Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. கௌஷால் சில்வாவின் தலையில் பந்து தாக்கியது! பள்ளேகலயிலிருந்து வான் வழியாக கொழும்புக்கு அழைத்துவரப்பட்டார் 2016-04-24 19:30:23 இலங்கைக் கிரிக்கெட் அணியின் முன்னிலை வீரர்களில் ஒருவரான கௌஷால் சில்வாவின் தலையில் பந்தொன்று தாக்கியமையால் அவர் பள்ளேகலயிலிருந்து ஹெலிகொப்டர் மூலம் கொழும்புக்கு அழைத்து வரப்பட்டார். பள்ளேகலயில் இன்று பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது கௌஷால் சில்வாவின் தலையில் பந்து தாக்கியதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது. கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் அவர் அனுமதிக்கப்பட்டார். எனினும் அவர் ஆபத்தான நிலையில் இல்லையென்பது ஆரம்ப சோதனைகள் மூலம் தெரியவந்ததாகவும் ஸ்ரீலங்கா கி…

  2. ஒலிம்பிக் சுடர் எப்படி ஏற்றப்படுகிறது? உலகின் மிகப்பெரும் விளையாட்டுத் திருவிழா எனக் கருதப்படும் ஒலிம்பிக் போட்டியின் மிக முக்கியமான ஒரு அம்சம், போட்டி காலம் முழுவதும் எரியும் ஒலிம்பிக் ஜோதி. கிரேக்கத்தில் பாரம்பரிய முறையில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படும் அந்தச் சுடர் ஒவ்வொரு ஒலிம்பிக் போட்டியின் போதும் பழமையான பாரம்பரிய முறையில் கிரேக்கத்தில் ஏற்றப்படும். ஒலிம்பிக் சுடர் விளையாட்டு வீரர்களால் புனிதமானதாகக் கருதப்படுகிறது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் பண்டைகால ஒலிம்பிக் போட்டிகளின்போது அச்சுடர் எப்படி ஏற்றப்பட்டதோ அதே முறையே இப்போதும் பின்பற்றப்படுகிறது. பாரம்பரிய முறையில் ஏற்றப்பட…

  3. கிரிக்கெட் துறை வளர்ச்சி சார்ந்த கேள்விகளுக்கு ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் பதில் அளிக்க வேண்டும் – குமார் சங்கக்கார 2016-04-25 08:30:33 இலங்கை கிரிக்கெட் துறை வளர்ச்சி சார்ந்த விட­யங்­களில் எழும் பல கேள்­வி­க­ளுக்கு ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறு­வனம் பதில் அளித்­தாக வேண்டும் என இலங்கை கிரிக் கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்­கக்­கார தெரிவித்­துள்ளார். இங்­கி­லாந்தில் முதல்­தர பிராந்­திய கிரிக்கெட் போட்­டி­களில் சரே அணிக்­காக விளை­யா­டி­வரும் குமார் சங்­கக்­கார, பி.பி.சி உலக சேவையின் “ஸ்டம்ப்ட்” சேவையில் நேற்­று­முன்­தினம் நடை­பெற்ற நேர்­கா­ண­லி­லேயே மேற்­கண்­ட­வாறு கூறி­யுள்ளார். …

  4. தென்கொரியாவில் மே மாதம் நடைபெறஉள்ள 19வயது கால்பந்தாட்ட போட்டிக்கு இலங்கை அணிசார்பாக தெரிவு செய்யப்பட்ட யாழ்மத்தியகல்லூரி வீரர்கள் விதுசன்,சயந்தன் முகநூல் யாழ் மத்திய கல்லூரி

  5. F1 காரோட்டும் தகுதி பெண்­க­ளுக்கும் உண்டு போர்­மி­யூலா 1 காரோட்டப் போட்­டி­களில் பெண்கள் பங்­கு­பற்­று­வதை போர்­மி­யூலா 1 பொறுப்­பாளர் பேர்னி எக்­லெஸ்டோன் எதிர்க்­க­வில்லை என சுஸி வுல்வ் தெரி­வித்­துள்ளார். எனினும் போர்­மி­யூலா 1 காரோட்டப் போட்­டி­களில் பெண்கள் பங்­கு­பற்­று­வ­தற்கு தகுதி இல்லை என்ற அவ­ரது கூற்றை ஏற்க முடி­யாது என முன்னாள் வில்­லியம்ஸ் பரீட்­சார்த்த சாரதி சுஸி வுல்வ் தெரி­வித்தார். போர்­மி­யூலா 1 போட்­டி­களில் பங்­கு­பற்றும் அள­வுக்கு பெண்கள் தகு­தி­யா­ன­வர்கள் என நினைக்க முடி­யாது எனவும் எக்­லெஸ்டோன் தெரி­வித்­தி­ருந்தார். ஆனால், ‘‘போர்­மி­யூலா 1 காரோட்டப் போட்­ட…

