிளார்க். | படம்: ஏ.எஃப்.பி. ஓய்வு பெற்ற ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் ஹாங்காங் உள்நாட்டு டி20 லீக் கிரிக்கெட்டில் விளையாடவிருக்கிறார். இந்த மாத இறுதியில் ஹாங்காங் பிளிட்ஸ் அணியில் மைக்கேல் கிளார்க் ஆடவுள்ளார். 2015-ல் ஓய்வு பெற்ற மைக்கேல் கிளார்க், மீண்டும் கிரிக்கெட்டுக்குள் நுழைய கடுமையான பயிற்சிகளுடன் முயன்று வருகிறார், ஆனால் இவர் கடைசியாக டி20 ஆடியது 2012-ம் ஆண்டு, இதனால் பிக் பாஷ் லீக் அணிகள் கூட மைக்கேல் கிளார்க் மீது ஆர்வம் காட்டவில்லை. மேலும் டி20 கிரிக்கெட்டில் மைக்கேல் கிளார்க் பெயர் இதுவரை பெரிதாக தடம்பதியவில்லை. இந்நிலையில் எங்கிர…
-
- 0 replies
- 432 views
-
-
பாகிஸ்தானின் முன்னாள் வீரர்கள் பயிற்றுநர் பதவிக்கு விண்ணப்பிக்க மறுத்ததை வசிம் அக்ரம் விமர்சிக்கிறார் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்றுநர் பதவிக்கு முன்னாள் பாகிஸ்தான் வீரர்கள் விண்ணப்பிக்க மறுத்ததையிட்டு வசிம் அக்ரம் கடுமையாக விமர்சித்துள்ளார். பாகிஸ்தான் கிரிக்கெட் சபையினால் இதற்கான வாயில் திறக்கப்பட்டிருந்தபோதிலும் அவர்கள் அது குறித்து கரிசணை காட்டாதது கவலை தருகின்றது என்றார் அக்ரம். தலைமைப் பயிற்றுநர் தேர்வுக்கான குறும்பட்டியலைத் தயார் செய்தவர்கள் குழாமில் வசிம் அக்ரமும் ஒருவராக இடம்பெற்றிருந்தார். உலக இருபது 20 கிரிக்கெட் போட்டிகளில் பாகிஸ்தான் பிரகாசிக்காததை அடுத்…
-
- 0 replies
- 194 views
-
-
அணியைவிட்டு விலக விரும்பும் நட்சத்திரங்களுக்கு பயிற்றுநர் எச்சரிக்கை இங்கிலாந்து பிறீமியர் லீக் தொடரின் சம்பியன்களாகத் தெரிவான லெய்செஸ்டர் சிற்றி அணியின் நட்சத்திரங்கள், அவ்வணியிலிருந்து விலகுவது குறித்து, அவ்வணியின் பயிற்றுநர் கிளாடியோ றைனேரி எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்தத் தொடர் ஆரம்பிக்கும் போது, இத்தொடரை வெல்வதற்கான வாய்ப்புகளில் 5,000-1 என்ற மிகக்குறைவான வாய்ப்புகளைக் கொண்டிருந்த லெய்செஸ்டர் அணி, அனைவரும் எதிர்பாராத விதமாகச் சிறப்பாக விளையாடி, கழகத்தின் 132 ஆண்டுகள் கொண்ட வரலாற்றில் முதன்முறையாக, சம்பியன்களாகத் தெரிவாகியிருந்தது. சம்பியன்களாக அவ்வணியை உருவாக்கியமையில், இத்தாலியைச் சேர்ந்த அவ்வ…
-
- 0 replies
- 295 views
-
-
