Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட்? ஒலிம்பிக் அல்­லது பொது­ந­ல­வாய விளை­யாட்டு விழாக்­களில் கிரிக்கெட் போட்­டி­களை இணைப்­பதா? இல்­லையா? என்­பது குறித்­தான முகா­மைத்­துவக் குழுவின் பரிந்­த­ரை­களை சர்­வ­தேச கிரிக்கட் பேரவை திங்­க­ளன்று ஆராய்ந்­தது. இதன் போது இந்த விடயம் குறித்து இறுதித் தீர்­மானம் எடுப்­ப­தற்கு முன்னர், உறுப்பு நாடு­களின் பிர­தி­நி­திகள், சர்­வ­தேச ஒலிம்பிக் குழு­வினர், பொது­ந­ல­வாய விளை­யாட்­டுத்­துறை சமமேளன உறுப்­பி­னர்கள் ஆகி­யோ­ருடன் கலந்­து­ரை­யாட வேண்டும் எனவும் பேர­வையின் நிரு­வாக சபை தீர்­மா­னித்­தது. சீனாவில் கிரிக்கெட் விளை­யாட்­டுத்­துறை வியா­பித்து வரு­வது தொடர்­பான அறிக்கை ஒன்று …

  2. சொந்த நாட்டில் கிரிக்கெட் போட்டிகளை நடத்த தென் ஆபிரிக்காவுக்கு அந்நாட்டு அரசு தடை! 2016-04-27 10:55:28 இன ஒடுக்கல் கார­ண­மாக பல்­லாண்­டு­க­ளுக்கு முன்னர் 21 வருடத் தடைக்கு உட்­பட்­டி­ருந்த தென் ஆபி­ரிக்­கா­வுக்கு இப்­போது மீண்டும் ஒரு சிக்கல் உரு­வா­கி­யுள்­ளது. கிரிக்கெட் நிரு­வா­கத்தில் பின்­பற்­ற­வேண்­டிய வழி­மு­றை­க­ளுக்கு அமைய மாற்­றங்­களை செய்யத் தவ­றி­யதால் கிரிக்கெட் தென் ஆபி­ரிக்­கா­வுக்கு (தென் ஆபி­ரிக்க கிரிக்கெட் நிறு­வனம்) சொந்த மண்ணில் சர்­வ­தேச கிரிக்கெட் போட்­டி­களை நடத்­து­வ­தற்கு அந் நாட்டு அரசு தடை விதித்­துள்­ளது. உயர்­மட்டக் குழு­வி­னரால் அமைச்சர் மட்ட சுயா­தீனக் …

  3. கையில் 'பணமின்றி' வீடு திரும்ப தவித்த தருணம்: சச்சின் ருசிகரம் டிஜிபேங்க் அறிமுக நிகழ்ச்சியில் சச்சின் டெண்டுல்கர். | படம்: பிடிஐ. கையிலிருந்த காசையெல்லாம் செலவு செய்து விட்டு ரயில் நிலையத்திலிருந்து வீட்டுக்கு நடந்து சென்றிருக்கிறேன் என்று சச்சின் கடந்த காலத்தை நினைவுகூர்ந்தார். பணக்கார விளையாட்டு வீரர்களில் ஒருவரான சச்சின் டெண்டுல்கர், ஒரு காலத்தில் ரயில் நிலையத்திலிருந்த வீட்டுக்கு வாகனத்தில் செல்ல காசில்லாமல் இருந்ததுண்டு என்று கடந்த காலத்தை நினைவுகூர்ந்தார். அதாவது அன்று, இப்போது போல் செல்போன் வசதியிருந்திருந்தால் சவுகரியமாக இருந்திருக்கும் என்பதற்காக இதனைக் குறிப்பிட்டார் சச்சின் டெண்டுல்கர். மும்பையில் ‘டிஜிபேங்க…