  6. வெளிநாட்டில் 10-வது ஐபிஎல் தொடர் தண்ணீர் தட்டுப்பாடு பிரச்சினை காரணமாக மராட்டிய மாநிலத்தில் நடைபெற இருந்த ஐபிஎல் தொடரின் 12 ஆட்டங்களை வேறு மாநிலத்துக்கு மாற்ற மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. லோதா கமிட்டியின் பரிந்துரை களை அமல்படுத்துவதில் ஏற்பட் டுள்ள சிக்கலை எதிர்கொள்ள இருக் கும் இந்திய கிரிக்கெட் வாரியத் துக்கு ஐபிஎல் போட்டியை இட மாற்றம் செய்வதில் சிரமங்கள் எழுந் துள்ளது. இந்நிலையில் அடுத்த ஆண்டு நடைபெறும் 10-வது சீசன் ஐபிஎல் போட்டிகளை வெளி நாடுகளில் நடத்த இந்திய கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாக இந்திய கிரிக் கெட் வாரிய செயலாளர் அனுராக் தாகூர் கூறும்போது, "ஐபிஎல் தொடர் பான பொது நல வழக்குகளால் பிசிசிஐ பெரிய அளவிலான …

  7. பாகிஸ்தான் அணியின் ஒற்றுமையைக் குலைத்தவர் வக்கார் யூனிஸ்: அப்துல் ரசாக் கடும் சாடல் பாகிஸ்தான் ஆல்ரவுண்டர் அப்துல் ரசாக். | படம்: ஏ.எஃப்.பி. அதிரடி ஆல்ரவுண்டர் அப்துல் ரசாக், பாகிஸ்தான் அணியின் தற்போதைய மோசமான நிலைக்கு பயிற்சியாளர் வக்கார் யூனிஸே காரணம் என்று கடுமையாக சாடியுள்ளார். வக்கார் யூனிஸ் பிற வீரர்கள், நிர்வாகிகளைக் குறைகூறுவதை விடுத்து தன் பக்கம் உள்ள கோளாறுகளை சரி செய்து கொள்ள வேண்டும் என்று அப்துல் ரசாக் தெரிவித்துள்ளார். “இதில் ஒன்றும் ரகசியம் இல்லை, நானே பார்த்திருக்கிறேன், மூத்த வீரர்களுக்கு வக்கார் மதிப்பளிக்க மாட்டார், வீரர்கள் அனைவரையும் சமமாக நடத்த மாட்டார். அவர்கள் சிறப்பாக ஆட அவர்களுக்கு உத்தரவாதங்களை வழங…

  8. கிரிக்கெட் வீரர் பயிற்சியின் போது பலி இளம் தென்னாபிரிக்க கிரிக்கெட் வீரரொருவர் பயிற்சியின்போது கீழே விழுந்து உயிரிழந்த துன்பியல் சம்பவமொன்று கிரிக்கெட் உலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. லுகன்யா டஸ்கி என்ற 22 வயது நிரம்பிய இளம் வீரரே இதயக்கோளாரறு காரணமாக திடீரென மயங்கி கீழே வீழ்ந்து உயிரிழந்தவராவார். இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது, தென்னாபிரிக்க அணியின் முன்னாள் வீரர் பின்கோ நகம் கேப் டவுனில் கிரிக்கட் அக்கடமியொன்றை நடத்தி வருகிறார். குறித்த கிரிக்கெட் அக்கடமியில் உடற்தகுதி தேர்வுகள் இடம்பெற்று வந்தன. வழமையாக குறித்த தினம் அக்கடமியில் பயிற்சி இடம்பெற்றவேளையில் லுகான்யா ட…