2019 உலகக்கோப்பை வரை கேப்டனாக தோனி தாக்குப்பிடிப்பாரா? - கங்குலி சந்தேகம் தோனி-கங்குலி. | கோப்புப் படம்: பிடிஐ. 2019 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கு இந்திய அணியின் கேப்டன் யார் என்பதை அணித் தேர்வுக்குழுவினர் உறுதி செய்து கொள்வது நல்லது என்று சவுரவ் கங்குலி கூறியுள்ளார். இந்தியா டுடே ஸ்போர்ட்ஸ் நிகழ்ச்சியில் பேசிய முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி கூறியதாவது: உலகில் உள்ள எந்த ஒரு அணியும் தங்களது எதிர்காலத்தை திட்டமிடவே செய்யும். ஆனால் எனது கேள்வி என்னவெனில் இன்னும் 3-4 ஆண்டுகளுக்கு தோனி கேப்டனாக நீடிக்க முடியும் என்று அணித் தேர்வாளர்கள் கருதுகின்றனரா என்பதே. ஒரு கேப்டனாக அவர் அனைத்தையும் சாதித்து விட்டார் என்பதில் எந்தவித ஐயமும்…
-
- 0 replies
- 309 views
-
-
தடைகாலம் 4 ஆண்டுகளாக குறைப்பு: பதவியை ராஜினாமா செய்தார் பிளாட்டினி மைக்கேல் பிளாட்டினி சர்வதேச கால்பந்து அமைப்பின் முன்னாள் தலைவர் செப் பிளாட்டர் மற்றும் ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பின் தலைவர் மைக்கல் பிளாட்டினி ஆகியோருக்கு இடை யில் எந்தவிதமான எழுத்து ஆவ ணங்கள் இல்லாமல் 2 மில்லி யன் சுவிஸ் பிராங்குகள் கைமாற்றப் பட்டதாக எழுந்த குற்றச்சாட்டில் பிளாட்டினிக்கு 8 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த தடையானது கடந்த பிப்ரவரி மாதம் 6 வருடங்களாக குறைக்கப்பட்டிருந்தது. இந்நிலை யில் இந்த தடையை நீக்கக்கோரி விளையாட்டு தொடர்பான குற் றங்களை விசாரிக்கும் தீர்ப் பாயத்தில் பிளாட்டினி மேல்முறை யீடு செய்தார். இதனை நேற்று விசாரித்த தீர்ப்பாயம் …
-
- 0 replies
- 222 views
-
-
29 பட்டங்கள் வென்று ஜோகோவிச் சாதனை மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டி ஆடவர் பிரிவில் நம்பர் ஒன் வீரரான செர்பியாவின் நோவாக் ஜோகோவிச் சாம்பியன் பட்டம் வென்றார். இதன் மூலம் மாஸ்டர்ஸ் தொடரில் 28 பட்டங்கள் வென்றிருந்த நடாலின் சாதனையை முறியடித்தார். ஸ்பெயினின் மாட்ரிட் நகரில் நடைபெற்ற இந்த போட்டியின் இறுதிச் சுற்றில் 2-ம் நிலை வீரரும் நடப்பு சாம்பியனும் ஆன இங்கி லாந்தின் ஆன்டி முர்ரேவை 6-2, 3-6, 6-3 என்ற செட் கணக்கில் வீழ்த்தி பட்டம் வென்றார் ஜோகோவிச். இந்த ஆட்டம் 2 மணி நேரம் 6 நிமிடங்கள் நடைபெற்றது. ஆன்டி முர்ரே தோல்வியடைந்ததால் டென்னிஸ் தரவரிசை பட்டியலில் 2-வது இடத்தை சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரரிடம் பறிகொடுத்துள்ளார்…
-
- 0 replies
- 376 views
-
-
லா லிகா பட்டம்: இருமுனைப் போட்டியாகிய மும்முனைப் போட்டி ஸ்பானியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையே இடம்பெற்றுவரும் லா லிகா தொடரின் பட்டத்தை யார் கைப்பற்றுவது என்ற போட்டி, இத்தொடரின் இறுதி வாரம் வரை சென்றுள்ளபோதும், கடந்த வாரம் வரை பார்சிலோனா, அத்லெட்டிகோ மட்ரிட், றியல் மட்ரிட் ஆகிய அணிகளுக்கிடையே மும்முனைப் போட்டியாக இருந்தது இந்த வாரத்தில் பரம வைரிகளான பார்சிலோனா, றியல் மட்ரிட் ஆகிவற்றுக்கிடையேயான இருமுனைப் போட்டியாக மாறியுள்ளது. லா லிகா புள்ளிகள் தரவரிசையில் இறுதியாக உள்ள லெவண்டேயுடன் அத்லெட்டிகோ மட்ரிட் தோல்வியடைந்த நிலையிலும் எஸ்பன்யோலை பார்சிலோனாவும் வலென்சியாவை றியல் மட்ரிட்டும் வென்றுள்ள நிலையிலேயே மும்முனைக் களமாக இருந்த லா ல…