  4. விவ் ரிச்சர்ட்சை ஒத்திருக்கிறது விராட் கோலியின் மனநிலை: ரவி சாஸ்திரி விராட் கோலி. | படம்: ஜி.பி.சம்பத் குமார். இந்திய அணியின் இயக்குநரான ரவிசாஸ்திரி தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்ட போது விராட் கோலியின் மனநிலையை விவ் ரிச்சர்ட்ஸின் மனநிலைக்குச் சமமானது என்று புகழாரம் சூட்டினார். விஸ்டன் இந்தியாவுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: என்னுடைய ஆளுமை எப்படியெனில் எந்த ஒரு சவாலையும் நான் விட்டு விட மாட்டேன். நான் அனைத்துத் தடைகளையும் கடந்து நேராக பணிக்கு வருபவன். அதாவது தகவல் தொடர்பு மற்றும் நம்பிக்கை என்ற புள்ளிக்கு நேராக வருவதுதான் என்னுடைய அணுகுமுறை. இதுதான் எனது முதல் பதிவாக இருக்க வேண்டும் என்று நினைத்தேன். இந்திய அணி …

  5. விராட் கோலி, டிவில்லியர்ஸை யார் என்று கேட்ட ஆஸ்திரேலிய லெக் ஸ்பின்னர் ஆடம் ஸம்பா. | படம்: அகிலேஷ் குமார். விராட் கோலி மற்றும் டிவில்லியர்ஸை ‘யார் இவர்கள்’ என்று ஆஸ்திரேலிய ஸ்பின்னர் ஆடம் ஸம்பா கேட்டிருப்பது சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு பெங்களூரு அணியும், புனே அணியும் ஐபிஎல் கிரிக்கெட்டில் மோதின. இதில் பெங்களூரு அணி வெற்றி பெற்றது, இதனையடுத்து பெங்களூரு அணியின் ஆஸ்திரேலிய பவுலர் கேன் ரிச்சர்ட்ஸன் புனே அணியின் தன் சக ஆஸி.வீரரான லெக் ஸ்பின்னர் ஆடம் ஸம்பாவுக்கு ட்வீட் செய்யும் போது, விராட் கோலி, டிவில்லியர்ஸ் ஆகியோர் படத்தை வெளியிட்டு அதற்குக் கீழே, “ஒவ்வொரு போட்டியிலும் இவர்கள் இருவரும் பேட் செய்வதைப் பார்…

  6. அபாரமாக வென்றது பார்சிலோனா அணி லா லிகா கால்பந்து போட்டிகள் ஸ்பெயினில் நடந்து வருகிறது. இதில் பார்சிலோனா அணி 6-0 என்ற கோல் கணக்கில் ஸ்போர்டிங் கிஜோன் அணியை வீழ்த்தியுள்ளது. நேற்று முன்தினம் இரவு நடந்த இந்த லீக் போட்டியில் பார்சிலோனா - ஸ்போர்டிங் கிஜோன் அணிகள் மோதின. இதில் பார்சிலோனா அணியின் நட்சத்திர வீரர் லயனல் மெஸ்ஸி 12வது நிமிடத்தில் கோல் அடித்தார். முதல் பாதி ஆட்ட முடிவில் பார்சிலோனா 1-0 என முன்னிலை வகித்தது. இரண்டாவது பாதியில் பார்சிலோனா அணியின் ஆதிக்கம் அதிகமாக காணப்பட்டது. அந்த அணியின் லூயிஸ் சுவாரஸ் (63, 74, 77, 88வது நிமிடம்) 4 கோல் அடித்து அசத்தினார். நெய்மர் தன் பங்கிற்கு (85வது நிமிடம்) ஒரு கோல் அட…

  7. மேற்கிந்திய தீவுகள் அணி வீரர்களுக்கு ஐ.சீ.சீ எச்சரிக்கை குளோபல் தமிழ்ச் செய்தியாளர் மேற்கிந்திய தீவுகள் அணி வீரர்களுக்கு சர்வதேச கிரிக்கட் பேரவை எச்சரிக்கை விடுத்துள்ளது. அண்மையில் நடைபெற்று முடிந்த இருபதுக்கு20 உலகக் கிண்ண கிரிக்கட் போட்டித் தொடரின் இறுதிப் போட்டியின் பின்னர், வீரர்கள் நடந்து கொண்ட விதம் அதிருப்தி அளிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகக் கிண்ண இறுதிப் போட்டியொன்றின் பின்னர் அணியின் முக்கிய வீரர்கள் வெளியிட்ட கருத்துக்கள் , நடந்து கொண்ட விதம் ஏற்புடையதல்ல என தெரிவித்துள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை டுபாயில் நடைபெற்ற சர்வதேச கிரிக்கட் பேரவையின் கூட்டத்தில் இந்த விடயங்கள் பற்றி பேசப்பட்டுள்ளத…