  9. மூவகை தொடர்களுக்கு பொது புள்ளி முறைமை; சர்வதேச கிரிக்கெட் பேரவை ஆராயவுள்ளது சர்­வ­தேச கிரிக்கெட் தொடர்­களில் மூவகை கிரிக்கெட் தொடர்­க­ளுக்கு போது­மான புள்ளி முறை­மையை அறி­மு­கப்­ப­டுத்­து­வது குறித்து துபாயில் கூடும் சர்­வ­தேச கிரிக்கெட் பேரவை ஆரா­ய­வுள்­ளது. இங்­கி­லாந்­துக்கும் அவுஸ்­தி­ரே­லி­யா­வுக்கும் இடையில் 2013இல் நடை­பெற்ற ஆஷஸ் தொட­ரின்­போது வழங்­கப்­பட்ட புள்ளி முறை­மையைப் பின்­பற்­றியே ஆட­வ­ருக்­கான இரு­த­ரப்பு கிரிக்கெட் தொடர்­களில் புள்­ளிகள் வழங்­குவது குறித்து ஆரா­யப்­ப­ட­வுள்­ளது. இரு தரப்பு கிரிக்கெட் தொடர்­களில் இடம்­பெறும் சகல வகை­யான கிரிக்கெட் போட்­டி­க­ளுக்கும் புள்­ளி­களை வழங்கி ஒட்…

  10. யாழ்ப்பாணத்தில் முதல் தடவையாக சிறுவர் மற்றும் பயிற்றுநர்களுக்கான பட்மிண்டன் விசேட பயிற்சி முகாமொன்று நடத்தப்பட்டது. இதற்காக 23 வருடங்களின் பின்னர் இலங்கை பட்மிண்டன் சம்மேளன உயர் அதிகாரிகள் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்திருந்தனர். சர்வதேச பட்மிண்டன் சம்மேளனத்தின் விதிமுறைகளுக்கு அமைவாக இலங்கை பட்மிண்டன் சம்மேளனம், யாழ். மாவட்ட பட்மிண்டன் சங்கத்துடன் இணைந்து இந்தத் திட்டத்தை முன்னெடுத்தது. சென். ஜோன்ஸ் கல்லூரியின் உள்ளக அரங்கில் நேற்று முன்தினம் ஆரம்பிக்கப்பட்ட இந்தப் பயிற்சி முகாமில் 10 முதல் 14 வயதுக்குட்பட்ட சுமார் 108 வீர, வீராங்கனைகள் கலந்துகொண்டனர். அவர்களுக்கு சட்டல் டைம் திட்டத்தின் பிரகாரம் பட்மிண்டன் விளையாட்டின் அடிப்படை நுணுக்கங்கள் கற்றுக்கொ…

  11. பயேர்ன் மியூனிச்சுடன் மேலும் 5 வருடங்களுக்கு ஜேர்மன் கோல்காப்பாளர் நோயர் ஒப்பந்தம் 2016-04-21 17:49:55 ஜேர்­ம­னியின் பிர­பல கால்­பந்­தாட்டக் கழ­கங்­களில் ஒன்­றான பயேர்ன் மியூனிச் கழ­கத்­துடன் மேலும் ஐந்து வரு­டங்­க­ளுக்­கான புதிய ஒப்­பந்தம் ஒன்றில் மெனுவல் நோயர் கைச்­சாத்­திட்­டுள்ளார். பிரே­ஸிலில் 2014இல் நடை­பெற்ற உலகக் கிண்ண கால்­பந்­தாட்டப் போட்­டியில் சம்­பி­ய­னான ஜேர்மன் அணியின் கோல் காப்­பா­ள­ராக மெனுவல் நோயர் விளை­யா­டி­யி­ருந்தார். இந்தப் புதிய ஒப்­பந்­தப்­படி 2021ஆம் ஆண்­டு­வரை பயேர்ன் மியூனிச் அணிக்­காக 30 வய­து­டைய நோயர் விளை­யா­ட­வுள்ளார். …