-
- 0 replies
- 356 views
-
-
சந்தேகத்தில் மன்செஸ்டர் சிற்றியின் சம்பியன்ஸ் லீக் வாய்ப்பு இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையே இடம்பெற்றுவரும் பிறீமியர் லீக் தொடரின் கடந்த ஞாயிற்றுக்கிழமை (08) இடம்பெற்ற போட்டிகளில், மன்செஸ்டர் சிற்றி, ஆர்சனல் ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டி சமநிலையில் முடிவடைந்ததோடு, லிவர்பூல், சௌதாம்டன் ஆகிய அணிகள் வெற்றி பெற்றிருந்தன. மன்செஸ்டர் சிற்றி, ஆர்சனல் ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியில் இரண்டு அணிகளும் தலா இரண்டு கோல்களைப் பெற்ற நிலையில் போட்டி சமநிலையில் முடிவடைந்தது. மன்செஸ்டர் சிற்றி சார்பாக சேர்ஜியோ அக்ரோவும் கெவின் டீ ப்ரூனும் கோல்களைப் பெற்றிருந்ததோடு, ஆர்சனல் சார்பாக ஒலிவர் ஜிரோட்டும் அலெக்ஸிஸ் சந்தேஸும் கோல்களைப் பெற்றிருந்தனர். …
-
- 0 replies
- 460 views
-
-
'உபாய ரீதியாக மஹேல உதவலாம்' Comments இங்கிலாந்து, இலங்கை அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடர், எதிர்வரும் 19ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ள நிலையில், அத்தொடரில், இலங்கை அணியின் முன்னாள் தலைவரான மஹேல ஜெயவர்தன, உபாய ரீதியாக இலங்கைக்கு உதவலாம் என, இலங்கை அணியின் தலைவர் அஞ்சலோ மத்தியூஸ் தெரிவித்துள்ளார். ஓய்வுபெற்ற பின்னர், இங்கிலாந்து அணியின் துடுப்பாட்ட ஆலோசகராகச் செயற்பட்ட மஹேல ஜெயவர்தன, இறுதியாக, இந்தியாவில் இடம்பெற்ற உலக இருபதுக்கு-20 தொடரிலும் அவ்வாறு செயற்பட்டிருந்தார். இந்தத் தொடரில் அவர், இங்கிலாந்தின் ஸ்கை ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியின் நேர்முக வர்ணனையாளப் பணியாற்றவுள்ளார். எனவே, இங்கிலாந்து அணியின் வீரர்கள் பற்றிய தகவல்களை…
-
- 50 replies
- 3.7k views
-
-
பிறீமியர் லீக்கில் 'பெரிய 4 அணிகளின் ஆதிக்கம் முடிந்தது' இங்கிலாந்து பிறீமியர் லீக் தொடரில் வழக்கமாக ஆதிக்கம் செலுத்தும் பெரிய அணிகளெனக் கருதப்படும் நான்கு அணிகளின் ஆதிக்கம், முடிவுக்கு வந்துவிடும் என, ஆர்சனல் அணியின் பயிற்றுநர் ஆர்சீன் வெங்கர் தெரிவித்துள்ளார். இங்கிலாந்து பிறீமியர் லீக் தொடரின் சம்பியன்களாக லெய்செஸ்டர் சிற்றி அணி தெரிவாகியுள்ளதோடு, ஏனைய அணிகள், வழக்கமான திறமையை வெளிப்படுத்தத் தடுமாறியிருந்தன. பிறீமியர் லீக்கின் பெரிய நான்கு அணிகளென, மன்செஸ்டர் யுனைட்டெட், லிவர்பூல், செல்சி, ஆர்சனல் ஆகியன கருதப்படுகின்றன. இவ்வணிகள், 2000களில் அதிக ஆதிக்கத்தை வெளிப்படுத்திய அணிகளான உள்ளன. இந்நிலையிலேயே கருத்துத…