  8. சாதனையை சமன் செய்தார் நடால் நடால். | படம்: ஏ.எஃப்.பி. பார்சிலோனா ஓபன் டென்னிஸ் போட்டியில் ஸ்பெயினின் ரபேல் நடால் பட்டம் வென்றார். இறுதிப்போட்டியில் அவர் நடப்பு சாம்பியனான ஜப்பானின் நிஷிகோரியை 6-4, 7-5 என்ற நேர்செட்டில் வீழ்த்தினார். வெற்றி குறித்து நடால் கூறும்போது, "இந்த ஆட்டத்தில் நான் சிறப்பாக சர்வீஸ் செய்தேன். இது தான் முக்கியமாக அமைந்தது. ஆரம்பத்திலேயே சர்வீஸ்கள் நல்ல முறையில் அமைந்தால் சிறந்த ஆட்டத்தை கொடுக்க முடிந்தது. இரண்டாவது செட்டில் அதிக வாய்ப்புகள் நழுவிய போதிலும் மனதளவில் போராடி வெற்றி பெற்றதில் மகிழ்ச்சியாக உள்ளது" என்றார். பார்சிலோனா போட்டியில் பட்டம் வென்றதன் மூலம் களிமண் தரையில் …

  9. குமார் சங்கக்கார இங்கிலாந்து கழக போட்டியில் சதம்: இலங்கை அணியின் நட்சத்திர முன்னாள் வீரர் குமார் சங்கக்கார இங்கிலாந்து கழக மட்டப் போட்டியில் சதமடித்து சாதனை படைத்துள்ளார். இங்கிலாந்தின் சர்ரே கழகத்தின் சார்பில் குமார் சங்கக்கார விளையாடி வருகின்றார். ஓவல் மைதானத்தில் சமர்செட் கழகத்திற்கு எதிரான போட்டியில் சங்கக்கார 171 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டுள்ளார். இதுவரை சங்கக்கார சரே அணிக்காக 22 இன்னிங்ஸ்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஓட்டங்களை குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/131438/language/ta-IN/article.aspx

  10. கிரிக்கெட் துறை வளர்ச்சி சார்ந்த கேள்விகளுக்கு ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் பதில் அளிக்க வேண்டும் – குமார் சங்கக்கார 2016-04-25 08:30:33 இலங்கை கிரிக்கெட் துறை வளர்ச்சி சார்ந்த விட­யங்­களில் எழும் பல கேள்­வி­க­ளுக்கு ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறு­வனம் பதில் அளித்­தாக வேண்டும் என இலங்கை கிரிக் கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்­கக்­கார தெரிவித்­துள்ளார். இங்­கி­லாந்தில் முதல்­தர பிராந்­திய கிரிக்கெட் போட்­டி­களில் சரே அணிக்­காக விளை­யா­டி­வரும் குமார் சங்­கக்­கார, பி.பி.சி உலக சேவையின் “ஸ்டம்ப்ட்” சேவையில் நேற்­று­முன்­தினம் நடை­பெற்ற நேர்­கா­ண­லி­லேயே மேற்­கண்­ட­வாறு கூறி­யுள்ளார். …

  11. கௌஷால் சில்வாவின் தலையில் பந்து தாக்கியது! பள்ளேகலயிலிருந்து வான் வழியாக கொழும்புக்கு அழைத்துவரப்பட்டார் 2016-04-24 19:30:23 இலங்கைக் கிரிக்கெட் அணியின் முன்னிலை வீரர்களில் ஒருவரான கௌஷால் சில்வாவின் தலையில் பந்தொன்று தாக்கியமையால் அவர் பள்ளேகலயிலிருந்து ஹெலிகொப்டர் மூலம் கொழும்புக்கு அழைத்து வரப்பட்டார். பள்ளேகலயில் இன்று பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது கௌஷால் சில்வாவின் தலையில் பந்து தாக்கியதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது. கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் அவர் அனுமதிக்கப்பட்டார். எனினும் அவர் ஆபத்தான நிலையில் இல்லையென்பது ஆரம்ப சோதனைகள் மூலம் தெரியவந்ததாகவும் ஸ்ரீலங்கா கி…