  12. மேற்கிந்தியக் கிரிக்கெட் சபையை கலைக்குமாறு முன்னாள் கிரிக்கெட் மேதைகள் கோரிக்கை 2016-04-21 11:06:27 கரி­பியன் சமூ­கத்தின் கிரிக்கெட் ஆய்வுக் குழுவின் சிபா­ரி­சுக்கு அமைய மேற்­கிந்­தியத் தீவுகள் கிரிக்கெட் சபை கலைக்­கப்­ப­ட­வேண்டும் என அந் நாட்டின் கிரிக்கெட் மேதைகள் பலர் கோரிக்கை விடுத்­துள்­ளனர். இக் கோரிக்­கையை விடுத்­துள்ள விற்­பன்­னர்­களில் சேர் கார்பீல்ட் சோபர்ஸ், சேர் விவியன் ரிச்சர்ட்ஸ், வெஸ்லி ஹோல், அண்டி ரொபர்ட்ஸ் ஆகி­யோரும் அடங்­கு­கின்­றனர். எவ்­வித பய­னு­மற்ற கிரிக்கெட் சபையை கலைத்­து­விட்டு கட்­ட­மைப்பில் சீர்­தி­ருத்­தங்­களை ஏற்­ப­டுத்தும் பொருட்டு இடைக்­கால நிரு­வாக சபை …

  13. பகல் – இரவு டெஸ்ட் போட்டியில் விளையாட தென் ஆபிரிக்கா தயக்கம் 2016-04-21 11:16:56 அவுஸ்­தி­ரே­லி­யா­வுக்கும் தென் ஆபி­ரிக்­கா­வுக்கும் இடையில் அடிலெய்ட் விளை­யாட்­ட­ரங்கில் நடத்த திட்­ட­மி­டப்­பட்­டுள்ள பக­லி­ரவு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடை­பெ­று­வது இன்னும் உறு­தி­ செய்யப்பட­வில்லை. இளஞ்சிவப்பு நிற பந்தில் விளை­யா­டு­வ­தற்கு போதிய அனு­ப­வ­மில்லை என தென் ஆபி­ரிக்க வீரர்கள் தெரி­விப்­ப­துடன், அவ்­வாறு விளை­யா­டினால் அது தங்­க­ளது அணிக்கு பாதிப்­பாக அமையும் எனவும் தெரி­வித்­துள்­ளனர். எனினும், அடி­லெய்டில் பக­லி­ரவு டெஸ்ட் கிரிக்கெட் போட்­டியில் தென் ஆபி­ரிக்­காவை விளை­யாட வைப்­பதில் கிரிக்கெட் ஒஸ்ட்­ரே­லியா …

  14. வர்­ண­னை­யா­ள­ராகிறார் மஹேல இலங்கை அணியின் முன்னாள் நட்­சத்­திர துடுப்­பாட்ட வீர­ரான மஹேல ஜய­வர்­தன, வர்­ண­னை­யா­ள­ராக செயற்­ப­ட­வுள்ளார். இலங்கை அணி அடுத்த மாதம் இங்­கி­லாந்­திற்கு சுற்­றுப்­ப­யணம் மேற்­கொண்டு விளை­யா­ட­வுள்­ளது. இந்தத் தொடரில் ஸ்கை ஸ்போர்ட்ஸின் வர்­ண­னை­யா­ள­ராக மஹேல ஜய­வர்­தன செயற்­ப­ட­வுள்ளார் என்று தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. ஏற்­க­னவே வர்­ண­னை­யா­ளர்கள் குழுவில் பணி­யாற்றும் இங்­கி­லாந்து அணியின் முன்னாள் தலை­வர்கள் மற்றும் புகழ்­பெற்ற கிரிக்கெட் வர்­ண­னை­யா­ளர்­க­ளோடு மஹே­லவும் இணை­ய­வுள்ளார். தற்­போது ஸ்கை ஸ்போர்ட்ஸ் வர்­ண­னை­யா­ளர்கள் குழுவில் முன்னாள் இங்­கி­லாந்து அணித் தலை­வர்­க­ளான இயன் பொத்தம், டே…