-
- 0 replies
- 495 views
-
-
இந்தியாவிலும் பகலிரவு டெஸ்ட் போட்டிகளுக்கு அனுமதி கோரல் கொல்கத்தாவில் கழக அணிகள் பங்கேற்கும் பகல் – இரவு டெஸ்ட் போட்டிகளை நடத்த இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை அனுமதி தர வேண்டும் என பெங்கால் கிரிக்கெட் சங்கத் தலைவரும்இ முன்னாள் இந்திய அணித்தலைவருமான சௌரவ் கங்குலி கோரிக்கை விடுத்துள்ளார். இந்திய மண்ணில் முதன் முறையாக பகல் – இரவு டெஸ்ட் போட்டியை நடத்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை (பி.சி.சி.ஐ.) ஏற்பாடு செய்கிறது. இதில் நியூசிலாந்து அணி பங்கேற்கவுள்ளது. இதற்கு தயாராகும் வகையில் வரும் துலீப் சுற்றுத் தொடரை பகல் – இரவு போட்டிகளாக நடத்தவுள்ளனர். இதுகுறித்து கங்குலி கருத்து வெளியிடும்…
-
- 0 replies
- 265 views
-
-
கிளாடியோ ரனேரி... சொல்லி அடித்த கில்லி! - லெய்செஸ்டர் சிட்டி அணியின் வெற்றிக்கதை “நம் அணியின் இன்றைய தோல்விக்கு நானே பொறுப்பேற்கிறேன். நமது அணிக்கு அவப்பெயர் பெற்றுத்தரும் வகையில் ஒரு பயிற்சியாளரை நியமித்ததற்காக நான் மிகவும் வருந்துகிறேன்” என்று சுமார் இரண்டு ஆண்டுகள் முன்னர் கூறினார் கிரீஸ் கால்பந்துக் கழகத் தலைவர் ஜியார்கோஸ் சர்ரிஸ். கால்பந்து தரவரிசையில் மிகவும் பின்தங்கிய ஃபரோ ஐலாண்டு அணியிடம், 2004 ல் ஐரோப்பிய சாம்பியன் கிரீஸ் தோற்ற பிறகு அந்த அறிக்கையை அவர் வெளியிட்டார். மொத்த கால்பந்து உலகமும் அதை ஆமோதித்தது. ஆனால் சரியாக 18 மாதங்கள் கழித்து, அன்று கிரீஸ் அணியால் கழட்டிவிடப்பட்ட அதே பயிற்சியாளர்தான் இன்று மொத்த கால்பந்து உலகத்தாலும் ம…
-
- 0 replies
- 444 views
-
-
விளையாட்டு மைதானத்திலேயே உயிரிழந்த கால்பந்து வீரர்! (கடைசி நிமிட வீடியோ) மாற்று போட்டியாளராக களமிறங்கும் பேட்ரிக் கேமரூன் நாட்டை சேர்ந்த கால்பந்து நடுகள வீரர் பேட்ரிக் எகெங், தனது அணிக்காக விளையாடிய போது மைதானத்திலேயே சுருண்டு விழுந்து, பின் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். டினாமோ புக்காரெஸ்ட் அணியை சேர்ந்த கால்பந்து வீரர் பேட்ரிக் எகெங் (26). இவர், வீடொரல் கான்ஸ்டன்டா அணிக்கு எதிராக நேற்று நடந்த போட்டியில், தனது அணி சார்பில் 62வது நிமிடத்தில் மாற்று போட்டியாளராக களமிறங்கினார். மைதானத்திலேயே சுருண்டு விழுந்த பேட்ரிக் ஆனால் …
-
- 0 replies
- 656 views
-