  12. F1 காரோட்டும் தகுதி பெண்­க­ளுக்கும் உண்டு போர்­மி­யூலா 1 காரோட்டப் போட்­டி­களில் பெண்கள் பங்­கு­பற்­று­வதை போர்­மி­யூலா 1 பொறுப்­பாளர் பேர்னி எக்­லெஸ்டோன் எதிர்க்­க­வில்லை என சுஸி வுல்வ் தெரி­வித்­துள்ளார். எனினும் போர்­மி­யூலா 1 காரோட்டப் போட்­டி­களில் பெண்கள் பங்­கு­பற்­று­வ­தற்கு தகுதி இல்லை என்ற அவ­ரது கூற்றை ஏற்க முடி­யாது என முன்னாள் வில்­லியம்ஸ் பரீட்­சார்த்த சாரதி சுஸி வுல்வ் தெரி­வித்தார். போர்­மி­யூலா 1 போட்­டி­களில் பங்­கு­பற்றும் அள­வுக்கு பெண்கள் தகு­தி­யா­ன­வர்கள் என நினைக்க முடி­யாது எனவும் எக்­லெஸ்டோன் தெரி­வித்­தி­ருந்தார். ஆனால், ‘‘போர்­மி­யூலா 1 காரோட்டப் போட்­ட…

  13. வெளிநாட்டில் 10-வது ஐபிஎல் தொடர் தண்ணீர் தட்டுப்பாடு பிரச்சினை காரணமாக மராட்டிய மாநிலத்தில் நடைபெற இருந்த ஐபிஎல் தொடரின் 12 ஆட்டங்களை வேறு மாநிலத்துக்கு மாற்ற மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. லோதா கமிட்டியின் பரிந்துரை களை அமல்படுத்துவதில் ஏற்பட் டுள்ள சிக்கலை எதிர்கொள்ள இருக் கும் இந்திய கிரிக்கெட் வாரியத் துக்கு ஐபிஎல் போட்டியை இட மாற்றம் செய்வதில் சிரமங்கள் எழுந் துள்ளது. இந்நிலையில் அடுத்த ஆண்டு நடைபெறும் 10-வது சீசன் ஐபிஎல் போட்டிகளை வெளி நாடுகளில் நடத்த இந்திய கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாக இந்திய கிரிக் கெட் வாரிய செயலாளர் அனுராக் தாகூர் கூறும்போது, "ஐபிஎல் தொடர் பான பொது நல வழக்குகளால் பிசிசிஐ பெரிய அளவிலான …

  14. பாகிஸ்தான் அணியின் ஒற்றுமையைக் குலைத்தவர் வக்கார் யூனிஸ்: அப்துல் ரசாக் கடும் சாடல் பாகிஸ்தான் ஆல்ரவுண்டர் அப்துல் ரசாக். | படம்: ஏ.எஃப்.பி. அதிரடி ஆல்ரவுண்டர் அப்துல் ரசாக், பாகிஸ்தான் அணியின் தற்போதைய மோசமான நிலைக்கு பயிற்சியாளர் வக்கார் யூனிஸே காரணம் என்று கடுமையாக சாடியுள்ளார். வக்கார் யூனிஸ் பிற வீரர்கள், நிர்வாகிகளைக் குறைகூறுவதை விடுத்து தன் பக்கம் உள்ள கோளாறுகளை சரி செய்து கொள்ள வேண்டும் என்று அப்துல் ரசாக் தெரிவித்துள்ளார். “இதில் ஒன்றும் ரகசியம் இல்லை, நானே பார்த்திருக்கிறேன், மூத்த வீரர்களுக்கு வக்கார் மதிப்பளிக்க மாட்டார், வீரர்கள் அனைவரையும் சமமாக நடத்த மாட்டார். அவர்கள் சிறப்பாக ஆட அவர்களுக்கு உத்தரவாதங்களை வழங…