  15. ரியோ ஒலிம்பிக் தீபச் சுடர் ஓட்டம் வியாழனன்று ஆரம்பம் ரியோ டி ஜெனெய்­ரோவில் 2016 ஆகஸ்ட் 5ஆம் திகதி முதல் 21ஆம் திக­தி­வரை நடை­பெ­ற­வுள்ள 31ஆவது ஒலிம்பிக் விளை­யாட்டு விழா­வுக்­கான தீபச் சுடர், ஒலிம்­பிக்கின் பிறப்­பி­ட­மான கிரேக்­கத்தின் ஒலிம்­பி­யாவில் அமைந்­துள்ள ஹேரா பெண் கட­வு­ளரின் கோவில் முன்­றலில் வியாழனன்று வைப­வ­ரீ­தி­யாக ஏற்­றப்­ப­ட­வுள்­ளது. பண்­டைய ஒலிம்பிக் மற்றும் நவீன ஒலிம்பிக் ஆகி­ய­வற்றின் சம்­பி­ரா­த­யங்­களை ஒன்­றி­ணைத்து நடத்­தப்­படும் வைப­வத்­தின்­போது ஹேரா என்ற பெண் கட­வு­ளரின் பாத்­தி­ரத்தை ஏற்­க­வுள்ள கிரேக்க நடிகை கெத்­த­ரினா லேஹூ தீபச் சுடரை ஏற்­ற­வுள்ளார். இந்தச் சுடர் சூரிய கதிர்­க­ளி­லி­ருந்து பர­வ­ளைய ஆடியைக் கொண்டு இயற்­கை­யாக பற…

  16. <p>Your browser does not support iframes.</p> 500-வது கோல் அடித்து சாதனை படைத்த வீரர் ஸ்பெயின் கிளப் போட்டியான லாலிகா தொடரில் நேற்று முன்தினம் இரவு நடந்த லீக் ஆட்டத்தில் பார்சிலோனா அணி 1-2 என்ற கோல் கணக்கில் வலேன்சியா அணியிடம் அதிர்ச்சி தோல்வி கண்டது. முடிவு ஏமாற்றம் அளித்தாலும், தனிப்பட்ட முறையில் இந்த ஆட்டம் மெஸ்சிக்கு தனி அடையாளத்தை கொடுத்துள்ளது. இந்த ஆட்டத்தில் மெஸ்சி 63-வது நிமிடத்தில் கோல் அடித்தார். இதன் மூலம் சர்வதேச மற்றும் கிளப் போட்டிகளில் 500 கோல்களை அவர் எட்டியிருக்கிறார். 28 வயதான மெஸ்சி, பார்சிலோனா அணிக்காக 450 கோல்களும், அர்ஜென்டினாவுக்காக 50 கோல்களும் அடித்திருக்கிறார். மெஸ்சி இடது காலால் 406 கோல்களும்,…

  17. மலிங்கவை இலங்கை வருமாறு அழைப்பு இலங்கை அணி வீரர் லசித் மாலிங்கவை இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தினால் நியமிக்கப்பட்ட விஷேட மருத்துவக் குழுவின் முன் எதிர்வரும் புதன்கிழமை ஆஜராகுமாறு தெரியப்படுத்தப்பட்டுள்ளதாக, இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார். http://www.virakesari.lk/article/5271

  18. ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக்ஸில் இந்தியப் பெண் இந்தியாவின் முன்னணி ஜிம்னாஸ்டிக் வீராங்கனை தீபா கர்மாகர், ரியோ டி ஜெனீரோ ஒலிம்பிக் போட்டியில் பங்குபெற தகுதி பெற்றுள்ளார். ரியோ போட்டிக்கு தகுதிபெற்றுள்ள தீபா கர்மாகர் ஓலிம்பிக் ஒன்றில் ஜிம்னாஸ்டிக் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்ற முதல் இந்திய பெண் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். இவர் கிளாஸ்கோவில் கடந்த 2014ல் நடைபெற்ற காமன்வெல்த் போட்டிகளிலும் அவர் பதக்கம் ஒன்றை வென்றிருந்தார். ரியோ ஒலிம்பிக் போட்டிக்கு அவர் தகுதி பெற்றுள்ள செய்தி இந்தியாவில் சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்படுகிறது. இந்திய அரசாங்கம் ஜிம்னாஸ்டிக் விளையாட்டுக்கு குறிப்பிடத்தக்க அளவு நிதி வழங்காத சூழலில…

  19. வருடத்தின் அதி சிறந்த வீரருக்கான லோரியஸ் விருது ஜோகோவிச்சுக்கு; சிறந்த வீராங்கனையாக செரீனா வில்லியம்ஸ் தெரிவு சேர்பியாவின் டென்னிஸ் சம்பியன் நொவாக் ஜோகோவிச் வருடத்தின் அதி சிறந்த விளையாட்டு வீரருக்கான லோரியஸ் விருதை வென்றெடுத்துள்ளார். இதேவேளை, வருடத்தின் அதி சிறந்த வீராங்கனைக் கான லோரியஸ் விருதை ஐக்கிய அமெரிக்காவின் டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் வென்றெடுத்துள்ளார். இவ் வருடத்திற்கான லோரியஸ் விருது விழா ஜேர்மன் நாட்டின் தலைநகரான பேர்லினில் அமைந்துள்ள பலாய்ஸ் அம் ஃபன்க்டேர்ன் கோபுர மண்டபத்தில் திங்களன்று நடைபெற்றது. செரீனா வில்லியம்ஸ் வென்றெடுத்த நான்காவது லோரியஸ் விருது இது…