-
இந்திய அணியில் ’இவர்கள்’ தேர்வு செய்யப்படுவார்களா? நடப்பு ஐபிஎல் தொடரில் கவுதம் கம்பீர், ராபின் உத்தப்பா, பார்த்திவ் படேல், அக்சர் படேல், மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோர் நன்றாக ஆடி வருகின்றனர். இந்நிலையில் இளம் வீரர்களுக்கும் அனுபவ வீரர்களுக்கும் மீண்டும் வாய்ப்பளித்து வரும் இந்திய அணித்தேர்வுக்குழு இவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. குறிப்பாக கம்பீர் இருக்கும் ஃபார்ம் அவரை முரளி விஜய்யுடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் கூட தொடக்க வீரராக மீண்டும் களமிறக்கலாம் என்ற அளவுக்கு கம்பீர் ரசிகர்கள் நினைக்கின்றனர். அதுவும் ஷிகர் தவண் ஒரு போட்டியில் அடித்தால் பிறகு 5-6 போட்டிகளில் தொல்வியடைகிறார், மேலும் சமீபத்த…
-
- 0 replies
- 507 views
-
-
கோலிக்கு இந்த வாரம் அபராத வாரம்! இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் விராத் கோலிக்கு இவ்வாண்டு மிகவும் அற்புதமான ஆண்டு. தொட்டதெல்லாம் பொன் என்பதுபோல் ரன் மழையாகப் பொழிந்து வருகிறார். டி20 உலகக்கோப்பையில் தொடர் நாயகன் விருது பெற்றார். இப்போது ஐ.பி.எல் தொடரில் அதிக ரன்கள் குவித்து ஆரஞ்சு தொப்பியை தன்வசமே வைத்துள்ளார். ஆனால் இந்த வாரம், ஏனோ தெரியவில்லை கோலிக்கு பிரச்சனைகள் படையெடுத்த வண்ணம் உள்ளன. கொல்கத்தாவிற்கு எதிரான போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் அணி மெதுவாகப் பந்துவீசியதால் கேப்டன் கோலிக்கு 24 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. இந்நிலையில் அவர் இணை உரிமையாளராக உள்ள ஐ.எஸ்.எல் கால்பந்து அணியான கோவா அணிக்கு தற்போது 11 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பெரிதும…
-
- 0 replies
- 488 views
-
-
பாகிஸ்தான் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக மிக்கி ஆதர் நியமனம் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக 48 வயதான தென்னாபிரிக்காவின் மிக்கி ஆதர் நியமிக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. மிக்கி ஆதர் 2005-2010 வரை தென்னாபிரிக்க அணியின் பயிற்சியாளராகவும் 2011 முதல் 2013 வரை அவுஸ்திரேலிய அணியின் பயிற்சியாளராகவும் கடமையாற்றியுள்ளார். பாகிஸ்தான் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக டீன் ஜோன்ஸ், பீட்டர் மூர்ஸ், என ஆரம்பத்தில் செய்திகள் வெளிவந்தாலும் பின்னர் ஸ்டுவார்ட் லோ அந்த பதவியில் அமர்த்தப்படப் போகிறார் என்று செய்திகள் வெளியாகியிருந்த நிலையில் இறுதியில் மிக்கி ஆர்தர் பாகிஸ்தான் அணியின் தலைமை பயி…
-
- 0 replies
- 370 views
-