  15. கிரிக்கெட் வீரர் பயிற்சியின் போது பலி இளம் தென்னாபிரிக்க கிரிக்கெட் வீரரொருவர் பயிற்சியின்போது கீழே விழுந்து உயிரிழந்த துன்பியல் சம்பவமொன்று கிரிக்கெட் உலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. லுகன்யா டஸ்கி என்ற 22 வயது நிரம்பிய இளம் வீரரே இதயக்கோளாரறு காரணமாக திடீரென மயங்கி கீழே வீழ்ந்து உயிரிழந்தவராவார். இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது, தென்னாபிரிக்க அணியின் முன்னாள் வீரர் பின்கோ நகம் கேப் டவுனில் கிரிக்கட் அக்கடமியொன்றை நடத்தி வருகிறார். குறித்த கிரிக்கெட் அக்கடமியில் உடற்தகுதி தேர்வுகள் இடம்பெற்று வந்தன. வழமையாக குறித்த தினம் அக்கடமியில் பயிற்சி இடம்பெற்றவேளையில் லுகான்யா ட…

  16. மூவகை தொடர்களுக்கு பொது புள்ளி முறைமை; சர்வதேச கிரிக்கெட் பேரவை ஆராயவுள்ளது சர்­வ­தேச கிரிக்கெட் தொடர்­களில் மூவகை கிரிக்கெட் தொடர்­க­ளுக்கு போது­மான புள்ளி முறை­மையை அறி­மு­கப்­ப­டுத்­து­வது குறித்து துபாயில் கூடும் சர்­வ­தேச கிரிக்கெட் பேரவை ஆரா­ய­வுள்­ளது. இங்­கி­லாந்­துக்கும் அவுஸ்­தி­ரே­லி­யா­வுக்கும் இடையில் 2013இல் நடை­பெற்ற ஆஷஸ் தொட­ரின்­போது வழங்­கப்­பட்ட புள்ளி முறை­மையைப் பின்­பற்­றியே ஆட­வ­ருக்­கான இரு­த­ரப்பு கிரிக்கெட் தொடர்­களில் புள்­ளிகள் வழங்­குவது குறித்து ஆரா­யப்­ப­ட­வுள்­ளது. இரு தரப்பு கிரிக்கெட் தொடர்­களில் இடம்­பெறும் சகல வகை­யான கிரிக்கெட் போட்­டி­க­ளுக்கும் புள்­ளி­களை வழங்கி ஒட்…

  17. யாழ்ப்பாணத்தில் முதல் தடவையாக சிறுவர் மற்றும் பயிற்றுநர்களுக்கான பட்மிண்டன் விசேட பயிற்சி முகாமொன்று நடத்தப்பட்டது. இதற்காக 23 வருடங்களின் பின்னர் இலங்கை பட்மிண்டன் சம்மேளன உயர் அதிகாரிகள் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்திருந்தனர். சர்வதேச பட்மிண்டன் சம்மேளனத்தின் விதிமுறைகளுக்கு அமைவாக இலங்கை பட்மிண்டன் சம்மேளனம், யாழ். மாவட்ட பட்மிண்டன் சங்கத்துடன் இணைந்து இந்தத் திட்டத்தை முன்னெடுத்தது. சென். ஜோன்ஸ் கல்லூரியின் உள்ளக அரங்கில் நேற்று முன்தினம் ஆரம்பிக்கப்பட்ட இந்தப் பயிற்சி முகாமில் 10 முதல் 14 வயதுக்குட்பட்ட சுமார் 108 வீர, வீராங்கனைகள் கலந்துகொண்டனர். அவர்களுக்கு சட்டல் டைம் திட்டத்தின் பிரகாரம் பட்மிண்டன் விளையாட்டின் அடிப்படை நுணுக்கங்கள் கற்றுக்கொ…

  18. ஒலிம்பிக் சுடர் எப்படி ஏற்றப்படுகிறது? உலகின் மிகப்பெரும் விளையாட்டுத் திருவிழா எனக் கருதப்படும் ஒலிம்பிக் போட்டியின் மிக முக்கியமான ஒரு அம்சம், போட்டி காலம் முழுவதும் எரியும் ஒலிம்பிக் ஜோதி. கிரேக்கத்தில் பாரம்பரிய முறையில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படும் அந்தச் சுடர் ஒவ்வொரு ஒலிம்பிக் போட்டியின் போதும் பழமையான பாரம்பரிய முறையில் கிரேக்கத்தில் ஏற்றப்படும். ஒலிம்பிக் சுடர் விளையாட்டு வீரர்களால் புனிதமானதாகக் கருதப்படுகிறது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் பண்டைகால ஒலிம்பிக் போட்டிகளின்போது அச்சுடர் எப்படி ஏற்றப்பட்டதோ அதே முறையே இப்போதும் பின்பற்றப்படுகிறது. பாரம்பரிய முறையில் ஏற்றப்பட…