  20. மகளிர் கியா சுப்பர் லீக் இருபது 20 கிரிக்கெட் இங்­கி­லாந்தில் நடை­பெ­ற­வுள்ள அங்­கு­ரார்ப்­பண மகளிர் சுப்பர் லீக் இரு­பது 20 கிரிக்கெட் போட்­டி­களில் 18 வெளி­நாட்டு வீராங்­க­னைகள் விளை­யா­ட­வுள்­ளனர். அவர்­களில் 17 பேர் பெய­ரிடப்­பட்­டுள்­ள­துடன் ஒருவர் மாத்­திரம் இன் னும் அறி­விக்­கப்­ப­ட­வில்லை. அவுஸ்­தி­ரே­லிய அணித் தலைவி மெக்ல னிங், நியூ­ஸி­லாந்து அணித் தலைவி சுசி பேட்ஸ், மேற்­கிந்­தியத் தீவுகள் அணித் தலைவி ஸ்டெவானி டெய்லர். அவ­ரது சக வீராங்­கனை டியேண்ட்ரா டொட் டின் உடப்ட 18 வெளி­நாட்டு வீராங்­க­னைகள் மகளிர் சுப்பர் லீக் இரு­பது 20 கிரிக்கெட் போட்­டி­களில் விளை­யா­ட­வுள்­ள­தாக இங்­கி­லாந்து கிரிக்கெட்…

  21. பார்சிலோனா: ஜாம்பவான்களின் அணிக்கு சரிவு ஏன்? ஏதாவது ஒரு ஃபுட்பால் டீம் பேரு சொல்லுங்க – பார்சிலோனா. ஒரு ஃபுட்பால் பிளேயர் பேரு சொல்லு – மெஸ்ஸி. இந்தக் கேள்விகளுக்கு பெரும்பாலானோர் சொல்லும் பதில் இதுவாகத்தான் இருக்கும். காரணம் இவர்கள் ஐரோப்பாவின் நடப்பு சாம்பியன்கள் என்பதால் மட்டுமல்ல, கடந்த 10 ஆண்டுகளில் 22 கோப்பைகள் வென்று தன்னிகரற்ற அணியாக விளங்குவதால்தான். மெஸ்ஸி, இப்ராஹிமோவிக், தியரி ஹென்றி, நெய்மார், சுவாரஸ், சேவி, இனியஸ்டா, புயோல், வில்லா என உலகின் மிகப்பெரிய வீரர்களெல்லாம் இவ்வணிக்காக விளையாடியுள்ளனர். ஸ்பானிஷ் லா லிகா, கோபா டெல் ரே, ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக், ஐரோப்பிய சூப்பர் லீக், கிளப் உலகக்கோப்பை என அனைத்தும் தற்போது அவர…

  22. இதுதான் ஐ.பி.எல் லின் சிறந்த டீம்... எப்படி? முன்னெல்லாம் இந்திய அணியின் பயிற்சியாளர் தவிர்த்து, வேறு அணிகளின் பயிற்சியாளர்கள் யாரென நமக்குத் தெரியாது. காரணம், அதிகம் அறியப்படாத வீரர்களே பெரும்பாலும் பயிற்சியாளர்களாக உருவெடுத்தனர். உதாரணமாக டன்கன் பிளட்சர் போன்றோரைச் சொல்லலாம். ஆனால் இப்போதெல்லாம் முன்னணி வீரர்கள் அனைவருமே கோச்சிங் செய்யத் தொடங்கிவிட்டனர். ஆண்டி பிளவர், கிறிஸ்டன் எனத் தொடங்கி ஜெயவர்தனே வரை அந்தப் பட்டியல் நீண்டு கொண்டே இருக்கிறது. சர்வதேச அரங்கே இப்படியென்றால் ஐ.பி.எல் நிலைமையை சொல்லவே தேவையில்லை. முன்னாள் வீரர்கள், உச்ச நட்சத்திரங்கள் எல்லாம் பயிற்சியாளர் பொறுப்பில் அமர்ந்திருக்கின்றனர். சச்சின், டிராவிட், பிளமிங் என பயிற்சி…