  19. பயேர்ன் மியூனிச்சுடன் மேலும் 5 வருடங்களுக்கு ஜேர்மன் கோல்காப்பாளர் நோயர் ஒப்பந்தம் 2016-04-21 17:49:55 ஜேர்­ம­னியின் பிர­பல கால்­பந்­தாட்டக் கழ­கங்­களில் ஒன்­றான பயேர்ன் மியூனிச் கழ­கத்­துடன் மேலும் ஐந்து வரு­டங்­க­ளுக்­கான புதிய ஒப்­பந்தம் ஒன்றில் மெனுவல் நோயர் கைச்­சாத்­திட்­டுள்ளார். பிரே­ஸிலில் 2014இல் நடை­பெற்ற உலகக் கிண்ண கால்­பந்­தாட்டப் போட்­டியில் சம்­பி­ய­னான ஜேர்மன் அணியின் கோல் காப்­பா­ள­ராக மெனுவல் நோயர் விளை­யா­டி­யி­ருந்தார். இந்தப் புதிய ஒப்­பந்­தப்­படி 2021ஆம் ஆண்­டு­வரை பயேர்ன் மியூனிச் அணிக்­காக 30 வய­து­டைய நோயர் விளை­யா­ட­வுள்ளார். …

  20. தென்கொரியாவில் மே மாதம் நடைபெறஉள்ள 19வயது கால்பந்தாட்ட போட்டிக்கு இலங்கை அணிசார்பாக தெரிவு செய்யப்பட்ட யாழ்மத்தியகல்லூரி வீரர்கள் விதுசன்,சயந்தன் முகநூல் யாழ் மத்திய கல்லூரி

  21. மேற்கிந்தியக் கிரிக்கெட் சபையை கலைக்குமாறு முன்னாள் கிரிக்கெட் மேதைகள் கோரிக்கை 2016-04-21 11:06:27 கரி­பியன் சமூ­கத்தின் கிரிக்கெட் ஆய்வுக் குழுவின் சிபா­ரி­சுக்கு அமைய மேற்­கிந்­தியத் தீவுகள் கிரிக்கெட் சபை கலைக்­கப்­ப­ட­வேண்டும் என அந் நாட்டின் கிரிக்கெட் மேதைகள் பலர் கோரிக்கை விடுத்­துள்­ளனர். இக் கோரிக்­கையை விடுத்­துள்ள விற்­பன்­னர்­களில் சேர் கார்பீல்ட் சோபர்ஸ், சேர் விவியன் ரிச்சர்ட்ஸ், வெஸ்லி ஹோல், அண்டி ரொபர்ட்ஸ் ஆகி­யோரும் அடங்­கு­கின்­றனர். எவ்­வித பய­னு­மற்ற கிரிக்கெட் சபையை கலைத்­து­விட்டு கட்­ட­மைப்பில் சீர்­தி­ருத்­தங்­களை ஏற்­ப­டுத்தும் பொருட்டு இடைக்­கால நிரு­வாக சபை …

  22. பகல் – இரவு டெஸ்ட் போட்டியில் விளையாட தென் ஆபிரிக்கா தயக்கம் 2016-04-21 11:16:56 அவுஸ்­தி­ரே­லி­யா­வுக்கும் தென் ஆபி­ரிக்­கா­வுக்கும் இடையில் அடிலெய்ட் விளை­யாட்­ட­ரங்கில் நடத்த திட்­ட­மி­டப்­பட்­டுள்ள பக­லி­ரவு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடை­பெ­று­வது இன்னும் உறு­தி­ செய்யப்பட­வில்லை. இளஞ்சிவப்பு நிற பந்தில் விளை­யா­டு­வ­தற்கு போதிய அனு­ப­வ­மில்லை என தென் ஆபி­ரிக்க வீரர்கள் தெரி­விப்­ப­துடன், அவ்­வாறு விளை­யா­டினால் அது தங்­க­ளது அணிக்கு பாதிப்­பாக அமையும் எனவும் தெரி­வித்­துள்­ளனர். எனினும், அடி­லெய்டில் பக­லி­ரவு டெஸ்ட் கிரிக்கெட் போட்­டியில் தென் ஆபி­ரிக்­காவை விளை­யாட வைப்­பதில் கிரிக்கெட் ஒஸ்ட்­ரே­லியா …