  23. லசித் மலிங்க எனும் 'குழப்பவாதி' Comments லசித் மலிங்க எனும் பெயர், இலங்கை இரசிகர்களுக்கு இரண்டுவிதமான உணர்வுகளைத் தரக்கூடியது. ஒன்று, யோக்கர் பந்துகளை அநாயசமாக வீசி, விக்கெட்டுகளைக் கைப்பற்றி, வெற்றிகளைப் பெற்றுத்தரும் நாயகன். இரண்டாவது, நாட்டின்மேல் பற்றுக் கொண்டவரல்லர் அல்லது ஐ.பி.எல் போட்டிகளை அதிகமாக விரும்பும் ஒருவர் என, குறிப்பிட்ட ஒரு பிரிவினரால் சித்தரிக்கப்படும் ஒருவர். இவை இரண்டுமே சிலவேளைகளில் ஒன்றாக இருக்கலாம், சில வேளைகளில், ஏதாவதொன்று தான் சரியாக இருக்க முடியும். ஆனால், இவை இரண்டுக்குமிடையில் ஏதாவதொரு சம்பந்தமுள்ளது என்பது தான் உண்மை. அண்மையில் எழுந்த சர்ச்சை, முழங்கால் உபாதைக்குள்ளான லசித் மலிங்க, ஆசியக் கி…

    • 1 reply
    • 549 views
  24. பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தெரிவுக் குழுத் தலை­வ­ராக இன்ஸமாம் உல் ஹக் நியமனம் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தெரிவுக் குழுத் தலை­வ­ராக முன்னாள் கிரிக்கெட் அணித் தலைவர் இன்ஸமாம் உல் ஹக் நிய­மிக்­கப்­பட்டுள்ளார்.. இதன் கார­ண­மாக ஆப்­கா­னிஸ்தான் அணியின் தலைமைப் பயிற்­றுநர் பத­வி­யி­லி­ருந்து வில­கிக்­கொள்­வ­தாக இன்­ஸமாம் அறி­வித்­துள்ளார். இந்­தி­யாவில் அண்­மையில் நடை­பெற்ற உலக இரு­பது 20 கிரிக்கெட் போட்­டி­களின் சுப்பர் 10 சுற்­றுக்கு ஆப்­கா­னிஸ்­தானை இன்­ஸமாம் முன்­னேற்­றி­யி­ருந்தார். அப் போட்­டியில் சம்­பி­ய­னான மேற்­கிந்­தியத் தீவு­களை கடைசி லீக் போட்­டியில் ஆப்­கா­னிஸ்தான் வெற்­றி­கொண்­டி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது. இவ் வருட இறு…

  25. ஷிகர் தவானை எச்சரிக்கிறாரா கெளதம் காம்பீர்..? டெஸ்ட் போட்டிகளில் சீராக ஆடுவதில்லை. ஒருநாள் போட்டிகளிலும் அதே நிலை. டி20 களில் சொல்லவே வேண்டாம் உச்சகட்ட சொதப்பல். நாம் பேசிக்கொண்டிருப்பது இந்திய அணியின் துவக்க வீரர் தவான் பற்றி தான். 2013ம் ஆண்டு அறிமுகமான முதல் போட்டியிலேயே ஆஸ்திரேலியாவை அலற விட்டு அசத்தலாக கிரிக்கெட் பயணத்தைத் தொடங்கிய தவான், சாம்பியன்ஸ் டிராபி தொடரில் தொடர் நாயகன் விருது வாங்கி நம்பிக்கை தந்தார். போகப்போக, கழுதை தேய்ந்து கட்டெரும்பான கதையாக தொடர்ந்து மோசமான ஆட்டத்தையே வெளிப்படுத்தி வருகிறார். டி20 உலகக்கோப்பையில் 4 போட்டிகளில் 41 ரன்கள் மட்டுமே எடுக்க அரையிறுதிப் போட்டியில் அவரை வெளியில் அமர்த்தினார் தோனி. சரி கூடிய விரைவில் தவானிற்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.