  23. வர்­ண­னை­யா­ள­ராகிறார் மஹேல இலங்கை அணியின் முன்னாள் நட்­சத்­திர துடுப்­பாட்ட வீர­ரான மஹேல ஜய­வர்­தன, வர்­ண­னை­யா­ள­ராக செயற்­ப­ட­வுள்ளார். இலங்கை அணி அடுத்த மாதம் இங்­கி­லாந்­திற்கு சுற்­றுப்­ப­யணம் மேற்­கொண்டு விளை­யா­ட­வுள்­ளது. இந்தத் தொடரில் ஸ்கை ஸ்போர்ட்ஸின் வர்­ண­னை­யா­ள­ராக மஹேல ஜய­வர்­தன செயற்­ப­ட­வுள்ளார் என்று தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. ஏற்­க­னவே வர்­ண­னை­யா­ளர்கள் குழுவில் பணி­யாற்றும் இங்­கி­லாந்து அணியின் முன்னாள் தலை­வர்கள் மற்றும் புகழ்­பெற்ற கிரிக்கெட் வர்­ண­னை­யா­ளர்­க­ளோடு மஹே­லவும் இணை­ய­வுள்ளார். தற்­போது ஸ்கை ஸ்போர்ட்ஸ் வர்­ண­னை­யா­ளர்கள் குழுவில் முன்னாள் இங்­கி­லாந்து அணித் தலை­வர்­க­ளான இயன் பொத்தம், டே…

  24. வருடத்தின் அதி சிறந்த வீரருக்கான லோரியஸ் விருது ஜோகோவிச்சுக்கு; சிறந்த வீராங்கனையாக செரீனா வில்லியம்ஸ் தெரிவு சேர்பியாவின் டென்னிஸ் சம்பியன் நொவாக் ஜோகோவிச் வருடத்தின் அதி சிறந்த விளையாட்டு வீரருக்கான லோரியஸ் விருதை வென்றெடுத்துள்ளார். இதேவேளை, வருடத்தின் அதி சிறந்த வீராங்கனைக் கான லோரியஸ் விருதை ஐக்கிய அமெரிக்காவின் டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் வென்றெடுத்துள்ளார். இவ் வருடத்திற்கான லோரியஸ் விருது விழா ஜேர்மன் நாட்டின் தலைநகரான பேர்லினில் அமைந்துள்ள பலாய்ஸ் அம் ஃபன்க்டேர்ன் கோபுர மண்டபத்தில் திங்களன்று நடைபெற்றது. செரீனா வில்லியம்ஸ் வென்றெடுத்த நான்காவது லோரியஸ் விருது இது…

  25. மகளிர் கியா சுப்பர் லீக் இருபது 20 கிரிக்கெட் இங்­கி­லாந்தில் நடை­பெ­ற­வுள்ள அங்­கு­ரார்ப்­பண மகளிர் சுப்பர் லீக் இரு­பது 20 கிரிக்கெட் போட்­டி­களில் 18 வெளி­நாட்டு வீராங்­க­னைகள் விளை­யா­ட­வுள்­ளனர். அவர்­களில் 17 பேர் பெய­ரிடப்­பட்­டுள்­ள­துடன் ஒருவர் மாத்­திரம் இன் னும் அறி­விக்­கப்­ப­ட­வில்லை. அவுஸ்­தி­ரே­லிய அணித் தலைவி மெக்ல னிங், நியூ­ஸி­லாந்து அணித் தலைவி சுசி பேட்ஸ், மேற்­கிந்­தியத் தீவுகள் அணித் தலைவி ஸ்டெவானி டெய்லர். அவ­ரது சக வீராங்­கனை டியேண்ட்ரா டொட் டின் உடப்ட 18 வெளி­நாட்டு வீராங்­க­னைகள் மகளிர் சுப்பர் லீக் இரு­பது 20 கிரிக்கெட் போட்­டி­களில் விளை­யா­ட­வுள்­ள­தாக இங்­கி­லாந்து கிரிக்கெட்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.